tag:blogger.com,1999:blog-7315198803238601503.post618626457809043785..comments2024-02-18T14:19:39.565+05:30Comments on சமரசம் உலாவும் இடமே!!!!: அறிவார்ந்த வடிவமைப்பு அறிவோம் பகுதி 11:வில்லியம் டெம்ப்ஸ்கியின் கேள்விகள்சார்வாகன்http://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7315198803238601503.post-66756558646777372942012-04-01T07:35:48.063+05:302012-04-01T07:35:48.063+05:30கேள்விகளை மட்டும் கேட்கச் சொன்ன டெம்ஸ்கி அதற்கான ப...கேள்விகளை மட்டும் கேட்கச் சொன்ன டெம்ஸ்கி அதற்கான பதில் வெளியிட்டாரா?<br /><br />எந்தக் காலத்தில் பரிணாம எதிர்ப்பாளர்கள் இதுதான் இப்படித்தான் என்று தெளிவாக் பேசினர்? So No Answrs!!!!!!<br /><br />அவர்கள் பிரபஞ்ச தோற்றம் பற்றி பேசுவர் இல்லையேல் முதல் செல் எப்படி வந்தது என்பார்கள்.எல்லா விவாதங்களும் கேள்விகளும் இதில் போய்த்தான் முடியும்.<br /><br />அவர்களுக்கு கேடக மட்டும்தான் தெரியும்.எனினும் நாம் இந்த கேள்விகளை அலசுவோம்.முதல் கேள்வி<br /><br />பிரபஞ்சம்[அல்லது அதில் ஏதோ ஒரு தன்மை] வடிவமைக்கபட்டு இருந்தால் அறிய முடியுமா?<br /><br />வடிவமைப்பு என்பது குறிப்பிட்ட பணிக்காகவே அதன் ப்குதிகள் தயாரிக்கப்பட்டு, இணைத்து அந்த பணியினை நிறைவேற்றுவதுதான்.<br /><br />ஒரு வேளை பிரபஞ்சம் வடிவமைக்கப்பட்டது என்றால் எதற்காக என்ற கேள்வி மிக இயல்பாக வரும்.<br /><br />மனிதனுக்காக மட்டும் என்றால் பிரபஞ்சத்தின் பிற இடங்களில் உயிர்கள் உள்ளதா என்பதும் அடுத்த கேள்வி வரும்.<br /><br />பிற இடங்களில் உயிர்கள் கண்டு பிடிக்கப்படாததால் இப்பிரபஞ்சத்தில் மிகச்சிறிய தூசி போன்ற பூமியில் சுமார் 2 இலட்சம் ஆண்டுகளாக மட்டும் வாழும் ஹோமோ சேஃபியனுக்காக் இவ்வளவு வேலை செய்வது அறிவார்ந்த செயலா?<br /><br />சரி அதை விடுவோம்<br />*******<br /><br />இக்கேள்விக்கு இப்பிரபஞ்சம் என்பது ஒரு தொடர் இயக்கத்தில் ஒரு ப்குதி மட்டுமே என்பதும் பெரு விரிவாக்கத்தின் முன் என்ன நடந்து இருக்கலாம் என்பது கருதுகோள்களாக்வே மட்டுமே உள்ளன என்பதையும் கருத்தில் கொள்ல வேண்டும்.<br /><br />பெரு விரிவாக்கப் புள்ளியில் அனைத்தும் உள்ளே வடிவமைக்கப்பட்டு இருந்தது என ஆய்வுரீதியாக உறுதி செய்ய இயலாது,எனினும் முன் கூறியபடி பூமி, பூமிக்குத் தேவையான சூரியன்,சந்திரன்… என மிக எளிமையாக இருந்தால் மனிதனுக்காக் படைக்கப்பட்டது என அடித்துக் கூறலாம்.<br /> <br />ஆனால் சிக்கலான அமைப்புகளை படைப்பாக காட்டி குழப்புவதை தவிர எதுவும் கூற இயலாது.<br /> <br />பிரபஞ்சம் ஒரு புள்ளியில் இருந்து விரிவடைந்து பல் கேலக்ஸி,நட்சத்திரம்,கிரகங்கள் ... தோன்றுவதும்,ஒரு செல் உயிரினத்தில் இருந்து அனைத்து உயிர்களும் தோன்றுவதும் ஒத்த விடயங்களே.<br /><br />இதில் முன்னதை ஏற்பதும்,பின்னதை எதிர்ப்பதும் நகைச்சுவை மட்டுமே!<br /><br />இக்கெள்வி [வழக்கம் போல்]ஒரு குழப்பம் ஏற்படுத்தும்,ஒரு முடிவுக்கு வர இயலா கேள்வியே தவிர வேறில்லை.<br />இம்மாதிரி கேள்விகளை அ.வ[ID] கொள்கையாளர்கள் மிகவும் விரும்புவது இய்ல்பே!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.com