Wednesday, October 9, 2013

நிழலின் நீளம் அறிவோமா?



வணக்கம் நண்பர்களே,

அது என்ன மாயமோ, மந்திரமோ தெரியலை தொடர்ந்து பதிவுகள் படிக்கிறேன், இரசிக்கிறேன் ஆனால் பின்னூட்டமோ, அல்லது புதிய பதிவோ எழுத படு சோம்பல் ஆகி விட்டது.

இதன் காரணம் ஒத்த சிந்தனையோ அல்லது மாற்று சிந்தனை நண்பர்களும் பதிவு எழுதாததே எனவே நினைக்கிறேன். நாம் எப்போதும் கடைசி இருக்கை மாணவன்தான். கூட்டத்தில் கோவிந்தா போடுபவன்.அவர்கள் பதிவு எழுத நாம் ஆதரித்து விள்க்கப் பதிவோ[தொடர் வினை] இல்லை மறுப்பு பதிவோ[எதிர்வினை!] எழுத பதிவுகள் மள மளவென எகிறும்.


 மாற்றுக் கருத்து சகோக்கள் மீண்டும் தொடர்ந்து  பரிணாம எதிர்ப்பு பதிவு எழுத வேண்டி விரும்பி அழைக்கிறேன்.

சரி சகோ வவ்வால் நிழல் பற்றி பதிவு படித்தவுடன் அதற்கு நாமும் கொஞ்சம் விளக்கம் சொல்லி பதிவு இட வேண்டும் என ஆவல் வந்துவிட்டது[ஹி ஹி தொடர் வினை!!!].

நிழல் என்றதும் நம்க்கு "நிழல் நிஜமாகிறது" மற்றும் நிழல்கள் படம் வேறு ஞாபகம்தான் வருகிறது. நல்ல படங்கள்தான் வருகிறது. ஸ்னேக் இன் தி மன்க்கிஸ் ஷேடோ என சண்டைப்படமும் ஞாபகம் வருகிறது. மூடர் கூடம் சென்ட்ராயன் போல் சண்டைப் படமும், _____ படம் மட்டும் ஆங்கிலத்தில் பார்த்த அது ஒரு நிலாக்காலம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!

சரி வேறு என்ன ஞாபகம், வருகிறது என்றால் அடுத்து என்ன ஆன்மீகமதான்.[நாம் ஆத்திகம் கற்கும் நாத்திகர் என்பதால் இதை விட முடியாது ஹி ஹி!!].

சரி நமது தமிழ் ஏக இறைவன் சிவ பெருமானின் திருவடி நிழல் பற்றி தேவாரம் அழகாக கூறுவதைக் கேளுங்கள்!!

மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.

பொழிப்புரை :

இறைவனாகிய எந்தையின் திருவடி நீழல் குற்றமற்ற வீணையின் நாதமும் , மாலையிலே தோன்றிய நிலவின் தண்மையும் , வீசுகின்ற தென்றலின் சாயலும் , செறிந்த இளவேனிலின் மாட்சியும் , ஒலிக்கும் வண்டுகள் மொய்க்கும் பொய்கையின் குளிர்ச்சியும் போன்று இன்பம் பயப்பதாகும் .

அப்புறம் இங்கே நீழல் என்கிறார்கள்,நாமோ நிழல் என்கிறோம். நெடில் எப்படி குறில் ஆனது? நம்க்கு தமிழ் பிடிக்கும் அள்வுக்கு அதில் ஞானம் இல்லை.

சிந்தித்து தமிழ் ஆய்வாளர்கள் இதற்கு தீர்வு அளியுங்கள். சிந்திக்க மாட்டீர்களா???
**
நாம் உண்மையான மத சார்பற்ற நாத்திகர் என்பதால் தமிழர்களின் இதர மதங்களிலும் ஒரு எ.கா பார்த்து விடுவோம்.

கிறித்துவம்

ங்கீதம் 63:7 நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன்.

சத்தம் போடாமல் களிகூர்ந்தால் நாமும் மகிழுவோம்!!
***
(நமக்கு மிகவும் பிடித்த ஏக இறை மார்க்கமான) இஸ்லாம் என்ன சொல்கிறது

13:15
.
 வானங்களிலும், பூமியிலும் இருப்பவையெல்லாம், விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்(து சிரம் பணி)கின்றன; அவற்றின் நிழல்களும் காலையிலும் மாலையிலும் (அவ்வாறே! ஸஜ்தா செய்கின்றன).

[ஸுஜூது, ஸஜ்தா=வழிபாடு]

எனது நிழல் நான் அறியாமல் செய்யும் வழிபாட்டுக்கு மறுமையில் கூலி[ ஹி ஹி அதுதான்!] கிட்டுமா என்பதை யாரேனும் சகோக்கள் விளக்கவும்!

ஒரு வழியா  வம்பு வளர்த்து விட்டாகி விட்டது சரி இனியாவது பதிவு எழுதுவோம்.

நிழல் என்றால் என்ன?                    
·                    ஒரு திசையில் ஒளி வீசும் பொழுது , அத்திசையில் ஒளியூடுருவா ஒரு பொருள் இருந்தால், அப்பொருளால் ஒளி தடுக்கப்பட்டு, அப்பொருளின் பின்னே ஒளி விழாமல் இருக்கும் பகுதிக்கு நிழல் என்று பெயர். ஒளிமறையுரு.

நன்றி தமிழ் விக்சினரி. அருமையான பொருள் ஒளிமறையுரு. தமிழ் அன்னை வாழ்க!!!

அதாவது

1.ஒளி(சூரியன்)

2. ஒளியை தடு[மறை]க்கும் பொருள்.

3. தளம் அல்லது தரை(பூமி)

இந்த மூன்றும் இருக்க வேண்டும்.

தரை என்பதை தோராயமாக சமதளமாக எண்ணிக் கொள்ளுதல் நிழல் கண்க்கீட்டை எளிது ஆக்கும். இந்த கண்க்கீடுகள் எந்த ஒளி,பொருள்,தளத்திற்கும் பொருந்தும் என்றாலும் நாம் சூரியன் , த்ரை ,ஏதேனும் பொருள் என்பதை மட்டும் கண்க்கில் எடுப்போம்.

ஏன் சம தரை தளத்தின் நிழலை பார்க்க முடிவது இல்லை?

த்ரையில் மீது நிழல் விழுகிறது. த்ரையின் அதாவது பூமியில் நிழல் பூமி தாண்டி விழுவதால் பார்க்க முடிவது இல்லை. சந்திரன்(சூரியன்) நிழல் விழுவதை கிரகணம் என்கிறோம்.

இதில் இருந்து நீழல் அமைய மேலெ சொன்ன மூன்று விடயங்களும் அவசியம் என்பதை அறிய முடியும். சரி இப்போது சூரியம் , பூமி ,பூமி மீது உள்ள ஒரு பொருளின் நிழல் பற்றி மட்டுமே [இப்பதிவில் கன்னாபின்னாவென] சிந்திப்போம். 

இதனை அறிய இந்த படத்தினைப் பார்க்கவும்.

.

Sun altitude and shadow





L=h/tan(a),

h - சம தரையில் இருந்து பொருளின் செங்குத்து உயர‌ம்t,

a -
சூரிய ஒளித் தளம் தரையின் கிடைமட்ட இடைக்கோணம்.





சூரிய ஒளிக்கதிக்கள் இணைகோடுகளாக பூமியை நோக்கி வருகின்றன என்பது ஒரு நல்ல தோராய அணுகுமுறை ஆகும். இது சிறிய பூமியின் பகுதியை சமதளமாக எண்ணுவதும், சூரியன் வெகு தொலைவில் இருப்பதால் இது சரியான அணுகுமுறை ஆகும்.

சூரியன் கிழக்கே உதிக்கும் போது அதிக பட்ச நிழல்  நிழல் மேற்கே விழும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மதியம் 12 மணிக்கு நிழல் பொருளுக்கு அடியில் விழுவதால் பார்க்க  இயலாது.அப்போது கோணம் 90 டிகிரி என்பதால் ஆகவே நிழலின் உயரம் பூச்சியம் ஆகும். இதில் நீங்கள் பூமியில் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பது பொறுத்து குறைந்த பட்ச கோணத்தின் அள்வு மாறும். கோணம் பூச்சியம் ஆதல் நிலநடுக்கோட்டு பகுதிகள் அதிகம் சாத்தியம்.

அப்போது நிழல் இல்லை என என சொல்ல முடியாது. பொருளுக்கு கீழ் உள்ளது என்பதே உண்மை.அப்பொருளை செங்குத்து திசையில் சிறிது தூக்கி பார்த்தால் இது புரியும். ஆகவே பொருளின் எழுச்சி, மற்றும் வளர்ச்சி[ நன்றி தோழர் வினவு!], புவி ஆயத் தொலைகள் பொறுத்தே அதன் நிழலின் நீளமும் மாறுகிறது.

இந்த சூரியனின் நிலை,கோணம் புவி ஆயத்தொலைகள் பொறுத்து  கண்டறிதல் பற்றியே ஒரு பதிவு எழுத வேண்டும். ஆங்கிலத்தில் உள்ள கட்டுரை மேலதிக தகவல் விரும்பிகளுக்கு!!


பிறகு சூரியன் மறையும் வரை நிழல் நீளம் அதிகரித்து பிறகு மறையும்.


சரி எப்படி பிரமிட் அல்லது சில கட்டுமான அமைப்புகள் போன்றவை பல மணி நேரங்களுக்கு நிழல் [வெளியில்] விழுவது இல்லை என்றால் அற்றின் வடிவ அமைப்பு கீழ்க்கண்ட குணங்களைக் கொண்டு இருக்கும்.

1. அவை மேல் இருந்து கீழ் வரை குறுக்கு வெட்டு பரப்பு அதிகரிக்கும்.

2. சமச்சீராக மேலிருந்து கீழ் வெட்ட முடியும்.

பிரமிடுக்கு மட்டும் அல்ல கூம்பு அல்லது அரைக் கோளம் போன்றவற்றுக்கும் இது பொருந்தும்.


[நான் தேடிய வரை] நிழலை முற்று முழுதும் தவிர்க்கும் வடிவ அமைப்பு இருக்க முடியாது. ஆனால் நிழலின் நீளம் மாற்ற வீதம் குறைவாக இருக்கும் பிரமிட்,அரைக் கோளம் போன்றவற்றை சொல்ல முடியும்.

இத்தளத்தில் நீங்கள் இருக்கும் ஊரின் புவி ஆயத்தொலைகள் அறிந்தால் ஒரு பொருளின் நிழல் நீளம் நேரம் பொறுத்து எப்படி மாறும் என்பதை அறிய முடியும்.

அறிந்த தகவல்களை பகிருங்கள்!!. கேள்வி கேளுங்கள் தொடர்ந்து விவாதிப்போம்.

நன்றி!!!