Saturday, June 30, 2012

சில கணிதப் புதிருக்கு விடை காணும் வழிகள்.



வணக்கம் நண்பர்களே,

சில பதிவுகள் நம்மை சிந்திக்க வைக்கும்.அவ்வகையில் சகோதரர் மணிமாறன் இட்ட கணிதப்புதிர்கள் நம்மை சிந்திக்க வைத்தன. கணிதவியலில் அடிப்படை அல்ஜீப்ரா மற்றும் வடிவகணிதம் அடிப்படையில் அமைந்த புதிர்கள் எனினும் அதன் விடை கண்ட விதத்தை பகிர வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது.

இது சகோ மணிமாறன் பதிவு!!!!!!





***********

எந்த ஒரு கணித,அறிவியல் புதிரையும் தீர்க்க முனையும் முன்பு இக்கருத்துகளை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன்.

1. அறிவியல் என்பது இயற்கையின் நிகழ்வுகளை காரணிகளாக பகுத்து ,அவ்ற்றின் இடையே உள்ள தொடர்பை அறிவதாகும்.

2.எந்த புதிரையும் அதன் கேள்வியை(இயற்கை நிகழ்வை)சரியாக விளங்கி அறிய இயலும் விவரங்கள்[known], அறிய வேண்டிய விவரங்கள்[unknown] ,இவை இரண்டின் தொடர்பு (சமன்பாடு)கள்[relationships],விடை இருக்கும் வாய்ப்பு உண்டா? விடை உண்டு எனில் எத்னை(பல) விடைகளுக்கு வாய்ப்பு உண்டு[existence  of (multiple)solution(s)]?

இந்த அணுகுமுறையில் இந்த இருபுதிர்களையும் தீர்க்க விழைகிறோம்.சந்தேகம் இருப்பின் பின்னூட்டத்தில் விவாதிப்போம்




***********

 1.    சில நாட்களுக்கு முன்பு பேங்க் போயிருந்தபோது சின்ன குழப்பம் ஒன்னு ஏற்பட்டது.நான் காசோலையில் பணத்தை எழுதி காசாளரிடம் கொடுத்தேன். சிறிது நேரத்தில் எனக்கு பணம் அளிக்கப்பட்டது.நான் ஏதோ அவசரத்தில் பணத்தை சட்டைப்பையில் வைத்துவிட்டு எண்ணிப்பார்க்கக் கூட ஞாபகம் இல்லாமல் வெளியே வந்து விட்டேன்.அதிலிருந்து ஐம்பது பைசா எடுத்து பக்கத்தில் உள்ள பெட்டிக்கடையில் சாக்லட் ஒன்று வாங்கி சாப்பிட்டேன். பிறகுதான் பணத்தை சரிபார்க்காமல்விட்டது ஞாபகம் வந்தது.உடனே என் சட்டைப்பையில் உள்ள பணத்தை எண்ணிப் பார்த்தேன்.எனக்கு ஒரே ஆச்சர்யம்.நான் எழுதிக்கொடுத்த பணத்தைவிட மூன்று மடங்கு பணம் அதில் இருந்தது.நான் மிகவும் நேர்மையானவன்(?!) என்பதால் உடனே பேங்க்குக்கு திரும்பிச்சென்று விவரத்தைத் தெரிவித்தேன். பிறகுதான் அது காசாளரின் தவறால் நடந்தது எனத் தெரியவந்தது.அதாவது நான் காசோலையில் எழுதிக்கொடுத்ததை,ரூபாய்க்குப் பதில் காசாகவும்,காசுக்குப் பதில் ரூபாயாகவும் மாற்றிக் கொடுத்திருக்கிறார் எனத் தெரியவந்தது.(உதாரணமாக RS  32.50 என்பதை 50.32 என்று) .தன் தவறுக்கு வருந்தி,என் நேர்மையைப் பாராட்டினார் அந்த காசாளர்.அது சரி......நான் காசோலையில் எவ்வளவு பணம் எழுதிக்கொடுத்தேன்?........(அது உங்களுக்கும் காசாளருக்கும் தான் தெரியும் என மொக்கைப் போடாமல் கண்டுபிடிங்கள் பார்ப்போம்).இது கொஞ்சம் சவாலானது.
இந்த புதிரில் இருந்து அறிய இயலும் விவரங்கள்.


) நான் காசோலையின் 'x' அளவு ரூபாய் 'y' அளவு பைசா எழுதுவதற்கு பதில்  y' அளவு ரூபாய் x அளவு  பைசா  என மாற்றி எழுதி விட்டேன்


ஒரு பொருளின் அளவைகள் பயன்படுத்தும் போது ஒரே அலகாக மாற் வேண்டும்.இங்கு ரூபாய் பைசாவாக மாற்ப் படுகிறது.பைசா அளவு 99க்கு மேல் இருக்க முடியாது.இரண்டும் மாற்றி எழுதும் வண்னம் இருப்பதால் இரண்டுமே 100க்கு குறைவான் முழு எண் மதிப்பாக இருக்க வேண்டும்.

0=<y,x=<99                          (1)

x,y=integers                           (2)

ஆ) காசோலையில் எழுத வேண்டிய தொகை
x' அளவு ரூ y அளவு பைசாவின் மதிப்பு=100x+y பைசா

 காசோலையில் எழுதிய தொகை 
   y' அளவு ரூ x அளவு பைசாவின் மதிப்பு=100y+x பைசா

இவற்றின் தொடர் காசோலையில் எழுதிய தொகை ல் இருந்து 50 பைசா கழித்தால் காசோலையில் எழுத வேண்டிய தொகை போம் மூன்று மடங்கு. 

3(100x+y)=100y+x-50

299x=97y-50                             (3)

x=(97y-50)/299

ஆகவே தீர்வுகாண ஒரு எக்செல்[excel] சீட் அலது ஒரு நோட்டுப் புத்த்கத்தில்  அல்லது 1 ல் இருந்து 99 வரை மதிப்பிட்டு முழு எண் தீர்வு கிடைக்கிறதா எண் பார்த்தால் முடிந்தது.

y x
1 0.157191
2 0.481605
3 0.80602
4 1.130435
5 1.454849
6 1.779264
7 2.103679
8 2.428094
9 2.752508
10 3.076923
11 3.401338
12 3.725753
13 4.050167
14 4.374582
15 4.698997
16 5.023411
17 5.347826
18 5.672241
19 5.996656
20 6.32107
21 6.645485
22 6.9699
23 7.294314
24 7.618729
25 7.943144
26 8.267559
27 8.591973
28 8.916388
29 9.240803
30 9.565217
31 9.889632
32 10.21405
33 10.53846
34 10.86288
35 11.18729
36 11.51171
37 11.83612
38 12.16054
39 12.48495
40 12.80936
41 13.13378
42 13.45819
43 13.78261
44 14.10702
45 14.43144
46 14.75585
47 15.08027
48 15.40468
49 15.7291
50 16.05351
51 16.37793
52 16.70234
53 17.02676
54 17.35117
55 17.67559
56 18
57 18.32441
58 18.64883
59 18.97324
60 19.29766
61 19.62207
62 19.94649
63 20.2709
64 20.59532
65 20.91973
66 21.24415
67 21.56856
68 21.89298
69 22.21739
70 22.54181
71 22.86622
72 23.19064
73 23.51505
74 23.83946
75 24.16388
76 24.48829
77 24.81271
78 25.13712
79 25.46154
80 25.78595
81 26.11037
82 26.43478
83 26.7592
84 27.08361
85 27.40803
86 27.73244
87 28.05686
88 28.38127
89 28.70569
90 29.0301
91 29.35452
92 29.67893
93 30.00334
94 30.32776
95 30.65217
96 30.97659
97 31.301
98 31.62542
99 31.94983
x=18

y=56



தீர்வு 18 ரூ 56 பைசா என மேலே கட்டப்பட்ட பெட்டியில் இருந்து அறியலாம். சரிபார்க்க‌


காசொலை எழுதிய தொகை 56 ரூ 18 பைசா

சாக்லேட் 50 பைசா போக 56.180‍- .50=55.68=3*18.58


இப்புதிருக்கு ஒரே ஒரு விடை மட்டுமே.இதே 4 மடங்கு அல்லது எத்தனை மடங்கு என்றாலும் இம்முறையை பயன்படுத்தி தீர்வுகண்டு விடலாம்.



__________________
2.கூம்பு வடிவ பைப்பில் ஐந்து கோலிகள் போடப்பட்டுள்ளது.எல்லா கோலிகளும் பைப்பின் உட்புற சுவரைத் தொட்டுக்கொண்டுள்ளது. மேலேயும் அடியிலும் உள்ள கோலிகளின் ஆரம்(RADIUS) கொடுக்கப்பட்டுள்ளது (ie..18 & 8).
     நடுவில் இருக்கும்  சிவப்பு வண்ணம் கொண்ட கோலியின் ஆரம்(RADIUS ) என்ன?
இப்புதிருக்கான் விடை இங்கெ உள்ளது. இந்த படத்தை கொஞ்சம் பெரிதாக்கி பிதாகரஸ் தேற்ற‌ம் பயன் படுத்தினால் போதும்.


நம்க்கு தெரிந்த தகவல்கள்

முதல் கோலியின் ஆரம் 8 அலகுகள்.,ஐந்தாவது கோலியின் ஆரம் 18 அலகுகள்.

கூம்பின்பக்கங்கள் கோளத்திற்கு தொடுகோடாக உள்ளன.கோள்ங்கள் ஒன்றை ஒன்று தொட்ட வண்ணம் உள்ளன்.
Close-up cross section of two adjacent marbles in a conical funnel, one vertically above the other. A green triangle has one vertex at the center of the larger marble. From this center, a line is produced horizontally to the funnel wall, meeting at the second vertex. A second line is produced at right angles to the (same) funnel wall, meeting at the third vertex. A similar green triangle is drawn for the smaller marble.
Cross section of five marbles in a conical funnel.


Fig 1
                                               

                                                                                                                                    Fig 2

எப்படி sin கண்டு பிடிப்பது என்றால் இரண்டாம் படத்தின்  கூம்பின் வலப்புற பக்கத்திற்கு இணையாக் சிறிய வட்டத்தின் மையப்புள்ளியில் இருந்து ஒரு இணைகோடு வரையவேண்டும்.அது பெரிய வட்டத்தின் ஆரத்துக்கு செங்குத்தாக் இருக்கும் .அது ஒரு செங்கோண் முக்கோணத்தை ஏற்படுத்துகிறது.இப்போது கர்ணம்[hypotenuse]  =a+b,
எதிர்ப்பக்கம் =b-a

ஆகவே =m=sin(x)=(b-a)/(a+b)=contant

Rewrite

m.a+m.b=b-a

a(m+1)=b(1-m)

so
b/a=(1+m)/(1-m)=constant.=C


அங்கே உள்ள விள்க்கத்தை எளிமைப் படுத்துகிறேன் இந்த முகோணங்களின் sin,cosine,tan மாறிலி என்பதால் ஆரங்களின் விகிதமும் மாறிலியே.

ஆகவே ஆரங்கள் ஒரு பெருக்கல் தொடர்வரிசையில் இருக்கும்

8, 8*c,8*c^2,8*c^3,8*c^4

ஐந்தாம் ஆரம் 18 என் தெரிவதால் c மதிப்பு எளிதில் காணலாம்.


c^4=18/8=9/4

c^2=3/2

c=sqrt (3/2)=1.2247

ஆகவே ஆரங்கள் முறையே

1.)8.0000
  
2.)  9.7980

3)  12.0000 


4)  14.6969 


5)  18.0000


நன்றி.விவாதங்கள் வரவேற்கப் படுகின்றன.



Thursday, June 28, 2012

இயேசு பிறந்த ஆலயத்தை தொன்மைத் தலம் ஆ(கா)க்க போராடும் பாலஸ்தீனர்கள்



Church of nativity bethlehem

வணக்கம் நண்பர்களே,

நம் பதிவுகளில் மனித குலத்தின் மிக முக்கிய அறிவியல்,வரலாற்று நிகழ்வுகளை தமிழ்ச் சமூகத்தில் பகிர்ந்து வருகிறோம். வரலாற்றின் நிகழ்வுகளை அதன் சான்றுகளை பாதுகாப்பது என்பது உண்மையை வரும் சந்ததியினருக்கு அளிக்கும் ஒரு மகத்தான செயல் ஆகும்.

கிறித்தவ மதத்தின் நாயகர் இயேசு(தமிழில்) ,ஈசா(அரபி) மற்றும் ஜீசஸ்(ஆங்கிலம்) என் அழைக்கப்படுபவர் பொ.ஆ முதல் நூற்றாண்டில் இபோதைய பாலஸ்தீனத்தில் உள்ள பெத்லகேம் நகரில் பிறந்ததாக கூறபடுகிறார்.இஸ்ஸாமில் இவர் ஒரு [முக்கிய?] இறைத் தூதராக ஏற்கப் படுகிறார்.

அவர் வரலாற்றில் வாழ்ந்தவரா,அவர் குறித்து மத புத்தகங்கள் கூறுவது உண்மையா என்பது பற்றியல்ல இப்பதிவு.நம்க்கு மத்திய கிழக்கு அரசியல் ஆபிரஹாமிய மதங்களான யூதம்,கிறித்தவம்,இஸ்லாம் சார்ந்தே இருப்பதால் அது குறித்த வரலாற்று நிகழ்வுகளில் ஆர்வம் காட்டுகிறோம்.

இஸ்லாமியர்கள் போல் உலகெங்கும் உள்ள கிறித்தவர்க‌ளும் பெத்லகேம் புனிதப் பயணம் செல்வது கடந்த சில வருடங்களில் அதிகரித்து வருகிறது.அப்படி செல்பவர்கள் இயேசு பிறந்த பெத்லகேம்,வசித்த ,பயணம் செய்த பல பகுதிகள் இபோதைய ஜோர்டான், பாலஸ்தின மேற்கு கரைகளில் வருவதால் இபபகுதிகளை சுற்றிப் பார்க்கின்றனர்.

இதில் இயேசு பிறந்தாக கூறப்படும் நேட்டிவிட்டி சர்ச்,ஒரு குகையாக இருந்து ஆலயமாகப்பட்டது விக்கிபிடியா குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது.இது ரோம பேரரசன் கான்ஸ்டன்டைனால் பொ.ஆ 327ல் தொடங்கி பொ.ஆ 333 ல் கட்டி முடிக்கப்பட்டது.இந்த ஆலயம்  இல்லாமல் இன்னும் பல பழமையான் கிறித்தவ தேவாலயங்கள் பெதலகேம்,பாலஸ்தீனத்தில் உண்டு.

   
இபோது இந்த ஆலயம் உள்ளிட்ட சில இடங்களை யுனெஸ்கோ அமைப்பின் உலகின் தொன்மையான இடங்கள் என அங்கீகாரம் பெற பாலஸ்தீன அரசு முயற்சிக்கிறது.இதற்கான வாக்கு  இரஷ்யாவில் பீட்டர்ஸ்பர்க் நகரில் நாளை 29 ஜூன் நடக்கிறது.

இதில் பாலஸ்தீனர்களுக்கு இரு விடயங்கள் இலாபம்

1. யுனஸ்கோவின் அங்கீகாரம் இன்னும் அதிக சுற்றுலா பயணிகள்,அது சார்ந்த வேலை வாய்ப்பு,பொருளாதாரம் வலுப்படும்.

2.இந்த ஆலயத்தை நகரை சுற்றி ஆக்கிரமிப்பு அமைக்க முயலும் இஸ்ரேலை தடுத்து விடலாம்.


பாலஸ்தினர்களில் கிறித்தவர்கள் பலர் உண்டு.இவர்கள் 10% இஸ்ரேலிலும்,4% சதவீதம் மேற்கு கரையிலும்,1% காசா பகுதியிலும் வாழ்கின்றனர்.பால்ஸ்தீன கிறித்த‌வ ,இஸ்லாமியர்களிடையே மண உறவு மிக இயல்பான ஒன்று.இந்த ஆலயத்தில் நடை பெறும் கிறிஸ்துமஸ் விழாவில் அனைவரும் பங்கு கொள்வது,பாலஸ்தீனர்களும் நம் தமிழர்களை போன்ற மத சார்பற்றவர்களே என்பதை விளக்கும் ஒரு செயல் ஆகும்.


ஆகவே இந்த ஆலயம் உட்பட்ட பல இடங்களை தொன்மைத் தலம் ஆக்க முயலும் முயற்சிகளை வழக்கம் போல் இஸ்ரேல், அமெரிக்க எதிர்க்கின்றன.

பாலஸ்தீனர்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறோம்.இது வெற்றி பெற்றால் சுற்றுலா,அதன் சார்பு பொருளாதாரம் அதிகரிக்கும். பாலஸ்தீனம் இஸ்ரேலை சார்ந்து இருக்க வேண்டிய அவ்சியம் இல்லை.

தங்கள் போராட்டத்திற்கு உலகளாவிய சுற்றுலா பயணிகளின் ஆதரவையும் பெற முடியும்.உண்மை நிலவரம் வெளிவரும்.

1967ம் ஆண்டு எல்லைகளை மட்டும் கூட பெற பாலஸ்தீனர்கள் தயாராகவே உள்ளனர்.ஆனால் இஸ்ரேல் தன்னை அனைத்து அர‌பு நாடுகளும் அங்கீகரித்து தன் பாதுகாப்பு உறுதிப்படுத்தப் பட வேண்டும் என்பதால் எந்த தீர்வையும் தவிர்க்கிறது.

நேட்டிவிட்டி சர்ச் தொன்மைத் தலம் ஆவது இபிரச்சினையின் முக்கிய மைல்கல் ஆகும் வாய்ப்பு உள்ளதால் நாம் இதனை பகிர்கிறோம்.

இன்னும் அதிக தகவல்கள் இங்கே


For millions of Christians around the world, the Church of the Nativity in Bethlehem is a place for worship and contemplation, a revered site worth travelling thousands of kilometres for a chance to kneel before the birthplace of Jesus Christ. A tiny stoop welcomes visitors outside the church, forcing them to humbly bow before making their way inside. Mosaics and glass lamps adorn the dimly-lit church and a narrow stairway leads visitors to the grotto where Jesus is believed to have been born.

Little do those pilgrims know that the church is about to become the centre of contention in St Petersburg, Russia, where Palestinians are hoping that a Hail Mary vote due on Friday, June 29 will mark the inclusion of Jesus' birthplace in the United Nations Scientific and Cultural Organisation's (UNESCO) World Heritage List.

Churches, monasteries and convents from Armenia to Uruguay are a part of the world-renowned list by UNESCO, which protects natural and cultural heritage that meet its criteria for "universal value to humanity".

In its ongoing meeting that concludes on July 6, the UN body's World Heritage Committee, comprising 21 member states, will consider whether to add the Church of the Nativity on its list.

நன்றி

Wednesday, June 27, 2012

செவ்வாய் கிரகத்தில் நீர் இருக்கிறதா?





வணக்கம்  நண்பர்களே,

 மிகப் பெரிய பேரண்டத்தில்[universe] உள்ள பல கோடி பெருவெளித்திரள்களில்[galaxies] ,பால்வீதிமண்டலம் என்னும் நமது  பெருவெளித்திறளில் உள்ள பல கோடி நட்சத்திர மண்டலங்களில் நமது சூரிய குடும்பமும் ஒன்று.

 நமது சூரியக் குடும்பத்தில் நமக்கு அருகில் உள்ள கோள் செவ்வாய்,பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில் இருக்கும். இதற்கு இரு துணைக் கோள்கள்(நிலவு) உண்டு. செவ்வாயின் மேற்பரப்பின் வெப்பநிலை +27 முதல் -126 டிகிரி வரை உள்ளது. (பூமியில் +58 முதல் -88.3 வரை). ஆனால் சூரியனிடமிருந்து பூமியை விட தூரத்திலிருப்பதால் சராசரி வெப்பநிலை -48 டிகிரி சென்டிகிரேடு. இதனுடைய காற்று மண்டலம் மிகவும் மெல்லியது, பெரும்பாலும் கார்பன்-டை-ஆக்ஸைடு கொண்டது. டெலஸ்கோப்பில் பார்த்தால் மிகச் சிவப்பாகத் தெரியும். அதனால் தான் செவ்வாய் என்றும் ஆங்கிலத்தில் the red planet என்றும் அழைக்கப்படுகிறது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பூமியைப் போன்றே துருவங்கள் பனிப்பிரதேசங்களாக இருப்பது தான். இங்கு ஐஸ் என்பது பெரும்பாலும் 'ட்ரை ஐஸ்' எனப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடுதான்.

 நேஷனல் ஜியோகிராபிக் செய்தியில் செவ்வாயில் உட்பகுதியில் பெருங்கடல்கள் இருப்பதாக கூறுகிறது.இது செயற்கைக்கோள்களின் மூலம் செவ்வாயின் மேற்பரப்பை ஆய்வு செய்ததில் தெரிய வந்ததாக் கூறுகின்றனர்.


அதுவும் பூமியின் அளவு நீர் இருக்கலாம் என கூறப்படுவது வியப்பு அளிக்கிறது.



Mars could have entire oceans' worth of water locked in rocks deep underground, scientists say.

The finding suggests that ancient volcanic eruptions may have been major sources of water on early Mars—and could have created habitable environments.

According to a new study, Martian meteorites contain a surprising amount of hydrated minerals, which have water incorporated in their crystalline structures.

In fact, the study authors estimate that the Martian mantle currently contains between 70 and 300 parts per million of water—enough to cover the planet in liquid 660 to 3,300 feet (200 to 1,000 meters) deep.

"Basically the amount of water we're talking about is equal to or more than the amount in the upper mantle of the Earth," which contains 50 to 300 parts per million of water, said study leader Francis McCubbin, a planetary scientist at the University of New Mexico in Albuquerque.

தண்ணீர் இருப்பதால் உயிர்கள் அங்கும் இருக்கலாமா என்றால் இப்போது அது குறித்து எதுவும் சொல்ல இயலாது.தண்ணீர் என்பது பூமிக்கு மட்டும் பொதுவான ஒன்றல்ல என்பது மட்டும் உறுதி படுத்தப்பட்டுள்ளது.

 பல பிரபஞ்ச  அறிவியலாளர்கள் பூமியைப் போல் உயிர்கள் வாழக் கூடிய சூழல் உள்ள பல கோள்கள் இருக்கலாம் என்ற கருத்தையே கொண்டுள்ளனர்.

இக்காணொளிக‌ள் செவ்வாயில் உயிர்கள் இருக்கலாமா என்பது அலசுகிறது.கண்டு களியுங்கள்.



Watch Is There Life on Mars? on PBS. See more from NOVA.


நன்றி!!!!!!!!!!!!!!

Monday, June 25, 2012

எகிப்திய அதிபராக முஸ்லிம் சகோதரத்துவ கட்சியின் முகமது மோர்சி:ஒரு எதார்த்தப் பார்வை


morsi_first_tv_speech.jpg

எகிப்தின் அதிபராக திருமுகமது மோர்சி 51.7% வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டி இட்ட அகமது ஷைஃபிக் ஐ[முந்திய இராணுவ ஆட்சியாளர் முபாரக்கின் ஆதரவாளர்] தோற்கடித்து[48.3% வாக்குகள்] பதவி ஏற்று உள்ளார்.அரபு உலகின் முதன் முதலில் மக்களால் தேர்ந்தெடுகப்பட்ட அதிபர் என்பதால் அவருக்கு வாழ்த்து தெரிவிப்போம்.

எகிப்தின் மக்கள் தொகை சுமார் 9 கோடி.அரபுலகில் அதிக எண்ணெய் வளமற்ற பிரதேசம் என்றாலும் சூயஸ் கால்வாய் உள்ளதால் பிராந்திய ரீதியாக முக்கியத்துவம் உள்ள பகுதி.நைல் நதி அதை சார்ந்த விவசாயம் என்ற பொருளாதார அடிப்படை கொண்டது.90% எகிப்திய மக்கள் 5.5% இடத்திலேயே வசிக்கின்றனர்.


பொருளாதார அடிப்படையில் மிகவும் சாதாரணமான் நாடு என்பதை விக்கிபிடியாவில் இருந்து அறிய முடிகிறது.20% மக்கள் வறுமைக்கோட்டுக் கீழ்,11% வேலையிலாதவ்ர்கள்,அதிகரிக்கும் மக்கள் தொகை,சட்ட விரோத்மாக குடியேறும் கருப்பினத்தவர்,பாலஸ்தீனர்கள் என சகல வித பிரச்சினைகளையும் கொண்ட நாடு. 

ஜனநாயக நாடுகளில் எதையும் குறுகிய காலத்தில் செய்ய இயலாது என்பதை நாம் அறிவோம்.உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்கவே பல காலம் செல்லும்..எனினும் அதற்கு பலவித சூழல்கள் ஒத்துழைக்க வேண்டும்.சரி பதிவுக்கு வருவோம்.

திரு மோர்சியின் வெற்றி பலரால் பல வித்மாக பார்க்கப்படுகிறது.ரியுட்டர் செய்திகளின் மொழி பெயப்பை தருகிறோம்.  ஒரு நிகழ்வு பலரால் பல்வித பார்வைகளில் விளங்க முடியும் என்பதை நாம் அறிவோம்.ஓவ்வொருவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இக்கருத்துகளில் இருந்து விளங்க முடியும்.

1.
******************
"The Egyptian nation did not elect a president just for Egypt, but for the Arab and Islamic nations too," said Fawzi Barhoum, a spokesman for Hamas in Gaza, which hopes Morsy may end Cairo's cooperation with an Israeli blockade. 

பாலஸ்தீன ஹமாஸ் கட்சியின் பிரதிநிதி திரு பவ்ஸி ஃபர்ஹோம் "திரு மோர்சி எகிப்துக்கு மட்டுமல்லாமல் அரபு மற்றும் இஸ்லாமிய உலகிற்கே அதிபராக எகிப்திய மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்".

முந்தைய அன்வர் சாதிக்  ஆட்சி போரில் இஸ்ரேலிடம் இழந்த சினாய் பிரதேசத்தை பெற இஸ்ரேலுடன் செய்த ஒப்பந்தத்தை நீக்கி இஸ்ரேலை எகிப்து தனிமைப்படுத்தும் என எதிர்பார்ப்பதாக்வும் திரு பவ்சி நம்புகிறார்.

*********

2.
****************
"Mohamed Morsy a president for Egypt, thank God," said Mohammed al-Qahtani, a co-founder of the Saudi Civil and Political Rights Association (ACPRA), a group pushing for democracy.


சவுதி சமூக அரசியல் உரிமை அமைப்பின் தலைவர் முகமது அல் கக்டானி 'திரு மோர்சி அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு இறைவனுக்கு நன்றி" என்கிறார்.
இந்த அமைப்பு சவுதியிலும் ஜன்நாயகத்தை கொன்டு வர முயற்சி செய்யும் அமைப்பு ஆகும்.தனது ட்விட்டர் செய்தியில் "அரபு புரட்சிக்கு கிடைத்த வெற்றி என்கிறார்.

உலகெங்கும் உள்ள இஸ்லாமியவாதிகள் மோர்சியின் தேர்வை கொண்டாடினாலும் சவுதி அரசு இதனை எப்படி எதிர் கொள்ளும் என தெரியவில்லை.கடந்த ஏப்ரலில் த்னது தூதரகத்தை எகிப்தில் மூடி தூதரை திருப்பி அழைத்துக் கொண்டது. 

In Saudi Arabia, the world's number one oil producer, the government was silent. Its relations with the Muslim Brotherhood have been poor, with many of the kingdom's officials accusing it of backing demands for internal political change.

However, analysts said Saudi Arabia would have to work with the new Egyptian president.

"I think (the Saudis) are going to be very practical about it. More and more they will discover common interests in the economy, in politics, on how to deal with Iran," said Jamal Khashoggi, a prominent former newspaper editor with ties to the ruling family.

"BUILD BRIDGES"
சவுதி அரசுக்கும் முஸ்லிம் சகோதத்துவ கட்சிக்கும் இதுவரை சரியான உறவுகள் இல்லை எனினும் சூழல் பொறுத்து என்ன செய்வார்கள் என்வே பார்க்க வேண்டும்.
*************
3

இரான் திரு மோர்சியின் தேர்வை வரவேற்று உள்ளது.

Iran, which prides itself on its own Islamist credentials, paid fulsome tribute to those it called "the martyrs of the (Egyptian) revolution", whom it said were responsible for ushering in "a splendid vision of democracy".

"The revolutionary movement of the Egyptian people ... is in its final phases of a new era of developments in the Middle East and the Islamic Awakening," the foreign ministry said.


இவ்வெற்றி எகிப்திய புரட்சியின் வீரர்களுக்கு அஞ்சலி& அங்கீகாரம்  என் இரான் வெளியுறவுத்துறை கருத்து வெளியிட்டு உள்ளது.  
எகிப்திய மக்களின் புரட்சியின் தருணம்.இஸ்லாமிய விழிப்புணர்வில் ஒரு புது யுகம் மத்திய கிழக்கில் தோன்றுகிறது என்வும் இரான் பெருமிதம் கொள்கிறது.
___________

4
மத்தியக் கிழக்கின் பாதுகாவலன்(?) மத்தியஸ்தன் பெரிய அண்ணன் அமெரிக்க என்ன சொல்கிறது?

The United States, which provides vast military aid to Egypt, welcomed the result but made clear it expected Morsy to ensure stability and not to veer to extremes.

"We believe that it is important for President-elect Morsy to take steps at this historic time to advance national unity by reaching out to all parties and constituencies in consultations about the formation of a new government," White House spokesman Jay Carney said in a statement, calling on the new leader to ensure Egypt remained "a pillar of regional peace".

திரு மோர்சியின் தேர்வுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை  வாழ்த்தினாலும் இத்தேர்வு மத்திய கிழக்கின் அரசியல்  நிலையை எவ்விதத்திலும் பாதிகாமல் இருக்க வேண்டும்.சில அதீத நடவடிக்கைகளை நோக்கி செல்ல மாட்டார் எனவும் கருத்து தெரிவிக்கிறது.

நாட்டு ஒற்றுமை,அனைத்து கட்சிகள்,அமைப்புகளுடன் ஒற்றுமை கொண்டு அரசமைப்பார் என எதிர்பார்ப்பதாகவும்,எகிப்து வழக்கப் போல் அப்பகுதியின் அமைதியின் தூண் ஆக விளங்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக வெள்ளை மாளிகை கருத்து வெளியிட்டது.
__________
5
இங்கிலாந்து உள்ளிட்ட பல் ஐரோப்பிய நாடுகளும் திரு  மோர்சியின் வெற்றியை வரவேற்று உள்ளன.நாட்டின் சிறுபானமையினர்&பெண்கள் உரிமைகள் ,மனித உரிமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்ப்பதாக்வும் கருத்திட்டு உள்ளனர். 

A spokesperson for Catherine Ashton, the European Union's foreign policy chief, said the election was a major milestone in Egypt's democratic transition and that Ashton hoped the new president would be "representative of Egypt's diversity".

In Britain, William Hague, the foreign minister, gave Morsy a muted welcome, urging him to build bridges and uphold human rights, including those of women and religious minorities, in a statement broadly echoed other EU member states.

____________
6

பல் இன மத மக்கள் வாழும் எகிப்துநாட்டை வழிநடத்து பொறுப்பு பல சவால்களை கொண்டது.அதனை நல்லபடி திரு மோர்சி நிறைவேற்ற வேண்டும் என துருக்கி கருத்து வெளியிட்டு உள்ளது.

Turkey, an increasingly important power in the region, said Morsy's win reflected the will of the people, but made it clear he had a lot to prove. "Important tests await the new president who will lead the Egyptian people to the free and pluralist democracy they deserve," the foreign ministry said.

__________
7
பிற வளைகுடா நாடுகளில் கருத்து வெளியிடுவதில் மிக்க எச்சரிக்கை தெரிகிற‌து.

Across the Gulf, reaction was cautious.

In the United Arab Emirates, the WAM news agency said the government respected "the choice of the Egyptian people in the context of its democratic march".

Dahi Khalfan, the Dubai police chief, was more skeptical. "An unfortunate choice," he said in a tweet. "The repercussions of this choice will not be light to poor ordinary people."

Bahrain's state news agency said King Hamad congratulated Morsy, praising "an atmosphere of freedom and democracy", while Jordan's Minister of State for Information Samih al-Maaytah told Reuters his country hoped Morsy would ensure stability.

___________

நாம் ஏன் இப்பதிவை எழுதினோம் எனில் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய வாதிகள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.தமிழ் பதிவுலகில் கூட இதனை உணர முடியும்.நாம் அவர்கள்க்கு உண்மை நிலவரத்தை புரிய வைக்க முயல்கிறோம்.

இப்போதைய உலகில் கொள்கை சார்ந்த அரசியல் கிடையாது.உலகமயமாக்கல் என்ற கருத்தாக்கத்திற்கு பிறகு எந்த நாடும்  தன்னிச்சையாக் பொருளாதார& அரசியல் முடிவெடுக்கவே முடியாது.

மத்தியக் கிழக்கின் எண்ணெய் சுரண்டலுக்கு உதவும் குடும்பங்களே அங்கு ஆட்சியில் நீடிக்க முடியும் என்பதும்.அவர்களின் மனித உரிமை மீறல்களை,ஜனநாயக விரோதபோக்குகளை அமெரிகா எபோதும் கண்டு கொள்ளாது.அவர்களின் ஆட்சியை பாதுகாக்க மத்திய கிழக்கு முழுதும் தன் படைத்தளங்களை அமைத்து உள்ளது.இரானுடன் போர் வந்தால் பாரசீக வளை குடாவின் வழியாக எண்ணெய் கொண்டு வர முடியாது என அபுதாபியின் இருந்து ஃபஜஜ்ரா என்னும் நகருக்கு ஒரு நாளுக்கு 1.5 மில்லியன் பேரல் எண்ணெய் கொண்டுவரும் குழாய்கள் அமைக்கின்றனர்.


எகிப்து அரசு அமெரிகாவின் கைப்பாவை அரசுகளுடன் ஒத்துழைத்தால் மட்டுமே பெரிய பிரச்சினை இல்லாமல் கொஞ்ச நாட்கள்க்காவது அரசு நடத்த முடியும்.முபாரக் வழியிலேயே மோர்சி செல்ல் வேண்டும் என அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் அன்பாக கட்டளையிடுவது கருத்துகளில் தெரிகிரது.

திரு மோர்சியும் 2000 வரை அமெரிகாவில் பணியாற்றிய பொறியாளர் என்பதும் குறிப்பிடத் தக்கது.கலிஃபோர்னியா பல்கலைக் கழக்த்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.இவரின் இரு மகன்கள்[மொத்தம் ஐந்து குழந்தைகள்] அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள்.ஆகவே அமெரிகாவுடன் மோதல் போக்கை தவிர்ப்பார் என்வே எதிர்பார்க்க்லாம்.

அமெரிகாவுடன் நட்பு கொண்டு, அதன் அரசியலை பொருளாதாரத்தை பாதிக்காமல் மத அடிப்படை வாதம் உள்நாட்டில் சவுதி பாணியில் வளர்த்தால் அதற்கு எந்த தடையும்  இருக்காது.அது செய்தால் மோர்சிக்கு சீகிரம் பேர் கெட்டு விடும்,அதனையே மேலை நாடுகள் விரும்புகின்ற‌ன.எண்னெய் சுரண்டலுக்கு விரோதமான மனித உரிமை மீறல்கள் மட்டும் சரியான முறையில் கவனிக்கப்படும் என்பது வரலாறு சொல்லும் பாடம்.

ஆகவே நம் நாட்டில் முதலில் பா.ஜ.க ஆட்சி வந்த போது எப்படி காங்கிரசின் வழித்தடத்திலேயே சென்று காங்கிரஸ் 2 என ஆனதோ அது  போல்தான் எகிப்தில் நடக்கும் என்பது நம் கருத்து.

ஒரு வேளை மத்தியக் கிழக்கையே[அப்புறம் உலகையே] திருத்துவேன் எனில் சதாம் ஹுசேன்,கடாஃபி போன்றவர்களை ஞாபகப் படுத்திக் கொண்டால் நிலமை புலப்படும்.

அதை விட்டு கைப்புள்ளை எகிப்தை உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை இரணகளம் ஆக்க துடிக்கும் வெளிநாட்டு மதவாத,மதப் பிரிய சக்திகளில் இருந்து விடுபட்டு எகிப்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயலவதே எதார்த்த‌ இராஜ தந்திரம்.

எகிப்து மிக பழைமையாக கலாசாரம்,நாகரிகம் கொண்டது.பல வகைகளில் இந்தியாவை ஒத்த தன்மைகளும் கொண்டது.நாம் எகிப்தியர்களை,அதன் நாகரிகத்தை,கலை அம்சம் மிக்க பிரமிடுகள் ஆகியவற்றை நேசிக்கிறோம்.
பிரமிடுகளின் அடிப்படை பிதாகரஸ் தேற்றத்தின் முழு எண்கள் தீர்வு என ஏற்கெனவே நாம் ஒரு பதிவு எழுதி இருக்கிறோம்.உலகின் மிக பழைய மத புத்தகம் எகிப்தியர்களின் இறந்தவர்களின் புத்தகம் என்பதையும் நாம் அறிவோம்.


இந்தியாவோடு பல வகைகளிலும் ஒன்றாக இணைந்து உலகளாவிய ஜனநாயக சக்திகளை ஒருங்கினைத்து உள்ள பிரச்சினைகளை போரின்றி சுமுகமாக பேசித் தீர்க்க வேண்டும் என்பதே நம் ஆவல்.
  
நல்லதே நடக்கும் என நம்புவோம்.வாழ்த்துக்கள் சகோதரர் திரு முகமது மோர்சி!

எகிப்திய அதிபரின் முதல் பேச்சு!!!!!!!!!!!


நன்றி

   

Friday, June 22, 2012

தென் கொரியாவின் பரிணாம எதிர்ப்பு எதை நோக்கி செல்கிறது?




வணக்கம் நண்பர்களே ,

பரிணாமம் என்னும் உயிரின தோற்ற வளர்ச்சி கொள்கை பற்றிய விளக்க பதிவுகள் ,விவாதங்களில் நாம் ஈடுபட்டு வருவது அறிந்த விடயம்.உலகில் பரிணாம கொள்கையை எதிர்க்கும் ஒரே ஆய்வு(?) குழு டிஸ்கவரி இன்ஸ்டியூட் எனப்படும் கிறித்தவ படைப்புக் கொள்கையாளர்களின் அமைப்பு ஆகும்.பிற பரிணாம எதிர்ப்பு மைப்புகள் எல்லாம் இந்த அமைப்புகளின் கட்டுரைகளை எடுத்து பயன் படுத்துபவை என்பதை நாம் நம் பதிவுகளில் ஆவணப்படுத்தி இருக்கிறோம்.

தென் கொரியாவில் பள்ளி அறிவியல் பாடத்திட்டத்தில் பரிணாம கொள்கையின் சில ஆதாரங்கள் நீக்கப்பட்டது கடந்த மாத செய்தி.இது குறித்து நேட்சரும்[nature] ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தது.

 டைனொசரில் இருந்து பறவை என்பன் சான்றான ஆர்க்கியாப்டிரிக்ஸ்,குதிரையின் பரிணாம வளர்ச்சி ஆகியவற்றின் சான்றுகள் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

நாம் பரிணாமம் என்பது ஒரு அறிவியல் கொள்கை,பாடத்திட்டம் என்பது அரசியல் கொள்கை என்பதால் இது ஒரு பிரச்சினையே இல்லை என்பதை வலியுறுத்துகிறோம்.

உடனே பரிணாம் எதிர்ப்பு சகோக்கள் தென் கொரியாவில அறிவியலாளர்களே இல்லையா? பாடத்திட்ட குழுவில் இருப்பவர்களும் அறிவியல் மேதைகள்தான் ,முட்டாள்கள் அல்ல‌ என வாதிடுவார்கள். இது உலகம் முழுதும் பரிணாம் எதிர்ப்பு பரவுவதை காடுகிறது என சொல்வது இயல்பே.

நாம் ஒரு செயல் நடக்க சில காரணிகள் தேவை,அது போல் பரிணாம எதிர்ப்பு அரசியலுக்கும் சில காரணிகள் தேவை.அதனை வரையறுத்து அது தென் கொரியாவுக்கு பொருந்துமா என பார்க்கப் போகிறோம்.

இது தென் கொரியாவுக்கு மட்டுமல்ல பெரும்பாலான பரிணாம எதிர்ப்பு
நாடுகளுக்கும் பொருந்தும்.
  
1. ஆபிரஹாமிய மதம் சார்ந்த நம்பிக்கை கொண்டவர்கள் பெரும்பானமையாக இருக்க வேண்டும்.

2.மதம் அரசியலை கட்டுப்படுத்தும் சூழ‌ல் நிலவ வேண்டும்.

புத்த மதத்தினர் பெரும்பானமையினராக இருந்த தென் கொரியா கடந்த இரு நூற்றாண்டுகளில் கிறித்தவ்ர்கள் பெரும்பானமை நாடாக மாறிவிட்டது.உலகில் அதிக சுவிசேஷக‌ர்கள் உள்ல இரண்டாம் நாடு தென் கொரியா.[முதல் நாடு அமெரிக்கா]

http://www.korea4expats.com/article-Christianity-in-Korea.html


உலகின் மிகப் பெரிய தேவாலயம் ஃபுல் காஸ்பல் சர்ஸ் 7.5 இலட்சம் உறுப்பினர்களை கொண்டது 90 களில் அதன் போதகர் திரு பால் யாங்கி சோ நம் சென்னை மெரினாவில் ஒரு கூட்டம் நடத்தினார்.

http://en.wikipedia.org/wiki/Yoido_Full_Gospel_Church

தென் கொரிய மக்கள் 40% பரிணாம கொள்கை மீது நம்பிகை அற்று இருக்கின்றனர்.அமெரிகாவிலும் இதே 40% என்பது குறிப்பிடத் தக்கது.தென் கொரியாவின் பள்ளி அறிவியல் பாட புத்தகங்களில் சில பரிணாம் சான்றுகளை நீக்கியது அங்கு கிறித்தவ மத வளர்ச்சியையும்,அதன் அரசியல் செல்வாக்கை காட்டுகிறது என்பதுதான் நம் கருத்து.

தென் கொரியாவின் புகழ் பெற்ற பரிணாம ஆய்வாளர் Dayk Jang, an evolutionary scientist at Seoul National University இது அறிவியலாளர்களை கலக்காமல் எடுக்கப்ப்ட்ட முடிவு என கருத்து தெரிவிக்கிறார்.


http://ncse.com/news/2012/06/creationist-success-south-korea-007434

பரிணாமம் என்பது உயிரினங்களின் வரலாறு. வரலாற்றை மறைப்பவன்,மறப்பவன் சரியான முன்னேற்ற பாதையில் பயணிக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

பரிணாமம் என்பது ஒரு அறிவியல் கொள்கை அறிவியல் ரீதியாகவே தவறு என நிரூபிக்கப்பட வேண்டும்.அரசியல் குறுக்கு வழியில் அல்ல.


இதற்கு ஒரு எ.கா பார்க்க வேண்டுமானால் நமது அண்டை நாடு பாகிஸ்தான்தான்.அங்கே பள்ளி வரலாற்று பாடப் புத்தகங்களில் அரபியன் முகமது பின் காசிமின் படை எடுப்புக்கு பிறகே அங்கு நாகரிகம் வந்ததாகவும் அதற்கு முன் நாகரிகமற்ற காட்டு மிராண்டிகள் வாழ்வதாக்வும் சிதரிக்கின்றன.

A Text Book of Pakistan Studies claims that Pakistan "came to be established for the first time when the Arabs under Mohammad bin Qasim occupied Sindh and Multan

[இதே பாணியில் எழுதப்பட்ட சிந்து நதிக்கரையினிலே [ஆசிரியர் முகமது ஹசன்]என்ற  தமிழில் ஒரு வரலாற்று நாவல் உண்டு.]


A study by Iftikhar Ahmad of Long Island University published in Current Issues in Comparative Education in 2004 drew five conclusions from content analysis of the social studies textbooks in Pakistan.
  1. First, the selection of material and their thematic sequence in the textbooks present Islam not simply as a belief system but a political ideology and a grand unifying worldview that must be accepted by all citizens.
  2. Second, to sanctify Islamic ideology as an article of faith, the textbooks distort historical facts about the nation's cultural and political heritage.
  3. Third, the textbooks offer a biased treatment of non-Muslim citizens in Pakistan.
  4. Fourth, the main objective of the social studies textbooks on Pakistan studies, civics, and global studies, is to indoctrinate children for a romanticized Islamic state as conceptualized by Islamic theocrats.
  5. Fifth, although the vocabulary in the textbooks underscores Islamic virtues, such as piety, obedience, and submission, little is mentioned about critical thinking, civic participation, or democratic values of freedom of speech, equality, and respect for cultural diversity.

நேரமினமையால் மொழி பெய‌ர்க்கவில்லை,விவாதம் வந்தால் மொழி பெயர்ப்போம், பாகிஸ்தான் பள்ளிப் பாடத்திட்டம் பற்றி சில பதிவுகள் எழுதலாம்.ஹி ஹி ஹி!!!!!!!!!!


இதனால் இந்திய வெறுப்பு அவர்கள் மனதில் ஊறிவிட்டது .அந்த வெறுப்பு அவர்களை அமெரிக்காவின் அடிமை ஆக்கியது,இப்போது நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமாக வன்முறை,பொருளாதார சிக்கலில் காட்டுமிராண்டி நாடாகவே ஆகிவிட்டது.

ஆகவே பள்ளி பாடத் திட்டம் என்பது எதை வேண்டுமானாலும் அரசியல் செல்வாக்கு பலம் இருந்தால் மாற்றலாம் ,ஆகவே தென் கொரிய ,பாகிஸ்தான் நிகழ்வுகளில் வித்தியாசம் ஒன்றுமில்லை,இதனை மத அரசியலின் வெளிப்பாடாகவே நாம் பார்க்கிறோம்.

தென் கொரியா மதவாதிகளின் பிடியில் இருந்து விடுபடவும்,உலகெங்கும் ஜன்நாயகம் ,மத சார்பின்மை,மனித உரிமைச் சட்டங்கள் அமல் படுத்தும் போராட்டத்தில் நாமும் குரல் கொடுப்போம்.





டிஸ்கி: பரிணாம் எதிர்ப்பில் என்ன எழுதுவார்கள் என நம்க்குத் தெரிந்தாலும் எதிர்ப்புக் கட்டுரை வந்த பின் மறுபுக் கட்டுரை வெளியிடவே  விரும்புகிறோம்.

நன்றி

Friday, June 15, 2012

மக்கள் தொகை பெருக்கத்தை அரசு கட்டுப் படுத்துவது சரியா?(18+)



வணக்கம் நண்பர்களே,
கடந்த வாரம் சீனாவில் ஒரு பெண்ணுக்கு வலுக்ட்டாயமாக கருக்கலைப்பு சீன அரசால் செய்யப்பட்டது மிகுந்த பரபரப்பு ஏற்படுத்தியது.சீனாவில் கடந்த 30+ வருடங்களாக ஒரு குழந்தைக்கு மேல் பெறுபவர்கள் அபராதம் செலுத்த வேண்டும் என சட்டம் அமலில் உள்ளது.அப்பெண்னால் அபராதம் செலுத்த இயலவில்லை என்பதால் இந்த நடவடிக்கைஅ எடுக்கப் பட்டது என செய்திகள் கூறுகின்றன.
இது ஒரு மனித விரோத செயல் என்பதில் துளியும் ஐயமில்லை..இதற்கு நம் கண்டனங்கள். 

Year        Population
1000 275 million
1500 450 million
1650 500 million
1750 700 million
1804 1 billion
1850 1.2 billion
1900 1.6 billion
1927 2 billion
1950 2.55 billion
1955 2.8 billion
1960 3 billion
1965 3.3 billion
1970 3.7 billion
1975 4 billion
1980 4.5 billion
1985 4.85 billion
1987 5 billion
1990 5.3 billion
1995 5.7 billion
1999 6 billion
2000 6.1 billion
2005 6.45 billion
2010 6.8 billion
2011 7 billion
2020 7.6 billion
2027 8 billion
2030 8.2 billion
2040 8.8 billion
2046 9 billion
2050 9.2 billion




இப்பதிவில் மக்கள் தொகை அதிகரிப்பு பற்றி சில விவரங்கள் அறிவோம்..கடந்த இரு நூற்றாண்டுகளில் மக்கள் தொகை குறித்த விவரங்கள் முதலில் அறிவோம்.கடந்த நூற்றாண்டின் மருத்துவ அறிவியலின் முன்னேற்றங்களால் மனிதர்களின் சராசரி ஆயுள் அதிகரித்தது,கடும் கொள்ளை நோய்கள் ஒழிக்கப்பட்டன போன்றவையே மக்கள் தொகை அதிகரிப்பின் காரணங்களாகும்.

மக்கள் தொகை என்பதும் ஒரு வகை செல்வம் என்ற கருத்து ஏற்புடையதே எனினும் "அள்வுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்பதும் உண்மையே.

மக்கள் தொகை அதிகரிப்பின் வீதம் குறைவதாக புள்ளிவிவரங்கள் கூறினாலும்,இபோதைய அதிகரிப்புவீதம் வருடத்திற்கு 1.1% என்பது ஒரு வருடத்திற்கு சுமார் 7 கோடி மக்கள் தொகை அதிகரிப்பு நடக்கிறது.

அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாழ்வாதாரம்,வசதிகள் செய்து கொடுக்கும் அரசுகள் உலகில் மிக குறைவு.மனித உழைப்பு,உயிர் மிக மலிந்து போனதற்கும் இந்த அதிகரிப்பு காரணமே. இனவாதம்,சமூக சிக்கல்கள் அதிகரிப்பும் இதன் பக்க விளைவுகளே!.


எனினும் வரும் காலங்களில் அரசு மக்கள் தொகையை கட்டாயப்படுத்தி கட்டுப்படுத்தும் சூழல் உருவாகுமா என்பதே நம் கேள்வி..

இதனை கூடுமானவரை தவிர்த்து மக்கள் தொகை அதிகரிப்பின் சிக்கல் பற்ரிய கல்வி,விழிப்புணர்வு அளிக்க்லாம்.

சீனாவில் இப்படி உச்ச கட்ட கட்டுப்பாட்டினால் வயதானவர்களின் மக்கள் தொகை அதிகரிப்பு,அவர்களுக்கு மருத்தும்வம்,பாதுகாப்பு போன்ற சிக்கல் எழுகிறது. இபோதைய ஒரு குழந்தைக்கு அம்மா,அப்பா,2 பாட்டி,2 தாத்தா உள்ளனர்.ஆகவே 6 பேரை காப்பாற்றும் பொறுப்பு ஒருவர் மேல் விழுகிறது.இது இன்னும் அதிக சிக்கலை உருவாக்கும்.

ஆகவே மக்கள் தொகை குறைப்பு என்றாலும் படிப்படியாக் குறைத்தலே சிறந்தது.சீனா போல் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் அபராதம் என்ற உச்ச கட்ட கட்டுப்பாட்டுக்கு பதில், ஒரு பெண் இரு குழந்தை மட்டும் பெற்றால் ஊக்கம் அளிக்கும் சலுகைகள் அளிக்கலாம்.


மக்கள் சமூகமாக வாழ ஆரம்பித்து பல அயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது.பல் சாதனைகள்,ஆட்சிமுறை ,சமூக நலன் பரிசோதனைகள் செய்து 

ஜனநாயகமும்,மத,இன சார்பற்ற அரசியல்,மனித உரிமைச் சட்டங்கள், கொள்கைகளே சிறந்தது என உணர்ந்தோம்.

அதுபோல் மக்கள் தொகை அதிகரிப்பு என்பதும் நம்மால் நமக்கு ஏற்படும் பிரச்சினை என அறிந்து இரு குழந்தைகளுக்கு மேல் பெறுவதைத் நாமாகவே தவிர்ப்பது மிக நல்லது.அனைவருக்கும் நல்ல உணவு,சுகாதாரம் கல்வி,வாழ்வாதாரம் என்பதை உறுதி செய்யும் போராட்டத்தில் இப்பிரசினை தடையாக இருக்கக் கூடாது என்பதே நம் விருப்பம்.

சீனாவின் மக்கள் தொகை கட்டுப்பாடு அது பற்றிய சிக்கல்களை இந்த ஆவணப்படம் விள்க்குகிறது

நன்றி
Thank to Google for the statistics