Thursday, August 23, 2012

சகோ சுவனப் பிரியன்& கோ விற்கு விளக்கம்: ஆல்கஹால் அற்ற மதுவும் இஸ்லாமில் ஹராமே!!!



[Pictures published by Utusan Malaysia show people to try beer without alcohol]
http://jitlim7.blogspot.com/2011/06/halal-beer-today-whats-tomorrow-halal.html

வணக்கம் நண்பர்களே

இப்பதிவை படிக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு  "அஸ்ஸலாமு அலைக்கும்"சொல்லி  நம்  பதிவை தொடங்குகிறேன்.

நம் சகோ சுவனப்பிரியன் நமது அன்புக்கும் ,பாசத்துக்கும் உரிய நண்பர் என்பதை அனைவரும் அறிவோம். நாம் மதம் சார்ந்த வரலாறு,வாழ்வியல் ஆகியற்றில் தேடல் சார் ஆய்வு செய்கிறோம், நாம் மதம் சாரா இறை மறுப்பாளர் என்றாலும் நம் கடந்த காலத்தை குறித்த தகவல்கள் தரும் புத்த்கம் என்றவகையில் மத நூல்களை அணுகுகிறோம்.

அதில் உள்ள விடயங்கள் பல இப்போதும் அனைவருக்கும் பொருந்தலாம்,சில பொருந்தாமலும் போகலாம்இஸ்லாம் குறித்த பல பதிவுகள் தமிழ்மணத்தில் வருவதால் அது ஒரு விவாதப் பொருள் ஆவது தவிர்க்க முடியாது.

அந்தவகையில் இஸ்லாம் மது,போதை உண்டாக்கும் பொருள்களை தடை செய்வது நாம் அறிந்த விடயமே!!!.

இஸ்லாமின் ஆரம்ப காலத்தில் மது தடை செய்யப் பட்டது படிப்படியாகவே,எனினும் இறுதியில் போதை உண்டாக்கும் எதுவும் விலக்கப்பட்டதே(ஹாராம் ) என் குரான் அழுத்தம் திருத்தமாக கூறிவிடுகிறது.

முதலில் இறங்கியது

2:219. (நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது” (நபியே! “தர்மத்திற்காக) எதைச் செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர் “(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்” என்று கூறுவீராக; நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) இவ்வாறு விவரிக்கின்றான்.

இறுதி கட்டளை(மதுபானம் குறித்த)

5:90ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
5:91நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?

ஆகவே ப்போது மதுபானம்,சூதாட்டம் இரண்டுமே இஸ்லாமில் ஹராம் என்பதில் ஐயம் வேண்டாம்.

நாம் மதவாதிகளை அதிகம் விமர்சிப்பதே அவர்களின் கருத்து திணிப்பு &இரட்டை வேடமே!!!.
  
விலக்கப் பட்டது என்றால் மதவாதிகள் செய்யும் முதல் விடயம் அதில் குறுக்கு வழி கண்டுபிடிப்பதே. இஸ்லாமிய மதவாதிகளின் குறுக்கு வழியை அறிய சகோ சுவனப் பிரியனின் பதிவை படிக்க வேண்டுகிறேன்.

அவரின் பதிவின் சாராம்சம்.

மதுவில் போதை ஏற்படுத்துவது ஆல்கஹால்,ஆகவே ஆல்கஹால் நீக்கப்பட்ட மதுவைக் குடிக்க்லாம்.
அது எப்படி ஆல்கஹால் இல்லாமல் மதுவரும் என்றால் அழகிய வகையில் விளக்குகிறார் நம் சகோ!!!

"உடல் வலிக்காக மதுவை குடிக்கிறோம் என்று சொல்பவர்கள் ஆல்கஹால் நீக்கப்பட்ட மதுவை குடிக்கலாமே. அது குடலுக்கு குளிர்ச்சியை தரும். ஆல்கஹால் கலந்த மது குடலை அரிக்க ஆரம்பிக்கும்.

ஹலால் பீர் தயாரிக்கும் நிறுவனங்கள், "இந்த பீரில் 0.01% ஆல்கஹால் இருப்பதாக" விளம்பரம் செய்கின்றது. அதுதான் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் குழு அனுமதிக்கும் ஆல்கஹால் அளவு. இந்த அளவை மீறி ஒரு பானத்தில் ஆல்ஹகால் அதிகமாக கலக்கப்படுமானால் அது போதை ஏற்றக் கூடியதாக மாறி விடுகிறது. இதனை இஸ்லாம் தடை செய்கிறது
.”


அது என்ன 0.01% ஆல்கஹால் இருந்தால் ஹராம்(விலக்கப் பட்டது) ஹலால்(அனுமதிக்கப் பட்ட) ஆகி விடும் என்ற கணக்கு?

இதற்கு மத நூல்களில் ஆதாரம் இருக்காது,மார்க்க அறிஞர்களின் விளக்கம் என்பது மதுபானம் என்பது ஏதோஒரு வகையில் சமூகத்தில் தவிர்க்க முடியாதது என்பதை காட்டுவதாகவே எடுக்கலாம்.

நிச்சயமாக இது ஒரு ஏமாற்று வேலையே.

அப்போது இந்த 0.01 வீதம் வரும் வண்ணம் மிக்ஸ்சிங் செய்தால் போதுமானது என்ற பொருளும் வருகிறது.ஆகவே மதுபானத் தடை என்பதை மிக்ஸ்சிங் பிரச்சினையாக மாற்றுவதா???

நான் அளவாக சரியா மிக்ஸ்சிங் செய்து  குடித்து விட்டு அமைதியாக் தூங்கி விடுவேன்  என்பவர்களுக்கும் பொருந்துமா?

காலையில் இருந்து ஏற்கெனவே குடித்த தண்ணீர் அள்வு 90% ஆகவே ஆல்கஹால்  இபோது அதிகம் கலக்கலாம் என்னும் பொருளும் கொள்ளலாம்.அப்படி அல்ல என சப்பை கட்டும் சகோதரர்களே. தடை  என்றால் முழுதும் தடை அல்லது அது குறித்து விமர்சனம் செய்யாமலாவது இருக்க்லாம்.

இப்படி இரட்டை வேட நகைச்சுவை ஏன்?

சவுதியில் இது அனுமதிக்கப் பட்டுள்ளது என்பதுதானே காரணம்!!!

எனினும் ஒரு முக்கிய இஸ்லாமிய தளம் கூறும் கருத்தினை மட்டும் தமிழாக்கம் செய்து வெளியிடுகிறேன். பிறகு உங்கள் விருப்பம்!!!!!!


Question: Is non-alcoholic beer halal? Can Muslims consume it?

Answer:
In the Name of Allah, Most Gracious, Most Merciful.
All praise and thanks are due to Allah, and peace and blessings be upon His Messenger.

Thanks for your question, and we implore Allah to guide us all to the best way through which we can learn more about what is lawful in order to follow it and what is prohibited in order to refrain from approaching it.
Indeed, Muslims need to understand the process of making so-called non-alcoholic beers or wines. The process to make alcoholic and non-alcoholic beers and wines is the same. Both alcoholic and non-alcoholic beers and wines are haram. Once the beer or the wine is produced, alcohol is extracted from it to make it non-alcoholic. Never is 100 percent of the alcohol removed. The Islamic principle is that if the whole of a thing is haram, the part of it is also haram. By that principle non-alcoholic beers and wines are haram.
Responding to the question, the Islamic Religious Council of Singapore, states the following:

Thank you for your query.

Our position is that non-alcoholic beer is not halal. Our position is based on the premise that
1. It is drunk as an alternative to something which is haram, that is, alcoholic beer.
2. The culture of wine and beer drinking which the drink entails is non-Islamic and, therefore, haram.
Therefore, based on the principle of blocking the doors to transgression in Islamic jurisprudence, non-alcoholic beer is haram.

கேள்வி:ஆல்கஹால் நீக்கப்பட்ட பீர் இஸ்லாமில் அனுமதிக்கப் பட்டதா?

பதில்:அளவற்ற அருளாளனும்,எல்லையற்ற இரக்கமுள்ளோனுமாகிய ,ஏக இறைவனின் பெயரால்..
அவனுக்கே எல்லாப் புகழும்,நன்றியும் உரித்தானது!

அமைதியும்,ஆசியும் அவனது தூதர் மீதும் நிலவட்டும்!

உங்களின் கேள்விக்கு ஏக இறைவன் நம்மை மிக சரியாக  வழிகாட்டி அதன் மூலம் பின்பற்ற வேண்டியவைகளையும்,விலக்க வேண்டியவைகளையும் அறிய உதவுவானாக!

முஸ்லிம்கள் அறிந்து கொள்ள வேண்டிய விடயம் மதுபானம்( ஆல்கஹால் கொண்ட, நீக்கப்பட்ட) உற்பத்தியில் இரண்டும் ஒரே வகையிலேயே தயாரிக்கப் படுகின்றன.

ஆகவே இரண்டுமே விலக்கப்பட்டது(ஹராம்)
ஆல்கஹாலுடன் உற்பத்தி செய்யப் பட்ட மதுவில் இருந்து ஆல்கஹால் நீக்கப் பட்டு  ,ஆல்கஹால் நீகப்பட்ட மது தயாரிக்கப் படுகிறது.
அனைத்து  ஆல்கஹாலும் 100% நீக்கப்படும் என்று சொல்ல இயலாது.ஆகவே இஸ்லாமில் ஒரு பொருள் முழுதும் நீக்கப் பட்டது என்றால் ,அதன் சிறிது அளவும் நீக்கப் பட்டதே!!!
இந்த கொள்கையின் அடிப்படையில் ஆல்கஹால் நீக்கப் பட்ட மது ஹராம்!.

சிங்கப்பூர் இஸ்லாமிய  கூட்டு அமைப்பின் கருத்தை அறிவோம்
1. ஆல்கஹல் நீக்கப் பட்ட மது  ஹராம் ஆன ஆல்கஹால் மதுவிற்கு பதிலாக குடிக்கப்படுகிறது.
2. மதுவகைகள் இஸ்லாமில் தடை செய்யப்பட்டவை.ஆகவே இதுவும் ஹராமே.

நாம் சொலவ்து மதவாதிகள் தங்களின் சூழலுக்கு ஏற்ப கருத்து திணிப்பு செய்வதில் மதமும் விதி விலக்கு அல்ல என்பதையே பதிவு செய்கிறோம்.

ஆகவே பிறருக்கு அறிவுரை வழங்குவதை விட தங்களின் இரட்டை வேட போக்கினை கைவிடவே வேண்டுகிறோம்!

மது என்பது பெரும்பாலான் நாட்டு கலாச்சாரங்களில் மிக இயல்பான ஒன்றாகவே கருதப்படுகிறதுமுழு மது விலக்கு என்பதும் சாத்தியம் அற்ற ஒன்று என்பதயே இந்த ஆல்கஹால் நீகப்பட்ட மது மீதான விவாதம் காட்டுகிறது.

மது அருந்தாமல் இருப்பது மிக நல்லது. ஆயினும் மது  அருந்துபவர்கள் அளவோடு தகுந்த சுகாதார கட்டுப்பாடுகளை  கடைப்பிடித்தால் பிரச்சினை இருக்காது.

இதில் ஒரு விடயம் அனைவரும் நன்கு அறியலாம் மதம் சார்ந்த வாழ்வியல் நடைமுறைகள் சூழல் சார்ந்து வித்தியாசப் படும்.

ஆல்கஹால் நீக்கப்பட்ட மது அருந்தலாம் என்பது இஸ்லாமின் படியும் இரு மாறுபட்ட விடைகள் கொண்ட விடமே!!!!!!!!!!!!

0.01% ஆல்கஹால் கொண்ட மது அருந்தலாம் என்பது நகைப்புக்கு உரிய விடயமே!!!!!!

ஆகவே மது அருந்தாதவர்கள் பிறருக்கு அறிவுரைகள் வாரி வழங்குவதை தவிர்த்து தங்களின் இரட்டை வேடப் போக்கினை பொது தளத்தில் அம்பலப் படுத்த வேண்டாம் எனவே வேண்டுகிறோம்.பொது தளத்தில் விவாதிக்கப் படுவதால் மட்டுமே விமர்சிக்கிறோம். நன்றி

டிஸ்கி
சகோ சுவனனின் கருத்தை ஏற்கும் இறை நம்பிக்கையாளர்களுக்கும் நாம் உதவி செய்யவே விரும்புகிறோம் [நம் கடன் பணி செய்து கிடப்பதே"].

இக்காணொளியில் ஆல்கஹால் நீக்க்கப்பட்ட பீர் வகைகள் பற்றி அழகிய முறையில் விளக்குகின்றார்கள்.அருந்தி மகிழ்க!! Cheers!!!!!!!!!!!!!!!!!!!!1


Non Alcoholic Beer Brands



66 comments:

  1. நம் மக்கள் அதிக புத்திசாலிகள்,சின்ன ஒரு புள்ளி கிடைத்தால் கோடு போடுபவர்கள்,இந்த ஆல்கஹால் நீக்கிய பீரில் இருந்து ஸ்ட்ராங் பீர் தயாரிக்கவா மாட்டார்கள்?? வழி உண்டு. இங்கே பாருங்கள் விவாதத்தை.

    http://homedistiller.org/forum/viewtopic.php?f=10&t=5162

    எனினும் ஒருவர் ஆல்கஹால் நீக்கிய பீரில் கொஞ்சம் சக்கரை,ஈஸ்ட் கல்ந்தால் தயாரிக்க முடியும் என விள்க்குகிறார்.

    by oakie » Tue Nov 13, 2007 11:52 am

    Well if ingredients are hard to come by then the easyist way would be to just add plain white sugar and backers yeast to it.

    Add about 125 grams of sugar and 5 grams backer's yeast for every liter of beer. This should give you a good strong beer (about 7% abv)

    I've never done this myself so I don't know for sure how great this recipe will taste. A friend of mine did this once back when I was in high school. He said it was about the same as the regular alcoholic version of the beer, but like I said I have no idea never tried it. Let us know how it turns out.

    oakie
    Rumrunner

    Posts: 66
    Joined: Fri Mar 16, 2007 11:31 am
    Location: in the hills of West Virginia


    மக்களின் அதிக செயல்முறை விஞ்ஞானிகள் இருப்பது உறுதியாகிறது.ஹா ஹா ஹா

    ReplyDelete
  2. http://ask.yahoo.com/20031002.html

    Dear Yahoo!:
    How do they make non-alcoholic beer?
    Buzz
    Cartersville, Georgia
    Dear Buzz:
    The term "non-alcoholic beer" is actually a misnomer. There are trace amounts of alcohol in non-alcoholic beer. Then again, you can also find trace amounts of alcohol in orange juice and bread, as a result of the fermentation process. Commercial definitions of non-alcoholic beer (otherwise known as "malted beverage") vary between countries, but it usually contains a maximum of 0.1% to 0.5% alcohol.
    Non-alcoholic beer, or "near beer," dates coincidentally enough to the advent of Prohibition in 1919. President Wilson initially tried to reduce the alcohol percentage of beer to around 2.5%, but the Temperance Society would have none of it. In a bizarre twist, non-alcoholic beer was often artificially "spiked" with grain alcohol and sold illegally.

    Non-alcoholic beer is brewed as normal beer, but during the finishing stages of the brewing process the alcohol is removed by vacuum evaporation. This process takes advantage of the different boiling points of water and alcohol. As this feature article by John Naleszkiewicz at Brew Your Own magazine explains, since alcohol has a very low boiling point, it's relatively easy to evaporate most of the alcohol in a batch of home brew by simply heating it in an oven after it ferments. You can also try to shorten the fermenting process, but that tends to take more flavor away.

    The wonderful resource Wikipedia notes that while most non-alcoholic beers are lagers, there are also some non-alcoholic ales and bitters.

    Bottoms up!

    ReplyDelete
  3. சில மருந்துகளிலும் ஆல்க்ககால் உள்ளது. சளி மருந்து போன்றவற்றில் இவை உண்டு. அதனால தான் சளி புடுச்சா நெப்போலியன் குடிக்கனும் :)). சளி எல்லோருக்கும் வரும். ஆனால் எவ்வளவு விழுக்காடு என்பது தெரியாது. மதுவில் மட்டும் ஆல்க்ககால் இருப்பதில்லை. வாய் கொப்பளிக்கும் திரவத்திலும் உண்டு Listerineல் அதிகமாகவே இருக்கும். இப்ப ஆல்க்ககால் இல்லாத Listerine Zero ம் கிடைக்குது. குட்டியூண்டு அதாவது .01%~0.02% இருந்தால் அதில் ஆல்க்ககால் இருக்கறத சொல்லமாங்கன்னு நினைக்கிறேன் நாமளும் ஆல்க்ககால் அற்றதுன்னு வாங்கி ஏமாறலாம்.

    ReplyDelete
  4. இஸ்லாம் +மது பற்றி அருமையான தகவல் சகோ. செம காமெடியாக இருக்கிறது.
    பர்தாவுடன் தண்ணியடிக்கும் இஸ்லாமிய பெண் படம் இரசிக்கதக்கதாக இருந்தது.

    ReplyDelete
  5. சகோ சார்வாகன்!

    எதிர் பதிவா? :-( சரி...

    முதலில் சவுதி அனுமதிப்பதால் இதனை நான் ஆதரிப்பதாக சொல்வது தவறு. குர்ஆனும், நபி மொழிகளும்தான் ஒரு முஸ்லிமுக்கு முன்னால் வர வேண்டுமேயொழிய நாடுகளையும் அதனை ஆள்பவர்களையும் முன்னிலைப் படுத்த தேவையில்லை. இங்கு சவுதியில் விற்கப்படும் பானத்தை நாமாகவே ஹலால் பீர் என்று பெயரிட்டுக் கொள்கிறோம். இங்கு விநியோகிக்கப்படும் பானம் மால்ட் மற்றும் ஃபிஸி கலவைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பர்பிகான், மூஸே போன்ற தனிப் பெயர்களைக் கொண்டே அனேகப் பேர் இதனை அடையாளப் படுத்துவர். நாம் இன்று பயன்படுத்தும் அனேக பொருட்களில் ஆல்கஹால் கலந்தே உள்ளது.

    அவ்வாறு ஒதுக்க ஆரம்பித்தால் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றை கைகழுவ வேண்டி வரும். நார்மலான ஒரு மனிதனுக்கு போதை ஏறும் விதமாக எந்த பொருள் இருந்தாலும் அது தடை செய்யப்பட்டதே. இன்றும் கூட நமக்கு தெரியாமல் கசகசா என்ற பொருளை சமையலில் பயன்படுத்தி வந்தோம். அதில் போதை இருப்பது தெரிந்தவுடன் எங்கள் வீட்டில் அதை சுத்தமாக பயன்படுத்துவது இல்லை. அது போல் அரபு நாடுகளில் விற்கப்படும் குளிர்பானத்தில் போதை இருப்பதாக நிரூபணமானால் உடன் நிறுத்தி விடப் போகிறோம். அல்லது சந்தேகமாக உள்ள விஷயமாக உள்ளதால் இது போன்ற பானங்களை குடிப்பதை தவிர்த்து கொண்டு பழ ரசங்களை அருந்தலாமே. இதில் குழப்பமடைய ஒன்றுமில்லை.
    ------------------------

    There's no beer sold in Saudi. There's only non-alcholic malt beverage which is basically malt flavoured fizzy water. It's not beer, never has been beer, and the European legislation forbids it from being called beer, it's not allowed even to be called alcohol free beer, because it's not beer, hence it being called non-alcholic malt beverage.

    Alcohol free beer is beer with the alcohol removed, i.e. it's still beer and it used to be alcoholic. Non-alcoholic malt beverage is just fizzy water with malt flavouring in, to make it taste vaguely like beer (but I'll wait to see what the non-Muslims say about that because as I understand it, the taste is not the same as beer)

    I've never even seen alcohol free beer on sale in Saudi, just non-alcoholic malt beverage which is no more beer than 7-up is beer.
    ---------------------


    Praise be to Allaah.
    It is essential to differentiate between the two kinds of beer:

    The first is the intoxicating beer that is sold in some countries. This beer is khamr (an intoxicant) and it is haraam to sell it, buy it and drink it. The Prophet (peace and blessings of Allaah be upon him) said: “Every intoxicant is khamr and every intoxicant is haraam.” Narrated by Muslim, 2003.

    It is haraam to drink a lot or a little of it, even a single drop, because the Prophet (peace and blessings of Allaah be upon him) said: “Whatever intoxicates in large quantities, a little of it is haraam.” Narrated by al-Tirmidhi, 1865; classed as saheeh by al-Albaani in Saheeh al-Tirmidhi.

    The second type is beer that is not intoxicating, either because it is completely free of alcohol, or because it contains a minuscule amount of alcohol that does not reach the level of causing intoxication no matter how much a person drinks of it. The scholars have ruled that this is permissible.

    Shaykh Ibn ‘Uthaymeen said:

    The beer that is on sale in our marketplaces [in Saudi Arabia] is all halaal, because it has been inspected by the officials and is completely free of alcohol. The basic principle concerning all kinds of food, drink and clothing is that they are permissible until and unless proof is established that they are haraam. Allaah says (interpretation of the meaning):

    சகோ ராஜநடராஜனிடம் இந்த குளிர்பானங்களையும் அதில் போதை இருக்கிறதா என்பதையும் கேட்டு தெளிவு பெறுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ சுவனன்,

      நல்ல விளக்கம். அதாவது உங்கள் மத புத்தக்த்தில் 100% ஆல்கஹால் தடை சொல்லி இருப்பதால் 99.99% ஆல்கஹாலைத் தவிர்த்து 0.01% ஆல்கஹால் உள்ள பீர் அருந்த அனுமதி.

      எப்படி 0.01% என்று மார்க்க அறிஞர்கள் நிர்ணயித்தார்கள் என்பதே நம் கேள்வி?

      எல்லாம் பொருளாதாரம் சார் முடிவுகளே என்பதில் நமக்கு ஐயம் இல்லை..

      இதனையும் சில மார்க்க அறிஞர்கள் எதிர்க்கிறார்கள் என்பதையே நான் எடுத்து விள்க்குகிறென்.

      இஸ்லாமிலும் சில விடயங்களின் பதில்கள் பன்முகத் தன்மை உடையது!!!

      பாருங்கள் இந்த ஹலால் பீரில் (ஹலால்)சர்க்கரை+(ஹலால்)ஈஸ்ட் கலந்தால் (ஹராம்)ஸ்ட்ராங் பீர் ரெடி!!!

      ஆகவே பூரண மதுவிலக்கை இந்த ஹலால் பீர் கொண்டுவராது.

      ஹலால்(ஹராம்) பீர் குடிப்பவர் ஹலால்(ஹராம்) குடிகாரர் எனப்ப‌டுவார்

      ஹலால் குடிகாரன் ஹராம் குடிகாரனை கிண்டல் செய்யக் கூடாது!!!

      என்பதை உங்கள் மார்க்க சகோக்கள் புரிந்து குடிமகன்களின் ஒற்றுமைக்காக் பாடுபட வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம்!!!



      நன்றி!!!!!!!!!!

      Delete
  6. வாங்க சகோ குறும்பன்,

    ஆல்கஹால் இல்லாத‌ பொருள்களை மட்டும் பயன்படுத்துவது மிகவும் கடினம்.

    மது அருந்தாமல் இருப்பது ஒருவரின் தனிப்பட்ட விடயம்.இதில் மதவாதிகள் தங்கள் புத்தக்த்தில் சொல்லி இருப்பதால் அனைவரும் பின்பற்ற வேண்டும் என நாடக்ம் போடுவதும்.அதுவே சவுதியில் ஆல்கஹால் நீக்கப்பட்டது என அனுமதிக்கப் பட்டது என்றதும் சம்மர் சால்ட் அடித்து 0.01% ஆல்கஹால் அனுமதி என்பதும் மிக்க நகைசுவையே!!..

    ஆக எல்லாம் மிக்ஸ்சிங் பிரச்சினை மட்டுமே!!!

    சகோ குயிக் ஃபாக்ஸ்

    இந்த படம் ஹலால்(ஆல்கஹால் நீக்கப்பட்ட) பீர் குடிக்க விளம்பரம்,மலேசியாவில் உத்சுன் மலேசிய என்னும் செய்தி அமைப்பால் வெளியிடப்பட்டது
    அவ்வளவுதான்!!

    http://sindicato-dos-sangradores-islamicos.blogspot.com/2011/06/fatwa-council-to-decide-on-halal-beer.html

    நன்றி!!!!!!!!!!

    ReplyDelete
  7. நல்ல பதிவு !!!

    சுவனப்பிரியனிடமும் இதேக் கேள்வி எழுப்பி இருந்தேன் ---

    அது என்ன 0.01 % அளவு அதனை தீர்மானித்த அதிபுத்திசாலி எவராக இருக்க முடியும் ?

    ஒருவேளை 0.02% என்றால் போதை வந்துவிடுமா ! எனக்கு 5 சதவீத மதுவைக் குடித்தால் கூட போதை வருவதில்லை ... !!! ஹிஹி !!!

    ஹலால் பியர் என்று சுபி சொல்கின்றார் --- ஆனால் குரானில் ஹலால் பியர் குடிக்கலாம் என்று எங்குமே சொல்லவில்லை !!! ஆக !!! இவர்களே இடைச் செருகல் செய்கின்றார்கள் .... !!!

    ReplyDelete
    Replies
    1. சகோ இக்பால் செல்வன் வாங்க!

      நாம் விமர்சிப்பது மத ஆட்சி நடத்தும் ஆளும் வர்க்கங்களை!
      அதன் புகழ் பாடும் ஊது குழல்களை மட்டுமே!
      ஒரு சாமான்யன் எந்த மதம் இனத்தில் பிறந்தாலும் சராசை மனிதன் போல்வே இருப்பான் என்பது நம் புரிதல், கொள்கை!

      ஆளும் மத்வாதிகளின் செயல்களை புரிந்து கொள்ள ஒரே விள்க்கம்தான்.

      ஏன் மத்திய கிழக்கு உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் ஆல்கஹால் நீககப்பட்ட மது அனுமதிக்கப்படுகிறது?


      மேலை நாடுகளின் பொருளாதர நலனுக்காகவே.இந்த வகை மது பெருமள்வில் இறக்குமதியே செய்யப்படுகிறது. ஒருவேளை முழு தடை எனில் அந்நாடுகளின் ஹலால் மது உற்பத்தி பாதிக்கப்படும்.

      சந்தைப் பொருளாதாரத்தில் ஒரு சந்தையை இழக்க யாரும் விரும்ப மாட்டார்கள்!

      ஆகவே ஹராம் மது த்டை எனில் ஹலால் மதுவுக்கு அனுமதி இருந்தால் மட்டுமே மேலை நாடுகள்க்கு இலாபம்!.

      இத்ற்கேற்ப அவர்களின் ஆதரவு மத்வாதிகளை விள்க்கம் சொல்ல வைத்தால் எதையும் நம்பும் மகள் கூட்டம் கேள்வி கேட்காமல் நம்பும்!!


      ஹ‌லால் ம‌து அனும‌தி என்ப‌து ம‌த‌ ஆட்சியாள‌ர்க‌ள் மேலை நாட்டு பிர‌திநிதிக‌ள் என்ப‌த‌ன் நிரூப‌ண‌ம்.

      ந‌ம் நாட்டிலும் கூட‌ வெளிநாட்டு ம‌துவ‌கைகளுக்கு ம‌ட்டும் த்டை என்று கொண்டு வ‌ந்தால் ஆள்ப‌வ‌ர்க‌ள் மாற்ற‌ப் ப‌டுவார்க‌ள்!.

      கோக்,பெப்சிக்கும் இதே க‌தைதான்!!!

      க‌ள்,சாராய‌ம் ஆகிய‌வ‌ற்றுக்கு த‌டை இருப்ப‌தும் அர‌சு வெளிநாட்டு ம‌துவ‌கைக‌ளை விற்ப‌தும் இத்னால்தான்.

      இதில் ம‌த‌ம் சார்ந்த‌ விள்க்க‌ம் ஏமாற்று வேலையே ந‌ன்றி!!!!!!!!!

      Delete
  8. //ஹலால்(ஹராம்) பீர் குடிப்பவர் ஹலால்(ஹராம்) குடிகாரர் எனப்ப‌டுவார்

    ஹலால் குடிகாரன் ஹராம் குடிகாரனை கிண்டல் செய்யக் கூடாது!!!

    என்பதை உங்கள் மார்க்க சகோக்கள் புரிந்து குடிமகன்களின் ஒற்றுமைக்காக் பாடுபட வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம்!!!//

    ஹிஹி !!!

    ஆமோதிக்கின்றேன் - சுவனப்பிரியன் இனிமேல் ஒரு ஹலால் குடிகாரன் என்றழைக்கப்படுவார் !!!

    0.01 % சதவீதத்துக்கு மேல் உள்ள டானிக் உட்பட பல பொருட்களை சௌதி தடை செய்கின்றதா - அறிந்தவர்கள் கூறினால் புண்ணியமாப் போகுமுங்க !!!

    ReplyDelete
  9. :)

    போதை இல்லாத (ஹலால்) மதுவிற்கும், போதையான மதுவிற்குமான வேறுபாடு என்ன இருக்கும் ?

    உறைக்கும் உறை இல்லாமல் இருப்பதற்கும் உள்ள வேறுபாடு தானே, மன்னிக்கவும் நுறை மற்றும் நுறையற்ற என்பதன் வேறுபாடு தானே.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ!,
      சவுதி அரசின் புகழ்பாடுவதும்,மதத்தை தாங்கி பிடிப்பதும் இரு குதிரைகளின் மேல் ஒரே சம்யத்தில் சவாரி செய்வது போன்ற விடயம்.ஆகவே சவுதி விளம்பரதாரிகள் அடிக்கடி மண்ணைக் கவ்வுவது இயல்பே!!!!

      இருந்தாலும் 0.01% குடிகாரர்கள் (5_30)% குடிகாரர்களை யோக்கியன் போல் கண்டிப்பதும்,அறிவுரை சொல்வது நான் அறிந்த மிக மிக சிறந்த நகைச்ச்சுவை!!!!!!!!!!!

      இஸ்லாமுக்கும் பிற மதங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் அறிவியல்,பொருளாதார நல்ன சார்ந்து (குரானில் உள்ளதை) மாற்றங்களை மிக சரியாக ஹலால் ஆக்கும் முறை கொண்டது (வஹாபி) இஸ்லாம்!
      மத அறிவியல்,இஸ்லாமிய வங்கி,ஹலால் பீர் அனைத்தும் இவ்வகைகளே!

      சரி ஹலால் பீர் வந்தாச்சு. ஏற்கென்வே இஸ்லாமிய வங்கிகளில் வட்டி ஹலால் ஆகிவிட்டது.

      அடுத்து எது ஹலால் ஆகும்?

      "இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன"

      நன்றி

      Delete
  10. காபிர் சார்வாகன்

    நம்ம போட்டி தாவாக்காரர் இங்கண வந்திருக்கார். ஹோல்சேல் தவ்ஹீத அண்ணன் மாதிரி தப்பை தப்புன்னு ஒத்துகிட்டாலும், நீங்க சொன்னதுதான் சரின்னு கிரடிட் கொடுக்காத பக்கா ஈமாந்தாரி அவர்.

    எனிவே நான் ரொம்ப நாளைக்கு முன்னாடி போட்ட பதிவால ஒரு சில மூமின்கள் கசகசா சாப்பிடுறதை நிறுத்தியிருக்காங்கன்னு தெரியுது. அரபு அல்லாசாமி ஏன் முன்னுக்குப்பின் முரணா நம்ம காககககே மேலே சாமியாடியிருக்கார்னு தெரியலை.

    எச்சரிக்கை: நபி(ஸல்) அவர்களை மதியாமல் அனைத்து முஸ்லீம்களும் உண்ணும் ஹராமான உணவுகள்

    வெறும் கசகசா மட்டும் நிறுத்தினா போதுமா? இட்லி தோச எல்லாம் எவன் நிறுத்துறது?

    http://www.onlinepj.com/kelvi_pathil/naveena_pirasanaikal/alcahol_kalantha_mavuthvash/

    ”அதிகம் சாப்பிட்டால் போதை தரக்கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் ஜாபிர் (ரலி)
    நூல் திர்மிதீ 1788, நஸயீ 5513

    ஒரு சின்ன அணு உள்ள போனாலும் சுவனம் கிடைக்காது. அம்மண ஹூரியோட் ஆட்டம் போடமுடியாது.
    கபார்தார்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க இ.சா,

      ஸலாம்.உங்களுக்காவது இந்த காஃபிர் போட்ட தாவா பதிவின் நியாயம் புரிந்ததே. உங்க போட்டி ஆள் நானும் அவருக்கு போட்டி ஆகிவிடுவேனோ என பயப்படுவது போல் தெரிகிறது.

      எனினும் இவ‌ர் பேச்சை கேட்டு ந‌ம் ச‌கோக்க‌ள் ஹ‌லால் பீர் குடித்து சூப்ப‌ர் சுவ‌னத்தை இழ‌ந்து விடுவார்க‌ளோ என்ற‌ எண்ண‌த்தில் எழுத‌ப்ப‌ட்ட‌ ப‌திவுததான் இது

      !"பெறுக இறை மறுப்பாளர் பெற‌முடியா இன‌ப‌ம் ஏக இறை ந‌ம்பிக்கையாள‌ர்க‌ள் "
      என்ற‌ ந‌ம் எண்னத்தை புரிய‌வோ,அறிய‌வோ மாட்டேன் என்கிறார்க‌ளே!!!

      இவ‌ங்களுக்கு விளக்க‌ம் சொல்லியே ஓய்ந்து போயிட்டேன்!!!!

      Delete
  11. //இங்கு சவுதியில் விற்கப்படும் பானத்தை நாமாகவே ஹலால் பீர் என்று பெயரிட்டுக் கொள்கிறோம்//

    பெயரளவு 'போதைக்காக' வைத்துக் கொள்ளலாம் என்று வைக்கப்பட்ட பெயரா ?

    ReplyDelete
  12. சகோ கோவி,
    நீங்கள் சொல்வதை அடைப்புக் குறியினுள் இட வேண்டும்!!

    "இன்னும் நாமாகவே அர்த்தம் போட்டு அறிவியல் கொண்டுவருகிறோம்"

    "இன்னும் நாமாகவே சட்டம் போட்டு ஷாரியா கொண்டுவருகிறோம்"

    என்று என்ன வேண்டுமானலும் சொல்வார்கள். கேக்க ஆள் இருக்கிறதே!!!

    நன்றி

    ReplyDelete
  13. எது ஹராம் எது ஹலால்?

    என் நண்பர்கள் 4 பேர் கோவளம், மஹாபலிபுரம் என ஒரு வாரக் கடைசியில் சென்றனர். 3 பேர் முகம்மதியர்.

    முதலில் பாருக்கு சென்று மது சாப்பிட்டனர். பின் ஒரு உணவகம் சென்று உணவிற்கான ஆர்டர் தந்தனர். அப்போத் ஒரு முகம்மதிய நண்பர் மற்றொரு முகம்மதியரிடம்- இது காஃபிர் உணவகம் - இங்கு மட்டன் -பிஸ்மில்லா சொல்லி ஹலால் செய்த் அறுக்கப்பட்டிருக்குமா என மிகவும் ஆழ்ந்த யோசனையோடு கேட்டாராம்.
    மற்றொருவர் ஒரு நிமிடம் உற்றுப் பார்த்து, பளார் என அறை விட்டாராம். இவர் ஏன் என முறைக்க- பாரில் சரக்கட்டிச்சப்போ ஏன் இந்தக் கேள்வி வரவில்லை என்றாராம்.

    ஹராம் - ஹலால்? என்ற கேல்வி வரும்போதெல்லம் எனக்கு இந்த உண்மை சம்பவம் நியாபகத்துக்கு வரும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ தேவப்பிரியா,

      இந்த ஹலால் மாமிச உணவிலும் ஒரு ஏமாற்றுவேலை உண்டு.குரான் சொல்வது ஏக இறைவனுக்கு படைக்காததை உண்ணாதீர்கள் என்று!!

      //6:121. எதன்மீது. (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைப் புசியாதீர்கள் - நிச்சயமாக அது பாவமாகும்; நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களை உங்களோடு (வீண்) தர்க்கம் செய்யுமாறு தூண்டுகிறார்கள் - நீங்கள் அவர்களுக்கு வழிபட்டால், நிச்சயமாக நீங்களும் முஷ்ரிக்குகள் (இணைவைப்போர்) ஆவீர்கள்.//

      அதனை அடைப்புக் குறி போட்டு மாமிச உணவுக்கு மட்டும் என காட்டுகிறார்கள்.இதர தானிய,தாவர உணவுகளுக்கு அமல் படுத்த முடியாது என்பதால் ஒரு சம்மர் சால்ட்!. பல விடயங்கள்க்கு இப்படி செய்வதால் மட்டுமே விமர்சிக்கிறோம்.

      நன்றி!!!

      Delete
  14. வணக்கம் சகோ.

    நல்ல த(மது)ரமான பதிவு,ஆனா அல்லாசாமிக்கி இது கேடானது அருந்தவே கூடாது என்று திட்டவட்டமாக சொல்ல முன்கூட்டியே அனைத்தும் அறிந்தவனுக்கு அறிவு இல்லாததுதான் உலக மகா நகைச்சுவை. ஏற்கனவே அதாவது தடை விதிப்பதற்கு முன்பு மது அனுமதிக்கப்பட்ட ஒன்றாம். அப்ப மட்டும் மதுவில் போதை இல்லையா? பாவமில்லையா? இதுதான் தெளிவான வேதமா? ஒன்னும் புரியல சகோ.

    இனியவன்....

    ReplyDelete
  15. கசகசாவில் போதை இருப்பதை மனிதந்தானே சொன்னான் அது எப்படி அல்லாசாமிக்கு தெரியாமல் போனது? எது எதெல்லாம் ஹராமானது என்று அட்டவணைப் போட்டவனுக்கு இது எப்படி விடுபட்டது? ஒரு வேலை கசகசா கடவுளின் படைப்பில் வரவில்லையோ?

    இனியவன்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ இனியவன்,

      மதவாதிகள் மதத்தை தங்கள் கருத்து திணிப்பிற்கு,அரசியல்&பொருளாதார நலனுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பதே நம் கருத்து.

      ஹலால் பிரை அனுமதித்தே ஆக வேண்டிய கட்டாயம் என்ன?

      ஹலால் பீர் மத ஆட்சி நாடுகளில் அனுமதிக்கப் பட்டது மேலை நாடுகளின் பொருளாதாரம் சார்ந்த‌தே.அவ்வளவுதான்.இதில் மதம் தொடர்பு இல்லை.

      நன்றி!

      Delete
  16. பியர் என்னமோ தவிர்க்க இயலாத பானம் மாதிரி கஷ்டப்பட்டு ஆல்கஹாலெல்லாம் நீக்கி எதுக்கு குடிக்கறாங்க? ஒருவேளை அல்லாஹின் சொர்ககத்தில் கிடைக்கும் அன்லிமிடட் சரக்கு குடிப்பதற்கு இப்போதே பிராக்டிஸ் பண்ணுறாங்களோ தெரியல!

    A drinker's guide to Islam எனும் கார்டியன் கட்டுரை பாருங்கள்.
    http://www.guardian.co.uk/commentisfree/belief/2011/oct/08/drinkers-islam-palestinian-beerfest-alcohol
    முகம்மது நபியே சரக்கடித்தார் என ஹதீதுகள உள்ளதாகவும், இசுலாமிய உலகில் பல பெருங்குடிமகன்கள் உள்ளார்கள் எனவும் தெரிவிக்கிறது. 8ம் நூற்றாண்டில் நபி உட்கார்ந்துகிட்டு ஒண்ணு அடிச்சா அதை அப்புடியே இப்பவும் காப்பி அடிக்கவங்க நம்ம சுபி குழுவினர், இனி கேட்கவா வேணும்.

    ஆனால் ஈயத்தை பாத்து பித்தளை இளிச்ச கதையா பியர் அடிக்குறவனை பாத்து எதுக்கு நக்கலு! அடிச்சோமா பான்பராக் போட்டு மென்னு மேட்டர அமுக்கினோமான்னு இல்லாம, சகோ சுவனபிரியருக்கு இது தேவையா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ நந்தவனத்தான்,

      /ஆனால் ஈயத்தை பாத்து பித்தளை இளிச்ச கதையா பியர் அடிக்குறவனை பாத்து எதுக்கு நக்கலு! அடிச்சோமா பான்பராக் போட்டு மென்னு மேட்டர அமுக்கினோமான்னு இல்லாம, சகோ சுவனபிரியருக்கு இது தேவையா?/

      இன்றைய இணைய சூழலில் ஒவ்வொரு விடயமும் எளிதில் வெளிவருகிறது,விவாதிக்கப் படுகிறது.

      ஆகவே மறைக்க முடியாது!!!!!!!!!!!!!

      ஹலால் பீரை அனுமதித்த‌வன் ஆளும் குடும்பம்!

      ஆமாம் அது ஹலால் என்றவன் அவனிடம் கூலி வாங்கும் மதவாதி

      இங்கு அதே கதை சொல்லி நம் சகோ சுவனன் பாவம்!!!!!!!!!!

      நன்றி!

      Delete
  17. சகோ.சார்வாகன் நலமா?கூடவே உங்க கூட்டாளிகளுக்கும் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.

    ஹலால் பீர் என்ற பதம் பற்றி முன்பு வவ்வால் சகோ.சுவனப்பிரியனை ஒரு பின்னூட்டத்தில் கிண்டல் செய்யும் போதே சிரிப்பு வந்தது.இது வரை எங்கள் மூவருக்கு மட்டுமே தெரிந்த சிரிப்பு இது:) ஹலால் பீர் என்ற பெயரே சகோவின் பிரபல பொன்மொழியான சவுதியில் பாலாறும் தேனாறும் மாதிரி ஹலால் பீர் என்பதும் அவரது உருவாக்கமே:)யாரும் இங்கே ஹலால் பீர் என்றே அழைப்பதில்லை.பட்வெய்ஸர்,மூசா,பார்பிகான் என சகோ.அவரது பதிவின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போலவே பெயர் சொல்லி அழைக்கப்படுகின்றன.

    இங்கே பீர் வந்ததற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் என நினைக்கின்றேன்.முதலாவது உடல் சுகாதாரத் துறை பீர் அருந்துவது அதிக உஷ்ண சூழலுக்கு நல்லது என்ற அடிப்படையில் அனுமதித்த ஒன்று என்பது மேலோட்டமாக இருந்தாலும் பல வருடங்களாக பீர் நுழையாத சவுதி,குவைத் போன்ற நாடுகளில் பீர் வந்ததன் பின்ணனியில் மேலே சொன்ன சுகாதார காரணத்தோடு உலகப் பொருளாதாரமும் கலந்திருப்பது இடைப்பட்ட உண்மையாக இருக்கலாம்.

    மேலும் நீங்க பின்னூட்டத்தில் குறிப்பிட்ட கலவை டெக்னிக்கையெல்லாம் தெரிந்து வைத்திருக்கின்ற ஒரு சில பிலிப்பைன்ஸ்,இலங்கை,இந்திய,நேபாள இன்ன பிற சகோக்களுக்கு மது ஒரு பிரச்சினையில்லையென்பதால் இதில் பாதிக்கப்படுபவர்கள் மண்ணின் மைந்தர்களே.பொருளாதார,நேர வசதி இருந்தால் பக்கத்தில் துபாய்க்கோ,பஹ்ரைனுக்கோ ஒரு ரவுண்டு போய் ரவுண்டு விடலாம்.அப்போதைய மனநிலைக்கு என்ன செய்வது என்று ஒரு புறம் மதம் கலாச்சாரம்,சட்டம் குறித்த சமூக பயம் காரணமாக யூடிகோலான் மாதிரியான பாட்டில்களை அருந்தியவர்கள் முன்பு நிறைய உண்டு.ஆனால் தமிழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மது அருந்துபவர்களோடு ஒப்பீடும் போது 0.01 என்ற அளவினரே பெரும்பாலும்.கூடவே எப்படி மது அருந்துவது என்று அறியாத தமிழக மதுக்கலாச்சாரம் போலவே கற்றுக்கொள்ளும் வாய்ப்புக்கள் இல்லாதவர்களே.நீங்கள் பதிவில் சொன்ன வார்த்தைகளை கொஞ்சம் கடன் வாங்கிக்கிறேன்.//இதில் உள்ள விடயங்கள் பல இப்போதும் அனைவருக்கும் பொருந்தலாம்,சில பொருந்தாமலும் போகலாம்.//

    பியர் வந்த புதிதில் பார்க்காததைப் பார்த்த மாதிரி இருந்த மோகத்தை இப்பொழுது காணோம்.வார இறுதிக்கோ அல்லது பிறந்தநாள் விழா போன்ற விசேசங்களுக்கு மட்டுமே மிக்ஸிங்கிற்காக உபயோகப்படுத்தப்படுகிறது:)விலையும் பாதியளவு குறைந்து விட்டது.இன்னும் மார்க்கெட்டில் உச்சத்தில் இருப்பது பெப்சி,செவன் அப்,பென்டா போன்ற கார்பனோட் பானங்களே.பெப்சி சர்க்கரை நோயைக் கொண்டு வரும் என்பது தெரியாமலே நிறைய பேர் அருந்துகிறார்கள்.KFC போன்ற உணவு வகைகளுக்கு பெப்சியில்லாமல் ஆகாது.

    மேலே சரக்கு நுட்பங்களை தொட்டுக்காட்டியிருப்பது மொத்த ஜனத்தொகைக்கும் பொருந்தாது.பெரும்பாலோருக்கு தமது குடும்பம்,நாடு என்ற அக்கறையும் பணம் அனுப்புவது மட்டுமே முக்கியமான குறிக்கோள்.மது இல்லாமல் வாழ முடியும் என்பதற்கு சிறந்த நாடுகளாக சவுதி,குவைத் போன்றவைகளைக் குறிப்பிட முடியும்.சவுதி தரமான உணவுப்பொருட்களையும்,பழரசங்கள்,பால் வகைகளை உற்பத்தி செய்து விற்பனையும் செய்கிறது.என்னோட போதை சவுதியின் அல்மராய் மோரும்,தயிரும்.சகோ.ஷகிர் இப்னுவின் பதிவொன்று நினைவில் வந்து கிச்சுகிச்சு மூட்டுகிறது:)

    எப்படியிருந்த போதிலும் உணவு விசயத்தில் மேற்கத்திய நாடுகளுடன் போட்டி போடும் தரம் கொண்டது சவுதி.நமக்கிருக்கும் விமர்சனமே மதம் சார்ந்த பொது முன்னிலைப்படுத்தலும் அதன் அடிநாதமான அடிப்படைவாதம் மட்டுமே.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ இராஜநட,

      உங்களின் கருத்தும் நமக்கு ஏற்புடையதுதான். சவுதியில் வாழ்பவர்களின் மதம் சார்ந்த வாழ்வியலுக்கும், நம் சகோக்களின் விள்க்கங்களுக்கும் உள்ள முரண்களையே நாம் விமர்சிக்கிறோம்.

      நம் சகோக்கள் அப்படி இல்லை,இப்படி என புனித முகமூடி மத்திய கிழக்கு ஆளும் வர்க்கத்தின் செயல்கள் ஒவ்வொன்றுக்கும் அணிவிக்க முயல்வதும்,ஆனால் அரபுலக மக்கள் இயல்பாக ஹலால் என அனுபவித்து விட்டு செல்வதும் அருமையான் நகைமுரண்.


      நன்றி!!!!!!!!!!!!!


      Delete
    2. //ராஜ நடராஜன்August 23, 2012 12:32 PM
      பெப்சி சர்க்கரை நோயைக் கொண்டு வரும் என்பது தெரியாமலே நிறைய பேர் அருந்துகிறார்கள்//

      பெப்சி உண்மையிலே சர்க்கரை நோயைக் கொண்டு வருமா? பெப்சி பற்றி எனக்கு தெரியாது ஆனா கோலா 500 ml குடித்தால் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு தேவையான சுகரை 60 வீதம் நிறைவு செய்து விடுகிறது.மிகுதி 30 வீதத்திற்குள் இதர இனிப்பு வகைகள்,பானங்கள் குடிப்பதை வைத்து கொண்டால் பிரச்சனையில்லை.

      Delete
  18. இனியவன!இணைய கருத்து பரிமாற்றங்களின் விபரீதங்களில் இந்த கசகசாவும் ஒன்று.ருசியான நாட்டுக்கோழி கொளம்பு செய்யனுமின்னா பட்டை,லவங்கம்,குருமிளகு,சீரகம் போன்றவற்றுடன் இந்த கசகசாவும் முக்கியமான ஒன்று.முன்பெல்லாம் அம்மியில் அரைத்து அப்படித்தான் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.ஒரு போதை கெரகமும் வந்த மாதிரி தெரியவில்லை.

    மதத்தின் பெயரால் மனித மூளைச்சலவை செய்யப்படுவதற்கு சிறந்த உதாரணம் மசாலாவில் தடை செய்யப்பட்ட இத்துணூண்டு கசகசா.

    ReplyDelete
  19. சகோ.சார்வாகன்.நான் இதுவரை கவனித்து வந்ததில் மத சார்பற்ற கருத்தாளர்களின் கருத்துக்கள் சரியாக இருந்தாலும் அதில் கவுச்சி சேர்த்து கவர்ச்சி செய்ய வேண்டிய நிலைக்கே பலரும் தள்ளப்படுகிறார்கள்.நீங்கள் கொஞ்சம் விதி விலக்கு:)எத்தனை தலையில் குட்டினாலும் மதசார்பாளர்கள் பொறுமை காக்கிறார்கள் என்பதும் உண்மையே.

    0.01% vs(5_30)% குடிகாரர்கள் போட்டியில் நான் 0.01% பக்கம்.தமிழகத்திற்கு 1980க்கும் முன்பான மதுவிலக்கு கட்டாயம் அவசியம்.விரும்பியவர்கள் பொழுதுபோக்காக முன்பு போல் பெங்களூர்,ஆந்திரா,பாண்டிச்சேரி டூர் போகலாம்.நலிந்து போன திருப்பூர் ஆடைத்துறை,விவசாயம் இன்னும் பிற தொழில் முனைப்புக்களையும்,சென்னை ஏற்றுமதி துறைமுக விரிவு படுத்தலில் அந்நிய செலவாணி கொண்டு வருவதையும் ஊக்குவிக்கலாம்.குஜராத்தில் மதுவிலக்குடன் எப்படி பொருளாதார மேம்பாடுகள் நிகழ்கின்றன என்பதையும் ஆராயலாம்.குஜராத்துடன் ஒப்பிடும் போது தமிழகம் சிறந்த புவியியல் நிலமே.

    வாழ நினைத்தால் வாழலாம் மதுவில்லாமல்.

    ReplyDelete
    Replies



    1. வாங்க சகோ இராஜநட,
      //.குஜராத்தில் மதுவிலக்குடன் எப்படி பொருளாதார மேம்பாடுகள் நிகழ்கின்றன என்பதையும் ஆராயலாம்.குஜராத்துடன் ஒப்பிடும் போது தமிழகம் சிறந்த புவியியல் நிலமே.
      //

      குஜராத்தில் முழு மதுவிலக்கு என்பது அங்கே கள்ள மதுவியாபாரிகள் நலன் சார்ந்தே என்ற கருத்தும் உண்டு.

      http://zeenews.india.com/news/jharkhand/6-arrested-80-000-pouches-illicit-liquor-seized_790385.html

      நாம் குஜராத் பக்கம் சென்றது இல்லை.I am not sure about it!

      மோடி தாடி வைக்கிறார்,

      குடிப்பதை தடை செய்கிறார்,

      மதவாதம் வளர்க்கிறார்.
      ......

      அவர் இஸ்லாமியராக இல்லையே என்பதுதான் நம் சகோக்களின் வருத்தமே தவிர அவர் செயல் சார்ந்து அல்ல!! ஹி ஹி

      //வாழ நினைத்தால் வாழலாம் மதுவில்லாமல்.//

      மது இல்லாமல் போனால் நல்லதுதான்,ஆனால் கட்டாய முழு மது விலக்கு என்பது சாத்தியம் இல்லை. மது விற்பதில் ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டை ஏதேனும் அளவு கட்டுப் பாடு முதலில் கொண்டு வரலாம்!


      நன்றி!!!!!!!!!!!!!

      Delete
    2. //மது இல்லாமல் போனால் நல்லதுதான்,ஆனால் கட்டாய முழு மது விலக்கு என்பது சாத்தியம் இல்லை. மது விற்பதில் ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டை ஏதேனும் அளவு கட்டுப் பாடு முதலில் கொண்டு வரலாம்! //

      கனடாவில் இந்த ஹலால் பியர் கூட சாதாரண கடைகளில் கிடைப்பதில்லை .. ஹிஹி !!!

      கனடாவில் பின்பற்றப்படும் மதுக் கொள்கை --- நடுவு நிலைமையோடு இருப்பதாக எனக்குத் தோன்றுகின்றது ..

      அடையாள அட்டை போன்றவை இங்கு இருக்கின்றன !!! மாலை 9 மணிக்கு மேல் மதுக்கடைகள் க்ளோஸ் ஆகிவிடும். இதனால் அமெரிக்க பயணிகள் கனடா மீது கோபம் கொள்வதும் உண்டு,

      ஒரு சில ஹோட்டல்களின் பார்களில் மட்டுமே கிடைக்கும் !!!

      பொது இடத்தில் மதுக் குடிக்க முடியாது - குடித்து பார்த்ததில்லை. இளம் வயதினர் மதுக்கடைகளில் வயதை நிரூபிக்கும் அடையாள அட்டைக் காட்டினாலே வாங்க முடிகின்றது. இதுக் குறித்து ஒரு பதிவில் எழுதுகின்றேன் !!!

      Delete
  20. சகோ ராஜ நடராஜன்!

    //வாழ நினைத்தால் வாழலாம் மதுவில்லாமல்.//

    அருமையாக மது சம்பந்தமான அரபு நாடுகளின் நிலையை விளக்கியமைக்கு நன்றி. மதுவற்ற சமூகத்தை அமைத்து குடும்ப அமைதியை ஒன்றுபட்டு காப்போம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ சுவனன்,
      //அருமையாக மது சம்பந்தமான அரபு நாடுகளின் நிலையை விளக்கியமைக்கு நன்றி. //

      பாருங்கள் நீங்கள் செய்யாத விடயம் எல்லாம் சகோ இராஜநட செய்ய வேண்டி உள்ளது.மது விலக்கு,மக்கள் தொகைக் கட்டுப்பாடு போன்றவை தேவை என்றாலும் இது கட்டாயம் ஆக்கப் பட்டால் பல எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்.


      குரானில் சொல்லியது போல் படிப்படியாக மதுவை ஒழிக்க அரசு முயற்சி செய்யலாம்!!

      எனினும் ஹலால் பீர் என்பது இஸ்லாமில் அனுமதிக்கப்பட்டது இல்லை என்னும் கருத்து கொண்ட இஸ்லாமிய அறிஞர்களும் உண்டு என்பதையே இப்பதிவில் வலியுறுத்துகிறேன்.உங்கள் ஆசான் பி.ஜே கூட இக்கருத்தையே கொண்டுள்ளார்.

      நன்றி!!!!!!!!!!

      Delete
  21. கஞ்சா, ஹெராயின், ஓபியம் போன்ற போதை வஸ்த்துகளை உற்பத்தி செய்வதில் இஸ்லாமிய நாடுகளே முன்னிலை.

    காபிர்கள் என்றால் உலகில் பாதி இஸ்லாமியர் காபிர்களே.

    ReplyDelete
  22. வாங்க சகோ இராவணன் நலமா,

    நம் மூமின் சகோக்களின் பிரச்சினையே இஸ்லாமிய உலகின் எதார்த்த நிலைதான். ஒரு சராசரி மனிதன் சூழல் சார்ந்து எப்படி இருப்பாரோ அதே போலவே சராசரி முஸ்லிம் இருப்பார் என நம் மூமின் பிரச்சாரகர்களைத் தவிர அனைவருக்கும் தெரியும். அவர்களும் தெரிந்தே மறைக்கிறார்கள்!!!.

    ஒரு ஆஃப்கனியனுக்கு கஞ்சா பயிடிடுவதோ,ஒரு பணக்கார அரபுக்கு நாலு மனைவி இருப்பதோ ,சோமாலியனுக்கு பெண்ணுக்கும் சுன்னத் செய்வதோ நமக்கு பண்டிகையில் பீர் குடிக்கும் விடயம் போல் அவனுக்கு மிக இயல்பான விடயம்.

    இதில் நம் சகோக்கள் கிழிந்து போன புனித மத போர்வை போட்டு அனைத்தையும் மறைக்க பார்ப்பது நல்ல நகைச்சுவை!

    அமைதி மார்க்கம் என்பார்!
    அடிதடி சத்தம் காதை அடைக்குது
    இறுதி மார்க்கம் என்பார்
    இறுதியை நோக்கி செல்வதை அனைவரும் அறிவோம்!
    எண்ணெய் மட்டும் தீர்ந்து விட்டால்
    ஏனென்று கேட்க நாதியில்லை!
    அல்லா,ஆண்டவன்,இறைவன்,ஈசன் என‌
    ஆயிரம் பெயர் சொன்னாலும்
    அழுது புலம்பி அழைத்தாலும்
    அவன் வருவானா
    சுவ‌னம் தருவானா!!!!!!!!!


    இஸ்லாமிய உலகின் முரண்களை தீர்க்க முடியாதவர்கள் காஃபிர்களுக்கு அனைத்தும் அறிந்தவர் போல் அறிவுரை சொல்வது செம காமெடி!!!

    நன்றி!!!!!!!!!!1


    ReplyDelete
  23. எங்கு வேண்டுமானலும் சொல்வேன்! எந்த ஆதாரம் வேண்டுமானால் காட்டுவேன்! குடி கெடுதல்! கெடுதல்! கெடுதல்! கெடுதல் தான் !!!

    அப்ப குடிப்பவர்கள் கெட்டவர்களா? இல்லை! இல்லை!! இல்லீங்கோவ்! இந்த உலகில் காணப்படும் முக்கால்வாசி குற்றங்களில் மதுவுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு.

    ஆனால், இதை எல்லாம் விட மதம் மோசம். மோசம் மோசமுங்கோவ்!!! இங்கு யாரும் நீ என்ன மதம் என்று கேட்பதில்லை? தேவையும் இல்லை (நான் சொல்வது 99 விழுக்காடு மக்கள்)

    ஆனால், மதத்தையும் தூக்கி சாப்பிடும் கொடுமை ஜாதி இந்தியாவில்! மற்ற மதத்தை பற்றி நான் கவலைப் படைத் தேவையில்லை; அது என் வேலையும் இல்லை. நான் வருத்தப் படுவது எனது புடலங்காய் இந்து மதத்தில் உள்ள ஜாதியைப் பற்றித்தான். முதலில் நம்ம புடலங்காய் இந்து மதத்தில் உள்ள ஜாதி வித்யாசத்தை ஒழியுங்க!

    PS: அறிவுள்ள எந்த டாக்டரும் குடி உடம்புக்கு நல்லது என்று கூற மாட்டார்கள்; உடம்பை நன்றாக வைத்துக்கொள்ள 1008 வழி முறைகள் உள்ளது. அளவாக குடித்தால் நல்லது என்று சிலர் சொல்லுகிறார்கள் ( This is nothing bull shit; This is a correlation study; and NOT a "cause and effect" study. It has its own merits and demerits, by the way!).

    அப்ப நான் குடிப்பதில்லையா? குடிக்க மாட்டோம்; ஆனால் நான் எனது நண்பர்கள் Foreign தீர்த்தம் (!)மட்டும் சாப்பிடுவோம். பேர் தான் வித்யாசம். எல்லாம் ஒன்னு தான். எங்கள் மனைவிகள் கேட்டால் உடம்புக்கு நல்லது என்று புளுகுவோம்; சொல்லிவிட்டு நாங்கள் எல்லோரும் அது வழியாக சிரிப்போம். (அவர்களுக்கு தெரியும் நாங்கள் எல்லாம் பக்கா பிராடு; பொய் சொல்கிறோம் என்று!)

    வாழ் நாளில் குடிக்கதவன்/குடிக்கதவள் இவர்களிடம் எந்த டாக்டர் குடிக்க சொன்னாலும், நாம் என்ன செய்வது?

    டாக்டரை மாத்தி விடுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. சகோ நம்பள்கி வாங்க!

      இப்பதிவு குடி நல்லதா இல்லையா என விவாதிக்கவில்லை.ஆனால் ஆல்கஹால் நீக்கப்பட்ட பீர் என்பது மத்வாதிகளின் ஏமாற்றுவேலை என்பதையே விளக்குகிறோம்.
      ஹலால் குடிகாரன்,ஹராம் குடிகாரன் என உயர்வு தாழ்வு சாதி வித்தியாசம் பாராட்டுவதையே கண்டிக்கிறோம்!!!!!!

      மத புத்தக யோக்கியர்கள் போடும் இரட்டை வேடத்தையே தோல் உரிக்கிறோம்!

      ஆல்கஹால் நீக்கப் பட்ட பீர் பற்றியும் மருத்துவ ஆலோசனை விரும்பினால் வழங்கலாம்!

      நன்றி

      Delete
    2. மன்னிக்க் வேண்டும்! எனது இரண்டாவது பதிவை நீங்கள் நீக்கி விடலாம்; ஏனென்றால் மதம் எனக்கு முற்றிலும் தேவையில்லாத விஷயம்; வாழ்க்கைக்கு தேவை ஆணுக்கு பெரு வெடிப்பு; பெண்ணுக்கு வாழைப் பழம்; வாழ்கையே அவ்வளவு தான்!

      அவ்வளவு தான் உலகம்!

      Delete
    3. நன்றாக சொல்லியுள்ளீர்கள் - மது என்பது நல்லதாக அறியப்படவில்லை. ஆனால் மது அருந்துவது கலாச்சார விடயமாகவே கருத வேண்டியுள்ளது. பொழுது போகாத காலங்களில் தனிமையை விரட்ட குடியும், கும்மாளமும் பழம் சமூகத்தில் தேவைப்பட்டது .. இன்று கூட பழங்குடிகள் மத்தியில் மது விடயங்கள், அரக்கு போன்றவை இருக்கின்றன. மதுவும் கலாச்சார பரிணாமத்தின் ஒரு அங்கமே.. ஆனால் அது வியாபார மயம்மாக்கலில் சிக்கிக் கொண்டது. உள்ளூர் மதுக்கள் தடை செய்யப்பட்டு வெளியூர் வகைகள் வரவேற்கப்படுகின்றன. கள்ளை ஒழித்துவிட்டு சாராயத்தை அனுமதிக்கின்றோம். அந்த வியாபார நிழல்களில் தான் சுபி போன்றவர்களும் ஹலால் பியரை பரிந்துரைக்கின்றார்கள். இது அவர்கள் மதத்திற்கே முரண் என்பதுக் கூட அவர்களுக்கு கவலை இல்லை !!! சோ மதம் என்பது வியாபாரிகளின் கூடாரம் என்பதில் ஐயமில்லை !!!

      Delete
  24. ***எனினும் ஒருவர் ஆல்கஹால் நீக்கிய பீரில் கொஞ்சம் சக்கரை,ஈஸ்ட் கல்ந்தால் தயாரிக்க முடியும் என விள்க்குகிறார்.***

    என்ன சார் நீங்க.. அல்கஹால் நீக்கிய பீர்ல அல்கஹாலை (சுகர் + ஈஸ்ட் => அல்கஹால்)) ஊத்தி, அதை என்ன விளக்க வேண்டியிருக்கு???

    ReplyDelete
    Replies
    1. சகோ வருண் வாங்க!

      தெரியாதவர்கள் அறியட்டுமே!!

      நீங்கள் வெதியியல் வல்லுனர் என்பதல் இது உங்களுக்கு ஜுஜுபி!!

      நமக்கு வேதியியல் கொஞ்சம் அலர்ஜி!

      நன்றி

      Delete
  25. இப்போ என்ன பிரச்சினை இங்கே? முகம் தெரியாத மனிதாபிமானி, பதிவர் சந்திப்பில் அல்கஹாலை முழுவதும் பதிவர்கள் தவிர்க்கனும் என்பதுபோல ஒரு பதிவைப் போட்டது தப்பா???

    You know there are academic conferences where they dont serve alcohol during lectures, and they serve tea, coffee only. But later, after the seminars, in dinner they do serve. The bloggers can go drink after the "blogger meeting".

    பதிவர் கூட்டத்தில் மது வேணாம்னு சொன்னா (அது யார் சொன்னா என்ன?), மதம் மட்டும் எதுக்குனு விதண்டாவதாம் செய்றது நல்லாயிருக்கா என்ன???

    ReplyDelete
    Replies
    1. சகோ வருண்,

      இது சகோ சுவனப்பிரியனின் ஹலால் பீர் பதிவுக்கான விமர்சனம்.நம்க்கும் மனிதாபிமானி விடயத்திற்கும் தொடர்பு இல்லை.

      நன்றி

      Delete
    2. அப்படியா? சரி, விடுங்க, அதிஅ நான் இன்னும் பார்க்கலை! :))

      Delete
  26. //இவ‌ங்களுக்கு விளக்க‌ம் சொல்லியே ஓய்ந்து போயிட்டேன்!!!!//

    நிஜந்தாங்க! ;-)

    ReplyDelete
  27. சகோ ராஜ நடராஜன் சரியாகத்தான் சொல்கிறார் ...
    நான் இந்த பதிவைபடித்துவிட்டு என் பிளாட்டுக்கு கீழே உள்ள மினி சுபர்மார்கட் இல் சகோ சுவன் சொல்வதைபோல 0.01% பீர் உள்ளதா என்று பார்த்தால் அபபடியோன்றும் இல்லவே இல்லை. ௦மற்றும் 0% NON-ALCOHOLIC MALT BEVERAGE என்று எல்லா பாட்டில்களிலும் எழுதி இருக்கிறத தவிர எதிலும்
    BEER என்கிற சொல் இல்லை.
    1995 க்கு பிறகுதான் இங்கே(குவைத்) NON-ALCOHOLIC MALT BEVERAGE அறிமுகம் ஆச்சு...சவுதியில் பல வருடங்களுக்கு முனபிருந்தே அந்த பானம் இருக்கிறது.

    ReplyDelete

  28. சகோ நாசர்,

    //சகோ சுவன் சொல்வதைபோல 0.01% பீர் உள்ளதா என்று பார்த்தால் அபபடியோன்றும் இல்லவே இல்லை. ௦மற்றும் 0% NON-ALCOHOLIC MALT BEVERAGE என்று எல்லா பாட்டில்களிலும் எழுதி இருக்கிறத தவிர எதிலும்
    BEER என்கிற சொல் இல்லை.//
    அதில் 0% ஆல்கஹால் என்று இருக்க முடியுமா? ஏன் சுவனன் 0.01% ஆல்கஹால் என கூவுகிறார்?.
    ***
    "உடல் வலிக்காக மதுவை குடிக்கிறோம் என்று சொல்பவர்கள் ஆல்கஹால் நீக்கப்பட்ட மதுவை குடிக்கலாமே. அது குடலுக்கு குளிர்ச்சியை தரும். ஆல்கஹால் கலந்த மது குடலை அரிக்க ஆரம்பிக்கும்.

    ஹலால் பீர் தயாரிக்கும் நிறுவனங்கள், "இந்த பீரில் 0.01% ஆல்கஹால் இருப்பதாக" விளம்பரம் செய்கின்றது. அதுதான் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் குழு அனுமதிக்கும் ஆல்கஹால் அளவு. இந்த அளவை மீறி ஒரு பானத்தில் ஆல்ஹகால் அதிகமாக கலக்கப்படுமானால் அது போதை ஏற்றக் கூடியதாக மாறி விடுகிறது. இதனை இஸ்லாம் தடை செய்கிறது.”
    ***

    சுவனப்பிரியன் சொல்வதை மதம் தடை செய்கிறது என்பதே நம் பதிவு!


    நன்றி

    ReplyDelete
  29. மன்னிக்கவும்... ஒரு சின்ன திருத்தம், 0% ஆல்கஹால் ஒரு பாடில்லை தவிர மற்ற பிராண்டு பாட்டில்களில் இல்லை ...மற்றும் ஹலால் பீர் என்ற லேபிளும் இல்லை எல்லா பிராண்டுகளிலும் NON-ALCOHOLIC MALT BEVARAGE என்றுதான் உள்ளது...

    ReplyDelete
    Replies
    1. அப்படி ஹலால் பீர் என லேபிலில் போட அவர்கள் என்ன ...????

      எல்லாம் பிசினெஸ்.பார்பிகானுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்.

      http://ezany-image.blogspot.com/2011_05_01_archive.html

      http://www.hdcglobal.com/upload-web/cms-editor-files/b08c8a04-c946-4ebe-99b9-2492bd32fcfc/file/11)%20En%20Dzulkifli%20Mat%20Hashim%20-%20WHR2010_Unraveling%20the%20Issue%20of%20Alcohol_Final.pdf

      Malaysia National Islamic Fatwa Committee
      (JAKIM)
      Cordials which contain any flavouring substances with a certain amount of
      alcohol added as a stabiliser for the purpose as a drink, is allowed on the
      condition that :
       The alcohol is not derived from ‘khamr (intoxicating alcoholic
      beverage = liquor) production
       The quantity of alcohol in the flavour is small (insignificant) such that it will not intoxicate


      மால்ட் ஆவரேஜ் பற்றிய விளக்கம் (சவுதியில்)தேடலுக்கு நன்றி!

      Delete

  30. நம் முஸ்லிம் சகோக்கள் என்ன்மோ டாஸ்மார்க் விற்பதை குடிகாமல் இருந்தால் குடியை மதம் சொன்ன படி தவிர்த்து விட்டதாக் நினைப்பது அறியாமை.

    பாருங்கள் நம் சகோக்களுக்கு உண்வில்தான் எதனை சந்தேகம்,கேள்விகள்.
    ஒவ்வொரு கேள்விக்கு பதில் பார்த்தால் சாப்பிடவே முடியுமா??

    இதில் காஃபிர்களுக்கு அறிவுரை வழங்கும் காமெடி வேறு


    http://www.muslimconsumergroup.com/question_answer.php?cat=0&panna=675

    http://idosi.org/mejsr/mejsr6(1)10/8.pdf

    ReplyDelete
  31. http://mukto-mona.net/Articles/kasem/wine_drinking.htm

    Conclusion: The Qur’an does not at all proscribe wine drinking. The ban on alcoholic drinks was certainly a later innovation by the Abbasids. They used questionable ahadith to institute such a ban. No one condones the harmful effects of excessive drinking; but it is simply too harsh the Islamic penalty (from 80 lashes to death for the repeat offenders) for occasional indulgence in a cup or two of red wine. As suggested by many cardiologists, this may even be beneficial for health, While the infidels enjoy wine and beat the Muslims hands down in maintaining good health and hygiene, the Muslims, on the other hand, mostly suffer from ill-health and poor hygiene. They must reflect on this reality and let those Muslims who like to drink in limited quantity do so without fear or prejudice. This is a basic right of a citizen which is often denied in Islamic Paradises. This forced inhibition on drink is totally unfair and tormenting. The Qur’an confirms that they have the right to consume alcohol—if they choose so.

    ReplyDelete
  32. சகோ.சார்வாகன்,

    நல்லப்பதிவு, இதனை முன்னரே கவனிக்காமல் போய்விட்டேன் இல்லைனா சு.பி மற்ற மார்க்க பந்துக்களை ஓட விட்டிருக்கலாம் :-))

    மால்ட்டட் என்றாலே அல்ஹகால் உருவாகிவிடும், நொதிக்க தேவையான நிலைக்கு உருவாக்க மால்ட்டட் செய்யப்படுகிறது.

    மால்டட்= முளைக்கட்டிய பார்லியை வறுத்து,கூழாக அரைத்து(ஹாப்ஸ்) அதில் சாக்ரோமைசெஸ் செர்விகே என்ற யீஸ்ட் ஐ கலந்து காற்று புகாமல் வைத்தால் பீர் ரெடி, இன்னும் நல்லா நொதிக்க வைத்து டிஸ்டில்லேஷன் செய்தால் மால்டட் விஸ்கி ரெடி :-))

    பார்லியை கொஞ்சமா வறுத்து செய்தால் லேகர் பீர், நன்கு வறுத்து செய்தால் ஸ்ட்ராங் பீர்!

    மால்டட் பீவரேஜில் ஆல்ஹகால் சிறிதளவு தானாகவே இருக்கும், ஈஸ்ட் கலந்து குறைந்தது 14 நாட்கள் புளிக்க வைத்தால் ஸ்ட்ராங்க் பீர் ஆகிவிடும்.

    திராட்சை ரசத்தினை காற்றுபுகாமல் வைத்தால் ஒயின் தானே :-))

    காற்றுப்புகுந்தால் இன்னும் பல நுண்ணியுர்கள் உருவாகி விஷத்தன்மை அடையும் .

    மேலும் அனைத்து பழங்களிலும் ஆல்ஹகால் இருக்கு அதற்கு பெயர் சார்பிட்டால் , என்ன கிக் குறைவானது என்பதால் சார்பிட்டால் தயாரிக்காமல் எத்தனால் தயாரிக்கிறார்கள்.

    மவுத் வாஷில் சார்பிட்டால் தான் 70% கலவை :-))


    சூயிங் கம், ஜெல்லி மிட்டாய்,கேண்டி என பலவற்றிலும் ,பேஸ்ட் முதல் அபலவற்றில் சார்பிட்டால் உள்ளது.

    ரெண்டு ஆப்பில் ஒன்றாக சாப்பிட்டால் ஒரு சுமால் பெக் போட்ட சார்பிட்டால் குடித்ததாக சொல்லலாம் :-))

    ஒரு கட்டிங் சார்பிட்டால் குடித்தால் ஒரு சுமால் எத்தனால் குடித்த உணர்வு வரலாம் :-))

    அப்புரம் நாம் எது சாப்பிட்டாலும் செரிக்கும் போது கொஞ்சம் ஆல்ஹகால் ஆக மாறும் :-))

    பழைய சாதம் சாப்பிட்டால் கொஞ்சம் ஆல்ஹகால் குடித்தார் போல இருக்கும், கெட்டி தயிர் போட்டு சாப்பிட்டால் இன்னும் நல்லா கிக் ஆக இருக்கும், எனவே தான் சுண்டக்கஞ்சியில் நல்ல கிக் இருகும் :-))

    இனிமே சு.பி எதுவுமே சாப்பிட மாட்டார் :-))

    250 கிராம் கசா கசாவை காய்ச்சி டிக்காஷன் போல குடித்தால் 1 நாளுக்கு போதை இருக்கும் ,இதனை பாப்பி டீ என்பார்கள். நெட்டில் பாப்பி டீ என தேடினால் காட்டும்.

    கசகசவை விட அது இருக்கும் ஒட்டில்(பாட்) அதிக ஒபியம் இருக்கும், ரெண்டு ஓடு போட்டு காய்ச்சினால் 4 பேருக்கு ஒரு நாள் புல்லா மப்பா இருக்கும் :-))

    கசாகசா பூவின் பிசினை சேர்த்தால் ஓபியம் அதனை ,மண்ணெண்னையில் கரைத்து டிஸ்டிலேஷன் செய்தால் அபின்.ஹெராயினின் இயற்கை வடிவம் தான் அபின், ஹெராயின் என்பது செயற்கையாக தயாரிக்கப்படுவது.

    அபின் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நாடு ஆப்கான், முல்லா ஓமர் சொன்ன பெருநாள் செய்தியை போட்டு மகிழ்பவர் சு.பி :-))

    ஊருக்கெல்லாம் போதை மருந்து சப்ளை செய்பவரின் பெருநாள் செய்தியை மட்டும் மெச்சலாமா ?

    ReplyDelete
  33. உடல் சோர்வு, தூக்கமின்மைக்கு கசகசா போட்டு காய்ச்சிய பாலை குடிக்க சொல்வது நாட்டு வைத்தியம் ஏன் எனில் மப்பில் வலி போகும், தூக்கும் வரும் என.

    மேலும் கசகசாவை வறுத்து பொடி செய்து அதில் வெல்லம் சேர்த்து பிசைந்து சிறு உருண்டைகளாக கொடுத்தால் ,ஜீரணக்கோளாறு, தூக்கமின்மை எல்லாம் போகும் என சித்த வைத்தியம் சொல்லுது, ஒரு உருண்டைக்கு பதில் ரெண்டு சாப்பிட்டா ஃபுல் கிக் கியாரண்டி :-))

    ReplyDelete
  34. வாங்க சகோ வவ்வால்,

    உங்களின் மது தயாரிப்பு சுய தொழில் விளக்கங்கள் அருமை!!!

    ஒருவர் பொதுவாக அதிகம் குடித்தல் உடலுக்கு கெடுதி என்பது வேறு!!!.

    என் சொல்வதை புத்தகத்தில் சொல்வதை (எனக்குப் புரியாததால்)என் மத குரு விள்க்குவதால் குடிக்க மாட்டேன் என்பது வேறு!!

    பாருங்க சகோ பாலஸ்தீனத்தில் தயாரிக்கப்படும் மது தைபீர் பீர் மிகவும் புகழ் பெற்றது,ஏற்றுமதி செய்கிறார்கள்.

    நம் ஊரில் புத்தக நம்பிக்கையாளர்களின் அலம்பல் தாங்க முடியவில்லை!!

    இந்த கட்டுரை நேரம் இருக்கும் போது படியுங்கள்!!

    http://www.guardian.co.uk/commentisfree/belief/2011/oct/08/drinkers-islam-palestinian-beerfest-alcohol

    Thank you

    ReplyDelete
    Replies
    1. அதே தான் சகோ. தங்க மத தலைவர் சொன்ன ஒரே காரணத்திற்காக மதுவை தொடாதே என்று மத பிரசாரமாக செயல்படும் இவர்கள் செயல்களை அனுமதிக்கவே முடியாது.
      இஸ்லாமிய ஆட்டோமான் துருக்கி சம்ராஜ்ஜியத்து இஸ்லாமியர்கள் தாங்களே சொந்தமாக மது சாராயம் தயாரித்து (Raki)தங்கள் தேசிய மதுபானம் என்று பெருமையா குடிக்கிறார்கள்.
      http://www.raki.com/raki.asp
      தமிழ்நாட்டு இஸ்லாமிய மத வாதிகள் 1400 வருடமாக அரேபியாவில் நித்திரையில் இருந்துவிட்டு இப்போ தான் நித்திரையைவிட்டு எழும்பியவர்கள் போல் இருக்கிறார்கள்.

      Delete
  35. சகோ வவ்வால்

    உங்க செயல்முறை விளக்கம் படிக்கும்போதே நமக்கு கிக் ஏறுது!!
    ஆகவே 100% மது ஒழிப்பு நடக்காத விடயம்!!!

    இதில் என்ன தந்திரம் என்றால் இந்த தடை செய்யப் பட்ட நாடுகளில் இப்படி ஏதாவது செய்து போதையேற்றும் குடிமகன்கள் வெளியில் சொன்னல் பிரச்சினை என்று அமைதியாக் இருப்பதால் மதவாதிகள் 100% ஒழித்து விட்டோம் என் கூவிக் கொண்டு இருக்கிறார்கள்.

    மது ஒரு போதும் அருந்தாதவர்கள் % குறைவாகவெ இருக்கும்.

    அதிக குடி ,அதற்கு அடிமை என்பதும் குறைவே

    ஏதோ சமயம் கிடைத்தது, ஒரு பெக் அடி கொண்டாடு என்பவர்கள்தான் அதிகம்!!

    மாநாடு ஆரம்பித்ததும் ட்விட்டரின் வாங்க. நம் பெயரிலேயே கண்க்கு உள்ளது.!!
    நன்றி

    ReplyDelete
  36. My comment in bro suvanan's post
    சகோ சுவனப் பிரியன்,
    மார்க்கத்தில் ஜின்கள் உண்டு என்பதியும் மறுக்கப் போகிறீர்களா??
    ஜின்னை தூணில் கட்டிய முகமது(சல்) அவர்களின் வல்லமை!!
    //461. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
    "இஃப்ரீத் என்ற ஜின் நேற்றிரவு என் முன் திடீரெனத் தோன்றி என்தொழுகையைக் கெடுக்க முயன்றது. அதைப் பிடிப்பதற்கான சக்தியை இறைவன் எனக்கு வழங்கினான். காலையில் நீங்கள் அனைவரும் அதைக் காண வேண்டுமென இந்தப் பள்ளிவாசலிலுள்ள ஒரு தூணில் அதைக் கட்டி வைக்க எண்ணினேன். 'இறைவா! எனக்குப் பின் வேறு எவருக்கும் நீ வழங்காத ஓர் ஆட்சியை எனக்கு நீ வழங்குவாயாக' (திருக்குர்ஆன் 38:35) என்ற என் சகோதரர் ஸுலைமான் (அலை) அவர்களின் பிரார்த்தனை எனக்கு நினைவு வந்தால் அதை விரட்டி அடித்து விட்டேன்."
    என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
    Volume :1 Booக் :8//

    ****************
    சூனியம் முகமதுக்கு வைக்கப்பட்டது என்ற ஹதிதை மறுக்கப் போகிறீர்களா?
    //5765. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
    இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள்.
    அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்: அவ்வாறிருந்தால் அது சூனியத்திலேயே கடுமையானதாகும்.
    (ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? நான் எந்த விஷயத்தில் அல்லாஹ்விடம் தெளிவைத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்தேனோ, அந்த விஷயத்தில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கிவிட்டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். என் தலைமாட்டில் இருந்தவர் மற்றொருவரிடம், 'இந்த மனிதரின் நிலையென்ன?' என்று கேட்டார். மற்றவர், 'யூதர்களின் நட்புக்குலமான 'பனூ ஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பவர். இவர் நயவஞ்சகராக இருந்தார்' என்று பதிலளித்தார். அவர், 'எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது?)' என்று கேட்க, மற்றவர், 'சீப்பிலும் சிக்கு முடியிலும்' என்று பதிலளித்தார். அவர் 'எங்கே (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)?' என்று கேட்க, மற்றவர், 'ஆண் பேரீச்சம் பாளையின் உறையில் 'தர்வான்' குலத்தாரின் கிணற்றிலுள்ள கல் ஒன்றின் அடியில் வைக்கப்பட்டுள்ளது' என்று பதிலளித்தார்.
    பிறகு நபி(ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அ(ந்தப் பாளை உறை)தனை வெளியே எடுத்தார்கள். பிறகு (என்னிடம் திரும்பி வந்த) நபி(ஸல்) அவர்கள், 'இதுதான் எனக்குக் (கனவில்) காட்டப்பட்ட கிணறு. இதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) உள்ளது. இதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று உள்ளன' என்று சொல்லிவிட்டுப் பிறகு 'அந்தப் பேரீச்சம் பாளை உறை வெளியே எடுக்கப்பட்டது' என்றும் கூறினார்கள்.
    நான், 'தாங்கள் (பாளை உறையை) ஏன் உடைத்துக காட்டக் கூடாது?' எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் எனக்கு (இந்த சூனியத்திலிருந்து) நிவாரணம் அளித்துவிட்டான். (சூனியப் பொருளைத் திறந்துகாட்டி) மக்களில் எவரையும் குழப்பத்தில் ஆழ்த்த நான் விரும்பவில்லை' என்று சொல்லிவிட்டார்கள். 92
    Volume :6 Book :76//

    சில ஹதிதுகள் இயற்கைக்கு மேம்பட்ட சில சக்திகள் சோதிடர்களுக்கு உள்ளுதிப்பு(ஹி ஹி இது அடைப்புக்குறி) செய்வதாக் கூறுகிறது.
    //3210. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    வானவர்கள் மேகத்தில் இறங்கி விண்ணில் தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைப் (பற்றிப்) பேசி கொள்கிறார்கள். ஷைத்தான்கள் அதைத் திருட்டுத் தனமாக (ஒளிந்திருந்து) ஓட்டுக் கேட்டு, சோதிடர்களுக்கு அதை (உள்ளுதிப்பாக) அறிவித்து விடுகின்றன. சோதிடர்கள் அதனுடன் (அந்த உண்மையுடன்) நூறு பொய்களைத் தம் தரப்பிலிருந்து புனைந்து (சேர்த்துக்) கூறுவார்கள்.
    என்று நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
    Volume :3 Book :59//
    முகம்து நிலவைப் பிளந்த ஃபோட்டோ கட்டுவது யார்?

    மத புத்தக்த்தில் அறிவியல் என்பதும் மூடத்தனமே!!!

    சுலைமான்(அலை) ஜின் படை வைத்து வைத்து இருந்தாராமே!!!
    http://www.islam101.com/history/people/prophets/sulaiman.htm
    சரி எல்லாம் யூதனுங்க இட்டுக் கட்டியது என்ற நகைச்சுவை விள்க்கத்தை சொல்வோம்!!!கேட்பதற்கு ஆள் இருக்கிறார்கள்!!

    ஹி ஹி மூடத்தனத்தில் அனைத்து மத்வாதிகளும் ஒன்றே!!!

    நன்றி

    ReplyDelete
  37. ஹி ஹி மூடத்தனத்தில் அனைத்து மத்வாதிகளும் ஒன்றே!!!
    http://mukto-mona.net/Articles/skm/Islam_Superstition_complete.pdf

    ReplyDelete
  38. @வவ்வால்!தேடிப்பிடிச்சு கசகசாவை வாங்கிட்டேன்:)

    ReplyDelete
  39. //குஜராத்தில் முழு மதுவிலக்கு என்பது அங்கே கள்ள மதுவியாபாரிகள் நலன் சார்ந்தே என்ற கருத்தும் உண்டு.//

    சகோ.சார்வாகன்!இருந்துட்டுப் போகட்டுமே.தமிழகத்திலும் கூடத்தான் கள்ளச்சாரயம் கொடி கட்டிப் பறந்தது.வார்னீஷ் குடிச்சு இறந்தார்கள் என்பதற்காகவும்,ஆந்திராவுக்கும்,கர்நாடகாவுக்கும்,கேரளாவுக்கும் வருமானம் போகிறது என்ற பொய்க் காரணத்திற்காகவும் தமிழகத்தில் மது வந்தது.வாகன ஓட்டுனர்கள்,கல்லூரி டூர்,பாண்டிச்சேரி டூர் என்று மட்டுமே சாராயத்தின் தாக்கம் இருந்தது.பெரும்பான்மையோர் குடிக்காதவர்களாகவே இருந்தார்கள்.இன்று வவ்வாலின் தலைகீழ் விகிதங்கள்:)

    குடியின் தீமைகள் பற்றி யோசிப்பதோடு தமிழக சூழலில் மது உடல்நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளதா அல்லது குறைத்துள்ளதா என்ற ஆய்வுகள் யாராவது செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.அளவான மதுவை மருத்துவர்களே சிபாரிசு செய்வதோடு நீரில் விழுந்த ஈ உயிரோடு இருப்பதாகவும் மதுவில் விழுந்தது மயக்கம் போட்டு விடுவதால் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் செத்துப்போகும் புது வேதாள நீதிக்கதைகள் வேறு இருக்கிறதே:)

    ReplyDelete
  40. ராச நடராசரே,

    //குஜராத்தில் முழு மதுவிலக்கு என்பது அங்கே கள்ள மதுவியாபாரிகள் நலன் சார்ந்தே என்ற கருத்தும் உண்டு.//

    ஹி...ஹி நரேந்திர மோடி மாட்டிறைச்சி உண்ணக்கூடாதுன்னு சொன்னால் அதை வரவேற்க நீங்க ரெடித்தானே?


    பீட்டா மாமிசம் சாப்பிடுவதை எதிர்க்கிறது அதனை ஆதரிப்ப்போரில் பல மதத்தினரும் இருக்கிறார்கள் ஆனால் எத்தனை இஸ்லாமியர்கள் அதனை ஆதரிப்பார்கள்.

    அவசியம் மாட்டிறைச்சி சாப்பிட்டே தீர்வேன் என சொல்பவர்கள், ஏன் பன்றி இறைச்சி சாப்பிட சொன்னால் முகம் சுளிக்க வேண்டும். உணவை தேர்வு செய்வது கூட மனித விருப்பின் படி இல்லாமல் மதத்தின் அடிப்படையில் இருப்பவர்களுக்கு மாற்று மதத்தினருக்கு அறிவுரை சொல்ல தகுதி இல்லை.

    மேலும் பன்றியிறைச்சியே உண்பதில்லை என்பவர்களின் உணவில் பன்றிக்கொழுப்பு கலந்திருப்பதை அறிவதில்லை, "lard" எனப்படுவது பன்றிக்கொழுப்பு பல பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படுகிறது.அதே போல மாட்டுக்கொழுப்பு(டாலோவ்)சேர்க்கப்படுகிறது. இதனை எதிர்த்து வழக்குப்போட்டவர்கள் சைவ உணவாளர்களே,இதனாலேயே மெக்டொனால்ட் மன்னிப்புக்கேட்டு நஷ்ட ஈடுக்கூட கொடுத்தது. அதன் பின் ,பச்சை வட்ட குறியீடுப்போட்டால் அதில் மாமிசக்கொழுப்பு இல்லை என சட்டம் வந்தது.

    அப்படியான குறியீடு இல்லாத எல்லாப்பதப்படுத்தப்பட்ட /பேக்டு உணவிலும் பன்றி/ மாட்டு கொழுப்பு இருப்பதாகவே பொருள், ஆனால் எந்த மிருகம் என்ரெல்லாம் போடமாட்டார்கள்.

    அமெரிக்கா போனப்பிறகு பேக்கன் சாப்பிடும் இஸ்லாமியர்களும் இருக்கத்தான் செய்யுறாங்க :-))

    வாக்காளர் அடையாள அட்டைக்கான புகைப்படத்திலும் முகம் மூடிக்கொண்டே போட்டோ போடுவோம் என சொல்லி வம்பு செய்தவர்கள் எப்படி சமூக சட்டத்திட்டங்களைப்பற்றி பேசுகிறார்கள்?

    இன்னும் பலர் வீம்புக்கு வாக்காளர் அடையாள அட்டையே வேண்டாம் என இருப்பதை என்ன சொல்ல?
    -------------

    சைவம்/ மாட்டிறைச்சி உண்ணாத ஒருவர் முன்னால் மாட்டிறைச்சி உண்பதும் அடுத்தவரை இம்சிப்பது தான். இது மது அருந்தியவர்களால் ஏற்படும் உபாதைக்கு சமம் என சொன்னால் ஏற்பார்களா?

    ஒரு சதவீதத்திற்கு குறைவான மது அருந்தியவர்கள் தான் பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துக்கொள்கிறார்கள்.

    அப்போ மட்டும் எங்கள் உரிமைன்னு சொல்பவர்கள், மது அருந்துபவர்களுக்கும் உரிமை இருக்கு என உணர வேண்டாமா, ஏன் அமெரிக்காவில் சூப்பர் மார்கெட்டிலேயே கிடைக்கும். அங்கே எல்லாம் இஸ்லாமியர்கள் வசிக்கவில்லையா?

    ரெண்டு பேரு மதுப்போதையில் சண்டயிட்டுக்கொன்டால் அவர்களோடு சேதம் சரி ஆனால் ரெண்டு பேரு மதப்போதையில் சண்டையிட்டு அடித்துக்கொண்டால் ஊரெல்லாம் பரவி ஏகப்பட்ட உயிர்சேதம் ,பொருள் சேதம் உருவாக்கும்.

    உலகம் முழுக்க நடைப்பெறும் மதச்சன்டையில் பங்கெடுத்துக்கொண்டு இருப்பது இஸ்லாம் என்பதை யாராவது மறுக்க முடியுமா?

    ---------
    மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்பது ஒரு சட்டம், அதனை யாராக இருந்தாலும் மதிக்க வேன்டும்,ஆனால் அதன் பொருள் மது அருந்தக்கூடாது என்றில்லை.

    விமானப்பயணத்த்தின் போது ஷேவிங் பிளேட் கூட எடுத்து செல்லக்கூடாது அதனை மதிக்க வேண்டும்,அதன் பொருள் யாரும் ஷேவிங் செய்யக்கூடாது என சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

    எனவே தனிமனித சுதந்திரம், ஒழுக்கம் என சொல்லிக்கொண்டு ஒரு குறிப்பிட்ட மதத்தின் கொள்கையால் ஆன ஒன்றை திணிக்கப்பார்ப்பது சமூக அக்கரையல்ல.

    ---------

    முல்லா ஓமர், சொன்ன பெருநாள் செய்தியை எல்லாம்ம் பெருமையாக பதிவிட்டுக்கொள்பவர்கள் எப்படி சமூக கருத்து என சொல்ல முன்வருகிறார்கள் என்பதையும் யோசித்துப்பாருங்களேன்.
    ----------

    ReplyDelete
  41. கலக்கல் வவ்வால் அருமை.
    //ஏன் அமெரிக்காவில் சூப்பர் மார்கெட்டிலேயே கிடைக்கும்//
    அவுஸ்ரேலியா,கனடாவில் தான் மதுபான கடைகளில் மட்டும் மது வாங்க முடியும். பிரான்ஸ் போன்ற பல காபிர் நாடுகளில் மா,சீனி வாங்கும் கடைகளிலேயே விஸ்கி,பியர் வாங்கலாம். இஸ்லாமியர்கள் வாங்கி குடித்து இன்புற்று வாழ்கின்றனர் காபிர்கள் நாடுகளில்.

    ReplyDelete
  42. வேகநரி,

    நன்றி!

    // இஸ்லாமியர்கள் வாங்கி குடித்து இன்புற்று வாழ்கின்றனர் காபிர்கள் நாடுகளில்.//

    சுவனத்தில் மது,மங்கையர் எல்லாம் கிடைக்குதாம், அப்போ காபிர்களின் தேசம் தான் அந்த சுவனம்னு நினைச்சு இருப்பாங்களோ ;-))

    அங்கே எல்லாம் ஏன் சூப்பர் மார்க்கெட்டில் விக்குறாங்கன்னு கேட்க வேண்டியது தானே. யாரவது சூப்பர் மார்க்கெட்டுக்கு போயிட்டு வந்தா வாயை ஊதிக்காட்ட சொல்லுவாங்களோ மார்க்க பந்துக்கள்.

    இங்கே வந்து என்ன என்னமோ பேசுறாங்க.


    பொது இடத்துல மது அருந்தக்கூடாதுன்னு சொல்லுறாங்களே, இன்டெர்நேஷனல் பிளைட்ல மது கொடுப்பாங்களே அதை பார்த்துட்டு பறக்கிற ஃப்ளைட்டு கதவை தொறந்துக்கிட்டு குதிச்சுடுவாங்களா மார்க்கப்பந்துக்கள் :-))


    என்னமோ போங்கப்பா உங்க நியாயம் ஊருக்கு,இடத்துக்கு ஒன்றா இருக்கே இதெல்லாம் அல்லா சாமிக்கே அடுக்குமா, கண்ணை குத்திட மாட்டாரு :-))

    ReplyDelete
  43. muslim ku di maganukku ingu haraam angu?halal...hi ..hi..(pandikariorupletparsal?)

    ReplyDelete
  44. நீங்கள் சொல்ல வரும் விடயம் என்ன> மது விடயத்தில் இஸ்லாம் தவறு செய்ததா? இல்லை மார்க்க அறிஞ்சர்கள் செய்தார்கள் என்றா?

    ReplyDelete