Tuesday, October 20, 2015

மாட்டுக் கறி தடைக்கு முன்னால்!!!!!!!!!!!!!!!!

வணக்கம் ந(அ)ண்பர்களே,
மீண்டு(ம்) பதிவு எழுத ஆசை.ஆயிரம் கதை சொல்லி  ஆட்சி பிடித்த  மதம் சார் கட்சி சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல்,மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாய் , மத வெறியை தூண்ட முயற்சித்து வருகிறது.

மாட்டுக் கறி ஏற்றுமதியில் இந்தியா உலகின் முதல் இடம் என்பது ஆளும் அரசுக்கு தெரியாதா? அல்லது எதிர்க்கும் அரசின் ஆதரவாளருக்கு தெரியாதா?

http://beef2live.com/story-world-beef-exports-ranking-countries-0-106903

World     10,200,000
Rank     Country     2015            Change
1     India                   2,400,000     23.53%
2     Brazil                  2,005,000     19.66%
3     Australia             1,590,000     15.59%
4     United States      1,098,000     10.76%
5     New Zealand        555,000        5.44%


இந்து மதம் என்பது ஒரு மதம் அல்ல, மதங்களின் தொகுப்பு.

யார் முசுலீம், கிறித்த்வர் அல்லாதவரோ அவருக்கு  இந்து சட்டம் செல்லும்   என மட்டுமே நமது அரசியல் அமைப்பு சட்டம் வரையறுக்கிறது.

இந்து என்பதன் வரையறுப்பு பற்றி தெரியாது என நீதிமன்றத்தில் சொல்கிறது ஆளும் இந்ந்துத்வ அரசு.
http://www.thehindu.com/news/national/govt-does-not-have-info-on-definition-of-hindu/article7750000.ece

 Union Home Ministry does not know the definition of the word ‘Hindu’. In reply to an RTI query by Neemuch resident Chandrashekhar Gaur, the Ministry said it does not know the definition of the word Hindu.

“To my query under RTI about the meaning and definition of the word Hindu in the light of the Indian Constitution and the law, the Home Ministry in its reply on July 31 said the Central Public Information Officer (CPIO) doesn’t have information regarding it,” said Mr. Gaur, a resident of Neemuch district in Madhya Pradesh.

Mr. Gaur had also sought to know on what grounds a community was considered Hindu, and why Hindus were considered to be a majority community.

The government’s reply was baffling, he said.

“If the government doesn’t know the meaning and definition of the word Hindu, on what basis did it enact the Hindu Marriage Act?” he questioned.

இந்த சூழலில் இந்ந்துக்களின் உணவு இது என வரையறை செய்ய இயலுமா?

உணவு என்பது ஒருவரின் தனிப்பட்ட விடயம்.உலக முழுதும் பல்வேறு உனவுப் பழக்க முறைகள் உண்டு.
காலம் காலமாக வ்ழக்கத்தில் இருது வரும்,பிடிக்கும் உணவை சாப்பிட எவருக்கும் உரிமை உண்டு.
மாட்டுக் கறி உண்ணுதல் சுமார் 10,000 வருடங்களாக வழக்கத்தில் இருந்து வருகிறது.சிந்து சமவெளி நாகரிகத்தில் கூட இந்த வழ்ழக்கம் இருப்பதகா அகழ்வாய்வு சான்றுகள் குறிப்பிடுகின்றன.

http://beef.sabhlokcity.com/2013/07/archaeological-evidence-of-beef-eating-in-india-indus-valley-vedic-period-etc/

பவுத்தம்,சமணம் ஆகியவற்றின் தாக்கத்தினால்தான் , மாமிச உணவு தவிர்த்தல் இந்தியாவில் வழக்கத்திற்கு வந்தது.வேத கால மதத்தில் பலியிடுதலும், சோமபானம் (அந்தக் கால சரக்கு) படைத்தலுமே வழிபாடு ஆக இருந்தது.

தாவர உணவு மட்டுமே சாப்பிடுவேன். அது உடலுக்கு நல்லது என பிரச்சாரம் செய்வேன் என்று சொல்வதும் ஒருவரின் உரிமை. ஆனால் ஆடு ,கோழி, பன்றி, எருமை சாப்பிடுவேன் ஆனல் யாரும் பசு, எருது மட்டும் சாப்பிடக் கூடாது என்பது சரியல்ல.

மாட்டுக் கறி பிரச்சினைக்கு முன்பு,அதாவது மாற்று மதத்தின‌னருக்கு உணவுக் கட்டுப்பாடு விதிக்கும் முன்பு

1. யார் இந்து என்பதை சரியாக வரையறுக்க வேண்டும். வேண்டும் எனில் மாட்டுக் கறி சாப்பிடாதவர் மட்டுமே இந்து என வரையறை செய்யலாம்.

2.இந்துக்கள் அனைவருக்கும் ஒரே உணவுப் பழ‌க்கம் கொண்டு வர வேண்டும்.ஒன்று அனைத்து இந்துக்களும் சைவ உணவு ,அல்லது  ஆடு ,கோழி, பன்றி, எருமை கரி சாப்பிட வேண்டும்.

3. இந்துக்களில் ஒரே சாதியில் திருமணம் செய்ய தடை வேண்டும். சாதி விட்டு சாதி மட்டுமே திருமணம் முடிக்க வேண்டும்.

4.அனைவரும் அர்ச்சகர் ஆக வேண்டும்.

5.சமீபத்திய‌ சேச சமுத்திரம தேர் எரிப்பு தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கலாம்.

யாரேனும் விவரம் அறிந்த(??) இந்துத்வ ஆதரவாளவர் (ஒருவேளை) இருந்தால் பசு மாட்டு இறைச்சி உண்ணக் கூடாது என சொல்லும் வேத வசனம் குறிப்புகள் தரவும்.

ந‌ன்றி!!!!!!!!!!!