Showing posts with label மதவாதி. Show all posts
Showing posts with label மதவாதி. Show all posts

Friday, November 27, 2015

இந்த புதிய குரான் விளக்கம் வன்முறையைத் தடுக்குமா(ம்!)?


வணக்கம் ந‌ண்பர்களே,
நேற்று சி. என். என் தொலைக்காட்சியில் ஆய்வு குரான்(STudy Quran) என்ற ஒரு புத்தம் புதிய குரான் விளக்கம் பற்றி ஒரு செய்தி ஓளிபரப்பு ஆனது. அது பற்றியே இந்தப் பதிவு.குரான் என்பது முசுலீம்களின் மதப் புத்தகம் என்பதும், பொ.ஆ 610 முதல் 632 வரை அரேபியாவின் மெக்க,மதினா நகரங்களில்,திரு முகமது என்ற இறைதூதருக்கு அரபி மொழியில் வழங்கப்பட்ட‌ட செய்தி என்பது அவர்களின் நம்பிக்கை.அரபி அல்லாத குரான்கள், குரான் விளக்கமாக மட்டுமே கருதப் படுகின்றன.

உலகில் அதிகம் மதிக்கப்படும், விமர்சிக்கப்படும் புத்தகம் இதுதான் என்றால் மிகையாகாது.குரானை நம்புவோர் அதில் உள்ள ஒவ்வொரு சொல்லும், ஏக இறைவனின் மாற்றமில்லா இறுதி வாக்கு என்பதால் அதனை அப்படியே ஏற்கின்றனர்.ஆனால் இறை மறுப்பாளர்கள், மாற்று மதத்தினர்,முன்னாள முசுலிம் ஆகியோர் அதில் உள்ள வன்முறை சார் வசனங்க‌ளை சுட்டி அதனை விமர்சிக்கின்றனர்.
குரான் உலகின் பெரும்பான்மை மொழிகளில் , விளக்க உரைகள் உண்டு. ந‌மது தாய்த் தமிழிலும் 20க்கும் மேற்பட்ட குரான் விளக்க உரைகள் உன்டு.


இந்தப் பதிவில் சி என் என் தொலைக் காட்சி தரும் தகவல் அடிப்படையில் மட்டுமே விவாதிப்போம். நமது சொந்தக் கருத்துகளை பின்னூட்டங்களில் மட்டுமே நாகரிகமாக விவாதிப்போம்.இதுதான் தொலைகாட்சி செய்தியின் சுட்டி .
http://www.cnn.com/2015/11/25/living/study-quran-extremism/index.html

இது அப்புத்த்கத்தின் அமேசான் தள இனைப்பு
http://harperone.hc.com/studyquran/
http://www.amazon.com/The-Study-Quran-Translation-Commentary/dp/0061125865

இது அமெரிக்க பல்கலைக் கழக மத ஆய்வாளர்களான 
Seyyed Hossein Nasr (Editor-in-Chief), University Professor of Islamic Studies at the George Washington University,Caner

K. Dagli (General Editor), Associate Professor of Religious Studies at the College of the Holy Cross,

Maria Massi Dakake (General Editor) is Associate Professor of Religious Studies at George Mason University,

Joseph E. B. Lumbard (General Editor) is Assistant Professor in the Department of Arabic and Translation Studies at the American University of Sharjah 
,Mohammed Rustom (Assistant Editor), Associate Professor of Islamic Studies at Carleton University.

ஆகியோரால் மொழி பெயர்க்கப்ப்ட்டது.ஒவ்வொரு வசனத்திற்கும் அடிக்குறிப்பு (foot note)விள்க்கம் அளித்து இருப்பதாக‌ செய்தி சொல்கிறது.

இது விமர்சனத்திற்கு உள்ளாகும் வசனங்களுக்கு ,மாற்றுப் பொருள் அளிக்கிறதாம்.ஷியா,சுன்னி பிரிவு சார் தனித் தனி விளக்கமும் இருக்கிறது.எனினும் இது அதிக முசுலிம்களால் ஏற்கப்ப்டாது என்பது ந‌மது கணிப்பு.
ஏன்?
1. இந்ந்த மாற்று விள்க்கம் சரி என்றால் கமுந்தைய 1400 வருட விளக்கங்கள் தவறாகி விடும்.மத குருக்கள்,அடிப்படைவாதிகள் பிடியில் இருந்து புத்தக விளக்கம் கல்வியாளர்கள் கையில் செல்வதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். ஏதேனும் ஃபத்வா கூட வரலாம்.

2.இந்ந்த புத்த்கத்தில், மூல அரபி வசனங்கள் இடம் பெறவில்லை.ஆங்கிலம் மட்டும்தான் என்பதாலும்,மொழிபெயர்பாளர்கள் மேலை நாட்டவர் என்பதாலும் இது இசுலாமிய ஆய்வு சார் மேலை நாட்டு பல்கலைக் கழகங்கள் தாண்டி படிக்கப்ப்டாது.

3. ஏற்கெனவே அகமதியா மற்றும் குரான் மட்டும் பிரிவினரின் விளக்க உரைகளும் இப்படித்தான் இருக்கிறது. நாமும் குரான் 4.34 வசனம் மனைவியை அடிக்க சொல்லவில்லை என்னும் குரான் மட்டும் பிரிவினரின் விளக்கம் சார்ந்து ஒரு பதிவு இட்டோம்.
http://saarvaakan.blogspot.com/2011/04/434.html
ஜிஹாத் என்னும் புனிதப் போரை , மன‌தின் தவறான எண்ணங்களுக்கு எதிரான போராட்டம் என விளக்கம்  தருகிறார்கள். http://www.muslim.org/islam/jihad.htm
அகமதியா, குரான் மட்டும் பிரிவினர் ,முசுலீம்களில் சிறுபான்மை என்பது குறிப்பிடத் தக்கது.

என்றாலும் மனிதர்களுக்கு சமாதானம் ஏற்படுத்தும் இப்படி முயற்சிகள் பாராட்டப் படத் தக்க‌வைதான்.நமது இதயம் மாற்று விள்க்கம் பெரும்பான்மையினரால் ஏற்கப்பட விரும்பினாலும்,அறிவோ வாய்ப்பு குறைவு என்பதையே இயம்புகிறது.

எப்படி இருந்தாலும், மதம் சார் சட்டங்கள் தூக்கி எறியப் படும் வரை, மதகுருக்கள் அரசியல் செல்வாக்கு அழியும் வரை இப்படிப்பட்ட முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராகத்தான் முடியும்.

ந‌ன்றி!!!நன்றி!!! நன்றி!!!

Tuesday, October 20, 2015

மாட்டுக் கறி தடைக்கு முன்னால்!!!!!!!!!!!!!!!!

வணக்கம் ந(அ)ண்பர்களே,
மீண்டு(ம்) பதிவு எழுத ஆசை.ஆயிரம் கதை சொல்லி  ஆட்சி பிடித்த  மதம் சார் கட்சி சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல்,மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாய் , மத வெறியை தூண்ட முயற்சித்து வருகிறது.

மாட்டுக் கறி ஏற்றுமதியில் இந்தியா உலகின் முதல் இடம் என்பது ஆளும் அரசுக்கு தெரியாதா? அல்லது எதிர்க்கும் அரசின் ஆதரவாளருக்கு தெரியாதா?

http://beef2live.com/story-world-beef-exports-ranking-countries-0-106903

World     10,200,000
Rank     Country     2015            Change
1     India                   2,400,000     23.53%
2     Brazil                  2,005,000     19.66%
3     Australia             1,590,000     15.59%
4     United States      1,098,000     10.76%
5     New Zealand        555,000        5.44%


இந்து மதம் என்பது ஒரு மதம் அல்ல, மதங்களின் தொகுப்பு.

யார் முசுலீம், கிறித்த்வர் அல்லாதவரோ அவருக்கு  இந்து சட்டம் செல்லும்   என மட்டுமே நமது அரசியல் அமைப்பு சட்டம் வரையறுக்கிறது.

இந்து என்பதன் வரையறுப்பு பற்றி தெரியாது என நீதிமன்றத்தில் சொல்கிறது ஆளும் இந்ந்துத்வ அரசு.
http://www.thehindu.com/news/national/govt-does-not-have-info-on-definition-of-hindu/article7750000.ece

 Union Home Ministry does not know the definition of the word ‘Hindu’. In reply to an RTI query by Neemuch resident Chandrashekhar Gaur, the Ministry said it does not know the definition of the word Hindu.

“To my query under RTI about the meaning and definition of the word Hindu in the light of the Indian Constitution and the law, the Home Ministry in its reply on July 31 said the Central Public Information Officer (CPIO) doesn’t have information regarding it,” said Mr. Gaur, a resident of Neemuch district in Madhya Pradesh.

Mr. Gaur had also sought to know on what grounds a community was considered Hindu, and why Hindus were considered to be a majority community.

The government’s reply was baffling, he said.

“If the government doesn’t know the meaning and definition of the word Hindu, on what basis did it enact the Hindu Marriage Act?” he questioned.

இந்த சூழலில் இந்ந்துக்களின் உணவு இது என வரையறை செய்ய இயலுமா?

உணவு என்பது ஒருவரின் தனிப்பட்ட விடயம்.உலக முழுதும் பல்வேறு உனவுப் பழக்க முறைகள் உண்டு.
காலம் காலமாக வ்ழக்கத்தில் இருது வரும்,பிடிக்கும் உணவை சாப்பிட எவருக்கும் உரிமை உண்டு.
மாட்டுக் கறி உண்ணுதல் சுமார் 10,000 வருடங்களாக வழக்கத்தில் இருந்து வருகிறது.சிந்து சமவெளி நாகரிகத்தில் கூட இந்த வழ்ழக்கம் இருப்பதகா அகழ்வாய்வு சான்றுகள் குறிப்பிடுகின்றன.

http://beef.sabhlokcity.com/2013/07/archaeological-evidence-of-beef-eating-in-india-indus-valley-vedic-period-etc/

பவுத்தம்,சமணம் ஆகியவற்றின் தாக்கத்தினால்தான் , மாமிச உணவு தவிர்த்தல் இந்தியாவில் வழக்கத்திற்கு வந்தது.வேத கால மதத்தில் பலியிடுதலும், சோமபானம் (அந்தக் கால சரக்கு) படைத்தலுமே வழிபாடு ஆக இருந்தது.

தாவர உணவு மட்டுமே சாப்பிடுவேன். அது உடலுக்கு நல்லது என பிரச்சாரம் செய்வேன் என்று சொல்வதும் ஒருவரின் உரிமை. ஆனால் ஆடு ,கோழி, பன்றி, எருமை சாப்பிடுவேன் ஆனல் யாரும் பசு, எருது மட்டும் சாப்பிடக் கூடாது என்பது சரியல்ல.

மாட்டுக் கறி பிரச்சினைக்கு முன்பு,அதாவது மாற்று மதத்தின‌னருக்கு உணவுக் கட்டுப்பாடு விதிக்கும் முன்பு

1. யார் இந்து என்பதை சரியாக வரையறுக்க வேண்டும். வேண்டும் எனில் மாட்டுக் கறி சாப்பிடாதவர் மட்டுமே இந்து என வரையறை செய்யலாம்.

2.இந்துக்கள் அனைவருக்கும் ஒரே உணவுப் பழ‌க்கம் கொண்டு வர வேண்டும்.ஒன்று அனைத்து இந்துக்களும் சைவ உணவு ,அல்லது  ஆடு ,கோழி, பன்றி, எருமை கரி சாப்பிட வேண்டும்.

3. இந்துக்களில் ஒரே சாதியில் திருமணம் செய்ய தடை வேண்டும். சாதி விட்டு சாதி மட்டுமே திருமணம் முடிக்க வேண்டும்.

4.அனைவரும் அர்ச்சகர் ஆக வேண்டும்.

5.சமீபத்திய‌ சேச சமுத்திரம தேர் எரிப்பு தொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கலாம்.

யாரேனும் விவரம் அறிந்த(??) இந்துத்வ ஆதரவாளவர் (ஒருவேளை) இருந்தால் பசு மாட்டு இறைச்சி உண்ணக் கூடாது என சொல்லும் வேத வசனம் குறிப்புகள் தரவும்.

ந‌ன்றி!!!!!!!!!!!

Friday, April 18, 2014

அறிவியல் விவாதம் : ஒளியின் வேகம் மாறுமா?


வணக்கம் நண்பர்களே,
சகோதரர் கிருஷ்ணாவின் அருமையான ன்ஸ்டினின் சார்பியல் கொள்கை பற்றிய அறிவியல் பதிவில் நடைபெற்ற விவாதம் சார்ந்து , நாம் தேடிய விடயங்களே இப்பதிவு.

சகோ கிருஷ்னாவின் பதிவு

வழக்கம் போல் சகோ வவ்வாலும், மாப்ளே தாசும் அவரவர் வாதங்களை எடுத்து வைத்தார்கள். சகோ வவ்வாலின் கருத்துக்கள் ஆவண.

சிவப்பில் உள்ளது சகோ வவ்வாலின் கருத்துகள் அப்படியே கொடுத்து இருக்கிறேன். கருப்பில்(நமக்கு பிடித்த கலரு!!!) உள்ளது நமது  எளிமையான‌(??)
சுருக்கம்

1.ஒளியின் வேகம் நிலையானது அல்ல ,ஒவ்வொரு ரெபரென்ஸ் ஃபிரேமிலும் மாறுபடுகிறது. [ஒளியின் வேகம் சூழல் பொறுத்து மாறலாம்]



பிரபஞ்சம் தோன்ற சூப்பர் நோவா வெடிப்பு தேவை என்பதும் ,அதனை நிர்ணயிக்க "சந்திராஸ் லிமிட்" உதவுகின்றது என்பதும் புரியும்.

பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடையுமா, இல்லை ஒரு எல்லையில் விரிவு நின்று விடுமா, அல்லது மீண்டும் சுருங்கி சிங்குலாரிட்டி ஏற்பட்டு "பிக் பாங்க்' ஏற்படுமா என்பதை நிர்ணயிக்க பிரபஞ்சத்தின் நிறை மற்றும் ஈர்ப்பு விசை ஆகியவற்றை ஒப்பிடுகிரார்கள், அதற்கும் சந்திராஸ் லிமிட் அடிப்படையிலேயே கணக்கீடு செய்கிறார்கள்.

#
ரெட் ஷிப்ட் விடயத்தில் நேரடியாக அதனைக்கண்டுப்பிடித்தவர் சந்திர சேகர் என்பதாக சொல்லிவிட்டேன் ,அதனைக்கண்டுப்பிடிக்க அச்சாரமிட்ட டாப்லர் முதல் ஃபிரைட்மேன் வரையில் பலரும் ரெட் ஷிப்ட் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

ஹப்பிள் ஆய்வும் அதனை உறுதிப்படுத்தி பிரபஞ்சம் விரிவதை சொல்லியுள்ளது.[அறிவியலாளர் சந்திரசேகரின் கண்டுபிடிப்பான சந்திரா எல்லை என்பது, ஹூபிலின் ஆய்வுக்கு தூண்டுதல், அதுவே பிரபஞ்ச விரிவடைதலின் எல்லையை  அளவிடவும் உதவுகிறது.]

3.a)பிரபஞ்சத்தின் நிறையும் , ஈர்ப்பு விசையும் சம நிலை ஆனால் ,விரிவடைந்த பிரபஞ்சம் அப்படியே நின்றுவிடும்.

b)
நிறை ஈர்ப்பு விசையை விட அதிகம் ஆனால் ,தொடர்ந்து விரிவடையும்.

c)
நிறையை விட ஈர்ப்பு விசை அதிகம் ஆனால் சுருங்கி ,சிங்குலாரிட்டி ஏற்படும். அதன் பின் மீண்டும் பெரு வெடிப்பு.
இதற்கு அடிப்படையாக இருப்பது சந்திராஸ் லிமிட் கண்டுப்பிடிப்பே.
[பேரண்டம் விரிவடையும்/சுருங்கும் காரணி பிரப்ஞ்சத்தின் நிறை மற்றும் ,ஈர்ப்பு விசை சார்ந்தது.]

சரி மாப்ளே என்ன சொல்கிறார்?

வழக்கம் போல் எதிர் கருத்தாளரிடம் ஆதாரம் கேட்பார், கொடுக்கும் சுட்டிகளில் உள்ள விடயங்களுக்கு மேலதிக தகவல், என மார்க்கரீதியாக மார்க்கமாக விவாதம் செய்கிறார்.

இப்பதிவில் முதல் கருத்து (ஓளியின் வேகம் மாறுமா?)மீது மட்டுமே நாம்  அலசுகிறோம். மற்ற விடயங்களை((சந்திரசேகர் எல்லை(chandra’s limit), பேரண்டம் விரிதலின் எல்லை வரையறுப்பு) அடுத்தடுத்தபதிவுகளில் பார்ப்போம். உண்மையில் சகோ கிருஷ்னாவின் பதிவில் , பின்னூட்ட விவாதங்களில் இவைக்கான பதில்கள் கொடுக்கப்பட்டு விட்டன. இருந்தாலும் நாமும் கொஞ்சம் அறிந்தவற்றைப் பகிர்வோம்.

மாப்ளே தாசு அவரின் கருத்தை சொல்லாவிட்டாலும், அவரின் கருத்து ஒளியின் வேகம் ஒரு மாறிலி என்னும் திரு ஐன்ஸ்டினின் சிறப்பு சார்பியலை(special relativity) வழிமொழிகிறார் என்பதை நாம் எளிதில் புரிய முடியும்.

அவர் இஸ்க்கான் ஆத்திகர் என்பதால் அறிவியலையும் அதே நோக்கில் அணுகி, ஐன்ஸ்டினின் (சிறப்பு சார்பியல்) கொள்கையே இறுதியானது என அடம் பிடிப்பதில் வியப்பு இல்லை. நான் அப்படியும் சொல்ல்வில்லை என்றும், சொன்னதற்கு ஆதாரம் கேட்பார் எனவும் அறிவேன். எதையுமே குறிப்பாக சொல்லாமல், அடுத்தவர் சொல்லும் விடயங்கள் மீது மட்டும் சந்தேகம் தெறிக்கும் கேள்வி கேட்பது யார் வேண்டுமானாலும் செய்யக் கூடிய விடயம்தான்.

ஒரு புதிய அறிவியல் கொள்கை அதற்கு முந்தைய பல  கொள்கைகளை மீறாமலும், சில கொள்கைகளை விட பரிசோதனைக்கு பொருந்துகிறது,சான்றுகளை உண்மையாக்குகிறது என்ற சூழலில் மட்டுமே ஏற்கப் படுகிறது. ஆகவே அறிவியலில் எந்தக் கொள்கையும் நிரந்தரமானது என சொல்லவே முடியாது. அறிவியல் என்பது சான்றுகளுக்கு பொருந்தும் (கணித) மாதிரி அமைத்தல்(mathematical model fitting) என்பதை விளங்க வேண்டும்.ஒரு நிகழ்விற்கு பல காரணிகள் இருக்கும் போது , சிலவற்றை மாறிலியாகவும், சிலவற்றை மாறிகளாகவும் வரையறுக்க பல வாய்ப்புகள் உண்டு.

காலம் அனைத்து தளத்திற்கும் பொதுவானது என்பதை, காலம் என்பதும் வெளியைப் பொறுத்து மாறும் என்னும் சார்பியல் கொள்கை புரட்டிப் போட்டது. இக்கொள்கை மேக்ஸ்வெல் (மின்காந்த)சமன்பாடுகளுகளுக்கு பொருந்தியதால், ஒளியின் அடிப்படைத் துகள் ஈதர்(ether)'கு பரிசோதனை சான்று இல்லாமையாலும் ,அது ஏற்கப்பட்டது. ஆனாலும் இன்னும் சார்பியலும், குவாண்டம் இயக்கவியலும் இணையமுடியவில்லை என்பதால், ஒளி என்பதும் துகள்(particle) மற்றும் அலை(wave) என்னும் இரட்டைக்(dual) கருத்து இப்போது ஏற்கப்படுவதால் மாற்றுக் கொள்கைகளுக்கு வாய்ப்பு இருக்கிறது.

ஒளியின் வேகம் மாறிலியாக இருக்க வேண்டும் என முதலில் சொன்னவர் மேக்ஸ்வெல், அவரின் கருத்துகளையே ஐன்ஸ்டின் வழி மொழிந்தார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது அவரின் சிறப்பு சார்பியலுக்கு , ஒளி வேகம் மாறிலி என்பது தேவையான எடு கோள் (postulate.)

குவாண்ட இயக்கவியலின் படி ஒளி ஒரு துகள். சார்பியல்,மின் காந்த விதிகள் படி ஒளி ஒரு அலை.இரண்டும் பரிசோதனைக்கு பொருந்துகின்றன.

குவாண்டம் இயக்கவியலின் படி வேகத்தை அளவிடமுடிந்தால்,இடத்தை  அளவிடஅளக்க முடியாது, இடத்தை அளவிடமுடிந்தால்,வேகத்தை சரியாக அளவிடமுடியாது.

ஒளியின் வேகம் வெற்றிடத்தை எந்த தளத்தில் இருந்து அளந்தாலும் மாறிலியாக இருக்குமா என்பது பரிசோதிக்கப்பட்டதா என்னும் கேள்விக்கு சரியாக பதில் இல்லை. அதி வேகம் என்பதால் , மறைமுகமாக சில சமன்பாடுகளை மட்டுமே சரி பார்க்கிறோம். இக்கட்டுரை ஒளியின்  வேகத்தை அள்விடுதலின் சிக்கல்களை அலசுகிறது.


நாம் கொஞ்சம் சிறப்பு சார்பியல் அறிவோம்.

In physics, special relativity (SR, also known as the special theory of relativity or STR) is the accepted physical theory regarding the relationship between space and time. It is based on two postulates: (1) that the laws of physics are invariant (i.e., identical) in all inertial systems (non-accelerating frames of reference); and (2) that the speed of light in a vacuum is the same for all observers, regardless of the motion of the light source. It was originally proposed in 1905 by Albert Einstein in the paper "On the Electrodynamics of Moving Bodies".[1] The inconsistency of classical mechanics with Maxwell’s equations of electromagnetism led to the development of special relativity, which corrects classical mechanics to handle situations involving motions nearing the speed of light. As of today, special relativity is the most accurate model of motion at any speed.

அறிவியலில் ஒவ்வொரு விதிக்கும், எல்லை உண்டு.பாருங்கள் (மேலே சொன்ன விக்கி பக்கத்தில் இருந்து) சிறப்பு சார்பியலை வரையறுக்க கூட சில அடிப்படை கட்டுப்பாடுகள் இருக்கிறது என்பதை அறியலாம்.

) பல வேகங்களில் நகரும்  தளங்கள் இருக்கின்றன, அவை அனைத்திற்கும் இயற்பியல் விதிகள் பொதுவாக,ஒரே மாதிரி செயல் படுகின்றன.

). ஒளியின் வேகம் வெற்றிடத்தில் மாறிலியாக , அனைத்து தளத்தில் இருந்து செய்யப்படும் அளவீடுகளுக்கும்  இருக்கும்.

ஒளியின் வேகம் வெற்றிடத்தில், மாறுபட்ட வேகத் தளங்களின் அளவீடுகளுக்கும் , மாறாமல் இருக்கும். ஒருவர் ஒளியின் பாதி வேகத்தில் பயணம் செய்கிறார், அவரின் கையில் உள்ள விளக்கின் ஒளி வேகத்தை அவர் அளந்தாலும், நிலையான தளத்தில் இருந்து அளவிடும் ஒருவருக்கும் ஒளியின் வேகம் சமமாகவே இருக்கும். ஒளியின் வேகம்  ‘c’என குறிக்கப்படுகிறது. அதாவது

C+C/2=C!!!!!!!

C+0.99C+0.99C....=C!!!!!!!!!!!!!!

அதாவது வேகத்தை பொறுத்தவரை ஒளியின் வேகமே முடிவிலி(infinite)!!!
கணிதத்தின் படி முடிவிலியுடன் எதைக் கூட்டினாலும், பெருக்கினாலும் அதுவும் முடிவிலியே!!!

ஒரே ஒரு முடிவிலி உண்டா, இல்லை பலப்பல முடிவிலிகள் உண்டா என்பது ஏக இறைவனா, ஏகப்பட்ட ஏக இறைவன்களா என்னும் விவாதம் போல் இருப்பது நல்ல ஒற்றுமை.

கணிதத்தின் படி ஒரே ஒரு முடிவிலியா? பலப்பல முடிவிலிகளா என்பது முடிவுக்கு வராத விடயம்!!!
நாத்திகர் போல் முடிவிலி(இயற்கைக்கு மேம்பட்ட சக்தி) ஒன்று இருக்கிறதா என்னும்விவாதமும் கணித உலகில் உண்டு.

என்னைப் பொறுத்தவரை முடிவிலி/முடிவிலி, முடிவிலி ‍- முடிவிலி(minus) போன்றவற்றை எல். ஹாஸ்பிடல் விதி மூலம் கணக்கிட முடியும் என்பதை பல முடிவிலிகளுக்கான, அல்லது முடிவிலி இல்லாமைக்கான நிரூபணமாக கருதுகிறேன்.அதென்ன எல். ஹாஸ்பிடல்(அவர் பெயர் சகோ மருத்துவமனை அல்ல!!!). இங்கே படியுங்கள். முடிந்தால் இதற்கும் பதிவு எழுத முயற்சிக்கிறேன்.

எல் ஹாஸ்பிடல் விதி என்றால் இரு தொடர்புகளின் விகிதம் காண்பதில்  சிக்கல் ஏற்பட்டால், இரண்டின் வகைகெழுவின்(derivative) விகிதம் கண்டு மதிப்பிடலாம் என்பதே ஆகும்.

பூச்சியம் தவிர எந்த எண்ணை பூச்சியத்தால் வகுத்தாலும் அது முடிவிலி என அறிவொம் அல்லவா. இங்கே பாருங்கள்!!!

1/0 = முடிவிலி1                                                     (1)
2/0 = முடிவிலி2                                                     (2)

இதனை இப்படி தீர்ப்போம்

F(x)=x/2x , x----0
அப்படி மதிப்பிட்டால் நமக்கு கிடைப்பது
0/0 or முடிவிலி1    /முடிவிலி2
Applying  L hospital rule
F(x)= முடிவிலி1    /முடிவிலி2=1/2
அப்போது முடிவிலி 1 போல் முடிவிலி2 இரு பங்கு. ஆகவே பல முடிவிலிகள் உண்டு!!!!!
இது பற்றிய நம் முந்தைய பதிவு!!!

***
ஐன்ஸ்டினின் சிறப்பு சார்பியலை விட்டுவிட்டு கணிதம் எதற்கு என்றால் ஒரு பொது அறிவுக்குத்தான்.ஒரு கொள்கைக்கு மாற்றுக் கொள்கைகள் உண்டு என்பதை வலியுறுத்தவே.

சரி பதிவின் விவாதத்திற்கு திரும்புவோம். ஐன்ஸ்டினின் சிறப்பு சார்பியலின் படி ஓளியின் வேகம் வெற்றிடத்தில், அனைத்து நிலைம தளத்திலும்  மாறிலி. இது சரியா? என்பதுதான் பதிவின் கேள்வி.


அறிவியல் என்பது இயற்கை நிகழ்வுகளை சான்றுகளின் அடிப்படையில் அளிக்கப்படும்  பொருந்தும் விளக்கம் ஆகும்.எந்த ஒரு கொள்கைக்கும் மாற்றுக் கொள்கைகள் இருப்பது போல் , ஒளியின் வேகம் சூழல் சார்ந்து மாறும் என்னும் கொள்கைகளும் உண்டு.இந்தக் கொள்கையாளர்களும் சார்பியலுக்கு மாற்றுக் கொள்கை அளிக்க முயல்கிறார்கள் என்பதும் அறிந்து கொள்ள வேண்டும். இந்த விக்கி சுட்டி, ஒளியின் வேகம் மாறும் என்னும் கொள்கைகள் பற்றி குறிப்பிடுகிறது.

ஒளி வேகம் மாறும் கொள்கை என்பது, ஒளியும் நேரம், வெளியினைக் காரணிகளாக கொண்டது என வரையறுக்கிறார்கள்.ஆகவே நேரம், வெளி ஆகியவை சார்ந்து ஒளி வேகம் மாறும் என்கிறார்கள்.ஐன்ஸ்டின் கூட 1911ல் இப்படி ஒரு கொள்கை மீது ஆய்வு மேற்கொண்டு இருக்கிறார்.

அதன் பிறகு திரு இராபர்ட் டைக்(1957) என்பவரும் இக்கொள்கைக்காக ஆய்வுகள் மேற்கொண்டு இருக்கிறார்.

.
சரி மிக எளிதாக கூறினால், ஒளியின் வேகம் மாறிலி என்னும் எடுகோள்,(postulate) சார்பியல் கொள்கையை மெய்ப்பிக்க உதவுகிறது.ஒரு கேள்வி பதில் மட்டும் பார்த்து பதிவினை முடிப்போம்.


Q:
why speed of light is constant in any inertial frame? Is its experimental or theoritical proof?explain plz...
- nafis akhter (age 22)
jaipur
- Bill (age 16)
vancouver, BC, Canada
ஏன் ஒளியின் வேகம் எந்த நிலைம தளத்திலும்,வெற்றிடத்தில்,மாறிலியாக, உள்ளது? இதற்கு பரிசோத்னை சான்று உண்டா??.

அறிவியலில் கணிதம் ,நிரூபணம் கொடுப்பது கடினம். ஐன்ஸ்டினின் சிறப்பு சார்பியலுக்கு, ஒளி வேகம் மாறிலி என்பது அவசியக் கட்டுப்பாடு. அவர் கணித ரீதியான நிரூபணம் தரவில்லை.அது முடியாத விடயம்.

ஆனாலும் சிறப்பு சார்பியலின் கணிப்புகள் பல உண்மை ஆயிற்று, அதன் அடிப்படையில் இப்போதைய இயற்பியல் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே ஒளியின் வேகம் மாறும் என்றால் பல அறிவியல் கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும்.


 We've never been able to perform an experiment that conclusively shows that the speed of light isn't constant in every inertial frame. 

ஒளியின் வேகம் வெற்றிடத்தில், அனைத்து நிலைம தளங்களில் இருந்து அளவிடும் போது மாறும் என எந்த பரிசோதனையும் இதுவரை ஐயந்திரிபர நிரூபிக்க முடியவில்லை.

ஆகவே ஒளியின் வேகம் மாறும் என இதுவரை நிரூபிக்கப் படாமையால் மட்டுமே, ஒளியின் வேகம் மாறிலியாக ஏற்கப்படுகிறது.

[ கடவுள் இல்லை என நிரூபிக்கப் படாமையால் மட்டுமே கடவுள் உண்டே தவிர மத புத்தகத்தின் சான்றால் அல்ல ஹி ஹி]

எனினும் பதிவில் நாம் எல். ஹாஸ்பிடல் விதி மூலம் பல முடிவிலிகள் உண்டு என்பதை நிரூபித்து இருக்கிறோம். ஆகவே வேகத்தின் முடிவிலியான ஒளி வேகத்திற்கும் பல மதிப்புகள் உண்டு என்றே சொல்கிறோம்.

நாம் திரு ஐன்ஸ்டின் அய்யா அவர்களையோ ,சார்பியல் கொள்கைகளையோ குறைத்து மதிப்பிடவில்லை. நாம் சொல்வது அறிவியல் கொள்கை அனைத்துமே சான்றுகளுக்கு பொருந்தும் மாதிரி அமைத்தல்(model fitting) மட்டுமே என்பதும், பல மாதிரிகள் சான்றுகளுக்கு பொருந்தலாம் என்பதை விளக்க மட்டுமே இப்பதிவு.
1.குவாண்டம் இயக்கவியலையும், சார்பியலையும் இணைக்க  முடியவில்லை. 
2. சார்பியலினால் விளக்க முடியா விடயங்களும் உண்டு.


ஆகவே சார்பியலுக்கு மாற்றுக் கொள்கைகள் தேடும் ஆய்வுகள் நடக்கின்றன.,அதில் ஒளியின் வேகம் மாறும் என்னும் கொள்கை சார்ந்தும் ஆய்வுகள் நடக்கின்றன.

ஆகவே எதிர்காலத்தில் ஒளியின் வேகம் மாறும் என்பது சார்ந்த மாதிரி(model)  ஏற்கப் பட்டாலும் வியப்பு இல்லை.

ஒன்று பலவாகப் பிரிந்து அதில் சக்தி வாய்ந்தது நீடிக்கும், அதுவும் பலவாகி... என்ற பரிணாம விளக்கமே இங்கும்

"""கலி புருஷன் ஒன்றல்ல காலம் பலவாகும்""" (நன்றி விடாது கருப்பு )

நன்றி!!!!!