Tuesday, December 31, 2013

புத்தாண்டில் இன்பமாக வாழ வாத்துகிறோம்

வணக்கம் நண்பர்களே,

2014ல் இருந்து பதிவுலகில் தொடர்ந்து இயங்க வேண்டும் அதாவது குறைந்த பட்சம் மாதம் இரு பதிவுகள் என்னும்  என்னும் உறுதி மொழியோடு இவ்வருடத்தின்  கடைசிப் பதிவினை இடுகிறேன்.
****
நம் மதிப்பிற்குறிய இயற்கை அறிவியலாளர் அய்யா  திரு நம்மாழ்வார் மறைவுக்கு அஞ்சலி . இயற்கையோடு இணைந்த வாழ்வினை நோக்கி மனித சமூகம் சென்றாகவே வேண்டும்.அதற்கான அவரின் பங்களிப்பு அளப்பரியது. அவரின் குடும்பம்,நண்பர்களுடன் அவரின் இழப்பை பகிர்கிறோம்.

***
ஆம் ஆத்மி கட்சியின் திடீர் விசுவரூபம் நம்மை எந்த அளவு வியப்பில் ஆழ்த்துகிறதோ அதே அளவு அதன் திட்டங்கள் பற்றிய சாத்தியக் கூறுகள் பற்றியும் யோசிக்க வைக்கிறது. எனினும்  சாதி,மதம் ,இனம்,மொழி சாரா புதிய கட்சி,புதிய நடைமுறைகள் இந்தியர்களுக்கு தேவைதான். அவர்கள் நன்கு மக்கள் பணியாற்ற வாழ்த்துக்கள்.


இரு பாடல்களைப் பகிர்ந்து பதிவினை முடித்து விடுவோம்!!!
முதல் பாடலில் திடீர் பணக்காரன்,முறையற்ற வழியில் சம்பாதித்து விட்டு , கடவுள் கொடுத்ததாக ஆடிப்பாடுகிறான்.



இரண்டாவது பாடல் உண்மையான இன்பம் என்றால் என்ன எனக் காட்டுகிறது

அனைவரும் இன்பமாய் வாழ இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!!

நன்றி!!!