Showing posts with label படைப்புக் கொள்கை. Show all posts
Showing posts with label படைப்புக் கொள்கை. Show all posts

Sunday, November 10, 2013

(உண்மையான!) ஆ(நா)த்திகர்களுக்கு ஆதரவாக சில விளக்கங்கள்!!!!



வணக்கம் நண்பர்களே,
 சமீபத்தில் படித்த இந்த பதிவு நம்மை சிந்திக்க வைத்தது.

சகோ காமக்கிழத்தன் சில் கேள்விகளை ஆத்திக சகோக்களுக்கு கேட்டு இருக்கிறார்.

அந்தக் கேள்விகளின் மீதும், நாம் சரி என்று சான்றுகளின் அடிப்படையில் எண்ணும் விளக்கங்களை பதிலாகவும் இப்பதிவில் அளிக்கிறோம்.

அதற்கு முன் ஆத்திகம் என்னும் இறை நம்பிக்கை,நாத்திகம் என்னும் இறை மறுப்பு இரண்டையும் கொஞ்சம் நன்கு புரிவோம்.
ஏற்கெனவே புதிய நாத்திகம்[newatheism] என்பதன் விளக்கப்பதிவு ஒன்று இட்டு இருக்கிறோம். இப்பதிவு அதன் தொடர்ச்சியாக நாம் கருதுவதால் , விரும்பும் சகோக்கள் அத்னையும் படிக்கலாம்.

கணிதத்தில் நிகழ்த்கவு(probability) கோட்பாடு நாம் படித்து இருக்கலாம். ஒரு நாணயத்தை சுண்டினால் தலை விழலாம் அல்லது பூ விழலாம். ஒன்று விழுந்தால் இன்னொன்று நிச்சயம் விழாது. இது போன்ற நிகழ்வுகள் ஒன்றையொன்று விலக்கும் நிகழ்வுகள் என்கிறோம்.

ஷோலே படம் பார்த்த நண்பர்கள், அதில் நண்பர்கள் தர்மேந்திரா,அமிதாப் பச்சன் முடிவெடுக்க நாணயத்தை சுண்டுவதை வ்ழக்கமாக கொண்டு இருப்பர். ஒரு சமயம் நாணயம் செங்குத்தாக நின்று விடும்.[ இந்த நாணயம் சுண்டுதல்+ஷோலே பற்றி தொடர்ந்தால் நம் பதிவு திரைமணத்தில்தான் வரும் ஆகவே சிந்திக்கும் திசையை மாற்றுவோம்]

இது நிகழும் வாய்ப்பு இருப்பின் நிச்சயம் நிகழும். இதை ஏன் சொல்கிறோம் எனில் ஒன்றை ஒன்று விலக்கும் நிகழ்வுகள் என சொல்லும் நிகழ்வுகள் மிக மிக அபூர்வம். அந்த இரு(அல்லது மேற்பட்ட) நிகழ்வுகளுக்கும் பொதுவான சில விடயங்களும் உண்டு. அதில் ஆத்திகம் நாத்திகமும் அடக்கம்.

அதாவது ஒரே வரியில் சொல்ல வேண்டும் எனில்

ஆத்திகமும்,நாத்திகமும் ஒன்றை ஒன்று முற்றும் விலக்கும் நிகழ்வுகள் அல்ல!!


இதனைப் புரிய கீழ்க்கண்ட விள்க்கப் படத்தை பார்க்கவும்.



Does not claim Proof exist- (கடவுளுக்கு) நிரூபணம் உண்டு என சொல்வது இல்லை.
Does claim Proof exist- (கடவுளுக்கு) நிரூபணம் உண்டு என சொல்வது உண்டு.
Does believe in god- கட்வுள் நம்பிக்கை உண்டு.
Does not believe in god- கட்வுள் நம்பிக்கை இல்லை
Gnostic Theist -ஆன்மீக அறிவு சார் ஆத்திகம்.
[கடவுளுக்கு நிரூபணம் உண்டு என்பதை மதபுத்த‌கங்களின் மூலம்(அல்லது தனிப்பட்ட தேடலில்) கற்றுணர்ந்து, நம்பிக்கை கொண்டோர்’]

Gnostic Atheist -ஆன்மீக அறிவு சார் நாத்திகம்.
[கடவுளுக்கு நிரூபணம் இல்லை என்பதை மதபுத்த‌கங்களின் மூலம்(அல்லது தனிப்பட்ட தேடலில்) கற்றுணர்ந்து, நம்பிக்கை மறுப்போர்.]

Agnostic Theist - எதார்த்தவாத ஆத்திகர்.
கடவுளுக்கு நிரூபணம் இல்லை ஹி ஹி எதுக்கும் ஆத்திகனாக‌வே இருக்கிறேன்

Agnostic Atheist - எதார்த்தவாத நாத்திகர்.
கடவுளுக்கு நிரூபணம் இல்லை   ஆகவே  நாத்திகனாக‌வே இருக்கிறேன்.

இதில் நம்நிலை என்பது இன்னும் இடைப்ப்ட்ட நிலை போல் தோன்றுகிறது.
கடவுள் என்று எதை சொல்கிறார்கள், நிரூபணம் எனெதை சொல்கிறார்கள் என்பதும் இந்த நான்கு வகை பிரிவினருக்கு வேறுபடும் என்பதால் ஆத்திகம் நாத்திகம் என எளிதில் வரையறுப்பதின் சிக்கல் புரியும்.

இரண்டுக்கும் இடைப்பட்ட , அல்லது இரண்டும் ஒன்றான,அல்லது இரண்டுக்கும் சேராத நிலையும் உண்டு.

கணிதத்தில் இதனை ஃப்ஜ்ஜி(இது வேற Fuzzy logic ஹி ஹி!!!) லாஜிக் என்பார். நிகழ்த்கவு கோட்பாட்டின் மாற்றுக் கோட்பாடாக சிக்கலான முடிவெடுக்கும்(decision making) பிரச்சினைகளில் பயன்படுத்தப்படும்.

என்ன சகோ குழப்புகிறீர்கள்?அதெப்படி இடைநிலை இருக்க முடியும் என்போர் மத வாதிகளின் பரிணாம எதிர்ப்புக் கொள்கையான இடைநிலை பொது முன்னோரின் படிமங்களை(transitional fossils) மறுப்பவர் போன்றோரே!!!

இது நாத்திகரும், ஆத்திகரும்  ஒன்றுபடும் ஒரு வாதத்தின் எடுத்துக் காட்டு ஆகும். இப்போது அவரின் கேள்விகளுக்கு செல்வோம்.அவரின் கேள்விகள் நீல வண்ணத்தில் உள்ளன‌!!

1.//நாத்திகர்கள் வேண்டாம். கடவுள் இருக்கார்னு நம்பவும் முடியல; நம்பாம இருக்கவும் முடியலஎன்று பூசி மெழுகுகிற ரெண்டும் கெட்டான்கள்எட்டி நின்று வேடிக்கை பார்க்கலாம். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டுமேயான கேள்வி இது.//

இப்படி மிகச்சரியாக பிரிக்க முடியாது என்பதை மேலே விள்க்கி இருக்கிறோம்.. ஆகவே புதிய நாத்திகர்களாகிய நாங்களும் பதில் அளிப்போம்!!!

2.//மகான்களையும் அவதாரங்களையும் ஆன்மீகங்களையும் மகா மகா பெரியவர்களையும் துணைக்கு அழைக்காமல் உங்கள் சுய அறிவுகொண்டு பதில். சொல்லுங்கள்.//

இது சமீப‌ கால்ங்களாக தமிழர்களுக்கு நகைச்சுவை விருந்து அளிக்கும் மத விவாதங்களின் ஒப்பந்த கட்டுப்பாடு போல் உள்ளது. ஒரு விவாத வல்லுனர் போடும் க‌ட்டுப்பாடுகளாவன.

a). மத புத்தகத்தின் என்னுடைய இப்போதைய  மொழி பெயர்ப்பும்,இப்போதைய நிலைப்பாடு மட்டுமே சரி. முந்தைய விடயங்களை பேசக் கூடாது.

b). துணைப் புத்தகங்களில் நான் சொல்லும் பகுதிகள் மட்டுமே ஏற்கப்படும், என விளக்கம் மட்டுமே சரி!!!

இப்படி விவாதக் கட்டுப்பாடுகள் போடுவதில் இருந்தே அவரின் மத புத்த்கங்களின் நிலை அனைவரும் புரிய முடியும். அதே போல் சகோ காமகிழத்தன் கட்டுப்பாடுகள் போடுவதும் நாத்திக ஆத்திக ஒற்றுமையை விளக்கும் சான்றாக நாம் முன்வைக்கிறோம்.

விவாதத்தில் இரு புறக் கருத்துகளையும் வைக்க இருவருக்கும் அனைத்து வாய்ப்புகளும் கொடுக்கப்பட வேண்டும். அனைத்து கருத்துகளும் ஆவணப் படுத்தப்பட வேண்டும்.இப்படி கட்டுப்பாடுகள் விதித்துவிட்டு பதில் அளிக்காதவரை முட்டாள் என திட்டுவது சரியா?

3.//கடவுளை 100% நம்புகிறவரா நீங்கள்?//

இதையும் பதிவின் தொடக்கத்தில் விளக்கி இருக்கிறோம். 100% என்பது இயற்கையில்  கிடையாது என்பது வெப்ப இயக்கவியல் இரண்டாம் விதி(thermodynamics second law)!!!
http://en.wikipedia.org/wiki/Second_law_of_thermodynamics

4.//
நீங்கள் வேண்டிக்கொண்டதால் கடவுள் உங்களை மனிதனாகத் தோற்றுவிக்கவில்லை. அதாவது, உங்கள் சம்மதம் இல்லாமலே இவ்வுலகில் பிறந்து  இன்பதுன்பங்களை அனுபவிக்கச் சபித்திருக்கிறார் என்று நான் சொன்னால் அதை உங்களால் மறுக்க முடியாது.//

கடவுள் என்பது மனிதனின் உருவாக்கம் என்பதால் கடவுளும் மனித பண்புகள்,உணர்வுகள் கொண்டவ்ராகவே அறியப்படுகிறார்.
நாம் நமது குழந்தையை பெற்று எடுத்து வளர்க்க அதனிடம் அனுமதி பெறுவது இல்லை,பிறக்கும் அனைத்து குழந்தைகளும் இன்பமாக வாழ்வது இல்லை. இது கடவுளுக்கும் பொருந்தும் அல்லவா!!!!???

5.//ஆசை...இன்னும் வாழ வேண்டும்என்னும் பேராசைதான் காரணம். //
இதைத்தான் பரிணாம அறிவியலும் சொல்கிறது வாழ்வதற்கான போட்டியில், சூழலுக்கு ஏற்ப தலைமுறைரீதியாக  தகவமைக்கும் உயிர்கள் வாழ ,பிற அழிய வாழ்வு தொடர்கிறது.

நானும் என் தந்தையும் ஒன்றே என்கிறார் விவேகானந்தர். நான் இறந்தாலும் என் சந்ததி மூலம் வாழ்கிறேன் என்னும் அவரது கருத்து உயிர்களுக்கு இறப்பில்லை என்பதை சொல்வதாக நான் கருதுகிறேன்.

இன்பம் துன்பம் இரண்டும் சார்பியல் நோக்கு உடையவை. நம்க்கு முன் வாழ்ந்த 99% உயிர்கள் மறைந்துவிட்டன. ஹோமோ சேஃபியன்களாககிய நாம் தோன்றி 2 இலட்சம் ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன. பூமியின் 350 கோடி உயிரின வரலாற்றில் இது எத்த்னை சத வீதம்?இதில் ஒரு மனிதனின் பிறப்பு வாழ்க்கை,இறப்பு என்பது என்ன விளைவு? பிரப்ஞ்சம் மனிதனுக்காவே படைக்கப்பட்டது என்னும் பார்வை கொண்ட நாத்திகரின் கேள்விதான் இது. மீண்டும் நாத்திகர் ஆத்திகர் ஒற்றுமை!!!

பிறப்பு,இறப்பு என்பதும் பரிணாம நிகழ்வுகளே!!!!

கடவுள் என் ஒருவர் இருப்பார் என்றால் அவரும் பரிணாம வளர்ச்சி அடைவார் என்றே கூறுகிறோம். மத புத்த்கங்களின் காலரீதியான‌  மொழி பெயர்ப்புகள், விள்க்கங்கள் இதையே உறுதிப் படுத்துகின்றன்.

6// ஆதியும் அந்தமும் இல்லாதவர்; என்றும் இருப்பவர். எந்தவொரு கெடுதியும் இவரை அணுகாது; அணுகவும் முடியாது, அணு முதல் அண்டம்வரை அனைத்தையும் ஆள்பவர் இவரே என்பதால்.

ஆனால்,
மானுடப் பதர்களான நமக்கு மட்டும் அற்ப ஆயுள். அதிலும் அடுக்கடுக்கான துன்பங்களின் தாக்குதல். இனி என்ன ஆவோம் என்று தொடர்ந்து சிந்திக்கவே இடம் தராத கொடூரச் சாவு.
இப்படிப்பட்ட பரிதாபத்திற்குரிய ஜீவன்களாகக் கடவுள் ஏன் நம்மைப் படைக்க வேண்டும்?//

நாத்திகர்கள் அறியா விடயத்தை ஆத்திகர்கள் சொல்ல வேண்டும்மத புத்த்கம்& மகான் சொல் சாராமல் சொல்ல வேண்டும் என்பது ஒரு நீச்சல் வீரனின் கை கால்களைக் கட்டி கல்லோடு சேர்த்து கடலில் தள்ளி நீச்சல் அடி என்பது போல் ஆகும்.

நமக்கு அறிவியல் ஏற்படுத்தி உள்ள மாதிரிகள் சார்ந்த கணிப்புகளால்[model based predictions] பிரபஞ்சம் 1370 கோடி ஆண்டுகள் முன் பெரு விரிவாக்கத்தினால் உருவானது என் அறிகிறோம்.

இதனை ஒளிப்படிமங்கள் மூலம் மாதிரி வரையறுத்த‌னர். அதற்கு முன்னால் என்றால் சான்றுகள் இபோது இல்லை. ஒருவேளை கிடைத்தால் அதுவும் விளக்கப்படலாம், அப்போது அதற்கு முன்னால் என்ற கேள்வியும் வரும்.

அறியா விடயங்கள் அறிவியலில் இருப்பது போல் ஆத்திகத்திலும் இருப்பதில் தவறில்லை!!

முதல் செல் எப்படி வந்தது? பெரு விரிவாக்கம் முன்பு என்ன நடந்தது? இதற்கு நாத்திகர்கள் விடையளிக்க முடியாமையால் கடவுள் உண்டு என சொல்லும் ஆத்திக பெருமான்களை கண்டிருக்கிறோம் அல்லவா?

நாத்திக சகோவின் கேள்வியும் அப்படித்தான் ஹி ஹி!

இதுவும் நாத்திக ஆத்திக ஒற்றுமையே!! 

7.//
தனக்கொரு நீதி; தன்னால் படைக்கப்படும் உயிர்களுக்கு ஒரு நீதி என்றிருக்கும் இந்த வஞ்சகரையா நீங்கள் இத்தனை காலமும் வழிபட்டீர்கள்? இனியும் வழிபடப் போகிறீர்கள்?//

வணங்குவது என்ப்து பலன் கிடைக்கும் ,நினைத்து நடக்கும் என்பதற்கு மட்டும் அல்ல. இது சமூக,குடும்ப  ஒற்றுமை சார் நிகழ்வு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.இதில் மனோ தத்துவரீதியான காரணங்களூம் உண்டு.

மதம் என்பதை தந்தை மீதான ஈர்ப்பு என்கிறார் சிக்மண்ட் ஃப்ராய்ட்

மதம்,வழிபாடு என்பது ஒருவரின் அடையாளம் ஆகி விட்டது.ஆகவே மதத்தில் என்ன் குறை இருந்தாலும் அதனை வேறுவழியில்லவிட்டால் நீக்கி,மாற்றுக் கருத்து சொல்லியே மதத்தினைக் காப்பாற்றுகிறார்கள்.

தமிழகத்தில் பெரியார் மதிக்கப் பட்டாலும் அவரின் நாத்திகம் ஏன் இபோதைய தலைமுறையிடம் எடுபடவில்லை என்றால் அவரின் இயக்க நாத்திகம் இந்து மத மறுப்பு இயக்க்மாகவே இருந்தது. திராவிட இயக்கத்தின் பிரச்சாரங்களை ஆபிரஹாமிய மத பிரச்சாரகர்கள் கையில் எடுப்பது எதிர்வினைகளை மட்டுமே ஏற்படுத்தி இந்து மதம் புத்துணர்ச்சி பெற்றது.
ஆகவே மதம் ,கடவுள் ஆதாரம் உள்ளதா என்பதை விட இன்னொரு மதத்தினரின் பிரச்சாரம் மாற்று மதத்திற்கும் நிலைப்பட உதவுகிறது.

அவனை நிறுத்த சொல்லு, நான் நிறுத்துகிறேன் என்பதுதான்!!!

ஆகவே இப்படி கேள்வி கேட்டு வழிபாடுகளைத் தவிர்க்க முடியாது. ஆகவே வழிபாட்டில் சமத்துவம் இருக்க வேண்டும்.அனைவரும் பிறப்பு சாராமல் மத குரு ஆகவேண்டும் போன்றவற்றையும், மதம் சார் பிரச்சாரகர்களின் தந்திர உத்திகளையும், மதம் ,சாதி சார் அரசியலின் அபாயத்தினையும் அம்பலப் படுத்துவதே சால சிறந்தது.அறிவியல் சார்,சான்றுகளின் அடிப்படையிலான சிந்தனையை வளர்ப்பதே முக்கியம்.

இயற்கையின் பல விந்தை முடிச்சுகளுக்கு பதில் தேடுகிறோம்.இத்தேடல் ஒரு தொடர்கதை என்பதால் விடையில்லா கேள்விகள் எப்போதும் இருக்கும்.


இப்படி விடையில்லாக் கேள்விகளின் குழப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் ஆத்திகர்,நாத்திகர் இருவரின் செயலும் தவறு என்றே கூறுகிறோம்.

மதம் மறுக்க மத புத்தகம் படியுங்கள்,அதன் மீதான மாற்று விமர்சன‌ங்களையும் படியுங்கள்!!

ஐன்ஸ்டினின் கடவுளின் பக்தர்கள் அறிவியல் படியுங்கள், அதனை  னைவருக்கும் பகிருங்கள்!!

http://en.wikipedia.org/wiki/Religious_views_of_Albert_Einstein

மதம் சார் ஆட்சி,சட்டம் அனைவரும் எதிர்ப்போம்!!!


கேள்வி நல்லதுதான்,ஆயினும்( பல மாற்றுக் கருத்துகள் உள்ளடக்கிய)  பல‌ பதில்களையே எதிர்நோக்குகிறோம்!!!அதில் அதிகம் பொருந்துவதை மட்டுமே இப்போது ஏற்க முடியும்!!என்பதே சரியான நிலைப்பாடு!!

நன்றி!!!

Monday, July 15, 2013

ஆன்மா என்றால் என்ன 1? பரிணாமப் பார்வை!



வணக்கம் நண்பர்களே,

அனைத்து மதங்களும் மனிதர்களால்,மனிதர்களுக்காக அரசியல் பொருளாதர ஆதாயங்களுக்காக தோற்றுவிக்கப்பட்டு,இன்றுவரை  மாறும் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப மாற்றப்பட்டு மக்கள் குழுக்களை கட்டுப் படுத்துவதில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை நாம் தொடர்ந்து பதிவுகளில் வலியுறுத்தி வருகிறோம்.

மதங்களில் பொதுவாக இரண்டு வகை முதல் வகை கடவுள் மத புத்தகம் என்னும் செய்தியை மட்டும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்கள் மூலம் வழங்கி விட்டு ஒதுங்கி விடுவார். அப்புத்தகத்தின் மேன்மையை நிரூபிக்க அடியார்கள் சாம,தான,பேத தண்ட வழிகளை கடைப்பிடித்து பதுகாப்பார் என்பதே மனித சமூகத்தின் 99% வரலாறு.

இரண்டாம் வகையில் மனிதன் ,இதர உயிரிகள் உள்ளிட்ட பிரபஞ்சமே கடவுள்,அப்படி மனிதன் தன்னை இயற்கையின் ஒரு துளி என உணர யோகம் போன்ற உடல்&மனப் பயிற்சிகளை செய்தால் இறைநிலை அடையலாம் என்பது இரண்டாம் வகை.

ஒவ்வொரு மதப் பிரிவிலும் இந்த இருவகைப் பிரிவுகள் உண்டு.இதில் ஆட்சி,அதிகாரம் கைப்பற்ற எதுவும் செய்யும் முதல் பிரிவினர் மிக மிக ஆபத்தானவர்கள் என்றால்,

இரண்டாம் பிரிவினர் தனிப்பட்ட மனிதர்களை சிலர் யோகம் கற்பிக்கிறேன், இறைநிலை அடைய கற்பிக்கிறேன் என்னும் போர்வையில் அவர்களின் வசப் படுத்தும் வாய்ப்பு அதிகம்.

இருவரும் பொய்கள் சொல்கிறார் என்றாலும் முதல் பிரிவினரின் புரட்டுகள் எளிதில் அம்பலமாகிவிடும். [சமீப காலங்களில் இரு கருத்தாக்கங்களையும் குழப்பி அடிப்பதையே மதவியாபாரிகள் செவ்வனே செய்து வருகிறார்கள்].

உலகின் வேதங்கள் என சொல்லப்படுபவை எல்லாமே கடந்த 7000 ஆண்டுகளில் மட்டுமே உருவானவை. மனிதன்[ ஹோமோ சேஃபியன்] 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பரிணமித்து ஆப்பிரிகாவில் பரிணமித்து சுமார் 70,000 வருடங்கள் முன்பு அங்கிருந்து உலகின் பல பகுதிகளுக்கும் பரவினான்.

முதலில் வேட்டையாடியும்,இயற்கையாக கிடைக்கும் காய்கனிகளை மட்டுமே உண்டு வாழ்ந்தவன் ஆற்றங்கரைகளில் ஒரே இடத்தில் 20,000 வருடங்கள் முன்பு வசிக்க முற்பட்டான் அப்போது தோன்றியவையே திருமணம்,அரசு,சொத்துரிமை போன்றவை ஆகும். இவை எல்லாம் பல்கலைக் கழக பாடங்களில் கற்பிக்கப்படும் சான்றுகளின் அடிப்படையிலான வரலாற்று விவரங்கள்.

இதில் ஆள்பவனின் உரிமையை  நிலை நிறுத்த எழுதப் பட்டவையே இந்த மதபுத்த்கங்கள். இதற்கு அரசனின் அல்லக்கைகளான மத குருக்கள் உதவினர். இதற்காக மதகுருக்களுக்கு அரசர்கள் பொருள் ,உதவிகள் வாரி வழங்கினர்.

அரசனின் எந்த ஒரு செயலுக்கும் கடவுள் அனுமதி கொடுப்பார் என்பதால் மத புத்த்கங்களில் இன்னொரு குழுவை அடிமைப் படுத்தல், அக்குழு பெண்களை சிறை எடுத்தல், கொள்ளை அடித்தல்,இன அழிப்பு,நில ஆக்கிரமிப்பு என் எதுவும் நியாயப் படுத்தபடும்.

கத்தோலிக்க்க மத தலைவர் போப் சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை விரல் அசைந்தால் சாம்ராஜ்யம் அழியும்& உருவாகும்..

அனைத்து மனிதர்களும் சமம்,உழைப்பவர்களின் உரிமைகள்,அடிமைமுறை ஒழிப்பு போன்றவை கடந்த 100 ஆண்டுகளில் தோன்றிய கருத்தாக்க்ங்களே. இவை இன்னும் ஏட்டளவில் மட்டுமே ஏற்கப்பட்டன முழுதும் அமலுக்கு வரவில்லை என்பதும் கசப்பான உண்மை ஆகும்.

மனிதன் என்பவன் பரிணாம வளர்ச்சி அடைந்த ஒருவகைக் ஆப்பிரிக்க குரங்கினம்[ape] என்பது அறிவியலில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து என்ற சூழலில், அறிவியல் என்பதே சான்றுகளின் அடிப்படையில் அளிக்கப்படும் பொருந்தும் விளக்கம் என்னும் போது மனிதனுக்கு வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் விடை தெரியா கேள்விகள் இருப்பது இயல்பே.

நேற்றைய கேள்விகளுக்கு இன்று விடை காண்பதும்,அந்த விடைகளில் இருந்து பல கேள்விகள் முகிழ்ப்பதும்,அதற்கு விடை தேடல் தொடர்வதும் மனித சமூக முன்னேற்றத்தின் வரலாறு.

இந்தக் கண்ணோட்டத்தில் மத பிரசாரகர்கள் எழுதும் பதிவுகளைப் படித்தால் மட்டுமே சரியாக அலச முடியும்.

சரி மத வியாபாரப் பதிவுகள் என்ன அதிக பட்சம் இப்போது சொல்ல முடியும்?

விடை தெரியா கேள்விகளுக்கு வித்த்கனே காரணம் . அந்த வித்தகன் பற்றி எதுவும் கேட்க கூடாது.ஏன் எனில் அறிந்து கொள்ள முடியாது ஹி ஹி!!

மனிதர் உணர  கடவுள் மனிதம் சார்ந்தல்ல,அதையும் தாண்டி குழப்பமானது குழப்பமானது!!![இதை குணா கமல் ஹாசன் போல் படிக்கோனும்] இதை மட்டும் சொன்னால் சரி போனால் போகிறது என விட்டு விடலாம்.ஆனாலும் இப்படி நான் உனக்காக சாமி கும்பிட்டால் நீ காப்பாற்றப் படுவாய் ,உன் வருமானத்தில் (பத்தில் ஒரு??) பங்கு எனக்கு கொடு,அது கடவுளுக்கு கொடுப்பது போல் என கல்லா கட்டி உழைக்கும் ஏழை மக்களை,நடுத்தர வர்க்கத்தை சுரண்டுவதுதான் நமக்கு பிரச்சினை.நீ காசு கொடு.நான் உனக்கு ஆன்மீகம் சொல்கிறேன் என் நெல்,உமிக் கதை சொல்வதை பாமர மக்கள் புரியாததினால் இவர்களின் வங்கியில் பணம் சேர்கிறது.
இப்போது இப்பதிவைப் படிக்க வேண்டுகிறேன்!!!


என்ன சகோ நன்றாகத்தானே எழுதி இருக்கிறார் என அப்பாவியாக நீங்கள் கேட்பதால் விள்க்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.

மத பிரச்சாரம் பலவகைப்படும். அதில் சகோ வழிப்போக்கன் ஒருவகை புதிய கிறித்துவ கோட்பாட்டை முன்வைத்து பரப்புரை செய்கிறார் என்பது அவரது பதிவுகளைத் தொடர்ந்து படிப்போருக்கு எளிதில் புரியும்.

அதாவது கிறித்துவம் என்பதே உண்மையான  சை,வைணவ சமயம் என்பதும்,அதுவே ஆதி தமிழர்களின் மதம் என்றும்,(வழக்கம் போல் திராவிட பிரச்சார பாணியில்) பார்ப்பனர்கள் சைவ,வைணவ மதத்தை திரித்து,தங்களின் வைதீக சனாதன தர்ம மதம் எனப்படும் இந்து மதத்தை தமிழர்களின் தலையில் கட்டிவிடார்கள் என்பதே சகோ .போக்கனின் பிரச்சாரம் ஆகும்.[சிவன்தான் கர்த்தர்(பிதா),முருகன்தான் இயேசு(குமாரன்) என புல்லரிக்கும் கதைகள் உண்டு]

அதுவும் இயேசுவின் சீடர் தோமா மூலம் இம்மதங்கள்[சை,வைணவ] தோன்றின என்பதை என்ன சொல்வது??? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

இப்பதிவில் சகோ வழிப் போக்கன் எழுதுவது எல்லாம் திரு தெய்வநாயகம் என்வரின் கருத்துகளே!! .அவரின் வலைப்பதிவு!!! திருக்குறள் கிறித்தவ நுல் என்கிறார்!!!

இதற்கெல்லாம் ஆதாரம் உண்டா என்றால் ஹி ஹி அவரது பதிவுகளையே படித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.
 ***

சரி அவர் ஆன்மா பற்றி தொடர் பதிவு எழுது முயற்சிப்பதால்,நாமும் தொடர்ந்து மறுப்பு எழுத முடிவு செய்துவிட்டோம்.

ஆன்மீக வாதிகள் அறிவியல் என்பது இயற்கையின் நிகழ்வுகளை சான்றுகளுக்கு அதிகம்  பொருந்தும் இயற்கைக்கு உடபட்ட விளக்கம் மட்டுமே என்பதை உணரவோ,புரியவோ முயற்சிப்பது இல்லை.அறிவியல் என்றால் என்ன என்பதற்கு பதில் கொடுக்கவே மாட்டார்கள். திருவிளையாடல் தருமி பாணியில் அவர்களுக்கு கேட்க மட்டும்தான் தெரியும்!!! ஹி ஹி!! 

ஆகவே அளவிட முடியும் விடயங்களை வைத்து,பொருந்தும் விளக்கம் அளிப்பதும்,அது ஒரு கொள்கை ஆவதும் கொள்கையைப் பயன்படுத்தி அதன் மீது சில கணிப்புகள் செய்வதும், பிறகு கணிப்புகளும் அளவீடுகளால் நிரூபிக்கப் பட்டால் அக்கொள்கை ஏற்கப்படுவதும், அள்வீடுகள்,கணிப்பு வித்தியாசம் குறைவு எனில் கொள்கையில் மாறுதல் செய்யப்படுவதும்,வித்தியாசம் மிக அதிகம் எனில் மாற்றுக் கொள்கை ஏற்கபடுவதுமே அறிவியலின் வரலாறு.

மனிதனுக்கு தேடல் உள்ளவரை,இயற்கையின் மர்ம முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்க முனைகிறான். இதில் ஒரு போதும் முடிவு எட்டப்படும் என எந்த அறிவியலாளாரும் ஏற்பது இல்லை.

மனிதன் தன்,சுற்றுப் புறத்தை அதிகம் உணரும் ஒரு விலங்கு என்னும் வகையில்,அவனுடைய தேடல் தொடர்து கொண்டே இருக்கும் என்பதில் நமக்கு ஐயம் இல்லை.

இதுவே அறிவியலின் இயற்கை சார் நிலைப்பாடு ஆகும்!!

சகோ வழிப் போக்கனின் முதல் கேள்வி இதுதான்!!!
// உலகம் தோன்றியது எவ்வாறு? மனிதன் தோன்றியது எவ்வாறு? உயிர் என்றால் என்ன?

இக்கேள்விகளை ஒரு மனிதர் கேட்பாராயினில் அவருக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை அறிவியல் பேசுவோருக்கும் இருக்கின்றது...ஆன்மிகம் பேசுவோருக்கும் இருக்கின்றது. அக்கடமையை அவர்கள் தட்டிக் கழிக்க முடியாது. நிச்சயம் பதில் கூறியே ஆக வேண்டும்.

இந்நிலையில் அவர்கள் கூறும் விடையினைக் கண்டோம் என்றால் ஆன்மிகம் பேசுவோர் இறைவன் உலகைப் படைத்தான் என்றும் அறிவியல் பேசுவோர் இறைவன் படைக்கவில்லை மாறாக உலகம் 'பெரு வெடிப்பு' முதலிய சில காரணியால் இயல்பாகவே உருவாயிற்று என்றும் கருதுவது புலனாகின்றது. இக்கருத்துக்களிடையே மாபெரும் சண்டைகளும் நீண்டக் காலமாக முடியாது ஓடிக் கொண்டு தான் இருக்கின்றன.
//

அறிவியல் இயற்கையை அறிய முயல்கிறது,அதன் பரிணாம இயக்கத்தை அறிந்து அதன் மூலம் இயற்கையின் கடந்த காலத்தை சான்றுகள் மூலம் அளவிட முடிகிறது. அப்படிக் கிடைத்த ஒளிப்படிம சான்றுகள் மூலம் பிரப்ஞ்சம் விரிவடைகிறது, அதுவும் ஒரு புள்ளியில் இருந்து 1360 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தொடர்ந்து விரிவடைந்து கொண்டு இருக்கலாம் என்ற இப்போதைய பேரண்ட தோற்றக் கொள்கையான பெருவிரிவாக்க கொள்கை விளக்குகிறது.

அதாவது மாற்றுக் கொள்கைகளை விட பெருவிரிவாக்க கொள்கை மூலம் செய்யப்படும் கணிப்புகளுக்கு அளவீட்டு சான்றுகள் பொருந்துகின்றன.ஸ்ட்ரிங் தியரி மூலம் மாற்று விளக்கம் வரலாம் என எதிர் நோக்கப் படுகிறது.

அதே போல் பேரண்டத்தில் உள்ள பல பில்லியன் விண்மீன் திரட்சிகளில் ஒன்றால் நம்து விண்மீன் திரட்சி பால்வீதி மண்டலத்தில் உள்ள பல பில்லியன் விண்மீன்களீல் ஒன்றான நமது சூரியக் குடும்பத்தின் மூன்றாம் கோளான பூமியில் சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரு செல் உயிரி இருந்ததாக கண்டறியப்பட்டது. பிறகு 50 கோடி ஆண்டுகள் முன்பு நீர்வாழ் பல செல் உயிரிகள்[கேம்பிரியன்] கண்டறியப்பட்டன. அதன் பிற்கு கிடைத்த படிமங்களின் வரிசைப்படி பூமியில் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு உயிரிகள் வாழ்ந்த்மையும், ஒரு கால கட்ட உயிரிகளுக்கும்,அடுத்த காலகட்ட உயிரிகளுக்கும் அதிக ஒற்றுமை,குறைந்த உருமாற்றம் இருந்தமையும் சான்றுகளால் அறியப்பட்டது.

நிகழ்காலத்திலும் நுண்ணுயிரிகளில் ஏற்படும் பரிணாம மாற்றம் நன்கு ஆவணப் படுத்தப்பட்ட ஒன்று. மதவாதம் பேசும் நாடான சவுதி மெர்ஸ் வைரஸின் பரிணாம வள்ர்ச்சிக்கு அஞ்சுவது கண்கூடாகத் தெரியும் வேளையில்,மதவாதிகளின் கடவுளின் சக்திக்கு மீது இருக்கும் நம்பிக்கை என்பது என்ன எனப் புரியும்.

Hajj warnings amid Saudi MERS virus outbreak

ஆகவே பெருவிரிவாக்கம் என்பது பேரண்ட தோற்றம் என்பதும்,புதிய உயிரிகள் உருவாதல் பரிணாம வளர்ச்சியால் என்பன அறிவியலால் சான்றுகள் அடிப்படையில் ஏற்கப்பட்ட விடயங்கள்.

சரி பெருவிரிவாக்கம் முன்பு என்ன நடந்தது? பரிணாமத்தில் முதல் உயிர் எப்படி தோன்றியது என்பவை இதுவரை விடை தெரியா கேள்விகளே  ஏன் எனில் சான்றுகள் இல்லை.

ஒருவேளை சான்றுகள் கிடைத்தால் ,அவ்ற்றின் விளக்கமாக பதில் கிடைக்கும்.அறிவியல் என்பது கடவுள் என் மண்டைக்குள் செய்தியை எனக்கு மட்டுமே கேட்கும் படி அனுப்புகிறார்,அதைக் கேட்டு பயன் பெறுக என்பது போல் அல்ல.
"என் உச்சி மண்டையில் கிர்ருங்குதுஎன்ற பாடல் ஆன்மீகவாதிகளுக்கு மிகவும் பிடிக்கும் என நம்பலாம்.

ஆகவே அறிவியல் சான்றுகள் அடிப்படையில் மட்டுமே விளக்கம்,பதில் அளிக்கும் என்பதால் ,பெரு விரிவாக்கம் முன்பு,முதல் உயிரின் தோற்றம் எப்படி என்பதை இப்போதைய விடை தெரியா கேள்வி என்ற   உண்மையை ஒத்துக் கொள்வதில் தயக்கம் காட்டுவது இல்லை.

ஆனால் மதப் புத்தக்ம் மொழியியல்,வலாற்று சான்றுகள் அடிப்படையில் பொய்யாகி விடும் என்பது மதத்தை நிராகரிக்க போதுமானது.ஆனால் நான் அறிந்தவரை எந்த மதவாதியும் இது பற்றி விவாதிக்க விரும்புவது இல்லை.

பைபிளில் சொல்லப்படும்சாலமன் அரசனுக்கு முந்தைய [பைபிளின்] கதைகளுக்கு சமகால குறிப்பு ஆதாரம் இல்லை என்பதும்,இஸ்ரேல் ஒரு பேரரசாக இருந்தமைக்கும் ஆதாரம் இல்லை என்றே வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.அதுவும் இயேசு(ஈசா) என்பவருக்கும் வரலாற்றில் சான்றுகள் இல்லை.
சகோ வழிப் போக்கனின் இரண்டாம் கேள்வி இதுதான்!!!
/ ஆனால் மனிதனை ஆறாம் அறிவினை உடையவனாக கூறி இருக்கின்றனர். ஆனால் அந்த அறிவிற்கு உரிய உறுப்பு எது?//

இதற்கு பதில் என்னவென்றால் மனிதனின் மூளை.மனிதனின் மூளை வளர்ச்சி சார்ந்தே அவனின் அறிவு வளர்ச்சி ஏற்பட்டது.அதன் பிறகே,உலக முழுதும் பரவல் , விவசாயம்,நாகரிகம்,மதம் அனைத்தும் ஏற்பட்டது.

மூளை வளர்ச்சி குறைவான மனிதர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை அறிந்தால் புரிந்துவிடும்.

பிற உயிரிகளுக்கும் மூளை இருக்கிறதே அவை ஏன் அப்படி என்றால்  மூளை இருந்தால் மட்டும் போதுமா சிந்திக்க மூளை இணைப்புகள் வேண்டாமா, பாருங்கள் மூளையின் தானியியங்கியாக இயங்கும் நியுரான் எனப்படும் இணைப்புகள் மனிதனுக்கு 85 பில்லியன் ஆகும்.பிற விலங்குகளுக்கும் பாருங்கள்.

மூளையின் உள்ள நியுரான்கள் மட்டும் அல்ல ,வளரும் சூழல்,கற்கும் கல்வி என்பதும் ஒருவரின் அறிவுத்திறனை நிர்ணயிக்கும் காரணி ஆகும். பரிணாம அறிவியலைப் பொறுத்தவரை மனிதன் பிற விலங்குகளை விட உயர்ந்த்வன் அல்ல. அவனுக்கு இயற்கையை உணரும், மாற்றும்(அதாவது அழிக்கும்) திறன் இருப்பது அவனுக்கு கிடைத்த வரமா இல்லை,இயற்கை செய்த தவறா என்பது நல்ல விவாதம் செய்ய ஏற்ற ஒன்று.

கடந்த சில ஆயிரம் ஆண்டுகளில் பூமியை அழிவுப் பாதை நோக்கி செலுத்துவதில் மனிதனுக்கு இருக்கும் பங்கினை எவரேனும் மறுக்க முடியுமா?
அணுக் கழிவுகள் பல மில்லியன் ஆண்டுகள் தொடர்ந்து கதிர்வீச்சு தரும்,அதனை  பாது காத்தல் மிகவும் செலவு பிடிக்கும் விடயம் என்றால் காதில் வாங்காமல் இந்தியா வல்லரசு எனக் கூவும் மனிதர்கள் அறிவு மிக்கவர்களா???

கீழை நாடுகள் மேலை நாடுகளின் பரிசோதனைக் குப்பைக் களம் ஆகிறது என்றால் செவி கொடுக்காமல் இருக்கும் மனிதன் அறிவு மிக்கவனா!!!

மக்கள் தொகை அதிகரிப்பு பேரழிவைத் தரும் என்றாலும் காதில் வாங்காமல் கடமையே கண்ணாக இருக்கும் மனிதன் அறிவு மிக்கவனா???

இயற்கையை பிற உயிரிகள் பாழாக்காமல் மேம்படுத்தும் வகையில் வாழும் போது அறிவு மிகுந்ததாக கூறுபவன் அப்படி இல்லையே!!

எறும்புகள் ,தேனீக்க்ள் உழைத்து பகுத்துண்டு ,பகிர்ந்து வாழும் போது சுயநலம் பிடித்து தனக்கு தனக்கு என   ஆக்கிரமிக்கும் மனித்னா அறிவு மிக்கவன்??

இயற்கையும் படைக்கும்,காக்கும்,அழிக்கும் ஆனால் பாரபட்சம் அற்றது.
அப்படி இயற்கையின் சுய அழிவு வேலைகளுள் ஒன்றுதான் மனிதனின் பரிணமிப்பு!!!
மனிதன் உயர்ந்தவன் என்னும் மதவியாபாரிகளின் வியாக்கியான விளக்கங்களுக்கு தொடர்ந்து மறுப்பு தருவோம்.
நம் மறுப்புகள் சுருக்கமாக‌

1. மனிதன் பிற உயிரிகளை விட எந்த வகையிலும் சிறந்தவன் அல்ல.ஆன்மா என்பது கிடையாது.பிற உயிரிகளை விட‌ இயற்கையை அழிப்பதில் மனிதன் முக்கிய பங்கு வகிக்கிறான்.

2.மதபுத்தங்களுக்கு மொழியியல்,வரலாற்று சான்றுகள் கிடையாது.
இதைப் பற்றி விவாதிக்க ஆன்மீக வியாபாரிகளுக்கு தயக்கம் உண்டு.

3. அறிவியலில் சான்றுகள் இல்லா விடயங்களை விடை தெரியா கேள்விகள் என ஒத்துக் கொள்வதில் அறிவியலாளர்களுக்கு தயக்கம் இல்லை.

ஆகவே சான்றுகளே இல்லா,[அல்லது எதிரான சான்றுகள் உடைய] மத புத்தகங்களில், அறிவியலின் விடை தெரியா கேள்விகளை அதாவது சான்று தேடப்படும் விடயங்களைத் தேடுவது சரியா???

சிந்திக்க மாட்டீர்களா???

இப்பதிவில் குறிப்பிட்ட விளக்கம் மீதான விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன.



நன்றி!!!