டெல்லி
துன்பியல் சம்பவத்திற்கு பலரும் பல தீர்வு சொல்லி
வருகையில் தமிழ்மணத்தில் ஒரு வித்தியாச பதிவு.அய்யா மாணிக்கம்[ சாதிப்
பெயர் தவிர்ப்போம்] எழுதிய
பதிவில் முட்டை மந்திரம் போட்டு
கெட்ட சிந்தனை உள்ளவரை நல்லவன் ஆக்க
முடியும் என கூறி இருக்கிறார்.
சரி
பதிவில் என்ன கூறுகிறார்?
ஒரு
மாமானரின் (முறை தவறிய) இன்ப
வெறிக்கு தப்ப முயன்ற மருமகள்
ஒரு மந்திரவாதியிடம் செல்ல அவர் சொன்ன
தீர்வானது முட்டை மந்திரம்.
//அப்பெண் சொல்வது அனைத்தையும் சரி பார்த்துக் கொண்டு, மூன்றே மூன்று முட்டைகள் வாங்கி வரும்படிச் சொல்லி இருக்கின்றார். நண்பர் கொடுத்த முட்டைகளுடன் வீட்டுக்குச் சென்ற அப்பெண் அவ் முட்டைகளை வீட்டினைச் சுற்றி புதைத்து வைத்திருக்கிறார்.
தினமும் நச்சரித்த மாமனார் பக்கத்து தோட்டத்தில் பணியாளாகப் போய்ச் சேர்ந்து அங்கேயே இருக்க ஆரம்பித்திருக்கிறார். சாப்பாடு கொண்டு போய் கொடுத்தால் சாப்பிட்டுக் கொள்வார். புத்தம் புதிய வீட்டினைக் கட்டி அதில் இருக்காமல் புழுதிக்குள் தான் படுத்து இருப்பார். இரண்டு மூன்று வருடங்கள் ஆனதும் மருமகளிடம் வந்து எனக்கோ வயதாகி விட்டது, இனி என் பெயரில் சொத்துக்களை வைத்துக் கொண்டு என்ன ஆகப் போகின்றது என்றுச் சொல்லி அனைத்துச் சொத்துக்களையும் எழுதி வைத்து விட்டு வேலைக்குச் சென்று விட்டார். இப்போது அப்பெண் அக்குடும்பத்தை நிர்வகித்து வருகின்றார்.
மருமகளின் மீது ஆசை வைத்து துன்புறுத்திய மாமனார் மனது மாறியது. எப்படி இது சாத்தியம்?
இது ஒரு சயின்ஸ் என்பார் எனது நண்பர். ஜாதகம் ஒரு சயின்ஸ் என்றால் இதுவும் ஒரு சயின்ஸ். சித்துக்களை நடத்திய எத்தனையோ மகான்கள் வாழ்ந்த பூமி இது. அம்மகான்களின் வழி நின்று வித்தியாசமான பிரச்சினைகளால் துன்பப்படுவோரை கைதூக்கி விடுகிறார். பில்லி, சூனியம், வசியத்தால் பாதிக்கப்பட்டோர், காரியத் தடைகள் நிரம்பியோர், நோய்களால் பாதிக்கப்பட்டோர், கர்ம வினைகளால் துன்பத்தில் உழல்வோர் ஆகியோருக்கு அவர் உதவி செய்கிறார். அதுவும் அவரின் இறைவன் விரும்பினால் தான் அதைச் செய்கிறார். இவ்வுதவிகளை விரும்புவோர் அடியேனைத் தொடர்பு கொண்டு தங்களைப் பற்றிய அறிமுகத்துடன்,
பிரச்சினைகளையும் சொன்னால் அவரைத் தொடர்பு கொள்ளும் வழிகளைச் சொல்வேன். பயன்படுத்திக் கொள்ளவும்.
//
இங்கே
இன்ப வெறி மாமாவிடம் இருந்து
சொத்தையும் வாங்கி கொடுத்தார் மந்திரவாதி
என்பதே முக்கியம்!!.ஹி ஹி
நமக்கு இந்த காலத்திலும் ஒரு செயல்
செய்து அதன் மூலம் ஒரு மனிதனின்
எண்ணங்களை மாற்ற முடியும்
என்பதை நம்புபவர்கள்
இருப்பது வியப்பாக
உள்ளது.
இப்படி முட்டை மந்திரம் போட்டு
அனைவரையும் நல்லவர் ஆக்கிவிட்டால்
நாட்டில் பிரச்சினையே இருக்காதே!!.
நல்லவர்
என்றால், பிற மனிதர்களுக்கு தீங்கு
விளைவிக்காமல்
வாழ்பவர்
என்பதே நம் வரையறுப்பு.
இயற்கைக்கு
மேம்பட்ட செயலை இதுவரை யாரும்
செய்தது இல்லை,செய்யவும் முடியாது.
பொய்
அறியும் இயந்திரம் கூட திடமான மனம்
கொண்ட குற்றவாளியிடம் பயன்
அற்று போகும்.
Lie detection, also referred to as deception detection, uses
questioning techniques along with technology that records physiological
functions to ascertain truth and falsehood in response. It is commonly used by
law enforcement and has historically been an inexact science. There are a wide
variety of technologies available for this purpose.[1] The most common and long used measure
is the polygraph, which is considered by the U. S. National Academy of Sciences
to be unreliable
நாம்
திருப்பி திருப்பி சொல்கிறோம், நண்பர்களே,சகோதர ,சகோதரிகளே
இப்படி இன்னொருவரின்
மனதை
மாற்றுகிறேன்,கட்டுப் படுத்துகிறேன் என இப்படி
சாமியார்களின் பின் சென்று
பொருள்,மன அமைதி
இழக்காதீர்கள் !!!
ஆகவே எச்ச்ரிக்கையாக இருக்க
வேண்டுகிறோம்.
தமிழ்மணம்
இப்படி மந்திர
தந்திர விளம்பரம்
அனுமதிப்பது வியப்பாக இருக்கிறது!!
மாணிக்கம் அய்யாவின் குரு மனிதனின் மனதை மட்டுமே வளைப்பார்(?),இங்கெ நாத்திகர் மைக்கேல் ஷெர்மர் கண் எதிரே ஸ்பூனை வளைத்துக் காட்டுகிறார். கண்டு மகிழுங்கள்!!
http://en.wikipedia.org/wiki/Spoon_bending
How to Bend a Spoon with Your Mind மாணிக்கம் அய்யாவின் குரு மனிதனின் மனதை மட்டுமே வளைப்பார்(?),இங்கெ நாத்திகர் மைக்கேல் ஷெர்மர் கண் எதிரே ஸ்பூனை வளைத்துக் காட்டுகிறார். கண்டு மகிழுங்கள்!!
நன்றி!!!