Thursday, May 30, 2013

தேரவாத பவுத்தம்: ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம்


வணக்கம் நண்பர்களெ,

புத்தர் என்னும் கவுதம சித்தார்த்தர் மீது எனக்கு மட்டும் அல்ல, பெரும்பான்மை இந்திய இந்து,&நாத்திககர்களுக்கு மிக்க மதிப்பு உண்டு.ஆனால் ஈழ சகோதரர்களைக் கேட்டால் பதில் வேறுவிதமாக வரும். அது ஏன் என்பதையும் பார்ப்போம்.முதலில் தேரவாத பவுத்தத்தின் வரலாறு,கொள்கைகள் பற்றி சுருக்கமாக அறிவோம்.

ஒரு மதம்,இயக்கம் நடைமுறையில் அன்று முதல் இன்றுவரை என்ன செய்தது,செய்கிறது, என்பதன் சான்றுகள் அடிப்படையில் மட்டுமே அதன் மீது கருத்து சொல்ல முடியும்.
பவுத்தம் பொ..மு 600 ல் கவுதம் சித்தார்த்தர்[566-486 B.C.E.]  என்னும் அரசர் , தனது ஆட்சி,அதிகாரம்,குடும்பம் துறந்து ஞானம் தேடி சென்று,ஆசையே துன்பத்திற்குகாரணம் என்னும் அரிய உண்மையின் மூலம் பெற்ற ஞானத்தை,உலக முழுதும் பரப்பியதின் விளைவே பவுத்தம்.

இந்திய துணைக் கண்டத்தின் பெரும்பகுதியை ஆண்ட அசோகரின் கலிங்கப் போருக்கு[261 BCE] பிந்தைய , பவுத்த மத மாற்றம் அத்னை இந்தியாவின் முக்கிய மதம் ஆக்கியது. அசோகரின் மகன் மகிந்தா[ இவர் வேற!!!],மகள் சங்கமித்திரை இலங்கைக்கு பவுத்த மதப் பிரச்சாரகர் ஆக அனுப்பியதாக வரலாற்று செய்திகள் கூறுகின்றன. பல இடங்களில் பவுத்த விகாரைகள் என்னும் மடங்கள், அதில் மதம் பரப்புதலை முதன்மைப் பணியாக கொண்ட புத்த பிக்குகள்(துறவுகள்) என செழித்தது. இந்தியாவில் அசோகரின் ஆட்சிக்கு பிறகு ,பவுத்தம் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்சியை இழந்தது.
புத்தர் என்று ஒருவர் இருந்தாரா என்பதும்,புத்தர்,இயேசு,கிருஷ்னர் ஆகியோர் ஒருவரே என்றும் சில கருத்துகள் உண்டு என்றாலும், இப்போதைய வரலாற்றில் கவுதம சித்தார்த்தர் ஒருவாழ்ந்த மனிதராக ஏற்கப் படுகிறார்.
எந்த ஒரு மதமும் வளரும் போது ,அதனுள் ஏற்படும் கருத்து வித்தியாசங்கள் பெருகும் போது பிளவுபடும், கவுதம சித்தார்த்த்ரை ஒரு ஞானம் பெற்ற மனிதராக, அல்லது கடவுளின் அவதாரமாக பார்ப்பதா என்னும் கருத்து முரண்களினால், அது ஹீனயானம்[புத்தர் ஒரு மனிதன்],மஹாயானம்[புத்தர் ஒரு கடவுள்] உள்ளிட்ட சில பிரிவுகளானது. பவுத்தத்தின் அஹிம்சை, புலால் மறுப்பு போன்றவற்றை சனாதன தர்மமதம் [தற்போதைய பெயர் இந்து] ஏற்றது,புத்தர் விஷ்னுவின் அவதாரம் ஆக்கப் பட்டார்.அதே போல் இந்து மத உருவ வழிபாடு,சடங்குகள் பலவற்றை பவுத்தம் ஏற்றது. சுருக்கமாக சொன்னால் புத்தரை ஏக இறைவனாக கொண்ட, அவருக்கு கீழ் பல [ சனாத்ன தர்ம மத] சிறு தெய்வங்கள் கடவுள் ஆனார்.

பவுத்தம்,சனாதன மதம் வேறுபாடுகள் குறைந்ததாலும், ஆட்சி,அதிகாரம் இழந்ததாலும்  இந்தியாவில் தனக்கான இடத்தை இழந்ததுதங்களின் கொள்கை காக்க  இலங்கைபர்மா,தாய்லாந்து சீன,ஜப்பான் போன்ற இடங்களுக்கு ஆயிரக் கணக்கான புத்த பிக்குகள் இடம் பெயர்ந்த்னர்.

ஆட்சி அதிகாரம் இழந்தால் ஏக இறை மதங்கள் இல்லாமல் போகும், ஆனால் பல இறை மதங்கள் வெகுநாள் தாக்கு பிடிக்கும்:::::
சார்வாகனின் மத அழிவு விதி1!!!!!

இப்படி ஆட்சி,அதிகாரம் இழந்த புத்த பிக்குகள் ,பவுத்தத்தில் ஒரு பிரிவாக ,மிக்க கட்டுப்பாட்டுடன், என்றும் நிலைக்கும் வரையில் மாற்றியமைத்த பவுத்தமே தேரவாத பவுத்தம்.

தேரவாத பவுத்தம் ஒரு ஆக்கிரமிப்பு,ஒடுக்குமுறை மதம். புத்தர் பிற கடவுள்களை விட உயர்ந்தவர். தேரவாத பவுத்தம் பிற மதங்களை விட உயர்ந்தது. பவுத்தம் பாதுகாப்பவரே,பிக்குக்களுக்கு கட்டுப்படுபவரே  ஆட்சியில் இருக்க முடியும்.

இப்படி சொல்லும் எந்த மதத்தையும் நாம் ஆக்கிமிப்பு, ஒடுக்கு முறை மதம் என்கிறோம்.

இப்போது தேரவாத பவுதம் பெரும்பான்மையாக உள்ள நாடுகளைப் பார்க்கப் போகிறோம்
RankCountryPopulationBuddhist %Buddhist totalImportance of religion
1 Thailand66,720,153[web 19]94.6%[web 20]63,117,26597%[web 21]
2 Burma60,280,000[web 22]89%[web 23]53,649,20096%[web 21]
3 Sri Lanka20,277,59770.2%14,222,844100%[web 21]
4 Cambodia14,701,717[web 24]96.4%[web 24]14,172,45595%[web 21]
5 Laos6,477,211[web 25]67%[web 25]4,339,73198%[web 21]




1.      1.இலங்கை 2. பர்மா 3.தாய்லாந்து 4.லாவோஸ் 5.ம்பொடியா

5.கம்போடியா

இதில் கம்போடியா என்றால் நினைவுக்கு வருவது க்யுமர் ரோக் எனப்படும் இடதுசாரிக் குழுவின் ஆட்சியும் அது சார் வன்முறைகளுமே. க்யுமர் ரோக் மதத்தை தடை செய்தாலும், கட்டுக் கோப்பான அமைப்பை கொண்ட தேரவாத பவுத்தம் , மீண்டும் அரசினை ஆட்டுவிக்கும் சக்தியானது.

பவுத்தம் முன்பு இந்து மதம் போன்ற ஒரு பேகன் மதம் வழக்கத்தில் இருந்தது. அங்கோர் வாட் ஆலயம் ஒரு சிறப்பு ஆகும்

95% இம்மதப் பிரிவு என்பதாலும், பிற மதத்தவர் சில பகுதிகளில் மட்டும் செறிந்து வாழ்வதாலும், பெரிய அளவில்  பிற மதத்தவரை ஒடுக்குவதாக தகவல் இல்லை.

The Constitution designates Buddhism as the state religion. The government permits Buddhist religious instruction in public schools as an extension of this constitutional designation.

தேரவாத பவுத்தமே அரச மதம், அரசு பள்ளிகளீல் பவுத்தம் கற்பிக்கப் படுகிறது.
இது அவர்களின் தேசிய கீதம்.

Verse IIISongs rise up from the pagodasTo the glory of holy Buddhist faith.Let us be faithful to our ancestors' belief.Thus heaven will lavish its bountyTowards the ancient Khmer country, The Grand Kingdom



மதத்தோடு தேசியம் கலப்பது தேரவாத பவுத்தத்தில் ஒரு அம்சம்!!!

4.லாவோஸ்


இங்கே பிற மதத்தவர் மிக குறைவு என்றாலும் மதமாற்றம் என்பது தண்டனைக்குறியதாக உள்ளது. இயற்கை வழிபாடு செய்யும் ஆதிவாசிக் குழுக்களையும் ,மக்கள் தொகையில் சேர்த்து கணக்கு காட்டி விடுகிறார்.

The country has an area of 85,000 square miles (220,000 km2) and a population of 6.4 million. Almost all ethnic or "lowland" Lao are followers of Theravada Buddhism; however, lowland Lao constitute only 40-50 percent of the population. The remainder of the population belongs to at least 48 distinct ethnic minority groups. Most of these ethnic minorities are practitioners of animism, with beliefs that vary greatly among groups. Animism is predominant among most Sino-Thai groups, such as the Thai Dam and Thai Daeng, as well as among Mon-Khmer and Burmo-Tibetan groups. Even among lowland Lao, many pre-Buddhist animistic religious beliefs have been incorporated into Theravada Buddhistpractice. Catholics and Protestants constitute approximately 2 percent of the population. Other minority religious groups include those practicing the Baha'i faith, Islam, Mahayana Buddhism, and Confucianism. A very small number of citizens follow no religion.
****

3.தாய்லாந்து

இங்கு மன்னராட்சி என்றாலும் ஜனநாயகமும்,பாராளுமன்ற அமைப்பும் உண்டு.இங்கே 90_95  தேரவாத பவுத்தம், 5_10 இஸ்லாம், 1% கிறித்தவர் வாழ்கின்றார். முஸ்லிம்கள் மலேசியாவை ஒட்டிய தெற்கு பகுதியில் உள்ள 5 மாகாணங்களில் செறிந்து வாழ்கின்றனர். இந்த பகுதிகளில் முஸ்லிம்களுக்கு அரசியல்,வேலைவாய்ப்பில் சரியான பங்கீடு இல்லை என எழுந்த போராட்டம் ஒடுக்கப்பட்டது.


இப்போராட்டம் இன்றுவரை தொடர்கிறது, போராடும் இஸ்லாமிய குழுக்கள் இதனை உலக இஸ்லாமிய நாடுகளிடம் எடுத்துச் சென்றாலும் இவர்களின் பிரச்சினை பற்றிய அக்கரை அங்கு இல்லை. இப்படி இருப்பது இயல்பு என நாம் அறிவோம்!!

2.பர்மா
உலகின் மிக ஒடுக்குமுறை  கொண்ட அரசுகளுள் ஒன்றுதான் இது. சர்வாதிகார ஆட்சி நீண்ட நாட்களாக நடக்கிறது. ரோஹிங்கா முஸ்லிம்களை ஒடுக்க நாளொறு மேனியும் பொழுதொறு சட்டமாக வடிவமைப்பதில் ஈடு இணையற்றவர்கள். நம்ம வஹாபி சகோக்களையும் மிஞ்சிய ஒடுக்குமுறையாளர்கள். வஹாபிகள் அமரிக்க எடுபிடிகள் என்பதால் அமெரிக்கா சொன்னால் மறுப்பின்றி உடனே கேட்பார்கள்,ஆனால் பர்மியர்கள் யார் சொன்னாலும் கேட்பது இல்லை.

பாருங்கள் ரோஹிங்க முஸ்லிம்கள்  இரு குழுந்தை மட்டுமே பெற வேண்டும் என் ஒரு சட்டம் சென்ற வாரம் போட்டு,அதன் விளைவாக நடக்கும் கலவரத்தையும் செய்திகளில் படிக்கும் போது நாகரிக உலகில் வாழ்கிறோமா என சந்தேகம் வருகிறது.


YANGON, Myanmar -- Authorities in Myanmar's western Rakhine state have imposed a two-child limit for Muslim Rohingya families, a policy that does not apply to Buddhists in the area and comes amid accusations of ethnic cleansing in the aftermath of sectarian violence.

ஏழைகளை அவர்களின் மதம் சார் இறைவன் மட்டுமல்ல, சக மதத்தினரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதற்கு .கா ரோஹிங்கா முஸ்லிம்களே.

இதன் எதிர்வினையாக வங்க தேசத்தில் இருந்து துரத்தப்படும் பவுத்தர்களை,ரோஹிங்காக்களின் இடத்தில் பர்மிய அரசு குடியேற்றுகிறது.ஆனால் வங்க தேசத்துக்குள் உயிரிக்கு தப்பி நுழையும் ரோஹிங்காக்களை உள்ளே விடாமல் துரத்துகிறது இஸ்லாமிய வங்க தேசம்!!!!

1.இலங்கை

இப்போது இலங்கையில் 70% பவுத்தர்களை 100% ஆக்கும் முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்கிறார். மலையகத் தமிழர்களை இரு நூற்றாண்டுகளாக உழைப்பை சுரண்டி துரத்தியது, சிங்களம் மட்டுமே சட்டம்,தரப்படுத்தல் என பலவிதங்களில் ஈழத்தமிழர்களில் சுரண்டினர். வசதி படைத்த பல ஈழத்தமிழர்கள் புலம் பெயர்ந்தது போக மீதி உள்ளோர் , இலங்கையில்இரண்டாம் தரக் குடிமக்களாய்  அங்கும், தமிழகத்தில் அகதிமுகாம் என இங்க்கேயும் வாழ்க்கையை ஓட்டுகிறார்.

இராஜபக்சேவை எதிர்த்து தினமும் சவால் விடும் ,பெரிய சிறிய தமிழக  கட்சிகள் எதுவும்  இங்குள்ள ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க குரல் கொடுப்பது இல்லை. செய்ய இயல்வதை பேசாமல் இருப்பதும்,செய்ய இயலாததை  செய்வதாக வாக்குறுதி கொடுப்பதுதானே தமிழக(இந்திய) அரசியல்!!!
தமிழர்களை ஒடுக்க சிங்களர்களுக்கு இலங்கை முஸ்லிம்கள் உதவினாலும்,அவர்களையும் நிம்மதியாக இருக்க் பவுத்த மத்வாதிகள் விரும்ப வில்லை.

இத்தனைக்க்கும் இந்தியாவில் வந்தே மாதரம் பாட மறுக்கும் இந்திய முஸ்லிம்கள் போல் இல்லாமல், சிங்கள தேசிய கீதமான நமோ[வணங்குகிறேன்] இலங்கைத் தாயே என்பதைப் பாடுகிறார்.

ஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா
நமோ நமோ நமோ நமோ தாயே

ஏற்கெனவே ஹலால் முத்திரை  தடுப்பதில் வெற்றி கண்ட பொது பலசேனா, தம்புள்ள என்னும் பகுதியை புனித பிரதேசம் ஆக்கி, அப்பகுதியில் பிற மத சின்னங்கள்,கோயில் இல்லாமல் செய்து வெளியேற்றினார்.

சிங்கள அரசு என்ன செய்தாலும்,இலங்கை முஸ்லிம் தலைவர்கள் கண்டு கொள்வது இல்லை. தமிழர்களை படு மோசமாக நடத்தும் இராஜபக்சே அரசு, முஸ்லிம்களை மோசமாகத்தானே நடத்துகிறது என ஒப்பீட்டு அளவு சார் நடவடிக்கை என நமக்கு புரிகிறது.

இன்னும் சென்ற வாரம்  மாடு வெட்டுவதை எதிர்த்து பவுத்த மத குரு தீக்குளிப்பு என்பது,ஆயிரக்கண்க்கில் நடந்த கொலைகளை கண்டுகொள்ளாத மத அமைப்புகளின் இரட்டைவேடப்போக்கு பற்றி என்ன சொல்வது??

தமிழர்கள் தனிநாடு கேட்டதால்தான் பிரச்சினை என்போர், இலங்கை அரசுக்கு வால் பிடிக்கும் முஸ்லிம்களையும் ஒடுக்குவது ஏன் என சிந்திக்க மாட்டார்களா?

இப்பதிவில் நாம் சொல்ல வருவது தேரவாதம் பவுத்தம் என்பது ஒரு ஒடுக்குமுறை சார்ந்த மதம்.உலகளாவிய அரசு அமைக்கும் நோக்கம் இல்லை என்றாலும்,தேரவாதம் பவுத்த பெரும்பான்மை மத நாடுகளில் வாழும் சிறுபான்மையினர் பாரபட்சமாக நடத்தப் படுகின்றனர். இதன் ஒரு நிகழ்வுதான் இலங்கை,பர்மா,தாய்லாந்து.

ஆகவே இலங்கை,பர்மா,தாய்லாந்து சிறுபான்மையினருக்கு சம உரிமை ,அதிகாரப் பங்கீடு கிடைக்க வேண்டியதின் நியாயத்தை உணர்வோம்.

இந்தியாவில பலருக்கும்,தமிழர்களில் கூட பலருக்கும் இனமத ரீதியான ஒடுக்குதல் குறித்து எதுவும் தெரிவது இல்லை.சாதிரீதியான ஒடுக்குதல் தெரியும் என்றாலும்,இதில் கீழ் இருப்பவனை ஒடுக்கி,மேல் இருப்பவனுக்கு ஒடுங்கி போவது என்பதால், ஒடுங்குபதைப் பற்றி கவலைப் படாமல்,அடுத்தவனை ஒடுக்குவதையே பலரும் சிந்திப்பதால் இதனை சரியாக உணர்வது இல்லை.

உலக முழுதும் வாழும் மனிதர்களுக்கும் பொதுவான உரிமைகள் சார்ந்து பொதுவான சட்டம் வேண்டும்.அனைவருக்கும் வாழ்வாதாரம், இயற்கை சூழல் மேம்பாடு,பாதுகாப்பு சார்ந்த அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டும்.மதம் அரசியலில் கலக்க கூடாது.

மனித உரிமைகளுக்கு முரணான மதவாத,சர்வாதிகார ஆட்சிகள் உலகில் ஒழிய வேண்டும்.

இந்த இலக்கு நோக்கி மனிதம் செல்லுமா???

நன்றி!!!

14 comments:

  1. மிக அருமையான பதிவு, பவுத்தர் இறந்து பல நூறாண்டுகள் கடந்தே தேராவதமும் தோன்றியது. அத்தோடு சனாதன தர்மம், பார்ப்பனீயம், சிறு தெய்வ வழிபாடுகள், மூட நம்பிக்கைகளை உள்வாங்கி வளர்ந்தது. பவுத்தம் தமிழகத்தில் அழிந்தமைக்கு முக்கிய காரணமே அதன் அதிகாரப் போட்டியும், உள்பூசல்களும் ஒரு காரணம். இஸ்லாம், கிறித்தவம், இந்து போலில்லாமல் பவுத்தம் ரொம்ப நல்லவன் வேடம் போடுவதும், மேற்கத்தியோர் மத்தியில் பிரபலமானதும் ஒரு காரணம். ஆனால் அதன் உண்மை கோர முகம் இலங்கை, மியன்மார், தாய்லாந்து, கம்போடியாவில் வெளுத்து வருகின்றது. நல்ல வேளையாக பவுத்ததை விட்டு நாத்திகத்துக்கு தாவியதால் வியட்நாம் தப்பியது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ ,
      மதம் என்பதே ஆன்மீக போர்வையில் உள்ள அரசியல் என்பதால்தான், எதிர்க்கிறோம். சிறுபான்மையாய் இருந்தால் மதசார்பின்பை என முழங்கும் மதவாதிகள்,பெரும்பான்மை ஆனால்,என் மத சட்டம் என் நடைமுறைப் படுத்துவதற்கு தேரவாத பவுத்தமும் விதிவிலக்கு அல்ல.

      நான் யோக்கியன் என்னும் அதன் வேடத்தை தோல் உரிப்பதே இப்பதிவு.புரிதலுக்கு நன்றி.

      Delete
  2. பல விஷயங்களைக் கற்றுத் தந்தது.

    கடவுள் ம்றுப்போடு தோன்றிய புத்த மதம் எப்படி புத்தரையே கடவுளாக மாற்றிற்று என்ற வரலாற்று உண்மைகளையும் தெரிந்து கொள்ள ஆவல். உங்கள் கட்டுரையோ, தொடுப்போ கொடுத்தால் நலமும் நன்றியும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அய்யா வணக்கம்,
      வெள்ளையர் வருகைக்கு பிந்தைய வரலாறு ஒரு 90% சான்றுகள் அடிப்படையில் சரி என்லாம்.
      இஸ்லாமின் வருகைக்கு பிந்தைய வரலாறு ஒரு 50% சான்றுகள் அடிப்படையில் சரி எனலாம்.
      அதற்கு முந்தைய வரலாறு சரியாக சொல்வதில் பல சிக்கல்கள், இடதுசாரிப் பார்வை,தலித்தியப் பார்வை,திராவிடப் பார்வை,இந்துத்வப் பார்வை என பல விதங்களில் முரண்படும்.

      எனினும் சமீபகால அரசியலில் இருந்தே உங்கள் கேள்விக்கு விடை காண முடியும்.
      புத்தர்=பெரியார் என வைப்போம். பிராமண எதிர்ப்பில் தோன்றிய திராவிட இயக்கங்களில்,இப்போது ஒரு ப்ராமணப் பெண் தலைமையிலும் ஒரு பிரிவு இயங்குகிறது. இன்னொரு தலைமையும் ப்ராமணர்களுடன் சுமுகப் போக்கை கடைப்பிடிக்க விரும்புகிறது.

      பெரியாருக்கு சிலைகள்,அவர் சொன்னது எல்லாம் எப்போதும் சரி என சொல்லும் தொண்டர்களும் உண்டு.

      இப்போது ஒரு திராவிட இயக்கம் பெரியார், இந்து மதத்தை சீர்திருத்த வந்த விஷ்னு அவதாரம் என்று சிலைகளுக்கு பூசை செய்ய ஆரம்பித்தால் புது மதப் பிரிவு வந்துவிடும்.

      புத்தர் விஷ்னு அவதாரமாக காட்டப்பட்ட பின்னரே அதன் தனித்துவம் மங்கியது. உள் நுழைந்த சனாதனவாதிகள் அதன் தனித்துவத்தை திரிப்பதில் வெற்றி கண்டனர்.

      இதே வழியில் அக்பர் விஷ்னுவின் அவதாரம் ஆகி ஆரம்பித்த தீன் இலாஹி
      கதையும் சுவாஹ!!!

      மத குருக்களுக்கு முக்கியத்துவம் இல்லா மதம் நீடிப்பதை விரும்ப மாட்டார்கள்.

      மாற்றுக் கொள்கையும் ,தங்களுடையதைப் போல் கேவலமானதே என்பதைக் காட்ட எந்த அளவுக்கும் போவார்கள் மதவாதிகள்.

      ஒரு இயக்கத்தின் நல்ல விடயங்களை எடுத்து விட்டு , தேவையற்ற விடயங்களை சேர்த்து,தலைவன் புகழ்பாடிகள் உருவாகி பதவி,அதிகார ருசி காட்டினால் அது இல்லாமல் போகும்!!இல்லை சிதையும்!!!

      இந்த அடிப்படையில் சிந்தியுங்கள் புரியும்!!!

      நன்றி!!

      http://en.wikipedia.org/wiki/Decline_of_Buddhism_in_India

      http://www.ambedkar.org/books/dob2a.htm

      Delete
    2. பெரியாரோடு ஒற்றுப்படுத்தி சொன்னது புரிவதற்கு எளிமையானது.

      புத்த மதத்தையும் அசோகரையும் வரலாற்றிலிருந்தே ‘தூக்கி விட’ எடுக்கப்பட்ட முயற்சிகளையும் வாசித்திருக்கிறேன்.

      Delete
  3. அருமை சகோ.நீண்ட நாட்களாக புத்தரைப்பற்றிய சில விடயங்கள் தெரியாமல் இருந்தேன் உங்கள் பதிவு அதை பூர்த்தி செய்துள்ளது நன்றிகள்...

    ReplyDelete
    Replies
    1. சகோ இனியவன்,இப்பதிவில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன.மதவியாதிகளின் சூழலுக்கு ஏற்ற நடிப்பு நன்கு புரியும்!!

      உண்மையான நாத்திகர்கள் மதவாதிகள்தான்!!!!!!!!!!

      நன்றி!!!!

      Delete
  4. //மனித உரிமைகளுக்கு முரணான மதவாத,சர்வாதிகார ஆட்சிகள் உலகில் ஒழிய வேண்டும்.

    இந்த இலக்கு நோக்கி மனிதம் செல்லுமா???//

    நிச்சயம் செல்லும் சகோ.
    நல்ல பதிவு

    ReplyDelete



  5. http://www.ambedkar.org/books/dob2a.htm

    இந்த கட்டுரையில் பல தவறுகள் உள்ளன.
    உதாரணத்திற்கு


    //Who does not know how the Tamil Muruga came to be installed as the Subramania and how the Tamilian Avai was metamorphosed into the Durgai and Parvathi in the Aryan pantheon.//

    ReplyDelete
  6. //பாருங்கள் ரோஹிங்க முஸ்லிம்கள் இரு குழுந்தை மட்டுமே பெற வேண்டும் என் ஒரு சட்டம் சென்ற வாரம் போட்டு//

    சவூதி அரேபியாவில் கணவானால் கைவிடப்பட்ட தாய் 6 பிள்ளைகளுடன் மிகவும் துன்புறுகிறார் அவருக்கு மேலதிக அரச உதவி தேவைடுகிறது.
    http://www.arabnews.com/news/453291
    பெற்றோல் டொலர் வழிந்தோடும் நாட்டிலே இந்த நிலமையென்றால் அல்லாவின் கட்டளை அது பின்பற்றியே தீர வேண்டுமென்று 4 மனைவிங்க கட்டுபாடில்லாம பல குழந்தைங்க பெற்றால் எண்ணை டொலர் வருமானமில்லா மியான்மார் போன்ற நாடுகள் என்ன செய்யலாம் சகோ?

    //இத்தனைக்க்கும் இந்தியாவில் வந்தே மாதரம் பாட மறுக்கும் இந்திய முஸ்லிம்கள் போல் இல்லாமல், சிங்கள தேசிய கீதமான நமோ[வணங்குகிறேன்] இலங்கைத் தாயே என்பதைப் பாடுகிறார்//
    இந்த சிறந்த முன்மாதிரியான நல்லிணக்கத்தை பின்பற்றும் இலங்கை இஸ்லாமியர்கள் உயர்ந்தவங்க.

    ReplyDelete
  7. உங்கள் இடுகையையும் பின்னூட்டங்களையும் படிக்கும் போது, எனக்கு தோன்றுவது, "ஐயர்கள் புரோகிதர்கள் கடவுள் என்ற சிலைகளை வைத்து நோகாமல் காசு பணம் பார்ப்பதைப் பார்த்து" கடவுள் மறுப்பாளர்களும் புத்தரையும் [பெரியாரையும்] கடவுள் ஆக்கி காசு பணம் பார்க்கிறார்கள் என்றே தோன்றுகிறது..

    ஆனால், ஐயர் காசு பார்த்தல் சரி..அதே மாதிரி சூத்திரன் காசு பார்த்தால் தப்பு? இத்சு தான் நீதி...!

    ___________________________
    வாங்க அய்யா வணக்கம்,
    வெள்ளையர் வருகைக்கு பிந்தைய வரலாறு ஒரு 90% சான்றுகள் அடிப்படையில் சரி என்லாம்.
    இஸ்லாமின் வருகைக்கு பிந்தைய வரலாறு ஒரு 50% சான்றுகள் அடிப்படையில் சரி எனலாம்.
    அதற்கு முந்தைய வரலாறு சரியாக சொல்வதில் பல சிக்கல்கள், இடதுசாரிப் பார்வை,தலித்தியப் பார்வை,திராவிடப் பார்வை,இந்துத்வப் பார்வை என பல விதங்களில் முரண்படும்.

    எனினும் சமீபகால அரசியலில் இருந்தே உங்கள் கேள்விக்கு விடை காண முடியும்.
    புத்தர்=பெரியார் என வைப்போம். பிராமண எதிர்ப்பில் தோன்றிய திராவிட இயக்கங்களில்,இப்போது ஒரு ப்ராமணப் பெண் தலைமையிலும் ஒரு பிரிவு இயங்குகிறது. இன்னொரு தலைமையும் ப்ராமணர்களுடன் சுமுகப் போக்கை கடைப்பிடிக்க விரும்புகிறது.

    பெரியாருக்கு சிலைகள்,அவர் சொன்னது எல்லாம் எப்போதும் சரி என சொல்லும் தொண்டர்களும் உண்டு.

    இப்போது ஒரு திராவிட இயக்கம் பெரியார், இந்து மதத்தை சீர்திருத்த வந்த விஷ்னு அவதாரம் என்று சிலைகளுக்கு பூசை செய்ய ஆரம்பித்தால் புது மதப் பிரிவு வந்துவிடும்.

    புத்தர் விஷ்னு அவதாரமாக காட்டப்பட்ட பின்னரே அதன் தனித்துவம் மங்கியது. உள் நுழைந்த சனாதனவாதிகள் அதன் தனித்துவத்தை திரிப்பதில் வெற்றி கண்டனர்.

    இதே வழியில் அக்பர் விஷ்னுவின் அவதாரம் ஆகி ஆரம்பித்த தீன் இலாஹி
    கதையும் சுவாஹ!!!

    மத குருக்களுக்கு முக்கியத்துவம் இல்லா மதம் நீடிப்பதை விரும்ப மாட்டார்கள்.

    மாற்றுக் கொள்கையும் ,தங்களுடையதைப் போல் கேவலமானதே என்பதைக் காட்ட எந்த அளவுக்கும் போவார்கள் மதவாதிகள்.

    ஒரு இயக்கத்தின் நல்ல விடயங்களை எடுத்து விட்டு , தேவையற்ற விடயங்களை சேர்த்து,தலைவன் புகழ்பாடிகள் உருவாகி பதவி,அதிகார ருசி காட்டினால் அது இல்லாமல் போகும்!!இல்லை சிதையும்!!!

    இந்த அடிப்படையில் சிந்தியுங்கள் புரியும்!!!

    நன்றி!!

    ReplyDelete
  8. //மலையகத் தமிழர்களை இரு நூற்றாண்டுகளாக உழைப்பை சுரண்டி துரத்தியதுஇ சிங்களம் மட்டுமே சட்டம்இதரப்படுத்தல் என பலவிதங்களில் ஈழத்தமிழர்களில் சுரண்டினர். //
    இப்பொ தான் இதை பற்றி மேலும் அறிஞ்சுகிட்டேன். இந்திய தமிழர்களை துரத்துவதற்கு சிங்கலவங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியவங்க ஈழத்தமிழர்கள். தங்களுக்கு இந்திய தமிழர்க போட்டியா பின்பு வந்திடுவாங்ககோ என்ற காரணம்.
    அதை விடுங்க சகோ. இந்தியா மட்டும் நல்ல நிலையில் இருந்தா ஏன் இப்படியெல்லாம் இந்திய தமிழங்களை துரத்திட்டாங்களே என்று கவலைபட வேண்டும்! ஜேர்மனியர்கள் முன்னாள் கம்யூனிசிய நாடுகளில் குடியேறினாங்க, கம்யூனிசிய சித்தாந்தம் அந்த நாடுகளில் உடைந்து விழுந்ததும், யாருமே ஜேர்மனியர்களை துரத்தல தாங்களாகவே தப்பினோம் பிழத்தோம் என்று தங்க தாய் நாடு ஜேர்மனிக்கு ஓடி வந்தாங்களே இது தான்.அது தான் தேவை. இந்த நிலைக்கு தான் இந்தியா உயர வேண்டும் சகோ.

    சிங்களம் மட்டுமே சட்டம்- என்றால் என்ன? இலங்கையிலே சிங்களத்திலே மட்டும் தான் எல்லாவித நடைமுறைகளும் செய்ய வேண்டும் என்றா செல்லவாறிங்க சகோ?
    தமிழக அரசின் அலுவலகத்தில் பாஸ்போர்ட் பெற்று கொள்ளும் உங்கள் பாஸ்போர்ட்டில் தனி ஹிந்தி மட்டுமேயிருக்கு தமிழ் கிடையாது. எங்க இலங்கை பாஸ்போர்ட்டில் தமிழில் பதியபட்டருக்கு அப்படியிருக்க நீங்க எங்களுக்கு சிங்களம் மட்டுமே சட்டம் என்று சொல்லவாறிங்களா என்று இலங்கை பசங்க ரொம்ப கிண்டலடிக்கிறாங்க சகோ.

    ReplyDelete
  9. விரிவான விளக்கமான பதிவு சகோ,இலங்கையில் ஒரு அரசமரம் இருந்தால் காணும் கொஞ்ச நாளில் சுற்றியுள்ள காணியை வளைத்து போட்டுவிட்டு விகாரை கட்டிவிடுவார்கள்.வரலாற்றுப் புகழ் மிக்க முன்னேஸ்வர ஆலயச் சூழலில் சந்திரவட்டக்கல் ஒன்று கிடைத்ததால் பௌத்த புனித இடம் என்று கூறி புனரமைப்பு வேலைகளை தடுத்து வருகின்றார்கள்.இப்போது மட்டக்களப்பு உள்ள ஒரு பழமையான முருகன் கோவிலில்(தாந்தாமலை என்று நினைக்கிறேன்,பெயர் சரியாக ஞாபகமில்லை) புத்தர் சிலை புதிதாய் உதயமாகி அதற்கு மின்வழங்க ஜெனரேட்டர் முருகன் கோவில் கருவறையில் வைக்கப்படுகின்றது.மிருகவதைக்கு எதிராக பிக்கு தீக்குளிக்கவில்லை,மாறாக அவர் எரியூட்டப்பட்டார்,அவர் பிக்கு என்பதும் சந்தேகத்துக்குரியதாகவே உள்ளது.இந்தக் காவி வெறியாட்டம் எப்போது அடங்குமோ தெரியவில்லை

    ReplyDelete
  10. இலங்கை தமிழ் பகுதியில் இந்து- கிறிஸ்தவ திருச்சபையினருக்கும் இடையே மத மோதல்.
    http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/06/130616_batticlashes.shtml

    ReplyDelete