Thursday, October 25, 2012

மானாட ,சிவிங்கியாட அதைக் கண்டு பரிணாம எதிர் பதிவாடலாமா???



கடவுள்: ஒரு அறிவார்ந்த வடிவமைப்பு போல் தோற்றம் அளிக்கும் படைப்பு முடியவில்லை என்பதால் அனைத்தும் பரிணாம வளர்ச்சி அடையக் கடவது.அப்ரக்கா தப்ரா!!1!!!!


வணக்கம் நண்பர்களே,

நம் மீது அதீத அன்பும் பாசமும் கொண்ட சகோக்கள் பரிணாமம் பற்றி கேள்வி கேட்பதாக நினைத்து பல தவறான புரிதல்களை வெளிப் படுத்துகிறார்கள். நாம் அறிந்தவரை அவற்றை சரியான கேள்விகளாக்கி பதில் கொடுப்போம்.

முதலில் சகோ  சு.பி மனித பரிணாம படிம வரலாறு பற்றி ஏன் எழுதவில்லை என்றார். காணொளியுடன் அனைத்து விவரங்களையும் ஏற்கெனவே பதிவாக இட்டுவிட்டோம் என தெரிவித்துக் கொள்கிறேன். இதுதான் அப்பதிவு!!


http://aatralarasau.blogspot.com/2012/10/blog-post.html


அதில் இருந்தும் கேள்வி கேட்கலாம்,அல்லது மனித பரிணாமம் குறித்து பல ஆய்வுகளை மேற்கொள்ளும் ஸ்மித்சோனியன் ஆய்வக சுட்டிகள் பார்க்கலாம்

http://humanorigins.si.edu/


பில்ட் டௌன் மேன் என்பது சில ஆய்வாளர்களின் புகழ் வெறியின் வெளிப்பாடு மட்டுமே.இது 1912 ல் சார்லஸ் டாவ்சன் உள்ளிட்ட சிலரால் மனிதனின் மூதாதையராக காட்டப்பட்டது. அபோது இருந்தே சில ஆய்வாளர்கள் பில்ட் டௌன் படிமம் மீது சந்தேகம் தெரிவித்தாலும்,சுமார் 40 வருடம் கழித்து பொ.ஆ 1953 ல் இது இது மோசடி என தெளிவாக்கப் பட்டது.அதன் பிறகு மரபியல் ரீதியாகவே பரிசோதிக்கும் வண்ணம், பல பரிணாம் ஆய்வுகள் வளர்ச்சி பெற்றன. ஆகவே ஒரு பில்ட்மேன் படிமம் ஏமாற்று வேலை எனவே ஏற்கிறோம். அது போன்ற பிற நிகழாமல் இருக்க இபோது பல கடினமான் பரிசோதனைகளைக் கடந்தே புதிய படிமங்கள் ஏற்கப் படும். எப்படி ஜாகிர் நாயக்கின்  நெருப்புக் கோழி முட்டை என குரான் 79.30 மோசடி மொழி பெயர்ப்பு அவரது தனிப்பட்ட குற்றமோ அதே போல் பில்ட் டௌன் மேனும் தனிப்பட்ட ஆய்வாளர்களின் குற்றமே!!!.

ஆனால் பில்ட் டௌன் மேன் என்பது சார்லஸ் டாவ்சனின் மோசடி என் நாம்&அறிவியல் உலகம் ஏற்பது போல் ஜாகிர் நாயக்கின் மோசடி என சகோ சு.பி ஏற்பாரா?

http://en.wikipedia.org/wiki/Piltdown_Man


சகோ சு.பியின் அசுர மனிதர்கள் பதிவில் குறிப்பிடப் பட்ட அனைத்து விவரங்களுமே ஆதரமற்ற பொய்கள் என்பதால்,அவர் எழுதிய அனைத்து பதிவுகளும் தவறாகி விடுமா????.இன்னும் நிறைய சொல்ல முடியும் என்றாலும் தவிர்க்கிறேன்.


இன்னும் குரான் 79.30 பெருவிரிவாக்க கொள்கையை காட்டுகிறது,அல்லது கண்டங்கள் விலகி பிரிந்ததைக் காட்டுகிறது என பொருள் கொள்கிறார்.

டஹாஹா என்பது குரானில் ஒரு முறை மட்டுமே வருவதால் அவர்கள் என்ன பொருள் வைத்தாலும் அதனை சரிபார்க்க முடியாது?

ஏன் ஒரே நிலப்பரப்பை Allah கண்டங்களாக பிரிக்க வேண்டும்?

கண்டங்கள் விரிவடைந்தது அறிவியலின் கண்டுபிடிப்பு!!!!

அது என்னவோ அறிவியலின் சான்றுகளுக்கேற்றபடி அல்லாவின் செயல்களும் மாறுவது விந்தையிலும் விந்தை!!!

ஆகவே மத அறிவியல் என்பதை என்ன என அறிவது,புரிவது சுலபமே!!!



The triliteral root dāl ḥā wāw (د ح و) occurs only once in the Quran, as the form I verb daḥā (دَحَىٰ). The translation below is a brief gloss intended as a guide to meaning. An Arabic word may have a range of meanings depending on context. Click on the word for more linguistic information, or to suggestion a correction.

Verb (form I) - to spread

(79:30:4) daḥāhāHe spread itوَالْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَاهَا
***
நேற்று இட்ட பதிவிலும் சில கேள்விகளை எழுப்புகிறார்.

மானிலிருந்து பரிணாமம் அடைந்ததா ஒட்டக சிவிங்கி?


இந்த தலைப்பே தவறு. வாழும் சமகால வெவ்வேறு உயிரிகள்[species] ஒன்று மற்றொன்றின் முன்னோராக இருக்க முடியாது. மான், &ஒட்டக் சிவிங்கிக்கு ஒரு முன்னோர் உயிரி என்பதே சரி.

ஒட்டக சிவிங்கி பற்றி அறிய வேண்டுமெனில் விக்கிபிடியா பார்த்தாலே போதுமே.


பரிணாமம் என்பது புவியியலுடன் நெருங்கிய தொடர்பு உடையது. ஒரு இடத்தின் சூழலுக்கு ஏற்ப விலங்குகளே பரிணமிக்கும் ,அந்த வகையில் ஒட்ட்க சிவிங்கி ஆப்பிரிக்காவில் 80 இலட்சம் ஆன்டுகளுக்கு முன் பரிணமித்தது.

கிராஃபிடே ஏன்னும் பேரினத்தில்[genus] 10 உயிரிச் சிற்றினங்களில்  ஒட்டக சிவிங்கி மற்றும் ஒகாப்பி[okapi]மட்டுமே இன்றும் வாழ்கின்றன.

கழுத்து அளவில் இடைப்பட்ட ஒரு உயிரி ஹெல்லெடோதெரியத்தின் படிமம். இது மறைந்த ஒரு உயிரி ஆகும்.


Skeleton of Helladotherium

ஆகவே சகோ சு.பியின் கருத்துகள் அனைத்தும் தவறே. இந்த தவறு ஏன் நிகழுகிறது என்றால் (உயிரி) குழு மரபியல்[poppuation genetics] என்பதின் அடிப்படையில் பரிணாமத்தை புரியாததுதான்.



சிவிங்கியின் பரிணாம் வரலாறு, புவியியல்&படிம சான்றுகள், பல வகையான விளக்கங்கள் ஏற்கெனவே ஆவணப்படுத்தப்பட்டு ஆய்வுகள் அதைத் தாண்டி சென்று விட்டன. ஆகவே ஒவொன்றையும் மிகச் சரியாக அறிய  ஆரவ்முள்ளவர்கள் மட்டுமே முயற்சிக்கலாம். இதோ ஒரு எ.கா ஆய்வுக் கட்டுரை.

http://www.bringyou.to/GiraffeEvolution.pdf

இக்கட்டுரை& அதனுடைய மூலக்கட்டுரைகள் அனைத்தும் படித்து சில முனைவர் பட்ட கட்டுரைகளே உருவாக்க முடியும்.

ஒட்டக் சிவிங்கிகளின் இயற்கை வரலாறு பற்றி எழுதப்பட்ட ஒரு புத்தகம்!!!

A Natural History of Giraffes

A Natural History of Giraffes

ஆகவே ஒட்டக சிவிங்கியின் பரிணாம வரலாறு பற்றி அறிவியல் உலகில் எந்த சந்தேகமும் இல்லை என்பதை பதிவு படிப்பவர்கள் அறிந்தால் போதும். கொஞ்சம் எண்ணிப் பாருங்கள் பரிணாமம் என்பது 450 கோடி ஆண்டு வரலாறு, இதுவரை தோன்றிய பில்லியன் கணக்கான உயிரிகளின் வரலாறு!!.

இதில் ஏதோ ஒன்றைப் பற்றி கேள்வி கேட்பது சுலபம். பதில் தேடி எடுப்பது கொஞ்சம் கடினம் என்றாலும் இணையத்தில் சாத்தியமே!!. இதில் மிக கடினம் என்பது அனைத்து ஆய்வுக் கட்டுரைகளையும் அனைவரும் புரிவதுதான்.

நாம் மீண்டும் மீண்டும் சொல்வது பரிணாமத்தின் மீது எதிர்ப்புக் கருத்துகள் பரப்புபவர்கள் மதவாதிகள் மட்டுமே!!!.அறிவியல் உலகில் பரிணாம நிகழ்வு என்பது முழு அளவில் ஏற்கப்பட்டட விடயம்.

பரிணாமம் என்பது நிகழவே இல்லை, இதுவரை தோன்றிய உயிரிகள் அனைத்தும் எப்படி,எப்போது தோன்றியது எனத் தெரியாது  என்பதும் மதவாதிகளின் கருத்து மட்டுமே!!!

ஆக‌வே நாம் சொல்வ‌து ப‌ரிணாம‌ம்  ம‌ர‌பிய‌ல் சார்ந்து எளிதாக‌ புரிய‌ முடியும்.

1. ஒவொரு உயிரியின் ஜீனோமும் தலைமுறைரீதியாக‌ சிறிது மாறுகிற‌து.

2.இது குறுகிய காலத்திலேயே பல்வேறு உரு அளவு,தோற்றம் போன்றவற்றில் வித்தியாசம் ஏற்படுத்துகிறது. பல குறிப்பிட்ட மாற்றங்களை ஏற்படுத்தும் ஜீன்களை கண்டறிந்து ஆவணப் படுத்து உள்ளனர்.இது சிறு ப‌ரிணாமம்[micro evolution] என‌ப்ப‌டுகிற‌து. இதனை உறுதிப்ப‌டுத்தும் சான்றுக‌ள் உள்ள‌தால் யாரும் ம‌றுப‌தோ எதிர்ப்ப‌தோ இல்லை!!


3. நெடுங்காலத்தில் குழு ம‌ர‌பிய‌லின் ப‌டி ஒரு உயிரிக் குழு சில‌ சிற்றினங்க‌ளாகபிரிவதும், உரு அமைப்பு மாறுவதும் நிகழ்கிறது. இது பெரும் ப‌ரிணாமம்[macro evolution] என‌ப்ப‌டுகிற‌து. இது பல மில்லியன ஆண்டுகளில் நிகழ்வதால் மறுப்பு, எதிர்ப்பு மதவாதிகளிடம் இருந்து வருகிறது.

Macro evolution= Morphological change+ speciation

நாம் மதவாதிகளுக்கு சொல்வது இதுதான்.இனிமேல் படிம வரலாறு பற்றி எழுதி பரிணாமம் தவறு என காட்டுவது முடியாத செயல். ஏன் எனில் படிம வரலாறு தாண்டி மரபியலே[genetics] பரிணாமத்தின் அதி முக்கிய சான்றுகளாகவும், பல ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் உள்ளது.

ஜீனோம் மாறுவது உண்மை என்றாலும் இந்த மாற்றங்கள் சிற்றினமாதல்[speciation], உரு அமைப்பு மாற்றம்[morphological change] ஏற்படுத்தவே முடியாது என மதவாதிகள் ஆய்வுக் கட்டுரை ஒன்று இட்டு விட்டால் பரிணாமம் மரபியல் ரீதியாக பொய்ப்பிக்கப் பட்டு விடும்.


இதைச் செய்யாதவரை பரிணாம அறிவியலின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது!!! நன்றி!!!!!!!!!!!!!!

30 comments:

  1. சகோ.சார்வாகன் ,

    நல்ல விளக்கம்.

    ஹி...ஹி நான் சு.பி.சுவாமிகள் பதிவில் சொன்னது, கேட்டது எதற்கும் சரியான பதிலே சொல்லவில்லை என்பதை நீங்கள் கவனித்து இருக்கலாம்.

    ஆதி மனிதன் உயரமானவன் என சொல்லிவிட்டு அதற்கும் ,குரானில் சொல்லப்பட்ட நபி சாலே வை தான் உதாரணம் சொல்கிறார் ,இல்லை எனில் வாசல் படி உயரமாக இருக்கு என்கிறார், ஆனால் சவுதி அரசே ,அது கல்லறை என சொல்லி இருப்பதை குறித்து கேட்டால் ,நான் விளக்கம் கேட்கிறேன் என்கிறார் :-))

    இடையே சிலரை அனுப்பி குழப்ப கேள்வி கேட்க வைக்கிறார் ,அவர்கள் கேட்டதற்கு பதிலும் சொன்னால், இது தொடர்பில்லை நான் சொன்னது மத்யன் என்கிரார்கள், மத்யன் என்று சொன்னதே தப்பு மதாயின் தன் சரி என்றால் , ஹி..ஹி அது வேறு இது வேறு என்றார்கள், ஆனால் படத்தில் இருப்பது மதாயின் சாலே என்றால்... ஆமாம் என்றும் சொல்கிறார்கள், பின்னர் மீண்டும் மத்யன் இனக்குழு என்கிறார்கள் :-))

    மதாயின் என்றால் நகரம் ,எனவே அதனை பொதுவாக தான் சொல்ல வேண்டும் என்றால் ,அப்படி அரபியில் இல்லை என்றார்கள், மதாயின் என்பதன் அரபி பொருளை சுடியுடன் சொன்னால் கள்ள மவுனம் சாதிக்கிறார்கள்.

    ஆக மொத்தம் அரபி சொல்லை சொல்லி குழப்ப வேண்டியது,நாம் அதற்கான பொருள் அறிந்து திருப்பி சொன்னால் ,பதிலே சொல்லாமல் ,ஓடி விடுவது என கண்ணாம்பூச்சி ஆடுகிறார்கள், நாமே வெறுத்து போய் சும்மா இருந்தால்,ஆகா நாம் சொன்னது உண்மை என்பதால் ஓடிவிட்டார்கள் என்பார்கள்,அதற்கும் ஒரு மார்க்கப்பந்து கூட்டாம், வாரே வாஹ் என கை தட்டும் :-))

    எதாவது புரிந்ததா ? இதே போல தான் முன் பின் முரணாக பேசிக்கேள்வி கேட்பவரை துறத்த கூட்டமாக இயங்குகிறார்கள் :-))

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ வவ்வால்,

      நம்ம மார்க்க சகோக்களுக்கு இதே வேலைதான் , வாழும், மறைந்த ஏதோ ஒரு உயிரியின் படிம வரலாற்றில் ஏதேனும் இடைப்பட்ட படிமம் அதிகம் இல்லை என தெரிந்தவுடன் எப்புடீ வந்தது?? எனக் கேள்விதான் உடனே வரும்.

      படிமம் கிடைப்பது நம் கையிலா இருக்கிறது? ஏதோ கிடைத்ததை வைத்து இந்த அளவு விள்க்கம் முடிவதே பெரிய விடயம். தோன்றிய உயிரிகளில் 99% மறைந்து விட்டது.இதற்கு படைப்புக் கொள்கையில் என்ன விளக்கம் கொடுக்க முடியும்? அதுவும் படிம வரலாற்றின் படி ஒவ்வொரு உயிரியின் தோற்றக் காலம் [,மறைவுக் காலம்] வேறுபடுகிறது,அதாவது வெவ்வேறு கால இடைவெளிகளில் வெவ்வேறு உயிரிகள் வாழ்ந்துள்ளன.

      இதெல்லாம் புரிந்தால் ஏன் இப்படி இருக்கிறார்கள்???
      மரபியலும் பரிணாம்த்தை வழிமொழிந்தவுடன் வஹாபி சகோக்கள் அகமதியா முஸ்லிம்கள் போல் வழிநடத்தப் பட்ட பரிணாம் என்ற பிரச்சாரத்திற்கு மாறி இருக்க வேண்டும். இன்னும் கொஞ்ச நாள் ஆகும்.

      இது எப்போது நிகழும் எனில் அதாவது பழ ஈ ஜீனோம் பரிசோத்னை போல் பல் உயிரிகளின் ஜீனோம் மீதான மாற்ற நிகழ்வுகள் ஆவணப் படுத்தல் நடக்கும் போது மாறிவிடுவார்கள் என கூகிளாண்டவர்,ப்ளாக்கர், கம்ப்யுட்டர்,கீபோர்ட்,மத்ர்போர்ட்,தமிழ்மணம்,இன்ட்லி, இதர திரட்டிகள் அனைத்தின் மீதும் சத்தியம் செய்து கூறுகிறேன்.

      அவர்கள் எழுப்பும் ஒவ்வொரு பரிணாம் எதிர்ப்புக் கேள்விக்கும் பதில் அளிக்கப் படும்.

      நன்றி!!!

      Delete
  2. பத்தடி உயரமுள்ள மனிதன் ஆறடியாக மாறியது எனப் படைப்புக் கொள்கைவாதிகளிடும் வினவியமைக்கு இன்னும் பதிலைக் காணோம், கொஞ்சம் கேட்டு சொல்றீங்களா ? ஹிஹி !!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பர் இ.செ,
      அவர்கள் சொல்லும் எதற்கும் ஆதாரம் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் காட்டிய ஆதரம் அனைத்துமே போலி என்றால் அதைப் பற்றி மூச்சி காட்ட மாட்டார்கள்.வேண்டுமெனில் இப்படி சொல்வார்கள். 10 அடி மனிதன் இருந்ததே இல்லை என நிரூபிக்க நம்மை கேட்பார்கள்.

      "அதாவது கடவுள் இல்லை என நிரூபிக்க முடியாததால் கடவுள் உண்டு" என்ற தத்துவத்தின் மறுபக்கம்.

      ஹி ஹி

      நன்றி

      Delete
  3. சார்வாகன், இது விவாதத்திற்கு உபயோகமாக இருக்கும்; அடுத்த பின்னூத்டத்தில் மேலும்...

    இதன் சாரம்: உடம்பிலுள்ள நிறைய பாகங்கள் உபயோகப்படுத்தாவில் rudimentary ஆகி விடும்!

    Human vestigiality:

    Ref: http://en.wikipedia.org/wiki/Human_vestigiality

    copy and pasted...


    [[Coccyx: The coccyx, or tailbone, is the remnant of a lost tail. All mammals have a tail at one point in their development; in humans, it is present for a period of 4 weeks, during stages 14 to 22 of human embryogenesis.[14] This tail is most prominent in human embryos 31–35 days old.[15] The tailbone, located at the end of the spine, has lost its original function in assisting balance and mobility, though it still serves some secondary functions, such as being an attachment point for muscles, which explains why it has not degraded further.

    In rare cases congenital defect results in a short tail-like structure being present at birth. Twenty-three cases of human babies born with such a structure have been reported in the medical literature since 1884.[16][17]]]

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பர் நம்பள்கி,
      இந்த வெஸ்டிஜியல் உறுப்புகள் பற்றியும் பெரிய விவாதப் போரே நடந்து இருக்கிறது. அப்பென்டிக்ஸ் என்பது பாக்டீரியா சேர்த்துவைக்கும் அமைப்பாக உள்ளதால் அதற்கு பயன் உண்டு என்கிறார்கள்.

      அதாவது ஒரு உறுப்பு இல்லாமல் போய்விட்டால் அது எப்போதும் இருந்தது இல்லை என்பார்கள், செயல் இழந்தால் இல்லை வேறு செயல் உண்டு என்பார்கள்.

      மாற்றம் என்பது உடலில் ஒவ்வொரு உறுப்பிலும் ஏற்படுகிறது என்பதையோ, ஒரு குழுவின் சராசரி மாற்றங்கள் மாறுவதையும் உணர மறுக்கிறார்கள்.உணர்ந்தாலும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
      நன்றி

      Delete
  4. மண்வெட்டி கடப்பாரை உபயோகப்படுத்தி மண்வேலை செய்பவர்கள் கையில் காப்பு காய்த்திருக்கும். இல்லாவிடில் தோல் வழண்டு விடும். இதன் சாரம்: சுற்றுபுறம் (Environmental factors) மனித உடம்பில் ஓரிரண்டு மாதத்திலேயே மாற்றங்கள் உண்டுபண்ணும் போது, மில்லியன் வருடாங்களில்!? ஆம்! நம் உடம்பு அதன் சுற்றுபுறம் (Environmental factors) தேவைக்கு ஏற்ப மாறும்; மாறாவிட்டால் சங்கு அப்புறம் பால் தான்!

    பூமத்திரேகை அருகில் இருப்பவர்கள் கருப்பாக இருப்பதன் காரணம் in order to adpat to high temperature => more of melanin pigments => black skin => to protect UV rays (sunscreen) => again adaptation to suit the environment!

    ReplyDelete
    Replies
    1. நண்பரெ,
      அவர்கள் இந்த சிறுபரிணாம மாற்றங்களை [வேறுவழியில்லாமல்] ஏற்கிறார்கள். ஆதம்,ஏவாள் இடம் இருந்தே அனைத்து மனித இனமும் என்ற கொள்கைக்கு இது பொருந்துவதால் அவர்களுக்கும் இது பிடிக்கிறது.

      அவர்கள் சொல்வது ஒரு உயிரி இன்னொரு உயிரியாக மாறாது என்பதுதான். ஒரு உயிரியின் வரையறுப்பு என்பதேஒரு ஃபஜி போன்றது, நீண்டகால்த்தில் ஒரு உயிரி இரு அல்லது மேற்பட்ட வித்தியாசமான் உயிரிகளாக பிரியலாம் என்றால் அவர்களுக்கு புரியவே புரியாது!!!

      நன்றி

      Delete
  5. கான்சர் மற்றொரு உதாரணம்; வெளி factors நம் உடம்பில் மாற்றம் கொண்டு வரும். ஒரு முப்பது வருடத்தில் கண்டமேனிக்கு திசுக்கள் வளரும் போது, மில்லியன் வருடங்களில் மனிதனுக்கு எவ்வளவு மாற்றம் ஏற்படும்!? சிந்தியுங்கள்!

    கை உடைந்தால் 28 நாள் கழித்து கட்டு பிரிக்கும்போது கை சூம்பியிருக்கும்; அர்த்தம்: disuse atrophy! அதிகமாக உபயோகப்படுத்தினால் அந்த தசைகள் hypertrophy ஆகும்! அதை over use hypertrophy or abuse hypertrophy என்றும் சொல்லலாம். நம்ம மாற்றான் சூர்யா மற்றும் தாண்டவம் விக்ரம் அல்லது தசாவதாரம கமல் மாதிரி!

    மருத்தவக்கல்லூரியில் படிக்கும் போது நான் என் நண்பர்களிடம் பந்தயம் கட்டி எல்லா பந்தயத்திலும் ஜெயித்திருக்கிறேன்...!

    என்ன பந்தயம்?

    எங்கள் நோயாளிகள், RIGHT HANDED PERSON OR LEFT HANDED PERSON என்பதை சரியாக சொல்லிவிடுவேன்! தமிழில், எங்கள் நோயாளி ஆண்கள் அதிகமாக உபயோகப்படுத்தும் கை வலது கையா இடது கையா என்று பார்த்தவுடன் சொல்லிவிடுவேன்!

    எப்படி நான் ஜெயித்தேன்! அந்த ஆண் நோயாளிகளிடம் ஒரே கேள்வி தான் நான் கேட்பேன்....

    என்ன கேள்வி? உங்களுக்குக் திருமணம் ஆகிவிட்டதா...?!

    Ref: www.ncbi.nlm.nih.gov
    [[Cancer is the uncontrolled growth of abnormal cells in the body. Cancerous cells are also called malignant cells.}}

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, இபோது லாமார்கீயமும் பரிணாம செயலாக்கங்களில் ஒன்றாக ஏற்கப்பட்டாலும், எந்த அள்வுக்கு செயல் புரிகிறது என்பதும் ஆவணப் படுத்தப்படுகிறது.
      இந்த மாற்றங்களையும் சகோக்கள் மறுக்க மாட்டார்கள். இவை தலைமுறைரீதியாக் கடத்தப் படுமா என்பதே பரிணாமத்தில் கேள்வி

      நன்றி!!!

      Delete
  6. வணக்கம் சகோ,

    விளக்கம் அருமையாக இருந்தது ஒட்டகச்சிவிங்கி மற்றும் கங்காருவின் விளக்கத்தை எளிமைப்படுத்தி தமிழில் ஒரு பதிவாக இடும்படி கேட்டுக் கொள்கிறேன். கழுத்து ஏன் நீண்டுகிச்சு,பை(கங்காருக்கு)எப்படி ஏன் வந்துச்சு என இந்த மூமீன்கள் தொல்லை தாங்க முடியல. //பரிணாமம் என்பது நிகழவே இல்லை, இதுவரை தோன்றிய உயிரிகள் அனைத்தும் எப்படி,எப்போது தோன்றியது எனத் தெரியாது என்பதும் மதவாதிகளின் கருத்து மட்டுமே!!!//

    மூமின்க‌ளின் "தெரியாது" என்ப‌து அல்லா என்கிற‌ முக‌ம்ம‌துக்குத் தெரியாது அத‌னால் இதுப‌ற்றி அறிவிய‌லுக்கும் தெரியாது என்ப‌தே ம‌த‌வாதிக‌ளின் க‌ருத்தாக‌ நாம் எடுத்துக் கொள்வோம்.//இக்பால் செல்வன்October 26, 2012 4:08 AM
    பத்தடி உயரமுள்ள மனிதன் ஆறடியாக மாறியது எனப் படைப்புக் கொள்கைவாதிகளிடும் வினவியமைக்கு இன்னும் பதிலைக் காணோம், கொஞ்சம் கேட்டு சொல்றீங்களா ? ஹிஹி !!!//

    ப‌த்த‌டியா?? அறுப‌து முழ‌ம் என்ற‌ல்ல‌வா நினைத்திருந்தேன்! அப்ப‌ அறுப‌து முழ‌ம் அல்லாவுடைய படைப்புக் கருத்து பொய்யா?

    ந‌ன்றி.....



    ReplyDelete
    Replies
    1. சகோ இனியவன்
      பத்விலேயே கூறியிருக்கிறேன் அல்லவா,இந்த ஒட்டக சிவிங்கி,ஒகாப்பி ஆகியவை உடன் இன்னும் 8 வகை உயிரி சிற்றினங்கள் தோன்றின. அவைகளின் கழுத்துகளும் வெவ்வேறு அளவுகள் கொண்டவை.அதில் இந்த இரண்டு மட்டுமே இயற்கைத் தேர்வில் வெற்றி பெற்றன.

      ஒரு உறுப்பில் ஏற்படும் அபரித வளர்ச்சி என்பது சில [ஹோக்ஸ்]ஜீன்களில் ஏற்படும் மாற்றம் ஆகும்.

      http://bioserv.fiu.edu/ortegaj/CHAPTER10_SPR.pdf

      பரிணாமம் என்பது படிம வரலாறு, மரபியல் ஆய்வுகள் மூலமே சரி பார்க்கப்படுகிறது. மரபியல் என்பது வளரும் துறை என்பதால் பல் கேள்விகளின் விடைகள் தேடப்பட்டே வருகின்றன.

      சிவிங்கியின் படிம வரலாற்றில் இருந்து கழுத்து நீண்டது மட்டுமே அறிய முடியும். ஹோக்ஸ் ஜீன்களில் ஏற்படும் எவ்வகையான மாற்றம் இதனை ஏற்படுத்துகிறது,இந்த மாற்றத்தை ஏற்படுத்துவது இயற்கைத் தேர்வா,பாலியல் தேர்வா,நியுட்ரல் மாற்றமா என்பதெல்லாம் அனைவராலும் அறிய,புரிய‌ இயலாது,

      மரபியல்ரீதியான ஆய்வுகள் ஒவ்வொரு கேள்விக்கும் மிகத் தெளிவான விடை கொடுக்க இன்னும் கொஞ்சம் காலம் செல்லும். அதன் பிறகு இம்மாதிரி கேள்விகள் இருக்காது.


      நன்றி

      Delete
  7. "ப‌த்த‌டியா?? அறுப‌து முழ‌ம் என்ற‌ல்ல‌வா நினைத்திருந்தேன்! அப்ப‌ அறுப‌து முழ‌ம் அல்லாவுடைய படைப்புக் கருத்து பொய்யா? "
    பத்தடி சுவன பிரியன் சுவாமிகளோட கணக்கு.
    அறுபது முழம் அல்லா சுவாமிகளோட கணக்கு
    நம்ம துரை டானியல் ஏதாவது தனியா கணக்கு வச்சிருப்பார். கேட்டு பார்க்கணும்

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பர் எதிகலிஸ்ட்
      கருத்துக்கு நன்றி

      Delete
  8. வழக்கம் போல் அருமையான விளக்கம் .
    சுபி பதிவில் வவ்வால் தலையால் தண்ணி குடித்து பார்த்துவிட்டார் ஒன்னும் நடக்க வில்லையே .
    பொதுவாக பண்டைய கிரேக்க ரோமானிய கட்டிடங்களை பார்த்தால் பிரமிப்பாக இருக்கும் . . மிக பெரிய நுழை வாயில்கள் . விஸ்தாரமான அறைகள் . ஏன் ஜன்னல்கள் கூட பெரிதாக தான் இருக்கும் . இதற்க்கு என்ன காரணம் இருக்க முடியும் . சுபி பார்வையில் மனிதன் அவ்வளவு பெரிதாக இருந்தான் என்பது மட்டும் தான் . ஆனால் அப்போது மின்சாரம் இல்லாத காலகட்டம் இயற்க்கை வெளிச்சம் , காற்று என்று எல்லாவற்றிற்கும் இயற்கையை நம்பிதான் இருந்திருக்க வேண்டும் . அதனால் பொது மக்கள் அல்லது ஆட்சியாளர்கள் கூடும் இடங்கள் இப்படி பெரிதாக இருந்திருக்க வேண்டும் . மேலும் நெருப்பின் மூலம் தான் வெளிச்சம் பெற்றிருப்பார்கள் . அதன் புகை சிறிய அறையாக இருந்தால் ஏற்ப்படும் அசவ்கரியத்தை தவிர்க்க இப்படி பெரிதாக கட்டவேண்டிய கட்டாயம் இருந்தது .
    சரி ஒரு விஷயத்தை அவர் கவனிக்க மறந்துவிட்டார் . இந்த மாதிரி பிரம்மாண்ட வாயில்களை கொண்ட கட்டிடத்திற்கு ஏறி செல்லும் படிகளை பார்த்தீர்கள் என்றால் . அவை சாதாரண மனிதர்கள் நடந்து செல்லும் படிதான் வடிவமைக்க பட்டிருக்கும் . 12 அடி மனிதன் இந்த படிகளில் ஏறினால் கால் இடறி கீழே விழுந்து விடுவான் அல்லது நான்கு படிகளாக தாண்டிதான் போக வேண்டி இருக்கும் . எதற்கு லூசுத்தனமாக படிகளை மட்டும் சிறிதாக கட்டினார்கள் என்று சு.பி.இடம் கேட்டு சொல்லவும் .
    அண்டார்டிக்காவில் வாழும் எஸ்கிமோக்கள் இக்லூவில் வாழ்கிறார்கள் . அதன் நுழைவாயில் மூன்று அடிதான் . சூனா.பானா. சொல்றாரு மனிதன் ரெண்டு அடி வாழ்ந்ததற்கு ஆதாரம் கிடைத்துவிட்டது என்று ..........:-)

    இதை அங்கு போட்டால் பப்ளிஷ் பண்ண மாட்டாரு ...என்ன பண்றது அவருக்கு ஜெயிக்கணும் . அவரு பரமார்த்த குரு
    நாலு சீடர்களை வேறு வைத்திருக்கிறார் . அவரை நம்மால் ஜெயிக்க முடியும் என்று எனக்கு தோன்றவில்லை ..

    ReplyDelete
    Replies
    1. //இந்த மாதிரி பிரம்மாண்ட வாயில்களை கொண்ட கட்டிடத்திற்கு ஏறி செல்லும் படிகளை பார்த்தீர்கள் என்றால் . அவை சாதாரண மனிதர்கள் நடந்து செல்லும் படிதான் வடிவமைக்க பட்டிருக்கும் . 12 அடி மனிதன் இந்த படிகளில் ஏறினால் கால் இடறி கீழே விழுந்து விடுவான் அல்லது நான்கு படிகளாக தாண்டிதான் போக வேண்டி இருக்கும் . எதற்கு லூசுத்தனமாக படிகளை மட்டும் சிறிதாக கட்டினார்கள் என்று சு.பி.இடம் கேட்டு சொல்லவும் .//

      SUPER THINKING.. NEENGA ORU VILLAGE VINGNANI BOSSS.. Really brilliant

      Delete
    2. வாங்க சகோ அஞ்சா சிங்கம்,
      ஹா ஹா ஹா நல்ல கேள்வி,
      வாசல் பெரிதாக இருந்தால் படி ஏன் சின்னதாக உள்ளது? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

      இதற்குத்தான் நம் சகோகள் எப்போதும் சான்று கொடுப்பதைவிட நம்மிடம் சான்று கேட்பதையே விரும்புகின்றார்!!!!!!!!

      நன்றி

      Delete
    3. வாங்க சகோ Jenil
      நன்றி

      Delete
  9. அஞ்சா ஸிங்கம்,

    //சுபி பதிவில் வவ்வால் தலையால் தண்ணி குடித்து பார்த்துவிட்டார் ஒன்னும் நடக்க வில்லையே .
    //

    தலையால மட்டுமா ,காது,மூக்கு வாயின்னு நவத்துவாரத்தாலும் தான் :-))

    நான் சொன்ன எதுக்குமே பதிலே இல்லை ,ஒரு சப்ஸ்டீடுட் வச்சு சமாளிச்சார் :-))

    தாஜ்மஹால், கிராமத்து குடிசை, பழங்கால முதுமக்கள் தாழி ,கோயில், பிரமிட்,மம்மின்னு எல்லாம் சொல்லியாச்சு.

    நீர் சொன்ன லாஜிக் அருமை, படிக்கட்டு ஏன் சின்னதா இருக்கு என்பது.

    ஆனால்.சு.பி.சுவாமிகள் கேரக்டரையே புரிஞ்சுக்கலையே,

    படிக்கட்டு எல்லாம் பிற்காலத்தில் நாம போய் பார்க்க கட்டியது, அக்காலத்தில் படிக்கட்டே இல்லை, உயரமான மக்களுக்கு படிக்கட்டு தேவையில்லை,அப்படியே எகிறி குதிச்சு உள்ள போயிடுவாங்க என சொல்வாராக்கும் :-))

    இங்கே ஒரு கேள்வி:

    ஆதி மனிதனை 60 முழத்தில் (அடின்னு தான் நினைக்கிறேன்) படைத்தார் எனில் , அப்போது ஒட்டகம் எம்மாம் பெருசு இருந்திருக்கும், அதன் எலும்பு, படிமம் போன்றவை ஏன் கிடைக்கவில்லை :-))

    நமக்கு இப்போ டைனோசரின் படிமங்கள் எல்லாம் கிடைக்குது,அப்போ ஒட்டகமும் டைனோசர் அளவுக்கு இருந்திருதால் அதன் படிமமும் கிடைத்திருக்குமே :-))

    விட்டால் டைனோசர் தான் ஒட்டகம்னு சொன்னாலும் சொல்வாரு சுவாமிகள் :-))

    ReplyDelete
    Replies
    1. சகோ வவ்வால்,
      இப்படி எல்லாம் கேள்வி கேட்டால் பாவம் சு.பி என்ன செய்வார்? அந்த மத்யன் குகையும்,ஆதம் 60 முழ(90அடி) ஹதிதும், 10+ அடி உயர மனிதன் அவரை மிகவும் கஷ்டப் படுத்துகிறது. ஹதிதை யூதன் இட்டுக் கட்டியது என [வழக்கம் போல்] சொல்லி விடலாம். அந்த குகை, படிக்கட்டு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

      அத்தாட்சி அத்தாட்சி என எதுவுமே அவரால் கொடுக்க முடியலையே
      நன்றி

      Delete
  10. சகோ சார்வாகன்,

    ஹா, ஹா.... சாட்டையடி கார்ட்டூன்...கடவுளின் இறைதூதர்கள்?? சைபர் கிரைமில் புகார் செய்தாலும் செய்வார்கள். மொழி பெயர்ப்பு

    (கடவுள் மனிதனை அறிவார்ந்த படைப்பாக படைக்கும் முயற்சியில் சொல்கிறார்) : பூர்ணமான, ஒரு வகை அறிவார்ந்த வடிவமைப்பை செய்ய முயற்சி செயதுகொண்டிருக்கிறேன். ஆனால் என்னால்- எளிய சிந்தனையுள்ள, பிற்போக்கு கருத்துள்ள,அடிப்படைவாதமுள்ள , மதவெறியுள்ள- மனித கொத்துக்களைதான் மீண்டும் மீண்டும் ஏற்படுத்தமுடிகிறது. இவைகளை அனைத்தும் பரிணாமம் அடைய அப்படியே விட்டுவிட வேண்டும் என நினைக்கிறேன்.

    அருமையான தலைப்பு. பதிவில் தந்த சுட்டிகளில் படிக்கவேண்டியது அதிகம் உள்ளது.

    சு.பி.க்கு கூலிகள் கிடைப்பதை தடுக்க நினைப்பதற்கு கடும் கண்டனம்.
    இப்படி பதிவுகளே எழுதாமல், ஒரு பேச்சுக்கு சு.பி மவுதாகிவிட்டாரு என்று வைத்துகொள்வோம், அல்லா சு.பி யிடம் கேட்பார் ப்ளாக்கில் என்ன செய்துகொண்டிருந்தாய் என்று. அவர் தாவா பணி செய்துகொண்டிருந்தேன் என்றால், சு.பிக்கு 72 அடைய அதிக மார்க். ஒரு வேளை சார்வாகன் சு.பிக்கு முன்னதாக மவுதாகிவிட்டார் என்றால், அல்லாசாமி விசாரணையில், சு.பி ப்ளாக்கில் தாவா பணி செய்துகொண்டிருந்தார், நான்தான் தலைகணத்துடன் அவர் பேச்சை கேட்காமல் இப்லீஸ் வார்த்தையில் மயங்கிவிட்டேன் என்று மன்றாடுவார். ஆனால் கடவுள் கருணையே காட்ட மாட்டார், ஏனென்றால் அவர்தான் சார்வாகன் இப்படிதான் இருப்பார் என்று ஏற்கன்வே சொர்க்க புக்கில் எழுதிவிட்டாரே. அப்படியிருக்கும்போது அவர் எழுதியும் சார்வாகன் எப்படி மாறுவார், அவரும் எப்படி மன்னிப்பார். அதனால் சார்வாகனுக்கு மைன்ஸ் மார்க், நேராக நரக்த்தில் தீயில் புது புது தோலுடன் வேக வேண்டியதுதான். ஆனால் சார்வாகனின் மைனஸ் மார்க்க சு.பிக்கு பிளஸ் மார்க். சு.பிக்கு நேராக 72 தான்.

    மற்ற படிக்காத பதிவுகளையும் படித்து விட்டு வருகிறேன்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ நரேன் நலமா?
      ஒரு உயிரியின் உடலில் படிப்படியான மாற்றம் ஏற்படுவதோ, புதிய உறுப்பு தோன்றுவதோ, ஏற்கெனெவோ இருக்கும் உறுப்பு மறைவதோ மரபியலில் எளிதாக் விள்க்க முடியும் என்றாலும், சரியான ஆய்வுக் கட்டுரைரீதியான விளக்கம் பல்ருக்கும் புரியாது என்ற ஒரே நம்பிக்கையில் சகோ சு.பி உள்ளிட்ட மத பிரச்சாரகர்கள் விமர்சிக்கிறார்.
      http://kingsley.stanford.edu/sticklebacks.html
      *************
      Hox Genes: Descent with Modification
      As mentioned throughout this book, the expression of Hox genes provides the basis for anterior-posterior axis specification throughout the animal kingdom. This means that the enormous variation of morphological form in the animal kingdom is underlain by a common set of instructions. Indeed, one of the most remarkable pieces of evidence for deep homologies among all the animals of the world is provided by the Hox genes. As mentioned in Chapter 11, not only are the Hox genes themselves homologous, but they are in the same order on their respective chromsomes. The expression patterns are also remarkably similar between the Hox genes of different phyla: the genes at the 3′ end are expressed anteriorly, while those at the 5′ end are expressed more posteriorly (Figure 22.2). As if this evidence of homology were not enough, Malicki and colleagues (1992) demonstrated that the human HOXB4 gene could mimic the function of its Drosophila homologue, deformed, when introduced into Dfd-deficient Drosophila embryos. Slack and his colleagues (1993) postulated that the Hox gene expression pattern defines the development of all animals, and that the pattern of Hox gene expression is constant for all phyla.*
      http://www.ncbi.nlm.nih.gov/books/NBK9978/
      *********
      நாம் சொல்வது இந்த ஹோக்ஸ் ஜீன் மாற்றங்கள் உடல் வடிவமைப்பில் மாறுதல்களை உண்டாக்குகிறது என்பது அனைவருக்கும் புரிந்து விடும் வரையே.
      இது எப்புடீ வந்தது? என்ற கதை நீடிக்கும்!1

      நன்றி

      Delete
    2. நரேன் ,சார்வாகன் வெளிப்படையாக மட்டுமே இப்படி எழுதிக் கொண்டு இருக்கிறார்.ஆனால் அவரது உள்ளம் இறைவனுக்கு இணை வைக்காமல் ,இறைவனை ஏற்று அவனை வணங்கிக் கொண்டிருப்பதை இறைவன் அறிந்துள்ளதால் ,அவரை மன்னித்து ,அவருக்கும் சுவர்க்கம் கிடைக்க வாய்ப்புகள் இருக்கலாம் .

      Delete
  11. http://www.huffingtonpost.com/2012/10/25/ostrich-dinosaurs-feathered-fossils-mate_n_2019453.html
    Ostrich Dinosaurs: Feathered Ornithomimid Fossils Support Dino Mate Theory
    (Reuters) - The ostrich-like dinosaurs that roamed the Earth millions of years ago were adorned with feathers, used to attract a mate or protect offspring rather than for flight, according to the findings of Canadian scientists released on Thursday.

    Researchers from the Royal Tyrrell Museum of Palaeontology, and the University of Calgary made the discovery in the 75-million-year-old rocks in the badlands of southern Alberta.

    The ostrich-like dinosaurs, known as ornithomimids, were thought to be hairless, fleet-footed birds and were depicted as such in the Hollywood movie Jurassic Park.

    But the researchers found evidence of feathers with a juvenile and two adult skeletons of ornithomimus, a species within the ornithomimid group.

    "The discovery, the first to establish the existence of feathers in ornithomimids, suggests that all ostrich-like dinosaurs had feathers," according to a statement from the Alberta museum.

    It said the specimens also revealed that the dinosaurs boasted a base of down-like feathers throughout their lifetime while older ones developed feathers on their arms, approximating wings.

    But the dinosaurs would have been too large to fly, so the plumage might have been employed to attract a mate or in the protection of eggs during hatching.

    The findings by the paleontologists Francois Therrien, curator at the Royal Tyrrell Museum, and Darla Zelenitsky, assistant professor at the University of Calgary, will be published on Friday in Science, a leading journal.

    The fossils were discovered in sandstone and were the first feathered dinosaur specimens found in North America, according to the museum statement. Previously feathered dinosaur skeletons have been recovered almost exclusively from fine-grained rocks in China and Germany.

    (Reporting By Russ Blinch; editing by Todd Eastham)

    ReplyDelete
  12. http://www.sciencemag.org/content/338/6106/510

    Feathered Non-Avian Dinosaurs from North America Provide Insight into Wing Origins
    Darla K. Zelenitsky1,*, François Therrien2,*, Gregory M. Erickson3, Christopher L. DeBuhr1, Yoshitsugu Kobayashi4, David A. Eberth2, Frank Hadfield5
    + Author Affiliations

    1Department of Geoscience, University of Calgary, Calgary, Alberta T2N 1N4, Canada.
    2Royal Tyrrell Museum of Palaeontology, Drumheller, Alberta TOJ OYO, Canada.
    3Department of Biological Science, Florida State University, Tallahassee, FL 32306–4295, USA.
    4Hokkaido University Museum, Hokkaido University, Sapporo, Hokkaido 060 0810, Japan.
    5Palcoprep, Drumheller, Alberta TOJ OYO, Canada.
    ↵*To whom correspondence should be addressed. E-mail: dkzeleni@ucalgary.ca (D.K.Z.); francois.therrien@gov.ab.ca (F.T.)
    ABSTRACT

    Previously described feathered dinosaurs reveal a fascinating record of feather evolution, although substantial phylogenetic gaps remain. Here we report the occurrence of feathers in ornithomimosaurs, a clade of non-maniraptoran theropods for which fossilized feathers were previously unknown. The Ornithomimus specimens, recovered from Upper Cretaceous deposits of Alberta, Canada, provide new insights into dinosaur plumage and the origin of the avian wing. Individuals from different growth stages reveal the presence of a filamentous feather covering throughout life and winglike structures on the forelimbs of adults. The appearance of winglike structures in older animals indicates that they may have evolved in association with reproductive behaviors. These specimens show that primordial wings originated earlier than previously thought, among non-maniraptoran theropods.

    ReplyDelete
  13. சார்வாகன் ////1ஒவொரு உயிரியின் ஜீனோமும் தலைமுறைரீதியாக‌ சிறிது மாறுகிற‌து.
    2.இது குறுகிய காலத்திலேயே பல்வேறு உரு அளவு,தோற்றம் போன்றவற்றில் வித்தியாசம் ஏற்படுத்துகிறது. பல குறிப்பிட்ட மாற்றங்களை ஏற்படுத்தும் ஜீன்களை கண்டறிந்து ஆவணப் படுத்து உள்ளனர்.இது சிறு ப‌ரிணாமம்[micro evolution] என‌ப்ப‌டுகிற‌து. இதனை உறுதிப்ப‌டுத்தும் சான்றுக‌ள் உள்ள‌தால் யாரும் ம‌றுப‌தோ எதிர்ப்ப‌தோ இல்லை!!////

    ஒவ்வொரு ஜினோமும் தலைமுறை ரீதியாக சிறிது மாறுகிறது இது குறுகிய காலத்திலேயே பல்வேறு உரு அளவு தோற்றம் போன்றவற்றில் வித்தியாசம் ஏற்படுத்துகிறது .தோற்றத்தில் ஏற்ப்படும் மாற்றம் நாமே உருவாக்கிக் கொள்வது.இப்போதிய ஒரு மனிதனை 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள மனிதன் போல தோற்றத்தை நாம் காட்ட முடியும் .உரு மாற்றத்தை இதுவரை காட்டப்படவில்லை கேட்டால் மில்லியன் ஆண்டுகள் ஆகும் என்பது மத நம்பிக்கையை மிஞ்சும் பயங்கர மோசடி .
    ஜினோம் மாற்றத்தினால் மனிதனின் கேரக்டர்கள் மாறும் மாறிக் கொன்று இருப்பதை நாம் கண்டு கொண்டிருக்கிறோம் .

    ReplyDelete
  14. //பரிணாமம் என்பது நிகழவே இல்லை, இதுவரை தோன்றிய உயிரிகள் அனைத்தும் எப்படி,எப்போது தோன்றியது எனத் தெரியாது என்பதும் மதவாதிகளின் கருத்து மட்டுமே!!!///

    அது தோன்றியது 450 கோடி ஆண்டுகள் என்பது பரிணாமவாதிகளுக்கு அறிவியலாக சொல்லப்பட்ட கற்பனையே ,அது நிருபிக்கப்பட இன்னும் மில்லியன் ஆண்டுகள் ஆகும் என்பார்கள் .அதை நம்புவதுதான் அறிவியல் என்பார்கள் .நீங்கள் மில்லியன் ஆண்டுகளை நம்புங்கள் நாங்கள் ஆயிரத்து நானூறு ஆண்டுகளை நம்புகிறோம் .

    மனிதன் பரிணாமம் ஆகி மில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டது ,இன்னும் மாற்றங்கள் ஏற்பட மில்லியன் ஆண்டுகள் ஆகும் .ஆனால் இந்தியர்களின் சராசரி வயது 40 ஆண்டுகள் கூட இல்லை.நமக்கு எதற்கு இந்த மில்லியன் ஆண்டுகள் சிந்தனை எல்லாம்?

    சிறுநீர் கழித்து சுத்தம் செய்ய செங்கல் துண்டு தேடியதற்கு ஒருவர் வருத்தப்படுகிறார் பாவம் எத்தனையோ மனிதர்கள் உணவை குப்பை தொட்டியில் தேடிக்கொண்டு இருக்கிறார்கள் .அவர்களுக்காக கீபோர்டில் வருந்தாமல் நேரடியாக செயல்பட்டால் சில மனிதர்களின் சிலநேர பசிகள் தீர வாய்ப்புகள் உண்டு.
    சிறுநீர் கழித்தபின் செங்கல் துண்டு தேடுவது ,சுத்தம் செய்ய தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் மட்டுமே ..இப்போது செங்கல் துண்டு தேடுவதில்லை .தண்ணீர் இல்லாத இடத்தில் டிஸ்யு பேப்பர் பயன்படுத்துகிறார்கள் .

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ இபராஹிம், கவலைப் படாதீர்கள் அரபியில் செங்கலுக்கு இன்னொரு பொருள் டிஸ்யூ பேப்பர் என் மாற்றி விடலாம். நிங்கள் அண்ணனிடம் சொல்லி அடுத்த மொழிபெயர்ப்பில் மாற்றி விடலாம்.இந்த காஃபிர்களுக்கு விவரம் பத்தாது!! சிந்திக்கவே மாட்டார்கள்.
      நான் (இதில்) உங்களுக்கு ஆதரவு அளிக்கும் காஃபிர்!!

      நன்றி

      Delete
  15. The Laryngeal Nerve of the Giraffe is Proof of Natural Selection

    http://scienceblogs.com/grrlscientist/2010/06/22/the-laryngeal-nerve-of-the-gir/

    Is it true?

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ராஜிவன்,
      பரிணாம் கொள்கை சன்றுகளின் அடிப்படையில் ஒரு நிகழ்வை விளக்குகிறது. சிவிங்கியின் கழுத்தின் அள்வு நீண்டது சான்று. அது ஏன் என்பதே செயலாக்கம்.

      பரிணாம கொள்கையில் செயலாக்கம் விளக்க இயற்கைத் தேர்வு,சீரற்ற மரபு விலகல் என்னும் இரண்டு உண்டு. இயற்கைத் தேர்வினால் நிகழ்ந்தது எனில் இந்த கழுத்து நீட்சி என்பது சூழலால் நிர்பந்திக்கப் பட்டது எனலாம்.


      திரு டாக்கின்ஸ் இயற்கைத் தேர்வு இத்னை எப்படி செயலகி இருக்க்லாம் என விள்க்குகிறார். ஒரு வேளை மாற்று விள்க்கமும் இதை விட பொருந்தினால் அத்வும் சரியே.

      பொதுவாக பழங்கால நிகழ்வுகள் இத்னால் நடந்தது என 100% நிரூபிப்பது முடியாது, அந்த விள்க்கம் மூலம் சில் கணிப்புகள் செய்து அதெ போல் சூழலில் அந்நிகழ்வு நிகழ்கிறதா என பரிசோதிக்க வெண்டும்.

      சிவிங்கி போல் அதே சூழல், கழுத்து நீட்சி ஆய்வு சாலையில் பரிசோதிக்க முடியாதுஎன்றாலும் சூழலுக்கு ஏற்ற மாற்றங்கள் குறுகிய கால்த்தில் நிகழ்வன் பல ஆவண்ப் படுத்தப் பட்டு உள்ளன்.
      http://www.popsci.com/science/article/2011-09/ten-new-or-newly-discovered-animal-evolutions-including-humans

      ஒருமுறை மட்டும் நிகழ்ந்த கடந்த கால் நிகழ்வு இப்படித்தான் நடந்தது என 100% சரியாக( குறைந்த பட்சம் உயிரியலில்) நிரூபிக்க முடியாது என்பதை உணர்ந்தே மதவாதிகள் தைரியமாக தங்கள் பரிணாம் விமர்சந்த்தை தொடர்கின்றனர்.
      நன்றி

      Delete