
வணக்கம் நண்பர்களே,
இன்றைய உலகில் போட்டி என்பது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. குறைந்த வாய்ப்புகள், அனைவருக்கும் தேவைகள் என்னும் போது ,போட்டி போடுவது விரும்பாவிட்டாலும் ஒவ்வொருவர் மீதும் திணிக்கப்படுகிறது.
கல்விதான் போட்டிகளில் முதல் இடம் பிடிக்கும், பெரும்பானமையோரை ஈடுபடுத்தும் விடயமாக இருக்கிறது. மதிப்பெண் சார்ந்த தரப்படுத்தும் முறை உண்மையான கற்றலை விட தேர்வில் மதிப்பெண் பெற மனனம் செய்யும் முறையை மட்டுமே ஊக்குவிக்கிறது.
இங்கு கற்றல் என்றால் ஒரு விடயத்தை பன்முகப் பார்வையில் அலசி,பரிசோதித்து சரிபார்த்து,விமர்சித்து ஏற்கும் தன்மையை குறிப்பிடுகிறோம்.எந்த ஒரு அறிவியல் விதியும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது.அறிவியல் என்பது இயற்கை நிகழ்வுகளின் மிதான சான்றுகளின் விளக்கம்,ஆகவே சான்றுகளைப் பொறுத்து விதிகளும் மாறும் என்ற புரிதல் இல்லா அறிவியல் கல்வி வீண். [ ஹி ஹி இப்படி பார்த்தால் பாடத் திட்டம் முடிக்கவோ,எதுவும் செய்யவோ முடியாதே என்னும் குரல் கேட்கிறது. குறைந்து கற்றாலும் ஆழமான புரிதல் ஏற்படுத்தா கல்வி தேவையில்லை]
ஒரு மத்தியதர குடும்பத்தில் இருந்து பெரும் பணக்காரர் வரை தங்கள் குழந்தைகளை மிக புகழ்பெற்ற கல்வி நிலையங்களில் சேர்த்து ,பலதரப்பட்ட பயிற்சிகள் பெற்று, உலகின் முதன்மைத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்,தரம் பெற விரும்புகிறார்.சமச்சீர் கல்வி அனைவருக்கும் என்றால் பல மத்திய வர்க்க பெற்றோருக்கு கூடப் பிடிப்பது இல்லை.என் குழந்தைக்கும், ஏழைக் குழந்தைக்கும் ஒரே கல்வியா என்னும் மேன்மை பாராட்டல் இங்கு இயல்பான விடயம் ஆகும்.
மேலை நாடுகள், இந்தியாவில் சில பள்ளி கல்லூரிகளில் உள்ள ஒரு தேர்வு முறைதான் அறிவிற்கு மதிப்பெண் கண்டுபிடிக்கும் ஐ.க்யூ என்ப்படும் அறிவு(?)திறன் சார் தேர்வுகளும் ஒன்று. அறிவு என்பதை எப்படி நாம் பார்க்கிறோம் என்றால் வாழும் சூழலுக்கு தகுந்த படி வாழ்வதுதான்.
ஆனால் இந்த ஐ.க்யு என்ப்படும் பரிசோத்னைகள் குறிப்பிட்ட காலத்துக்குள் சில கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியுமா என்பதையே ஊக்குவிப்பதால் அறிவுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றே நாம் சொல்கிறோம்.
சரி இப்பதிவின் நோக்கம் நேற்று செய்தியில் படித்த ஒரு விடயமே காரணம். இங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சாவழி பெண் ஒருவர் மென்சா என்ப்படும் நிறுவனம் நடத்தும் ஐ.க்யு தேர்வில் 162 மதிப்பெண் பெற்றார் என செய்தி வந்தது. சரி இதோடு விட்டார்களா! ஐன்ஸ்டினை விட அதிக அறிவு(ஐ.க்யு??) என செய்தி வெளியிட்டதும் சரி இதுபற்றி ஒரு பதிவு இட்டே ஆக வேண்டும் என முடிவு செய்தேன்.
12-Year-Old Indian Girl Neha Ramu Has Higher IQ Than Einstein, Hawking
ஐன்ஸ்டின் 160 மதிப்பெண் என்றதும் ,அவருமா இந்த தேர்வு எழுதினார் என்றால் இல்லையாம், அவருக்கும், ஸ்டீஃபன் ஹாக்கிங்,பில் கேட்ஸ் ஆகியோருக்கு 160 என் மென்சா குழுவினரே முடிவு செய்தனராம். சிரிக்காதீர்கள். இப்படித்தான் செய்தி.
முதலில் இந்த மென்சா நிறுவனம் பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வோம்.
From wikipidia
Mensa is the largest and oldest high IQ society in the world.[2][3][4] It is a non-profit organization open to people who score at the 98th percentile or higher on a standardized, supervised IQ or other approved intelligence test.
மென்சா என்பது உலகின் பழமையான,சிறந்த, பெரிய அறிவு மதிப்பெண்[I.Q] சான்று அளிக்கும் நிறுவனம் ஆகும்.இதில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அறிவு மதிப்பெண் தேர்வில் 98% மேல் பெறுவோர் மட்டும் உறுப்பினர் ஆகலாம்.
சரி எந்த மாதிரி தேர்வு வைக்கிறார்கள்,எப்படி மதிபெண் கண்க்கிடுகிறார்கள் என இச்சுட்டியில் இருந்து அறிகிறோம்.
ஒரு முதலாளி சொல்வதை கேள்வி கேட்காமல் செய்யத் தேவைப்படும் திறமைகள்தான் இவை என புரிய முடியும். இவையும் ஒரு அளவுக்கு பயன் உள்ள செயல்கள் என் விட்டுவிடுவோம்.
இந்த மதிப்பெண் வழங்கும் விதத்தில்தான் நாம் விமர்சனம் வைக்கிறோம்.ஒரு தேர்வில் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே ஆசிரியர் கற்பிக்கிறார். அவர் கற்பித்த விடயங்களை கொஞ்சம் மாறுதலுடன் வகுப்பில் உள்ள அனைவருக்கும் தேர்வு வைக்கிறார்.
அதில் கற்றவற்றை தேர்வில் எழுதும் மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெறுகிறார்.இந்த முறையிலும் சில சிக்கல்கள் உண்டு என்றாலும் ஆசிரியர் நன்கு கற்பிப்பவராக இருந்து தேர்வு வினாக்களும் சரியாக விளங்கும் வண்ணம் இருப்பின், அறிந்தவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவது எளிது.
ஆனால் பெரும்பாலும் பல ஆசிரியர்கள் தேர்வுக்காக குழப்பும் வகையில் கேள்விகள் வைத்து இருப்பார்.அதற்கும் சில புத்தகங்கள் கிடைக்கிறது. கேள்வி என்ன சொல்கிறது என்பது அதிக நேரம் எடுக்கும். இப்படிக் கேள்விகள் ஒரு 10% அதிக பட்சம் இருக்கலாம் என்பதே நம் கருத்து. மாணவனின் ,கற்றலை அளவிட முயற்சிப்பதை விட அவனின் கேள்வியைப் புரிதல் தன்மையை பிரச்சினை ஆக்குவது தெளிவான சிந்தனையை வளர்க்காது.கற்றலின் மீது வெறுப்பை ஏற்படுத்தும்.
ஒரு தேர்வு நாடு,மாநில அளவில் பல இலட்சம் பேர் எழுதும் போது, எழுதும் அனைவரும் சம அளவில் கற்பிக்கபட்டு இருப்பார்கள் என்பதோ, வினாதாளின் மாதிரிகள் போல் பயிற்சி எடுத்து இருப்பார்கள் என்பதோ நடக்காத விடயம்.
இந்த மென்சா போன்ற அறிவுத் திறன் அளவிடல், போன்ற பயிற்சிகள் எடுக்காத மாணவர்களால் வெற்றி பெற முடியாது. இந்த மாதிரி அதிக செலவு எடுக்கும் பயிற்சிகளை விளம்பரப் படுத்தவே இப்படி தேர்வுகள் முன்னிலைப் படுத்தப்படுகின்றன்.
இந்த சராசரி விலக்கல் மதிப்பெண்முறை என்பது, சராசரி மதிப்பெண்ணில் இருந்து எவ்வளவு அதிகமாக மதிப்பெண் எடுக்கிறீர்கள் என கணக்கிடுவது ஆகும்.இது துறை சார் அறிவினை நோக்கி கொண்டு செல்லும் என ஏற்க முடியாது.
ஒரு துறை சார்ந்த அறிவு பெற ஈடுபாடு,முறையான தொடர் கற்றல்,பகிர்தல்,விவாதித்தல், என பன்முகம் சார்ந்தது. ஒரு துறையில் வல்லுனராய் இருப்பவர், பிற துறைகளில் வல்லுனராய் இருப்பது இல்லை.
இந்த சூழலில் ஏதோ ஒரு நிறுவனம் நடத்தும் ,ஏதோ ஒரு பயிற்சிமுறை சார்ந்த தேர்வின் மதிப்பெண் மூலம் ஐன்ஸ்டினை விட சிறந்தவர் என விளமபரம் செய்வது கண்டிக்கத் தக்க விடயம்.
சில மாதங்களுக்கு முன் இதே போல் நியுட்டனை மிஞ்சிய இந்திய மாணவர் என செய்தி வந்தது. அது என்ன்வென்று பார்த்தால் ஒரு இயக்கவியல் புதிருக்கு நியுட்டன் தீர்வாக வகைக்கெழு சமன்பாடு கண்டார். அதனை எண்ணியல் முறைப்படி தீர்வு கண்டு வந்தனர். அம்மாணவர் சூத்திரம் தீர்வு கண்டார் என விவரம் தெரிந்தது.
நாமும் ஒரு பதிவு இட்டோம்.
சர் ஐசக் நியூட்டனின் 350 வருட புதிர் தீர்க்கப்பட்டதா?
சரி இது ஒரு பாராட்டத் தக்க செயல் , அந்த சூத்திரம் அறியவும் ஆவல் கொண்டோம். ஆனால் அதன் பிறகு அத்னை ஆய்வு சஞ்சிகையில் இடுவதால் இப்போது விவரம் கிடைக்காது என்றார்கள்.அதன் பிறகு நான் அறிந்த
உண்மையான் செய்தியில் மாணவரின் செயல் சாதனை அல்ல. வேண்டும் என்றே தமிழாக்கம் செய்யவில்லை.
http://www.huffingtonpost.com/2012/06/21/16-year-old-genius-shoury_n_1616085.html
Voigt and his colleague at TU Dresden, Professor Ralph Chill, published a four-page report June 4 in which they attempted to contextualize Ray’s work and compare it with results presented in preexisting literature.
Voigt emphasized to HuffPost that Ray was deserving of the research award he received, and that the student's work should be appreciated from the perspective that he is a 16-year-old high school student using a kind of mathematics far beyond high-school level.
That said, Ray’s alleged solutions were “not endorsed by experts in the field who should have been involved in the evaluation of the work,” Voigt and Chill wrote in their published comments on the young man’s work. Furthermore, his steps were largely already known to experts.
Voigt said he did not know how the public was made to believe that a long-standing problem had been solved.
“The point is not that something is missing in Ray’s analysis, but rather that there was no ‘problem posed by Newton,’ and that the methods used by Ray are exceptional and remarkable for a high-school student, but standard for professional mathematicians,” Voigt said.
செயலை விட அதன் பலனுக்கே அனைவரும் ஆசைப் படுகிறார்கள்.
கணிதமேதை இரமானுஜம் பள்ளித் தேர்வில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லை. ஐன்ஸ்டினுக்கு குவாண்டம் இயக்கவியல் வினோதமாக தெரிந்தது.
http://en.wikipedia.org/wiki/Bohr%E2%80%93Einstein_debates
ஐசக் நியுட்டன் இரசவாதம்[alchemy] செய்ய முடியும் என முயன்றார்.
http://en.wikipedia.org/wiki/Bohr%E2%80%93Einstein_debates
The shocks for Einstein began in 1925 when Werner Heisenberg introduced matrix equations that removed the Newtonian elements of space and time from any underlying reality. The next shock came in 1926 when Max Bornproposed that the mechanics was to be understood as a probability without any causal explanation.
Einstein rejected this interpretation. In a 1926 letter to Max Born, Einstein wrote: "I, at any rate, am convinced that He [God] does not throw dice."[5]
ஐசக் நியுட்டன் இரசவாதம்[alchemy] செய்ய முடியும் என முயன்றார்.
ஒவ்வொருவருக்கும் சில விடயங்களில் ஆழ்ந்த புலமை இருக்கலாம், அதை ஏற்படுத்துவதே கல்வி. நம் கற்றல் புரிதலின் எல்லைகளை உணர்வதுமே கல்வி.
அதை விட்டு 30 நாட்களில் அறிவாளி, விஞ்ஞானி என பிராய்லர் கோழி மாணவர்களை உருவாக்கும் கல்வி பயன் தராது.அதிலும் எதற்கும் விளம்பரம் செய்தும் விஞ்ஞானி உருவாக்க முடியாது.
ஐன்ஸ்டின்,நியுட்டன் போல் துறை சார்ந்து எவர் சாதித்தாலும் நிச்சயம் சீர் தூக்கி பார்த்து பாராட்டுவோம்,ஆனால் கண்ட தேர்வின் முடிவையும் வைத்து விளமபரம் தேடுவதை கண்டனம் செய்கிறோம்.
உண்மையான சமச்சீர் கல்வி அனைவருக்கும் கிடைக்கும் நாளே உண்மையில் சுதந்திரம் கிடைப்பது எனலாம்.
துறை சார்ந்த புலமை பெறுதல் நலம்.ஆனால் சகலகலா வல்லவ அறிவுத் திறன் என்பது மோசடியே!!!
http://www.lfpress.com/2012/12/19/iq-tests-too-incomplete-to-measure-intelligence-western-researchers-find
நன்றி!!