Saturday, February 23, 2013

தீவிரவாதத்திற்கு எதிரான கட்டமைப்பை உருவாக்குவோம்!!


This figure is an illustration of the aim, principles and framework of Building Resilience Against Terrorism: Canada's Counter-terrorism Strategy.

வணக்கம் நண்பர்களே,

நமது சகோதர ஆந்திர மாநில தலைநகர் ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்திய  சொந்தங்களுக்கு அஞ்சலியும்,தீவிரவாதிகளுக்கு கடும் கண்டனமும் தெரிவிக்கிறோம்.

உலகின் பல் நாடுகளில் இப்படி பொதுமக்களின் மீதான தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் சூழலில் வாழ்கிறோம். இந்தியாவிலும் சில மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறுகிறது என்பது கசப்பான உண்மை.

இது காவல்துறை,உளவு அமைப்புகள் விசாரணை செய்து ,நீதிமன்ற வழக்காகி, அது வழங்கும் தண்டனை என செல்வது வழக்கம் என்றாலும்,நாம் இப்பதிவில் எப்படி பொதுமக்கள் தங்களைப் தீவிரவாத தாக்குதலில் இருந்து பாதுகாப்பது,மேற்கொள்வது பற்றிய கனடா அரசின் செயல்முறை விள்க்கம் பற்றியே பார்க்கப் போகிறோம்.

பிடிபடும் குற்றவாளிகள் மீதான ,விசாரணை,நிதிமன்றம் ஆகியவற்றின் மீது
நமக்கு நம்பிக்கை இருக்கிறது. இதன் மீது சதிக் கோட்பாடு விளக்கம் அளிக்கும் மாமேதைகள் விசாரணை,நீதிமன்ற நடவடிக்கைகளில் ஆக்க பூர்வமாக கவனம் செலுத்தி தங்கள் தரப்பு விளக்கத்தை அங்கு அளிக்க வேண்டுகிறோம்.நீதி மன்ற தீர்ப்பை அனைவரும் ஏற்க வேண்டும்!!

இனி பதிவுக்கு செல்வோம்.

 ஆங்கிலத்தில் உள்ள கட்டுரை இங்கே உள்ளது. கட்டுரையின் முக்கிய பகுதிகளை மட்டுமே தமிழாக்கம் செய்கிறோம். அவசியம் எனில் பின்னூட்டத்தில் தொடர்வோம்.
**
ஒரு அமைப்பு, இயக்கம் என்றால் அதற்கு ஒரு நோக்கம் வேண்டும். அதுபோல் இந்த தீவிரவாத எதிர்ப்பு கட்டமைப்புக்கும் ஒரு நோக்கம் வேண்டும் அது என்ன?

[கட்டுரையில் கனடா என்னும் இடங்களில் நாம் இந்தியா என எடுக்கிறோம்]

The overarching goal of the Strategy is: to counter domestic and international terrorism in order to protect Canada, Canadians and Canadian interests.

"இந்திய,இந்தியர் நலன்களை உள்நாட்டு,வெளிநாட்டு தீவிரவாதத்தில் இருந்து பாதுகாத்தல்"

இந்தியா,இந்தியர் நலன் தாண்டிய சிந்தனைப் போக்கு உடைய யோக்கியர்கள், ஒழுக்க சீலர்கள் பற்றி இப்போது தவிர்த்து விடுவோம். இந்தியா என்னும் நட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழும், இந்தியாவின் இயல்பை விரும்பும் அப்பாவி குடிமகன்கள் பற்றி மட்டுமே கவலைப் படுவோம்.

A)தீவிரவாத அச்சுறுத்தல்[The Terrorist Threat]

தீவிரவாத தாக்குதல் நடப்பதையும், இனிமேலும் நடக்கும் சாத்தியத்தையும் ஒத்துக் கொள்ள் வேண்டும்.இதில் பல இன,மொழி,மத,சாதி,நக்சல் போன்ற இயக்கங்கள் தொடர்பு இருக்கலாம் என்பதையும் ஒத்துக் கொள்ள் வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான தீவிரவாத இயக்கம், செயல் நடைபெறுவதே  உண்மை என இதுவரை நிகழ்ந்த தீவிரவாத செயல்களில் இருந்து அறிய முடியும். வரலாற்றின் பக்கங்களில் இருந்து பாடம் கற்க வேண்டும். எதற்கும் சதிக் கோட்பாட்டுக் கதை கூறும் கோமாளிகளை அடையாளம் காண்பதும் முக்கியம்.



B)தீவிரவாத எதிர்ப்பு அணுகுமுறை [Addressing the Threat]

தீவிரவாத கருத்தாக்க பிரச்சாரமும் எதிர்கொள வேண்டிய அடிப்படை விடயம் ஆகும். எங்கு இந்திய,இந்தியர் நலனுக்கு, அரசியல் அமைப்பு சட்டத்தின் ஜன்நாயக,மத சார்பற்ற தன்மைக்கு விரோதமாக கருத்துப் பிரச்சாரம் கண்டால் அதனை  அடையாளம் கண்டு முடிந்த்வரை எதிர்ப்பு கருத்தில் காட்ட வேண்டும். தீவிரவாத  கருதாக்கமே  எண்ணத்தில் உருவாகி ,சொற்களால் பரப்பப் பட்டு, செயலில் பரிணமிக்கிறது என்பதை உணர வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட குழு மட்டுமே தேவையில்லாமல் பழி வாங்கப் படுவதாக செய்யப் படும் பிரச்சாரமே,அப்பாவி இளைஞ‌ர்களை அப்பாதையில் செல்ல வைக்கிறது என்பதை உணர வேண்டும். நாட்டின் எந்த பிரச்சினைக்கும் சட்டம், நீதிமன்றம் மூலம் மட்டுமே தீர்வு என்பதனை அனைவரும் ஏற்க வேண்டும்.

ஆகவே தீவிரவாத கருத்தாக்கங்களை,பரப்புரைகளை எதிர்ப்பதே முதல் செயல்!!!

இது பொதுமக்களின் பங்கு செயல் எனில் அரசு தன் பங்கிற்கு, இந்திய,இந்தியர் நலன் சார் உலக் அரசியல், நட்பு நாடுகளுடன் தீவிரவாதம் குறித்த தகவல் பரிமாற்றம், தேடப்படும் குற்றவாளிக்ளை ஒப்படைத்தல்/கைது செய்தல்,விரைந்த வெளிப்படையான நீதிமன்ற நடவடிக்கைகள் போன்றவை உள்நாடு/வெளிநாட்டில் செயல் படுத்த வேண்டும்.

இதில் அரசின் செயல் நான்காக பகுக்கப் படுகிறது அவையாவன.!!!

1.வருமுன் காத்தல்: தீவிரவாத செயல்களை தூண்டும் விடயங்களை கண்டு, தவிர்த்தல். ஈடுபடும் வாய்ப்பு உள்ளவர்களை தொடர்ந்து கண்காணித்தல், தகவல்கள் ஆவணப் படுத்தப் படுதல் போன்றவை .தீவிரவாத பரப்புரைக்கு அடிப்படையான சமூகப் பிரச்சினைகளையும் கவனத்தில் கொண்டு தீர்க்க முயல வேண்டும்.

Prevent 
Activities in this area focus on the motivations of individuals who engage in, or have the potential to engage in, terrorist activity at home and abroad. The emphasis will be on addressing the factors that may motivate individuals to engage in terrorist activities
**
2.கண்டறிதல்: தீவிரவாதத்தில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளோரை கண்டறிந்து, தொடர்ந்த கண்காணிப்பில், த்கவல்களை ஆவணப் படுத்தல் அவசியம்.சமூகத்தின் ஒவ்வொரு குழுவிலும் இத்தகவல் பெற , உளவுத் துறை நன்கு ஆட்களைப் பயிற்றுவித்து கண்காணிக்க வேண்டும்.கிடைக்கும் தகவல் சரியானதா எனவும் பல முனைகளில் இருந்து உறுதி செய்ய வேண்டும். 

Detect 
This element focuses on identifying terrorists, terrorist organizations and their supporters, their capabilities and the nature of their plans. This is done through investigation, intelligence operations and analysis, which can also lead to criminal prosecutions. Strong intelligence capabilities and a solid understanding of the changing threat environment is key. This involves extensive collaboration and information sharing with domestic and international partners.
**
3.வசதிகளை மறுத்தல்

தீவிரவாத செயல் என்பதற்கும் பணம்,ஆள்,உள்ளிட்டு  பல விடயங்கள் அவசியம் ஆவதால், பண பரிமாற்றம் உள்ளிட்டு, வாகன விற்பனை, போன்ற பல விடயங்களின் தொடர் கண்காணிப்பு அவசியம். தீவிரவாதத்திற்கு தேவையான வசதிகளை மறுப்பதே இச்செயல் ஆகும்.

Deny 
Intelligence and law enforcement actions can deny terrorists the means and opportunities to pursue terrorist activities. This involves mitigating vulnerabilities and aggressively intervening in terrorist planning, including prosecuting individuals involved in terrorist related criminal activities, and making Canada and Canadian interests a more difficult target for would-be terrorists.
**
4.செயல்படுதல்:

நடைபெறும் சாத்தியம் உள்ள ஒரு [தீவிரவாத]செயல் நடக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.ஒரு தீவிரவாத செயலுக்கு எதிர்வினையாற்றும் விதம் பற்றி அறிந்து, அச்சூழலில் இருந்து விரைவாக இயல்பு நிலைக்கு சமூகம் திரும்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Respond 

Terrorist attacks can and do occur. Developing India[Canada]’s capacities to respond proportionately, rapidly and in an organized manner to terrorist activities and to mitigate their effects is another aspect of the Strategy. This element also speaks to the importance of ensuring a rapid return to ordinary life and reducing the impact and severity of terrorist activity.


ஆங்கிலக் கட்டுரை மிகவும் நீளமாக இருப்பதால் சுருக்கம் மட்டுமே பதிவிட்டு இருக்கிறோம்.



பாமர பொதுமக்களாகிய நாமும் ,தீவிரவாத கருத்து பரப்புரைகளில் நம் உறவு & நட்பு சாராமல் கண்காணிப்பதும். இந்திய நாட்டு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வாழ்வதை மேற்கொள்வதும், வலியுறுத்துவதுமே பிரச்சினைகளை தீர்க்கும் முதல் பணி.

பல இன,மொழி,மத 120 கோடி மக்கள் ஒன்றாக வாழும் போது ஏற்படும் நடைமுறை சிக்கல்களை தீர்ப்பது கடினமே என்றாலும், தீவிரவாதம் என்பதை எதன் காரணம் ஆகவும் நியாயப் படுத்தக் கூடாது.

நம்முடைய சுற்றுப்புறங்களில் நடக்கும் பிரச்சினைகளை குழுவாக இணைந்து தீர்ப்பது, அது பெரிய பிரச்சினை ஆகாமல் பாதுகாக்கும்.அரசு மட்டுமே அனைத்தும் செய்து விட முடியாது.

குடுமபக் கட்டுப்பாடு[இரு குழந்தைகள் மட்டுமே], சுற்றுச் சூழல் பாதுகாப்பு, குறைந்த நுகர்வு,விவசாயம் சார் பொருளாதாரம், தேர்தல் சீர்திருத்தங்கள்,பொது சமூக சட்டம் என் ஆரோக்கியமான சிந்தனை வளர்ந்தால் மட்டுமே அனைவருக்கும் குறைந்த படச வாழ்வாதாரம் என்னும் திசையில் நகர முடியும்.

அதை விட்டு 

வானுலக சொர்க்கம் தனை நாடி
இந்த வாழ்கையை இழந்தவர்கள் கோடி

என்னும் கோமாளிகள் போல் நம்மவர்கள் யாரும் ஆக வேண்டாமே!!!

தீவிரவாதம் ஒழிப்போம், ஜன்நாயக மத சார்பின்மை காப்போம்!!!


நன்றி!! 

Kapap - Israeli Counter Terrorism Training



60 comments:

  1. சகோ.சார்வாகன்,

    பயங்கரவாதிகளின் தாக்குதலில் மரித்தோர்க்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    போராளி தனது எதிர்ப்பை அடக்கு முறை செய்பவர்களிடம் காட்டுவான், பயங்கரவாதி அப்பாவிகளிடம் காட்டுவான்,எனவே பயங்கரவாதிகள் என்றுமே போராளியாக முடியாது.

    ------------

    இந்திய உளவு நிருவனங்கள் அரசுப்பணத்தில் அமெரிக்கா போன்ற அன்னிய தேசத்தினை பாதுகாக்கவே வேலை செய்கின்றன, நம் சொந்த நாட்டைக்காக்கவும் இந்திய உளவு நிருவனங்கள் வேலை செய்ய வேண்டும்,இதற்காக அனைத்துகட்சிகளும் ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும், ஆதாரம் இல்லாமல் சொல்லவில்லை,என்க்கிட்டே வீடியோ ஆதாரமே இருக்கு :-))

    சாட்சி லோகநாயகர் :-))

    ReplyDelete
    Replies
    1. சகோ வவ்வால் வாங்க,
      நீங்கள் சொல்வது சரிதான்.இதுதான் இப்போதைய சூழல்.ஏழைகளுக்கு நாட்டின் சட்டம் பலன் கொடுப்பது இல்லை.ஆனால் இது தீவிரவாதத்தின் அடிப்படை ஆகிறது என்பதும் உண்மையே.பொதுமக்க்ளின் உயிர் பலியாகாமல் தடுக்க பாமர மக்களே தீர்வு காண வேண்டும்.

      நல்ல த்லைவர்கள் வேண்டும் எனில் தேவை தேர்தல் சீர்திருத்தம். ஒருவர் அதிக பட்சம் இருமுறை[10 வருடம்] மட்டுமே சட்டசபை,மக்கள் அவை உறுப்பினர் ஆக முடியும் எனில் ஒருவர் அதிக பட்சம் 20 வருடம் மட்டுமே பதவி வகிக்க முடியும்.

      புதியவர்கள் தலைமைப் பொறுப்புக்கு வருவது ஊழலைக் குறைக்கும். பல மாற்றங்கள் வரும்.நாயக் வழிபாடு குறையும்.
      **

      நீதி, காவல் துறை செயல்பாடுகள் இணைய தொழில் நுட்பத்துடன் மேம்படுத்த‌லாம். இரண்டிற்கும் அதிக ஆட்களை பதவியில் அமர்த்த வேண்டும்.

      உள‌வு தகவல் சொல்ல இணையம் மூலம் தகவல் சேகரிக்க்லாம்.

      மக்கள் கூட்டம் கூடும் இடங்க்ள் ஒவ்வொன்றும் கண்காணிக்கப்பட வேண்டும்.

      பிடிபடும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும்.

      நிச்சய்மாக திவிரவாதிகள் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற முடியும் முனைந்தால்!!

      **
      திவிரவாதிகள் என்போர் வெளி(உள்)நாட்டு சில அமைப்புகளால் வழி நடத்தப் படுகின்றனர் என்பதும் உண்மையே!!

      என்னடா நம் நாட்டில் மட்டும் தினமும் வெடிக்குது ,அங்கே மட்டும் ஏன் இல்லை என பாகிஸ்தான் இராணுவம் யோசிக்காதா??

      காசு கொடுத்தால் எதுவும் செய்யவும் வாழ வழியற்றோர் பலர் இருக்கின்றார்!!

      கோமாளி அரசியல் தலைகள், இலஞ்சமே குறியாய் கொண்ட அரசு அலுவலர் கொண்டு இப்பிரச்சினை தீர்க்க முடியாது!!

      நன்றி!!

      Delete
  2. மிகவும் அவசியமான பதிவு சகோ. நன்றி.
    பயங்கரவாதத்தை மதரீதியாக ஆதரிக்கும் மன நோயை கைவிடுவோம்.

    ReplyDelete
  3. சார்வாகன் ///எதற்கும் சதிக் கோட்பாட்டுக் கதை கூறும் கோமாளிகளை அடையாளம் காண்பதும் முக்கியம்.//////
    ////ஒரு குறிப்பிட்ட குழு மட்டுமே தேவையில்லாமல் பழி வாங்கப் படுவதாக செய்யப் படும் பிரச்சாரமே,அப்பாவி இளைஞ‌ர்களை அப்பாதையில் செல்ல வைக்கிறது என்பதை உணர வேண்டும். நாட்டின் எந்த பிரச்சினைக்கும் சட்டம், நீதிமன்றம் மூலம் மட்டுமே தீர்வு என்பதனை அனைவரும் ஏற்க வேண்டும்.///
    //
    மதசாற்பற்றவனாக பேசுவது போல நடிக்கும் சார்வாகன் ஒரு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் போலவே பேசுகிறார்
    இங்கு இஸ்ரெல பற்றிய கோமாளி படம் காட்டவேண்டிய அவசியம் என்ன வந்துவிட்டது?
    என்னவோ இஸ்ரேல் தனது வியுகத்தால் தீவிரவாதத்தை வென்றது போல அடிக்கடி சார்வாகன் தனது உள்ளகிடக்கையை காட்டி வருகிறார் இஸ்ரேல் ஒரு தீவிரவாத நாடு அதன் தீவிரவாதத்தை மறைத்து அதற்கு பக்கபலமாக அமெரிக்காவின் மீடியாக்கள் .அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாக திகழும் இஸ்ரேலின் அயோக்கியத்தனம் ,இங்கே ஹிந்துத்துவாக்களால் கெட்டிக்காரத்தனமாக வர்ணிக்கப் படுகிறது .அமெரிக்காவின் தயவு,உதவி ஒருநாள் வாபஸ் வாங்கப்படுமானால் இஸ்ரேல் உலகவரைபடத்தில் இல்லாமற் போகிவிடும் .இந்த உண்மைகள் அனைவருக்கும் தெரியும் .இருப்பினும் முஸ்லிம்களை நசுக்கவேண்டும் இந்தியாவில் அவர்களை அடிமைகளாக்க வேண்டும் என்ற சார்வாகன் .சோ ,குருமூர்த்தி போன்ற ஆர்வலர்கள் இஸ்ரேலை போற்றி போற்றி பஜனை பாடிவருகிரார்கள் .

    இந்தியாவில் வெடிகுண்டு வெடிப்புகள் நடப்பதால் யாருக்கெல்லாம் ஆதாயமோ அவர்களே அதை செய்து வருகிறார்கள் .தனது நாட்டில் குண்டு வெடிப்பதைப் போல இந்தியாவிலும் அமைதியின்மையை உருவாக்க பாக்கிஸ்தான் முயற்சிக்கும் .அதனால் காசு கொடுத்து காஷ்மீரிகளை கூலிப் படையாக அனுப்ப .செய்யும்
    அடுத்து குண்டு வெடிப்பு மூலம் ஹிந்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் முஸ்லிம்கள் மீது வரும் வெறுப்பை நாம் வாக்கு வங்கிகளாக மாற்றிக் கொள்ளலாம் என்ற நோக்கத்திற்காக பிஜேபியின் துணை அமைப்புகளை பயன்படுத்தி குண்டுவெடிப்புகள் நடத்தும் .இதுவரை இந்த குற்றச்சாட்டை நையாண்டி செய்தவர்கள் ஹேமந்த் கர்கறேயின் நடவடிக்கையால் உன்மைஉனர்ந்தார்கள் .காவி பயங்கரவாதம் என்று சிதம்பரம் கூறியதை வன்மையாக எதிர்த்தவர்கள் கர்கறேயின் நடவடிக்கையால் ஆடிப்போனார்கள் .சும்மாவிடுவார்களா கர்கரேயை ?
    கனடாவில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் .அதனால் அங்கு அடுத்து தடுத்து நிறுத்த முடிகிறது.ஆனால் இந்தியாவில் அது அரசியல் ஆதாயத்திற்காக குண்டுவெடிப்புகள். கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் பற்றிய தெஹல்காவின் விசாரணையை ஆய்வு செய்து அதில் உண்மை இருந்தால் அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தால் இந்தியாவில் தீவிரவாதம் அழிந்துவிடும் .குண்டுவெடிப்புகள் இனி நடக்கவே வாய்ப்பு இல்லாத சூழ்நிலையை கொண்டுவந்துவிடலாம் .இருட்டில் தொலைத்த காசை வெளிச்சம் இருக்கும் இடத்தில் வந்து தேடும் முல்லா ஜோக்ஸ் போல இந்திய புலனாய்வு துறை செயல்பட்டால் எங்கிருந்து அப்பாவி ஹிந்துக்கள் கொல்லப்படுவதை தடுக்க முடியும்?

    ReplyDelete
  4. இப்பு,
    //இருட்டில் தொலைத்த காசை வெளிச்சம் இருக்கும் இடத்தில் வந்து தேடும் முல்லா ஜோக்ஸ்//
    நூத்துக்கு நூறு உண்மை. டெரர் கையேடாகிய குரானையும். அதை எப்படி செயல்படுத்துவது என்று சொல்லிக்கொடுக்கும் மதராஸாவையும் விட்டு விட்டு, நாம் இரும்பு கவசம் போட்டுக்கொள்வதில் என்ன பயன்.

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்காவும் ரசியா போல நசுங்கிவிடும் எனில் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி நிலவும் .
      குர்ஆன் மீதும் மதரஸாக்கள் மீதும் குருட்டு நம்பிக்கை வைத்திருக்கும் கருத்து குருடர்களுக்கு உண்மையை எப்படி பார்க்க முடியும்?

      Delete
    2. //குர்ஆன் மீதும் மதரஸாக்கள் மீதும் குருட்டு நம்பிக்கை வைத்திருக்கும் கருத்து குருடர்களுக்கு உண்மையை எப்படி பார்க்க முடியும்?//

      ஆமாங்க ...

      Delete
  5. இஸ்ரேல் என்றாலே வஹாபிகளுக்கு கிலிதான்.

    ReplyDelete
    Replies
    1. ராபின் ,இஸ்ரேலை செல்லப் பிள்ளையாக வளர்க்கும் அமெரிக்காவைக் கண்டிக்க இந்தியா ,சீனா போன்ற நாடுகளே பயப்படும் பொழுது வஹ்ஹாபிகள் எம்மாத்திரம் ?

      Delete
    2. வஹாபிகளும் அமெரிக்காவின் செல்லப் பிள்ளைகள்தானே !

      Delete
  6. ஆ!ஊன்னா ஹேமந்த் கர்கரேயை சாட்சிக்கு கூப்பிடறாங்கப்பா:)

    தீவிரவாதம் இனம்,மொழி அறியாதது என்ற போதிலும் மதம் அறிந்தது என்பது போலவே இதுவரையிலான குண்டு வெடிப்புக்கள் சொல்லி வருகின்றன.

    இந்தியாவின் நகர்ப்புற ஜனநெரிசலும்,கட்டுப்பாடற்ற சுதந்திர நடமாட்டமும் இந்தியாவின் பலமென்ற போதிலும் இந்த பலமே தீவிரவாதிகளுக்கும் பலமாகிப் போகின்றது.நகர் சார்ந்த குண்டு வெடிப்புக்கள் வெளிநாட்டு திட்டமிடுதலுடன் குறிப்பாக பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ பண,ஆயுத உதவியுடன் இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் உதவியுடன் செயல்படுத்தப்படுகின்றன.இதில் மதம் மூளைச் சலவை ஒரு புறமும்,காசுக்காக கை மாத்தி விட்டேன் என பின்புலம் எதுவும் அறியாமல் உதவி செய்பவர்களும் அடங்குவர்.சில குண்டு வெடிப்பு உபரிப்பொருட்கள் எளிதாக மார்க்கெட்டில் 2 in 1 பயன்பாட்டுப் பொருட்களாக கிடைத்தாலும் கூட ராணுவம் சார்ந்த வெடி மருந்துப் பொருட்கள் கடத்தப்படுவதில் பெரும் திட்டமிடுதலும் அரசியல்,அரசுத்துறை,ஐ.எஸ்.ஐ, மத தீவிரவாதம் சார்ந்த உதவிகள் கிடைத்தால் ஒழிய பெரும் குண்டு வெடிப்புக்கள் சாத்தியமில்லை.

    காமிரா கண்காணிப்பு சாதனங்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன.விற்பனைக் கடைகளை கண்காணிக்கும் அளவுக்கும்,பெரும் அங்காடிகளை கண்காணிக்கும் அளவுக்கும் இன்னும் CCTV காமிராக்கள் தெருக்களை கண்காணிப்பதற்கும் கிடைக்கின்றன.இதையெல்லாம் நகைக்கடைகளில் கூட பொருத்தியிருக்கிறார்களா என தெரியவில்லை.

    இவை போக இன்றைய காலகட்டத்தில் கைபேசி ஒரு முக்கிய தடயப் பொருள்.கோடிக்கணக்கான பேச்சுக்களை பிரித்தாள்வது சாத்தியமில்லையென்ற போதும் தீவிரவாதத்திற்கு மத்தளமடிக்கிற மாதிரி பின்னூட்டங்கள் மாதிரி தானாகவே சில பேச்சி பரிமாற்றங்கள் வலையில் வந்து சிக்கிக்கொள்ளும் சாத்தியமிருக்கின்றன.

    பதிவில் கூறியபடி பணம்,பொருள்,ஆட்கள் என்ற மூன்று கூறுகளின் அடிப்படையில் இந்துத்வா தீவிரவாதமாக இருந்தாலும் இஸ்லாமிய தீவிரவாதமாக இருந்தாலும் தீவிரவாதத்திற்கு எதிரான குரலை ஒலிக்கச் செய்வோம்.

    இன்றைய இணைய தள கருத்துப் பரிமாற்றங்களில் எவை தீவிரவாத சார்பு கருத்துக்கள்,எவை தீவிரவாதத்திற்கு எதிரானவை என்பனவற்றைக் கூட எளிதாக அடையாளம் கண்டு பிடித்து விட முடியும்.இவைகளைத் தாண்டிய சப்தமில்லாமல் குண்டு வைப்பவர்களும் ஏதாவது தடயத்தை விட்டுச் செல்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. எங்கு குண்டு வெடித்தாலும் உடன் முஸ்லிம்கள் மீது பழி போடும் பொய்களை பரப்பும் பொழுது அசல் குற்றவாளிகளை கண்டு பிடித்த ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்ட சம்பவம் பற்றி ஆ ,,ஊ என்றால் மட்டுமல்ல ஔ வரை சொல்லவே செய்வோம்

      Delete
  7. ஈரானும் ரொம்ப நாளா இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்தே அகற்றி விடுவோம்ன்னு சொல்லிகிட்டுத்தான் இருக்குது.அரேபிய ஷேக்குகளின் துணை இஸ்ரேலுக்கு இருக்கும் வரை ஈரான் கனவோ அல்லது வகாபிய தீவிரவாதக் கனவோ சாத்தியமேயில்லை.

    இருட்டில் தொலைத்த காசை வெளிச்சம் இருக்கும் இடத்தில் வந்து தேடும் முல்லா ஜோக்ஸ் போல லண்டனில் புலம் பெயர்ந்த ஒரு இஸ்லாமியர் இப்படித்தான் ஜிகாதி ஜிந்தாபாத்துன்னு பிரச்சாரம் செய்து விட்டு கடைசியில் அவரோட பூர்வீகம் தேடுனா தான் இஸ்ரேலியன் என்று அதிர்ச்சி அடைந்தாரம்:)

    தமிழ் இஸ்லாமிய சகோதரர்களின் நிலைதான் பரிதாபம்.அரேபியாவுக்கு போனா அரபிக்காரனும் சேர்த்திக்க மாட்டான்.பாகிஸ்தான்,ஆப்கானுக்கு போனால் என்னை மாதிரி உனக்கு மூக்கு நீளமா இல்லையேன்னு எங்காவது கேம்புல கொண்டு போய் உட்கார வைத்து விடுவான்.எகிப்து,மொராக்கோ,டுனிசியா.... சான்ஸே இல்லை.

    நல்ல பிள்ளையா தமிழனாக உணர்!இந்தியனாக நினை.

    ReplyDelete
    Replies
    1. நடராஜா ,நீங்கள் நல்ல பிள்ளையாக ,தமிழனாக உணர்ந்திருந்தால் ,போலி இந்தியனாக இல்லாமல் இருதால் இப்படி எழுதியிருக்க மாட்டீர்கள்

      Delete
  8. Sir ivanunka thirunthave mattarkal.. Nanum oru islamiya naatil than velai seikiren.. Muslimkalai entha oru kalthilum ethiriyaga ninaikkavillai.. Aanal intha mathiri muslim theverravathiyagave irunthalum aatharikkum manapanmaiyal than ninaikkum pothu aruvaruppaka ullathu..

    ReplyDelete
  9. சகோ சார்வாகன்,
    நல்ல பதிவு ...

    //தீவிரவாத செயல்களை தூண்டும் விடயங்களை கண்டு, தவிர்த்தல்//
    இது மிக முக்கியம்...
    நமது அரசியல்வாதிகள் சிந்தித்து செயல்படுவதே இல்லை.

    @Ibrahim Sheikmohamed
    //முஸ்லிம்களை நசுக்கவேண்டும் இந்தியாவில் அவர்களை அடிமைகளாக்க வேண்டும் என்ற சார்வாகன் .சோ ,குருமூர்த்தி போன்ற ஆர்வலர்கள் இஸ்ரேலை போற்றி போற்றி பஜனை பாடிவருகிரார்கள் .//
    அதானே முஸ்லிம்கள் ஏற்க்கனவே அராபிய அடிமைகளாகிவிட்டார்கள் அல்லவா அப்புறம் ஏன் இவர்களுக்கு இந்த தேவையற்ற வேலை :)

    ReplyDelete
  10. உலகமே அமேரிக்கா அடிமைகளாக மாறிவிட்ட பின்னர் முஸ்லிம்கள் அரபுஅடிமைகளாக மாறுவதில் பாவமில்லை

    ReplyDelete
    Replies
    1. //முஸ்லிம்கள் அரபுஅடிமைகளாக மாறுவதில் பாவமில்லை//

      ஆமாங்க ...

      Delete
    2. முஸ்லிம்கள் எல்லாம் அரபிய அடிமைகள் என்று ஒப்புக்கொண்டமைக்கு நன்றி....ஆனால் உலகமே அமெரிக்க அடிமைகள் என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது...சிந்தித்து பார்க்கவும்.

      Delete
  11. //உலகமே அமேரிக்கா அடிமைகளாக மாறிவிட்ட பின்னர் முஸ்லிம்கள் அரபுஅடிமைகளாக மாறுவதில் பாவமில்லை//

    இப்ராஹிம்! உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்குது:) அமெரிக்காவும்,இஸ்ரேலும் இதைத்தானே விரும்புகிறது.

    யார் போலி இந்தியன்கள் என்ற முகத்திரைதான் கிழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறதே:)

    ReplyDelete
  12. இப்ராஹிம்!ஆ ஊ ஔ க்குப் பின் ஃ வேற இருக்குதுங்க:)

    இந்துத்வா தீவிரவாதம் உள்நாட்டுப் பிரச்சினை.முளையிலே கிள்ளியெறியும் வலிமை இந்திய ஜனநாயகத்துக்கு உண்டு.ஆனால் இஸ்லாமிய தீவிரவாதம் உலக எல்லைகளை பரப்பி நின்று கொண்டிருக்கிறது. அதெப்படி தொட்ட "தொண்ணூறு" குண்டு வெடிப்புக்களின் பின்ணணியில் இஸ்லாமியப் பெயர்கள் வருகின்றன?

    ReplyDelete
    Replies
    1. ராச நட,

      //அதெப்படி தொட்ட "தொண்ணூறு" குண்டு வெடிப்புக்களின் பின்ணணியில் இஸ்லாமியப் பெயர்கள் வருகின்றன?//

      காரணம் என்னவெனில்,

      போராளி தான் எதிர்க்கும் அதிகார மையத்துடன் மட்டுமே மோதுவான்.

      பயங்கரவாதி தான் எதிர்க்கும் அதிகார மையத்தினை எதிர்க்க வக்கில்லாமல்,அதன் கீழ் வாழும் அப்பாவிகளை தாக்குவார்கள்.

      எனவே மதபயங்கரவாதிகளுக்கு அப்பாவிகள் இலக்கு என்பதால் எங்கும் குண்டு வைக்கலாம், எளிதில் இலக்கு கிடைக்கும், அடுத்து மதத்துக்காக பலியானால் சொர்க்கம் என்ற "கவர்ச்சி ஆஃபர்" வேறு உள்ளதால் , வேறு எந்த மதத்தினையும் விட இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஆர்வமாக செய்கிறார்கள்.

      இந்துவோ, கிருத்துவரோ, புத்தமதத்தினரோ, மதம் எதுவாகினும் அவர்கள் தாய்நாட்டை விட்டுக்கொடுக்க மாட்டார்கள், சீனரோ,ஜப்பானியரோ புத்தர் இந்தியாவில் பிறந்தார் என தங்கள் நாட்டை விட இந்தியாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள்,ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு அவர்கள் இருக்கும் நாடு குறித்தெல்லாம் கவலையில்லை, ஏன் எனில் அவர்கள் ஒரே இஸ்லாமிய தேசம் ,ஒரே மதம் ,தலைவன்னு சொல்லிக்கொள்(ல்)பவர்கள்.

      Delete
  13. சகோ இராசநட,
    நாம் என்ன சொன்னாலும், உலகமே ஷரியாவின் கீழ் வர சாம,தான,பேத,தண்ட வழிகளில் முயற்சிக்க வேண்டும் என்வே சொல்வார்கள்.

    இதில் தண்டம் என்பதில் யாருக்கும்பங்கு இருக்க கூடாது எனவே விவாதிக்கிறோம்.

    அவ்வளவுதான்!!

    இபோதைய இலங்கை நிலவரம் பற்றி,பொதுபலசேனா,ஐ.நா வின் போக்கு பற்றி உங்களிடம் இருந்து பதிவு எதிர்பார்க்கிறேன்.
    நன்றி!!!

    ReplyDelete
  14. சகோ இப்பூ வாங்க,

    1. நான் சொல்வது நம் நாட்டிலும் ,பிற நாடுகள் போல் பொருளாதாரம்,சமூகம் சார் பிரச்சினைகள் உண்டு. அத்னை நாட்டின் சட்டம்,நீதி சார்ந்து மட்டுமே தீர்க்க முனைய வேண்டும். அனைவருகும் ஒரே சட்டம், அனைவரும் கட்டுப்பட வேண்டும்.

    2. இப்பிரச்சினைகளில் ஒரு குழுவினர் மட்டும் பழி வாங்கப்படுவதாக செய்யப்படும் பிரச்சாரம், வாழ வழியற்றவர்களை தீவிரவாதத்தின் பால் செலுத்துகிறது. இதில் இனம்,மதம்,மொழி,சாதி வித்தியாசம் இல்லை.

    3. ஒரு தீவிரவாத செயல் நடந்து நாம் நேரடியாக அறியாத பட்சத்தில் காவல்துறை,நீதிமன்றம் சொல்வதை ஏற்கிறோம். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவரின் சார்பிலும் நின்று நீதிமன்றத்தில் மட்டும் வாதிட ,மறுக்க வேண்டுகிறோம். இதனை குழுத் தலைவர்களுக்கு வேண்டுகோளாக விடுக்கிறோம். அதை விட்டு, புரளி கிளப்புவது நல்லது அல்ல!!!.

    4. கர்கரே பற்றியும் பல ஆதாரமற்ற தகவல்களை சொல்லி வருவதை விட, இதற்கும் நீதிம்ன்றம்,பாராளுமன்றத்தில் வெள்ளை அறிக்கை போல் ஒன்றை குழுத் தலைவர்கள் அழுத்தம் கொடுத்து, அத்னை ஏற்க வேண்டும்.

    5. இஸ்ரேல் சுற்றிலும் எதிரிகள் இருந்தாலும், அதிக‌ அளவு தீவிரவாதத்தை உள்நாட்டில் கட்ட்ப் ப‌டுத்துகிறது.அதில் இருந்து பாடம் கற்பது சரிதான்.நாட்ட்ற்குள்ளான பிரச்சினைகளுக்கு நாட்டின் சட்டம் எனில், அதையும் தாண்டினால் ஐ.நா வின் தீர்வுதான் வழி.இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கும் ஐ.நா மூலம் அழுத்தம் கொடுத்து ஒரு தீர்வை ஏற்பதே சரி!!

    நாம் வாழ வழி கூறுகிறோம், அழிவு நோக்கி அல்ல!!

    எந்தக் காலத்திலும் உலக முழுதும் எங்கள் கீழ் வரும் என எவரும் நினைப்பது முட்டாள்தனம், அதற்கு புத்த்க கடவுள் துணை செய்வார் என்பதும், இதற்கு போராடினால் சுவனம் என்பதும் ஆபத்தான கருத்தாக்கம்!!

    நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. // 3. ஒரு தீவிரவாத செயல் நடந்து நாம் நேரடியாக அறியாத பட்சத்தில் காவல்துறை,நீதிமன்றம் சொல்வதை ஏற்கிறோம். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவரின் சார்பிலும் நின்று நீதிமன்றத்தில் மட்டும் வாதிட ,மறுக்க வேண்டுகிறோம். //

      ஆஹா, ஓஹோ, பேஷ் பேஷ்...

      இஸ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் போன்று அதிகாரப்பூர்வமாக நடத்த ஆசைப்படுகிறீர்கள். உங்களுக்கு அந்த ஆசை வந்திருப்பதில் தவறில்லைதான். உங்கள் நாத்தீக வேடம் தொடர்ந்து கலைவது போல தோன்றுகிறது, உடன் நல்லதொரு ஒப்பனையாளரை அணுகி சரி செய்து கொள்ளவும். (நாத்தீக) வேடம் மிக முக்கியம் அமைச்சரே....

      வாழ்த்துக்கள்.

      Delete
    2. சகோ சஹா,
      நான் சொல்லும் இந்த வழிமுறை அமைதியை நாடும் மனிதர்களுக்கு பிடிக்கும்.
      இந்த வழிமுறையில் தவறே நடக்காது என்க் கூறவில்லை. ஆனால் பிறவழிகளை விட சிறந்தது என்வே கூறுகிறேன்.

      எதற்கும் குஜராத்தை இழுப்பதே மூமின்களுக்கு வேலையாப் போச்சு.
      தமிழக நிலைமையில் நன்றாகத்தானே இருக்கீங்க. கோவைக் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நியாயமாக விசாரணை நடந்தது என்பதைப் பேசவே கூடாது சரியா!!!

      இந்தியா என்பது பல மாநிலங்கள் கொண்டது.ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகை அரசியல்,போராட்டம்.

      எடுக்கும் எல்லா பிரச்சினைகளிலும் எளிதாக தீர்வு கிடைக்க வேண்டும், என்பது
      எந்த நாட்டிலும் சாத்தியம் இல்லை!!

      மூமின்களுக்கும் காஃபிர்கள் போராட வேண்டும், அப்படி இருந்தாலும் காஃபிர்கள் இழிவானவர்கள் என் குரான் சொல்வதை அல்லாஹ் அக்பர் என சவுண்டு விடுவோம்!!.ஷரியாவை உலக முழுதும் கொண்டுவர போராடுவோம்!!

      நான் சொன்ன வழியில் இதுவரை தமிழக மூமின் தலைகள் என்ன செய்து இருக்கிறார்கள் என பட்டியல் போடவும்.

      **
      சரி நான் சொல்லும் இந்திய சட்டத்திற்கு உட்பட்ட தீர்வு மூமின் ஆன உங்களுக்கு ஒத்து வரவில்லை. இப்பிரச்சினைக்கு தாங்கள் கூறும் தீர்வு என்ன?
      பொது சமூக சட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?

      நன்றி!!!

      Delete
    3. சகோ சஹா
      நாம் என்கவுன்டர் ஏனும் திவிரவாதத்தையும்,மரண தண்டனையையும் எதிர்ப்பவர்.

      அரசியல், அரசு அலுவலர்களின் கூட்டு சதியில் பல த்காத செயல்கள் நடக்கிறது என்றாலும்,அவர்களை விட அவர்களை தேர்ந்தடுத்த நாமே குற்ரவாளிகள்.
      சாதி மதம் பார்க்காமல் ஓட்டு போட்டால் இப்படி ஆட்களே வருவார்?

      குஜராத தவிர ,பல் விடயங்கள் இந்தியாவில் அனைவருக்குமே நலமாக இருப்பதாக கொள்ளலாம் என்வே கருதுகிறேன்.

      மூமின்கள் முதலில் பொது சமூக சட்டத்தை ஏற்க வேண்டும். பிறகு உங்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் 50% இல்லாமல் போய்விடும். எ.கா சில மூமின்கள் 4 மனைவி ஒரே சமயத்தில் வைக்க இந்திய முஸ்லிம் சமூக சட்டம் அனுமதிக்கிறது. முதல் மனைவி அனுமதி இன்றியே இத்ர 3 திருமணம் செய்யலாம்.

      விவாக இரத்து ஆனால் ஜீவனாம்சம் கிடையாது.பெண்ணுக்கு திருமண குறைந்த ப்ட்ச வயது கிடையாது.சொத்தில் பெண்ணுக்கு பாதி பங்கு!!


      பொது சிவில் சட்டம் ஏற்றலும்,நாட்டின் சட்ட திட்டங்களின் தீர்ப்பை ஏற்றலுமே மூமின்கள் மட்டும் அல்ல அனைவருக்குமே சுமுகமாக வாழ வழி வகை செய்யும்.
      முதலில் நாம் மாற வேண்டும், எல்லாம் மாறும்.
      இச்சூழல் வரும் போது ஆள்பவர்களும்,அரசு அலுவலர்களும் கூட ஒழுங்காகவே இருந்தாக வேண்டும்.

      நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்களையும் கண்காணிக்க வேண்டும். ஆக்க பூர்வமான விவாதம் மூலம் தேவையான சட்ட சீர்திருத்தம், வாழ்வாதரப் பிரச்சினைகள் என முன்னேற்றப் பாதையில் செல்ல் வேண்டுமென்வே விரும்புகிறோம்!!

      நன்றி!!

      Delete
    4. //மூமின்கள் முதலில் பொது சமூக சட்டத்தை ஏற்க வேண்டும். //
      //பொது சிவில் சட்டம் ஏற்றலும்//

      சார்வாள் அண்ணே, நான் மொதல்லயே சொல்லிட்டேன், ஒங்க கருப்பு சட்டை காவி சட்டையா கலரு மாறுதுன்னு. சீக்கிரம் கருப்பு சட்டைய போட்டுக்குங்க, அப்பப்ப நடுநடுவுல "நான் நாத்தீகரு, நான் நாத்தீகரு" ன்னு சொல்லிக்கங்க, பாக்குறவங்க உங்கள "வேற மாதிரி" நெனக்கப்போறாங்க.

      Delete
    5. சஹா தம்பி,
      நான் விவரம் இல்லா அப்பாவி திராவிட கருப்பு சட்டை நாத்திகன் அல்ல. மதங்கள் பொய் என்றால் அனைத்துமே ஏமாற்றுவேலை என்பவன்.

      பாவம் கருப்பு சட்டை ஆள்களை ஏமாற்றியே பிழைத்த வஹாபிகளின் சுயரூபம் பீ.சே மாதிரி உளறுவாயன்களால் வெளி வந்தது!!

      மிச்சம் மீதியை தமிழ்மண தாவாவாதிகள் பதிவு இட்டே உண்மைகளை ஒத்துக் கொண்டார்!!
      **
      வஹாபிகளின் இரட்டை வேடப் போக்கை தோல் உரித்தால் இந்துத்வா,யூத,கிறித்த்வ கைக்கூலி ஹி ஹி.

      எங்கும் எதிலும் சதிக் கோட்பாடு என்பது வஹாபிகளின் விள்க்கம். இதனை ஆரம்பித்து வைத்ததே குராந்தான்!!

      முந்தைய வேதங்கள் செல்லாது, முகமதுவுக்குபின் தூதர் கிடையாது என வஹாபி இஸ்லாம் மட்டுமே சரி என்னும் விள்க்கமே ஒரு சதிக் கோட்பாடுதான்!!


      ஆகவே மதம் காட்டும் வழியில் சதிக் கோட்பாட்டுக் கதை நம்ப காஃபிர்கள் தயாராக இல்லை!!

      வாழும் நாட்டின் சட்டம் ஏற்று, காஃபிர்களுடன் சமாதானமாக வாழ்வதே உத்தமம்!!

      எ.கா இலங்கை மூமின்கள் என்ன நடந்தாலும் இராஜபக்சேவுக்கு துதிபாடுதல்.

      நன்றி!!!

      Delete
  15. ஒன்று எனக்குப் புரியவில்லை. தீவிரவாதப் போராளிகள் பலரும் தங்கள் இறப்புக்கு அஞ்சாமல் செயல்படுபவர்கள். அப்படிப்பட்டவர்களை எப்படி மேல்நாடுகளில் கண்டுபிடித்து (ஒரு உதாரணம்: தனது ஷூவிற்குள் குண்டு வைத்தவனைப் பிடித்தது) தீவிரவாதத்தை முறியடிக்கிறார்கள்? நம்மால் ஏன் அது சுத்தமாக முடியவில்லை?

    இந்த சைக்கிளை அந்தக் கடை முன் நிறுத்திட்டு வா என்று சொன்னால் அதை அப்படியே செய்ய -காசுக்காக மட்டும் கூட - எத்தனையோ பேர் தயாராக இருப்பார்கள். இந்த எலிகளை எப்படிக் கண்டுபிடிப்பது? நம்மால் முடியாததை எப்படி மேல்நாடுகள் தங்களைத் தொடர்ந்து காப்பாற்றி வருகிறார்கள் என்பது எனக்கு மிக ஆச்சரியத்தை அளிக்கிறது. பேசாமல் ட்யூஷன் எடுத்தால் நம்ம ஆளுக போய் படிச்சிட்டு வரலாம்!

    ReplyDelete
    Replies
    1. தருமிய்யா,

      // நம்மால் முடியாததை எப்படி மேல்நாடுகள் தங்களைத் தொடர்ந்து காப்பாற்றி வருகிறார்கள் என்பது எனக்கு மிக ஆச்சரியத்தை அளிக்கிறது. பேசாமல் ட்யூஷன் எடுத்தால் நம்ம ஆளுக போய் படிச்சிட்டு வரலாம்!//

      இது பற்றி விரிவா நூல்களும், பத்திரிக்கைகளில் கட்டுரைகளும் பல வந்திருக்கிறது.

      அமெரிக்காவில் அனைத்து இணைய கேட்வேக்களிலும் கண்காணிப்பு உண்டு, அதே போல அலைப்பேசி, சேட்டிலைட் தொடர்பு என அனைத்து தகவல் தொடர்பிலும் கண்காணிப்பு உள்ளது , ஒரு ஸ்கிரினிங் & ஃபில்டரிங் மென்பொருள் அமைத்து குறிப்பிட்ட சொற்கள், கோட் வேர்ட்கள் என ஒரு அகராதி போல தயாரித்து உள்ளீடு செய்துவிடுவார்கள், ஏதேனும் மின்னஞ்சல், தொலைப்பேசி உரையாடலில் அச்சொல் பயன்ப்படுத்தப்பட்டு இருந்தால் ,அவ்வளவு தான் தானே அனைத்தும் பதிவு செய்து வைத்துவிடுவும், அதனை அலசி, சந்தேகப்படுபவர்களை ரகசியமாக கண்காணித்து என்ன செய்கிறார்கள் என மொத்த விவரமும் தெரிந்துக்கொண்டு ஒரு அதிகாலை சுபவேளையில் கோழி அமுக்குவது போல அமுக்கிவிடுவார்கள் :-))


      இதனால் தான் ஒசாம குழு கடைசி வரையில் மின்னணு தொலைத்தொடர்பை பயன்ப்படுத்தவேயில்லை.

      மேலும் அமெரிக்க குடிமகன்கள் அனைவரையுமே ரகசியமாக கண்காணித்தே வருகிறார்கள், அவர்கள் பணப்புழக்கம், பயண விவரம் எல்லாம் உளவு அமைப்புகளின் கண்காணிப்பில் இருக்கிறது, சந்தேகத்துக்கிடமாக இருந்தால் மட்டுமே தோண்டுவார்கள்.

      நம்ம ஊரிலும் இந்த வேலையை ரகசியமாக செய்வதாக பேச்சு உண்டு, ஒரு வங்கி கணக்கில் திடீர் என பணநடமாட்டம் அதிகரித்தால் உடனே கண்காணிப்பில் வந்துவிடும் என சொல்கிறார்கள்.

      Delete
    2. தருமி
      ,///நம்மால் முடியாததை எப்படி மேல்நாடுகள் தங்களைத் தொடர்ந்து காப்பாற்றி வருகிறார்கள் என்பது எனக்கு மிக ஆச்சரியத்தை அளிக்கிறது.////
      நமது நாட்டில் குண்டு வெடித்த உடனே இ மெயில் வருகிறது இந்திய முஜாஹிதீன் குண்டு வைத்ததாக தகவல் சொல்லுகிறார்கள் .அப்புறம் ஒரு கம்புயுட்டர்போட்டோ அப்புறம் ,அவர்கள் பிடிபட்டார்கள் செய்தி வருட கணக்கில் விசாரணை .ஆதாரம் இல்லை .இதுதான் தொடர்ந்து நடந்து வருகிறது .உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவதில்லை .
      பிஜெபியின் தலித் தலைவராக இருந்த பங்காருலட்சுமணன் லஞ்ச விவகாரத்தில் தெகல்காவை நம்பியவர்கள் குஜராத் ரயில் எரிப்பு சம்பவத்தில் தெகல்காவின் விசாரணைகளை ஏன் கண்டுகொள்வதில்லை ?
      தெகல்கா வின் சாட்சிகளை வைத்து உண்மைகளை கண்டுபிடித்தால் குண்டுவெடிப்புகள் நின்றுவிடும் .குண்டு வெடித்த பின்னரே தீவிரவாதிகளை தேடுபவர்கள் ஒருதடையாவது குண்டு வைக்கும் வேளையில் ,குண்டுகளை இலக்கிற்கு எடுத்தும் செல்லும் வேளையில் ,தயாரிப்பு வேளையில் முஸ்லிம்களை கைது செய்துள்ளனரா? பழைய செய்திகளை பாருங்கள்.பல உண்மைகள் தெரியும் ...
      அமெரிக்காவில் தீவிரவாதிகள் அடக்கப்பட்டார்கள் .ஆம் பாம்பின் கால் பாம்பறியும் ..தீவிரவாதிகளை உருவாக்குவதே அமெரிக்காதானே .
      சென்னை குப்பத்திலுள்ள தாதா வீரமணியை உருவாக்கியது அதிமுகவே .அவன் எல்லை மீறியதும் சுட்டுத் தள்ளியதும் அதிமுகவே .சாத்தான்குள இடை தேர்தலில் ஒரு பண்ணையாரை வளர்த்ததும் அதிமுகவே.தன தேவைகள் முடிந்ததும் .என்கவுண்டரில் போட்டுதள்ளியதும் அதிமுகவே .
      சீக்கிய பிரச்சனையை ஜனதா காலத்தில்ஊதி பெரிதாக்கி வளர்த்த இந்திரா காந்தி,அவருடைய ஆட்சியில் அது வரம்பு மீறியதும் பொற்கோவிலில் நுழைந்து தாக்கி அடக்கினார் .ஆனாலும் அந்த விவகாரமே அவரது உயிரை பறித்தது
      ரசியவுக்காக வளர்த்த ஒசாமா அமெரிக்காவுக்கு எதிரியானால் அதற்கு இஸ்லாம் என்ன செய்யும்?
      ரசியாவை எதிர்க்க ஆயுதம் வழங்கி வளர்த்த முஜாஹிதின் கள் அமெரிக்காவுக்கு எதிராகதாலிபான்கள் ஆக போரிட்டால் அதற்கு இஸ்லாம் என்ன செய்யும்?
      பொருளாதார சரிவை சரிகட்ட இராக் எண்ணையை திருட சதாமை பேரழிவு ஆயுதம் என்று உலக வரலாற்று பொய்யை அவிழ்த்து விட்டு அப்பாவி மக்களை கொன்றால் அல்காய்தா உருவானால் இஸ்லாம் என்ன செய்யும்?
      சுதந்திரம் பெற்றபிறகு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் வேளையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் கருத்து வாக்கெடுப்பு நடைபெறும் என்று உடன்படிக்கை செய்துவிட்டு அதன்படி நடக்காததால் அந்த மக்கள் போரிட்டால் தீவிரவாதத்தில் ஈடுபட்டால் இஸ்லாம் என்ன செய்யும்?
      தேர்தலில் வெற்றிபெற்ற முஜிபுர் ரஹ்மானை பதவி ஏற்க விடாமல் மொழி,இன வெறிபிடித்த பாகிஸ்தான் தடுத்ததால் ,அதன் பின் பங்களாதேசுக்கு இந்தியா ஆதரவாக போர் செய்து தனிநாடாக பிரித்து கொடுத்தால் அதற்கு இஸ்லாம் என்ன செய்யும்?பாக்கிஸ்தானின் அயோக்கியத்தனத்தால் பங்களா தேசம் பிரிந்தது .அதற்கு இந்தியா என்ன செய்யும்? இஸ்லாம் என்ன செய்யும்?

      Delete
    3. சகோ Ibrahim Sheikmohamed,
      தங்கள்(முஸ்லிம்களின்) மனவலியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
      //ரசியவுக்காக வளர்த்த ஒசாமா அமெரிக்காவுக்கு எதிரியானால் அதற்கு இஸ்லாம் என்ன செய்யும்?//

      இப்படி நீங்கள் கூறிய பல இஸ்லாம் என்ன செய்யும்? என்ற கருத்துக்கள் என்னை சிந்திக்க வைத்தன. அந்த சிந்தனையின் விளைவில் எனக்கு பின்வரும் கேள்வி எழுகிறது. என்னுடைய கேள்விக்கு நீங்கள் தக்க பதில் அளிப்பீர்கள் என நம்புகிறேன்.

      அமெரிக்கா -இந்தியா ஒழிக என்று கூறினால் அமெரிக்க,இந்திய எதிர்ப்பு என்று புரிந்து கொள்ளலாம்.
      ஆனால் அமெரிக்கர்களை,இந்தியர்களை கொன்றுவிட்டு அல்லாகு அக்பர் என்றால்,சுவனம் கிடைக்கும்,சுவனத்தில் பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்(குரானின் அடிப்படையில்) கொலை செய்தால் இதற்க்கு இசுலாம் காரணம் என்று சொல்லாமல் எப்படி இருக்க முடியும்?

      தீவிரவாதிகள் சுவனத்தின் மீது உள்ள நம்பிக்கையில்தான் மக்களை கொல்கின்றனர் என்பதை இரட்டை கோபுர தாக்குதலிலும்,மும்பை தாக்குதலிலும் அவர்கள் பேசிக்கொண்டதை வைத்து அறிய முடிகிறது.

      சகோ, நீங்கள் என் கேள்விக்கு பதில் தருமுன் இதை தீர்க்கும் வழியையும் நான் தருகிறேன்....இப்படிப்பட்ட வசனங்களை இடைச்சொருகல் என்பதே அந்த வழி. இதை செயல்படுத்தினால் இசுலாமை காப்பாற்றலாம் இல்லையென்றால் மனிதகுலத்தை நம்மால் காப்பாற்ற முடியாது.
      என்றும் மனிதத்துடன்
      புரட்சி

      Delete
    4. //ஒன்று எனக்குப் புரியவில்லை. தீவிரவாதப் போராளிகள் பலரும் தங்கள் இறப்புக்கு அஞ்சாமல் செயல்படுபவர்கள். அப்படிப்பட்டவர்களை எப்படி மேல்நாடுகளில் கண்டுபிடித்து (ஒரு உதாரணம்: தனது ஷூவிற்குள் குண்டு வைத்தவனைப் பிடித்தது) தீவிரவாதத்தை முறியடிக்கிறார்கள்? நம்மால் ஏன் அது சுத்தமாக முடியவில்லை?//

      9/11க்கு பிறகு அமெரிக்கா கோடிக்கணக்கில் செலவு செய்து, வவ்வால் சொன்னது போல,தீவிரவாதத்தினை கண்காணித்து வருகிறது. அமெரிக்க உளவுத்துறை ஆட்கள் முமின்களிடையே ஊடுறுவி அவர்களை கண்காணித்தபடி உள்ளனர். அமெரிக்க உளவுத்துறை மக்களுக்காகவே செயல்படுகிறது. இந்திய உளவுத்துறை ஆளும் கட்சிக்காக, அவர்களின் தேர்தல் வெற்றி, தலைவர்கள் பாதுகாப்பு இவற்றை தாண்டி எதுவும் செய்வதில்லை. நம்மூர் உளவுத்தறை செயல்பாட்டுக்கு சிறந்த உ-ம், இந்தியன் முஜாகிதீன் தலைவனை வேறு கேசுக்காக 2009-ல் வங்க போலிஸ் கைது செய்து பின் பெயிலில் விட்டுவிட்டார்கள். அவன் ஒரு தீவிரவாதி என்பதுகூட அவர்களுக்கு தெரியவில்லை. இந்திய உளவுத்தறை தாங்கள் தேடும் தீவிரவாதிகள் குறித்து தகவல்களை எல்லா லோக்கல் போலிசுக்கும் அனுப்ப வேண்டாமா?

      அப்சல் குருவை தூக்கிலிட்ட போது நம்மூர் ஆட்கள் பினாத்தியது மாதிரி அமெரிக்க பொதுமக்கள் தீவிரவாதிகளுக்கு இரக்கம் காட்டுவதில்லை.(காரில் என்னை இடித்தவனின் மீது என்னைவிட மற்ற அமெரிக்கர்கள் கடுப்பு காட்டினார்கள், சட்டம் மீறினால் இங்கு கொஞ்சமும் இரக்கம் காட்டுவதில்லை). நம்மூரில் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி என்ற நினைப்பில் தீவிரவாதிகள் மீதுதான் கருணை மழை பொழிகிறார்கள். தீவிரவாத செயலை 2-3 நாட்களில் நம்மாளுக மறந்து விடுவார்கள். இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் தீவிரவாத சாவு விழும் வரை இது தொடரத்தான் போகிறது. இப்படி இரக்கம் காட்டியே 10,000 வருடம் அடிமையாக இருந்த இனம் நம் இனம்!

      அமெரிக்க கட்சிகள் முகமதிய ஓட்டுக்களுக்காக அஞ்சவேண்டியதில்லை, ஏனெனில் அவர்கள் எண்ணிக்கை குறைவு. குண்டு வைக்க முயன்றாலோ அல்லது சதி செய்தாலே சாகும் வரை ஜெயில்தான். அமெரிக்கர்கள் அண்ணா பிறந்தநாள் கொண்டாடுவதில்லை. ஆதலால் தண்டனை நிறைவேறும் முன் விடுதலை செய்வது இல்லை.

      Delete
    5. சகோ இப்பூ,
      //.குண்டு வெடித்த பின்னரே தீவிரவாதிகளை தேடுபவர்கள் ஒருதடையாவது குண்டு வைக்கும் வேளையில் ,குண்டுகளை இலக்கிற்கு எடுத்தும் செல்லும் வேளையில் ,தயாரிப்பு வேளையில் முஸ்லிம்களை கைது செய்துள்ளனரா? பழைய செய்திகளை பாருங்கள்.பல உண்மைகள் தெரியும் ...//
      இது விசயகாந்த் படத்தில் மட்டுமே சாத்தியம்!!!

      அப்படி கைது செய்தாலும், குண்டை காவல்துறையே வைத்து ,நாடகம் என சதிக் கோட்பாடு சொல்ல மாட்டீர்களா??

      கசாப் தூக்கில் போடும் வரை சும்மா இருந்து போட்டவுடன், அப்பாவி என் பதிவு போட்டவர்கள்தானே!!

      இந்தியாவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் த்ரப்பிற்கும் சம வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அதில் மூமின் த்லைகள்,இயக்கங்கள் பங்கெடுங்கள். முடிந்தவரை போராடி பிறகு நீதி மன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் எந்த்தானே சொல்கிறோம்!!!

      இப்படி எதுவும் செய்ய மாட்டேன், சதிக் கோட்பாட்டு புரளி கிளப்புவேன் என்பது சரியா?

      வேண்டும் எனில் இப்போது ஹைத்ராபாத் குண்டு வெடிப்பு வழக்கில் அண்ணன் பீ.சே& தவுகீத் வக்கீல் குழு ஆஜராகி வாதாடி உண்மையை வெளிக் கொண்டு வரட்டுமே!!.

      மூமின் ஆதரவு காங்கிரஸ் கட்சி மீதும் சதிக் கோட்பாடு சுமத்தினால் எதுவும் செய்ய முடியாது

      நன்றி!!

      Delete
    6. Another factor is most of the western countries do not have HOME GROWN terrorism.. That is terror activities are done by foreigners or the immigrants but not by the local population... So identifying and monitoring them is very easy... but in INDIA mostly we have home grown terrorism and the terrorsusta also have the same facial and physical appearence we have so monitoring and finding them before they act islike searching for a needle in a haystack.

      Delete
  16. ஐயோ வரலாற்று புலி வவ்வால் நீங்கள் துப்பறியும் சிங்கமாகவும் உள்ளீர்கள் .அதெப்படி இந்த விஷயங்கள் நம்மூர் புலனாய்வுக்கு தெரியவில்லை.தெரியும் ஆனால் அதைகடைபிடித்தால் பல அரசியல்வாதிகள் சுயரூபம் வெளிச்சமாகிவிடும் .இங்கே அரசியல் அல்லவா நடக்கிறது .உண்மை குற்றவாளிகளை எங்கிருந்து கண்டுபிடிப்பார்கள்?
    கையில் இருக்கும் ஒரே மாமருந்து இந்திய முஜாஹிதீன் என்ற இல்லாத அமைப்பு .மற்றும் தொப்பி தாடிவைத்த முஸ்லிம்கள் .
    எதற்கு நீங்கள் சொன்ன புலனாய்வு யுக்திகள் ? அதெல்லாம் பின்பற்றினால் குண்டுவெடிப்புகள்இல்லாமற் போய்விடுமே .குண்டுவெடிப்புகள் இல்லாமற் போய்விட்டால் அரசியல் திருப்பங்கள் ,வாக்கு வங்கிகள் என்ன ஆவது?

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      நீங்கள் மூமின்களுக்கு எதிரான சதிக் கோட்பாடு என்ற கண்ணோடத்தில் அனைத்தையும் பார்ப்பது தீர்வு தராது.

      குற்றம் சாட்டப்பட்டவ்ர்களுக்கு ஆதர்வாக நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மூமின் தலைகள் செய்யுங்கள். அந்த முயற்சிகளை,அதன் சிக்கல்களை வெளிப்படையாக விவாதியுங்கள்.எதுவரை முடியுமோ செய்யுங்கள்!!

      முடிவில் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க வேண்டும்.

      **
      மற்றபடி நல்ல ஆட்சியாளர்கள்,கடமை காக்கும் அரசு அலுவலர்கள் எல்லாம் சட்டத்திற்கு அனைவரும் கட்டுப் படுவோம் என் செயல்பட்டால் மட்டுமே சாத்தியம்.சட்டத்தை கையில் எடுக்கும் போக்கே தீவிரவாதத்தின் அடிப்படை!!

      மக்கள் சட்டத்திற்கு கீழ்ப்படிந்தால் தலைவர்கள், அரசு ஊழியர்கள் அனைவருமே அதே வழி செல்வார்!!

      நான் நடக்காத விடயம் சொல்லவில்லை!!

      இது மேலை நாடுகளில் இயல்பாக நடக்கும் விடயம். நம் நாட்டிலும் வர வேண்டும்.

      சட்டத்தின் முன்பு அனைவரும் பணிந்தே ஆகவேண்டும். சட்டத்திருத்தமும் சட்டத்திற்கு உட்பட்டே செய்ய வேண்டும்.

      நன்றி!!!

      Delete
  17. ஐயா சொன்னது போல் மேல்நாடுகளில் ட்யூஷன் அவசியம் எடுக்க வேண்டும். திறமையான ரீச்சர் இஸ்ரேலின் உதவியை பெற வேண்டும். உளவுத்துறையை திறமையாக செயல்படகூடியவர்களாக மாற்றணும். இதன் மூலம் செர்க்கத்து போகலாம் என்று ஆசைபட்டு குண்டு வைப்பது நடக்க கூடிய விடயம் அல்ல என்பதை பயங்கரவாதிகளுக்கு ஏற்படுத்த வேண்டும். சகோ நந்தவனத்தான் சொன்னது போல பயங்கரவாதிகள் மீது கருணை மழை பொழிவதை நிறுத்த வேண்டும்.வெளிநாடுகளில் பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் தண்டிக்கபட வேண்டிய பயங்கரவாதிகளுக்காக கருணை மழை பொழிவதை விடுத்து பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்.
    (நாட்டில் குண்டுகள் வெடிப்புகள் பயங்கரவாதிகாளால் நடத்தபடலாம் என்று ஹைதராபாத்தில் குண்டு வெடிப்பதற்க்கு இரு நாட்களுக்கு முன்பு தொடக்கம் புலானாய்வுபிரிவினர் எச்சரித்து வந்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன இதை நமது அருந்ததி ராய் அம்மையார் குறித்து வைத்திருக்கிறார். குண்டுவைத்த பயங்கரவாதி கைது செய்யபட்டு நீதி விசாரணயின் பின் தண்டிக்கபட்ட பின்பு கேள்வி எழுப்புவார். புலானாய்வுபிரிவினர் எச்சரித்து வந்த நிலையில் எப்படி குண்டுகள் வெடித்தன? ஆகவே தண்டிக்கபட்டவர் அப்பாவி தியாகி.)

    ReplyDelete
  18. சார்வாகன் அருமையான பதிவு,

    தீவிரவாதிகள் ஒழிக்கபடவேண்டிய ஒரு நச்சு செடி. அதவும் மத தீவிரவாதிகள் வேரோடு ஒழிக்கப் படவேண்டும். மத தீவிரவாதிகள் இருக்கின்றார்களே...கடவுள் துணையிருப்பாராம், கடவுளுக்காக கொள்வார்களாம், இல்லை கடவுள் ஏற்படுத்திய மதத்திற்காக அதன் பகதர்களுக்காக கொள்வார்களாம், அப்படியென்றால் நேரடியாக நேருக்கு நேர் கலம் இறங்க வேண்டியதுதானே. கோழைகளைப்போல பேடிகளைப்போல மறைந்து அப்பாவிகளை தாக்குவது ஏன்? இல்லை அவ்வாறு செய்பவர்களின் கடவுள்(கள்) பேடியா கோழையா? அல்லது பக்தர்களை காப்பாற்றாத வக்கில்லாத கடவுளா?

    நமது அமைதி மார்க்க சகோதரர்கள் பெயர்தாங்கிகளாக இருந்தாலும், மதத்தீவிரவாதத்தில் ஒரு போதும் ஈடுப்பட மாட்டார்கள்.

    இந்தியாவில் நடக்கும் அனைத்து மதத்தீவிரவாதம் இந்த பார்ப்பன பாசிச இந்துத்துவ யூத கம்யூனிச (ஷியா போஹரா அஹமதி) களின் சதித்திட்டம் தான். அவர்கள்தான் ஒரே மார்க்கமாக சதிக்கோட்பாட்டை நம்பிக்கொண்டு அவர்களை மட்டும்தான் மற்றவர்கள் பாதிக்கப்பட வைக்கிறார்கள் என நினைத்துக்கொண்டு இந்த மாதிரி குண்டுக்களை அதவும் மாற்று மத சகோதரர்கள் சாகிற மாதிரி வைக்கிறார்கள்.

    நமது அண்ணன்கள் ஷியாக்கள் மூமின்களே இல்லை என சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் இஸ்ரேலை ஈரான் எதிர்க்கிறது, தூய மூமினான சவுதி ஆதரிக்கிறது, இதை மார்க்க விடயத்தில் எப்படி எடுத்துக்கொள்வது என்பதே தெரியவில்லை. ஒரே கன்பியூசன்.

    அமெரிக்கா அழிந்து இஸ்ரேல் அழிந்து....நடக்கிற காரியமா. 150 கோடியை விட 2 கோடி பெரியது என வைத்த அந்த எல்லாம் வல்ல கடவுள் எந்த மாதிரி கடவுள்.

    நேர்மையாளர்கள், இன்னும் இஸ்ரேல் செய்தது தவறு என்று கூறிக்கொண்டிருக்கும் நிலையில் மதச்சாயல் பூசுவது பாலிஸ்தீன மக்களுக்கு இழப்பே.

    நன்றி

    ReplyDelete
  19. எனக்கு சுத்தி வளச்சி பேசத்தெரியாது...

    …இங்க ஒருத்தன் அதிகமா பேசுறானே அவன் பேரு என்னமோ இப்ப ரகீம் சேக்கு மொகபத்து என்பவனின் கும்பலே இந்தியாவில் குண்டு வைக்கும் கும்பல்.

    ReplyDelete
  20. அண்ணன் சர்வாகன்,

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. R.Puratchimani/////ஆனால் அமெரிக்கர்களை,இந்தியர்களை கொன்றுவிட்டு அல்லாகு அக்பர் என்றால்,சுவனம் கிடைக்கும்,சுவனத்தில் பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்(குரானின் அடிப்படையில்) கொலை செய்தால் இதற்க்கு இசுலாம் காரணம் என்று சொல்லாமல் எப்படி இருக்க முடியும்?////

    ஹவாலா வாலா ஜெயினின் டைரியில் அத்வானி பெயர் இருக்கத்தான் செய்தது இருந்தாலும் நமது அத்வானி சாப் பாரத் மாதாகி ஜெய் என்கிறார் ..அதற்காக இந்திய தேசம் அத்வானியை ஹவாலாவில் வரவு செலவு செய்ய சொன்னது என்று சொல்வீர்களா?
    கனவு பிரதமர் மோடியும் பாரத் மாதாகி ஜெய் என்கிறார் .அதற்க்காக குஜராத்தில் இன படுகொலையை பாரத் மாதா பண்ண சொல்லியது என்று யாராவது கூறுவார்களா?
    மும்பையில் மற்றும் இந்திய மற்ற மாநிலங்களில் மத கலவரத்தில் அப்பாவி முஸ்லிம்களைக் கொன்றுவிட்டு ஜெய் காளி என்கிறார்கள் .அப்படி என்றால் காளி தெய்வம் சொல்லியதா?
    இதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள் .அப்புறம் நான் தொடர்கிறேன்.
    மிருக இறைச்சியுடன் நானும் மனிதத்துடன்தான் ..

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      உங்களுக்கு உலகமே தெரியமாட்டேன் என்கிறது.
      பாருங்க‌
      இந்துத்வ கொள்கையாளர்= இந்தியாவை இந்து நாடு ஆக்க முயற்சிப்பவர்.

      வஹாபிய‌ கொள்கையாளர்= உலகையே[ இங்கு இந்தியாவை] இஸ்லாமிய நாடாக ஷரிஆ மீது ஆள முயற்சிப்பவர்.

      நக்சல்= உலகையே[ இங்கு இந்தியாவை] பொது உடமை நாடாக மாற்ற முயல்பவர்.

      இவர்கள் கொள்கைகளும் சாதிவீகமாக அமைதி வழியில் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே தீவிரவாதிகள் அல்ல!!

      இந்துத்வ கொள்கையாளர் தீவிரவாதம் செய்தால் இந்து தீவிரவாதி!! எ.கா கோட்சே

      வஹாபிய‌ கொள்கையாளர் தீவிரவாதம் செய்தால் இஸ்லாமிய‌ தீவிரவாதி!! எ.கா அல் கொயதா,அல் உம்மா.

      நக்சல் திவிரவாதம் செய்தால் நக்சல் தீவிரவாதி.

      சரியா??

      சில நாட்களுக்கு முந்தைய பீஹார் குண்டு வெடிப்பினை நக்சல் செய்தார் என் காவல்துறை கூறி,சந்தேகப்படுபவர்களை கைது செய்தால், அந்த இயக்க ஆதரவாளர்கள் சட்டத்திற்கு உட்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதிடுவதில் தவறில்லை. அந்த இயக்கம் சாராத இந்துக்கள் கண்டு கொள்வது இல்லை!!

      அதைத்தான் ,இஸ்லாமிய குற்றம் சாட்டப் பட்டவருக்கும் கூறுகிறோம்.

      குற்றம் சாட்டப்படுபவர் அப்பாவி என் நினைக்கும் மூமின் தலைகள் ஆதரவாக முடிந்த்வரை செய்யுங்கள்.நீதி மன்றத்தில் போராடுங்கள். வீண் புரளிகள் கிளப்ப வேண்டாம் என‌த்தானே பதிவில் இருந்து சொல்லி வருகிறேன்!!

      இறுதியில் நீதிமன்ற தீர்ப்பினை ஏற்க வேண்டும்!!

      அவ்வளவுதான்!!

      நன்றி!!

      Delete
    2. @Ibrahim Sheikmohamed
      அப்படியே இதற்க்கு காரணம் என்ன என்றும் இதை காளி, பாரத மாதா தருவதாக சொல்லி இருக்கிறார்களா அல்லது இசுலாம் சொல்லி இருக்கிறதா என சொல்லவும்.....
      //தீவிரவாதிகள் சுவனத்தின் மீது உள்ள நம்பிக்கையில்தான் மக்களை கொல்கின்றனர் என்பதை இரட்டை கோபுர தாக்குதலிலும்,மும்பை தாக்குதலிலும் அவர்கள் பேசிக்கொண்டதை வைத்து அறிய முடிகிறது. //
      அப்புறம் சுவனத்தில் 72 கன்னிகள் முக்கியம் அமைச்சரே....

      Delete
  22. சாருவாகன் ///நீங்கள் மூமின்களுக்கு எதிரான சதிக் கோட்பாடு என்ற கண்ணோடத்தில் அனைத்தையும் பார்ப்பது தீர்வு தராது.///
    நீங்கள் குண்டுவெடிப்பு என்றால் முஸ்லிம்களாக மட்டுமே இருக்கும் என்ற கண்ணோட்டத்தை தவிருங்கள். ஒவ்வொரு மத கலவரத்திலும் முஸ்லிம்களே அதிகமாக பாதிக்கப் படுகின்றனர். அவ்வாறு இருக்க முஸ்லிம்கள் கலவரத்திற்கு காரணம் ஆக எப்படி இருபார்கள் ?சிந்திக்க வேண்டாமா? மூக்கையாவது சிந்தவேன்டாமா?
    அமெரிக்க மோடிக்கு விசா மறுத்த சமயத்தில் அந்த விவகாரத்தை திசை திருப்ப இஸ்ரத் ஜஹான் மற்றும் மூன்று முஸ்லிம் மாணவர்களை சுட்டு பொசுக்கினார்களே !அதற்கு பெயர் என்கவுண்டரா? அது தீவிரவாதம் இல்லையா? மோடியை கொல்ல வந்தவர்களை கைது செய்து விசாரிக்க முடியாதா?இப்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் மூன்று போலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனரே ..
    ஏன் நாங்கள் இதையெல்லாம் எந்த கண்ணோட்டத்தில் இன்னும் கண்டிக்கவில்லை?
    ரிசானாவுக்கு அழுது ,அழுது கூப்பாடு போட்டவர்கள் ,ஒரு பாவமும் அறியாத இந்த மாணவி மற்றும் மூன்று மாணவர்களை நாடு ரோட்டில் சுட்டுக் கொன்று காக்கை கொத்த பிணம் நாறியதே ,அப்போது உங்களது ஈஈ ஈ ர நெஞ்சு இரக்கத்தை சுரக்கவில்லையே அப்போது எந்த கண்ணோட்டத்தில் சதி கோட்பாட்டை மறைத்தீர்கள் ?

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,

      காவல்துறை, நீதி மன்றம் ஆகியவற்றின் நடைமுறைகளில் நம்பிக்கை கொள்ளுங்கள் எனவே கூறுகிறோம். அதில் உள்ள சிக்கல்களையும்,சான்றுகளுடன் விவாதியுங்கள்.

      சான்றுகளின் படியே குற்றம் நிரூபிக்கப் படுகிறது.

      காஃபிர் கைது செய்யப்பட்டால் மகிழ்வதும்,மூமின் என்றால் அப்பாவி என் சொல்வது நீங்கள்தான்!!. நாங்கள் நீதிம்னற ,காவல் துறை மீது நம்பிக்கை கொண்ட பாமர மக்கள் மட்டுமே!!.

      http://articles.timesofindia.indiatimes.com/2013-02-22/india/37241663_1_landmine-blast-bihar-s-gaya-bihar-and-jharkhand
      GAYA (BIHAR): Eight persons, including six policemen, were killed in a landmine blast triggered by Maoists near a culvert at Majhaulia village in Bihar's Gaya district on Friday.

      "One ASI (Assistant Sub Inspector), five constables, a village sarpanch and one special police officer (SPO) were killed in the blast," Gaya superintendent of police Akhtar Hussain said.

      இச்செய்தியைப் படியுங்கள்!!. பீஹாரில் நக்சல் குண்டு வைத்த செய்தி தெரிவிப்பவர் முஸ்லிம் காவல் அதிகாரி. இதனையும் சரி என் ஏற்கிறேன். அதே சமயம் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் ,தன்னை நிரபராதி என நிரூபிக்க சம வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்.ஆதரவாளர்கள் இதனை செய்யுங்கள் என்கிறேன்!!

      புரிகிறதா??

      நன்றி!!!
      நன்றி!!!

      Delete
    2. அருஞ்சொற்பொருள் விளக்கம் கூறுக, மொத்த மதிப்பெண்கள் 10.

      @ சார்வாகன்
      // 3. ஒரு தீவிரவாத செயல் நடந்து நாம் நேரடியாக அறியாத பட்சத்தில் காவல்துறை,நீதிமன்றம் சொல்வதை ஏற்கிறோம். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவரின் சார்பிலும் நின்று நீதிமன்றத்தில் மட்டும் வாதிட ,மறுக்க வேண்டுகிறோம். //
      //பீஹாரில் நக்சல் குண்டு வைத்த செய்தி தெரிவிப்பவர் முஸ்லிம் காவல் அதிகாரி. இதனையும் சரி என் ஏற்கிறேன். அதே சமயம் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் ,தன்னை நிரபராதி என நிரூபிக்க சம வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்.//

      (சார்வாள் அண்ணாத்தே கட்சியா இன்னதான் சொல்ல வாராரு ஒரு கொயப்பமா கீதே...)

      Delete
  23. இப்பூ,

    //அமெரிக்க மோடிக்கு விசா மறுத்த சமயத்தில் அந்த விவகாரத்தை திசை திருப்ப இஸ்ரத் ஜஹான் மற்றும் மூன்று முஸ்லிம் மாணவர்களை சுட்டு பொசுக்கினார்களே !அதற்கு பெயர் என்கவுண்டரா? அது தீவிரவாதம் இல்லையா? மோடியை கொல்ல வந்தவர்களை கைது செய்து விசாரிக்க முடியாதா?இப்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் மூன்று போலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனரே ..//

    இதெல்லாம் அரச கொலைகள் வகையில் கண்டிப்பாக சுட்டிக்காட்ட வேண்டியவை, எல்லா மாநிலத்திலும் ,அங்கு அரசுக்கு தொல்லைக்கொடுப்பவர்களின் பெயரால் தீர்த்துக்கட்டுவது நடக்கிறது.

    தமிழ்நாடு/கேரளா/ஆந்திராவில் நக்சல்பாரினு சொல்லி முடிப்பது ரொம்ப காலமாகவே இருக்கு.

    கல்லூரியில் படிக்கும் காலத்தில் நான் கம்யூனிச இயக்கத்தின் ஒரு பிரிவினர் நடத்தும் கூட்டங்களில் அடிக்கடி கலந்து கொண்டேன்(எல்லாம் ஒரு ஆர்வக்கோளாறு தான்) என எனது வீட்டிற்கு காவல்துறையினர் வந்து விசாரித்தார்கள் என்ன கொடுமைடா இதுனு எங்கம்மா என்ன கண்ணாபின்னானு திட்டினாங்க, இப்படித்தான் அடக்குமுறைகள் எல்லா இடத்திலும் இருக்கு.

    ஆனால் பல குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்ச்சியாக இஸ்லாமிய இயக்கங்கள் தொடர்பு இருக்குனு எல்லாம் சும்மா நிலை நிறுத்த முடியாது , அதாவது நெருப்பில்லாமல் புகையாது, எனவே எல்லாத்துக்கும் வக்காலத்து வாங்கும் போக்கு சரியில்லைஆதே போல எல்லாவற்றுக்கும் அவர்களே காரணமும் இல்லை.

    மேலும் இந்துத்வா வன்முறைகளை யாருமே நியாயப்படுத்தவில்லை, அவர்களை தண்டித்தால் யாருமே கேட்கவும் மாட்டார்கள், சம்பந்தப்பட்ட இந்துத்வா அரசியல் சக்திகள் மட்டுமே கவலைப்படும்.

    ஆனால் அதே நிலை இஸ்லாமிய பயங்கரவாத செயல்களுக்கு இல்லையே, நீங்கள் முதற்கொண்டு பொதுவான குடிமக்கள் என சொல்லிக்கொள்ளும் இஸ்லாமியர்கள் எல்லாம் ஆதரவாகவே பேசுறிங்களே ஏன்?

    ஒவாய்சி பேசியதை கண்டித்து நீங்கள் என்ன செய்தீர்கள், ஆனால் மாற்று முகாம்/எதிர்க்கருத்துக்கொண்ட என்னைப்போல எத்தனைப்பேர் ஒவாய்சி பேசியதற்கு கூட எதுவும் சொல்லாமல் சும்மா இருக்கோம்? ஏன்?

    உங்களால் மதம் மட்டுமே முன்னிருத்த முடியும் ஆனால் என்னைப்போன்ற காஃபிர்களால் பொதுவான நீதியை முன்னிறுத்திப்பேச முடியும் அது தான் உமக்கும்,எமக்கும் உள்ள வித்தியாசம்.

    உங்களைப்போன்றவர்கள் எல்லாவற்றுக்கும் சப்பைக்கட்டு கட்டுவதால் இஸ்லாம் வளராது, அதன் மீது வெறுப்பு தான் வரும்.

    ReplyDelete
    Replies
    1. சகோ வவ்வால்,

      நீங்க மூமின்களோட கேரக்டரை புரிய வேண்டும்.

      எங்கு அமைதியாக சம உரிமை கிடைக்குமோ அங்கு அதிகம் சவுண்டு கொடுப்பார்கள். எ.கா தமிழ்நாடு, தமிழ்மணம்.

      ஒன்னும் இல்லாத பிரச்சினை எல்லாம் பெரிது ப‌டுத்துவார்கள். எ.கா சாந்தி சமாதானம், துப்பாக்கி, விசுவரூபம்...

      எங்கு பிரச்சினை செய்தால் உதை கிடைக்குமோ அங்கு [என்ன் நடந்தாலும்] நல்ல பிள்ளை ஆகி விடுவார்கள்!!

      எ.கா குஜராத், இலங்கை,இஸ்ரேல்,சைனா,அமெரிக்கா,பர்மா

      மோடி பிரதமர் ஆனால் விமர்சிப்பதை கூட நிறுத்தி விடுவார்கள், ஹி ஹி

      அவர்களுக்கு தெரியும் கடவுள், ஷரியா எல்லாம் பிழைப்புவாதம் என்று!! ஹி ஹி!!!

      கமலஹாசனை,பெரியாரை ஆபாசமாக திட்டும் பீ.சே மோடியைக் கண்டு கொள்ளவே மாட்டார்!!

      இதுவே வஹாபியத்தை எதிர் கொள்ளும் உபாயம் ஆகும்!!

      நன்றி!!!

      Delete
  24. சார்வாகன் ////இந்துத்வ கொள்கையாளர் தீவிரவாதம் செய்தால் இந்து தீவிரவாதி!! எ.கா கோட்சே

    வஹாபிய‌ கொள்கையாளர் தீவிரவாதம் செய்தால் இஸ்லாமிய‌ தீவிரவாதி!! எ.கா அல் கொயதா,அல் உம்மா.///
    எனக்கு உலகமே தெரிய மாட்டேங்குது ஆம் உண்மைதான் ,அதனால்தான் நீங்கள் இப்படி எல்லாம் எழுதுகிறீர்களோ !
    இந்து தீவிரவாதி என்னும் பொழுது தனி நபரை கூறியுள்ளீர்கள் .இஸ்லாமிய தீவிரவாதி என்றால் அமைப்பு .அப்படியென்ன பாரபட்சம் ?
    ஏன் RSS ஐ தீவிரவாதி அமைப்பு என்று சொல்ல மனம் இடம் கொடுக்க மறுக்கிறது.
    /// "இதுபோன்ற சதித் திட்டங்களிலும், தீவிரவாதத் தாக்குதல்களிலும் நேரடி சாட்சியங்களும், சதித் திட்டம் தீட்டியதை உறுதிப்படுத்தும் ஆவணங்களும் கிடைப்பது என்பது இயலாத ஒன்று. தரப்பட்டிருக்கும் சாட்சியங்களும், கிடைத்திருக்கும் சூழ்நிலை சாட்சியங்களும் அப்சல் குருவுக்கும், தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருந்ததும், இந்த சதித் திட்டத்தில் அவருக்கு நேரடித் தொடர்பும், பங்கும் இருந்ததும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது'' என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

    அப்சல் குருவுக்குத் தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டபோது, இப்படிப்பட்ட ஒரு நபருக்கு தூக்கு தண்டனை விதிக்காவிட்டால், மக்களின் மனச்சான்று அமைதியுறாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.//// பிப்ரவர் 11 தினமணி தலையங்கம்
    இந்த தீர்ப்புகளை நான் எதிர்க்கவில்லை .ஒரு அப்சல்குருவை விட மொத்த சமுதாய நலனே முக்கியம் .
    இது போன்று வேறு எந்த வழக்கிலாவது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதா ?மேலும் மக்களின் மனச்சான்றுகளை மனதிற் கொண்டு வேறு எந்த வழக்கிலாவது தீர்ப்புகளை கடுமையாக்கியுள்ளனரா?
    பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் உலகமே சாட்சியாக இருந்தும் இடித்தவர்கள் மீதான வழக்கில் என்ன தீர்ப்புகள் வழங்கிவிட்டனர்?
    ஏன் கோர்ட் தீர்ப்பு வருவரை பொறுக்காமல் அத்வாநியினர் பாபரி மஸ்ஜிதை இடித்தார்கள்?கோர்ட்டை மதிக்காமல் செயல்பட்ட அவர்களை ஏன் தீவிரவாதிகள் என்று சொல்ல தயக்கம் காட்டும் காரணம் என்னவோ?

    ReplyDelete
  25. ///எங்கு அமைதியாக சம உரிமை கிடைக்குமோ அங்கு அதிகம் சவுண்டு கொடுப்பார்கள். எ.கா தமிழ்நாடு, தமிழ்மணம்.////
    சார்வாகன் ,அப்படியெனில் தமிழ்நாடு தவிர இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இன்னும் சமஉரிமை கிடைக்கவில்லையா?
    பீஜே சவுதியின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரிப்பவர் அல்ல .வஹ்ஹாபியும் அல்ல.சவூதி அரேபியாவுக்கு பீஜே பேசியுள்ளதை அந்த அரசுக்கு எடுத்து காட்டி பீஜேவை சவூதி செல்வதை அவரது எதிரிகள் தடை செய்துவிட்டனர்
    உலகம் தெரிந்த நீங்கள் வஹ்ஹாபி பற்றியும் பீஜே பற்றியும் தெரியாமல் உள்ளீர்களே

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      நீங்கள் திரு பி.ஜே நெருங்கிய தொடர்பில் இருப்பவர் என் நம்புகிறேன். அண்ணன் மனதில் தோன்றுவதை எல்லாம் பேசுவது அவருக்கு எதிரிகளை அதிகம் தேடித்தரும்.


      அவர் மட்டும் ஒரு மூமின் பெரும்பான்மை நாட்டில் வாழவே முடியாது என் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

      மதக் கோட்பாடுகள் புத்த்கத்தில் உள்ளது வேறு,நடைமுறையில் 100% கொண்டுவருவது முடியாது!!

      அண்ண்னின் நடைமுறை இஸ்லாமிய வங்கி முறை தவறு என்னும் கருத்து அரபு பொருளாதாரட்தையே அழித்து விடும்.

      இன்னும் அவரின் கருத்துகள் பல சவுதி வஹாபி கொள்கை விளக்கத்திற்கு,ஷரியாவுக்கு முரணாக இருப்பதும் அறிவேன்.

      திரு பி.ஜே என்னும் தமிழர் அரபி மொழியில் புலமை பெற்று, குரான்,ஹதிதுகளை மொழிபெயர்ப்பது தமிழகத்திற்கே பெருமை என்றாலும், அனைவரும் புதிதான விளக்கங்களை ஏற்க மாட்டார்.

      ஆகவே தன்னைக் கொஞ்சம் கட்டுப் படுத்தி, ஜன்நாயக் மத சார்பற்ற இயக்கங்களுடன் சேர்ந்து, சமூக நலனுக்கு பாடுபட வேண்டும் என்பதெ நம் வேண்டுகோள்.

      அண்ணனை போட்டுக் கொடுக்கும் கோஷ்டிகள் உண்டு என்பதை 100% ஏற்கிறேன். அவர் அரபு நாடுகள் செல்லாமல் இருப்பதே நல்லது.

      நாம் அண்ணனைக் கலாய்ப்பது ஒரு பாசத்தில்தான்!!

      நன்றி!!

      Delete
  26. சார்வாகன் ,போலிஸ் அதிகாரிகள் உட்பட 6 பேர்களை குண்டுவைத்து கொன்ற பிகார் நக்சல் செய்தி ஹைதராபாத் குண்டு வெடித்த நாளிலே நடந்தது ஆனால் அந்த செய்தி செய்தி தாள்களில் ஏதோ ஒருபக்கத்தில் பத்து வரி செய்திகளாக வெளியிட்டார்கள் .
    இது எப்பூடி ?

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      மாவோயிஸ்டுகளைஹ் தெடிச்சென்ற காவல்துறை கண்ணி வெடியால் மரணம்.
      பீகாரில் இது அடிக்கடி நடக்கும் நிகழ்வு. மாவோயிஸ்டுகள் பிடிபட்டால் காவல்துறை சட்டத்தை மீறி என் கவுண்டர செய்யும், அவர்கள் திருப்பி இப்படி நிறைய நடக்கும்...

      இந்தியாவில் பல மாவட்டங்கள் மாவோயிஸ்டுகளின் கட்டுப் பாட்டில் இருப்பதாகவும் செய்திகள் உண்டு. இதனையும் ஊடகங்கள் மறைக்கின்றன.

      வடமாநிலங்களை விட தென் மாநிலங்கள் சட்டம் ஒழுங்கில் பரவாயில்லை!!

      நாட்டில் நக்சல் ,இஸ்லாமிய தீவிரவாதம் இரண்டுமே ஒடுக்கப்பட வேண்டும்!!!

      நன்றி!!!

      Delete
  27. முஸ்லிம்கள் பொது சிவில் சட்டத்தை ஏற்காததால் இந்தியாவிற்குஎன்ன இழப்பு சொல்லுங்களேன்

    ReplyDelete
    Replies
    1. முஸ்லிம்களின் மீதான முதல் விமர்சனம் அங்கிருந்தே எழுகிறது.

      Delete
  28. திரும்ப வந்ததில் அமெரிக்காவில் மட்டும் தீவிரவாதத்தை எப்படி கட்டுப்படுத்த முடிகிறது என்ற கேள்வியும் அதனை தொட முயற்சித்த வவ்வால்,நந்தவனத்தான் பதில்கள் சிறப்பாக இருந்தன.
    9/11 முந்தைய காலத்தில்
    CIA
    FBI
    NSA என்ற மூன்று முக்கிய அமைப்புக்கள் தனித்தனியே செயல்பட்டுக்கொண்டிருந்தன.சி.ஐ.ஏ உலக நாடுகளின் கண்காணிப்பையும்,அமெரிக்க நலனுக்கு வேண்டி சட்டதிட்டங்கள்,விதிமுறைகளையும் மீறி covert பணிகளையும் செய்யும் அமைப்பு.இதனை இந்தியாவின் ராவுக்கு இணையாக ஒப்பிடலாம்.
    எஃப்.பி.ஐ உள்நாட்டு பிரச்சினைகளை கவனிக்கும் சி.பி.ஐ போன்ற அமைப்பு.இந்திய தேசிய பாதுகாப்பு அமைப்பு மாதிரி என்.எஸ்.ஏ என்ற போதிலும் என்.எஸ்.ஏ முழுக்க முழுக்க இணைய தகவல் பரிமாற்றங்களை கண்காணிக்கும் அமைப்பு.

    9/11க்கு முன்பு அமெரிக்கர்களின் தனி மனித உரிமைகள் மீது மேற்கண்ட அமைப்புக்கள் நீதிமன்ற உத்தரவில்லாமல் தலையிட முடியாது.இரட்டைக் கோபுர தகர்ப்பிற்குப் பின் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்பட்டு பேட்ரியாட்டிக் சட்டம் ஜார்ஜ் புஷ் கையெழுத்தால் உருவானது.நீதிமன்ற அனுமதி எதுவுமில்லாமல் எஃப்.பி.ஐ,என்.எஸ்.ஏ அமைப்புக்களும் செயல்படலாம் என்பதோடு என்.எஸ்.ஏ அனைத்து தகவல் பரிமாற்றங்களையும் ஊடுருவ முடியும்.அல்ஹைதா,தலிபான்கள் அமெரிக்காவை உஷார்படுத்திய ஒன்று அமெரிக்க மசூதிகளின் முன்பு காமிரா வைத்து யார் உள்ளே போகிறார்கள் வெளியே வருகிறார்கள் என்று கண்காணித்து சில இடங்களில் வழிபாட்டுக்குப் போனவர்களையும் மொத்தமாக அள்ளிக்கொண்டு போய் கேஸ் போட்டதும் நிகழ்ந்தது.

    இந்தியாவிலும் பேட்ரியாடிக் சட்டம் வருவதற்கு முன்பே தடா,பொடாவெல்லாம் வந்தது.பொடாவின் முக்கிய காரணமே பாகிஸ்தானின் ஊடுறுவலைத் தடுக்கத்தான்.ஆனால் ஜெயலலிதா வை.கோ வை உள்ளே தள்ளுவதற்கு உபயோகப்படுத்திக் கொண்ட கூத்தெல்லாம் நடந்து பொடாவின் வலு இழந்து இப்பொழுது பெயர் அளவில் மட்டுமே இருக்கிறது.

    அமெரிக்காவிற்கு போதை மருந்து கடத்தல்,உள்நாட்டுக் குற்றங்கள் போன்றவையே முக்கியப் பிரச்சினை 9/11 தவிர.இந்தியாவுக்கு அமெரிக்க பிரச்சினைகளோடு லஞ்சம் கொடுத்தால் குற்றங்களை திசை திருப்பும் ஆபத்து இருப்பதோடு இந்திய,பாகிஸ்தான் பிரச்சினையால் இந்தியாவிற்கு எதிரான திட்டங்கள் ஐ.எஸ்.ஐ மற்றும் பாகிஸ்தானின் மத தீவிரவாத இயக்கங்களால் உருவாக்கப்பட்டு இந்திய இஸ்லாமிய செம்மறி ஆடுகளின் துணையால் குண்டுவெடிப்புக்கள் நிகழ்கின்றன.இதன் காரணமாகவே பெரும்பான்மையான இஸ்லாமியர்களின் பெயர்கள் பத்திரிகைகளில் அடிபடுகின்றன.இதனால் பெரும்பாலான அப்பாவி இஸ்லாமியர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்ற போதிலும் இணைய கலந்துரையாடல்களை கவனித்தோமென்றால் பி.ஜே.பி,ஆர்.எஸ்.எஸ்,பாபர் மசூதி போன்ற காரணங்களை வைத்துக்கொண்டு தீவிரவாதத்திற்கு ஆதரவான போக்கே வெளிப்படுவதை ஊகிக்க முடியும்.விஸ்வரூபம் என்ற புஸ்வானத்திற்கும் கூட இஸ்லாமிய மத அமைப்புக்கள் செயல்பட்ட விதம் அனைவரும் அறிந்த ஒன்றே.

    பதிவுலகின் ஆட்டங்களால் பலருக்கும் இப்போது குரான் குறித்தும் இஸ்லாமியம் குறித்த கேள்விகள் எழும்பியிருக்கின்றன. பல இஸ்லாமியத்திற்கு எதிராக காணப்பட்டாலும் கூட இஸ்லாமியத்தின் நற்பண்புகள் சில பலாப்பழத்திற்குள் சுழை மாதிரி ஒளிந்து கொண்டிருக்கின்றன.ஆனால் இஸ்லாமியக் காவலர்களாக சமூக தளங்களிலும்,இணையத்திலும் காட்டிக்கொள்பவர்கள் பலாப்பழத்தின் முட்கள்,பசை,நார்கள் மாதிரி நின்று கொண்டு குண்டு வெடிப்புக்கள்,மதவாதங்கள்,காணொளி சாட்சிகளுடன் கழுத்தை அறுப்பது என்பவற்றுடன் அனைதையும் இஸ்லாமியத்துடன் இணைத்து உச்சரித்து செயல்படுவதும் நிகழ்கின்றன.

    ஒவ்வொரு மனிதனும் அன்றாட வாழ்க்கையோடு போராடுவதைக் கூட ஜிகாத் என்று பொருட்படுத்தலாமென உண்ரவைப்பதை விட்டு விட்டு ஜிகாத்துக்காக இவர்கள் எழுதும் கோனார் நோட்ஸ் திரும்ப தங்களையே வந்து தாக்குவதை உணராமல் இருக்கிறார்கள்.

    உலக நிகழ்வுகளின் தீவிரவாத நடப்புக்களை வரிசைப்படுத்தினால் (Chronocle) மேற்கத்திய நாடுகள்,அமெரிக்கா பாதிக்கப்படுவதற்கும் முன்பே பாகிஸ்தானின் மத தீவிரவாதப் போக்கால் இந்தியா பாதிக்கப்பட்ட நாடு. இதற்கு முக்கிய காரணங்களாக சவுதியின் பணம்,அமெரிக்காவின் ஆயுத உதவியோடு ரவுடி தேசம் என்று தெரிந்தும் அமெரிக்க டாலர்கள் பாகிஸ்தானுக்கு சென்றதும் அமெரிக்க இரட்டை நிலைப்பாடும் முக்கிய காரணங்கள்.அமெரிக்க டாலரின் உதவியால் நகரும் பாகிஸ்தான் அமெரிக்க வெறுப்பு நிலையோடு பயணிப்பதும் முரண்.

    ReplyDelete
  29. //உலக நிகழ்வுகளின் தீவிரவாத நடப்புக்களை வரிசைப்படுத்தினால் (Chronocle) மேற்கத்திய நாடுகள்,அமெரிக்கா பாதிக்கப்படுவதற்கும் முன்பே பாகிஸ்தானின் மத தீவிரவாதப் போக்கால் இந்தியா பாதிக்கப்பட்ட நாடு//
    உண்மை அதனலே பயங்கரவாதத்திற்கு எதிராக தீவிரமாக போராட வேண்டிய கடமை இந்தியாவுக்கு உள்ளது. அதை ஆதரிக்க வேண்டியது கடமை இதர குடிமக்களுக்கும் இருப்பது போல இஸ்லாமிய மதத்தை சேர்ந்த குடிமக்களுக்கும் உண்டு.
    //ஒவ்வொரு மனிதனும் அன்றாட வாழ்க்கையோடு போராடுவதைக் கூட ஜிகாத் என்று பொருட்படுத்தலாமென உண்ரவைப்பதை விட்டு விட்டு//
    அப்படி உணரவைப்பதில் பயனில்லை. அவங்க எல்லாவற்றையும் இப்போ மாதிரியே ஜிகாத் என்று தான் பார்ப்பாங்க. உதாரணத்திற்க்கு யுத்தத்தால் பாதிக்கபட்ட இலங்கை தமிழர்களுக்கு இந்திய அரசு வீடு கட்டி கொடுத்தது அதை இஸ்லாமிய அமைச்சர் களவாடி இஸ்லாமியர்களுக்கு அதிக அளவில் கொடுத்துள்ளார். அதை தமிழர்கள் எதிர்தார்கள் அதற்கு இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள் எழுதுகிறார்கள் எமக்கு நியாயமாக கிடைக்க வேண்டியதை தடுத்தால் தமிழருக்கு எதிராக ஜிகாத் செய்ய வேண்டி வரும். ஆகவே ஜிகாத் என்பதே கொடுமையானது கொள்ளை தான். இந்துகள் உட்பட பிறமதத்தவர்கள் தீவிரமாக கடவுளை வணங்குபவர்கள் பலருக்கு தங்கள் மதங்களில் உள்ள கெட்ட விடயங்கள் தெரியாது அதை பற்றி அவர்கள் அக்கறை கொள்வதுமில்லை கடவுளை வழிபடுவது தான் அவர்களுக்கு முக்கியம் இஸ்லாமியர்களும் இது மாதிரி தங்கள் குரானில் உள்ள தீய வன்முறை சார்ந்தவற்றை கைவிட்டு மாடர்னாக மாறுவதை தவிர வேறு வழியில்லை.அப்போ தான் பிற மக்களோடு இணைந்து வாழ முடியும்.

    ReplyDelete
  30. நல்ல பதிவு
    அர்த்தமுள்ள விவாதம்.

    ஜிஹாதையும் இஸ்லாமையும் பிரிக்க முடியுமா?
    முயன்று பாருங்கள்!

    தஜ்ஜால்

    ReplyDelete