Wednesday, April 4, 2012

ஒரு உயிரினம் இன்னொரு உயிரினமாக மாறுமா? சான்று உண்டா!!!!!!!!!!!!



பெரும்பாலான பரிணம எதிர்ப்பு விவாதங்களில் இந்த கேள்வியை கேட்டு இருப்போம்.இருப்பினும் ஒரு ரிணாம எதிர்ப்பு மத பிரச்சாரகரின் சொற்களிலேயே இந்த வினாவை அறியத் தருகிறேன்.

// முதலில் பரிணாமம் என்றால் என்ன? ஒரு உயிரினம் (காலப்போக்கில்) இன்னொரு உயிரினமாக மாறுவதாக பரிணாமம் கூறுகின்றது. ஆனால், ஒரு உயிரினம் இன்னொரு உயிரினமாக மாறியதாக நமக்கு வரலாற்றிலும் ஆதாரமில்லை, தற்காலத்திலும் ஆதாரமில்லை.//

இக்கேள்விக்கு இப்பதிவில் விடை அளிப்போம்.

இக்கேள்விக்கு பதில் நிரூபணத்துடன் பரிணாம அறிவியலில் இருந்தே ஆகவேண்டும்,இல்லையெனில் பரிணாமம் என்பது முற்று முழுதாக தவறாகிவிடும்.

சரியாக அறியும் நோக்கில்  கேட்கப்படும் எந்த கேள்விக்கும் அறிவியலில் விளக்கம் & விடை உண்டு.இது சரியான் கேள்விதான் ஆனால் ஒரு  சரியான்  அறிவியல் ரீதியான கேள்வி அல்ல!!!!!.

ஆஹா நழுவுகிறார் என்று சில மதவாதிகள் நக்க்லாக சிரிப்பது நம்க்கு தெரிகிற‌து!!!!! ஹி ஹி இன்னும் நிறைய இருக்கு வாங்க‌!.

ஏன் இது  சரியான்  அறிவியல் ரீதியான கேள்வி அல்ல?  ஒரு அறிவியல் துறையில் ஒவ்வொரு செயலாக்கத்தையும் விள்க்க சில அறிவியல் சொற்களை பயன்படுத்துவார்கள்.சில சொற்களின் தமிழாக்கம் முதலில் அறிவோம்.

1. Evolution: கால்ப்போக்கில் ஒரு உயிரின குழு இன்னொரு[பல] உயிரின குழுவாக பரிணாம் காரணிகளால் மாறுதல்.

2. Natural selection: இயற்கைத் தேர்வு:இயற்கை சூழலுக்கு பொருந்து உயிர்கள் வாழ்வதும், இயலாதவை அழிவதும் என விள்ங்கலாம், இதுதான் டார்வினின் கொள்கையின் படி பரிணாம்த்தின் முக்கிய   காரணி

3. Mutation: ஒவ்வொரு உயிரினக் குழுவிலும் பல்வேறு வகைகளை தோற்றுவிக்கும் சீரற்ற சிறு மாற்றம்.

4. Speciation: உயிரின பிளவு:ஒரு உயிரினம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உயிரினங்களாக பிரிதல்

5. Extinction உயிரின மறைவு:ஒரு உயிரினமே அற்றுப் போதல், இயற்கைத் தேர்வில் வெற்றி பெறாத உயிரினங்களின் மறைவு என்க் கூறலாம்.

இந்த ஐந்து சொற்களின் பொருளும் அவை எப்படி நடக்கிறது என்பதை அறிந்தால் நீங்கள் பரிணாம கொள்கை அறிந்தவர் என்றே கூறலாம்.

சரி இப்போது மீண்டும் பதிவின் வினாவிற்கு செல்வோம்.ஒரு உயிரினம் இன்னொரு உயிரினமாக் மாறுமா? இதற்கு பொருந்தக் கூடிய பரிணாம் அறிவியல் சொல் இருக்கிறதா? எது?

ஆமாம் இருக்கிறது உயிரின பிளவு[speciation], ஒரு உயிரினம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உயிரினங்க்ளாக‌ பிரிவது.

அப்போது சரியாக  அறிவியல் ரீதியாக கேள்வி எப்படி இருக்க வேண்டும்?

உயிரின பிளவு[Speciation] என்பதற்கு சான்றுகள் உண்டா?

Is there any evidence for Speciation?

பரிணாம எதிர்ப்பாளர்கள் பெரும்பாலும் இப்படி அறிவியல்ரீதியான சொற்களை பயன்படுத்துவது இல்லை.

இரண்டும் ஒன்றுதானே என்று குதிக்கும் பரிணாம் எதிர்ப்பாளர்களே கூகிளில் சரியான் அறிவியல் சொல் போட்டு தேடினால்தான் எளிதில் தேடிய விடயம் கிடைக்கும்.

Xxxx

முதலில் சரியான் துறை சார்ந்த கேள்வி எழுப்பினோம்.சரி இரண்டாம் விடயம் கேள்வியை நன்கு புரிந்து கொள்வது.பல கேள்விகளில் பாதி பதில் ஒளிந்து இருக்கும். இந்த கேள்வியிலும் அப்படித்தான்.

அதாவது காலப்போக்கில் ஒரு உயிரின குழுவில் உள்ள சில உயிரினங்கள் வேறு வகை(பிரிவு) ஆகிவிட்டது.

அனைத்தும் முதலில் ஒரே உயிரின குழு[same species]

காலம் கடந்த‌ பின் இப்போது இரு வெவ்வேறு உயிரின குழுக்கள் [different species]

என கேள்வியை புரிகிறோம்.

பதிவின் வினாவில் இருந்து இரு சிறு கேள்விகளுக்கு விடை அறிய அவசியம்.

ஒரே உயிரின குழு[same species] என்றால் என்ன?

இரு வேறுபட்ட உயிரின குழு [different species] என்றால் என்ன?

முதல் கேள்வி மிகச் சரியாக் விடையளிக்கப்ப்டாத ஒன்று,எனினும் விலங்குகளில் பொதுவாக பயன்படுத்தப்படும்  வரையறுப்பு[biological species concept ] இதுதான்.


The biological species concept is the most widely accepted species concept. It defines species in terms of interbreeding. For instance, Ernst Mayr defined a species as follows:

"species are groups of interbreeding natural populations that are reproductively isolated from other such groups."

"த்ங்களுக்குள் இனவிருத்தி செய்ய[ மலடற்ற‌ சந்ததியை உருவாக்கும்] இயலும் உயிரின குழு, இதர‌ உயிரின குழுக்களுடன் இனவிருத்தி செய்ய இயலாதவை""

இத்னை நாம் இரு விதிகளாக் ஒரே உயிரின விதி,வெவ்வேறு உயிரின விதி என் இரண்டாக எளிமையாக‌ பிரிப்போம்.
.
1." இரு உயிரினங்கள் இனவிருத்தி செய்து மலடற்ற சந்ததியை உருவாக்க முடிந்தால் அவை ஒரே உயிரின‌ங்கள்"

இத்னை ஒரே உயிரின குழு விதி என்போம்

சிங்கம் ,புலி இணைந்து மலடற்ற‌ சந்ததியை உருவாக்குவதால் அவை ஒரே உயிரின‌ குழுவாகவே கருதப்பட வேண்டும். இன்னும் கால்ப்போக்கில் இவை இனவிருத்தி செய்ய இயலாமல் போகலாம்.

சிங்கம்(ஆண்)+புலி(பெண்)=லைஜர்

புலி(ஆண்)+சிங்கம் (பெண்)=டைஜியன்

இபோது இரு உயிரினத்தில் இருந்து 4 உயிரினங்கள்,இந்த நான்கும் ஒவ்வொன்றின் இடையேயும்  மேலே கூறிய விதத்தில் சந்ததி உருவாக்க முடிந்தால் மட்டுமெ இவை இப்போது   ஒரே உயிரின குழு. இந்த நான்கில் இருந்து 4*4=16 வகை தோன்றலாம், இபோது இந்த 16 வகை உயிரின‌த்தில் ஏதேனும் ஒன்று "ஒரே உயிரின குழு" விதியை மீறினால் அது வேறுவகை உயிரினம் ஆகிறது.

2,4,16,256,256^2,256^4.....

பாருங்கள் எவ்வளவு வகைகள் உருவாக முடியும் இவைகளில் சில விதியை மீறுவது தவிர்க்க இயலாது. அப்படி வேவ்வேறு உயிரினம் ஆகி இருந்தால்  மட்டும் சொல் அதை விட்டு விட்டு நடக்கலாம் என்று ஆருடம் சொல்லாதே என்று எரிச்சலடையும் பரிணாம் எதிர்ப்பு ந‌ண்பர்களே ஏதோ  நாலு விடயம் கற்பதும்,பல விதங்களில் சிந்திப்பதும் நல்லதுதானே!.

"சிந்திப்பவர்களுக்கு இதில் அத்தாட்சிகள் உண்டு"

  
இரண்டாம் கேள்விக்கு மிக்ச்சரியான விடையே உண்டு.

இதனை வெவ்வேறு உயிரின குழு விதி என்போம்.

2."இரு உயிரினங்கள் இனவிருத்தி செய்து மலடற்ற சந்ததியை உருவாக்க முடியவில்லை எனில் அவை வெவ்வேறு உயிரின‌ங்கள்"

அதாவது இணைந்து மலடற்ற சந்ததி உருவாக்க இயலாத இரு உயிரினங்கள் எந்த வரையறுப்பிலும் ஒன்றாக் முடியாது.

குதிரை+கழுதை=கோவேறு கழுதை (மலடு).ஆகவே அவை வெவ்வேறு உயிரினங்கள்.

ஆகவே ஒருவழியாக திரு எர்னெஸ்ட் மெயரின் உயிரியலின் உயிரின வரையறுப்புக் கொள்கை அறிந்து கொண்டோம்.

இது பாலின ரீதியாக் இனவிருத்தி செய்யும் உயிரின‌ங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றாலும் நம் கேள்வியின் விடைக்கு இந்த வரையறுப்பு போதுமானது ஆகும்.

முதலில் ஒரு மிக எளிய சூழலை எடுத்துக் கொள்வோம்.

'' எனும் உயிரின குழு இருக்கிறது.அதில் அ1,2,3, என 3 வகை விலங்குகள் இருக்கிற‌து என வைத்துக் கொள்வோம்.

பரிணாம்த்தின் படி அ1,2,3 ஆகியவற்றுக்கு ஒரே முன்னோர் இருப்பதும் ஒருவகை உயிரின குழு வகைப் படுத்தலே!.இது பரிணாம் வரையறுப்பு.

1, 2 உடன் மலடற்ற சந்ததி கொடுக்கும்  இனவிருத்தி செய்ய இயலும்.செய்கிறது.

2, 3 உடன் மல்டற்ற சந்ததி கொடுக்கும்  இனவிருத்தி செய்ய இயலும்.செய்கிறது.

ஆனால் அ1, 3 உடன் மலடற்ற சந்ததி கொடுக்கும்  இனவிருத்தி செய்ய இயலவில்லை.நடப்பதும் இல்லை.

அப்போது வரையறுப்பின்படி அ1,3 வெவ்வேறு உயிரினம் ஆகின்றன.

இத்னை வைத்துக் கொண்டு இந்த எ.கா விளக்குவோம்.முதலில் இக்காணொளியை பாருங்கள்.



இவை வளைய உயிரினங்கள்[ring species] என அழைக்கப்படுகின்ரன். Larus gulls ர ன் வகைகள் இதற்கு எடுத்துக்காட்டு ஆகிறது.புவியியல் ரீதியான் பிரிவு இதனை ஏற்படுத்தியது காணொளியில் இருந்து அறியலாம்.



A classic example of ring species is the Larus gulls' circumpolar species "ring". The range of these gulls forms a ring around the North Pole, which is not normally transited by individual gulls


இன்னொரு எளிய எ.கா பார்ப்போம்.ஒரு ஆய்வில் ஒரே வகை பழப் பூசிகளை எடுத்து இரு குழுவாக பிரித்து ஒரு குழுவிற்கு  ஸ்டார்ச் மட்டும்,இன்னொரு குழுவிற்கு மால்டோஸ் மட்டும் உண்வாக் வழங்கப்பட்டது. சில த்லைமுறைகளுக்குபிறகு இரு குழுக்களும் இனவிருத்தி செய்ய இயலாமல் வெவ்வேறு உயிரினம் ஆகிவிட்டன.

Fruit fly speciation experiment 



Diane Dodd’s fruit fly experiment suggests that isolating populations in different environments (e.g., with different food sources) can lead to the beginning of reproductive isolation.
அப்படியெனில் மனிதர்களில் வெஜிடேரியன்களும் நான் வெஜிடேரியன்களும் வெவ்வேறு உயிரினம என சொல்ல முடியுமா?.இந்த முறை குறைந்த ஜீன்கள் உடைய எளிய அமைப்பு பழப் பூச்சிக்கு பயன் அளித்தது. அவ்வளவுதான்.ஆனைக்கு அர்ரம் எனில் குதிரைக்கு குர்ரம் என்பது அறிவியலில் சாத்தியபடாது!.

ஒவ்வொரு உயிரின பிளவுக்கும் காலம் சூழல் தேவைப்படுவது வித்தியாசப்படும்.


உயிரின பிளவில் பல வகை உண்டு இது பற்றியும்,இது மூலக்கூறு அறிவியலில் எப்படி விள்க்கப் படுகிரது என்பது குறித்தும் இன்னும் இரு பதிவுகள் இடுவோம்.இப்பதிவில் உயிரின பிளவு என்பதற்கு எடுத்துக் காட்டுகள் சான்றுகள் உண்டு என்பதை புரிந்து கொண்டால்.போதும்.

சரி இதற்கு மட்டும்தானே ஆதாரம் மற்ற உயிரின மாறுதல்களுக்கு  என்ன செய்வாய் எனில்

1.யிரின பிளவிற்கு ஆதாரமே இல்லை என்பதை மறுக்க முடிவதும்

2. நேரடியாக் பரிசோதிக்கக் கூடிய சான்றுகள் உண்டு என்பதும்,

3.உயிரின பிளவிற்கு எதிரான் ஆய்வுக் கருத்துகள் இல்லை என்பதும்

பரிணாம் கொள்கை அறிவியல் ரீதியாக் சான்றுகள் உடையது என்பது உறுதியாகிறது,ஆகவே மூலக்கூறு அறிவியலின் அடிப்படையிலும் எப்ப்டி இரு ஜீனொம்கள் ஒன்றா அல்லது வெவ்வேறா என்பது குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் அடுத்த பதிவில் ஆய்வு செய்வோம்.

ஜீனோம் ஒப்பீட்டில் உயிரின் பிளவு ,அதன் கால அள்வு எப்படி கண்டுபிடிக்கப்படுகிற்து என்பதையும் வரும் பதிவுகளில் பார்ப்போம்.

ஆகவே ஒரு உயிரினம் இன்னொரு உயிரினம் ஆக மாறுமா என்றால்,சரியாக சொல்லுங்கள் , இதன் அறிவியல் பெயர் உயிரின பிளவு.இதற்கு பல சான்றுகள் உண்டு. உயிரின பிளவு நடைபெறும் சாத்தியமே இல்லை என ஏதாவது அறிவியல் ஆய்வுக் கட்டுரை தாருங்கள்  என திருப்பி கேளுங்கள்.கேட்டால் பரிணாம் எதிர்ப்பு வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிடும்.ஆனால் இந்த உயிரின வரையறுப்பை வைத்து சொல்வது சரி இல்லை என்பார்கள் பின் எது சரி என்று வரையறுக்கவும் வலியுறுத்துங்கள்.நன்றி.


Learn More about Speciation!!!!!!!




ஹோமினின்(மனித குல]*[Chimp]]உயிரின பிளவுகள்
http://www.theresilientearth.com/?q=content/did-climate-change-make-us-human


1Ring species as bridges between microevolution and speciation

2.Speciation: The Origin of New Species

3.Genes and speciation

Thanks Google wikipidia

26 comments:

  1. நண்பரே, Darth Vader-ன் ஆற்றல் உங்கள் மீது பரவட்டும் உண்டாகட்டும்...

    அவரின் ஆற்றலால் அருமையான பதிவு.
    உயிரின பிளவு[Speciation] என்பதற்கு சான்றுகள் உண்டா? என்று கேள்வி கேட்டு அருமையாக எளிய முறையில் விளக்கினீர்கள். நன்றி. இந்த lightsaber சண்டையில் உயிரின பிளவு அத்தாட்சிகள் தான் வெற்றி பெற்றன. நிச்சயமாக உங்களுக்கு inter galactic பயணத்திற்கு உரிமம் தேவையில்லாத பயணத்தை மேற்கொள்ள உரிமை அளிக்க Darth Vaderடம் வேண்டுகிறேன்.

    Darth Vader மிகப் பெரியவன் எல்லாம் அறிந்தவன்.

    ReplyDelete
  2. சார்வாகன்,
    Wonderful post!!

    ReplyDelete
  3. வாங்க நண்பர் நரேன்

    இந்த பதிவு நெடுநாட்களாக எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தது.
    எனினும் இப்பதிவில் இருந்து உயிரின பிளவு என்பது நடக்கும் ஒரு செய்லே என்பதை அறியலாம்.இப்படி மனிதநினின் முன்னோர் Australopithecus africanus ல் இருந்து கிளைத்து தளைத்த 20 ஹோமினிட் இனங்களில் ஒன்றுதான் ஹோமோ சேபியன்..என்ன இப்படி உயிரின பிள்வு நடப்பது அதிக காலம் எடுப்பதுதான் சிக்கல். நாம் எதிர்நோக்கும் என்ன வெனில் ஜீனோமில் சரியாக எந்த ஜீன்களை எப்படி செயற்கையாக மாற்றினால் பிரச்சினை இல்லாமல் இன்னொரு உயிரினம் ஆகிவிடும் என் கண்டறிந்தால் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.

    ஆகவே இயற்கையாக நடந்தால் பரவாயில்லை,செயற்கையாக பரிணாம் வளர்ச்சி மனிதனில் பரிசோதித்து பார்ப்பது ஏற்கெனெவே இருக்கும் பிரிவினைகளில் மிகப்பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.

    எனினும் இங்கே பாருங்கள் என்ன நடக்கிறது என்று!!!!!!!!
    http://stream.aljazeera.com/story/engineering-human-evolution-0022143

    .பரிணாம்ம் எந்த அள்வுக்கு உண்மை என உணர்கிறோமோ அதே அள்வு இந்த மாதிரி ஆபத்தான் அம்புலி பரிசோதனைகளை தடுப்பதும்,மரபணு மாற்ற‌ப்பட்ட உணவு வகைகளை தவிர்த்து இயற்கை சார்ந்து வாழ முற்படுவதும் அவசியமே!

    பரிணாமம் தேவதையும் அல்ல அசுரனும் அல்ல சூழலுக்கு ஏற்ப‌ கோமாளித் தன்மாக‌ என்ன வேண்டுமானாலும் செய்யும். கடவுள் பாதி மிருகம் பாதி சேர்ந்த கல்வை!

    பார்க்க்லாம் என்ன நடக்கும் என்று

    1).உலகம் மதத்தினால் வரும் பிரச்சினகளினால் அழியுமா,

    2)பொருளாதார சிக்க்லால் அழியுமா,இல்லை

    3)பரிணாம வளர்ச்சி முன்னேற்றத்தில்[இயற்கை அல்லது செயற்கை] அழியுமா???????

    ஹா ஹா ஹா
    ***
    வாங்க நண்பர் skm
    வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி.

    ReplyDelete
  4. யார் இந்த வணக்கத்துக்குறிய Darth Vader?

    இவரா சூப்பரரப்பு!

    http://en.wikipedia.org/wiki/Darth_Vader

    அப்ரக்கா தப்ரா

    எல்லா சீரும் சிறப்பும் டார்த் வாடருக்கே!!!!!!!

    Thanks

    ReplyDelete
  5. An interesting paper about ring species
    full paper is available

    http://www.biomedcentral.com/content/pdf/1741-7007-10-20.pdf

    ReplyDelete
  6. சகோ,
    நல்ல பதிவு. மனிதன் தன்னைத்தானே அழித்துக்கொள்வான். :)

    ஒரு உயிரினம் இன்னொரு உயிரினமாக மட்டுமல்ல...இந்த பிரபஞ்சமே பரிணாமத்தால் தான் உருவானது என்று திருவாசகம் மற்றும் சில சிவ நூல்கள் கூறுகின்றன.

    வானாகி, வளியாகி, ஒளியாகி, நீராகி, நிலமாகி, உயிராகி(இதற்க்கு முன்பே கூட உயிர் தோன்றி இருக்கலாம் ) என்று பிரபஞ்சமும் உயிரினங்களும் உருவாகி இருக்க வாய்ப்புகள் உள்ளதாகவே நான் நினைக்கின்றேன். பெருவெடிப்பு இடையில் நிகழும் ஒரு நிகழ்வாக இருக்கலாம் . தங்கள் கருத்து?

    ReplyDelete
  7. சிவ நூல்கள் மட்டுமல்ல புத்தரும் இதே தத்துவத்தை கூறியதாக தெரிகிறது. உலகம் துகள்களால்(அணுக்கள்?:)) ஆனது என்று அவர் கூறியதாக ஞாபகம்.

    ReplyDelete
  8. வாங்க ச்கோ

    புரட்சிமணி நல்மா?.நம்மைபொறுட்த்வ்ரை மத புத்தகங்கள் பல குறீடுகளாக,உவமைகளாக்வும் மறைமொழியில் அக்காலத்தில் ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்ட பல உண்மைகளை பேசுகின்றன என்பதுதான்.

    பிரபஞ்சம்,படைப்பு சுழற்சி[cyclic] முறையிலானாது என்பதை இந்து பௌத்த சமயங்கள் கூறுவது குறைந்த பட்சம் முற்று முழுதும் எப்போதும் தவறாகாது.
    ஆகவே இந்த சுழற்சியில் பெரு விரிவாக்கம் என்பதும் ஒரு சிறிய கால கட்டம் என்பதை ஏற்கலாம்.அறிவியலுக்கு பெரு விரிவாக்கத்தில் இருந்தே பல் விடயங்களை கணித்தாலும்,அதில் சில மட்டுமே ஐயந் திரிபர உறுதிப்படுத்த பட்டவை,
    ஹூபில் சில அள்வுகள் எடுத்து கால்க்ஸிகள் ஒன்றை விட்டு ஒன்று விலகுகின்றன.ஆகவே அனைத்தும் ஒரு புள்ளியில் இருந்து வந்திருக்க வேண்டும் என ஆய்வு ரீதியாக பெரு விரிவாக்கத்தை உறுதி செய்தார்.WMAP . இது இன்னும் அதிக காலம் நடை பெற்று இருக்க்கலாம் என உறுதிப்படுத்தினாலும் ஒரு புள்ளியில் இருந்து அனைத்தும் வெளியானது என்பது ஆய்வுரீ தியாக் உறுதிப் படுத்த முடியாது.அது இந்த ஆய்வு ரீதியாக் உறுதிப்படுத்த‌ப்ப்ட்ட நிகழும் விரிவாகத்தின் மீதான கணிப்பு.
    அப்போது யாரும் இபோது விலகுவதால் எப்போதும் விலகுமா?விலகுவதின் காரணம் ,எப்படி ஏன் நிகழும் என்று மிக் சரியாக அனைவருக்கும் புரியும் வரை பெரு விரிவாக்கம் ஏற்க முடியாது.ஆகவே மாற்றுக் கொள்கைகளையும் அனைவரும் கற்கவேண்டும் என கொடி பிடிக்க வில்லை.

    பிற அறிவியல் கொள்கைகள் போல் பரிணாமம் சில உறுதிப் படுத்தப் பட்ட சான்றுகளின் மூலம் பல் விடயங்களை கணிக்கிறது.அவ்வளவுதான்.பரிணம்த்தை விமர்சிப்பவர்கள் கணிக்கும் விடயங்களில் அறிவியலாளர்களில் ஏற்படும் கருத்து வேறுபாட்டை பரிணாம்ம முற்று முழுதாக் தவறு என காட்டி மத பிரச்சரம் செய்வது அறிவியல் திரிபு எனவே கூறுகிறேன்.கருத்து வேறுபாடு இல்லாத அறிவியல் வளராது,கட்டுப் பெட்டி மதம் போல் ஆகி விடும்

    பிரபஞ்சம் சுழற்சி முறையிலானது என்னும் கருத்தை ஏற்பதில் எனக்கு ஆட்சேபனையில்லை.

    அடிக்கடி வாங்க நன்றி

    ReplyDelete
  9. My comment on this post
    http://vanjoor-vanjoor.blogspot.com/2012/04/part-1.html

    வண்க்கம் அய்யா
    நகைச்சுவை பதிவா இது ஹா ஹா ஹா.நன்றாக கிச்சு கிச்சு மூட்டுகிறீர்கள்.இந்தியா எனது நாடு என்பதில் என்க்கு மிகவும் பெருமை.இப்படி சில விடயங்கள் 120 கோடி மக்கள் தொகை கொண்ட எனது நாட்டில் நடப்பது என்க்கு வியப்பாக இல்லை.இதே போல் குறைந்த மக்கள் தொகை கொண்ட நாட்டில் நடப்பதற்கும் என்னால் சான்று தர முடியும்.

    அப்புறம் கலக்குங்க!

    மைனஸ் ஓட்டு என்னுடையதுதான்,நம்ம பங்கு நகைச்சுவை!!!!! ஹி ஹி

    மிக்க நன்றி

    ReplyDelete
  10. @சார்வாகன்,
    வணக்கம் சகோ
    //புரட்சிமணி நல்மா?//
    நலம் சகோ நீங்களும் நலமாக வாழ பரிநாமவாதிகளும் :) இயற்கையும் அருள்புரியட்டும்
    //.நம்மைபொறுட்த்வ்ரை மத புத்தகங்கள் பல குறீடுகளாக,உவமைகளாக்வும் மறைமொழியில் அக்காலத்தில் ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்ட பல உண்மைகளை பேசுகின்றன என்பதுதான்.//
    தங்களின் புரிதல் அருமை
    //அடிக்கடி வாங்க நன்றி//
    அடிக்கடி வருவதுண்டு...பெரும்பாலும் நீங்கள் பெரிய விடயங்களை பற்றி பேசுவதால் சத்தமில்லாமல் சென்று விடுவேன் :)
    தங்களின் விரிவான கருத்துக்கு மிக்க நன்றி சகோ :)

    ReplyDelete
  11. வாங்க சகோ புரட்சி மணி,

    இந்த இரு நூற்றாண்டில் ஆய்வுரீதியாக் நிரூபிக்கப்பட்டது மட்டுமே அறிவியல் என்று பேசுவது சரியான பார்வை ஆகாது.அக்கால மாமேதைகளின் கருத்துகளே சில திரிந்து மத புத்தகங்களிலும் இடம் பெற்று இருக்க வேண்டும்.இப்போது கணிணி,இத்ர தொழில் நுட்பட்துடன் ஒரு கருதுகோள் முன் வைப்பது பெரிய விடயம் அல்ல.அந்த மேதை எப்படி அறிந்தார் என்பதை மறைத்து கடவுள் சொல்லியது என்று மேல் பூச்சு வந்துவிடும்.

    ஜோதிட‌ம் என்பதே அண்டவியலை கொஞ்சம் மாற்றிய திரிபு என்பேன்.கிரகங்கள் நம்மை பாதிக்கின்றனவா இல்லையா என்பதில் நமக்கு கருத்து வேறுபாடு இருக்க்லாம்.எனினும் அக்காலத்திலேயே கிரகங்களின் நகர்வை கணிக்கும் உத்திகள் எனக்கு வியப்பை தருகிறது.

    மூலிகை வைத்தியத்தில் பல் பொக்கிஷங்களை இழந்து விட்டோம்.

    பாஸ்கரா,ஆர்யபட்டா போன்றவர்கள் பற்றியும் ஏதாவது எழுத வேண்டும் என தோன்றும்.ந்மது நாட்டில் நமது மேன்மையான் நுட்பங்களை பற்றி அறியாமலே படித்து முடித்து விடுவோம்.

    நம் சகோதரர் திருச்சிக் காரனிடம் இப்படித்தான் சண்டை போட்டு விவாதித்து பிறகு சமாதானம் ஆகிவிடுவோம்.சகோ கொஞ்ச நாள்களாக் எழுதுவது இல்லை.நீங்களும் அதே அலைவரிசையிலேயே இருக்கிறீர்கள்.
    நான் போட்ட பதிவு பிடிக்கலை,புரியவில்லை எனில் பிடிக்கும்,புரியும் கருத்தை இங்கே பதியுங்கள்.பல் த்கவல்கள் அறிவதும் மகிழ்வே!

    நன்றி

    ReplyDelete
  12. Very interesting article!!!!!
    http://sandwalk.blogspot.ca/2007/07/mutation-rates.html
    **********

    Mutation Rates

    Each of us was born with at least 350 new mutations that make our DNA different from that of our parents.

    Douglas Futuyma (2005) p. 162Let’s think about the number of mutations that could accumulate in a population over time. A few pages ago we looked at the origin of antibiotic resistance in bacteria in order to prove that mutations occur randomly. Now we’ll consider just how frequency those mutations could arise in bacteria. Then we’ll ask how frequently mutations occur in humans.

    .....

    ReplyDelete
  13. OKLAHOMA CITY— As the end came to a spectacular centennial celebration highlighting accomplishments of Oklahoma and her people, it seems an appropriate time to bring attention to another distinction found in Oklahoma.

    Studies show some members of the Choctaw Tribe in Oklahoma have blood characteristics not found in any other part of the world. This discovery was made in 1997 at Oklahoma Blood Institute (OBI).

    The “type” or minor blood group is known scientifically as ENAV(MNS42). It was first called “Avis” – named after the first Oklahoman in whom it was found. So far, only three individuals have been found to have this unique type. Only select members of the Choctaw Tribe have blood that is compatible with this type. As the largest supplier of blood for Native Americans in Oklahoma, OBI is faced with the challenge to meet the needs of this distinctive population.



    http://theadanews.com/local/x212599029/Rare-blood-type-discovered-by-OBI-lab

    ReplyDelete
  14. வணக்கம் சகோ சார்வாகன் :)

    // இந்த இரு நூற்றாண்டில் ஆய்வுரீதியாக் நிரூபிக்கப்பட்டது மட்டுமே அறிவியல் என்று பேசுவது சரியான பார்வை ஆகாது.அக்கால மாமேதைகளின் கருத்துகளே சில திரிந்து மத புத்தகங்களிலும் இடம் பெற்று இருக்க வேண்டும்.இப்போது கணிணி,இத்ர தொழில் நுட்பட்துடன் ஒரு கருதுகோள் முன் வைப்பது பெரிய விடயம் அல்ல.அந்த மேதை எப்படி அறிந்தார் என்பதை மறைத்து கடவுள் சொல்லியது என்று மேல் பூச்சு வந்துவிடும்.

    ஜோதிட‌ம் என்பதே அண்டவியலை கொஞ்சம் மாற்றிய திரிபு என்பேன்.கிரகங்கள் நம்மை பாதிக்கின்றனவா இல்லையா என்பதில் நமக்கு கருத்து வேறுபாடு இருக்க்லாம்.எனினும் அக்காலத்திலேயே கிரகங்களின் நகர்வை கணிக்கும் உத்திகள் எனக்கு வியப்பை தருகிறது.//

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சகோ. அவர்கள் ஞானக்கண்ணால் தான் இதை கண்டுபிடித்திருப்பார்கள் என நினைக்கின்றேன். இது அனைவருக்கும் உண்டு சகோ. மேலும் அனைத்து கிரகங்களுக்கும் சென்று வரவும் மடியும். இவை யாவும் யோகத்தினால் சாத்தியம் என்று கூறுகிறார்கள். எனக்கும் இதில் உண்மை இருப்பதாகவே தெரிகிறது.

    //மூலிகை வைத்தியத்தில் பல் பொக்கிஷங்களை இழந்து விட்டோம்.

    பாஸ்கரா,ஆர்யபட்டா போன்றவர்கள் பற்றியும் ஏதாவது எழுத வேண்டும் என தோன்றும்.ந்மது நாட்டில் நமது மேன்மையான் நுட்பங்களை பற்றி அறியாமலே படித்து முடித்து விடுவோம்.//
    உண்மைதான் இறந்தவர்களை உயிர்பிக்கும் சஞ்சீவினி மூலிகை பற்றி வள்ளலார் கூறி இருக்கிறார். ராமாயனத்திலும் இந்த மூலிகை பற்றி குறிப்பிடுகிறார்கள். அறிவியலாலும் இது நாளை நடக்கலாம்.

    இந்திய மேன்மைகளை பற்றி தவறாமல் எழுதுங்கள் சகோ. நம்மை தாழ்வு மனப்பான்மையில் சிக்க வைத்ததில், நம் அனைத்து செல்வங்களையும் (அறிவு, பொன்)கொள்ளை அடித்ததில் அந்நிய படை எடுப்புக்கு முக்கிய பங்கு உண்டு .

    //நம் சகோதரர் திருச்சிக் காரனிடம் இப்படித்தான் சண்டை போட்டு விவாதித்து பிறகு சமாதானம் ஆகிவிடுவோம்.சகோ கொஞ்ச நாள்களாக் எழுதுவது இல்லை.நீங்களும் அதே அலைவரிசையிலேயே இருக்கிறீர்கள்.//
    அப்படியா.. அவர் பதிவை நான் அதிகமாக படித்ததில்லை. பார்த்தவரை அவருக்கு சமஸ்கிருதோம் தெரிந்திருக்கலாமோ என தோன்றுகிறது.

    //நான் போட்ட பதிவு பிடிக்கலை,புரியவில்லை எனில் பிடிக்கும்,புரியும் கருத்தை இங்கே பதியுங்கள்.பல் த்கவல்கள் அறிவதும் மகிழ்வே!//

    என்ன சகோ இப்படி சொல்லிவிட்டீர்கள். உங்கள் பதிவை புரிந்து கொள்ள நான் எந்த வித முயற்சியும் எடுக்கவில்லை எனபதே உண்மை.மற்றபடி உங்கள் பதிவை பிடிக்காமல் எல்லாம் எல்லை.
    நான் அகம் சார்ந்த அறிவியலில் ஆர்வம் செலுத்துகிறேன்...நீங்கள் புறம் சார்ந்த அறிவியலில் ஆர்வம் செலுத்துகிறீர்கள்..அவ்வளவுதான்.
    நீங்களும் அக அறிவியலை முயன்று பாருங்கள்...புற அறிவியலில் கிடைக்காத பல உண்மைகள் உங்களுக்கு தெரிய வரலாம்.:)
    நான்றி சகோ உங்கள் முயற்சிகள் தொடரட்டும் :)

    ReplyDelete
  15. By Darth Vader(Dark Matter Be Upon Him),

    pardon me for indiscretion ....LOL..LOL.

    http://suvanappiriyan.blogspot.in/2012/04/blog-post_04.html

    What it should be labelled as: comedy, fantasy, or magical realism. Our friend calls it as science.

    If such agony is prolonged, no other go but to join Scientology (hear about it????). Just waiting for instructions from his Highness Darth Vader.

    ReplyDelete
  16. வண்க்கம் சகோ,
    //நீங்களும் அக அறிவியலை முயன்று பாருங்கள்...புற அறிவியலில் கிடைக்காத பல உண்மைகள் உங்களுக்கு தெரிய வரலாம்.:)//
    புற அறிவியலில் உண்மை அறிவியல்,போலி அறிவியல் என்ற பிரிவுகள் உண்டு.உண்மை அறிவியல் சான்றுகளுக்கு பொருந்தும் உண்மையை கூறுவது.

    போலி அறிவியல் தங்கள் கருத்துகளுக்கேற்ப அறிவியலில் போலி சான்றுகளை உருவாக்குவது அல்லது சான்றுகளை திரிப்பது.

    போலி அறிவியலை என்பது 1% விட மிக குறைவாகவே இருக்கும் ,கால்ப்போக்கில் ஒவ்வொரு அறிவியல் கருத்தும் விம்ர்சிக்கவும் புதிய சான்றுகளுக்கும் பொருந்துமா எனவும் சார்பற்று பரிசோதிக்கப்படுகிறது. இதனால் போலி அறிவியலின் ப்ங்கை மிக குறைவாக கட்டுக்குள் வைக்கிற‌து.

    ஆகவே அறிவியலை விம்ர்சன்ம் செய்வது ஊக்குவிக்கப்பட்டாலும்,பெரும்பானமையான் கருத்து திணிப்பும் தவிர்க்கப்படுகிறது.


    அக அறிவியல் என்பது நம்மை பொறுத்தவரை அறவியல் என்பதே!.நாம் சொல்லும் கருத்துக‌ள்,செய்யும் செயல்கள் சரியானதா என சீர் துக்கி பார்க்கும் செயலாக்கம் என்பேன்.வாழ்வு என்பது ஒரு ஒருவருக்கு ஒருவர் எதிரான போட்டி என அறிவியல் கூறினால் அதை அறிந்த பின், மாற்ற முயற்சிப்பதே அறவியல்.

    ஆனால் நீங்கள் கூறும் அக அறிவியல் குறித்து இப்படி சொல்ல முடியுமா? அதில் போலிகள் 99%.வடிகட்ட வழியில்லை.

    அனைத்து மனிதர்கள் ,உயிர்கள் நல்மாக் இவ்வுலகிலேயே வாழ நல்ல வழி சொல்லும் எந்த விடயம்,மதம்,கொள்கைகளை ஆதரிக்க[மட்டும்] தயார்.

    இப்படிப்பட்ட விடயங்களை ஆன்மீகவாதிகள் பேசினால் பரவாயில்ல்லை. பிரிவினைதான் வளர்கின்றார்.

    சரி நத்திக பொது உடமை கொள்கையும் சர்வாதிகாரமாகி அழிந்தது.

    அதிகாரம் கையில் வந்தல் எல்லோரும் ஒரே மாதிரி!

    எப்படி அனைவரும் நல்மாக் வாழ்வது என்ற அக அறிவியல் அறிய மிகவும் ஆர்வமாகவே இருக்கிறோம்.

    ஒரு வேளை இன்னும் வயதானால் இன்னும் பல் விடயங்கள் புரியலாம் சகோ.நன்றி.

    நன்றி

    ReplyDelete
  17. நண்பர் நரேன்
    புத்தக் வசனங்களுக்கு அறிவியல் பொருள் தரும் வகையில் ஆக்குவது பற்றி நாம் கன்சல்டன்ஸி தருவதால் போட்டியாளரின் ப்ராடக்ட் பற்றி கருத்து கூற இயலாது.எனினும் நாம் பூனையார் மதத்திற்கு இதை விட அருமையாக வடிவமைத்து தந்து இருக்கிறோம்.

    உங்களின் டார்த் வாடருக்கும் வடிவமைத்துத் தருவ்தில் நம்க்கு ஆட்சேபனை ஒன்றும் இல்லை.நாம் மத சார்பற்றவர்!!!!!!!!!!.

    இருப்பினும் அறிவியல் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருப்பது என்பதை மட்டுமே உறுதி செய்து உள்ளது. ஒரு புள்ளியில் இருந்து விரிவடைந்து இருக்க்லாம் என்பது கணிப்பு[prediction] மட்டுமே.

    அப்படித்தான் இருக்கும் வாய்ப்பு மிக மிக அதிகம் என்றாலும் இத்னை ஆய்வுரீதியாக உறுதி செய்ய முடியாது.

    http://en.wikipedia.org/wiki/Edwin_Hubble

    1. Edwin Hubble's arrival at Mount Wilson, California, in 1919 coincided roughly with the completion of the 100-inch (2.5 m) Hooker Telescope, then the world's largest telescope. At that time, the prevailing view of the cosmos was that the universe consisted entirely of the Milky Way Galaxy. Using the Hooker Telescope at Mt. Wilson, Hubble identified Cepheid variables(a kind of star; see also standard candle) in several spiral nebulae, including the Andromeda Nebula and Triangulum.

    2. His observations, made in 1922–1923, proved conclusively that these nebulae were much too distant to be part of the Milky Way and were, in fact, entire galaxies outside our own. This idea had been opposed by many in the astronomy establishment of the time, in particular by the Harvard University-based Harlow Shapley. Despite the opposition, Hubble, then a thirty-five year old scientist, had his findings first published in The New York Times on November 23, 1924,[15] and then more formally presented in the form of a paper at the January 1, 1925 meeting of the American Astronomical Society.[16] Hubble's findings fundamentally changed the scientific view of the universe.

    3. Although concepts underlying an expanding universewere well understood earlier, this statement by Hubble and Humason led to wider scale acceptance for this view. The law states that the greater the distance between any two galaxies, the greater their relative speed of separation. But two years before, in 1927, Georges Lemaître, a Belgian Catholic priest and physicist, published a paper in an obscure Belgian journal, Annales de la Societe Scientifique de Bruxelles. In that paper, he showed that the data collected by Hubble and two other astronomers up to that time was enough to derive a linear velocity-distance relation between the galaxies, and that this supported a model of an expanding universe based on Einstein’s equations for General Relativity.

    மேலே கூறிய மூன்று கருத்துகளில் இருந்து 1919CE முதல் 1929CE வரை மேற்கொண்ட பரிசோத்னைகளில் 1370 கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரு புள்ளியில் இருந்து விரிவடைந்தது என்பதை நம்புவதை நினைத்தால் சிரிப்பாக இருக்கிரது.

    6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் மனிதனுக்கு சிம்பன்சிக்கும் ஒரே முன்னோர் என மில்லியன் ஆண்டுகள் ரீதியாக படிம சான்றுகளை காட்டினால் அப்படி மாறினால் மட்டுமே நம்புவேன் என்பவர்கள்.10 ஆண்டு ஆய்வில் சொன்ன‌ 1370 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்ததை ஏற்பதும் மிக ஆச்சர்யம்.

    இல்லை பிறகு WMAP ம் உறுதிப்படுத்தியதே என்கிறீர்களா அது என்ன கூறியது?

    பல் கோடி ஆண்டுகளுக்கு முந்தை ஒளியை சான்றாக ஏற்பதும்,பல் மில்லியன் ஆண்டு படிமங்களை மறுப்பதும் காமெடியாக் உள்ளது..

    எப்படி எனினும் ஒரு புள்ளியில் அனைத்தும் வந்தது என ஆய்வுரீதியாக் உறுதி செய்யாத விடயத்தை எப்படி நம்பலாம்,ஏற்கலாம்?.

    ஒரு புள்ளியில் இருந்து அனைத்தும் வருவதை வரலாற்றில் யாரும் கண்டது இல்லை.உலகில் பல பில்லியன் அணுக்கள் உள்ளன.அவை ஏன் இன்னும் வெடிக்க வில்லை.

    ஒரு அணுவை வெடிக்க வைத்து அனைத்தும் உருவாக்கி காட்டும் வரை நம்ப மாட்டேன் என்றால் மட்டுமே அவர்கள் உண்மையாளர்கள்.
    ***
    அவர்கள் க்டக்கிறார்கள் நம் பிசினெஸ்க்கு வருவோம்!

    இப்படி ஒளியை பழையது போல் சிவப்பு விலக்கம் கொடுத்து ஏமாற்றி அறிவியலை குழப்பியது டார்த் வாடர் என்பதை நான் கண்டுபிடித்து விட்டேன் நரேன்.

    இந்த அறிவியல் வசனத்தை உங்களுக்கு ரெடி பண்ணித் தருகிறேன்
    ரேட் பேசி முடிக்கலாமா!!!!!!!

    இன்றே கடைசி இல்லையெனில் பூனையாருக்கு கொடுத்து விடுவேன்.

    நன்றி

    ReplyDelete
  18. // ஆனால் நீங்கள் கூறும் அக அறிவியல் குறித்து இப்படி சொல்ல முடியுமா? அதில் போலிகள் 99%.வடிகட்ட வழியில்லை.//

    சகோ அக அறியவியல் என்பது ஒருவரை பொருத்தது. நீங்கள் என்ன உணர்கிறீர்கள், உங்களின் அனுபவம் என்ன என்பதுதான். இதில் போலிக்கு இடமேது?.உங்களை யார் ஏமாற்ற முடியும்? 100 % போலிக்கு இடமில்லை :)... போலி ஆன்மீகவாதி இருக்கலாம், போலி குருக்கள் இருக்கலாம். ஆனால் அக அறிவியல் போலியானது அல்ல.ஆன்மிகம் போலியானது அல்ல. நீங்கள் போலியானவர் அல்ல. உங்கள் உயிர் போலியானது அல்ல.
    அறிவொளி என்கிறார்களே அந்த ஒளி எனபது நீங்கள் நினைக்கும் ஒளி அல்ல அது உங்கள் உள் இருக்கும் ஒளி :) அதை காண முடியும்.

    //ஒரு வேளை இன்னும் வயதானால் இன்னும் பல் விடயங்கள் புரியலாம் சகோ.நன்றி.//
    உண்மைதான் சகோ எதற்கும் காலம் வரவேண்டும்....
    தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி :)

    ReplyDelete
  19. பதிவுக்கு நிகராக பின்னூட்ட விளக்கங்கள் வளர்வதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  20. சகோ அருமையான பதிவு.
    நண்பர்களுடன் பின்னோட்டத்தில் உரையாடல்கள் அருமையாக இருந்தது.

    ReplyDelete
  21. வணக்க்ம் சகோதரர்கள் இராஜரஜன்,குயிக் ஃபாக்ஸ்

    நாம் எதிர்பார்த்த பின்னூட்டங்களே வேறு என்பதால் நம்க்கு எமாற்றமே!.

    சகோ புரட்சி மணியுடன் பல் நல்ல விடயங்களை பகிர்ந்ததுதான் ஒரே ஆறுதல் பரிசு.

    எனினும் இன்னும் பல தூரம் செல்ல வேண்டியுள்ளது.நன்றி

    ReplyDelete
  22. நண்பரே,
    உஙகள் டீலை "Universal Translator" மூலமாக, எல்லாம் வல்ல Darth Vaderயிடம் அறிவித்தேன். ஏனோ அவர் உங்கள் மீது கோபமாக உள்ளார்.

    அவரை யாரென்று தெரியாமல் கூகுள் செய்து விக்கிபீடியா மூலம் சுட்டிகாட்டியதால், அவருக்கு shame shame puppy shame ஆகிவிட்டதாம். கோவம் தலைக்கேறி விட்டதாம்.

    அதனால் உங்களை எதிர்த்து, அவருடைய கருத்துகளை வெற்றி பெறச் செய்தால் நான் தான் அவருக்கு இறைதூதராம். அவருடைய கருத்துகளை போக போக தான் சொல்லுவாராம். சம்மதம் தெரிவித்துவிட்டேன். ஏனோ அவரிடம் பேசினால் ஆங்கிலாமாகவே மொழிப்பெயர்ப்பாகிறது.

    so, brace yourself up for the onslaught from the soldiers of Darth Vader.

    ReplyDelete
  23. வானகக டார்த் தொடர்பாளரே
    பாருங்கள் எப்படி புதுப் பெயர் எல்லாம் சூட்டுகிறேன் என்று.

    சரி நீங்கள் குறிபிட்ட விடயத்திற்கு வருகிறென்.டார்த் ரைடர் பற்றி விக்கி பிடியாவில் பார்தது தவறா!.

    நம்க்கு பேர்தான் புதிதாக் இருந்ததே தவிர இயற்கையை படைத்து,காத்து ,அழித்து கொண்டிருக்கும்[தொடர்பாளர் நரேனைத் தவிர பிறர்] அறிய இயலா சக்தி என அறிவேன்

    சரி திரு மந்திரம்,திருமூலம் எல்லாவற்றிலும் சொல்லியிருக்கும் ஒரே மாகடவுள் இவர்தான் என்பதயும் புரிந்து கொண்டேன்[ என்று கொஞ்சம் மாற்றி சொல்லி அவரின் இமேஜை கொஞ்சம் தூக்கி விடுகிறேன்.]

    அப்புறம் கொஞ்சம் இரகசியம் முதலில் மதம் ஆரம்பிக்கும் போது கோபம் கொள்ளவே கூடாது,பொறுமை காத்து குண சீலன் போலவே நடிக்க வெண்டும்.வேறு வழியே இல்லை!.இல்லையெனில் தர்ம அடிதான் கிடைக்கும்.

    ஆகவே மதம் உருவாக்கி பரப்பி,நிறைய ஆள் சேர்த்து ,வலிமை பெற்றபின் என்ன வேண்டுமானாலும் பேசலாம்,செய்யலாம்.இந்த அடிப்படை உண்மை தெரியாமல் மதம் உருவாக்க முயன்றவர்கள் அழிந்தார்கள் என்பதே வரலாறு.

    வரலாறு என்றது ஞாபகம் வருகிரது கரிகால் சோழ‌னின் ஒன்று விட்ட மச்சினி டார்த் வேடரின் மதத்தை சேர்ந்தவர் என நம்ம நண்பர் ஒருவர் வைத்து வரலாற்றுத் திரிப்பு செய்து தருகிறேன்.இது மத அறிவியலுக்கு ஃப்ரீ!!!!!

    ஆனால் பல பெயர்களில் பல் பேர் என்னிடம் வந்து கன்சல்டன்சி செய்யும் போது குழப்பம் வருவது இயல்புதானே.தமிழனின் பணிவான் தமிழில் மன்னிப்பு

    "ஐ ஏம் வெரி வெரி சாரி!"[இது சீரும் சிற்ப்பு மிக்க டார்த் வேடருக்குகாக ஆங்கிலத்தில்]

    நான் ஏன் இடை இடையே அறிவியல் பதிவுகளும் இடுகிறேன்?.இந்த அறிவியலையும் சரியாக மிக்ஸ் பண்ணி மதத்தில் கலந்து தருவேன்.யாருக்கும் எது எதென்றே தெரியாது என்பதை நிரூபிக்க என்ற தொழில் இரகசியத்தை சீரும் சிற்ப்பு மிக்க டார்த் வைடரின் தொடர்பாளராகிய நரேன்[உங்களுக்கு கனவு வரட்டும்!] அவர்களிடம் பணிவாக தெரிவிக்கிறேன்.

    நன் ஏன் சில மத பிரச்சாரகர்கள் எழுதும் பரிணாம எதிர்ப்பு அறிவியலையும் போட்டுத் தாளிக்கிறேன் என்றால் தொழில் போட்டிதான்!!!! ஹி ஹி

    நம்மிடம் டீலுக்கு வந்தால் அ.வ கொள்கையில் அழகாக மதம் மிக்ஸ் செய்து பரிணாம் எதிர்ப்பும் செய்து தருவோம் எனவும் அன்புடன் அழக்கிறேன்!
    அவர்களுடன் விவாதிக்கும் இப்படி அ.வ கொள்கையில் சொல்லி இருக்கு என்று லைட்டா கோடு போட்டு காட்டினாலும் சிந்திக்க மறுக்கிறர்கள்.

    சிந்திக்க மாட்டார்களா!!!!!!!!!

    "சார்வாகனை தவிர மத அறிவியலுக்கு எவருமில்லை" என்ற கோட்பாட்டை பரப்ப அரும்பாடு படுகிறேன்.

    நான் விள்க்கி விட்டேன்,உங்கள் தரப்புக்கு பிடித்து இருந்தல்
    இப்போது டீல் பேசுவோம்

    பணிவுடன்
    சார்வாகன்
    சார்வாக அறிவார்ந்த [மத அறிவியல்] வடிவமைப்பு மையம்
    சார்வாக புரம்
    தமிழ்நாடு
    பூமி
    மில்க்கி வே
    பிரப்ஞ்சம் நம்பர் 1

    ReplyDelete
  24. ஹா ஹா ஹா
    பரிணாம எதிர்ப்பு ஆங்கில வேதாளங்கள் ஒரு ஒரு கட்டுரையின் கருத்தை வெட்டி ஒட்டி கருத்து திரிபு செய்வதை தமிழ் வேதாளங்களும் பார்த்து எதிர் பதிவு இட வேண்டுகிறோம்.

    http://www.evolutionnews.org/2012/04/sorry_ring_spec058261.html
    Sorry, Ring Species Do Not Provide Good Evidence for the Origin of New Species by the Darwinian Mechanism
    ******
    எதிர் பதிவில் அக்கட்டுரையின் அப்ஸ்ராக்ட் தமிழாக்கம் அவசியம் இட வேன்டும் எனினும் நாமும் அதற்கு எதிர்பதிவில் வெளியிடுவோம் என்பதைஅன்புடன் தெரிவிக்கிறோம்.

    தமிழில் வாழ்த்து
    ஆல் தி பெஸ்ட்!!!

    ReplyDelete
  25. //இதனால்தான் "கடமையைச் செய் பலனை எதிர் பார்க்காதே" என்றான் போலும். ஏனென்றால் "பலன்" என்ற பெயரில் தான் தலையிட வேண்டிய திருக்குமே என்றுதான் அப்படிக் கூறினான் போலும். அவ்வெடிப்புதான் BIG BANG எனும் பெரு வெடிப்பாகும். இது எப்படி இருக்கு!. அப்பழுக்கில்லா கடவுள் கொள்கை வந்துவிட்டது. படைப்பு விஷயத்தில் தான் எல்லா மதங்களும் கோட்டை விடுகின்றன.. இதில் (தமிழ்நாட்டு) பகுத்தறிவு வாதிகளின் அடுத்த கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.//
    http://chandroosblog.blogspot.in/2010/09/1.html
    நாங்களும் அதே பிஸினஸ்தான்(அழகாக மதம் மிக்ஸ் செய்து பரிணாம் எதிர்ப்பு மற்றும் கலப்பு செய்து தருவோம்) சின்ன ஆர்டர்ன்னா நமக்கும் கொடுங்கள்.

    ReplyDelete
  26. \\ 'அ' எனும் உயிரின குழு இருக்கிறது.அதில் அ1,அ2,அ3, என 3 வகை விலங்குகள் இருக்கிற‌து என வைத்துக் கொள்வோம்.

    பரிணாம்த்தின் படி அ1,அ2,அ3 ஆகியவற்றுக்கு ஒரே முன்னோர் இருப்பதும் ஒருவகை உயிரின குழு வகைப் படுத்தலே!.இது பரிணாம் வரையறுப்பு.

    அ1, அ2 உடன் மலடற்ற சந்ததி கொடுக்கும் இனவிருத்தி செய்ய இயலும்.செய்கிறது.

    அ2, அ3 உடன் மல்டற்ற சந்ததி கொடுக்கும் இனவிருத்தி செய்ய இயலும்.செய்கிறது.

    ஆனால் அ1, அ3 உடன் மலடற்ற சந்ததி கொடுக்கும் இனவிருத்தி செய்ய இயலவில்லை.நடப்பதும் இல்லை.

    அப்போது வரையறுப்பின்படி அ1,அ3 வெவ்வேறு உயிரினம் ஆகின்றன. \\ செத்தாண்டா சேகரு...........

    ReplyDelete