Thursday, October 11, 2012

ஐன்ஸ்டினின் கடவுள் பற்றிய கடிதம்!




வணக்கம் நண்பர்களே,

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்! என்னும் மகாகவியாரின் சொற்களை உண்மையாக்க எங்கும் செல்லாமல் இணையத்தில் மட்டுமே எட்டுத் திக்கும் தேடினால் போதும் என்று சூழலில் வாழ்கிறோம். எனினும் இணையத்திலும் தமிழ் மொழிக்கு பிற நாட்டு நல்லறிஞர் சா(சூ)த்திரங்கள்  தமிழாக்கம் செய்து அளிப்பது தமிழர்களின் கடமை.அப்போது மட்டுமே தமிழில் தேடும் தமிழர்களுக்கு பயன் தரும்.

அந்த வகையில் அறிவியலாளர் திரு ஐன்ஸ்டின் அய்யா அவர்களின் ஒரு கடிதம் 4 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது என்ற செய்தியைப் படித்தவுடம் அக்கடிதத்தில் என்ன உள்ளது ,அத்னை தமிழாக்கம் செய்து நம் சொந்தங்களுடன் பகிர்ந்தால் என்ன என தோன்றியதின் விளைவே இப்பதிவு.


ஐன்ஸ்டின் அய்யா குறித்து அறியாதோர் இருக்கவே முடியாது என்னும் அள்வுக்கு அறிமுகம் தேவையற்றவர் எனினும் நியுட்டனின் ஈர்ப்பு  விசைக்கு மாற்றுக் கொள்கை[ பொது சார்பியல் கொள்கை General theory of relativity] கண்டுபிடித்தவர்.ஒளியின் வேகம் ஒரு மாறிலி[சிறப்பு சார்பியல் கொள்கை Special relativity] என்பதும், பருப் பொருளின்[matter] இன்னொரு பரிமாணமே ஆற்றல்[E=mc^2] என்பதும் இவரின் முக்கிய கொள்கையாக்கங்கள் ஆகும்.

யூதராக இருந்தாலும் யூத இன மேட்டிமை மீது கடுமையான விமர்சனம் வைத்த மனித நேயர். 
 
I should much rather see reasonable agreement with the Arabs on the basis of living together in peace than the creation of a Jewish state. …the essential nature of Judaism resists the idea of a Jewish state with borders, an army, and a measure of temporal power….I am afraid of the inner damage Judaism will sustain – especially from the development of a narrow nationalism within our own ranks…
-- Einstein speech in New York, 1938.
 
அதே சமயம் யூதனாக இருந்தும் யூத மதத்தை விமர்சிக்கிறாயா என யூதர்கள் யாரும் அவர் தலைக்கு விலை வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்க விடயம் ஆகும்.

இது அறிவியல் பதிவு அல்ல என்பதால் ஐன்ஸ்டின் அய்யா அவர்களின் ஆய்வுகளைப் பற்றி விளக்க தேவையில்லை.  அவர் கடிதம்  குறித்து திரு ரிச்சர்ட் டாக்கின்ஸ் அய்யாவின் இணைய தளத்தில் வந்த கட்டுரையின் தமிழாக்கம் முழுதும் அளிக்கிறோம்.[கடிதத்தின் மொழியாக்கம் மட்டும் சிவப்பு எழுத்துக்களில் இருக்கும்]



******


ஐன்ஸ்டின் கடவுள் பற்றி கூறினார் என மதவாதிகளின்  பரப்புரைகளுக்கு  ஒருவகையில் அவர்கள் மட்டுமே காரணம் அல்ல. ஐன்ஸ்டினும் கடவுள் என்பதை ஒரு கவிதை உருவகமாக பலமுறை கருத்து வெளியிட்டதன் ஒர் எதிர்பாரா ,விரும்பத் தகாத விளைவே எனலாம்.

ஆகவே ஐன்ஸ்டின் கடவுளை நம்பினார் என்னும் மதவாதிகளின் விளம்பர பிரச்சாரத்தை முழுதும் முறியடிக்க, இக்கடிதத்தை முற்றிலும் படித்து விளங்குவதின் மூலம் செய்ய இயலும்.இக்கடிதம் உள்ளிட்ட இதர ஆவண‌ங்கள் ஐன்ஸ்டின் ஒரு எதார்த்த இறை மறுப்பாளர் என்பதை தெளிவாக்குகின்றன.

இக்கடிதம் 2008ல் லண்டனில் ஏலத்திற்கு வந்த போது நான்(ரிச்சர்ட் டாக்கின்ஸ்) எனது அமைப்பிற்காக எடுக்க முயன்றேன்,அப்போதைய  விலை இப்போதைய ஏல தொடக்க விலை 3 மில்லியன் டாலரை[15 கோடி ரூபாய்] விட குறைவாக இருந்தாலும் என்னால் முடியவில்லை.

ஆகவே இக்கடிதத்தை ஏலத்தில் எடுப்பவர்கள் அதன் ஆங்கிலம்& இதர  மொழியாக்கங்களுடன்[ மூலம் ஜெர்மன் மொழி] உலக முழுதும் பரப்ப வேண்டும் என எதிர்பார்க்கிறேன். 
**********
இந்த தனிப்பட்ட கடிதம் அனைவருக்கும் பகிர்ந்த பொதுவான விடயம் இல்லை என்றாலும் கடவுள், மதம் மற்றும் இனம் சார் சிந்தனை போன்றவைகளின் மீதான‌ ஒரு தலை சிறந்த சிந்தனாவாதியின்  கருத்து என்ற வகையில் அறியத் தக்கதே.

இந்த ஞானியின் கடவுள்,மதம் மீதான தனிப்ப‌ட்ட ,வெளிப்படையான கருத்துகளை வெகு சிலரே சரியாக அறிந்து இருக்க முடியும் என்பதால் இக்கடிதம்  அக்கருத்துகளை ஒரு ஆவணமாக்கி அனைவருக்கும் அளிக்கிறது.

இக்கடிதத்ம் ஒரு நண்பருக்கு தனிப்பட்ட முறையில் எழுதப்பட்டதால் ஐன்ஸ்டினின் உள் மனதின் உண்மையான  கருத்தை உறுதியாக தொடர்பு படுத்துகிறது.இக்கடிதத்தின் கருத்துகள் வாழ்வின் நோக்கம் பற்றிய  பல அடிப்படை கேள்விகளின் பதிலை நோக்கிய நெடுநாள் தேடலை எடுத்து இயம்புகிறது.

வாழ்வின் நோக்கம் பற்றிய உண்மைத்தேடல் உடையவர்களுக்கு இக்கடிதம் ஒரு சிறப்பு அறிமுக விளக்கமே. 

இக்கடிதம் ஐன்ஸ்டின் அபோது பணியாற்றிய பிரின்ஸ்டன் பல்கலைக் கழக கடித குறிப்பேட்டில் ஜன்வரி 3,1954ல் பிரபல தத்துவவியலாளர் எரிக் குட்கிண்ட்[Eric B. Gutkind] அவர்கள்க்கு ஜெர்மன் மொழியின் எழுதப்பட்டது. 

இக்கடிதம் திரு குட்கிண்ட்டின் புத்தகமான  .Choose Life: The Biblical Call to Revolt”மீதான விமர்சனம் எனலாம்.கடிதத்தின் சில பகுதிகள் மட்டுமே ஆங்கிலத்தில் [1954ல் ஜோம் ஸ்டாம்பர்க் ஆல்]மொழியாக்கம் செய்யப்பட்டு இணையத்தில் கிடைக்கிறது.
 
Key Passages:
 
கடந்த சில நாட்களாக உங்கள் புத்தகம் பற்றி பரபரப்பாக பல விட‌யங்கள் அறிய‌ முடிந்தது. உங்கள் புத்தகத்தின் பிரதியை எனக்கு அனுப்பியதற்கு நன்றி.
புத்தகம் படித்த‌ உடனே எனக்கு தோன்றியது  நம்மிடையே உள்ள ஒற்றுமைகள்தான். சான்றுகள் மீதான எதார்த்த அணுகுமுறை கொண்டு தனிப்பட்ட ,மனித சமூகத்தின் வாழ்வை ஆய்வதுதான் அந்த ஒற்றுமை எனலாம்.

கடவுள் என்பது மனித பலகீனத்தின் உருவாக்கமாகவும்,வெளிபாடாகவும் மட்டுமே எனக்கு புலப்படுகிறது.பைபிள்[மத புத்தகம்] என்பது மதிப்புக்குறிய‌ ஆனால்  பழைய புராண ,குழந்தைகள் கேட்கும்அம்புலிமாமா கதைகளின் தொகுப்பு மட்டுமே.

எவ்வளவு நுட்பமான ,தர்க்கரீதியான தத்துவ விளக்கமும் இக்கருத்தை மாற்ற முடியாது.இம்மாதிரி நுட்பமான தத்துவ விளக்கங்கள் விளக்குபவரின் இயல்புக்கேற்ப ஊதிப் பெரிதாக்கப்படுகின்றன தவிர அந்த புத்தக்த்தின் எழுதப்பட்டுள்ளவைக்கு தொடர்பற்றவை.

[அதாவது மத புத்தகத்தில் அறிவியல்,உருவகமாகப் பார்க்க வேண்டும், சூழலுக்கு பொருத்தி பார்க்க வேண்டும்,அந்த கருத்து  அப்போது மட்டுமே, ...இந்த மாதிரி..சார்வாகன்]

.என்னைப் பொறுத்தவரை யூதமதமும் பிற மதங்கள் போல பழைய அம்புலிமாமா கதைகள்,மூட நம்பிக்கைகள் அனைத்தையும் பழைய கள்ளை புதிய புட்டியில் ஊத்தி கொடுப்பது போல்தான்... .

 
யூதர்களின் ஒருவன் என மகிழ்சியுடன் நான் அறிவித்துக் கொண்டாலும், அவர்களோடு ஒத்த சிந்த்னை கொண்டு இருந்தாலும், பிற [இன,மத] மக்களை விட யூதர்களிடம் வித்தியாசமாக எந்த மேம்பட்ட குணமோ தகுதியோ  இல்லை எனவே கூறுகிறேன்.

என் அனுபவத்தில் இருந்து இப்போதைய சூழலில் தங்களை மோசமான நிலைக்கு ஆளாத‌ அளவுக்கு போதிய பாதுகாப்பு சக்தியை கொண்டு இருக்கிறார்கள் என்பதைத் தவிர [கடவுளால்]தேர்ந்தெடுக்கப் பட்ட மக்கள் என குறிப்பிட்டு சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

 
 நீங்கள் யூத இன மேட்டிமை என பெருமை பாரட்டுவதும். அதனை வெளியில்  மனிதன்,உள்ளே யூதன் என இரு எல்லைகளிலும் நின்று பாதுகாப்பதும் என்னை வருத்தத்திற்கு ஆளாக்குகிறது.

ஒரு மனிதனாக செய்த வினைகளின் பலனுக்கு விலக்கு கோருவதும் ,இல்லையெனில் ஏற்போம் என்பதும்,ஒரு யூதனாக ஓரிறைக் கொள்கையின் உயர்வு என தூக்கிப் பிடிப்பதுமே ஆகும்.

[அதாவது யூதர்கள் தாங்கள் 2000 வருடம் துன்புற்றோம் என்பதும்,கடவுள் இந்த தேசத்தை எங்கள்க்கு கொடுத்தார் என்ற வாதங்கள்  பாலஸ்தீன ஆக்கிரமிப்பை, துன்புறுத்துவதை நியாயப் படுத்தாது என்கிறார். அவர் இஸ்ரேல் என்னும் நாடு உருவானதை எதிர்த்தார்,பாலஸ்தீனர்களோடு யூதர்கள் ஒரே நாடாக ஒன்றுபட்டு வாழவே விரும்பினார்.கடிதத்தின் சில பகுதிகள் மட்டுமே கிடைத்தது என்பதால் விளக்கம் அவசியம் ஆகிறது]

குறிப்பிட்ட காலத்திற்கான காரண காரியம் முழுமையானது அல்ல,இதனை தத்துவமேதை ஸ்பினோஜா மிக அருமையாக் முதன்முதலில் விளக்கினார்

[அதாவது மனித சமூக வரலாற்றை ஆதியில் இருந்து பார்த்தால் மட்டுமே மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக நாகரிகம் அடைந்ததும்,கொள்கை கோட்பாடுகள் வரையறுத்த வரலாறும் தெரியவரும்.பாருச் ஸ்பினோசா[Baruch Spinoza and later Benedict de Spinoza (24 November 1632 – 21 February 1677) ] எனப்படும் யூத_டச்சு தத்துவமேதையின் பைபிள்,ஓரிறைக் கொள்கையின் மீதான விமர்சனங்களே 18 ஆம் நூற்றாண்டு பைபிள் விமர்சனம் ஆய்வுகளுக்கு அடித்தளம் இட்டது. ‍]

 உருவ,முன்னோர் ,இயற்கை  வழிபாடு போன்றவை உள்ளடங்கிய மதங்கள் ஓரிறைக் கொள்கையால் முழுதும் இல்லாமல்  போய் விடவில்லை.இச்சூழலில் அம்மதத்தவரிடம் ஒழுக்க கோட்பாடுகள் இல்லை அல்லது தரம் அற்றவை என நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளலாம்.ஆனால் அப்படி அல்ல!!!
.
நாம் இருவரும் சில அறிவுசார் கருத்துகளில் மாறுபட்டாலும் பல அடிப்படை விடயங்களில் ஒன்று படுகிறோம்[எ.கா மனித நடத்தை மதிப்பீடுகள்,] என்றே எண்ணுகிறேன். நமது அறிவுசார் முட்டு கொடுத்தல்களும்,பகுப்பாய்வுகளும் [மனோ தத்துவ மேதை ஃப்ரய்டின் மொழியில்]மட்டுமே வித்தியாசப்படுகின்றன்.

ஆகவே சான்றுகள் உள்ள‌ உறுதிப் படுத்தப்பட்ட விடயங்களை நாம் விவாதித்தால் மட்டுமே நம் ஒருவருக்கொருவர் மீதான சரியான புரிதல்கள் ஏற்படும் என நினைக்கிறேன்.

நட்புடன் கூடிய அன்பின் வாழ்த்துக்களுடன்
ஐன்ஸ்டின்

***********
முழுமையான கடிதம் எப்படி இருக்கும் என்பதை மாதிரியாக இந்த பகுதி விளக்கி இருக்கிறது. மதபுத்த்கம் குறிப்பாக யூத கிறித்தவ மத புத்தக கதைகளும் அதன்  மீதான அரசியலே இப்போது வரை தொடரும் இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினை என்பதைப் புரிந்தால் இக்கடிதம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது எனப் புரியும். ஒருவேளை ஐன்ஸ்டின் யூத மேட்டிமை கொள்கை கொண்டு இருந்தால் இஸ்ரேல் அரசியலில் முக்கிய பதவி கூட கிடைத்து இருக்கலாம்.சிந்தனையாளர்கள் மத இன சார் கொள்கை உடையவர்களாக இருக்க கூடாது என்பதன் எ.கா ஐன்ஸ்டின்தான்!!

யூத மத இனவாதிகள் கடவுள் இஸ்ரேல் என்னும் நாட்டை தங்களுக்கு எகிப்தில் இருந்து வர வைத்து ,அங்கு ஏற்கெனவே வாழ்ந்தவர்களை வெற்றி கொள்ள வைத்து அளித்ததாக இன்னும் [நம்பி?!!!!] பிரச்சாரம் செய்கிறார்.

இதில் எதிர் கோஷ்டி பாலஸ்தீனர்கள் தரப்பும் இன்னும் மோசமான மதவாதிகளாக முத்திரை குத்தப்பட்டது அவர்கள் பக்க நியாயத்தை எடுபடாமல் செய்து விட்டது.சமீபத்தில் எந்த நியாயமான தீர்வும் வர வாய்ப்பில்லை என்பதே உண்மை.

இது போன்ற கட்டுக்  கதைகளை ஒழிக்காதவரை அடக்குமுறை ஆக்கிரமிப்பும் ஏதோ ஒருவிதத்தில் நியாயப்படுத்தப்படும். ஐன்ஸ்டின் இதனை உணர்ந்தே பைபிள் கட்டுக் கதை, எந்த திற்மையான மதப் பிரச்சாரகரின் தத்துவ விளக்கமும் ஏற்புடையது அல்ல என அருமையாக கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

ஆனால் ஐன்ஸ்டின் ஆத்திகர் என்றும்,அவரின் கண்டுபிடிப்பும் எங்கள் புத்தகத்தில் சொல்லி இருக்கிறது என மத விளம்பரம் செய்யும் கோமாளிகளும் எதிர்காலத்தில் வருவார்கள் என அறிந்து இருப்பாரா??? ஹா ஹா ஹா!!

நன்றி!!


17 comments:

  1. வணக்கம் சகோ,

    அய்ன்ஸ்டின் பற்றிய உண்மையான விளக்கம் அருமை சகோ. விஞ்ஞானிகள் இவரை பின்பற்றுகிறார்களோ இல்லையோ,மத நிறுவனத்தார்கள் தங்கள் விளம்பரத்திற்காக அதிகம் பயன்படுத்திவருகிறார்கள்.எப்படியாவது பிசினஸ் நடந்தால் சரி என்ற நிலைக்கு மதம் தள்ளப்பட்டது பரிதாபத்திற்குறிய விடயம்.

    ஒரு பிரபல மத‌ நிறுவனம் இப்படித்தான் தன் கையாலேயே தன்னை குத்திக் கொண்டு வருகிறது. எ.காட்டாக ஒளி வேகத்தில் பயணம் செய்தவர்கள் பூமிக்குத் திரும்பும் போது அதே வயதில் திரும்பி வருவார்கள்,ஆனால் பூமியில் உள்ள அவரது மனைவி மக்கள் வயது முதிர்ந்திருப்பார்கள் என்ற அய்ன்ஸ்டீன் தத்துவம் தமது கடவுள் ஏற்கனவே வேதத்தில் கூவிவிட்டான் என்பதாக கூடி கூவிக்கூவி விளம்பரம் செய்துவருகிறார்கள். இத் தத்துவம் ஒரு நாள் என்பது ஒருவருடம் மற்றும் அய்ம்பதாயிரம் வருடத்திற்கு சமமானது என்பதை விளக்க இந்த எடுத்துக்காட்டாம்.ஹி..ஹி...ஹீ..//நல்ல காமெடியா இருகுல்ல!கொஞ்ச‌ம் சிரிக்க‌லாம் வேறு ஒன்றும் சொல்வ‌த‌ற்கில்லை.

    இனிய‌வ‌ன்...

    ReplyDelete
    Replies
    1. மத விளப்பரத்தில் புதுமை இல்லையெனில் வியாபாரம் நடக்காது அல்லவா!!!.அதுதான். ராக்கெட்டின் இப்போதைய அதிக பட்ச வேகம் 20 கி.மீ/வினாடி என்வே நினைக்கிறேன், இது ஒளியின் வேகமான 3 இலட்சம் கி.மீ/வினாடியில் மிக சிறிய பங்கு கூட இல்லை. ஆகவே நடக்கும் போது பார்க்க்லாம்.
      ஐன்ஸ்டினின் கொள்கையான அதி வேகத்தில் பயணிக்கும் போது காலம் மாறுபடும் என்பதனை மிக சிறிய கால அளவுகளுக்கு மட்டுமே பரிசோதித்து உள்ளனர். ஒருவேளை இந்த கால வேறுபாட்டின் காரணி ஏதோ ஒன்று மாற்றுக் கொள்கையினால் நிரூபிக்கப்பட்டால் கூட அறிவியல் ஏற்கும்.அப்போது என்ன செய்வார்கள்?

      இன்னும் கூட கருப்பு பொருள்,ஆற்றல் மீதான விளக்கம் கூட ஐன்ஸ்டினின் ஈர்ப்பு கொள்கைக்கு மாற்று தேடப்படுகிறது.

      அவர்களின் புத்தகம் சொல்லும் கட்டுக் கதைகளுக்கு ஆதாரம் இல்லை என்பதால் மட்டுமே இப்படி செய்கிறார்கள் என்பதை அறிய வேண்டும்.

      சான்றுகளுக்கு கொள்கை பொருத்துவதே அறிவியல். கொள்கைக்கு [அறிவியல்,வரலாறு] சான்று பொருத்துவது மதவாதம்!!!

      நன்றி

      Delete
  2. ஐன்ஸ்டினின் கடவுள் நம்பிக்கை பற்றிய தங்களின் இவ்விளக்கப் பதிவு, மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

    பொறுப்புணர்வுடன் தமிழாக்கித் தந்ததற்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  3. அருமை. நன்றி.

    ReplyDelete
  4. வாங்க நண்பர்கள் அறுவை மருத்துவன், ஏலியன்
    வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி!!

    ReplyDelete
  5. நண்பா பாரதி கனவை நினைவாக்குவதற்கு வாழ்த்துக்கள் :)

    சார்வாகன் நீங்க சார்வாகன் எங்க இருக்கார்னு தேடிநீங்கனா, உங்களுக்கு சார்வாகன் கிடைப்பாரா? கிடைக்க மாட்டாரா? எங்க எப்படி தேடுவிங்க? முயற்சி பண்ணி பாருங்களேன் :) :)

    ReplyDelete
  6. சகோ.சார்வாகன்,

    மிக நல்ல கருத்தாக்கம்.

    கடவுள் சர்வ வல்லமை கொண்டவர் எனில் அதனை மக்களுக்கு சொல்ல தூதர் எதற்கு அவரே அனைவருக்கும் மானசீகமாக மனதில் தோன்றி சொல்லிவிடலாமே.

    கடவுள் என்ற கருத்தாக்கம் சிலருக்கு தொழில் மூலதனம்,அதற்கு ஐன்ஸ்டீன் ,என்ன பெரியாரே கடவுள் இருக்கு என சொன்னார் என சொல்லி வியாபாரம் செய்வார்கள் :-))

    ReplyDelete
  7. சார்:

    "Science without religion is lame, religion without science is blind."

    இதைச் சொன்னது, ஆல்பட் ஐண்ஸ்டய்ன் னு சொல்றாங்க. இதை வைத்து பலர் ஐன்ஸ்டீன் கடவுள் நம்பிக்கை உள்ளவர் மத நம்பிக்கை உள்ளவர்னு சொல்றா.

    நீங்க இல்லை அவருக்கு உண்மையிலேயே கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை எல்லாம் இல்லைனு சொல்றீங்க?!

    நான் என்ன சொல்றேன்னா.. அவருக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால்த்தான் என்ன? அவரு பெரிய ஆள்.. அவரே கடவுள் நம்பிக்கை உள்ளவர்.. நீ எல்லாம் என்ன? அப்படினு சொல்ற வாதமே அபத்தம்! பெரிய ஆள் என்பதால் அவர் கடவுள் இருக்குனு சொன்னால் நம்மளும் (சின்னவர்கள்) ஏத்த்க்கனும்னோ, அது சரி என்றோ இல்லையே!

    நம்மால கடவுளை உணரமுடியவில்லை! அதை ஐண்ஸ்டீனலாயும் உணர்த்த முடியலை! அதனால நம்ம கடவுளை நம்பவில்லை! நம் நம்பிக்கை நம்முடையது! அவ்ளோதான்!

    ReplyDelete
  8. நண்பர் வருண்,

    //நம்மால கடவுளை உணரமுடியவில்லை! அதை ஐண்ஸ்டீனலாயும் உணர்த்த முடியலை! அதனால நம்ம கடவுளை நம்பவில்லை! நம் நம்பிக்கை நம்முடையது! அவ்ளோதான்!//

    ந‌ண்ப‌ர் வ‌ருண் சொல்வ‌திலும் ஒரு நியாய‌மிருக்கிற‌து ஆனாலும் சிறு திருத்தம் 'அய்ன்ஸ்டீனலாயும்' என்பதற்கு பதிலாக‌ "அதை க‌ட‌வுளாலேயும் உண‌ர்த்த‌ முடிய‌லை"என்றிருந்தால் இன்னும் சிற‌ப்பாக‌ இருந்திருக்கும் என்ப‌து என் க‌ருத்து. ந‌ன்றி!!!!!!!!!!

    இனிய‌வ‌ன்...

    ReplyDelete
  9. வாங்க நண்பர்கள் R.Puratchimani,வவ்வால்,வருண்,இனிய‌வ‌ன்...

    வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி!!

    ReplyDelete
  10. ////அதே சமயம் யூதனாக இருந்தும் யூத மதத்தை விமர்சிக்கிறாயா என யூதர்கள் யாரும் அவர் தலைக்கு விலை வைக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்க விடயம் ஆகும்.////
    ஐன்ஸ்டீன் பற்றியும் அவர் மதக் கொள்கையும் பற்றி பேசுகையில் அதோடு நிற்பதே நேர்மையை காட்டும் .
    சல்மான்ருஷ்டியின் விமர்சனத்தையும் ஐன்ஸ்டீன் விமர்சனத்தையும் ஒப்பிட முடியாத நிலையில் முஸ்லிம்களை ஜாடையாக பழிப்பது தங்களது காழ்ப்புணர்வை வெளிப்படுத்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பர் இபராஹிம்,
      நாம் இஸ்லாமின்,ஷாரியாவின் மீதான விமர்சகர் என்றாலும் முஸ்லிம்களை விமர்சிப்பது இல்லை!!.

      //ஐன்ஸ்டீன் பற்றியும் அவர் மதக் கொள்கையும் பற்றி பேசுகையில் அதோடு நிற்பதே நேர்மையை காட்டும் .
      சல்மான்ருஷ்டியின் விமர்சனத்தையும் ஐன்ஸ்டீன் விமர்சனத்தையும் ஒப்பிட முடியாத நிலையில் முஸ்லிம்களை ஜாடையாக பழிப்பது தங்களது காழ்ப்புணர்வை வெளிப்படுத்துகிறது.//


      நான் இஸ்லாம் பற்றி குறிப்பாக சொல்லவில்லையே. சல்மான் ருஷ்டிக்கு மட்டும்தான் தலைக்கு விலை வைக்கப் பட்டதா? வரலாற்றில் மத நிந்த்னைக்கு நடத்தப்பட்ட இன்குஷிசன் எனப்படும் கிறித்தவ் தண்டனைகளும் உண்டு. மத நிந்த்னைக்கு சமணர்கள்,பவுத்தர்கள் கழுவேற்றப்பட்ட சம்பவங்களும் உண்டு.

      நீங்களாக இஸ்லாம் என்று பழி போடாதீர்கள். நம் சகோ பதிவுலக் மார்க்க மேதை சு.பி மிகவும் வருத்தப்படுவார்.
      **********
      சல்மான் ருஷ்டிக்கு ஏன் தலைக்கு விலை வைக்கப்பட்டது? என அறிந்தால் கூறலாம்.

      நன்றி

      Delete
  11. யூதரா ஐன்ஸ்டின் தனது மதத்தை விமர்சிக்கும் போது யூத மதத்தவர்கள் அவர் தலைக்கு விலை வைக்காதது யூத மதத்தின் மேன்மையை காட்டுகிறது. இஸ்லாம் சகிப்பு தன்மையற்ற வெறிதனம் மிகுந்த பிறர் மீது போர் செய்யும் மதமாகவே வளர்க்கபட்டுவந்துள்ளது. தனது மதத்தில் உள்ள தவறுகளை சீர் திருத்தும் முயற்ச்சி சிறிது கூட இல்லாமல் மற்றவனை பார்த்து இஸ்லாம் பற்றிய உண்மைகளை சொல்லாதே என்று வாய்பூட்டு போடும் ஒரு மதமாக தான் இஸ்லாம் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் வேகநரி,
      யூதர்கள் மேன்மையானவர்களோ, யூதம் மேன்மையான‌தோ அல்ல. வரலாற்றில் பட்ட பல துன்பங்களினால் பல் யூதர்கள் தங்கள் மதத்தை பெரிதாக எண்ணுவது இல்லை!!.

      யூதர்களில் ஜியானிஸ்டுகள் குறைவே!!

      நன்றி

      Delete
  12. "Science without religion is lame, religion without science is blind."

    Caveats:
    1.ஐன்ஸ்டீன் என்ன நினைத்தார் என்பதை அவர் தான் வந்து சொல்லணும்; நாம் நம் அறிவிற்கும், ஆங்கில மொழியின் தனித்தன்மை மூலம், நம் திறமைக்கு ஏற்ப வாதாடலாம்.
    2.மொட்டையா இந்த வரியை மட்டும் பார்க்கக்கூடாது. Read with full context.
    ----
    For example:
    I religiously studied Gita.
    How do interpret this?
    நான் பயபக்தியுடன் கீதையைப் படித்தேன்! சரியா? இல்ல சிரத்தையாக படித்தேன்; இரண்டும் சரி தானே?

    I religiously studied Science.
    How do interpret this?
    நான் பயபக்தியுடன் விஞ்ஞானத்தைப் படித்தேன்! சரியா? இல்ல சிரத்தையாக படித்தேன்; எது சரி?

    I religiously studied Periyar's books.
    How do interpret this?
    நான் பயபக்தியுடன் பெரியார் புத்தகங்களைப் படித்தேன்! சரியா? இல்லை சிரத்தையாக படித்தேன்; எது சரி?

    நான் கூடத்தான் நேத்து கடவுளை நம்பினார் கைவிடப் படார். என்று எழுதியிருந்தேன். அதன் லிங்க்:

    http://www.nambalki.com/2013/01/blog-post_11.html
    நிசமாலுமா நான் கடவுளை நம்பினேன் என்று அர்த்தமா?

    ReplyDelete
  13. I religiously studied Periyar's books.
    பெரியாரை அறிந்தவன் அவ்வறு எழுதமாட்டான என்று சிலர் சொல்வார்கள். தராளமாக எழுதலாம்.

    அப்படி எழுதக் கூடாது என்று சொல்பவர்களுக்கு...உலகத்தில் ஆங்கிலம் தெரிந்த எல்லோருக்கும் பெரியாரியப் பற்றி தெரிந்து இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை!

    ReplyDelete