Wednesday, November 28, 2012

பேரண்டம் தோன்றிய காலம் எப்படி கண்டு பிடித்தார்கள்???



photo of Edwin Hubble looking into telescope
 

பேரண்டம்  தோன்றி 13.8 பில்லியன் ஆண்டுகள் ஆனது என்று பலருக்கு தெரியும்.இளைய பூமி கொள்கையாளர்களை[Young earth creationist] தவிர மற்றவர்கள் இதனை ஏற்றுக் கொள்கின்றனர்.சரி இதனை எப்படி கணக்கிட்டார்கள் என்பதை இப்பதிவில் அறிந்து கொள்வோம்.

பேரண்டத்தின் தோற்றத்தை விளக்கும் இப்போதைய அறிவியல் கொள்கை பெரு விரிவாக்க கொள்கை எனப்படும் ஃபிக் பேங் (big bang theory) கொள்கையாகும்.அதாவது 13.8 பில்லியன்  ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறு புள்ளியில் இருந்து விரிவடைந்து இப்பிரபஞ்சம் தோன்றியது என்பதும்,இன்னும் இப்பிரபஞ்சம் இன்னும் விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்பதுதான் இக்கொள்கையின் முக்கிய அம்சங்களாகும்.

இந்த விரிவடைதலை நிரூபித்தவர் திரு எட்வின் ஹூபிள் அவர் தொலை நோக்கியின் மூலம் செய்த ஆய்வுகள் மூலம் பிற காலக்ஸிகள்(தமிழ் சொல் என்ன?) நம்மிடம் இருந்து விலகி செல்கின்றன என்று கண்டறிந்தார்.ஹூபிளின் ஆய்வு முடிவுகளின்படி நமக்கு(பூமிக்கு) தூரத்தில் உள்ள காலக்ஸிகள் வேகமாக விலகுவதும்,அருகில் உள்ளது மெதுவாக விலகுவதையும் வரை படத்தில் இருந்து அறியலாம்.ஏன் இப்படி ?காணொளியில் காட்டப்படும் பலூன் விரிவடைவதை யோசித்தால் புரியும்.இவரின் ஆய்வுகள் சிவப்பு விலக்கம்[red shifts] பற்றி இன்னொரு பதிவில் பார்ப்போம்.

அந்த தொடர்புகளை ஒரு வரைபடமாக (பூமியில் இருந்து)தூரம்(d) அதன் விலகி செல்லும் வேகம்(V) ஆகியவற்றின் தொடர்பாக வரைந்தார்.இதற்கு தோராயமாக ஒரு நேர்கோட்டு சமன்பாடு[linear equation] அமைத்தார் இது ஹூபில் விதி எனப்படுகிறது.அந்த மாறிலி(H0) ஹூபில் மாறிலி(constant) எனப்படுகின்றது
v = H0 x d

1/H0=d/v==meter/(meter/sec)=time
graph of recession velocity as function of distance 
for distant galaxies 

ஆகவே ஹூபில் மாறிலியின் தலைகீழி(reciporocal) பிரபஞ்சத்தின் வயது ஆகும்.ஹுபில் மாறிலி வரை படம்,அதன் ஆயத் தொலைவுகள் மூலம் H0 = 71 km/s/mpc . என கணக்கிடப்பட்டது.இதனை கணக்கிட கணிணி கணித மென்பொருள்கள் தேவை.

1mpc=One megaparsec = 3.086×1019 km



H0=71/ 3.086×1019 s-1= 2.30×10−18 s−1

Time=Age of the universe=1/H0=4.35×1017 seconds or 13.8 billion years.

இது ஒரு தோராய முறை ஏனெனில் ஹூபில் மாறிலி கணக்கிடுவதில் உள்ள தவறின்(error) அளவையும் சேர்க்க வேண்டும்.அந்த அளவு நமக்கு தேவையில்லை நமக்கு தெரிய வேண்டியதெல்லாம்.

1. ஹூபில் பூமியில் இருந்து காலக்ஸிகள் நகரும் வேகம் ,தூரம் ஆகியவற்றை கணித்தார்.

2.அதற்கு ஒரு சமன்பாடு அளித்தார் (ஹூபில் விதி)

3. ஹூபில் மாறிலியின் தலை கீழி பிரபஞ்சத்தின் வயது ஆகும்(ஏன்,எப்படி என்று கொஞ்சம் சிந்தியுங்கள்!!!!!!!!!!!!)







http://en.wikipedia.org/wiki/Age_of_the_universe

http://imagine.gsfc.nasa.gov/YBA/M31-velocity/hubble-more.html


 இது நாம் ஏற்கெனவே சென்ற வருடம் எழுதிய பதிவு. சகோ இக்பால் தொன்மங்களின் வயது கண்டறிவது பற்றிய பதிவு கண்டவுடன் ,இதையும் பகிரலாம் என தோன்றியது. சான்றுகள் மூலமே அறிவியல் விள்க்கம் வரும். எதையும் ஒருவர் சான்றுகள் இன்றி அறிவியலில் சொல்ல முடியாது.

இங்கு கூட பாருங்கள்.ஒளிப் படிமங்கள் i.e  தொன்மை கால ஒளியின் அடிப்படையிலேயே கணக்கிடப்பட்டது. 

இங்கே பருங்கள் பல விண்மீன் திரட்சிகளின்[galaxies] பெயர்களோடு அவற்றின் விலகும் வெகம் கணித்தலை,ஹூபில் மாறிலி கண்டுபிடித்தலை ஒரு பாடத்திட்ட ஆய்வு ஆக‌ செய்யும் வாஷிங்டன் பல்கலைக கழக சுட்டி.



http://www.astro.washington.edu/courses/labs/clearinghouse/labs/HubbleLaw/hubbles_law_procedure.html




காணொளி பாருங்கள் இன்னும் தெளிவாக புரியும்.சந்தேகம் இருந்தால் விவாதிப்போம் நன்றி

Sunday, November 25, 2012

ராதாநாத் சாமி ஆடுகிறார்,பாடுகிறார், இரசிப்போமா!!!


வணக்கம் நண்பர்களே,
நமக்கு மிக அறிமுகமான் இஸ்க்கான் ஜிபிசி குழுவின் முக்கிய சாமியார் ரிச்சர்ட் ஸ்லாவின் என்னும் பெயர் கொண்ட ராதாநாத் சாமி.நண்பர் ஜெயதேவ் தாசு அவர் பதிவில் இவரைப் பற்றி போற்றி எழுதியதில் இருந்தே நம்க்கு இவர் மீது ஒரு அதீத பாசம் வந்து விட்டது.

சாமியார்கள் என்றால் ஆடல் பாடல் இல்லாமல் இருக்காது என நாம் அறிவோம். ராதாநாத் ஆடுவாரா ,பாடுவாரா என நம் சந்தேகத்தை சில காணொளிகள் தீர்த்தன. மெய்மறந்து ஆடும் காணொளிகளை கண்டு களியுங்கள்!!



நாதாநாத் ஆடுகிறார்




நாதாநாத் பாட பக்த கோடிகள் ஆட்டம்






இப்படி ஆடுவது நமக்கு இயல்பாக தெரியவில்லை. சாமியார்களிடம் ,சாமியார் பக்தர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகிறோம்.
நன்றி!!

Friday, November 23, 2012

உண்மை கண்டுபிடிக்கும் கணிதம்: பேயிஸ் கோட்பாடு[Bayes Inference]-Part 1




வணக்கம் நண்பர்களே,
கணிதம் ,அறிவியல் சார்ந்து பதிவுகள் எழுதி நாளான படியால் இப்பதிவில் ஒரு முக்கிய கணிதக்  கோட்பாடு அறிவோம். இதன் பயன்பாடுகள் மிகவும் அதிகம்.அது என்ன சகோ உண்மையை அறிய ஒரு கணிதமா??. நீங்க சும்மா அடித்து விடுரீங்க  ன் ஆத்திக சகோக்கள் சொல்வதை உண்மையாக்கி விட்டீர்களே என்கிறீர்களா?

உண்மை கண்டுபிடிக்க ஒரு கணித கோட்பாடு இருக்கிறது என நான் சொல்வது உண்மை என நிரூபிக்க வேண்டுமா?

ஒரு செய்தியை பலர் பலவாறு கூறினாலும் நாம் பலமுறை எது சரியாக இருக்கும் வாய்ப்பு என எப்படி அறிகிறோம்??.

அறிவியலில் (ஏற்கப்படும்) உண்மை என்றால் என்ன?

ஒரு நிகழ்வின் மீதான அளவீட்டு சான்றுகள் கொண்டு  விளக்குவதற்கு பல கொள்கையாக்கங்கள் சாத்தியப் படும். இபோது எந்த விளக்கம் அதிகம் பொருந்துகிறது எனபதே அறிவியலின் படி உண்மை என ஏற்கப்படும். எப்படி அது கண்டுபிடிக்கப்படுகிறது?

நாம் அறிவியலில் ஏற்கப்படுகிறது,அது பல்கலைக் கழகங்களில் கற்பிக்கபடுகிறது என பரிணாமத்தை பற்றிக் கூறினாலும் அதெல்லாம் சும்மா என  மறுக்கும் சகோக்களை விட்டு விடுவோம்நம் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் கற்கும்  (உண்மையிலேயே சிந்திக்கும்) சகோக்களுக்கும் எப்படி ஒரு நிகழ்வின் விளக்கத்தில் அதிகம் பொருந்துவது கண்டுபிடிக்கப்படுகிறது என்ற சந்தேகம் வந்தே ஆகவேண்டும்.

எப்போதும் எதையும் கேள்வி கேட்கும் சிந்தனை வருவதே அறிவின் பரிணாமவளர்ச்சி என்கிறோம். தெளிவாக அறிந்த ஒன்றை இன்னொருவருக்கும் விளக்கும் திறன் பெற வேண்டும். குழப்பங்களையும் ,பிரச்சினைகளையும் தலைமுறைரீதியாக கடத்தும் செயல்கள் இயற்கைத் தேர்வில் வெற்றி பெறுவது இல்லை என்பது வரலாறு கூறும் உண்மை.

ஆகவே இப்படி கோட்பாடுகளின் பொருந்தும் தன்மையை சான்றுகள் மீது , நிகழ்த்கவு கொண்டு ஆராயும், முடிவு சொல்லும் கணித முறை உண்டு.

பயேஸியன் யூக முறை[Bayesian inference] என்பது இதன் பெயர்.

இது அறிய கொஞ்சம் நிகழ்தகவு[probability] கணிதம் அறிய வேண்டும்.
ஒரு நாணயம் கீழே கிடக்கும் போது உள்ள இருவாய்ப்புகளில்[தலை,பூ] ஏதோ ஒன்று நிகழலாம்.
உள்ளமொத்தவாய்ப்புகள் =2,
தலை விழும் வாய்ப்பு 1
ஆகவே தலை விழும் வாய்ப்பு =1/2. ஒரு நிகழ்வின் சாத்தியக் கூறை எண் அளவில் [quantitative] கூறுவதே நிகழ்தகவும். இது பூச்சியத்தில் இருந்து 1 வரை உள்ள பின்ன மதிப்பு ஆகும்.
A என்னும் நிகழ்வின் நிகழ்தகவு P(A) என குறிப்போம்.
0≤P(A)≤1
P(A)=
நிகழ்தகவு 0 எனில் அந்த நிகழ்வு நடக்காது. நிகழ்தகவு 1 எனில் நிகழ்தகவு உறுதியாக நடக்கும்.
இதே ஒரு பகடை உருட்டும் போது  எண் '1' விழும் வாய்ப்பு 1/6
எண் 3 விழும் வாய்ய்பு 1/6

வாழ்வின் பல நிகழ்வுகளில் நாம் விரும்பும் வாய்ப்புகள் சில உண்டு. அதில் ஏதெனும் ஒன்றுவந்தால் ஏற்றுக் கொள்வோம். இப்படி இரு அல்லது அதற்கு மேற்பட்ட ஏடோ ஒன்று நிகழும் நிகழ்த்கவை எப்படி கண்டுபிடிப்பது?

இத்னை கணித மொழியில் சேர்ப்பு(union) என்கிறோம். சேர்ப்பு என்றால் கூட்டல்தான்,தனிப்பட்ட நிகழ்த்கவுகளை கூட்டினால் போகிறது என்கிறீர்களா??

இது  பலமுறை உண்மை ஆகாது,

இபோது பகடையில் எண் 1 விழுந்தால் எண் 2 இருக்காது. இரண்டும் ஒன்றை ஒன்று சராத நிகழ்வுகள்.[mutually exclusive].

ஆனல் சில நிகழ்வுகளில் இரு செயல்களும் நிகழும் பொதுவான விடயமும் இருக்கும். இயற்கையில் ஒவ்வொன்றும் தொடர்புடையதே. தொடர்பின் அளவு மாறலாம்.

ஆகவே இரு அல்லது மேம்பட்ட  செயல்களில் ஏதோ ஒன்றாவது நிகழும் நிகழ்தகவு அறிவோம்.
முதலில்A,B  இருசெயல்கள் மட்டும் அறிவோம்.பிறகு பொதுப்படுத்தலாம்.

P(A)=A  நிகழும் வாய்ப்பு
P(A')=அல்லாதது  நிகழும் வாய்ப்பு
Compliment of Set A
P(A)+P(A')=1
ஒரு செயலின் நிகழும் வாய்ப்பும்,நிகழா வாய்ப்பும் ஒன்றுக் கொன்று எதிரானவை.
P(B)=B  நிகழும் வாய்ப்பு
P(B')=B அல்லாதது  நிகழும் வாய்ப்பு

P(AUB)=P(A)+P(B)-P(A∩B).....                                                (1)
P(AUB)= A அல்லது B  நிகழும் வாய்ப்பு.

Union of Set A and Set B diagram
P(A∩B) = A மற்றும்  B  இணைந்து நிகழும் வாய்ப்பு.
Intersection of Set A and Set B




மேலெ காட்டப் பட்ட படத்தை நன்கு உள்வாங்கி கொள்ளுங்கள்.என்ன சந்தேகம் என்றாலும் கேளுங்கள்.இரண்டுக்கு மேற்பட்ட விடயங்களுக்கும் கீழே காட்டிய படி இப்படம் விரிவு படுத்தப் படலாம் என்றாலும் நாம் இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாம்[இதில் உள் குத்து எதுவும் இல்லை ஹி ஹி] என ஏற்று எளிமையான‌ நோக்கில் கற்போம்.



இப்போது ஒரு எ.கா பார்த்து விட்டு அடுத்த பகுதிக்கு செல்வோம்.
ஒரு பகடை ஒருமுறை உருட்டும் செயலை எடுப்போம்.

மொத்த நிகழ்வுகள் E ={1,2,3,4, 5,6}. மொத்தம் 6 வாய்ப்புகள் n(E)=6.

 A என்பவருக்கு பிடித்த வாய்ப்புகள் ={1,2,3} i.e n(A)=3

 B என்பவருக்கு பிடித்த வாய்ப்புகள் ={2,4,6} i.e n(B)=3

என எடுப்போம்.மேலே கற்ற அனைத்து செயல்களின் நிகழ்தகவை கண்க்கிடுவோம்.

P(A)=n(A)/n(E)=3/6

P(A')=1-3/6=3/6,,,...A'=[4,5,6]

P(B)=n(B)/n(E)=3/6,

P(B')=1-3/6=3/6,,...B'=[1,3,5]

AUB=[1,2,3,4,6] n(AUB)=5
[பொதுவான உறுப்பு '2' ஒருமுறை மட்டும் எழுதினால் போதும்]

P(AUB)=5/6

பொதுவான உறுப்பு

(A∩B) =[2]...n(A∩B)=1

P(A∩B)=1/6


சமன்பாடு (1) ல் பிரதி இட்டு பரிசோதித்தால் இது சரிபார்க்கப்படும்.

P(AUB)=P(A)+P(B)-P(A∩B)

5/6=3/6+3/6-1/6


இது என்ன சகோ கம்ப சூத்திரம் சேர்ப்பில் பொதுவானதை ஒருமுறை மட்டுமே இட்டோம், வெட்டில் பொதுவானதை மட்டும் இட்டோம்.தனித்தனியாக் கூட்டும் போது பொதுவானது இருமுறைவரும்,அதில் வெட்டை கழித்தால் சேர்ப்புதானே வரும்.

அப்போது சரியாகத்தானே வரும். ஆம் சகோ இப்படி நாம் செய்யும் செயலைத்தான் கணிதம் ஆக்குகிறோம். இயற்கை(மனிதன்) செயல்களை விளக்குவதே அறிவியல்.சும்மா கண்ட (மொழி) எழுத்துகள்,சூத்திரம்,குழப்பமான விளக்கம் போட்டு சாமான்ய மக்களை புரியவிடாமல் செய்யும் மேட்டுக்குடியினரின் சதி சகோ!!!

இங்கும் அப்படியா என்றால் அப்படித்தான். ஹி ஹி


சரி இப்போது  நிபந்தனை நிகழ்தகவு[Conditional probability] என ஒன்று அறிவோம்,அதாவது இரு செயல்கள், ஒரு செயல் B நடந்து இருக்கும்போது அடுத்த செயல் A நிகழும் நிகழ்தகவே இது  P(A/B)என குறிக்கப்படுகிறது.இது ஒன்னுமில்லை சகோ, ஒரு செயலில்,[அடுத்த செயலுக்கு] பொதுவான செயல் எவ்வளவு எனப் பார்க்கிறோம்.

Conditional probability

Conditional probability is the probability of some event A, given the occurrence of some other event B. Conditional probability is written \mathrm{P}(A \mid B), and is read "the probability of A, given B". It is defined by[18]
\mathrm{P}(A \mid B) = \frac{\mathrm{P}(A \cap B)}{\mathrm{P}(B)}.\,


P(A/B)=(1/6)/(3/6)=1/3


P(B/A)=(1/6)/(3/6)=1/3


P(AUB)=P(A/B)+P(B/A)+P(A∩B)=1/3+1/3+1/6=5/6!!!!!


இது எப்படி வந்தது??

சிந்திக்க மாட்டீர்களா???

கற்ற அனைத்து விடய‌ங்களும் சுருக்கமாக


Summary of probabilities
EventProbability
AP(A)\in[0,1]\,
not AP(A^c)=1-P(A)\,
A or B\begin{align}
P(A\cup B) & = P(A)+P(B)-P(A\cap B) \\
P(A\cup B) & = P(A)+P(B) \qquad\mbox{if A and B are mutually exclusive} \\
\end{align}
A and B\begin{align}
P(A\cap B) & = P(A|B)P(B) = P(B|A)P(A)\\
P(A\cap B) &  = P(A)P(B) \qquad\mbox{if A and B are independent}\\
\end{align}
A given BP(A \mid B) = \frac{P(A \cap B)}{P(B)}\,



சரி நிபந்தனை நிகழ்தகவில் இருந்தே பயேசியன் யூக முறை கற்க வேண்டும்.
அடுத்த பகுதியில் பார்ப்போம்.கேள்விகளுக்கு விடை அளிக்க காத்திருக்கிறோம்.

நன்றி!!!
Thanks to
http://unconsideredtrifles.blogspot.com/2010/08/operations-on-crisp-sets.html

http://en.wikipedia.org/wiki/Probability

Wednesday, November 21, 2012

நாத்திகம் ஆத்திகம் ஒரு எளிய விளக்கம்



வணக்கம் நண்பர்களே,
நாத்திகம் ,ஆத்திகம் என்றால் நன்கு அறிந்த வியம்தானே இதில் என்ன எளிய விள்க்கம் என்கிறீர்களா!!. தமிழ்நாட்டில் நாத்திக இயக்கங்கள் பல காலமாக செயலாற்றி ஆட்சியை கைப்பற்றினாலும், கோயில்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. புதிதாக சாமியார்களும் , மத பிரச்சாரங்களும் ஒவ்வொரு இடத்திலும் இணையத்திலும் எதிரொலிக்கிறது. ஆகவே ஏன் இப்படி சூழல் நிலவுகிறது என்பதை அறிய வேண்டும்.

நாம் நாத்திகம் ஆத்திகம் என்பதை எளிதில் விளங்குவோம்.

நாத்திகம் என்பது சமஸ்கிருத நாஸ்திக் என்னும் சொல்லின் தமிழ் வடிவம்,தமிழாக்கம் என்றால் இறை மறுப்பாளர் என் பொருள் கொள்வோம்.ஆனால் முதலில் நாஸ்திக் என்றால் நான்கு வேதங்களை ஏற்க மறுப்பவனே என்ற பொருளில்தான் பயன்படுத்தப் பட்டது.
 nastika refers to the non-belief of Vedas rather than non-belief of God.[5] However, all these schools also rejected a notion of a creationist god and so the word nastika became strongly associated with them.

இந்த வரையறையில் பார்த்தால் ஆத்திகர்களில் பல வகைகள் உண்டு என்பதும்,ஒரு குழுவிற்கு ,மற்றவர் அனைவரும் நாத்திகரே எனப்புரியும்.ஆத்திகர் என்பதும் சமஸ்கிருத ஆஸ்திக் என்னும் சொல்லின் தமிழ் வடிவமே, இறை நம்பிக்கையாளர் என தமிழாக்கம் செய்யலாம்.

The Sanskrit term Āstika ("pious, orthodox") refers to the systems of thought which admit the validity of the Vedas  Technically, in Hindu philosophy the term Āstika refers only to acceptance of authority of Vedas, not belief in the existence of God.

ஆனால் இங்கும் ஆத்திகர் என்பது வேதங்களை ஏற்பவனே தவிர இறை நம்பிக்கையாளன் அல்ல!!!.
ஒரு சொல்லின் பயன்பாடும் பரிணாம வளர்ச்சி அடையும் என்பதால் ,அவற்றின் பொருளும் மாறுவதில் வியபில்லை.
சரி இப்போது ஆத்திகர் என்றால் என்ன சொல்ல‌லாம்
சில புத்தகங்கள்,சில மனிதர்களின் இயற்கைக்கு மேம்பட்ட செயலை ஏற்பவர்கள் எனலாம்.
நாத்திகர் என்றால் இயற்கைக்கு மேம்பட்ட செயல் எப்போதும் சாத்தியம் அற்றது   என  ஏற்பவரே.
நாத்திகம் என்பதே இயற்கையியல் எனலாம்.


காணொளியின் வாக்கியங்களை தமிழாக்கம் செய்கிறேன்.
1..நம் முன்னால் ஒரே ஒரு உலகமே அறிவியலால் வரையறுக்கப் பட்டதாக உள்ளது என்பதை புரிந்து அறிவோம்.இதில் நாமும் ஒரு அங்கமே!!!
[அதாவது வேறு உலகங்கள் சொர்க்கம் ,நரகம் உள்ளிட்டு இல்லை]

2. இயற்கையியல்[naturalism] என்பது ஒரு வாழ்வியல் தத்துவம்,வழிகாட்டி ஆகும்.இது அதி இயற்கையியல்[super naturalism] என்னும் இயற்கைக்கு மேம்பட்ட செயலின் எதிர் தத்துவம் ஆகும்.

3. நமக்கு ஆன்மா உள்ளது என்பது நம்மிடையே உள்ள பொதுவான ஆத்திக கருத்து. பவுத்தம் போன்ற சில நாத்திக கொள்கைகளும் இத்னை ஏற்கின்றன.

ஆனால் இது நம்பிக்கையின் மீது மட்டுமே அமைந்த வாழ்வியல் தத்துவம் ஆகும். இதனை பரிசோதிக்க முடியாது. உயிர்(ஆன்மா) என்பதும் உடலின் ஒரு தன்மையே . இதுவே மனிதன் மீதான இயற்கையியல் சார்ந்த பார்வை ஆகும் .

4. நாம் யார் என்பது தத்துவத்தின் அடிப்படைக் கேள்வி ஆகும். பிரபஞ்சத்தில் உள்ள பொருள்கள் ஒன்றுடன் ஒன்று வினை புரியும் விதத்தை விதிகளாக சான்றுகள் மூலம் நாம் வரையறுக்கிறோம். இந்த விதிகளும் எல்லைகளுக்குட்பட்டவை.நமது   சான்றின்   எல்லைகள் விரிவடையும் போது விதிகளும் மாறும்.
எ.கா நாம் பூமியை தாண்டி எதையும் அளவிட முடியாமல் இருந்து இருந்தால் நியுட்டனின் விதிகள் மட்டுமே இயக்கவியல்,ஈர்ப்பு விசைக்கு போதும்.ஆனால் அதையும் தாண்டி பல ஒளி வருடங்க்ள் தொலைவில் உள்ள பொருள்களை அளவீட்டு சான்றுகள் ஆக்க முடியும் போது  ,அச்சான்றுகளை விளக்க ஏதுவாக ஐன்ஸ்டின் தனது அறிவியல் விதியை வடிவமைத்தார்.

சான்றுகளின் மீதே அறிவியல் விதிகள் கட்டமைக்கப் படுகின்றன.அறியும் இயற்கையின் எல்லைக் கேற்ப விதிகளும் மாறுகின்றன.

ஆகவே இயற்கை என்பதும் நம் அறியும் திறனுக்கேற்ப விரிவடைகிறது.அளவீட்டு சான்றுகளால் அளவிட முடியும் எதுவும் இயற்கையே!!.

மனிதன் உள்ளிட்ட‌ உயிரினங்களின் மாற்றங்களுக்கும் விதிகள் உண்டு. நாம் இயற்கையின்   ஒரு அங்கமாக இணைந்து இருக்கிறோம். இது எதார்த்தமான உண்மையே அன்றி மாய தொடர்பு அல்ல.

சில எறும்புகள் ஒரு பெரிய ரொட்டித் துண்டை   இழுக்கும் போது,ஒவ்வொன்றும் ஒரு திசையில் இழுத்தால், ரொட்டி முடி்வு திசையில் நகரும்.அனைவருக்கும் எதிரான அனைவரின் போராட்டம் என்பதற்கு இந்த எ.கா நன்கு பொருந்தும்.

இயற்கையோடு வாழும் வாழ்வில் சில போட்டிகள்,வாழ்வதற்கான போராட்டம்,சூழலுக்கேற்ற மாற்றம் என்பதே நமது பரிணாம வரலாறு ஆகும். [இதை சொல்பவர் கார்ல் சேகன்].

இபோது நம் ஆத்திக சகோக்கள் வைக்கும் வாதம் எல்லாம் படைப்பு என்றால் படைப்பவன்,இருந்தாக வேண்டும்.[First cause argument]

விதிகள் இருப்பதால் இதனையும் அறிவார்ந்த சக்தி(கள்) ஒழுங்காக நமக்காக வடிவமைத்து இருக்கிறது[Fine tuning argument]. என்பதைத் தவிர நாத்திகர்களுடன் விவாதத்தில் வைக்க மாட்டார்கள்.

ஆனால் தங்களைப் பின்பற்றுப‌வர்களிடம் இது சரி அது தவறு சட்டம் போட்டு, அது ஆட்சி அதிகாரச் சட்டமும் ஆ(க்)கும் அபாயமும் இருக்கிறது. சில மத ஆட்சி நாடுகளில் பிற மதங்கள் தடை செய்யப் படுகின்றன.மத் ரீதியாக பாரபட்சம் சட்டங்களில் உண்டு. அதையும் சிலர் [தமிழ் பதிவுலகிலும்] நியாயப் படுத்துகிறார்.

இயற்கை என்பது ஒரு தொடர் இயக்கத்தில் இருக்கிறது நாம் கடந்த கால்த்தின் நிகழ்வுகளை சான்றுகள் மூலம் பொருந்தும் விளக்கம் கொண்டே கணிக்கிறோம். சான்றுகள் இல்லாக் காலத்தை நம்மால் கணிப்பதில்   பல சிக்கல்கள் உண்டு.

உயிரின தோற்ற வளர்ச்சியை பரிணாம கொள்கை விளக்குகிறது, அனைத்து உயிரின‌ங்களும் 350 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்து ஒரு செல் உயிரிகளில் இருந்து கிளைத்து தழைத்வையே. மனிதன்(ஹோமோ சேஃபியன்) பரிணமித்தது 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன், மனிதனும் ,சிம்பன்சியும் ஒரே முன்னோரில் இருந்து 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பிரிந்தனர். ஹோமோ என்னும் பேரினத்தில்[genus] சுமார் 20 மனித இனங்கள் தோன்றி,அதில் ஹோமோ சேஃபியன் மட்டும் இன்றுவரை வாழ்கிறோம். மனிதன் 20,000 ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் அறிந்து ஒரே இடத்தில் வாழ முற்பட்டான்.அதன் பிறகே இந்த நாகரிகம்,மதம்,அரசியல் வரலாறு அனைத்துமே!!!.


நாம் நம்மால் எது சரியாக அறிய இயலுமோ அதனை ஒத்துக் கொள்வதும், இப்போதைய விடை தெரியா விடயங்களை அறிய முயல்கிறோம் என்பதே உண்மை. அறிந்த பின் அது இயல்பான விடயம் ஆகி விடுகிறது.

அப்படி அறிவால்   அறிந்த உண்மைகளை அன்றே வேதத்தில் கூறினார் ஆதிமூலம் என்னும் (பொய்)பிரச்ச்சாரம் ஒரு ஏமாற்று வேலையே.

வேதங்கள் தோற்றம் பற்றிய கதைகளுக்கும் வரலாறு,மொழியியல்,அகழ்வாய்வு சான்றுகள்   இல்லை.இதனை உணர்ந்தாலே மதபுத்தகங்கள் மதிக்கப் படாது.

ஆத்திகர்களில் மத புத்தகவாதிகளே முழு மூச்சாய் எதிர்க்கப் பட வேண்டியவர்கள். மத புத்தக்ங்களில் ஒரு குழுவை உயர்வாகவும்,இதர குழுக்களை மோசமானவர்களாகவும் காட்டி ,தன‌து குழுவை இறைவன் தேர்ந்தெடுத்தார் என்பதுதானே  இன்றுவரை வன்முறை மத்திய கிழக்கில் நடக்க காரணம்.

தன்னை வணங்காதவர்களை நித்திய நரகத்தில் இட்டு பொசுக்குவேன் என்பவர் மத சார்பின்மை ஜனநாயக்த்தில் நம்பிக்கை இல்லாதவ்ர் அல்லவா!! ஹி ஹி

இப்படிப்பட்ட கடவுளை நம்புபவர்கள் எப்படி மத சார்பின்மை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டு ஏற்பர்?தங்களின் பாரபட்ச மத சட்டம் அமல்படுத்த வழியில்லை எனப்போடும் வேடம் இது.
***************
நாத்திகம் என்பது சான்றுகள் அடிப்படையில் பரிசோதித்து மட்டுமே உண்மைகளை ஏற்பது.

உண்மை என்பது   ஒன்றை ஒன்று சாராத பல பரிசோதனைகளில்,மாறும் சூழலுக்கும்  வெற்றி பெற வேண்டும்.

சான்றுகளுக்கு பொருந்துவதே உண்மை.
  
ஆத்திகம் என்பது அம்மத நம்பிக்கையாளருக்கு ஊக்கமூட்டும் ஒரு தத்துவம் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. அவர்கள் பிறரை விட  கடவுளினால்   விரும்பப் பட்டு ஏற்கப்படுவதாக நினைக்கிறார்கள்.வாழும் சூழலுக்கு தகுந்த்வாறு போடும் இரட்டைவேட முகமூடிகள் கோமாளித்தனம் போல் தெரிந்தாலும் ஆபத்தானது.!!!

மரணத்திற்கு பின்னும் இன்ப வாழ்வு வாழ நினைக்கும் கொள்கைகளை நகைச்சுவை என்று மட்டுமே சொல்வோம்.

ஆத்திகர்கள் தங்கள் மதத்திற்காக எதையும் செய்யும்,நியாயப் படுத்தும் மனநிலையில் இருக்கிறார்கள் என்பது நாம் நடத்திய விவாதங்களில் நன்கு புரியும்.

ஆத்திகர்கள்  இணைவதாக நடிப்பதே அவர்களின் கொள்கையில் உண்மையில்லை என்பதை உணர்ந்து இருப்பதையே காட்டுகிறது. அனைத்து மதங்களும் ஒன்றுதான் என நம் பதிவுலக வஹாபி   சகோக்கள் சொல்லி விட்டால் நம்வேலை பாதி முடிந்தது.

நாம் மதங்களை எதிர்ப்பது இரு காரணங்களுக்காக மட்டுமே!!

1. அதி இயற்கையியல்[Super natural இய‌ற்கைக்கு மேம்பட்ட சக்தியை அறிதல்,சாதகமாக செயல்பட வைத்தல்] என சொல்லி ஏமாற்றுதல்.

2. மத அடிப்படை அரசியல‌மைப்பு சட்டங்கள்.

சரி எல்லோரும் நாத்திகர் ஆவது கடினம் என்பதால் ஆத்திகர் (உலக முழுதும்) இப்படி இருக்க வேண்டும் என்பது நம் விருப்பம்.
.
ஆத்திகத்தில் தத்துவம் இருக்கிறது, அது காட்டும் வாழ்வுமுறை பிடித்திருக்கிறது, அரசு அமைப்பில் ஜனநாயகம்,மத சார்பற்ற மனித உரிமைச் சட்டங்களே வேண்டும் என்னும் ஆத்திகர்கள் மட்டும் உருவானால் மகிழ்ச்சி!!!

நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் மிக குறைவே.உலக ஆத்திகர் அனைவரும் இணைந்து வந்து நம்மோடு  விவாதித்தாலும் சரியே!!
ஆனால் சான்றுகள் அடிப்படையில் மட்டுமே விவாதிப்போம்.
கேள்விகள் விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன..

டிஸ்கி: ஒரு மிகப் பெரிய தன்னிலை விளக்கமும் சில சமூக பிரச்சினைகள் சார்ந்து கொடுப்பது அவசியம் ஆகிறது. விவாதத்தில் வரும்  கருத்துகள் சார்ந்து முயற்சிப்போம்.
நன்றி

Monday, November 19, 2012

இஸ்க்கான் மர்மங்கள் விளக்கும் ஆன்மீகவாதி யார்?

Radhanatha Swami is a GURU Fraud
வணக்கம் நண்பர்களே,
நாம் மதங்களை விமர்சிப்பதில் பாரபட்சம் காட்டுவது கிடையாது.அதிலும் வாழும் மனிதர்களை மனிதப்புனிதன் என்று இவரை கண்டு ,வழி காட்டுதலின் படி நட‌ந்தால் பிறவிப்பயனையே அடைவாய் என்னும் பிரச்சாரம் பல மனிதர்களை ஆபத்தில் கொண்டு செல்கிறது.

இஸ்க்கான் அல்லது கிருஷ்ன பக்தி இயக்கம் என்பதன் ஆதரவாளர் தனது கருத்துக்களை முன் வைக்கும் போது அதற்கு மறுப்பு சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம். சரி என்ன சொல்கிறார்?

http://jayadevdas.blogspot.com/2012/11/blog-post_11.html

1. ரிச்சர்ட் ஸ்டீவன்ஸ் என்னும் அமரிக்கர் பல மதங்களை ஆய்வு செய்து இறுதியில் கிருஷ்ன பக்தி இயக்கத்தில் துறவி ஆனார்.
பல நாடுகளுக்கும் சென்று இருக்கிறார்.

2. பல பிரபல‌ங்களுடன் புகைப்படம் எடுத்து உள்ளார்.

3. ஒரு மாணவனின் விவரமில்லாத கேள்விக்கு அதே அளவில் பதில் சொல்லி இருக்கிறார்.

எல்லாரும் ஒரே வேலையை செய்ய முடியாது என்ற விடயத்தை கண்டுபிடித்ததுதான்  விடயமாம். சரி ஆன்மிகவாதிகளுக்கு இப்படி பேசித்தானே பலரையும் குழப்பி கவிழ்க்கிறார்.

பல மதங்களையும் ஆய்வு செய்து கிருஷ்ன பக்தி இயக்கத்திற்கு மாறினார் என்றால் ,பிற மதங்களை விட கிருஷ்ன பக்தி இயக்கம் எப்படி சிறந்தது என்பது  பற்றி எதுவும் புத்தங்களில் எழுதியது உண்டா? நாம் பார்த்தவரை தெரியவில்லை.இவரைப் பற்றியே பல எதிர் விமர்சனங்களும் இணையத்தில் வலம் வருகின்றன். 

http://www.harekrsna.org/gbc/black/radanath.htm



 இதில் ஜெயதேவ் தாஸ் இவரை ஆதரித்து எழுதுவதால் இஸ்க்கான் மீது நம்பிக்கை கொண்டவ்ராக இருக்க்லாம். எனினும் மதவாதிகளின் எதையும் வெளிப்படாமல் பேசும் தன்மைக்கு அவரும் விதிவிலக்கா??

தான் என்ன கொள்கை என்று சொல்லாமல் அனைத்து கடவுள் நம்பிக்கையாளர்களை திரட்டுகிறேன் என பதிவு போடுகிறார்.

செய்ய வாழ்த்துக்கள். ராதாநாத் சுவாமிகள் என்னும் நிச்சர்ட் ஸ்டீவன்ஸ் நல்லவர்,வல்லவர் என நிரூபிக்கும் பொறுப்பு ஜெயதேவ் தாசுக்கு மட்டுமா இல்லை ஆத்திகர் அனைவருக்குமா என சிந்திக்க வேண்டுகிறேன்.



பதிவின் தொடக்கத்தில் சொன்ன முகப் புத்தகம் link ஒரு எ.கா. ஏன் இவர் மீது எதிர் விமர்சனங்கள்,செய்பவர்கள் யார் என்பதை அறிய கொஞ்சம் காலம் பின்சென்று இந்த இயக்கத்தின் வரலாறு அறிய வேண்டும்.

***********
கிருஷ்ன பக்தி இயக்கம் என்பது ஒரு வைணவ பக்தி இயக்கமாக திரு பிரபுபாத என்பவரால் 1965 ல் அமெரிக்க நுயு யார்க நகரில் தொடங்கப்பட்டது.ஸ்ரீமத் பாகவதம்,பகவத் கீதை இரு நூல்களின் மீதான ஆன்மீக விளக்கமே இதன் தத்துவ பின்புலம் ஆகும்.இது கவுடிய வைணவம் என்னும் 16ஆம் நூற்றாண்டு நம்பிக்கையின் தொடர்ச்சி எனலாம். இது விஷ்ணு என்னும் கடவுளின் அடிப்படையான் கிருஷ்னரை ஓரிறையாக ஏற்கும் இயக்கம் ஆகும்.



Chaitanya Mahaprabhu((1486–1534)
http://en.wikipedia.org/wiki/Chaitanya_Mahaprabhu
 His line of followers, known as Gaudiya Vaishnavas, revere him as an Avatar of Krishna in the mood of Radharani who was prophesied to appear in the later verses of the Bhagavata Purana.


15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைதன்ய மகாபிரபு எனவரி கிருஷ்னரின் அவதாரமாக் ஏற்கின்றார்கள் இஸ்க்கான்.இவரைப் பற்றி பாகவத புராணத்தில் முன் அறிவிப்பு இருப்பதாகவும் கூறுகின்றார்கள். சரி அவதாரம் என்றால் அப்படித்தான் சொல்ல வேண்டும்.
[இப்போது ஏன் நண்பர் ஜெயதேவு தாசு இஸ்லாமைக் கூட சில சமயம் ஆதரிப்பது போல் கருத்திடுகிறார் எனப்புரியும்.]  


Bhaktivedanta Swami considered MosesJesus, and Mohamed to be empowered representatives of God, describing them within his writings as pioneers of the same essential message of dedication to God with love and devotion.[62]
"Actually, it doesn't matter – Krishna or Christ – the name is the same. The main point is to follow the injunctions of the Vedic scriptures that recommend chanting the name ofGod in this age." [63]



இப்போது உலக முழுதும் 400 மையங்கள், மில்லியன் கண்க்கில் உறுப்பினர்கள், 50 பள்ளிகள்,90 உணவகங்கள் என செழித்து வளர்ந்து இருப்பது கண்கூடு.



சரி என்ன சொல்ல வருகிறோம்?. கிருஷ்ன பக்தி இயக்கத்தின் நிறுவனரான பிரபுபாத மறைவுக்குப் பின் இயக்கம் 11 வெள்ளையர்கள் கொண்ட குழுவால் வழிநடத்தப்பட்டது. இது  ஜிபிசி என அழைக்கப்ப்ட்டது .பல சர்சைகளிலும் கொலை,பாலியல் குற்றசாட்டுகள் என பல் பிரச்சினைகளுக்கு உள்ளாகி அமெரிக்க நீதிமன்றத்தில் பல வழக்குகள் நடைபெற்றன.

இச்சூழலில் பெங்களூரு இஸ்கான் மையத்திற்கும்,ஜிபிசி குழுவிற்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இந்திய நீதிமன்றத்திலும் எதிரொலித்தது. அது பற்றிய தொலைக்காட்சி காணொளி பாருங்கள்!!!






இரு குழுக்களும் ஒன்றின் மீது ஒன்று சரமாரி குற்றசாட்டுகள் சொல்வதைப் பாருங்கள். ராதானந்த ஸ்வாமி எனப்படும் ரிச்சர்ட் ஸ்டீவன்ஸ் GBC குழுவில் ஒருவர்.


ஆகவே இப்படி சர்சைக்குறிய ஸ்வாமிகளைப் போற்றிப் பதிவெழுதுவது தவறே. அப்படி எழுதுவது என்றால் அந்த குற்றசாட்டுகளுக்கும் பதில் அளிக்க முடிபவரே எழுத வேண்டும்.



Radhanath Swami helped murder Sulochana dasa


http://www.harekrsna.org/gbc/black/radanath.htm

ஆன்மீகம் என்பது ஒருவரின் தனிப்பட்ட தேடலாக இருப்பதற்கும்,இப்படி சர்ச்சைக்குறிய அமைப்புகளில் சேர்ந்து பிரச்சினைகளுக்கு உள்ளா
வதும் வெவ்வேறு.


இந்த குற்றசாட்டுகளின் மீது ஜெயதேவ் தாஸ் ஒரு பதிவு எழுத வேண்டுகிறோம். பிறகு நாம் அலசுவோம். ஏன் இப்போதே எழுதவில்லை என்றால் ,நான் அவர் சொன்ன நல்ல கருத்தை மட்டும் சொன்னேன் என சம்மர்சால்ட் அடிப்பார் என நாம் அவதானிப்பதால் மட்டுமே.

தாஸ் இக்க்கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும்.

சுலோச்சனா தாஸ் கொலை ஏன் நிகழ்ந்தது?

கிர்த்த்னாந்தா இதில் தொடர்பு உடையவரா?

ராதாநாத் இது விடயமாக நீதுமன்ற விசாரனைக்கு உள்ளானாரா?

தாஸ் பதில் அளிக்கும் பட்சத்தில் இன்னும் தொடர்வோம்.

வேதம்,யோகம்,தவம் என பிதற்றும் சாமியார்களின் செயல்கள் அறிந்த பின்னும் அருகில் செல்வது எவருக்கும் ஆபத்தான விடயம் என்ற நோக்கிலேயே எழுதுகிறோம்.

தாஸ் தனது தனிப்பட்ட ஆன்மீக தேடலை பகிர்ந்தால் அதனையும் கருத்துரீதியாக் எதிர்கொள்வோம்.

ஆனால் ஒரு சர்ர்சைக்குறிய சாமியாரை,அமைப்பை நல்லவிதமாக சித்த‌ரிப்பதால் எதிர்வாதம் வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறோம்.

ஆகவே  பொறுமையாக உங்களின் ஆன்மீக கருத்துகளையும் வெளிப்படையாக விவாதிப்பதும்,பரிசோதிப்பதும் தவறில்லை.

மறைத்து  வெளிப்படையாக விவாதிக்காமல் எதையோ நோக்கி கொண்டு செல்லும் எந்த செயலும் கண்டிக்கத் தக்கது!!!



விடை தெரியா கேள்விக்கு வித்தகனே காரணம் என்னும் வாதத்தை சான்றுகள் அடைப்படையில் நிராகரிக்கிறோம். அதே போல் இந்த சாமியார்களையும் அவர்களின் நடவடிக்கைகளின் மீதான சான்றுகளால் நிராகரிக்கிறோம்.

சான்றுகளின் அடிப்படையற்ற நம்பிக்கை ஆபத்தானது!!!

ஒருவன் நாத்திகன் ஆனால் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உடபட்டு வாழ்ந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. மறுமை வாழ்வு என்பதை ஏற்பது இல்லை என்பதால் 

1. அபிரஹாமிய கோட்பாட்டின் படி நித்திய நரகம்

2. இந்து,பவுத்த,சமண கோட்பாடுகளின் படி  கர்மபல்னுக்கேற்ற மறு பிறப்பு

அவ்வளவுதான். இபோது பாருங்கள் ஜெயதேவு தாசுக்கும் அவரின் நம்பிக்கைப்படி மறுபிறவிதான், நாத்திகருக்கும் அதேதான்.

ஆகவே தாசுக்கு ஆபிரஹாமிய கோட்பாட்டின் படி தோலை மாற்றி,மாற்றி கருக்கும் நரகமே கிடைக்கும்.நாம் நம்புவது இல்லையே!! ஹி ஹி

எனினும் இந்த கர்மபலன் என்னும் கோட்பாடு தவறு என சார்வாகம் அழுத்தம் திருத்த்மான் வாதங்கள் வைக்கிறது. அது பற்றியும் எழுதுவோம்.



சாமியார்கள் ஜாக்கிரதை!!!!!!!!!


நன்றி