Thursday, November 15, 2012

பாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்கள் வில்லன்களே!!





வணக்கம் நண்பர்களே,
நம்க்கு திரைப்படம் பார்ப்பதில் ஆர்வம் இருந்தாலும் ,பள்ளி கல்லூரிகளில் நண்பர்களோடு கூட்டமாக சென்று பார்த்த ஈடுபாடு இபோது இல்லை. வரும் படங்களும் பல ஏதோ சுமார் அளவுக்கே இருக்கின்றன. அதிலும் குடும்பத்தோடு திரைப்படம் செல்வதென்றால் 1000 ரூ ஆகி விடும் போல் தெரிகிறது.

தமிழர்கள் திரைப்படம் பார்த்தே தங்களை ஆள்பவர்களைத் தேர்ந்தெடுக்கும் அருமையான அரசியல் சிந்தனை முறை கொண்டவர்கள் என்பதால் படம் அவ்வப்போது பார்ப்பதும் உண்டு.பதிவுலக சகோக்கள் எழுதும் விமர்சனங்களை படித்து விட்டே ஒரு படம் பார்க்கலமா என முடிவு செய்வேன்.

அந்த வகையில் துப்பாக்கி படம் பார்க்கலாம் என முடிவு செய்தால் நம்ம அன்புக்கும் பாசத்துக்கும் உரிய சகோக்கள் அதற்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். ஆகவே பார்க்க வேண்டிய ஆவல் அதிகரித்து விட்டது.
அடுத்த வாரம் படம் பார்ப்போம்.

நம் சகோக்கள் படத்தில் வில்லன்களை தங்கள் மதம் சேர்ந்தவனாக காட்டுகிறார்கள் என் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். படம் ஸ்லீப்பர் செல் எனப்படும் தீவிர வாதிக் குழு பற்றி கூறுகிறது.சாதாரண மனிதர்கள் போலவே வாழும் இவர்கள் திடிரென ஒரு தீவிரவாத செயலுக்கு ஆணை வந்தால் ஈடு படுவார்கள். சரி ஸ்லீப்பர் செல் பற்றி கொஞ்சம் தகவல் எளிதாக கிடைக்கும் விக்கி பிடியாவில் தேடினோம்.
A sleeper cell refers to a cell, or isolated grouping of sleeper agents that lies dormant until it receives orders or decides to act.

இதில் பார்த்தால் ஒவ்வொரு நாட்டிலும் பிற நாட்டு உளவாளிகளின் தலைமையில் இப்படி குழுக்கள் அமைத்து செயல்படுவது வழக்கம் போல் தெரிகிறது.

இந்தியாவில் பாகிஸ்தான்,சீனா,அமெரிக்கா,இஸ்ரேல் உளவாளிகள்,ஸ்லீப்பர் செல்கள் இருக்க்லாம். அதேபோல் இந்த உளவாளிகள்,ஸ்லீப்பர் செல்கள் வெளிநாடுகளிலும் இருக்கலாம்.

ஸ்லீப்பர் செல்கள் எப்போதும் குண்டு வெடிப்பு மட்டுமே செய்ய வேண்டியது இல்லை. மத துவேஷம் வளர்த்தல், தகவல் சேகரித்தல், கள்ள நோட்டு புழக்கத்திற்கு விடுதல்,இணையத் தாக்குதல் போன்ற எதுவும் செய்யலாம்.

ஆகவே இந்தியாவில் பிற நாட்டு ஸ்லீப்பர் செல்களே இல்லை என்று எவராவது சொன்னால் அவரை சந்தேகத்தோடு பார்ப்பதே நல்லது.

இந்த நாடுகளுக்கிடையேயான் மோதல்,போட்டி என்பதும் ஆயுத சந்தையின் விளம்பர தந்திரமே. இரு நாடுகளுக்கிடையே பகை இல்லை எனில் யார் ஆயுதம் வாங்குவார்??அண்டை,போட்டி நாடுகள் இடையே பகை உணர்வு வளர்க்கப்பட்டால் மட்டுமே ஆயுத நிறுவனங்கள் வளரும்.

நம் மக்களுக்கு எதுவுமே கொஞ்ச நாள்தான், ஊழல், சாமியார் மோசடி, சாதி,மத கலவரம் எல்லாவற்றையும் செய்திகளில் அறிந்து ர்ச்சி வசப்பட்டு விவாதிப்பர். அப்புறம் மறந்து விட்டு வேறு விடயம் சென்று விடுவோம்.

தமிழ் நாட்டில்  தண்ணீர் பிரச்சினை என்றால் கர்நாடகாவை விமர்சிக்காதவர் உண்டா? கர்நாடகாவில் நம்க்கு தண்ணீர் இல்லை,தமிழ்நாட்டுக்கு கொடுக்காதே என்பார். மகாராஷ்ட்ராவில் மராட்டி அல்லாதவரை சில அரசியல் கட்சிகள் விமர்சிக்கின்றன. இலங்கை சிங்களப் படங்களில் தமிழ் ஆயுதக் குழுக்களே வில்லன்கள்.

திரைப்படங்கள் பொதுப் புத்தியை பிரதிபலித்து அதன் மூலம் இலாபம் சம்பாதிக்க முயல்கின்றன்.ஆகவே நாயகன்,வில்லன் இருவருக்கு ஏதோ ஒரு அடையாளம் காட்டுவது அப்போதைய சூழல் சார்ந்து கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஒரு மத,சாதி குழு ஆட்களை பெருமைப் படுத்தி நாயகனாக காட்டினார் அக்குழு காலரை துக்கி விட்டு ஆஹா என்பார்.பிறகுழுக்கள் அது எப்படி சாதி,மத மேன்மை காட்டலாம் என்பார்.தமிழ் வரலாற்று(?!) நாவல்களில் ஒன்றான சிந்து நதிக் கரையினிலே என்பதும் முகமது பின் காசிம் வந்தே அப்ப்குதிக்கு நாக்ரிக்ம் கொண்டு வந்தார் என சித்தரிக்கிறது.

மத புத்தகங்களிலும் இதே விடயம் உண்டு,மதத்தை பின் பற்றுபவர்களை உயர்வாகவும்,பின்பற்றாதவர்களை மோசமானவர்களகவும் சித்தரிப்பதே மத புத்தகம் எழுதப்பட்டதன் நோக்கம்.மதம்,புத்தக்ங்கள் என்பவை அரசியல் அதிகாரம் அகைப்பற்றும் நோக்கில் மட்டுமே எழுதப்பட்டவை என்பதே நம் கருத்து.

யாராவது என் மதத்தில் பிற மதத்தவர் நரகத்திற்கு செல்வார்கள் என்று சொல்வது தவறாக தெரிகிறது என்றால் அவர் மதத்தில் இருந்து நீக்கப்படலாம்,மத புத்தகங்களை விமர்சிப்பதே சில நாடுகளில் தண்டனைக்கு உரியது. மத அடிப்படையில் பாரபட்ச சட்டங்களும் உண்டு.

இவைகளை திரைப்படத்தில் காட்ட முயலும் போது விமர்சனங்கள் எழுவது இயல்பே.இது பல சமயம் திரைப்படத்தின் வெற்றியை பாதிக்கும் என்பதால் வில்லனை பெரும்பாலும் சிறுபான்மை குழுவை  சேர்ந்தவராக‌ இருக்கும் படி பார்த்துக் கொள்வார்கள்.

பழைய ஜேம்ஸ்பாண்ட் படங்களில் சோவியத் இரஷ்ய உளவு அமைப்பு கே ஜி பி தான் வில்லன். கன்னட திரைப்படங்களில் சந்தனக் காட்டு வீரப்பன்தான் பல படங்களில் வில்லன்.

பாகிஸ்தானி வில்லன்கள் கடந்த 30+ ஆண்டுகளாக திரைப்படங்களில் வருகிறார்கள். பாகிஸ்தானில்  எப்போதும் இந்தியரே(இந்துகள்) வில்லன்.
பாகிஸ்தானில் வரலாறு பாடபுத்தக்ங்களில் சிந்து சமவெளி நாகரிக்ம் இருக்காது அரபியன் முக்மது பின் காசிம் 710 CE  படையெடுத்து வந்ததில்  இருந்தே நாகரிகம் தொடங்கியது போல் காட்டுவார்கள். அதற்கு முன் நாகரிகமற்ற மனிதர்கள் வாழ்ந்தது போலவும் சித்தரிக்கிறார்கள்.
The Pakistani textbooks controversy relates to the reported inaccuracy of some Pakistani textbooks and the existence of historical revisionism in them. The content of Pakistan's official textbooks has often been criticized by several sources including many within Pakistan for sometimes promoting religious intolerance and Indophobia, leading to calls for curriculum reform.

மத்திய கிழக்கு நாட்டு பாட நூல்களில் யூதர்களை மோசமானவர்களாக சித்தரிக்கிறார்கள்.
The Saudi Arabian textbook controversy refers to criticism of the content of school textbooks in Saudi Arabia since the September 11 attacks. The United States demanded that Saudi textbooks be reviewed and revised to remove material perceived as spreading intolerance and hatred.
After the bombing of the Twin Towers in New York, the American government called on Saudi Arabia to reform its educational curriculum by eliminating educational material that demonizes Christians and Jews and promotes holy waragainst "unbelievers."

ஹிட்லரின் மெய்ன் கோம்ப் புத்த்கம் யுதர்களையே ஜெர்மனியின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணமாக காட்டி உலகப் போருக்கே வித்திட்டது.
In Mein Kampf, Hitler used the main thesis of "the Jewish peril", which speaks of an alleged Jewish conspiracy to gain world leadership.[6] The narrative describes the process by which he became increasingly anti-semitic and militaristic, especially during his years in Vienna. Yet, the deeper origins of his anti-semitism remain a mystery.

மனு ஸ்மிருதியில் பல இனத்தவரை விமர்சிக்கும்,ஒடுக்கும் சட்டங்கள் உண்டு..
1. Division of society into four varnas. Out of these only the first three, namely, Brahmins, Kshatriya and Vaishya, are collectively known as dwija (twice-born) are entitled to upanayan and the study of the Vedas. Shudras as well as women of dwija varnas, who had no use of learning Vedas because of kind of their responsibilities, were advised not to study of Vedas. However, Shudras could qualify to upper class by remaining clean, with observing polite behaviour and company of other three varnas.[43]
2. Assigning different duties and occupations for different varnas. According to Manusmriti, if a person of lower caste desires to adopt the occupation of a higher caste, he'll have to qualify for it by acquiring knowlwdge of Vedas.
3. Treating Brahmins as superiors, because they had all the knowledge of Vedas and Shudras as inferiors, who had no knowledge of Vedas.
……
நம் தமிழ் பதிவுலகில் கூட இஸ்ரேல் உளவுப்படை அதை செய்கிறது,இதை செய்கிறது 9/11 யூதர்களின் சதி என்ற கருத்துகளும் வலம் வருகின்றன.

திரைப்படம் எடுப்பது இலாப நோக்கில் என்பதால் சிறுபானமையினரை மட்டுமே வில்லனாக் சித்தரிக்கிறார் என்பதை புரிவோம்.சித்தரிப்பு   மிக மோசம் என்றால் மட்டுமே சென்சார் துறை இதற்கான சட்ட வரைமுறைகள் வைத்து உள்ளதா, நீதி மன்றத்தின் மூலம் அதனை செய்ய முடியுமாஎன மட்டுமே பார்க்க்லாம்.

இதை விட்டு ஆர்ப்பாட்டம் ,எதிர்ப்பு என பெரிய அள்வில் செய்வது பிரச்சினை வேறுவழியில் திரும்பும் அபாயம் இருக்கிறது. அரசியல் சூழலில் மத ரீதியாக ஓட்டு பிளவு படுவது சில அரசியல் கட்சிகளுக்கு சாத்கம் ஆகும்.

இது கருத்து சுதந்திரத்தின் மீது தடையாகி விடக் கூடாது என்பதே நம் நோக்கம்.

பாகிஸ்தான் திரைப்படங்களில் இந்துக்களை எப்படி சித்தரிக்கிறார்கள் என காணொளி பாருங்கள். அங்கு இரண்டாம் தர குடிமக்களாக வாழும் இந்துக்கள் இப்படங்களை எதிர்க்க முடியாது, பார்க்காமல் இருந்து விடுவார்கள் என முடிவு செய்யலாம்.



இது போல் பல  ப‌டம் உண்டு. பாகிஸ்தானில் இது சகஜமப்பா!!!


இந்த மாதிரி படங்கள் இருந்தால் நம் நாட்டில் நீதி மன்றம் தடை விதிக்கலாம். ஆகவே சென்சார் இதன் மீது என்ன சட்ட வரையறைகள் வைத்து உள்ளது என அறிந்து அதன் மீது என்ன செய்யலாம் என் ஆக்கபூர்வமாக யோசிப்ப்போம்.

ஒவ்வொரு இன்க்குழுவிலும் பலதரப்ட்ட மனிதர்கள் இருப்பதும்,ஒரு பிரச்சினையை பார்க்கும் விதம் வேறுபடுவதும் இயல்பே.ஒரு திரைப் படத்தில்,புத்த்கத்தில் சித்தரிக்கப்படுவதின் மூலம் எந்த இனம்,மதம் மோசமாகி விட முடியாது.

ஆனால் எதிர்ப்பு என்ற பெயரில் வன்முறை நிகழ்வது சித்தரிப்பைவிட  ஆழமான கருத்தை ஏற்படுத்தும்.போராட்டங்கள் திசை திரும்பாது என யாரும் உத்தரவாதம் கொடுக்க முடியாது!.

சமீபத்தில் கூகிள் ஒரு சர்ச்சைக்குறிய காணொளியை உலக அளவில் எதிர்ப்பு வந்தும் நீக்க மறுத்து விட்டது. கூகிளை புறக்கணிக்க பல மதவாதிகள் கட்டளை விடுத்தாலும் மக்கள் கண்டு கொள்ளவில்லை. இது மாறி வரும் சூழலையே காட்டுகிறது.அமெரிக்க சட்டம் இத்னை தடை செய்யாது என்பதால்  எதிர்ப்பு காணாமல் போய் விட்டது.

நாம் மனிதன் சமூக விலங்கு என்பதை உணர்வதாலும் நீதி நியாயங்கள் சூழலுக்கேற்பமாறும் என்பதை அறிந்ததாலும், வரும் தேர்தலில் மத ரீதியாக பிளவுகள் சிலருக்கு இலாபமாக மாறும் என்பதைக் கணிப்பதாலும் மட்டுமே கூறுகிறோம்.

எந்த ஒரு பிரச்சினையையும் ஆக்க பூர்வமான விவாதம்,நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட அதிக பட்ச செயல்பாடு,சட்ட திட்டங்களில் தேவையான மாறுதல்கள் சார்ந்து தொடர்ந்து முன்னெடுப்பதே வளர்ச்சிக்கான வழியாகும்.
  
ஒவ்வொரு விடயத்தை மதம்,இனம் சார் கண்ணோட்டத்தில் அணுகுவதை விட நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உடபட்டு ஏதேனும் செய்ய இயலுமா எனப் பார்ப்பது அறிவுடமை!!

தேவையற்ற ஆர்பாட்டம்,போராட்டம், இன முரண்கள் தவிர்ப்பது அனைவருக்கும் நல்லது.

நன்றி!!!




98 comments:

  1. சார்வாகன்,

    தெளிவான பதிவு.

    ஏழாம் அறிவு படத்தில் சீன ராணுவமே இந்தியாவுக்கு எதிரா சதி செய்யுதுன்னு நேரா காட்சி வைக்கலையா?

    வில்லன் பேரு டோங் லீ, அப்போ சீனர்கள் எதிர்த்து இருகணுமே?

    அந்நிய சதின்னு காட்ட சீனா,பாக்கிஸ்தான் என உருவகப்படுத்துவது இயல்பே.

    அமெரிக்கா ஆஃப்கானை எப்படிலாம் காட்டியிருக்கு, அதில் வர எல்லா பேரும் இஸ்லாமிய பேராத்தான் இருக்கும்.

    துப்பாக்கி படத்தில் வருவதை அந்நிய நாட்டு ஸ்லீப்பர் செல் அப்படின்னு பார்க்கணும்.

    ReplyDelete
    Replies
    1. சகோ வவ்வால்,
      வில்ல்னை அந்நிய கிரகத்து ஆள் மாதிரி காட்டினால் மட்டுமே பிரச்சினை வராது என்று நினைக்கிறேன்.பல ஆங்கில படங்களில் காட்டி விட்டார்கள்.ஒரு வேளை அந்நிய கிரகத்திலும் ஆதே போல் ஆள் இருந்தால் அவனும் கோபிப்பானா??

      வில்லனுக்கு பேரே இருக்க கூடாது மதம் தெரியுமே, வில்லன் உடை,மத,இன ,மொழி அடையாளம் தெரியும், ஆகவே வில்ல்னுக்கு உடை இருக்க கூடாது
      அவன் பேசவே கூடாது.
      இப்படி எடுத்தால் சென்சார் தடுக்கும்.

      படத்தில் வில்லனே இருக்க கூடாது என்றால் மட்டுமே சாத்தியம்.
      *********
      படம் நாட்டில் நிலவும் சூழலை பிரதிபலிக்கும்,ஆகவே நிஜத்தில் மதம் சார் குழப்பம் ,வன்முறை நிகழாமல் அமைதிப்பூங்கா ஆக்கினால், திரைப்படமும் மாறிவிடும்.

      மாட்டிக் கொண்ட கசாப்பை போலி மதவாதி என சொல்வது இல்லையா?

      அது போல் கண்டுக்காமல் செல்வதே உசிதம். ஆர்ப்பாட்டம் பண்ணி அது ஏதாவது பிரச்சினை ஆவதற்கு சும இருக்க்லாம்.

      நன்றி

      Delete
  2. One of the best with so much hard work. Excellent analysis too. I will read in detail and comment today evening.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மருத்துவர் நம்பள்கி அய்யா,
      கருத்துக்கு நன்றி!!!

      Delete
  3. நல்ல பதிவு சகோ சார்வாள். அதிலும் பாக்கி பட கிளிப்பிங் எல்லாம் தேடி பிடிச்சிருக்கீங்க.வாழ்த்துக்கள்.

    முமின்களுக்கு எதுக்கெடுத்தாலும் கூப்பாடு போடுவதே வேலையாகிவிட்டது. எது சென்சேசனாக இருக்குதோ அதைத்தான் சினிமாவோ செய்தியோ ஆக்குவார்கள். வீரப்பன் இருந்த போது அவனைப்பற்றியும் படங்கள் வந்தன. இப்போது இசுலாமிய தீவிரவாதம்தான் பிரச்சனை. சிறுபான்மைக்கு எதிராக எனில் ஏன் கிருத்துவர்கள் குண்டு வைப்பது போல் காட்டுவதில்லை?

    படம் எடுக்கும் போது முமின்களுக்கு பிடிக்கும் என்பதற்காக இராகவய்யங்கார் குண்டு வைக்கிற மாதிரியா காட்ட முடியும்? ஜென்டில்மன் படத்தில் ஐயர்தான் ஹீரோ என்றதும் கமல் ஐயரோ நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டாராம். ஏன்னா ஐயர் வயலன்ஸ் பண்ணினால் பார்க்க மாட்டார்கள் என்பதினால்.

    நியூஸ் பேப்பரை எடுத்தாலோ இவர்கள் செய்யும் தீவிரவாதம்தான் கண்ணில்படும் போது அந்த பயத்தை காசாக்குறார்கள். போனவாரத்தில்தான் டில்லியில் தீவிரவாதிகள் தாக்க பிளேன் போட்டதாக செய்தி வந்தது.கூகிள் நியூஸ் போய் terrorism என தேடினால் எல்லா செய்தியும் இவர்களை பற்றி இருந்தால் முருகதாஸ் என்ன பண்ண முடியும்? இசுலாமிய தீவிரவாதிகள் இசுலாம் பெயரை சொல்லி குண்டு வைக்கும் வரை இப்படி செய்தி, படம் வருவதை தடுக்க முடியாது. உடனே பிற மதத்தவரே குண்டு வைச்சு தற்கொலை பண்ணிக்கிட்டு எங்க மேல பழி போடுறாங்க என உளருவார்கள் முமின்கள்.

    மேலும் துப்பாக்கி சிறுபான்மையினத்தவருக்கு எதிரான பெரும்பான்மையினர் எடுத்த படம் என சொல்லிவிட முடியாது. ஜோசப் விஜய் சிறுபான்மை இனத்தவர்தானே? உடனே நமது முமின்கள் இசுலாமுக்கு எதிரான இந்து-கிருத்துவ கூட்டு சதி என சொன்னாலும் சொல்வார்கள!

    ReplyDelete
    Replies
    1. சகோ நந்தவனம்,
      இது எல்லாம் என்ன பெரிய விடயம். சல்மான் ருஷ்டியையே வில்லன் ஆகி பாகிஸ்தானில் படம் எடுத்தார்கள்.

      முக்மது பின் காசிம் படையெடுபின் காரணம் சிந்து அரசன் ஒரு அரபி பெண்ணை சிறை எடுத்ததால் என இராமாயன‌ கதையை திருப்பி போட்டார்கள்.
      THE LEGEND :- Mohammad Bin Qasim

      http://www.youtube.com/watch?v=-STuIytRgeY

      ஆகவே தக்காளி சட்னி,இரத்தம் கதைதான்.

      எனினும் வில்லனுக்கு பெயர் இட்டாலே மதம்,இனம்,மொழி,தெரியும். பேசினால் ,உடையில் சாதி கூட தெரியலாம்.
      என்ன செய்வது குழப்புதே!!!

      நன்றி

      Delete
    2. நநந்தவனம்,

      // சிறுபான்மைக்கு எதிராக எனில் ஏன் கிருத்துவர்கள் குண்டு வைப்பது போல் காட்டுவதில்லை?//


      பாட்ஷா படத்தில் மும்பையில் குண்டு வைக்கும் வில்லனாக ரகுவரன் நடித்திருப்பார் அவர் பெயர் "மார்க் ஆண்டனி" குண்டை எல்லாம் செயலிழக்க செய்யும் ஹீரோ பாஷா :-))
      (மாணிக் பாஷா என இந்து இஸ்லாமிய ஒற்றுமையை காட்டியிருப்பார்)

      அப்போ எனக்கு தெரிந்து எந்த கிருத்துவ அமைப்பும் போராடவில்லை , ஊருக்கே தெரியும் உண்மையான மும்பை குண்டு வெடிப்பின் பின்னணி :-))

      Delete
    3. சகோ வவ்வால்
      கொள்ளு என்றால் வாய் திறக்கும் குதிரை, கடிவாளம் என்றால் மூடிக் கொள்ளுமாம்.

      திரைப்படம் சித்தரிப்பு சென்சாரில் அனுமதி பெற்று விட்டது என்றாலே எதிர்ப்பதற்கு ஒன்றுமில்லை எனவே பொருள்.

      இது புலி வருது,புலி வருது கதைதான்.

      உண்மையிலேயே பிரச்சினை என்று எழுத முடியாத அளவுக்கு செய்து கொள்கிறார்கள் என்வே தோன்றுகிறது.

      இந்துத்வ கட்சிகளுக்கு இலவச விளமபரம்!!!

      இதுதான் இந்தியா என பதிவிட்டார்கள்.ஏன் இப்படி என்றால் திருத்த எழுதுகிறோம் என்றார்கள்.

      இப்பவும் ஏன் அப்புடீ எடுக்க கூடாது?

      தக்காளி சட்னி,இரத்தம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

      நன்றி!!!!!!!!!

      Delete
  4. சகோ, நீங்க மிகவும் முயற்ச்சி எடுத்து இந்த கட்டுரை எழுதியிருக்கிறீர்கள். இந்த ஜ‌னநாயக உரிமைகளை தவறாக பயன்படுத்தி செய்யபடும் இஸ்லாமிய கோமாளிதனங்கள் பலருக்கு இப்போ தெரிய வந்துவிட்டது. இது ஒரு ஆரம்பம் மட்டுமே. அவர்களுடைய நோக்கம் ஒரு இஸ்லாமியர் குண்டு வைத்தாலோ ஒரு குற்றம் செய்தாலோ அதை பத்திரிக்கைகள் வெளியிட கூடாது. மறை முகமாகவும் வெளியிடக் கூடாது. பதிவர்களும் பதிவு எழுத கூடாது.
    எனக்கு தமிழ்படம் பார்ப்பதில் அவ்வளவு ஆர்வம் இல்லை. ஆன இப்போ துப்பாக்கியை எப்படியாவது நேரம் ஒதுக்கி ஒரு சனி ஞாயிறு இந்த படத்தை டிக்கட் வாங்கி பார்த்து ஆதரவு கொடுப்பது என்ற முடிவோடு இருக்கிறேன்.

    ReplyDelete
  5. சகோ வேகநரி,

    நம் சகோக்களுக்கு எதை எதிர்ப்பது எனத் தெரியாது.இந்தியாவில் சிறுபான்மையினர் நிலை ,பல இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளை விட சிறப்பாக உள்ளது என்பதை உணர்ந்தால் இப்படி ஒன்றுமற்ற விடயங்களை பெரிது படுத்த மாட்டார்கள்.

    படத்திற்கு வில்லன் தேவை.அவனுக்கு ஒரு அடையாளம் தேவை.பரப்ரப்பாக என்ன செய்தியோ அது திரைப்படத்தில் வரும். இந்தியாவில் பாகிஸ்தான் எந்த உள்வு வேலையும் செய்வதில்லை என்றோ, இந்தியாவின் உளவாளிகள் எதிர் வேலைகள் பாகிஸ்தானிலும் செய்வதில்லை என்றோ கூற முடியாது!!.

    இது ஒரு சப்பை மேட்டர்!!!!!!!!!!!!!!

    நன்றி!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  6. இந்த கூத்தாடிகளை நான் பெரிது படுத்துவதில்லை. ஆனால் தொடர்ந்து இவர்கள் தவறு செய்பவன் இஸ்லாமியன் என்ற பிம்பத்தை உருவாக்க அதீத முயற்சி எடுக்கிறார்கள். மோடி 2000 பேரை கொன்று குவித்தானே! அவனை வை த்து ஒரு படம் எடுக்கலாமே? ஏன் எடுக்க வில்லை? மாலேகானில் திட்டமிட்டு குண்டு வைத்து முஸ்லிம்களைகொன்று அதற்கு காரணம் என்று இஸ்லாமியர்களையே கைது செய்தார்களே? இதை வைத்து ஏன் படம் எடுக்கவில்லை? கடைசியில் கைதானது பெண் துறவி? பிரக்யாசிங் அல்லவா? இதன் பின்னணியில் முருகதாஸ் ஒரு படத்தை ஏன் எடுக்கவில்லை? 'கஜினி' என்ற முஸ்லிம் பெயரை சம்பந்தமில்லாமல் தனது முந்தய படத்துக்கு முருகதாஸ் வைத்ததன் பின்னணி என்ன?

    காரணம் வேறொன்றுமில்லை. இஸ்லாத்தை கருத்துகளால் சந்திக்க முடியாது. எனவே தான் இந்துத்வா கை கூலிகள் இந்த முறையிலாவது இஸ்லாத்தை களங்கப்படுத்த முனைகின்றனர். வழக்கம்போல் இந்த முறையிலும் தோல்வியையே தழுவுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. சகோ சு.பி,
      குஜராத்தில் மோடியை விமர்சிக்க முடியாது. பதிவிலே சொல்லி விட்டேன் யாரையாவது வில்லனாக் காட்ட வேண்டும்.சிறுபான்மையினரை காட்டி விடுவான். எல்லை மீறினால் சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க்லாம்.

      குருதிப்புனல்=மாவோயிஸ்ட் வில்லன்,அரவிந்தன்=உயர் சாதி விலன், ஜென்டில் மேன்=திராவிட அரசியல்,அமைதிப்படை =‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍______ ஹி ஹி என அப்போதைய சூழலுக்கு திரைப்படங்கள் வரும்..

      எம் ஜி ஆர் படத்தில் உண்மையில் நம்பியாரா வில்லன்? சிந்திக்க மாட்டீர்களா??

      இதை போய் ஒரு விடயம்னூஊஊஊஊஊஊஉ

      நன்றி

      Delete
  7. ச‌கோ சு.பி,

    திராவிட இயக்க திரைப்படங்கள் இந்து மதத்தை விமர்சித்தது போல் யாரும் இஸ்லாமை விமர்சிக்கவில்லை என்பதையும் சிந்திக்க வேண்டுகிறேன்.

    இஸ்லாமுக்கும் படத்துக்கும் தொடர்பில்லை!

    ப்டத்தின் வில்லன் பாகிஸ்தான் உளவாளி.அவ்வள்வுதான்

    வில்லனுக்கு முஸ்லிம் பெயர் என்பது இப்போதைய பரபரப்பில் காசு பண்ணும் சூத்திரம்.
    கஜினி என்பது ஊர் பெயர்.அந்த ஊரை சேர்ந்த முகம்மது என்னும் அரசன் இந்தியாவின் மேல் 17 முறை படை எடுத்தான்.கஜினி என்ற பெயருக்கும் இஸ்லாமுக்கும் தொடர்பில்லை.
    http://en.wikipedia.org/wiki/Mahmud_of_Ghazni
    Mahmud was born in 971 AD in the town of Ghazna in Medieval Khorasan (in what is now south-eastern Afghanistan).
    http://en.wikipedia.org/wiki/Ghazni
    For the Province of Ghazni see Ghazni Province
    Ghazni
    غزني
    — City —

    View of houses in Ghazni from a helicopter


    Ghazni
    Location in Afghanistan
    Coordinates: 33°33′N 68°25′ECoordinates: 33°33′N 68°25′E
    Country Afghanistan
    Province Ghazni Province
    District Ghazni District
    Elevation 2,219 m (7,280 ft)
    Population (2006)
    • Total 141,000
    Central Statistics Office of Afghanistan
    Time zone Afghanistan Standard Time (UTC+4:30)
    Ghazni (Persian/Pashto: غزنی - Ġaznī; historically known as غزنین / Ġaznīn and غزنه / Ġazna) is a city in central-east Afghanistan with a population of about 141,000 people.

    நன்றி

    ReplyDelete
  8. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த துப்பாக்கி படத்தில் இஸ்லாமிய சமுதாய மக்களை புண்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி இஸ்லாமிய அமைப்புகள் துப்பாக்கி படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் தாணு, ஹீரோ விஜய் ஆகியோருக்கு கண்டனங்களும், அவர்களுக்கு எதிராக போராட்டங்களும் அறிவித்தனர்.

    இதுபோன்ற பின்விளைவுகளை எதிர்பார்க்காத இயக்குனரும், தயாரிப்பாளரும், ஹீரோவும் அதிர்ச்சி அடைந்தனர். இஸ்லாமிய அமைப்புகளின் தீவிர எதிர்ப்புக்கு இணங்கி ஏ.ஆர்.முருகதாஸ், தாணு, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் இஸ்லாமிய சமுதாயப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சில மணிநேரங்கள் நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது.

    பேச்சுவார்த்தைக்குப் பிறகு நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய துப்பாக்கி பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் “ துப்பாக்கி படத்தை முழு கமர்ஷியல் எண்டர்டெயின்மெண்ட் படமாக எடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தான் எடுத்தோம். யார் மனதையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கவில்லை. துப்பாக்கி படத்தில் இஸ்லாமிய மதத்தினரின் மனது புண்படும் நோக்கில் இருக்கும் காட்சிகள் நீக்கப்படும்.

    இஸ்லாமிய மக்களின் மனது புண்படும் வகையில் சில காட்சிகள் அமைந்ததை நினைத்து வருந்துகிறோம். இந்த தவறு தெரியாமல் நடந்ததே தவிர திட்டமிட்டு நடக்கவில்லை. தெரியாமல் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினார்.

    துப்பாக்கி பட தயாரிப்பாளர் தாணு பேசிய போது “ இந்த தவறு தெரியாமல் நடந்த ஒன்று. ஒரு இராணுவவீரன் தன்னை ஒரு நாட்டுக்காக எந்த அளவிற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதையும், நாட்டை காப்பாற்றும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருப்பதை உணர்த்தும் நோக்கில் தான் படத்தை எடுத்தோம். இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்களும் இராணுவத்தில் சேர்ந்து சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். தெரியாமல் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறினார்.

    துப்பாக்கி படம் துவங்கிய போது தயாரிப்பாளராக இருந்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில் “ தமிழக இளைஞர்கள் மட்டுமல்லாமல் தாய்மார்களின் நெஞ்சத்திலும் இடம்பிடிக்க நினைத்து நடிப்பவர் விஜய். துப்பாக்கி படத்திற்கு இது போன்ற எதிர்ப்பு வந்தது அதிர்ச்சியளிக்கிறது. அனைத்து மதத்தினரையும், ஜாதியினரையும் விஜய் மதிக்கிறார். அவர்களது ரசிகர்களிலும் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள்.

    அவர்கள் மனதை புண்படுத்தி விஜய் சந்தோஷப்படமாட்டார். இதற்கு பிராயச்சித்தமாக விஜய்யின் அடுத்த படத்தில் அவர் ஒரு இஸ்லாமியராக நடிப்பார். இஸ்லாமிய மதத்தினரின் விருப்பத்திற்கேற்ப தவறான காட்சிகள் மாற்றப்படும்” என்று கூறினார். துப்பாக்கி படத்திலிருந்து எந்த எந்த காட்சிகள் நீக்கப்படும் என்பது பற்றி ஒரு சில தினங்களில் தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

    -இணைய செய்தி

    எல்லாம் சரி. இதற்கு பிராயச்சித்தமா விஜய் அடுத்த படத்துல முஸ்லிமா நடிக்கிறாராமா! இது அதை விட பெரிய கொடுமை. தயவு செய்து இந்த கூத்தாடி கும்பல்கள் இஸ்லாத்தை விட்டுருங்கலேம்பா! புண்ணியமாகப் போகும்.

    ReplyDelete
  9. சுபி, அதை எடுக்கல இதை எடுக்கவில்லை என புலம்புவதற்கு பதிலாக முசுலிம்கள் பலர் படஉலகில் இருக்கிறார்களே அவர்கள் எடுக்க வேண்டியதுதானே? 27 கான்கள் இந்தி பட உலகில் அசிங்கம் பண்ணிகிட்டு இருக்கிறார்களே அவர்கள் எடுக்கலாமே? முருகதாசுக்கும் விஐய்க்கும் எது பிடிக்குதோ அதை எடுக்கிறார்கள். உங்களுக்கு வேறு ஏதாவது பிடிக்கும்ன்னா நீங்க எடுங்க.

    'கஜினி' என்ற முஸ்லிம் பெயரை சம்பந்தமில்லாமல் தனது முந்தய படத்துக்கு முருகதாஸ் வைத்ததன் பின்னணி என்ன என தெரிய வேண்டும் எனில் ஹஜ் யாத்திரை போய் வந்து பிரஷ்ஷாக இருக்கும் கஜினி பட ஹீரோ முமின் சகோதரர் ஆமிர்கானை கேளுங்கள் சொல்லுவார்!

    ReplyDelete
  10. மிக அருமையான பதிவு சகோ... ! அந்நிய நாடுகளை, மதங்களை, மக்களை எதிரிகளாக காட்டுவதே உலகத் திரைப்படங்களின் வழக்கமே... அரபு திரைப்படங்களில் யூதர்களே வில்லன்கள், குழந்தை பலிக் கொடுப்பார்களாம், தீவிரவாதம் செய்வார்களாம், சூனியக் காரர்களாம் இப்படி எல்லாம் யூதர்கள் சித்தரிக்கப்படுவார்கள் ... ! இஸ்ரேலியத் திரைப்படங்களில் பாலஸ்தீனியரே வில்லன்கள் ... ! பாகிஸ்தானில் இந்துக்கள் வில்லன்கள் .. இரானியில் சுன்னிகள் வில்லன்கள் .. இப்படி தொடர் கதையே இது..

    திரைப்படங்கள் என விட்டுவிடுவதே சாலச் சிறந்தது .. இல்லாமல் பொங்கி எழுந்தால் அது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் கதையே ஆகும்.

    இதனை Stereotyping என்பார்கள், திரைப்படங்களை எதிர்த்து பயனில்லை.. அடிப்படை கல்வி, கலாச்சாரம், பழக்க வழக்கங்களில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது .. !

    துப்பாக்கி திரைப்படம் அஜ்மல் கசாப்பினை அடிப்படையாக கொண்ட படம் என்பதால் இஸ்லாமியர்கள் வில்லங்களாக காட்டப்பட்டுள்ளனர் அவ்வளவே !

    ஜோசப் விஜய் கூட ஒரு கிறித்தவர் தான் , அதனால் இது கிறித்த மிசனரிகளின் வேலையோ எனக் கூட கூறுவார்கள் போல,

    யூதர்கள் கிட்னி கடத்துவோர் என எகிப்திய டிவி வகுப்புப்படுத்தல் ( Stereotype ) செய்துக் கூறுவதைக் கேளுங்கள் ..

    http://youtu.be/P4jtUyHyJm4

    ReplyDelete
  11. //இஸ்லாமிய சமுதாயப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சில மணிநேரங்கள் நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது//

    அதாவது பேரம் முடிந்தது. கொஞ்சம் அமெண்ட் செட்டில் பண்ணியிருப்பானுக.

    //அடுத்த படத்துல முஸ்லிமா நடிக்கிறாராமா! இது அதை விட பெரிய கொடுமை//

    அதே கொடுமைதான் நீங்க இந்த படத்தை எதிர்ப்பது. நீங்க எதிர்ப்பதால் படத்து இலவச விளம்பரம்.சகோ வேகநரி மாதிரி பலர் இதுக்காவே இந்த மொக்கை விஜய் படத்தை பார்த்து கஷ்டப் படப்போறாங்க!

    ReplyDelete
  12. //எல்லாம் சரி. இதற்கு பிராயச்சித்தமா விஜய் அடுத்த படத்துல முஸ்லிமா நடிக்கிறாராமா! இது அதை விட பெரிய கொடுமை. தயவு செய்து இந்த கூத்தாடி கும்பல்கள் இஸ்லாத்தை விட்டுருங்கலேம்பா! புண்ணியமாகப் போகும்.//

    ஹி...ஹி சு.பி.சுவாமிகள் தயவு செய்து இந்த கூத்தாடி கும்பல் என்ன செய்தா என்னனு விட்ருங்களேன் :-))

    கூத்தாடி ஹீரோ முஸ்லீமா நடிச்சா அதனாலே பெருமை எப்படி இல்லையோ, அதே போல கூத்தாடி முஸ்லீம் வில்லனா நடிச்சா மட்டும் இகழ்ச்சி வருமா?

    சிந்திக்க மாட்டீர்களா?

    ஒரு கூத்தாடி அமிர்கான் ஹஜ் போனதும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஹஜ் போனார்னு பதிவு போட்டு பெருமை அடையும் போது இதை எல்லாம் சிந்திக்கவே இல்லையே?

    ReplyDelete
  13. வணக்கம் சகோதரர்களே,
    உலகின் ஒரே மார்க்கம் இஸ்லாம் என்பதாலும்,அதை (உண்மையாக்)பின்பற்றும் முஸ்லிம்கள் நல்லவர்களாகவே இருப்பார்கள் என்பதால் அத்னை ந்ல்லவிதமாக உள்ளது உள்ள படி காட்டுவதில் த்வறில்லை.

    சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் தவறு செய்தாலும்,அது அவர்கள் இஸ்லாமை சரியாக் பின்பற்றாததினால் மட்டுமே. இஸ்லாமை சரியாக் பின்பற்றாத்வர்கள் காஃபிர் ஆகிவிடுகிறார்.

    அவர்களைக் காட்டுவது என்றாலும்,அவர்கள் முஸ்லிம்களாக இல்லாத போது பிறகு எப்படி முஸ்லிம்களை வில்லனாக காட்ட முடியும்??!!!

    சிந்திக்க மாட்டீர்களா???
    ********
    மூமின்கள் ஏன் பிற மதங்களை விமர்சிக்கிறார்கள் என்றால் அவை தவறு என்று அல்லாஹ் குரானில் கூறிவிட்டான்.ஆகவே நரகவாசிகளைக் காப்பாற்றவே விமர்சித்து சரியான ஒரே மார்க்கத்திற்கு அழைக்கிறோம்.

    இதையும் மேலே சொன்ன விடயத்தையும் தொடர்பு படுத்தி பார்ப்பது விஷமத் த்னம்.அப்படி தொடர்பு படுத்துபவர்கள் நாத்திக,இந்துத்வ,யூத கிறித்த்வ,புத்த சதிகாரார்கள்.
    ஆனால் சதிகாரர்களில் சிறந்தவன் ஹா ஹா ஹா!!!!!!!!!!!!11

    ********
    இதுதான் நடந்தது!!!!!!!!!!!!!


    நன்றி

    ReplyDelete
  14. சகோ.சார்வாகன்

    பரிணாம முகமுடியை கழட்டிவிட்டு உங்களின் பாசிச முகத்தை காட்டிவிட்டீர்..நல்லது..!!! இதையும் நாம் விரும்புகிறோம் .....

    ஒரு ஆசிரியருக்கு உள்ள அழகு அல்லவே உங்களின் வாதம்..தவறு என்று தெரிந்தால் எங்கு தவறு இருந்தாலும் சுட்டிக்காட்டி திருத்துவதாகதான் ஒரு ஆசிரியர் இருப்பார்...இங்கு ஒரு சமூகம் தனது மானம் காக்க போராடும் போது அங்க அவன் அப்படி செய்யிறான்..அதனால் இங்கு நாங்கள் செய்கிறோம் என்கிறீரே..இது தான் பாசிச பரிவாரங்களின் செயல்.. தனது சமூகம் மீது பழி போடப்படுகிறது என்றால் மானமுள்ள ஈனமுள்ள எந்த சமூகம் ஆனாலும் அதை எதிர்த்து போராடவேண்டும் ...அதை என்றும் செய்யும் இஸ்லாமிய சமூகம்...அதை பொறுக்க முடியாமல் பாகிஸ்தானை காட்டுகிறீரே..!!! திராணி உள்ள மானமுள்ள மக்களாக இருந்தால் அவர்கள் எங்கும் போராடுவார்கள் ...அவர்கள் எந்த சமூகமானாலும் நமது ஆதரவு நிச்சயம் அவர்களுக்கு உண்டு..ஏனெனில் அவதூறு பரப்புவதை இஸ்லாம் அடியோடு தடைசெய்கிறது..!!!

    இங்கும் பாருங்கள் நாங்கள் எவ்வளவு பொறுமையாக இருந்தோம் என்று மக்களின் கூப்பாடு..!!!

    அட மக்களே ...உங்களை பற்றி படம் எடுப்பவர்களை எதிர்த்து போராட்டம் செய்யாததற்கு,சும்மா இருக்குறதுக்கு பேரு பொறுமை ,சகிப்புதன்மைன்னு விளக்கம் காட்டுவீரோ..அதற்கும் மேலே இயலாமை என்னும் சிறுமைத்தனம் ஒளிந்துல்லதை அறியவில்லையோ..!!!

    இனி எவர்களாவது இஸ்லாமியர்களை தீவிரவாதியாக காட்ட துணிவாரோ ???

    பாவம் கமல் என்னும் கூத்தாடி ..துப்பாக்கி படத்திலாவது 15 சீனில் 10 சீன் கட் செய்யப்படும் என்று சொல்லியாகிவிட்டது..விஸ்வரூபம் படத்தை முழுவதும் கட் செய்ய வேண்டி வரும் போல...

    கமலும் வெளியில் நாத்திகம் பேசி உள்ளுக்குள் ஹே ராம் , உன்னைப்போல் ஒருவன் போன்ற படங்களை எடுத்து அவர் நாத்திக முகமுடியை கழட்டி விட்டு உண்மை முகத்தை காட்டினார்..இப்போது சார்வகனும் கழட்டி விட்டார்..நல்ல விஷயம் தான்..!!!

    நன்றி !!!

    ReplyDelete
  15. சகோ மீரான்,

    இஸ்லாம் முஸ்லிம்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.உங்களின் இச்செயல் இந்துத்வ மதவாத அரசியலையே ஊக்குவிக்கும் எனக் கூறுகிறேன்.

    இப்போது திரைப்படத்தில் எதையுமே விமர்சிக்க முடியா சிக்கலை உருவாக்குகிறீர்கள். நமது நாட்டில் பொது சிவில் சட்டம் வேண்டும் என்ற கோரிக்கை அவ்சியம் என உறுதியாகிறது.
    *************

    பரிணாம முகமூடியா.பரிணாமம் என்பது அறிவியல். இதை ஆத்திகர் ,நாத்திகர் பலரும் ஏற்கிறார்.அது மதம் அல்ல!!!!

    இப்போது திரைப்படத்தில் பாகிஸ்தான் உளவாளியை கூட காட்டுவது தவறு என ஓருமித்த கருத்துக் கொண்டு விட்டீர்கள்.

    எந்த காட்சிகளை வெட்டினார்கள் என யாரேனும் ஒரு பதிவு இட்டால் நலம். ஏதேனும் மொக்கைப் படம் பிரபலம் ஆகவேண்டும் எனில் வில்லனுக்கு முஸ்லிம் பெயர் வைத்தால் போதும்.

    வாழ்க வளமுடன்!!!

    நன்றி!!!

    ReplyDelete
  16. குரான் காலத்திலிருந்து முன்னுக்கு முரணாக பேசுவதே இசுலாமியர்களின் வேலை... இதோ பாருங்கள்

    //அவதூறு பரப்புவதை இஸ்லாம் அடியோடு தடைசெய்கிறது..!!!// என எழுதும் நாகூரார் அதே பின்னூட்டத்தில் சகோ சார்வாகன் நாத்திகர் அல்ல பாஸிஸ்ட் என்கிறார். அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி, தனக்குன்னா இரத்தம் என சகோ சொல்லி வாய்மூடும் முன் நாங்க அப்படிதான் என நிருபிக்கிறார் நாகூரார்!

    ReplyDelete
    Replies
    1. ஹல்லோ ஜி ...பதிவின் படியே நாம் கூறினோம்..உண்மையில் தான் நாம் உறுதியுடன் இருப்போம்..தவறு என்று தெரியும் பட்சத்தில் வருத்தம் தெரிவிக்க தயங்க மாட்டோம்...அதனால் நீங்கள் கவலை பட தேவை இல்லை...

      நன்றி!!!

      Delete
    2. சகோ மீரான்,
      பொது வாழ்வுக்கு வந்து விட்டு என்னை திட்டிடான் சார் என சொல்லவா முடியும்?

      நம்மை யார் எது சொன்னாலும் கவலைப்பட மாட்டோம்.நானும் விமர்சிக்க பட வேண்டியவனே!!!

      நாம் கேட்பது துப்பாக்கியில் எந்த காட்சிகள் இஸ்லாமை எந்த விதத்தில் தவறாக காட்டியது?

      வில்லன் முஸ்லிமாக இருக்கவே கூடாதா??

      பாகிஸ்தான் ஹலால் திரைப்படம் பற்றி கருத்து என்ன??

      நன்றி!!

      Delete
    3. ஓஹோ..அதே தெரியாம தான் பதிவோ...!!! பாவம் சார் நீங்க உங்களுக்கு இருக்குற அறிவு கூட படத்தை எடுத்த தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இல்லை பாருங்க அதான் பத்து சீனை வெட்ட முடிவு பண்ணிடாங்க....

      நன்றி !!

      Delete
  17. சகோ.சார்வாகன்

    //இஸ்லாம் முஸ்லிம்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.//

    அந்த விமர்சனங்களை தானே இவ்வளவு நாள் (இணையதளங்களில்)எதிர்கொண்டு இருக்கிறோம் பொறுமையாக..இங்கு திரைப்படம் என்பது விமர்சனம் அல்ல ..அது அவதூறு ..ஒரு இரண்டரை மணி நேரம் ஓடக்கூடிய கேளிக்கையில் மக்களை மகிழ்வூட்ட எது வேண்டுமானாலும் நல்ல முறையில் செய்யலாமே..!!! யார் கற்று கொடுத்தது ஒரு சாராரையே வில்லன்களாக காட்ட ??? இது சமுதாயத்தில் எத்தனை விளைவுகளை ஏற்படுத்தும்...இது கண்டிக்கப்பட்டதொடு அல்லாமல் முற்றிலும் தடை செய்ய பட வேண்டும்..அதற்க்கு ஒரு ஆரம்பமாக இது இருக்க வேண்டும் ...அது எந்த மதத்தை பற்றி அவதூறு சொன்னாலும் சரியே..ஏனெனில் சினிமா என்பது விளக்கம் அறிய சொல்ல படுவது அல்ல...ஆயினும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது..அதனால் தான் இந்த எதிர்ப்பு அவசியம் என்கிறோம்..

    என்றும் வாழ்க நலமுடன் !!!

    என்றும் நலத்தையே விரும்பும்
    நாகூர் மீரான்...!!!

    நன்றி !!!

    ReplyDelete
  18. சகோ மீரான்,

    யார் கற்றுக் கொடுத்தது பிற மதத்த‌வரை நரகவாசிகளாக காட்ட???


    துப்பாக்கியில் என்ன அவதூறு இருக்கிறது அறிந்தால் சொல்ல்லாம்.
    நான் அறிந்தவரை வில்லன் முஸ்லிம்.
    அப்புறம்!!!!!!!!

    நன்றி

    ReplyDelete
  19. வவ்வால்!

    //கூத்தாடி ஹீரோ முஸ்லீமா நடிச்சா அதனாலே பெருமை எப்படி இல்லையோ, அதே போல கூத்தாடி முஸ்லீம் வில்லனா நடிச்சா மட்டும் இகழ்ச்சி வருமா?//

    இங்குள்ள மக்கள் அதிகம் சிந்திக்க தெரியாதவர்கள். சினிமாவை உண்மை என்று நம்புபவர்கள். எம்ஜிஆரை யோக்கியனாகவும் நம்பியாரை கெட்டவனாகவும் இன்றும் நம்பக் கொண்டிருப்போர் ஏராளம். எனவே தான் ஜெயலலிதா வரை முதல்வராக முடிகிறது. வேறு எந்த தகுதியும் தேவையில்லை. சினிமாவில் நல்லவனாக நடித்தால் தமிழகத்தை ஆள முடியும் என்ற நிலைதான் இன்று வரை உள்ளது.

    இந்த மீடியாவை இஸ்லாத்தை களங்கப்படுத்த வேண்டியே ஒரு கும்பல் மறைமுகமாக வேலை செய்கிறது. விஜய காந்த், அர்ஜூன், கமலஹாஸன் என்று இதற்கு தலையாட்ட நிறைய இந்துத்வாக்கள் தயாராகவே உள்ளனர். இதன் தாக்கம் பட்டி தொட்டிகள் வரை செல்கிறது. இது அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்களையும் அந்நியப்படுத்தும். எனவே தான் இந்த கூத்தாடிகளை அவ்வப்போது நேர்படுத்த வேண்டியிருக்கிறது.

    மற்றொரு கூத்தாடியான கமலஹாஸன் தற்போது வேக வேகமா தனது புதிய படத்தின் காட்சிகளை மாற்றிக் கொண்டிருப்பார். அப்படி மாற்றவில்லை என்றால் மாற்ற வைக்கப்படுவார். நாத்திக வேஷம் போடும் இந்த பார்பனனையும் நாம் லேசாக மதிப்பிட முடியாது. இந்த சமூகத்தை சீரழிக்கும் இந்த கூத்தாடிகளை என்று சமூகத்தில் இருந்து ஒதுக்குகிறோமோ அன்று தான் தமிழனுக்கு விடிவு.

    ReplyDelete
    Replies
    1. தினமலர் செய்தி :

      கமலை அதிர்ச்சியடைய வைத்த விஜய்யின் துப்பாக்கி ?

      ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள துப்பாக்கி படம் தீவிரவாதிகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இதேபோல்தான் கமல் இயக்கியுளள விஸ்வரூபம் படமும் உருவாகியுள்ளதாம். கதையோட்டம் வெவ்வேறு பாதைகள் என்றாலும் சேருமிடமும், கதையில் மையமும் ஒரே மாதிரியான தீர்வைத்தான பிரதிபலிக்கின்றனவாம். அதிலும், துப்பாக்கி படத்தில் 12 ஸ்லீப்பர்செல்களையும், 12 பேர் சென்று சுட்டு வீழ்த்துவது போன்றொரு காட்சியும் கமல் படத்தில் உள்ளதாம். அதனால் துப்பாக்கிப் படத்தைப்பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளாராம் கமல்.

      இதனால் தற்போது மொத்த படத்தையும் முடித்து விட்ட அவர், அடுத்து என்ன செய்வதென்ற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். வேற மாதிரியான காட்சிகளை படமாக்கலாமா? என்று யோசித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், அவர்கள் 12 பேர் வெவ்வேறு இடங்களில் சென்றுதானே ஸ்லீப்பர்செல்களை சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். ஆனால் விஸ்வரூபத்தில் நாம் ஒரே பஸ்சுக்குள் அத்தனை பேரையும சுட்டு வீழ்த்துவது போன்றுதானே படமாக்கியிருக்கிறோம். அதனால் காட்சியமைப்பு வேறு மாதிரியாகத்தானே இருக்கிறது என்று கமலின் டீமைச்சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்களாம். அதனால் முதலில் தடுமாறிய கமல், இப்போது எந்தவித மாற்றமும் செய்யவேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறாராம்.

      ******************

      பாருங்க மொத்தமா ஒரே மாதிரி செய்யுறத!!! இதுல இவர்களுக்கு வருத்தமாம் ..யாரு முஸ்லிம்களை புதுமையாய் அழிக்கிறதுன்னு. .. விஸ்வரூபத்தில் கொஞ்சம் புதுமையாய் கொல்வதால் கவலை படவில்லையாம் உலக நாய் கண் ....

      Delete
    2. சகோ மீரான்,
      //பாருங்க மொத்தமா ஒரே மாதிரி செய்யுறத!!! இதுல இவர்களுக்கு வருத்தமாம் ..யாரு முஸ்லிம்களை புதுமையாய் அழிக்கிறதுன்னு. .. விஸ்வரூபத்தில் கொஞ்சம் புதுமையாய் கொல்வதால் கவலை படவில்லையாம் உலக நாய் கண் //

      உண்மையான போட்டி இஸ்ரேலுக்கும்,மூமின்களுக்குமே.யார் அதிக ஆட்களை போட்டுத் தள்ளுவது என்று.
      Conflict intensifies as rockets hit Tel Aviv
      Netanyahu blames Hamas for violence as three die in Israel and the toll on the Palestinian side rises to 16.

      http://www.aljazeera.com/news/middleeast/2012/11/20121115135540965773.html

      பாவம் சினிமாக்காரனைப் போய் இந்த வாங்கு வாங்குகிறீர்களே நியாயமா?
      Thank you

      Delete

  20. சகோ சு.பி,
    /நம்புபவர்கள். எம்ஜிஆரை யோக்கியனாகவும் நம்பியாரை கெட்டவனாகவும் இன்றும் நம்பக் கொண்டிருப்போர் ஏராளம். எனவே தான் ஜெயலலிதா வரை முதல்வராக முடிகிறது. வேறு எந்த தகுதியும் தேவையில்லை. சினிமாவில் நல்லவனாக நடித்தால் தமிழகத்தை ஆள முடியும் என்ற நிலைதான் இன்று வரை உள்ளது. /

    நல்ல ஐடியா. நீங்கள் இப்படி மாஞ்சு மாஞ்சு பதிவு எழுதுவதற்கு பதிலாக முஸ்லிம்களை நல்லவிதமாக் காட்டும் திரைப்படங்கள் எடுத்தால் மக்களும் நம்பி விடுவார்கள்.நிதி திரட்டி முயற்சிக்கலாம்.

    ஆட்சி உங்கள் வசம்!!!!!!!!!!!!!!

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. சோ..சாரி ...உங்களுக்கு தெரியாதா சினிமா என்பது மிகை படுத்தப்பட்ட கற்பனை ஊடகம் என்று..அங்கு எதையுமே மிகைப்படுத்தி கற்பனையை சொன்னால் தான் எடுபடும்..மக்களும் நம்புவார்கள் அதில் மாற்றமில்லை..ஆனால் பொய்யை சொல்லி மிகைபடுத்தி இஸ்லாத்தை சொல்ல எங்களுக்கு அனுமதி இல்லை சகோ..

      :-)) :-)) :-)).........

      Delete
    2. சகோ மீரான்,
      சாரி வேண்டும் சரி வேண்டும்.

      பொய் சொல்லாமல் உண்மை சொல்லியே படம் எடுங்களேன். நான் கட்டாயம் பார்ப்பேன்.

      சுவனப்பிரியன் கதை வசனம் எழுத,மீரான் பாட்டெழுத இயக்குனர்,நடிகர்கள்

      தேர்வு நடத்தி எடுக்கலாம்.

      யூத,இந்துத்வ,நாத்திக ,கிறித்த்வ காஃபிர்க்ளே ,அமெரிக்க படையினர் வில்லன்கள்.

      எப்புடீ இருக்கும்??

      ஹலால் படம் வேணும் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

      நன்றி


      Delete
    3. என்ன சார்வாகன் காலைல ஸ்கூல் லீவா..??? நைட் ரெண்டு மணிக்கு உக்காந்து கதை கேக்குறீங்க..?? எனக்கு நாளைக்கு வேலை இருக்கு சோ ..குட் நைட்...

      Delete
  21. முமின்கள் எம்புட்டு விவரமானவர்கள் என்பதற்கு இங்கு அவர்கள் போட்டுள்ள பின்னூட்டங்களே சாட்சி. கடைசி வரைக்கும் துப்பாக்கி படத்தை எடுத்து அவர்களுக்கு பெரிய அநீதி இழைக்கப்பட்டதாக சீன் போடுகிறார்களே ஒழிய சகோ சார்வாகனும் இசெ சுட்டிக்காட்டிய படி இசுலாமிய நாடுகளில் இந்துக்களையும் யூதர்களையும் வில்லனாக காட்டுகிறார்களே என்ற கேள்வியை படிக்காதது போல் நடிக்கிறார்கள்.

    இசுலாமியர் அதிகமெனில் சிறுபான்மை மதத்தவரை ஒடுக்கி அழிப்பதும் அவர்கள் சிறுபான்மையினர் எனில் 'கொல்றாங்க கொல்றாங்க' என ஒன்னும் இல்லாத விடயத்திற்கு குரல் கொடுத்த அனுதாபம் சம்பாதிப்பதுதான் அவர்கள் வழக்கமாயிற்றே!


    நாமும் துப்பாக்கிக்கு எதிரான அவர்கள் வழியிலேயே முமின்களின் எதிர்ப்பு குரலை குப்பையில் போட்டுவிட்டு போகவேண்டியதுதான் போல

    ReplyDelete
  22. சகோ நந்தவனம்,
    திரைப்படம் என்பது ஒரு வலிமையான ஊடகம்.அதன் மீது இப்படிக் கட்டுப்பாடுகளை திணிப்பது சரியல்ல.

    துப்பாக்கி திரைப்படத்தில் நீக்கப்பட வேண்டிய காட்சிகள் எது என்ற கேள்விக்கு பதில் இல்லை பாருங்கள்.

    வில்லனை எந்த மதம்,சாதியை,ஊரை ,மொழி சேர்ந்தவன் போல் காட்டவே முடியாது?

    வில்லன் என்ன பொது சேவையா செய்வான்?

    பொய் சொல்வான்,ஏமாற்றுவான்,கொலை செய்வான்,கொள்ளை அடிப்பான் ,பாலியல் வன்முறை செய்வான்.

    வில்லன் இல்லாமல் எப்படி படம் எடுப்பது?

    விஜய் & முருகதாஸ் படம் தீவிரவாதிகளை வைத்து எடுத்து இருக்க கூடாது.
    எடுத்த பின் சென்சார் அனுமதித்த பின் எதையும் மாற்றக் கூடாது.

    இதில் அமெரிக்க கூகிள் செய்ததே சரி!!!!!

    பார்க்கலாம் உலக நாயகன் என்ன செய்கிறார் என்று.
    ******
    நாம் வைக்கும் விமர்சனமே இவர்களின் இரட்டை வேடம் என்பதுதானே!!!

    அன்றில் இருந்து இன்றுவரை ஒரே கொள்கை!!!!!!
    ருமே
    எனினும் இது இந்துத்வ ஆட்சியைக் கொண்டு வருமே தவிர வேறு ஒன்றும் செய்யாது.

    இவர்கள் ஆப்பசைக்கும் குரங்கின் செயல் செய்கிறார்கள்!!

    இந்தித்வா கோஷ்டி சிறுபான்மையை மட்டுமல்ல ,விமர்சிப்பவர்களையும் ஒடுக்குவார்கள்.இன்னும் கருத்து கட்டுப் பாடு கொண்டு வரலாம்.
    பாருங்க இந்த 10 நாட்களில் எழுந்த பிரச்சினைகள்

    1. சின்மயி ட்வீட்
    2.பிராமணாள் மெஸ்
    3.ஸ்ப்லெண்டர் அய்யர்
    4.துப்பாக்கி வில்லன்

    வரவர இணையம் பெரிய இம்சை ஆகுது.வெள்ளையன் ஆட்சி போல் ஆகிவிடும்.சுதந்திரம் பறிபோகும்!!!!
    நன்றி


    ReplyDelete
  23. என் கருத்து இது தான்...
    ஜாதி மதம் இத்யாதி புடலங்காய்கள் மனிதனுக்கு எதுக்கு? ஒரு தடவை பிறக்கிறோம்; இறக்கிறோம்; மனைவி, மக்கள் நண்பர்கள் நல்ல வாழ்கை இதுக்கு மேல் என்ன தேவை. ஏன் தான் இந்த பாழாப் போன மதத்தை பிடித்துகொண்டு தொங்குகிரார்கலோ?

    ReplyDelete
  24. சார்வாகன், சொல்லவந்ததை சரியாக சொல்லவில்லை...

    இங்கு அமெரிக்காவில் இந்துக்கள் ஒரு விழுக்காடு இருந்தால் அதிகம்...ஒரு ஹாலிவுட் படத்தில் இந்துக்கள் "மட்டும்" வெடி குண்டு வைப்பது மாதிரி காட்டினால் நம் ஆட்கள் பொறுமையாக இருப்பார்களா? யாராவது பதில் சொல்லுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. இப்போது இசுலாமிய தீவரவாதம் உலகலாவிய அச்சுறுத்தல் என்பதால் அதைப்பற்றி படங்கள் வருகின்றன. இசுலாமிய தீவிரவாதம் குறித்த பல ஹாலிவுட் படங்கள் வந்தனவே அதை எதிர்த்து அமெரிக்க முமின்களால் என்ன செய்ய முடிந்தது? அதே போல் நம்மாட்களாலும் ஒன்னும் செய்ய இயலாது.

      இந்து தீவிரவாதம் அமெரிக்கர்களுக்கு அச்சுறுத்தலாக மாறினால் அது குறித்து கண்டிப்பாக சினிமா எடுத்து காசுக்குவார்கள். நம்ம ஆட்கள் மூடிகிட்டு பார்க்க வேண்டியதுதான். வேணும் எனில் இந்தியாவில் தடை செய்து ஆறுதல் பெறவேண்டியதுதான், அதையும் இப்போது கோர்ட்டுகள் விடுவதில்லை. முமின்களை மகிழ்விக்க சாத்தானின் கவிதைகள் தடைசெய்யப்பட்டது போல The DaVinci Codeயை தடை செய்ய கோர்ட் அனுமதிக்கவில்லை.

      Delete
    2. வாங்க நண்பர் நம்பள்கி,

      நல்ல கருத்து. அமெரிகாவிலும் ஒரு இந்து அமைப்பு குண்டு வெடிப்பு உண்மையில் நடத்தியது என வைப்போம். அதன் பிறகு அதை திரைப்படமாக எடுத்தால் தவறு இல்லை.

      எனினும் குண்டு வைப்பது மட்டுமே தீவிரவாதம் இல்லை!!!

      அமரிக்கா போன இந்தியர்களில் பெரும்பானமை யாரு? அவங்க எப்படி சகோ!!
      அவங்க போடும் குண்டு வேற மாதிரி!!!

      இப்போது இஸ்க்கான் உள்ளிட்ட அனைத்து ஸ்வாமிகளின் பித்தாலாட்டங்களை யாராவது படம் எடுத்தால் மிக்க நல்லது.

      நிறைய வெள்ளைக்காரன் வேற ஸ்வாமினு சொல்லிக்கிட்டு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

      நன்றி

      Delete
  25. http://en.wikipedia.org/wiki/List_of_films_banned_in_India

    http://en.wikipedia.org/wiki/List_of_banned_films

    ReplyDelete
  26. .//விஜய காந்த், அர்ஜூன், கமலஹாஸன் என்று இதற்கு தலையாட்ட நிறைய இந்துத்வாக்கள் தயாராகவே உள்ளனர்//

    இப்படியெல்லாம் கண்டபடி எழுதி என்னவே எல்லா இந்து மத ஹீரோக்களும் இந்துவா ஆசாமிகள் போலவும் கமலை பார்ப்பான் என தூற்றி மதபிரிவினை வருமாறு விஷவிதைகளை தூவுகிறார் சுவனபிரியர்.

    இவரது மதத்தினை, சாரி, மார்க்கமாக அலையும் முமின் ஹீரோக்களின் லட்சணம் என்னவென பார்த்தால் வியப்பே மிஞ்சுகிறது. இந்தி படவுலகினை ஆளும் முமின் கான்களின் படங்கள் என்ன மாலேகான் குண்டுவெடிப்பு மோடியின் படுகொலை பற்றி படம் எடுத்து இசுலாமை வளர்க்கிறார்களா என பார்ப்போம்.

    1.Kurban படத்தில் Saif Ali khan அமெரிக்காவினை தாக்கும் இசுலாமிய தீவிரவாதி
    2.Sarfarosh படத்தில் நசிரூத்தின் ஷா ஒரு பாகிஸ்தான் முசுலிம் தீவிரவாதி, படத்தில் ஹீரோ ஆமிர்கான்
    3.Fanna படத்தில் ஆமிர்கான் காஷ்மீர் தீவிரவாதி
    4.Agent Vinod படத்திலை Saif Ali khaல ஹரோ இசுலாமிய வில்லன்


    இன்னும் படங்கள் இருக்க கூடும்.இதற்கு ஏதும் எதிர்ப்பு வந்ததாக தெரியவில்லை. முசுலிம்கள் தங்களை தாங்களே தீவிரவாதியாக சித்தரித்தால் ஓகேவா?

    இந்த முமின் ஹீரோக்களின் படத்தில் இந்து வில்லனே கிடையாதா? உடனே அனைத்து இந்துக்களும் போராட வேண்டுமா?

    ReplyDelete
    Replies
    1. சகோ நந்தவனம்,
      //இப்படியெல்லாம் கண்டபடி எழுதி என்னவே எல்லா இந்து மத ஹீரோக்களும் இந்துவா ஆசாமிகள் போலவும் கமலை பார்ப்பான் என தூற்றி மதபிரிவினை வருமாறு விஷவிதைகளை தூவுகிறார் சுவனபிரியர்.//

      அவர் அப்படித்தான்.இப்போது வில்லனாக தங்கள் மதத்தினரை காட்டக் கூடாது என்பவர்கள்,அடுத்த படி அவர்களைக் காட்டும் போது மார்க்க விதிகளின் படி உடை நடைமுறை இன்றி காட்டக் கூடாது என்பார்கள்.அவர்கள் மத திரைத் துறையினருக்கு கட்டுப்பாடு விதிக்கலாம்.

      இந்தியாவில் அவர்கள் எப்போதும் பெரும்பானமை ஆக முடியாது என்பதால் சில அரசியல்வியாதிகள் ஓட்டுக்காக அவர்கள் சொல் கேட்க தயாராக இருப்பதை நன்கு பயன் படுத்துகிறார். தமிழ்நாட்டில் இரு திராவிட கட்டிகளுக்கும் எப்போதும் மொத்த ஓட்டு வித்தியாசம் 5 % குறைவாகவே இருப்பதால் இவர்கள் ஓட்டு மிக்க முக்கியத்துவம் பெறுகிறது. அரசியல் வியாதிகளுக்கு இவர்களையோ,ஆதிக்க சாதியினரையோ பகைக்க தைரியம் இல்லை.

      ஆகவே சூழல் பொறுத்து நன்றாக விளையாடுகிறார். திராவிட அரசியலின் விரும்பத் தகாத விளைவுகளுள் ஒன்று!!!.

      எனினும் இவர்களின் செயல் பலருக்கு உள்ளூரப் பிடிப்பது இல்லை. இதனை பதிவுலகில் உணர முடியும்.
      ***************
      //இன்னும் படங்கள் இருக்க கூடும்.இதற்கு ஏதும் எதிர்ப்பு வந்ததாக தெரியவில்லை. முசுலிம்கள் தங்களை தாங்களே தீவிரவாதியாக சித்தரித்தால் ஓகேவா?

      இந்த முமின் ஹீரோக்களின் படத்தில் இந்து வில்லனே கிடையாதா? உடனே அனைத்து இந்துக்களும் போராட வேண்டுமா?//
      நீங்க இஸ்லாமோட கேரக்டரையே புரிய மாட்டேன் என்கிறீர்களே.

      பாருங்கள் சூடான்,இராக்,பஹ்ரை,சிரியா ,பாகிஸ்தான் ஆகிய இடங்களில் ஒரு மூமின் பிரிவு இன்னொரு பிரிவினரை ஒடுக்குகின்றனர். மக்கள் பலி ஆகிறார்.
      கண்டு கொள்ள மாட்டார்கள்.

      சில நாட்களாக ஹ்மாஸ் விட்ட ராக்கெட்டுகளுக்கு , வழக்கம் போல் இஸ்ரேல் திருப்பி தாக்க அனைவரும் கொதிக்கிறார்.

      காஃபிர் நாடுகளில் வாழும் மூமின்கள்
      உலக் மூமின் பிரிவு பிரச்சினைகளில் கருத்து சொல்வது இல்லை!!
      மூமின் காஃபிர் பிரச்சினைக்கு போராடுவார்.
      இதே கண்ணோட்டத்தில் பாலிவுட் சூழல் பாருங்கள் புரியும்.
      மூமின் வில்லன் என்றால் நாயகனும் மூமின் என்றால் ஓ.கே
      ஆனால் காஃபிர் நாயக்ன்தான் பிரச்சினை.

      இதுவே உங்களின் கேள்விக்கான தத்துவ விளக்க்ம் ஆகும்.சந்தேகம் இருப்பின் அண்ணன் சு.பி இடம் உறுதி செய்ய்லாம்.அண்ணன் புன்முறுவல் மட்டுமே பூப்ப்பர் என நாம் அறிவோம்.

      மேலே நாம் சொன்ன கருத்துகள்க்கு குரான் ஹதித் ஆதார அடிப்படையில் விளக்க முடியும் என்றாலும் உங்களை குழப்ப விரும்பவில்லை.

      இறைவன் மிக பெரியவன்.அவனுக்கே எல்லாப் புகழும், ஹா ஹா ஹா

      நன்றி!!




      Delete
  27. சமுதயாத்தில் கடைமட்டத்திலுள்ள கழிசடைகள் ,சொந்த வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் ,முடைநாற்றம் முற்றிப்போன அப்புறபடுத்தப்படாத பலநாள் கழிவுகள் ,பொட்டை பொறுக்கிகள் ,பலஇளைஞர் களையும் இளைஞிகளையும் சீரழித்த சமுதாய துரோகிகள் ,தாங்கள் வாங்கும் சம்பளத்திற்கு நூறில் ஒரு பங்கை கூட கணக்கில் காட்டி வருமானவரி கட்டாத தேச துரோகிகள் ,காசுக்ககாக பொண்டாட்டியை கூட கூட்டி கழித்துக் கொடுப்பவர்கள். இந்த அயோக்கிய சினிமா கூட்டத்தைப் பற்றி 90 இல் ஒரு நடிகையின் கதை என்ற பெயரிலே சீனிவாசலு என்பவர் குமுதத்திலே நாறடித்ததைக் கண்டு ,உண்மை வெளிச்சத்ததிற்கு வந்ததைக் கண்டு ,பத்மினி பெயரில் கோவையில் தியேட்டர் வந்த கதை ,மேஜர்ரின் வாழைபழம் ,அம்மாவும் மகளும் ஒரே படுக்கையில் அனுபவித்த நடிகன் ,சுதர்சனமனைவியின் லெஸ்பியன் என்று தாக்குதலில் அரண்டுபோன சினிமா கூட்டம் குமுதம் அலுவலகத்தை அடித்து நொறுக்கியது .அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் குமுதம் தொடர்ந்து எழுதி வந்தது.உடன் கலையுலக பிதாமகன் கருணாநிதி முதல்வர் என்றரீதியில் தலையிட்டு நிறுத்தப்பட்டது.அந்த தொடர் வந்திருக்குமானால் பல அப்பாவிமக்கள் இவர்களைப்ப் பற்றி தெளிவடைந்திருப்பார்கள் .இப்டி பட்ட கேடுகெட்ட கூட்டம் முஸ்லிம்கள் பற்றி உளறி கொட்டுவதை நாம் ஏன் பொருட்படுத்த வேண்டும்?
    அதிக லாபம் கிடைக்குமானால் அவர்கள் அம்மாவையே விபச்சாரியாக காட்டுவார்கள்

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ
      வந்துட்டீங்களா அஸ்ஸலாமு அலைக்கும்
      அருமையாக் சொன்னீங்க சகோ, இப்படிப் போட்டுத் தாக்கினால்தான் இந்த காஃபிர்களுக்கு இஸ்லாம் பற்றி புரியும்.

      குத்துங்க சகொ குத்துங்க இந்த சினிமாக்காரங்களே இப்படித்தான்.

      இன்னொரு முறை திட்டுங்க!!!

      எல்லாத் திட்டுகளும் காஃபிர்களுக்கே

      நன்றி

      Delete
    2. சகோ இப்பூ
      //சமுதயாத்தில் கடைமட்டத்திலுள்ள கழிசடைகள் ,சொந்த வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் ,முடைநாற்றம் முற்றிப்போன அப்புறபடுத்தப்படாத பலநாள் கழிவுகள் ,பொட்டை பொறுக்கிகள் ,பலஇளைஞர் களையும் இளைஞிகளையும் சீரழித்த சமுதாய துரோகிகள் ,தாங்கள் வாங்கும் சம்பளத்திற்கு நூறில் ஒரு பங்கை கூட கணக்கில் காட்டி வருமானவரி கட்டாத தேச துரோகிகள் ,காசுக்ககாக பொண்டாட்டியை கூட கூட்டி கழித்துக் கொடுப்பவர்கள். இந்த அயோக்கிய சினிமா கூட்டத்தைப் பற்றி 90 இல் ஒரு நடிகையின் கதை என்ற பெயரிலே சீனிவாசலு என்பவர் குமுதத்திலே நாறடித்ததைக் கண்டு ,உண்மை வெளிச்சத்ததிற்கு வந்ததைக் கண்டு ,பத்மினி பெயரில் கோவையில் தியேட்டர் வந்த கதை ,மேஜர்ரின் வாழைபழம் ,அம்மாவும் மகளும் ஒரே படுக்கையில் அனுபவித்த நடிகன் ,சுதர்சனமனைவியின் லெஸ்பியன் என்று தாக்குதலில் அரண்டுபோன சினிமா கூட்டம் குமுதம் அலுவலகத்தை அடித்து நொறுக்கியது .அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் குமுதம் தொடர்ந்து எழுதி வந்தது.உடன் கலையுலக பிதாமகன் கருணாநிதி முதல்வர் என்றரீதியில் தலையிட்டு நிறுத்தப்பட்டது.அந்த தொடர் வந்திருக்குமானால் பல அப்பாவிமக்கள் இவர்களைப்ப் பற்றி தெளிவடைந்திருப்பார்கள் .இப்டி பட்ட கேடுகெட்ட கூட்டம் முஸ்லிம்கள் பற்றி உளறி கொட்டுவதை நாம் ஏன் பொருட்படுத்த வேண்டும்?
      அதிக லாபம் கிடைக்குமானால் அவர்கள் அம்மாவையே விபச்சாரியாக காட்டுவார்கள்//

      தீப்பொறி ஆறுமுகத்திற்கு பிறகு அண்ணன் என்றே நினைத்தேன். நீங்களும் பரவாயில்லை போட்டுத் தாக்குரீங்க.

      ஆமாம் அந்த தொடர் வந்த புத்தகம் தேடுகிறேன் கிடைக்க மாட்டேன் என்கிறது ஸ்கான் பண்ணி எனக்கு அனுப்புங்களேன்.

      உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.

      நன்றி

      Delete
    3. இப்பூ,

      முதல் 5 1/4 வரிகளில் உங்களைப்பற்றிய அறிமுகம், மிக அருமை!

      Delete
  28. ////எல்லாத் திட்டுகளும் காஃபிர்களுக்கே///

    காபிர்கள் என்பது முஸ்லிம் அல்லாதவர்கள் .அவர்களை ஏன் நான் திட்ட வேண்டும் ?
    சினிமா உலகில் உள்ள அனைவருக்குமே

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      தெளிவாக இருக்கீங்க.அதை விடுங்க நீங்க விளக்கியதில் அந்த தொடர் படிக்க ஆவல் வந்து விட்டது. சரி அந்த புத்த்கம் ஸ்கான் பண்ணி அனுப்புங்களேன்.
      ப்ளீஸ்
      நன்றி

      Delete
  29. என்னிடம் இல்லை சார்வாகன் ,90 இல் உள்ள குமுதம் வார இதழ்களை பாருங்கள் .எனக்கு அப்போது படித்ததுதான் ஞாபகத்தில் உள்ளது .

    ReplyDelete
  30. எல்லாவற்றையும் பற்றி எடுக்க வேண்டியதுதானே! ஏன் குண்டு வைக்கும் தீவிரவாதிகள் அரைக்கால் டவுசர்களில் இல்லையா? ஊரறிய நாத்திகம் பேசிக்கொண்டே பூணுலுக்கு சேவகம் செய்பவர்கள்தான் இந்திய ஊடகவியலார்கள்.

    ReplyDelete
    Replies
    1. சகோ அபுபக்கர் ,
      அப்படியும் சில ஆவணப் படங்கள் வந்துள்ளன. அவ்ற்றையும் நமது தளத்தில் பதிவிட்டு இருக்கிறோம்.அப்படங்கள் இலாப நோக்கில் எடுக்கப்பட்டவை அல்ல.

      மத திரைப் படங்கள் 1:கறுப்பு வெள்ளி
      http://saarvaakan.blogspot.com/2011/02/1_19.html

      மத திரைப்படம் 2:: ஃபைனல் சோல்யுஷன்

      http://saarvaakan.blogspot.com/2011/02/2.html

      எனினும் சில படங்கள் இந்துத்வ வன்முறைகளையும் ஆவணப் படுத்தி இருக்கின்றன். ஆகவே இந்தியாவில் மாற்றுக் கருத்துகள் சொல்ல சுதந்திரம் இருக்கிறது.

      நான் துப்பாக்கி படத்தில் சென்சாருக்கும் தோன்றாத சர்ச்சைக் குறிய காட்சிகளாக நீங்கள் குறிப்பிடுபவை எவை?

      நன்றி

      Delete
  31. சமீபத்தில் வந்த "என்'' படத்தை..ஏன் மாற்று மத சகோதரர்கள் கண்டு கொள்ளவில்லை? அதில் சர்ச்சைகுரிய காட்சிகள் அதிகம் இருந்ததே?

    இந்த விஜயைப் போல் அந்த விஜய் பிரபலம் இல்லை என்பதாலா?

    ReplyDelete
    Replies
    1. சகோ இரமேஷ் வாங்க ,
      இப்படி பார்த்தால் ஒவ்வொரு படத்திலும் யாரோ சிலருக்கு பிடிக்காதது இருக்கவே செய்யும். சர்ச்சைக் குறிய காட்சி எது என்றே தெரியவில்லை. வில்லனை ஒரு மதம் சார்ந்தவனாக காட்டுவதே தவறு எனில் திரைப்ப்டத் தொழிலை மூட வேண்டியதுதான்.

      வில்ல்னை எப்படிக் காட்டுவது என மத்வாதிகளிடம் கேட்டு அறிய வேண்டும் போல் தெரிகிறது.

      நன்றி!!!

      Delete
  32. its better to ignore Tamil films, we all have just one life, why to waste our time in speaking about these people.. watching these idiotic movies..

    either a movie must be for a strong social cause or a good entertainer - on both cases nobody's sentiments must be hurt..all other movies gives us a huge ground to argue upon - these kind of movies cannot satisfy everyone thus leading everyone into arguments- which is totally unnecessary..

    as lot of people pointed out in the comments there are no real movies with real subjects being taken. they are just spinning money on our feelings, which is a criminilastic attitude.. so better to stay away from the likes of such cinemas..

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பர் யுவா,
      அதே திரைப்படம் என்பது தொழில். அபோது என்ன பரப்ரப்பு செய்தியோ அதன் அடிப்படையில் படம் எடுப்பார்கள்.பிறகு மறந்துவிடுவார்கள்.

      நன்றி!!!

      Delete
  33. இந்த ஸ்லீப்பர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் சகோ .................?
    உண்மையில் தெரியாமல் தான் கேட்கிறேன் ..
    அவர்கள் பிற நாட்டின் உளவாளிகளாக இருப்பார்கள் . தன் நாட்டை விட அந்த படியளக்கும் நாட்டுக்கு விசுவாசமாக இருப்பார்கள் . . மனதளவில் தான் பிறந்தநாட்டை விட மற்ற நாடுதான் சிறந்தது என்று நம்புவார்கள் .ஒரு சின்ன சந்தேகம் அவர்கள் பதிவு எல்லாம் எழுதுவார்களா ........?

    ReplyDelete
    Replies
    1. சகோ சிங்கம் வாங்க,
      என்னைப் பற்றி நீ உயர்வாக காட்ட வேண்டும்,அல்லது காட்டாதே என்றால் என்ன நியாயம்?. இதுதான் இந்தியா என எதை வேண்டுமானாலும் எழுதும் சுதந்திரம் அவர்களுக்கு கொடுக்கப் பட்டு இருப்பதை ஏன் மறக்கின்றார்கள்?.

      சகோக்களில் இச்செயல் நீண்ட கால்த்தில் நல்விளைவுகளை ஏற்படுத்தாது என்பதே நம் கருத்து.
      பாருங்கள் முக்மது(சல்) அவர்களைப் பற்றி விமர்சன பார்வை கொண்ட மூன்று திரைப்படங்கள் வெகு விரைவில் வருகின்றன.
      http://articles.latimes.com/2012/sep/25/entertainment/la-et-mn-muhammad-film-20120926

      வெளிநாட்டு சட்டப்படி அவை தடை செய்யப் படாது. தொடர்ந்து ஏதேனும் போராட்டம் செய்தால் பொருளாதாரம் பாதிக்கும். அரசு சும்மா இருக்காது.
      சினிமா பார்த்து அடுத்த படம் வந்தால் மறப்பவர் நம் மக்கள். ஆனால் இப்படி போராட்டம்,எதிர்ப்பு மறக்கப்படாது.

      சூழல் பொறுத்து வாழ்வில்லை எனில் காலம் பாடம் கற்றுக் கொடுக்கும் என்பதே பரிணாம விதியாகும்!!!

      டிஸ்கி: பரிணாமம் அறியார் அல்லவா அதுதான்!!

      நன்றி!!

      Delete
  34. சகோ சார்வாகன்,

    நலமா, அருமையான பதிவு. எப்படியோ இந்த சர்சையால், Young General விஜய்யின் படத்தை பார்க்கும் து(ர்)ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் )))).

    முதலில் சினிமா ஹலாலா?? சினிமா பார்ப்பது நடிப்பது ஹலாலா?? அல்லாவின் அளவற்ற அருள் கிட்டிய தாயீக்களின் பேச்சு எழுத்து தாவாக்களின் தாக்கத்தால், காஃபீர்கள் விட்டில் பூச்சிகளை போல சத்திய மார்க்கத்தில் கொத்து கொத்தாக விழுந்து கொண்டிருக்கும் வேலையில், பூ... ஒரு அணில் படம் மார்க்கத்தை தவறாக சித்தரித்து அசைக்க முடியுமா என்பது, அல்லாவின் அருளை கேள்விக்குறியாகி தொக்கி நிற்கும் ஒரு கேள்வி.

    சினிமாவில் சித்தரிப்புகள் (Stereotyping) இருந்து கொண்டேதான் இருக்கும். இது பொது ஊடகங்களுக்கும் பொருந்தும். ஒரு காலத்தில் கிருத்துவர்களை வில்லன்களாக தமிழ் படம் சித்தரித்தது என்று சொன்னார்கள். இப்போது ”தேவர்”களை மகிமை படுத்தும் படங்கள் வருகின்றன. எல்லா காலகட்டத்திலும் ஒருசாரார் எங்களை தவறாக சித்தரிக்கிறார்கள் என்று நிலையுள்ளது. சினிமாவை இப்படித்தான் எடுக்க வேண்டும் என்று கூற முடியாது, அது ஒரு dynamic entity. அதன் தன்மைகளை பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன.

    தற்போது ஏற்பட்டுள்ள நிலை, பயமுறுத்தினால் வேலை நடக்கின்றது என்று அறிந்து ஒரு படத்தில் தவறான சித்தரிப்பு என்று கூறி தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்ற நிலைதான வரும். இது சினிமாதுறையினரிடம் சாதிக்க சில அமைப்புகளக்கு இனிமேல் வழிகாட்டியாக இருக்கும். இப்போது ஏற்பட்டிருக்கும் சர்ச்சை படத்திற்கு நல்ல ஒரு பப்ளிசிட்டிதான். சட்டரீதியாக எடுத்துச்சென்றிருந்தால், இனிமேல் வரும் படங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்திருக்கும்.

    பாகிஸ்தான்காரன் இந்தியாவில் குண்டு வைக்க வர்றான், அவனை இங்குள்ள ஹீரோ தடுக்கிறான், சார், இதுதான் ஒன்லைன் ஸ்டோரி, இதை பர்மா பஜாரிலிருந்து நாலு ஆங்கில சி.டி. வாங்கி பரப்பரப்பாக எடுக்க வேண்டும் சார், என்று இயக்குனர் படமெடுக்க நினைத்தால் எப்படியெடுக்கவேண்டும்????

    முதலிலேயே ஒரு டிஸ்களைமர் போட்டுவிடவேண்டும் - இந்திய முமின்கள் உண்மையான முமின்கள், பாகிஸ்தானிலிருக்கும் முமின்கள் மார்க்கத்தை பின்பற்றாத கெட்ட முமின்கள் அதனால் குண்டு வைக்க வருகிறான், கெட்ட முமின்களை ஹீரோ ஒடுக்குகிறார், கெட்ட மூமின்கள் செய்யும் செயல்கள் உண்மையான மார்க்கம் இல்லை என்று.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வாங்க சகோ நரேன்,
      ஆளைக் காணோமே,நலமா??.
      நம்க்கு மார்க்கம் பிடிக்கிறதோ இலையோ,மார்க்கம் கொடுக்கும் சுவனம் மிகவும் பிடிக்கும் ,அந்த சுவன‌ம் குறித்து அதிக்ம் உறுதி செய்யும் தகவல்கள் இல்லை என்பதுதானே நம் பிரச்சினை. பாருங்கள் சுவனம் பற்றி ஒரு படம் எடுத்தால் மக்கள் அலை அலையாக மார்க்கம் சேர்வது உறுதி.இது தெரியாமல் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

      *********
      /தற்போது ஏற்பட்டுள்ள நிலை, பயமுறுத்தினால் வேலை நடக்கின்றது என்று அறிந்து ஒரு படத்தில் தவறான சித்தரிப்பு என்று கூறி தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்ற நிலைதான வரும். இது சினிமாதுறையினரிடம் சாதிக்க சில அமைப்புகளக்கு இனிமேல் வழிகாட்டியாக இருக்கும். இப்போது ஏற்பட்டிருக்கும் சர்ச்சை படத்திற்கு நல்ல ஒரு பப்ளிசிட்டிதான். சட்டரீதியாக எடுத்துச்சென்றிருந்தால், இனிமேல் வரும் படங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்திருக்கும்./
      அதே சட்டத்தை கையில் எடுப்பது எப்போதும் தவறு.அமெரிக்காவில் வாழும் நம்பிக்கையாளர் இப்படி செய்தால் வெளியேற்றி விடுவான்.
      நம் பதிவுல அமெரிக்க சகோக்கள் மிகவும் பாலிசாக எழுதுவர். படிக்க காமெடியாக் இருக்கும்.

      மத்திய கிழக்கில் எதற்காகவும் போராட்டம் நடத்த முடியாது!!! ஹி ஹி

      இப்போது இந்துத்வ ஆட்கள் இதை விட வலுவாக பிரச்சரத்தில் இறங்குவர். தேர்தலுக்கு அவர்களூக்கு நல்ல வாய்ப்பு அமைகிறது.

      நாளை நடப்பதை யார் அறிவார்?

      *********
      //முதலிலேயே ஒரு டிஸ்களைமர் போட்டுவிடவேண்டும் - இந்திய முமின்கள் உண்மையான முமின்கள், பாகிஸ்தானிலிருக்கும் முமின்கள் மார்க்கத்தை பின்பற்றாத கெட்ட முமின்கள் அதனால் குண்டு வைக்க வருகிறான், கெட்ட முமின்களை ஹீரோ ஒடுக்குகிறார், கெட்ட மூமின்கள் செய்யும் செயல்கள் உண்மையான மார்க்கம் இல்லை என்று.//
      சென்சார் சான்றிதழ் வழங்கப்ப்ட்டு விட்டது.இப்படத்தில் குறிப்பிடப் படுப்வை கற்ப்னையே என்றும் சொல்ல்லாம். அதுக்கு மேல் என்ன செய முடியும்.

      நம் சகோக்களின் இச்செயல் ஒரு வரலாற்றுத் தவறு. இஸ்ரேல் காசாவை ஆக்கிரமிக்க்லாம் அதுக்கு ஒரு போராட்டமா?

      மத்திய கிழக்கில் சூழ்நிலை சரியில்லை.எதற்கும் இங்கும் போராட்டம் என்று செய்தால் என்ன நடக்கும்.
      ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். நாம் இந்த தேர்தலை மிக உன்னிபாக இபோது இருந்தே அவதானிக்கிறோம்.
      நன்றி!!!நன்றி

      Delete
    2. //ஆளைக் காணோமே,நலமா??//

      in walking hibernation..LOL

      Delete
  35. உங்களுக்கு எத்தனை நண்பர்கள்? எண்ணிப் பார்க்கின்றேன்.

    எண்ணிப் பார்க்கின்றேன்.

    வவ்வாலும் நீங்களும் பங்காளிகளாக பொறந்துருப்பிங்களோ?

    ReplyDelete
  36. வாங்க சகோ ஜோதிஜி நலமா,
    எண்ணுங்கோ ,அனைவருமே நமது நண்பர்களே. மாற்றுக் கருத்து பார்வை வைக்கிறோம்.எது சரி என காலமும்,சூழலும் முடிவு செய்யும்.

    வவ்வால் அளவுக்கு நாம் அலசுவது இல்லை.எனினும் நாம் சிந்திப்பதை முகமூடி போடாமல் வெளியாக்குகிறோம். அவருக்கும் நம்க்கும் பல் ஒற்றுமைகள் உண்டு.இருவருமே ரெபெல்ஸ்,ஸ்கெப்டிஸ்,க்ரிட்டிக்ஸ் என ஆங்கிலத்தில் சொல்ல்லாம் வியப்பான‌ விடய்ம்தான். பதிவுல்கில் ஒத்த சிந்த்னை& மாற்று சிந்த்னை உடையோர் கிடைத்ததுதான் பெரிய வரம்.

    நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. சகோ.சார்வாகன் ,

      கருத்துக்கு நன்றி!

      எல்லாம் இயற்கையா ஒத்த சிந்தனை அமைவது தான்.

      ---------
      ஜோதிஜி,

      நாம அவ்ளோ எக்ஸ்பெர்ட் இல்லை,மேம்போக்கா நுனிப்புல் மேய்வதோடு சரி ஆனால் சார்வாகன் பரிணாமவியலில் மூழ்கி முத்தெடுப்பவர்,மேலும் சிந்தனைகள் ஒத்துப்போகுது சொல்ல வந்ததை சுற்றி வளைக்காமல் சொல்கிறோம்.

      இன்னும் சொல்லப்போனால் இதனால் நிறையப்பேரின் வெருப்பை சம்பாதித்து கொண்டோம் அதில் நல்ல ஒற்றுமை :-))

      Delete
  37. வணக்கம் சகோ.

    நல்லதொரு பதிவு.ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்குத் தான் கொண்டாட்டம் என்பார்கள். இனி எந்த ஜாதி மதப் பிரிவினரும் படத்தைப் பார்த்துவிட்டு விமர்சனத்திற்கு பதிலாக போராட்டம் நடத்தி மொக்கையான படங்களுக்கு உரம் போட்டு வளர்க்கலாம், என்ற சூழலுக்கு தமிழ்த் திரைப்படத்துறை உருவாக்கப்பட்டுவிட்டது.வாழ்க திரைப்படத்துறை!!!!

    ReplyDelete
  38. சகோ இனியவன்,

    முதலில் படம் இஸ்லாமுக்கு விரோதம் என்றார்கள்.

    என்ன விரோதம் என தெரியவில்லை.வில்ல்னை மூமினாக காட்டுவது தவறு என்றால் வில்லனுக்கு சாதி மதமே இல்லாத நாத்திகராக மட்டுமே காட்ட இயலும்.

    பணிந்தார் விஜய் என்கிறார்கள். மார்க்கத்தின் படி வணக்கம் சொன்னால் தவறு என் அறிவுரை வழங்குபவர்கள், முஸ்லிம்களை பணிந்தார் என சொல்வது ஹராம் ஆகாதா??

    ஹி ஹி

    நன்றி

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. ////இங்குள்ள மக்கள் அதிகம் சிந்திக்க தெரியாதவர்கள். சினிமாவை உண்மை என்று நம்புபவர்கள். எம்ஜிஆரை யோக்கியனாகவும் நம்பியாரை கெட்டவனாகவும் இன்றும் நம்பக் கொண்டிருப்போர் ஏராளம். எனவே தான் ஜெயலலிதா வரை முதல்வராக முடிகிறது. வேறு எந்த தகுதியும் தேவையில்லை. சினிமாவில் நல்லவனாக நடித்தால் தமிழகத்தை ஆள முடியும் என்ற நிலைதான் இன்று வரை உள்ளது.///

    இப்படி சொன்னது நம்ம அண்ணாச்சிவாள்...

    அண்ணாச்சிக்கு இந்தியரான ஜெயலலிதாவைப் பிடிக்காது.ஆனால் இத்தாலி சோனியாவிற்கு அன்னை என்று பாதபூஜை செய்வார்.


    ReplyDelete
  41. ////இங்குள்ள மக்கள் அதிகம் சிந்திக்க தெரியாதவர்கள். சினிமாவை உண்மை என்று நம்புபவர்கள். எம்ஜிஆரை யோக்கியனாகவும் நம்பியாரை கெட்டவனாகவும் இன்றும் நம்பக் கொண்டிருப்போர் ஏராளம். எனவே தான் ஜெயலலிதா வரை முதல்வராக முடிகிறது. வேறு எந்த தகுதியும் தேவையில்லை. சினிமாவில் நல்லவனாக நடித்தால் தமிழகத்தை ஆள முடியும் என்ற நிலைதான் இன்று வரை உள்ளது.///

    இப்படி சொன்னது நம்ம அண்ணாச்சிவாள்...

    கருணாநிதியும் சினிமா பின்னணியில் உள்ளவர் என்று அண்ணாச்சிக்குத் தெரியாதா?

    சினிமாவில் நல்லவனாக வசனம் எழுதினால் தமிழகத்தை ஆளமுடியும் என்று கருணாநிதியைப் பற்றியும் அண்ணாச்சியால் எழுதமுடியுமா?

    ReplyDelete
  42. ****ஒவ்வொரு விடயத்தை மதம்,இனம் சார் கண்ணோட்டத்தில் அணுகுவதை விட நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உடபட்டு ஏதேனும் செய்ய இயலுமா எனப் பார்ப்பது அறிவுடமை!!****

    நீங்க எப்படி????

    சினிமாவை விடுங்க, அரசியலை விடுங்க, பதிவுலகில் நீங்க பதிவர் பெயரை மதத்தை வைத்துத்தான் கருத்துச் சொல்றீங்க. நீங்க மட்டும் இல்லை, 90% பதிவர்கள் இப்படித்தான்.

    சும்மா எதையாவது இப்படி அறிவுரை சொல்லிக்கிட்டே திரியவேண்டியதுதான்.

    என்ன நீங்க ஏன் இப்படி இருக்கிறீங்னா, "அவங்க அப்படி இருப்பதால்"னு ஒரு பதில் சொல்லுவீங்க!


    ***இது போல் பல ப‌டம் உண்டு. பாகிஸ்தானில் இது சகஜமப்பா!!!***

    Genius!!!Pakistan is not a secular nation anymore. But India claims that it is..You are comparing apples and oranges.

    முக்கியமான வித்தியாசத்தை விட்டுப்புட்டு சும்மா என்னத்தையாவது பெருசா எழுத வேண்டியது!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் வருண் வாங்க,
      /நீங்க எப்படி????

      சினிமாவை விடுங்க, அரசியலை விடுங்க, பதிவுலகில் நீங்க பதிவர் பெயரை மதத்தை வைத்துத்தான் கருத்துச் சொல்றீங்க. நீங்க மட்டும் இல்லை, 90% பதிவர்கள் இப்படித்தான்.

      சும்மா எதையாவது இப்படி அறிவுரை சொல்லிக்கிட்டே திரியவேண்டியதுதான்.

      என்ன நீங்க ஏன் இப்படி இருக்கிறீங்னா, "அவங்க அப்படி இருப்பதால்"னு ஒரு பதில் சொல்லுவீங்க!


      ***இது போல் பல ப‌டம் உண்டு. பாகிஸ்தானில் இது சகஜமப்பா!!!***

      Genius!!!Pakistan is not a secular nation anymore. But India claims that it is..You are comparing apples and oranges.

      முக்கியமான வித்தியாசத்தை விட்டுப்புட்டு சும்மா என்னத்தையாவது பெருசா எழுத வேண்டியது!/


      நீங்கள் சொன்ன கருத்தை நான் விள்க்குகிறேன்.

      ஏன் முஸ்லிம்கள் மீது இப்படி கருத்து கொண்டு இருக்கிறீர்கள்??

      இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக‌ உள்ள நாடுகளில் ,பிற மதத்தவரை எப்படி வேண்டுமானாலும்,நடத்துவார்கள், விமர்சிபார்கள்,திரைப்படம் எடுப்பார்கள்.ஏன் எனில்____________ ஹி ஹி நீங்க விள்க்கனும்.

      இப்படி மூமின்கள் பெரும்பான்மையாக ஆனால் 100% இப்படி மட்டுமே இருக்க முடியும் என உறுதியாக் விளக்கியதற்கு நன்றி.

      ஹி ஹி மன‌தில் உள்ளது வெளியில் வருது!!!!!!!!

      இதனால்தான் இஸ்லாமிய மத பிரசாரத்தை பதிவுலகில் எதிர்க்கிறோம். மிக்க நன்றி!!!!!!!!!!

      Delete
    2. புரியாதமாரி நடிக்க வேணாம். பெரும்பாண்மை பத்தி இங்கே சொல்லலைங்க. பாகிஸ்தான் மதச்சார்பற்ற நாடு அல்ல! கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்னால் நாங்க "முஸ்லிம் தேசம்"னு சொல்லிப்புட்டாங்க. ஆனால் இந்தியா "மதச்சார்பற்ற நாடு"னு சொல்றாக.
      அப்படி சொல்வதால் "மதச்சார்பற்றதன்மை" எதிர் பார்க்கப்படுது. அதை புரிந்து கொள்ளவும்.

      ***இதனால்தான் இஸ்லாமிய மத பிரசாரத்தை பதிவுலகில் எதிர்க்கிறோம். மிக்க நன்றி!!!!!!!!!!***

      ஆக நீங்க ஒரு மதத்துக்கு எதிரா போராடுறீங்க. பிரச்சாரம் செய்றீங்க. சரி.

      அப்போ நீங்க ஏன் ஊருக்கு உபதேசம் செய்றீங்க???

      ///ஒவ்வொரு விடயத்தை மதம்,இனம் சார் கண்ணோட்டத்தில் அணுகுவதை விட நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உடபட்டு ஏதேனும் செய்ய இயலுமா எனப் பார்ப்பது அறிவுடமை!!//

      உங்களுக்கு "அறிவுடமையாக" இருக்க முடியலை. ஆனால் ஊரெல்லாம் எப்படி இருக்கனும்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க. இல்ல, இந்த அறிவுரை உங்களுக்கு நீங்களே சொல்லிக்கிறதா?

      Delete
    3. வருண் ஏன் இப்படி ஒரு கருத்து??

      நம்பவே முடியவில்லை!!!

      என் விளக்கம் மீது கருத்து சொல்லுங்க!!

      நீங்க கூறிய படி மூமின்கள் பெரும்பான்மை ஆனால் மற்றவர்களை கீழாகவே நடத்துவார்கள் .அது அவர்கள் இயல்பு. அப்போ இஸ்ரேல் மூமின்கள் பெரும்பான்மை ஆகாமல் தடுப்பது சரிதானே!!!!!!!!!

      நீங்க யூத கைக்கூலியா???

      நன்றி!!!

      Delete
    4. As per my Dawa information, it is claimed by the Muslims, that Islamic Law is the true and ultimate Secular Law treating other religion fair and equally. So Pakistan Secular Muslim Law must be more secular than the Indian concept of Secularism.
      India is not claiming to be Secular, the fact is that it is secular as per the Indian Constitution. In reality the working of it may be shown otherwise but the testing thing may be secular ground norms enshrined in the Indian constitution.

      பாகிஸ்தானையும் இந்தியாவையும் பொறுத்தி பார்ப்பது சரிதான்.

      Delete
  43. ////இங்குள்ள மக்கள் அதிகம் சிந்திக்க தெரியாதவர்கள். சினிமாவை உண்மை என்று நம்புபவர்கள். எம்ஜிஆரை யோக்கியனாகவும் நம்பியாரை கெட்டவனாகவும் இன்றும் நம்பக் கொண்டிருப்போர் ஏராளம். எனவே தான் ஜெயலலிதா வரை முதல்வராக முடிகிறது. வேறு எந்த தகுதியும் தேவையில்லை. சினிமாவில் நல்லவனாக நடித்தால் தமிழகத்தை ஆள முடியும் என்ற நிலைதான் இன்று வரை உள்ளது.///

    இப்படி சொன்னது நம்ம அண்ணாச்சிவாள்...

    அண்ணாச்சி இங்கிருந்த மக்களில் ஒரு சிலர் மட்டுமே சிந்திக்கத் தெரியாதவர்களாக இருந்தார்கள். அவர்களும் இப்போது இனம்மாறி மார்க்கவாதிகளாக உள்ளார்கள்.

    அண்ணாச்சி இப்ப இங்க சிந்திக்கத் தெரியாதவர்கள் யாரும் இல்லை.

    அறிவார்ந்த சமூகமாக இங்குள்ள மக்கள் வாழ்கிறார்கள்.

    ReplyDelete
  44. ////இங்குள்ள மக்கள் அதிகம் சிந்திக்க தெரியாதவர்கள். சினிமாவை உண்மை என்று நம்புபவர்கள். எம்ஜிஆரை யோக்கியனாகவும் நம்பியாரை கெட்டவனாகவும் இன்றும் நம்பக் கொண்டிருப்போர் ஏராளம். எனவே தான் ஜெயலலிதா வரை முதல்வராக முடிகிறது. வேறு எந்த தகுதியும் தேவையில்லை. சினிமாவில் நல்லவனாக நடித்தால் தமிழகத்தை ஆள முடியும் என்ற நிலைதான் இன்று வரை உள்ளது.///

    இப்படி சொன்னது நம்ம அண்ணாச்சிவாள்...

    அங்குள்ள...அங்கிருந்த மக்களைப் போல் முட்டாள்களில்லை இங்குள்ள மக்கள்.

    சினிமாவை உண்மை என்று நினைக்கும் மக்கள் பரவாயில்லை...யாரோ..என்றோ... எதையோ உளறியதை உண்மை என்று நினைக்கும் கும்பலை என்னவென்று அழைப்பது? விலங்கினும் கீழானவர்கள் என்றா?

    இங்குள்ள மக்கள் சிந்திக்கத் தெரியாதவர்கள் என்று கூற அண்ணாச்சிக்கு என்ன உரிமை? ஒரு பெரும் மக்கள் கூட்டத்தையே இழிவு படுத்துவது நம் அண்ணாச்சியா?

    இப்படித்தான் அண்ணாச்சி...
    உங்களைப் போல் துப்பாக்கி படத்தினரும் ஏதோ சொல்லிவிட்டார்கள்.

    இங்குள்ள மக்கள் சிந்திக்கத் தெரியாதவர்கள் என்று கூறிய உங்களை எதிர்த்து போராட்டமா நடந்தது?

    இங்குள்ள மக்கள் வன்முறையாளர்கள் அல்லவே.

    தாங்கள் வன்முறையாளர்கள் என்று மீண்டும் நிரூபித்த கூட்டத்திற்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. சகோ இராவணன் கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா.
      மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மக்க்ள் யாரைத் தேர்ந்தெடுத்தாலும் அவர்கள் ஆளலாம்.

      பாருங்கள் மத்திய கிழக்கில் யாரும் எதற்கும் போராட முடியாது? சர்வாதிகாரம்தான். அதை எதுவு சொல்ல மாட்டார்கள்!!

      சரி விடுங்க .காலம் பதில் சொல்லும்.

      நன்றி!!!!!!!!!!

      Delete
  45. எதற்காக அவனவன் இசுலாமோபோபியா பிடித்து அலைகிறான்... இசுலாமிய தீவிரவாதம் காரணமாக மட்டுமா? இல்லை, இசுலாம் எங்கு பெரும்பான்மை பெறுகிறதோ அங்கெல்லாம் தலைதூக்கும் மதவாதிகள் நம்மை 8-ம் நூற்றாண்டிற்கே அழைத்து செல்ல ஆரம்பித்துவிடுவதுதான்.

    9-வது வகுப்பு மாணவி வயதுக்கு வந்ததால், ஜமாஅத் அவளது பள்ளிபடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கட்டளை. மாணவியின் படிப்பு பாழ். இது எங்கு நடந்தது ஆப்கானிஸ்தானிலா அல்லது பாகிஸ்தானிலா? நம்ம புதுக்கோட்டையில்!

    http://tamil.oneindia.in/news/2012/11/15/tamilnadu-daughter-forced-drop-of-school-education-164700.html

    நல்லகாலம் இன்னமும் தமிழகத்தில் அவர்களுக்கு பெரும்பான்மை கிட்டவில்லை.கிட்டியிருப்பின் தமிழ்நாடு தாலிபான் என ஆரம்பித்து மாலாலாவை சுட்டது போல ஜனுபா பேகத்தையும் போட்டிருப்பார்கள்.

    இந்த கொடுமையை எதிர்த்து எந்த முசல்மான் பதிவரும் பதிவு போடவில்லை, இசுலாமிய அமைப்புகள் போராடவில்லை. இதைவிட முக்கிய சினிமா பிரச்சனை காரணமாக அனைவரும் டாக்குடருடன் ரொம்ப பிஸி. விஜய் பணிந்தார். இனிமே தமிழ்நாட்டில் முசுலிம்கள் எல்லோரையும் நல்லவர்கள் என நம்பிவிடுவார்கள்.வெற்றி, வெற்றி!

    ReplyDelete
    Replies
    1. சகோ நந்தவனம்,

      ஆப்பசைத்த குரங்கின் கதை போல்தான் சகோ.

      அந்தக் கதை உங்களுக்கு தெரியும் என்பதால் வேறு கதை =சொல்கிறேன்.

      ஒரு மனிதன் ஒரு நாய்,பூனை வளர்த்து அவ்ற்றை பேணி பாத்காத்து அன்போடு காபாற்றி வந்தான்.

      நாய் சொல்லியது: என் எஜமான் எனக்கு உணவு,இருப்பிடம் அளித்து அன்போடு பராம்ரிக்கிறார், அவர் மிகவும் சிறந்த்வர் என்பதால் இப்படி செய்கிறார்.

      பூனை சொல்லியது: என் எஜமான் எனக்கு உணவு,இருப்பிடம் அளித்து அன்போடு பராம்ரிக்கிறார், நான் மிகவும் சிறந்த்வர் என்பதால் இப்படி செய்கிறார்.

      எஜமான்= ? நாய்=? பூனை=?

      இதற்கு சரியான விடை தெரிந்தால் வெளியே சொல்லக் கூடாது.

      ஆனால் நண்பர் வருணின் பின்னூட்டம், என் விள்க்கம் படித்தால் புரியும்

      ஹா ஹா ஹா

      நன்றி!!!!!!!!!!!!!!!

      Delete
    2. நந்தவனம்,

      இதெல்லாம் அச்சடித்த புத்தகத்தில் இருக்கே அதை மாற்றினால் சுவனம் கிடைக்காதே , இறந்த பின் கிடைக்கும் என நம்பும் சுவனத்திற்காக இருக்கும் போதே நரகத்தை படைக்கும் மாக்கள், ஆனால் இங்குள்ள மக்களுக்கு சிந்திக்க தெரியாது சினிமாவில் காட்டியதை உண்மை என நம்பிடுவார்கள் என சொல்வது வேடிக்கை.

      கூத்தாடி சொல்வதை நம்பும் சிந்திக்க தெரியாத மக்கள் என சொல்லிவிட்டு ஒரு முசல்மான் கூத்தாடி ஹஜ் போனால் ஆஹா மார்க்கத்தின் சிறப்பு என பெருமைப்படுவார்கள், அப்போ கூத்தாடியை நம்புவது யார் :-))

      போதை மார்க்கத்திற்கு எதிரானது என்பார்கள் உலகிலேயே மிகப்பெரிய ஹெராயின் உற்பத்தி குழு தலிபான்கள் தான் ஆனால் அவர்களை விடுதலை வீரர்கள் என்பார்கள்.

      ஆப்கானில் ஆண் முதல் பெண்,குழந்தைகள் வரை போதை அடிமைகள், போதை மீட்பு மையத்தினை ஐக்கிய நாடுகள் சபை உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்துகின்றன.

      அதுக்கு எல்லாம் கவலைப்பட மாட்டார்கள் ஒரு சினிமாவில் இஸ்லாமிய பெயரில் வில்லன் வந்துவிட்டால் பொங்குவார்கள் :-))

      Delete
    3. விஜய் அடிபணிவது, இஸ்லமியர் வெற்றியும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. விஜய் ஒரு வியாபாரி. இஸ்லாமியர் ரசிகர்களை ஒட்டுமொத்தமாக இழக்க விரும்பவில்லை. அதான் "இந்த நாடகம்"! :)))

      Delete
    4. வருண்
      நீங்க அவங்களை ஆதரித்து எழுதி ஹிட்ஸ் வாங்குவது போல் என தெளிவாக் சொல்லலாமே.
      ஆயினும் அவங்க பெரும்பான்மை ஆனால் என்ன நடக்கும் என தெரிந்து இருக்கிறதே புத்திசாலிதான்.தெரிந்தே ஆதரவு என்றால் என்ன பொருள்? விளக்குங்க!!

      மிக மிக மிக நன்றி

      Delete
    5. சார்: இன்னைக்கு உண்மை நிலவரம் என்னனா அவங்கள எதிர்த்துப் பதிவு போட்டால்த்தான் ஒருவர் பதிவுக்கு "ஹிட்ஸ்" "மதிப்பெண்கள்" "நன் மதிப்பு" கிடைக்கும் என்பதே. அதை நீங்க கண்கூட பார்க்கலாம். நான் புத்திசாலியா இருந்தால் அதைத்தான் செய்யனும். நான் "புத்திசாலி" எல்லாம் இல்லைங்க. எனக்குத் தோணுவதை சொல்லுவேன்.

      Delete
    6. வருண்,
      நீங்க வரலாறு படிக்கோணும்
      //புரியாதமாரி நடிக்க வேணாம். பெரும்பாண்மை பத்தி இங்கே சொல்லலைங்க. பாகிஸ்தான் மதச்சார்பற்ற நாடு அல்ல! கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்னால் நாங்க "முஸ்லிம் தேசம்"னு சொல்லிப்புட்டாங்க//

      முஸ்லிம்கள் பெரும்பான்மையாய் இருந்த இடங்களை இணைத்து பாகிஸ்தான் பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து உருவானது.

      ஆகவே மதமாற்றம் செய்து பெரும்பான்மை ஆனால் மத ஆட்சி வரும்,பிறர் இரண்டாம் தர குடிமக்கள் ஆவார் என்பதையும் கூறுவதற்கும் நன்றி

      இன்னும் விள்க்குங்க!!!

      மிக மிக .....மிக நன்றிகள்!!

      Delete
    7. வருண்
      //எனக்குத் தோணுவதை சொல்லுவேன்.//
      இன்னைக்கு தோன்றியதுதான் சரியான் உண்மை.மூமின்கள் பெரும்பான்மை ஆனால் மத ஆட்சி.பிறரை எப்படி வேண்டுமானாலும் நடத்துவார்கள்!!!

      அருமை

      மேலே சொல்லுங்க!!

      Delete
  46. திரு ராவணன்!

    //அண்ணாச்சி தூங்கும் போது விடும் குறட்டையால் பக்கம் இருப்பவருக்கே பாதிப்பு.

    ஆனால் விழித்திருக்கும்போது குறட்டை விடுபவர்களால் இந்த உலகிற்கே பாதிப்பு.//

    விழித்திருக்கும் போது குறட்டை விடக் கூடாது என்பதற்காகத்தான் உங்களை ஒரு நல்ல மருத்துவரை பார்க்க சொன்னேன். ஆனால் எனது பேச்சை நீங்கள் கேட்பதாக இல்லை. நான் என்ன செய்ய? :-)

    //சினிமாவை உண்மை என்று நினைக்கும் மக்கள் பரவாயில்லை...யாரோ..என்றோ... எதையோ உளறியதை உண்மை என்று நினைக்கும் கும்பலை என்னவென்று அழைப்பது? விலங்கினும் கீழானவர்கள் என்றா?//

    உங்களுக்கென்று உள்ள வேதத்தை பின்பற்றுபவர்களை இவ்வாறெல்லாம் விலங்குகள் என்று பழிக்காதீர்கள்? பிறகு ராமகோபாலன் உங்கள் மேல் கேஸ் போடப் போகிறார்! :-(

    //இங்குள்ள மக்கள் சிந்திக்கத் தெரியாதவர்கள் என்று கூற அண்ணாச்சிக்கு என்ன உரிமை? ஒரு பெரும் மக்கள் கூட்டத்தையே இழிவு படுத்துவது நம் அண்ணாச்சியா? //

    ஹி...ஹி...அந்த கூட்டத்தில் எனது குடும்பமும் வருமே! ஏனெனில் எங்கள் குடும்பத்திலும் திமுகவை ஆதரிக்கும் இரண்டு பேரும் அதிமுகவை ஆதரிக்கும் இரண்டு பேரும் சம அளவில் உள்ளனர்.

    //இங்குள்ள மக்கள் வன்முறையாளர்கள் அல்லவே.//

    இரண்டு வாரத்துக்கு முன்பு ராமநாதபுரத்தில் சாதி வெறியால் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளார்களே! சில நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் 300 க்கும் மேற்பட்ட குடிசைகள் கொளுத்தப்பட்டுள்ளதே! நீங்கள் செய்திகளை எல்லாம் பார்ப்பதேயில்லையா? அதிகம் குறட்டை விட்டாமல் இந்த ஊர் பக்கம் போய் அமைதியை ஏற்படுத்த முயற்சிக்கலாமே!

    ReplyDelete
  47. சகோ வருண்!

    //சார்: இன்னைக்கு உண்மை நிலவரம் என்னனா அவங்கள எதிர்த்துப் பதிவு போட்டால்த்தான் ஒருவர் பதிவுக்கு "ஹிட்ஸ்" "மதிப்பெண்கள்" "நன் மதிப்பு" கிடைக்கும் என்பதே. அதை நீங்க கண்கூட பார்க்கலாம். நான் புத்திசாலியா இருந்தால் அதைத்தான் செய்யனும். நான் "புத்திசாலி" எல்லாம் இல்லைங்க. எனக்குத் தோணுவதை சொல்லுவேன்.//

    இதை எல்லாம் நன்கு அறிந்தவர்தான் சார்வாகன். சில நேரங்களில் தெரியாதது போல் பாவ்லா காண்பிப்பார்.

    ReplyDelete
  48. //இசுலாம் எங்கு பெரும்பான்மை பெறுகிறதோ அங்கெல்லாம் தலைதூக்கும் மதவாதிகள் நம்மை 8-ம் நூற்றாண்டிற்கே அழைத்து செல்ல ஆரம்பித்துவிடுவதுதான்//
    எவ்வளவு சிறப்பாக திட்டுமிட்டு அக்கிரமகாரர்களை தாக்கி அழிக்கும் இஸ்ரேல்- யூதர்கள் 1400 வருடங்களுக்கு முன்பு தங்கள் திறமையை சிறிது காட்டியிருந்தால் எவ்வளவு நல்லாக இருந்திருக்கும். உலகம் அமைதியாக இருந்திருக்கும், பாகிஸ்தானும் கிடையாது.இந்தியாவுக்கு தொல்லையும் இல்லை. ஆப்கானிஸ்தானும் நல்ல நாடாக இருந்திருக்கும்.தமிழ்நாட்டில் ஜமாஅத்தார் கொள்ளை (ஜமாஅத்தைச் சேர்ந்த எம்.எஸ். நஜிமுத்தீன் என்பவர் ஹாஜிரம்மாள் குடும்பத்திற்கு ரூ.15000 அபராதம் விதித்தார்)மிரட்டல்களும் இருக்காது.9வது வகுப்பு தமிழ் மாணவி தனது படிப்பை தொடர்ந்திருப்பார்.

    ReplyDelete
  49. துப்பாக்கி படத்தில் நாட்டில் நடக்கும் ஒரு காட்சி மாதிரி காட்டியதற்காக 24 முஸ்லிம் அமைப்புகள் போர்க்கொடி பிடித்தனவாம். இஸ்லாமியர்கள் எல்லாம் சகோதரர்களாயிற்றே! எதற்க்கு 24 பிரிவுகள்? தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருந்தால் 24 குரூப்பும் சண்டை செய்ய பாகிஸ்தான் மாதிரியே இருக்கும்.

    ReplyDelete
  50. இரண்டு வாரத்துக்கு முன்பு ராமநாதபுரத்தில் சாதி வெறியால் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளார்களே! சில நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் 300 க்கும் மேற்பட்ட குடிசைகள் கொளுத்தப்பட்டுள்ளதே! நீங்கள் செய்திகளை எல்லாம் பார்ப்பதேயில்லையா? அதிகம் குறட்டை விட்டாமல் இந்த ஊர் பக்கம் போய் அமைதியை ஏற்படுத்த முயற்சிக்கலாமே!///

    என்னே அமைதியாகிவிட்டது.

    எவ்வளவு சிறப்பாக திட்டுமிட்டு அக்கிரமகாரர்களை தாக்கி அழிக்கும் இஸ்ரேல்- யூதர்கள் 1400 வருடங்களுக்கு முன்பு தங்கள் திறமையை சிறிது காட்டியிருந்தால் எவ்வளவு நல்லாக இருந்திருக்கும். உலகம் அமைதியாக இருந்திருக்கும்,///

    இவர்களுடைய அயோக்கியத்தனங்களால் இஸ்லாம் வளர்ந்தது.

    புரட்சி வீரன் ஹிட்லர் இவர்களை சும்மாவா கொன்றான்? இல்லைஎன்றால் இந்த கொடூர யூத கூட்டம் உலகையே அளிவுப்பாதைக்கு இட்டு சென்று இருக்கும்

    அமைதியின் திரு உருவம் ஏசுவையே சித்ரவதை படுத்தி கொன்ற ராட்சச கூட்டாம் ஆயிற்றே

    ReplyDelete
    Replies
    1. //புரட்சி வீரன் ஹிட்லர் இவர்களை சும்மாவா கொன்றான்?// ஹிட்லரை புரட்சி வீரன் என்று சொல்ல எவ்வளவு கொடூர மனம் வேண்டும்!

      Delete
  51. robinஒரு கன்னத்தில் அடித்தால் மறு கனன்த்தை காட்டுங்கள் என்று சொன்ன இயேசுவை சிலுவையை சுமக்க வைத்து பல சித்ரவதைகளை செய்து கொடுமைப் படுத்தி கொன்ற யூதர்களை கொன்ற ஹிட்லரை புரட்சி வீரன் என்று சொல்லாமல் இன்றைய காலத்திலும் பாலஸ்தின குழந்தைகளை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் யூதர்களை சொல்லவேண்டுமா?

    ReplyDelete
    Replies
    1. வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அதிகமாக கொடுமைப்படுத்தப்பட்டவர்கள் யூதர்கள்தான். தாங்கள் செய்ததற்கு அதிகமாகவே கஷ்டப்பட்டுவிட்டனர். உலகமெங்கும் சிதறடிக்கப்பட்டனர். தற்போதுதான் ஆபிரகாம் காலத்திலிருந்து தங்கள் மூதாதையர் வாழ்ந்து வந்த இடத்தில் ஒரு நாட்டை உருவாக்கி வாழத் தொடங்கியுள்ளனர். இப்போதாவது அவர்கள் நிம்மதியாக இருந்துவிட்டு போகட்டுமே. எதற்காக தீவிரவாதிகளை ஏவி விடவேண்டும்?

      இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட யூதர்கள் காரணமாக இருந்தாலும் யூத இனம் முற்றிலும் அழிந்துபோகவேண்டும் என்று என்னால் நினைக்க முடியவில்லை. இன்னும் இவர்கள் ஒடுக்கப்படுகிறார்களே என்று பரிதாபமே வருகிறது. இதுதான் இஸ்லாத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம்.

      ஹிட்லர் யூதர்களை மட்டும் கொல்லவில்லை, தன்னை எதிர்த்த எல்லாரையும் அழித்தான். இப்படிப்பட்ட கொடூரமான ரத்த வெறிபிடித்தவனை புரட்சி வீரன் என்று சொன்னால் நரேந்திரமோடியையும் புரட்சிவீரன் என்று சொல்லலாமே.

      Delete
    2. /////இப்போதாவது அவர்கள் நிம்மதியாக இருந்துவிட்டு போகட்டுமே. எதற்காக தீவிரவாதிகளை ஏவி விடவேண்டும்?////

      இப்போது அவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள் ஆனால் பாலஸ்தீனத்தின் நிம்மதியை அல்லவா சூறையாடி கொண்டு இருக்கிறார்கள்.இவர்கள் நிம்மதியாக இருந்தல சும்மா இருக்கமாட்டார்கள் அடுத்து யாருக்கு கேடு செய்யலாம் என்பது அவர்கள் மூளையாக இருக்கும்.
      ////இன்னும் இவர்கள் ஒடுக்கப்படுகிறார்களே என்று பரிதாபமே வருகிறது. இதுதான் இஸ்லாத்திற்கும் கிறிஸ்தவத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம்.///

      அமெரிக்காவை தவிர்த்து வேறு எந்த நாடுகளும் இஸ்ரேலின் அயோக்கியத்தனத்தை ஆதரிக்கவில்லை .கிறித்தவன் இராக்கிலும் செய்த கொடுமைகள் இன்னும் மறந்துவிடவில்லை.பேரழிவு ஆயுதங்கள் என்ற பொய்யை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி அப்பாவி மக்களைக் கொன்று தனது கைபிள்ளை இஸ்ரேல்வழியாக எண்ணெய் கொள்ளை இஸ்லாமியர்கள் நடத்தவில்லை .லிபியாவில் ஜனநாயக போர்வைக்குள் புகுந்து எண்ணை கிணறுகளை பங்கு போடவில்லை .எண்ணைக்காக இன்றுவரை அம்மக்கள் கொல்லப்படுகிறார்களே இதுதான் கிறித்தவத்தின் லட்சணம்.

      ////ஹிட்லர் யூதர்களை மட்டும் கொல்லவில்லை, தன்னை எதிர்த்த எல்லாரையும் அழித்தான். இப்படிப்பட்ட கொடூரமான ரத்த வெறிபிடித்தவனை புரட்சி வீரன் என்று சொன்னால் நரேந்திரமோடியையும் புரட்சிவீரன் என்று சொல்லலாமே. ///

      வெட்கமாக இல்லையா ?உங்களுக்கு , அணுகுண்டு வீசி கோடிக்கணக்கான மக்களை கொன்ற அமெரிகனைவிடவா ஹிட்லர் கொடியவன்? இன்னும் அந்த இடங்களில் புள் பூண்டுகள் கூட விளைய மறுக்குதே இது யாருடைய கொடுமை? சதாம்ஹுசைன் அமெரிக்காவை எதிர்த்ததால் என்ன கதி அடைந்தார் ?சதாம் ஹுசைன் செய்த தவறு தனது நாட்டின் நாணய மாற்றுவிகிதத்தை டாலரில் இருந்து யுரோ வுக்கு மாற்றினார் ,இதுதானே அவர் செய்த தவறு.பாவம் இதனால் எத்தனை அப்பாவி மக்கள் இன்றுவரை செத்துக் கொண்டிருக்கிறார்களே ?
      யூதர்கள்இயேசுவை கொன்றார்கள் ,ஹிட்ளர் ஆட்சிக்கு வருமுன் காலத்தில் அங்கு யூதர்களின் ஆதிக்கம் கடு கொடுமைக்குள் மக்களை சிதைத்தனர் .யூதர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள் மக்கள் அதில் ஹிட்லர் குடும்பமும் ஒன்று .வட்டி தராவிட்டால் அவர்கள் பெண்களை இழுத்து செல்வது சகஜமாக இருந்தது.
      நரேந்திர மோடி அரசியலுக்கு ஆக ,தேர்தல் வருமுன்னர் ரயிலில் வந்த ஹிந்து சாதுக்களைக் கொன்று முஸ்லிம்கள் மீது பழி போட்டு அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்தி முஸ்லிம்களைக் கொன்றான் .டேஹல்கா வின் ஆதாரங்கள் தெளிவாக சொல்லுகின்றன .முஸ்லிம்கள் ,யூதர்களைப்போல இயேசுவை கொல்லவில்லை.ராமர் கோயிலையும் பாபர் மஸ்ஜித் போல தகர்க்கவில்லை .யூதர்கள் போல குஜராத் முஸ்லிம்கள் யாரையும் கொல்ல வில்லை .மோடி ஆதிக்கத்தில் அவர்கள் அடங்கியே இருந்தார்கள் ஆயின் ஹிட்லருக்கும் மோடிக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு

      Delete
    3. the same united states refused to give visa for Modi you people are happy now you speak against modi.what a double standard you have. In united states muslim live happenly.Then what happened to hindus in pakistsan.16% of population reduced to 1.83 comparatively one crore hindus missing in 60 years. In Islamic invansion nearly 6 crore HIndus are killed by muslim Invaders. rama janbhomithen who demolihed oh hindus themselves demolihed who demolish kasi viswanth temple the religious fantatic your beloved Aurenzgeb.

      Delete
  52. //இஸ்ரேல்- யூதர்கள் 1400 வருடங்களுக்கு முன்பு தங்கள் திறமையை சிறிது காட்டியிருந்தால் எவ்வளவு நல்லாக இருந்திருக்கும். உலகம் அமைதியாக இருந்திருக்கும்,//

    தமிழர்களாகிய நாம் ஒற்றுமையாக இருந்திருந்தால் வேக நரி என்ற பார்ப்பன குஞ்சு தமிழகததில் கால் வைத்திருக்குமா? ஆடு மாடுகளை வியாபாரத்துக்காக கைபர் கணவாய் வழியாக வந்த இந்த கூட்டத்தை அன்றே விரட்டியிருந்தால் எண்ணாயிரம் சமண தமிழர்கள் கழுவில் ஏற்றப்படாமல் தப்பித்திருப்பர். பல ஆயிரம் பவுத்த விகாரைகள் காப்பாற்றப்பட்டிருக்கும். ராமநாதபுரம், தர்மபுரி கலவரங்களும் நடந்திருக்காது. இந்த நாட்டு பூர்வ குடி மக்களை சூத்திரன் என்று இன்று வரை தைரியமாக அழைக்கும் தைரியமும் வந்திருக்காது. தந்தை பெரியார் சொன்னது போல் இது வேகநரி போன்ற நச்சுபாம்புகளின் தவறல்ல. இவர்களை இந்த அளவு பேச விட்ட தமிழர்கள் தான் முதல் குற்றவாளி.

    ReplyDelete
    Replies
    1. rowathara who u still speaking Aryan Invansion thoery proved false by scholars. so you need lie. we know how kuron designed by copying chirstain apocryphia and jews apocryphia you come to speak here. If Hindus are unite then no Islam invaders come to invade India. If Hindus behave how muslims behave in pakistan then you people keep quit.we know about asraf and ajalaf caste problems in Islam.how arab muslims treat other non-arab muslims badly we all knewn that.

      Delete
  53. //சுவனப் பிரியன்November 17, 2012 3:49 PM இவர்களை இந்த அளவு பேச விட்ட தமிழர்கள் தான் முதல் குற்றவாளி.//
    ஹி ஹி ஹி இஸ்லாமிய நாடுகளில் இல்லாத ஒரு சுதந்திரத்தை இஸ்லாமிய மதவாதிகளுக்கு ஏற்படுத்தி கொடுத்து,அரபு ஆதிக்கத்துக்கு பிரசாரம் செய்ய அனுமதித்தது தமிழர்களின் பெரிய தவறு மட்டுமல்ல இந்திய ஜ‌னநாயகத்தின் தவறு. இந்திய குடிமக்களுக்கு முழு சுதந்திரம் இருக்க வேண்டும்.இஸ்லாமிய மதவாதிகளுக்கு அல்லாவை வணங்கும் பூரண சுதந்திரத்தோடு சரி. அதன் எல்லையை தாண்ட அனுமதிக்க கூடாது.
    சுவர்ன சுவாமிகளின் இந்தியா பின்பற்ற வேண்டிய முன் மாதிரி மாடல்நாடு சவூதிஅரேபியாவில் பிற மத மக்களுக்கு தங்கள் சாமிகளை வணங்கும் உரிமை கூட கிடையாது.
    சுவர்ன சுவாமிகளுக்கு இஸ்லாம் சிறுபான்மையினராக இருப்பதால் தமிழர் என்ற ஒரு பாசம் இப்போ வந்து விட்டது. தமிழர்களின் இந்தியர்களின் மிக பெரிய ஜாதி பலயீனத்தை பயன்படுத்தி ஏதாவது ஒரு ஜாதியை சொல்லி தமிழர்களை பிரித்து அரபு ஆதிக்கத்துக்குள் சுலபமாக கொண்டு வரலாம் என்று நம்புகிறார்.

    ReplyDelete