Friday, April 18, 2014

அறிவியல் விவாதம் : ஒளியின் வேகம் மாறுமா?


வணக்கம் நண்பர்களே,
சகோதரர் கிருஷ்ணாவின் அருமையான ன்ஸ்டினின் சார்பியல் கொள்கை பற்றிய அறிவியல் பதிவில் நடைபெற்ற விவாதம் சார்ந்து , நாம் தேடிய விடயங்களே இப்பதிவு.

சகோ கிருஷ்னாவின் பதிவு

வழக்கம் போல் சகோ வவ்வாலும், மாப்ளே தாசும் அவரவர் வாதங்களை எடுத்து வைத்தார்கள். சகோ வவ்வாலின் கருத்துக்கள் ஆவண.

சிவப்பில் உள்ளது சகோ வவ்வாலின் கருத்துகள் அப்படியே கொடுத்து இருக்கிறேன். கருப்பில்(நமக்கு பிடித்த கலரு!!!) உள்ளது நமது  எளிமையான‌(??)
சுருக்கம்

1.ஒளியின் வேகம் நிலையானது அல்ல ,ஒவ்வொரு ரெபரென்ஸ் ஃபிரேமிலும் மாறுபடுகிறது. [ஒளியின் வேகம் சூழல் பொறுத்து மாறலாம்]



பிரபஞ்சம் தோன்ற சூப்பர் நோவா வெடிப்பு தேவை என்பதும் ,அதனை நிர்ணயிக்க "சந்திராஸ் லிமிட்" உதவுகின்றது என்பதும் புரியும்.

பிரபஞ்சம் தொடர்ந்து விரிவடையுமா, இல்லை ஒரு எல்லையில் விரிவு நின்று விடுமா, அல்லது மீண்டும் சுருங்கி சிங்குலாரிட்டி ஏற்பட்டு "பிக் பாங்க்' ஏற்படுமா என்பதை நிர்ணயிக்க பிரபஞ்சத்தின் நிறை மற்றும் ஈர்ப்பு விசை ஆகியவற்றை ஒப்பிடுகிரார்கள், அதற்கும் சந்திராஸ் லிமிட் அடிப்படையிலேயே கணக்கீடு செய்கிறார்கள்.

#
ரெட் ஷிப்ட் விடயத்தில் நேரடியாக அதனைக்கண்டுப்பிடித்தவர் சந்திர சேகர் என்பதாக சொல்லிவிட்டேன் ,அதனைக்கண்டுப்பிடிக்க அச்சாரமிட்ட டாப்லர் முதல் ஃபிரைட்மேன் வரையில் பலரும் ரெட் ஷிப்ட் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

ஹப்பிள் ஆய்வும் அதனை உறுதிப்படுத்தி பிரபஞ்சம் விரிவதை சொல்லியுள்ளது.[அறிவியலாளர் சந்திரசேகரின் கண்டுபிடிப்பான சந்திரா எல்லை என்பது, ஹூபிலின் ஆய்வுக்கு தூண்டுதல், அதுவே பிரபஞ்ச விரிவடைதலின் எல்லையை  அளவிடவும் உதவுகிறது.]

3.a)பிரபஞ்சத்தின் நிறையும் , ஈர்ப்பு விசையும் சம நிலை ஆனால் ,விரிவடைந்த பிரபஞ்சம் அப்படியே நின்றுவிடும்.

b)
நிறை ஈர்ப்பு விசையை விட அதிகம் ஆனால் ,தொடர்ந்து விரிவடையும்.

c)
நிறையை விட ஈர்ப்பு விசை அதிகம் ஆனால் சுருங்கி ,சிங்குலாரிட்டி ஏற்படும். அதன் பின் மீண்டும் பெரு வெடிப்பு.
இதற்கு அடிப்படையாக இருப்பது சந்திராஸ் லிமிட் கண்டுப்பிடிப்பே.
[பேரண்டம் விரிவடையும்/சுருங்கும் காரணி பிரப்ஞ்சத்தின் நிறை மற்றும் ,ஈர்ப்பு விசை சார்ந்தது.]

சரி மாப்ளே என்ன சொல்கிறார்?

வழக்கம் போல் எதிர் கருத்தாளரிடம் ஆதாரம் கேட்பார், கொடுக்கும் சுட்டிகளில் உள்ள விடயங்களுக்கு மேலதிக தகவல், என மார்க்கரீதியாக மார்க்கமாக விவாதம் செய்கிறார்.

இப்பதிவில் முதல் கருத்து (ஓளியின் வேகம் மாறுமா?)மீது மட்டுமே நாம்  அலசுகிறோம். மற்ற விடயங்களை((சந்திரசேகர் எல்லை(chandra’s limit), பேரண்டம் விரிதலின் எல்லை வரையறுப்பு) அடுத்தடுத்தபதிவுகளில் பார்ப்போம். உண்மையில் சகோ கிருஷ்னாவின் பதிவில் , பின்னூட்ட விவாதங்களில் இவைக்கான பதில்கள் கொடுக்கப்பட்டு விட்டன. இருந்தாலும் நாமும் கொஞ்சம் அறிந்தவற்றைப் பகிர்வோம்.

மாப்ளே தாசு அவரின் கருத்தை சொல்லாவிட்டாலும், அவரின் கருத்து ஒளியின் வேகம் ஒரு மாறிலி என்னும் திரு ஐன்ஸ்டினின் சிறப்பு சார்பியலை(special relativity) வழிமொழிகிறார் என்பதை நாம் எளிதில் புரிய முடியும்.

அவர் இஸ்க்கான் ஆத்திகர் என்பதால் அறிவியலையும் அதே நோக்கில் அணுகி, ஐன்ஸ்டினின் (சிறப்பு சார்பியல்) கொள்கையே இறுதியானது என அடம் பிடிப்பதில் வியப்பு இல்லை. நான் அப்படியும் சொல்ல்வில்லை என்றும், சொன்னதற்கு ஆதாரம் கேட்பார் எனவும் அறிவேன். எதையுமே குறிப்பாக சொல்லாமல், அடுத்தவர் சொல்லும் விடயங்கள் மீது மட்டும் சந்தேகம் தெறிக்கும் கேள்வி கேட்பது யார் வேண்டுமானாலும் செய்யக் கூடிய விடயம்தான்.

ஒரு புதிய அறிவியல் கொள்கை அதற்கு முந்தைய பல  கொள்கைகளை மீறாமலும், சில கொள்கைகளை விட பரிசோதனைக்கு பொருந்துகிறது,சான்றுகளை உண்மையாக்குகிறது என்ற சூழலில் மட்டுமே ஏற்கப் படுகிறது. ஆகவே அறிவியலில் எந்தக் கொள்கையும் நிரந்தரமானது என சொல்லவே முடியாது. அறிவியல் என்பது சான்றுகளுக்கு பொருந்தும் (கணித) மாதிரி அமைத்தல்(mathematical model fitting) என்பதை விளங்க வேண்டும்.ஒரு நிகழ்விற்கு பல காரணிகள் இருக்கும் போது , சிலவற்றை மாறிலியாகவும், சிலவற்றை மாறிகளாகவும் வரையறுக்க பல வாய்ப்புகள் உண்டு.

காலம் அனைத்து தளத்திற்கும் பொதுவானது என்பதை, காலம் என்பதும் வெளியைப் பொறுத்து மாறும் என்னும் சார்பியல் கொள்கை புரட்டிப் போட்டது. இக்கொள்கை மேக்ஸ்வெல் (மின்காந்த)சமன்பாடுகளுகளுக்கு பொருந்தியதால், ஒளியின் அடிப்படைத் துகள் ஈதர்(ether)'கு பரிசோதனை சான்று இல்லாமையாலும் ,அது ஏற்கப்பட்டது. ஆனாலும் இன்னும் சார்பியலும், குவாண்டம் இயக்கவியலும் இணையமுடியவில்லை என்பதால், ஒளி என்பதும் துகள்(particle) மற்றும் அலை(wave) என்னும் இரட்டைக்(dual) கருத்து இப்போது ஏற்கப்படுவதால் மாற்றுக் கொள்கைகளுக்கு வாய்ப்பு இருக்கிறது.

ஒளியின் வேகம் மாறிலியாக இருக்க வேண்டும் என முதலில் சொன்னவர் மேக்ஸ்வெல், அவரின் கருத்துகளையே ஐன்ஸ்டின் வழி மொழிந்தார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது அவரின் சிறப்பு சார்பியலுக்கு , ஒளி வேகம் மாறிலி என்பது தேவையான எடு கோள் (postulate.)

குவாண்ட இயக்கவியலின் படி ஒளி ஒரு துகள். சார்பியல்,மின் காந்த விதிகள் படி ஒளி ஒரு அலை.இரண்டும் பரிசோதனைக்கு பொருந்துகின்றன.

குவாண்டம் இயக்கவியலின் படி வேகத்தை அளவிடமுடிந்தால்,இடத்தை  அளவிடஅளக்க முடியாது, இடத்தை அளவிடமுடிந்தால்,வேகத்தை சரியாக அளவிடமுடியாது.

ஒளியின் வேகம் வெற்றிடத்தை எந்த தளத்தில் இருந்து அளந்தாலும் மாறிலியாக இருக்குமா என்பது பரிசோதிக்கப்பட்டதா என்னும் கேள்விக்கு சரியாக பதில் இல்லை. அதி வேகம் என்பதால் , மறைமுகமாக சில சமன்பாடுகளை மட்டுமே சரி பார்க்கிறோம். இக்கட்டுரை ஒளியின்  வேகத்தை அள்விடுதலின் சிக்கல்களை அலசுகிறது.


நாம் கொஞ்சம் சிறப்பு சார்பியல் அறிவோம்.

In physics, special relativity (SR, also known as the special theory of relativity or STR) is the accepted physical theory regarding the relationship between space and time. It is based on two postulates: (1) that the laws of physics are invariant (i.e., identical) in all inertial systems (non-accelerating frames of reference); and (2) that the speed of light in a vacuum is the same for all observers, regardless of the motion of the light source. It was originally proposed in 1905 by Albert Einstein in the paper "On the Electrodynamics of Moving Bodies".[1] The inconsistency of classical mechanics with Maxwell’s equations of electromagnetism led to the development of special relativity, which corrects classical mechanics to handle situations involving motions nearing the speed of light. As of today, special relativity is the most accurate model of motion at any speed.

அறிவியலில் ஒவ்வொரு விதிக்கும், எல்லை உண்டு.பாருங்கள் (மேலே சொன்ன விக்கி பக்கத்தில் இருந்து) சிறப்பு சார்பியலை வரையறுக்க கூட சில அடிப்படை கட்டுப்பாடுகள் இருக்கிறது என்பதை அறியலாம்.

) பல வேகங்களில் நகரும்  தளங்கள் இருக்கின்றன, அவை அனைத்திற்கும் இயற்பியல் விதிகள் பொதுவாக,ஒரே மாதிரி செயல் படுகின்றன.

). ஒளியின் வேகம் வெற்றிடத்தில் மாறிலியாக , அனைத்து தளத்தில் இருந்து செய்யப்படும் அளவீடுகளுக்கும்  இருக்கும்.

ஒளியின் வேகம் வெற்றிடத்தில், மாறுபட்ட வேகத் தளங்களின் அளவீடுகளுக்கும் , மாறாமல் இருக்கும். ஒருவர் ஒளியின் பாதி வேகத்தில் பயணம் செய்கிறார், அவரின் கையில் உள்ள விளக்கின் ஒளி வேகத்தை அவர் அளந்தாலும், நிலையான தளத்தில் இருந்து அளவிடும் ஒருவருக்கும் ஒளியின் வேகம் சமமாகவே இருக்கும். ஒளியின் வேகம்  ‘c’என குறிக்கப்படுகிறது. அதாவது

C+C/2=C!!!!!!!

C+0.99C+0.99C....=C!!!!!!!!!!!!!!

அதாவது வேகத்தை பொறுத்தவரை ஒளியின் வேகமே முடிவிலி(infinite)!!!
கணிதத்தின் படி முடிவிலியுடன் எதைக் கூட்டினாலும், பெருக்கினாலும் அதுவும் முடிவிலியே!!!

ஒரே ஒரு முடிவிலி உண்டா, இல்லை பலப்பல முடிவிலிகள் உண்டா என்பது ஏக இறைவனா, ஏகப்பட்ட ஏக இறைவன்களா என்னும் விவாதம் போல் இருப்பது நல்ல ஒற்றுமை.

கணிதத்தின் படி ஒரே ஒரு முடிவிலியா? பலப்பல முடிவிலிகளா என்பது முடிவுக்கு வராத விடயம்!!!
நாத்திகர் போல் முடிவிலி(இயற்கைக்கு மேம்பட்ட சக்தி) ஒன்று இருக்கிறதா என்னும்விவாதமும் கணித உலகில் உண்டு.

என்னைப் பொறுத்தவரை முடிவிலி/முடிவிலி, முடிவிலி ‍- முடிவிலி(minus) போன்றவற்றை எல். ஹாஸ்பிடல் விதி மூலம் கணக்கிட முடியும் என்பதை பல முடிவிலிகளுக்கான, அல்லது முடிவிலி இல்லாமைக்கான நிரூபணமாக கருதுகிறேன்.அதென்ன எல். ஹாஸ்பிடல்(அவர் பெயர் சகோ மருத்துவமனை அல்ல!!!). இங்கே படியுங்கள். முடிந்தால் இதற்கும் பதிவு எழுத முயற்சிக்கிறேன்.

எல் ஹாஸ்பிடல் விதி என்றால் இரு தொடர்புகளின் விகிதம் காண்பதில்  சிக்கல் ஏற்பட்டால், இரண்டின் வகைகெழுவின்(derivative) விகிதம் கண்டு மதிப்பிடலாம் என்பதே ஆகும்.

பூச்சியம் தவிர எந்த எண்ணை பூச்சியத்தால் வகுத்தாலும் அது முடிவிலி என அறிவொம் அல்லவா. இங்கே பாருங்கள்!!!

1/0 = முடிவிலி1                                                     (1)
2/0 = முடிவிலி2                                                     (2)

இதனை இப்படி தீர்ப்போம்

F(x)=x/2x , x----0
அப்படி மதிப்பிட்டால் நமக்கு கிடைப்பது
0/0 or முடிவிலி1    /முடிவிலி2
Applying  L hospital rule
F(x)= முடிவிலி1    /முடிவிலி2=1/2
அப்போது முடிவிலி 1 போல் முடிவிலி2 இரு பங்கு. ஆகவே பல முடிவிலிகள் உண்டு!!!!!
இது பற்றிய நம் முந்தைய பதிவு!!!

***
ஐன்ஸ்டினின் சிறப்பு சார்பியலை விட்டுவிட்டு கணிதம் எதற்கு என்றால் ஒரு பொது அறிவுக்குத்தான்.ஒரு கொள்கைக்கு மாற்றுக் கொள்கைகள் உண்டு என்பதை வலியுறுத்தவே.

சரி பதிவின் விவாதத்திற்கு திரும்புவோம். ஐன்ஸ்டினின் சிறப்பு சார்பியலின் படி ஓளியின் வேகம் வெற்றிடத்தில், அனைத்து நிலைம தளத்திலும்  மாறிலி. இது சரியா? என்பதுதான் பதிவின் கேள்வி.


அறிவியல் என்பது இயற்கை நிகழ்வுகளை சான்றுகளின் அடிப்படையில் அளிக்கப்படும்  பொருந்தும் விளக்கம் ஆகும்.எந்த ஒரு கொள்கைக்கும் மாற்றுக் கொள்கைகள் இருப்பது போல் , ஒளியின் வேகம் சூழல் சார்ந்து மாறும் என்னும் கொள்கைகளும் உண்டு.இந்தக் கொள்கையாளர்களும் சார்பியலுக்கு மாற்றுக் கொள்கை அளிக்க முயல்கிறார்கள் என்பதும் அறிந்து கொள்ள வேண்டும். இந்த விக்கி சுட்டி, ஒளியின் வேகம் மாறும் என்னும் கொள்கைகள் பற்றி குறிப்பிடுகிறது.

ஒளி வேகம் மாறும் கொள்கை என்பது, ஒளியும் நேரம், வெளியினைக் காரணிகளாக கொண்டது என வரையறுக்கிறார்கள்.ஆகவே நேரம், வெளி ஆகியவை சார்ந்து ஒளி வேகம் மாறும் என்கிறார்கள்.ஐன்ஸ்டின் கூட 1911ல் இப்படி ஒரு கொள்கை மீது ஆய்வு மேற்கொண்டு இருக்கிறார்.

அதன் பிறகு திரு இராபர்ட் டைக்(1957) என்பவரும் இக்கொள்கைக்காக ஆய்வுகள் மேற்கொண்டு இருக்கிறார்.

.
சரி மிக எளிதாக கூறினால், ஒளியின் வேகம் மாறிலி என்னும் எடுகோள்,(postulate) சார்பியல் கொள்கையை மெய்ப்பிக்க உதவுகிறது.ஒரு கேள்வி பதில் மட்டும் பார்த்து பதிவினை முடிப்போம்.


Q:
why speed of light is constant in any inertial frame? Is its experimental or theoritical proof?explain plz...
- nafis akhter (age 22)
jaipur
- Bill (age 16)
vancouver, BC, Canada
ஏன் ஒளியின் வேகம் எந்த நிலைம தளத்திலும்,வெற்றிடத்தில்,மாறிலியாக, உள்ளது? இதற்கு பரிசோத்னை சான்று உண்டா??.

அறிவியலில் கணிதம் ,நிரூபணம் கொடுப்பது கடினம். ஐன்ஸ்டினின் சிறப்பு சார்பியலுக்கு, ஒளி வேகம் மாறிலி என்பது அவசியக் கட்டுப்பாடு. அவர் கணித ரீதியான நிரூபணம் தரவில்லை.அது முடியாத விடயம்.

ஆனாலும் சிறப்பு சார்பியலின் கணிப்புகள் பல உண்மை ஆயிற்று, அதன் அடிப்படையில் இப்போதைய இயற்பியல் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே ஒளியின் வேகம் மாறும் என்றால் பல அறிவியல் கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும்.


 We've never been able to perform an experiment that conclusively shows that the speed of light isn't constant in every inertial frame. 

ஒளியின் வேகம் வெற்றிடத்தில், அனைத்து நிலைம தளங்களில் இருந்து அளவிடும் போது மாறும் என எந்த பரிசோதனையும் இதுவரை ஐயந்திரிபர நிரூபிக்க முடியவில்லை.

ஆகவே ஒளியின் வேகம் மாறும் என இதுவரை நிரூபிக்கப் படாமையால் மட்டுமே, ஒளியின் வேகம் மாறிலியாக ஏற்கப்படுகிறது.

[ கடவுள் இல்லை என நிரூபிக்கப் படாமையால் மட்டுமே கடவுள் உண்டே தவிர மத புத்தகத்தின் சான்றால் அல்ல ஹி ஹி]

எனினும் பதிவில் நாம் எல். ஹாஸ்பிடல் விதி மூலம் பல முடிவிலிகள் உண்டு என்பதை நிரூபித்து இருக்கிறோம். ஆகவே வேகத்தின் முடிவிலியான ஒளி வேகத்திற்கும் பல மதிப்புகள் உண்டு என்றே சொல்கிறோம்.

நாம் திரு ஐன்ஸ்டின் அய்யா அவர்களையோ ,சார்பியல் கொள்கைகளையோ குறைத்து மதிப்பிடவில்லை. நாம் சொல்வது அறிவியல் கொள்கை அனைத்துமே சான்றுகளுக்கு பொருந்தும் மாதிரி அமைத்தல்(model fitting) மட்டுமே என்பதும், பல மாதிரிகள் சான்றுகளுக்கு பொருந்தலாம் என்பதை விளக்க மட்டுமே இப்பதிவு.
1.குவாண்டம் இயக்கவியலையும், சார்பியலையும் இணைக்க  முடியவில்லை. 
2. சார்பியலினால் விளக்க முடியா விடயங்களும் உண்டு.


ஆகவே சார்பியலுக்கு மாற்றுக் கொள்கைகள் தேடும் ஆய்வுகள் நடக்கின்றன.,அதில் ஒளியின் வேகம் மாறும் என்னும் கொள்கை சார்ந்தும் ஆய்வுகள் நடக்கின்றன.

ஆகவே எதிர்காலத்தில் ஒளியின் வேகம் மாறும் என்பது சார்ந்த மாதிரி(model)  ஏற்கப் பட்டாலும் வியப்பு இல்லை.

ஒன்று பலவாகப் பிரிந்து அதில் சக்தி வாய்ந்தது நீடிக்கும், அதுவும் பலவாகி... என்ற பரிணாம விளக்கமே இங்கும்

"""கலி புருஷன் ஒன்றல்ல காலம் பலவாகும்""" (நன்றி விடாது கருப்பு )

நன்றி!!!!!


76 comments:

  1. சகோ.சார்வாகன்,

    விளக்கத்திற்கு நன்றி!

    அப்பதிவில் ரெஃபெர் செய்யாமல் நினைவில் இருந்தே பெரும்பாலும் சொன்னேன்,(என்னைப்பொறுத்த வரையில் அதுவே அதிகம்) சில சொற்கள் சரியாக அமையாமல் ஆரம்பத்தில் குழப்பினாற்ப்போல ஆயிற்று,ஆனாலும் பின்னர் ரெபர் செய்ததில் நான் சொன்னது சரியானது என்பதையும் காட்டினேன் ,வழக்கம் போல பாகவதர் மட்டையடி அடித்தார் அவ்வ்.


    ஒரு பின்னூட்டமிடும் போது அனைத்து தரவுகளையும் சரிப்பார்த்துவிட்டு கருத்திட பெரும்பாலும் நேரமிருப்பதில்லை ,மேலும் பலக்கட்டுரைகள் எப்பவோ படித்தது , கிட்டத்தட்ட கொஞ்சம் தோராயமான சொற்களில் தான் சொல்ல முடியும்,எப்பொழுதும் "புத்தகத்தில்" உள்ளதை அச்சடித்தார்ப்போல சொல்ல முடியுமா? இல்லை எல்லாம் மனப்பாடமாக வைத்திருக்க முடியுமா?

    அவருக்கு தெரியாத அல்லது புரியாத விடயம் எனில் தவறு எனும் மனநோய்க்கூறு கொண்டவராக இருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. சகோ வவ்வால் வாங்க‌
      1/அப்பதிவில் ரெஃபெர் செய்யாமல் நினைவில் இருந்தே பெரும்பாலும் சொன்னேன்,(என்னைப்பொறுத்த வரையில் அதுவே அதிகம்) சில சொற்கள் சரியாக அமையாமல் ஆரம்பத்தில் குழப்பினாற்ப்போல ஆயிற்று,ஆனாலும் பின்னர் ரெபர் செய்ததில் நான் சொன்னது சரியானது என்பதையும் காட்டினேன் ,வழக்கம் போல பாகவதர் மட்டையடி அடித்தார் அவ்வ்.//

      நீங்கள் சொன்ன விடயங்களின் மீது தேடி அறிந்தவை பல .
      சார்பியலுக்கு எடுகோள் மாறா ஒளியின் வேகம் என்பதை நன்கு புரிய முடிந்தது.
      மிக்க நன்றி!!!

      அப்புறம் சந்திரா எல்லை பற்றி நீங்கள் எழுதுங்களேன். அது பற்றி நமக்கு தேடல் போதாது.

      அப்புறம் நம் மாப்பிள்ளையை குறை சொல்லாதீர்கள். அவர் மட்டும் மட்டை அடிக்காவிட்டால் நாம் எப்படி நம்மை சரி பார்ப்பது??.

      அறிவியல் என்பது சான்றுகளுக்கு அதிகம் பொருந்தும் விளக்கம், மாதிரி என சொன்னால் காதில் வாங்குவதே இல்லை!!!!!!!!

      பல விளக்கம்+மாதிரி சாத்தியம் அதில் ஏதேனும் ஒன்று( அல்லது சில) கொஞ்ச காலத்திற்கு ஏற்கப்படும். அவ்வளவுதான்!!

      மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது!!!!!!

      நன்றி!!!

      Delete
  2. மாமூல் மாமு,

    எதையும் நேரிடையாகச் நீங்கள் சொல்லி இதுவரை நான் பார்த்ததில்லை, எழுவது ஆப்கானிஸ்தான் தமிழ், கடைசியில் குட்டையைக் குழப்பி மீன் பிடிப்பீர்கள்.
    தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்பது போல உங்கள் நண்பர் செய்த தகிடு தத்தங்கள், மொள்ளமாறித் தனங்கள் அனைத்தையும் மூடி மறைத்து, என் மீது, சேற்றை வாரியிறைக்க முயன்றிருக்கிறீர்கள். இங்கே நீங்கள் சிகப்பில் போட்டிருக்கும் அனைத்தும் "Out of Context"-ல் போட்டு உங்கள் நண்பரை காப்பாற்றியிருக்கிறீர்கள், இதை நீங்களாகத் திருத்திக் கொள்ள முன்வர வேண்டும் மாமு.

    ReplyDelete
    Replies
    1. மாப்ளே தாசு,
      1./எதையும் நேரிடையாகச் நீங்கள் சொல்லி இதுவரை நான் பார்த்ததில்லை, எழுவது ஆப்கானிஸ்தான் //

      அறிவியலும் நேரிடையாக சொல்லாது.இந்த சூழலில் இந்த விதி சரி அவ்வளவுதான். சார்பியலுக்கு மாறா ஒளி வேகம் எடுகோள்.ஒளி மாறாமைகான பரிசோதனைகள் பற்றி வேண்டுமானால் தகவல் தாரும். இல்லை பதிவு இடும்.

      2//கடைசியில் குட்டையைக் குழப்பி மீன் பிடிப்பீர்கள்//

      நான் அசைவப் பிரியன் அல்லவா!! மீனை பெங்காலில் பிராமணர்கள் கூட கடல் புஷ்ப்ம் என் வெளுத்து கட்டுகிறார்கள். ம்ச்ச அவதாரத்தின் சுவையே அலாதிதான்.

      3.//தான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்பது போல உங்கள் நண்பர் செய்த தகிடு தத்தங்கள், மொள்ளமாறித் தனங்கள் அனைத்தையும் மூடி மறைத்து, என் மீது, சேற்றை வாரியிறைக்க முயன்றிருக்கிறீர்கள்.//

      நான் உக்கள் மீது எந்தக் குறையும் சொல்லவில்லை. ஐன்ஸ்டினின் சிறப்பு சார்பியலை முன் மொழிந்தாலும், அதன் மீதான பரிசோத்னைகள் பற்றியும் சொல்லி இருக்கலமாமே.மாற்றுக் கருத்திற்கான த்கவல் பகிரவே வேண்டுகிறேன்.

      சகோ வவ்வால் எவ்வளவு சுட்டி தகவல் கொடுத்தார். நீங்கள்????

      4./இங்கே நீங்கள் சிகப்பில் போட்டிருக்கும் அனைத்தும் "Out of Context"-ல் போட்டு உங்கள் நண்பரை காப்பாற்றியிருக்கிறீர்கள், இதை நீங்களாகத் திருத்திக் கொள்ள முன்வர வேண்டும் மாமு//

      உண்மையில் அந்த விவாதம் சார்ந்து நிறைய விடயம் அறிய முடிந்தது. உமக்கும், வ்வாலுக்கும் நமது நன்றி!!!

      Delete
  3. \\அப்புறம் சந்திரா எல்லை பற்றி நீங்கள் எழுதுங்களேன். அது பற்றி நமக்கு தேடல் போதாது.\\
    ஹி .........ஹி .........ஹி ......... உங்ககிட்டயும் கொஞ்சம் நேர்மை இருக்கு. உண்மையையும் சொல்ல முடியாது, நண்பன் டவுசர் கிளியவும் அனுமதிக்க முடியாது. சபாஷ்.

    ReplyDelete
    Replies
    1. மாப்ளே தாசு,

      அது பற்றி படிக்க நமக்கு தேடல் செய்ய குறைந்தது ஒரு வாரமாவது ஆகும்.
      பாருங்கள் இப்பதிவுகே இரு நாட்களாக உழைத்தேன். பல கடினமான விடயங்களை சொல்லவில்லை.



      http://www.colorado.edu/philosophy/vstenger/Briefs/c.pdf

      http://arxiv.org/ftp/arxiv/papers/0708/0708.2687.pdf
      In light of the incontrovertible revelation in this paper of light speed anisotropy occurring
      in the physical world and the consequent invalidation of Special Relativity Theory, we urge the
      scientific community to reject the century-old relativistic doctrine of Albert Einstein with its
      many paradoxes and contradictions and return to the absolute frame of the causal ether embodied
      in the space-time framework of the modern Maxwell-Lorentz Absolute Space Theory [16, 17].
      The luminiferous ether, whose existence was accepted by all scientists up to the end of the 19th
      century but later abandoned because of the failure of the 1887 experiment to detect it, is real and
      should now be the focus of exhaustive scientific investigation.


      நன்றி!!!

      Delete
  4. \\ஐன்ஸ்டினின் சிறப்பு சார்பியலை முன் மொழிந்தாலும், அதன் மீதான பரிசோத்னைகள் பற்றியும் சொல்லி இருக்கலமாமே.மாற்றுக் கருத்திற்கான த்கவல் பகிரவே வேண்டுகிறேன்.\\ மாமு தியரி ஆயிரெதெட்டு இருக்கலாம், அவை நிறுவப் பட்டு ஏற்றுக் கொள்ளப் பட்டதா என்பது தான் இங்கு கேள்வி. வெறும் முன்மொழிதல் நிலையில் மட்டுமே இருக்கும் கொள்கை என்றால் லட்சக் கணக்கில் கூட இருக்கும் யார் கண்டது?


    \\சகோ வவ்வால் எவ்வளவு சுட்டி தகவல் கொடுத்தார். நீங்கள்????\\ மாமு, கவுண்டமணி, வடிவேல் எல்லாத்தையும் மிஞ்சிடுவீங்க போலிருக்கு. நீங்கள் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போவீர்கள் என்று நான் நினைக்கவில்லை. நண்பன் மேல் இருக்கும் பாசம் உங்கள் கண்ணை மறைக்கிறது. திருதராஷ்டனையும் மிஞ்சிய குருடாராகிப் போனீர்கள். அத்தனை "சுட்டி தகவல் கொடுத்தார்" அதில எத்தனை அவர் சொன்னதற்கு சான்றாக இருந்தது என்று சொல்லுங்களேன் பார்ப்போம்.

    ReplyDelete
  5. சகோ.சார்வாகன்,

    //அது பற்றி படிக்க நமக்கு தேடல் செய்ய குறைந்தது ஒரு வாரமாவது ஆகும்.
    பாருங்கள் இப்பதிவுகே இரு நாட்களாக உழைத்தேன். பல கடினமான விடயங்களை சொல்லவில்லை//

    இதனையே நானும் அப்பதிவில் குறிப்பிட்டேன் ,கூகிள் இருந்தாலும் சரியான தரவுகளை தேடி எடுப்பது பொறுமையை சோதிக்கும் வேலையாகும்.

    அப்படி எதையும் தேடிப்படிக்காமல் புராணக்குப்பைகளை வைத்து காலம் ஓட்டும் பாகவதருக்கு அதெல்லாம் புரிய வாய்ப்பில்லை.

    நெறைய பேர் கூகிள் இருக்கு எல்லாம் எளிதாக கிடைச்சிடும்,அதான் இப்படி எழுதுறாங்க என நாம் எழுதுவதை எளிதாக எடுத்துக்கொள்கிறார்கள்,ஆனால் அதன் பின் இருக்கும் உழைப்பினை அறிவதில்லை, கழுதைக்கு தெரியுமா காடைப்பிரியாணி வாசனை :-))

    # பாடப்புத்தகத்தில் சொல்லப்படுவதை தாண்டி சமீபத்திய அறிவியலில் என்ன நிக்ழகிறது என கவனித்தால் மட்டுமே பல புதிய விடயங்களை அறிய முடியும், அவ்வப்பொழுது படித்தும் வருகிறேன் ,ஆனால் அனைத்தையும் நினைவில் வைத்திருக்க சாத்தியமில்லை.
    -------------

    பாகவதரே,

    //அதில எத்தனை அவர் சொன்னதற்கு சான்றாக இருந்தது என்று சொல்லுங்களேன் பார்ப்போம்.//

    அனைத்துமே சான்றாக , சொல்லப்பட்டதற்கு ஏதுவான கருத்துக்களே.

    ரெட் ஷிப்டை மட்டும் தவறாக கூறிவிட்டேன் என அப்பொழுதே சொல்லிவிட்டேன்,மற்ற அனைத்தும் பொறுத்தமான விளக்கங்களே.

    உமக்கு புரியலைனா அச்சுட்டிகளை புரிந்தவர்களிடம் கொடுத்து படித்துப்பார்க்க சொல்லவும், அவர்களும் நான் சொன்ன கருத்தினை தான் சொல்வார்கள்.

    #//தியரி ஆயிரெதெட்டு இருக்கலாம், அவை நிறுவப் பட்டு ஏற்றுக் கொள்ளப் பட்டதா என்பது தான் இங்கு கேள்வி//

    ஐன்ஸ்டீன் தியரி கூட முற்று முழுதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லையே, அதில் உள்ள பிழைகளை அவரே ஏற்றுக்கொண்டார் என்பதை அறிவீரா?

    சார்வாகனே ,ஐன்ஸ்டீன் தனது பிழையை ஏற்றுக்கொண்டு எழுதிய கடிதம் குறித்து பதிவிட்டார் என நினைக்கிறேன்.

    அறிவியல் எடுகோள்கள் அனைத்துமே கன்டிஷன் அப்ளைடு என்ற வகையில் தான் இருக்கும், பின்னர் ஆய்வுகள் மூலம் நிறுபிக்கப்பட்டால் " அவற்றினை செயல்ப்படும்" விஞ்ஞான கண்டுப்பிடிப்பாக சொல்வார்கள்.

    நியூட்டனின் விதிகளுக்கு செயல்ப்பாட்டு வடிவம் இருக்கு, ஆனால் சார்பியல் தத்துவத்துக்கு கிடையாது ,அது வெறும் எடுகோள் மட்டுமே.

    ReplyDelete
  6. \\ரெட் ஷிப்டை மட்டும் தவறாக கூறிவிட்டேன் என அப்பொழுதே சொல்லிவிட்டேன்.\\நீர் இந்த அளவுக்கு வந்ததே பெரிய விஷயம்யா !! Great !!

    வவ்ஸ், இங்கே யாரும் சூரப்புலி கிடையாது. உமக்கு விஷயம் தெரியாது என்று சிறுமைப் படுத்தி அதில் ஆனந்தம் காணுமளவுக்கு நான் தரம் தாழ்ந்தவனில்லை. நீர் சொன்னதில் உண்மை இருந்தால் ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

    இதுவரை நடந்த விவாதத்தில் நான் சொல்லிக் கொள்ள இது தான்.

    1. ஒளியின் வேகம் மாறும் என்பது பரிசோதனை அளவில் இன்னமும் ஏற்கப் படவில்லை.

    2. சந்திரசேகர் லிமிட் என்பது ஒரு விண்மீனின் [star] கதி என்னவாகும் என்பதைப் பற்றி சொல்கிறது. இது பிரபஞ்சத்திற்கும் பொருந்தும் என்ற கூற்று எங்கும் சொல்லப் படவில்லை.

    3. பிரபஞ்சத்தின் கதி [நீர் குறிப்பிட்ட 3 விதமான இறுதி நிலைகள்] என்னவாகும் என்பதை சந்திரசேகர் லிமிட் கூறுகிறது என்ற உமது கூற்று தவறான புரிதல், நீர் கொடுத்த எந்த சுட்டியிலும் அவ்வாறு சொல்லப் படவில்லை.

    4. ஒரு நட்சத்திரம் சூப்பர்நோவாவாக வெடிக்க என்ன கண்டிஷன் என்பதை சந்திரசேகர் லிமிட் சொல்கிறது. Galaxy களில் நடக்கும் சூப்பர்நோவா வெடிப்பை ஆராய்ந்து அந்த Galaxyஎவ்வளவு தொலைவில் உள்ளது, எவ்வளவு வேகத்தில் நம்மை விட்டு விலகுகிறது என்று கணக்கிட முடியும். இதைக் கொண்டு பிரபஞ்ச விரிவாக்கத்தைப் பற்றி பல தகவல்களை யூகிக்க முடியும், அதனால் சந்திரசேகர் லிமிட் பிரபஞ்சத்துக்கும் பொருந்தும் என்றாகிவிடாது.

    இறுதியாக: என்னுடைய மேற்கண்ட கூற்றுகளில் தவறும் இருக்கலாம், விவரமறிந்தவர்கள் எடுத்துச் சொன்னாள் ஏற்கத் தயார்............

    ReplyDelete
    Replies
    1. //ஒளியின் வேகம் மாறும் என்பது பரிசோதனை அளவில் இன்னமும் ஏற்கப் படவில்லை.//

      ஒளியின் வேகம் மாறிலி அல்ல என நிரூபிக்க நாம் ஒளிக்கு அருகாமையிலான வேகத்தில் பயணம் செய்ய வேண்டும். ஆனால் அப்பொழுதும், ஒளி நம்மை விட்டு அதே வேகத்தில் விலகுவதை நாம் பார்க்கலாம், எனவே இந்த சோதனையை செய்ய பல சிக்கல்கள் இருக்கின்றன.


      //4. ஒரு நட்சத்திரம் சூப்பர்நோவாவாக வெடிக்க என்ன கண்டிஷன் என்பதை சந்திரசேகர் லிமிட் சொல்கிறது. Galaxy களில் நடக்கும் சூப்பர்நோவா வெடிப்பை ஆராய்ந்து அந்த Galaxyஎவ்வளவு தொலைவில் உள்ளது, எவ்வளவு வேகத்தில் நம்மை விட்டு விலகுகிறது என்று கணக்கிட முடியும். இதைக் கொண்டு பிரபஞ்ச விரிவாக்கத்தைப் பற்றி பல தகவல்களை யூகிக்க முடியும், அதனால் சந்திரசேகர் லிமிட் பிரபஞ்சத்துக்கும் பொருந்தும் என்றாகிவிடாது.//

      தாஸ்,

      சந்திரசேகர் லிமிட் பிரபஞ்சத்தில் உள்ள பொருளுக்கு பொருந்துமானால், அந்த பொருட்களால் கட்டமைக்கப் பட்ட பிரபஞ்சதிற்கும் பொருந்தாலம். ஒவ்வொரு காலக்சியும் எவ்வளவு வேகத்தில் விலகுகிறது என கணக்கிட்டால், பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தை கணக்கிட முடியுமல்லவா.! ஆனால் என்ன ஆய்விகள் மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும்.

      இப்பொழுது நாம் இருக்கும் நிலையை வைத்து சந்திரசேகர் லிமிட் பயன்படுத்தினால் தரவுகள் சரியாக இருக்கும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை.

      Delete
    2. @ கிருஷ்ணா

      \\சந்திரசேகர் லிமிட் பிரபஞ்சத்தில் உள்ள பொருளுக்கு பொருந்துமானால், அந்த பொருட்களால் கட்டமைக்கப் பட்ட பிரபஞ்சதிற்கும் பொருந்தாலம். ஒவ்வொரு காலக்சியும் எவ்வளவு வேகத்தில் விலகுகிறது என கணக்கிட்டால், பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தை கணக்கிட முடியுமல்லவா.! \\

      அது நீங்கள் நினைப்பது போல அல்ல. உதாரணத்துக்கு இங்கே புவிஈர்ப்பு விசை எவ்வாறு செயல்படுகிறது என்று அறிந்தால் அதை பிரபஞ்சம் முழுவதும் extrapolate செய்து பார்க்கலாம் என்பது போல சொல்கிறீர்கள். ஆனால் சூப்பர்நோவா விஷயத்தில் நடப்பது அது அல்ல. அது ஒரு இடத்தில் நடக்கும் தனிப்பட்ட நிகழ்வு. நமது Milky Way சைசில் உள்ள ஒரு காலக்ஷியில் ஒரு சூபர்நோவா நடக்க சராசரியாக 50 வருடங்கள் ஆகும். அவ்வாறு வெடிக்கும்போது நமது சூரியன் வாழ்நாள் முழுவதும் உமிழும் ஒளியை ஒருசில வாரங்களிலோ, மாதங்களிலோ வெளியிட்டுவிட்டு அந்த சூப்பர்நோவா கப்சிப் ஆகிவிடும். இதில் ஒரு விசேடம் என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் 100 வாட் பல்பு எப்படி எங்கேயிருந்தாலும் ஒரே மாதிரி brightness குடுக்குதோ அது மாதிரி இந்த சூப்பர்நோவாவில் Ia என்ற வகை ஒரே மாதிரி தோன்றும். பல்பு உமிழும் ஒளியைப் பார்த்தே அது எவ்வளவு தொலவில் உள்ளது என கண்டறிவது போல இந்த சூப்பர்நோவாவில் இருந்து வரும் ஒளியும் அது இருக்கும் கேளக்ஷி எவ்வளவு தொலைவில் இருக்கிறது, நகர்கிறது போன்ற சில விவரங்களைத் தரும், ஆனால் பிரபஞ்சம் எப்படி விரிவடையும் என்பதையெல்லாம் கட்டுப் படுத்தும் ஷக்தி அதற்கில்லை. அது ஒரு தகவல் சாதனம் அவ்வளவே.

      https://in.answers.yahoo.com/question/index?qid=20070617023015AAwD3Nj

      http://www.space.com/6638-supernova.html

      Delete
    3. //உதாரணத்துக்கு இங்கே புவிஈர்ப்பு விசை எவ்வாறு செயல்படுகிறது என்று அறிந்தால் அதை பிரபஞ்சம் முழுவதும் extrapolate செய்து பார்க்கலாம் என்பது போல சொல்கிறீர்கள்.//

      அப்படி சொல்லவில்லை.

      PLease read this if you have time...
      https://www.eso.org/~bleibund/papers/EPN/epn.html

      Delete
  7. சார்வாகன்,

    என் பதிவினைப் படித்ததற்கும், அதற்கு ஒரு பதிவிட்டமைக்கும் நன்றி.

    அருமையான பதிவு.. ஆனால் இன்னும் கொஞம் தரவுகள் கொடுத்திருக்கலாம்.

    ஒளியின் வேகம் மாறிலி அல்ல என நிரூபிக்க நாம் ஒளிக்கு அருகாமையிலான வேகத்தில் பயணம் செய்ய வேண்டும். ஆனால் அப்பொழுதும், ஒளி நம்மை விட்டு அதே வேகத்தில் விலகுவதை நாம் பார்க்கலாம், எனவே இந்த சோதனையை செய்ய பல சிக்கல்கள் இருக்கின்றன.

    செர்ன் ஆய்வகத்தில் துகள்களை ஒளி வேகத்திற்கு அருகில் பயணம் செய்யும் போது அவை நம் காலத்தை பொருத்து காலவெளியில் அவைகளின் அதிகபட்ச ஆயுளை விட அதிகமாக இருந்தன. அவைகளின் காலம் சுருஙியதால், அவை ஒளியின் வேகத்தை மீறி செல்ல வாய்ப்பில்லை.

    அந்த சுட்டிகளை படித்து பார்த்தேன். அவைகளில் பல hypothesis , under investigation என்ற அளவிலேயே உள்ளது. இன்னும் பல உயர்ரக ஆய்வுகபரிசோதனைகள் வந்தால் இதற்கு எல்லாம் ஒரு விடை கிடைக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. சகோ கிருஷ்னா,
      உங்கள் பதிவிலேயே விவாதம் செய்ய எண்ணினேன். ஆனால் கொஞ்சம் எளிமையாக, அதிகம் அறிவியல் இன்றி எழுதும் முயற்சியே இப்பதிவு.

      அறிவியல் விதி என்பது சான்றுகள் அடிப்படையில் தொடர்பு பொருத்துதல் என்பதைத்தான் வலியுறுத்துகிறேன். ஆகவே ஒளி, சார்பியல் குறித்த விவரங்களை தவிர்த்து விட்டேன்.

      தொடர்ந்து பதிவிடுங்கள். நன்றி!!!

      Delete
  8. Replies
    1. சகோ நட்(இராச நட???)
      யாராக இருந்தாலும் சரி. நலம். வாழ்க வளமுடன்.
      நன்றி!!!

      Delete
  9. பாகவதரே,

    //Type 1a supernovae are usually used as a cosmic ruler to measure distances to supernovae's host galaxies. "Cosmologists also use them to try to understand the way the universe expanded in the past and how it is likely to do so in the future", and to explore the nature of dark energy.
    Type 1a supernovae, called white dwarfs, are caused by the explosion of dead cores of stars. Scientists initially thought that white dwarfs were not able to exceed the Chandrasekhar limit, a critical mass that equals about 1.4 times that of the Sun, before it explodes in a supernova. The Chandrasekhar limit is a vital tool for cosmologists to measure distances to supernovae. //

    http://cordis.europa.eu/news/rcn/31887_en.html

    ஏற்கனவே கொடுத்த விவரம் தான் படிக்காமலே பினாத்தும், போல்டாக உள்ளவற்றை படிக்கவும், எப்படி சந்திர சேகரின் ஆய்வுகள் பிரபஞ்ச அறிவியலில் பயன்ப்படுதுனு சொல்லி இருக்காங்க ,மீண்டும் அது ஒயிட் ட்வார்ஃப்க்கு ,சூப்பர் நோவாக்கு மட்டுமே என சொல்லிக்கொண்டிருந்தால் , அப்படியே சொல்லிக்கொண்டிரும்.

    #//1. ஒளியின் வேகம் மாறும் என்பது பரிசோதனை அளவில் இன்னமும் ஏற்கப் படவில்லை.//

    ஒளியின் வேகம் மாறும் என்பதை சாதாரணமாக ரெப்ராக்டிவ் இன்டெக்ஸ் வச்சே சொல்லலாம், இதனை ஃபோகால்ட் ஆய்வு நிறுபிக்கிறது.

    எனவே பிரபஞ்சம் முழுக்க வேக்குவம் என ஐன்ஸ்டீன் எடுத்துக்கொண்டது போல வைத்தால் தான் ஒளியின் வேகம் நிலையானது ஆகும் ,இதுவே ஒரு ஹைப்போதெடிகல் லாஜிக் தானே?

    பிரபஞ்சம் முழுக்க வெற்றிடம் இல்லை என ஆய்வாளர்களே சொல்கிறார்கள், ஈதர் என ஒரு ஊடகம் இருக்கு என சொல்லி வந்தார்கள்,ஆனால் அதனை ஆய்வு மூலம் நிறுவ முடியவில்லை, என்றப்போதிலும் , பிரபஞ்சத்தில் ஒன்னுமே இல்லாமல் காலியாக இல்லாத போது ரெப்ராக்டிவ் இன்டெக்ஸ் விளைவு இல்லாமலா இருக்கும்.

    எனவே பிரபஞ்சத்தில் ஒளி நிலையான வேகத்தில் செல்லும் என்பதும் " நிபந்தனைக்குட்பட்ட ஒன்றே.

    $ பல பிரபஞ்ச நிறைகள் உள்ளன அவை ,ஒளியை ஈர்த்து வேகத்தினை மாற்ற வல்லவையே.

    # ஒளி மூலம் நிலையாக இருப்பதாக ஐன்ஸ்டீன் எடுத்துக்கொண்டார் ஆனால் பிரபஞ்சத்தில் அனைத்தும் விலகி செல்கின்றன ,எனவே பார்வையாளர் ரெபரன்ஸில் ஒளியின் வேகம் ஒன்று , மூலத்தின் ரெபரன்சில் ஒன்றாகத்தானே இருக்க முடியும்?

    # பிரபஞ்சத்தினை இருப்பகுதிகளாக பிரித்து , இடம்,வலது என வைப்போம்,

    வலது பக்கத்தில் ஒளி மூலம் மற்றும் பார்வையாளர் இருக்கிறார் எனில் இரண்டும் , பிரபஞ்ச மையம் விட்டு ஒரே திசையில் விலகுகின்றன எனில் , ஒளியின் வேகம் பார்வையாளருக்கு ஒரு குறிப்பிட்ட வேகத்தில் இருக்கும்.

    # இப்பொழுது ஒளி மூலம் வலப்பக்கத்தில் இருக்கு ,பார்வையாளர் இடப்பக்கத்தில் இருக்கிறார், விரிவடையும் பிரபஞ்சத்தின் படி இரண்டும் ஒன்றுக்கொன்று விலகி செல்கின்றன, அப்பொழுது ஒளி மூலம் வெளியிடும் ஒளியின் வேகம் பார்வையாளருக்கு வேறு வேகத்தில் தானே தெரியும்?

    ஒளி மூலத்தினை நிலையாக கொண்டு ஐன்ஸ்டீன் ,ஒளியின் வேகம் நிலையானது என ரிலேட்டிவிட்டி தியரியை "ஹைப்போதெடிகலாக" தான் சொல்கிறார் ,அப்படி வைத்துப்பார்த்தால் தான் அந்த எடுகோள் செல்லுபடியாகும்.

    #ஒளி மூலத்தில் இருந்து பல திசைகளிலும் பரவும் , ஒரே ஒரு திசையில் மட்டும் டார்ச் லைட் பீம் போல செல்வதில்லை.

    ஒளி மூலத்தில் இருந்து பார்வையாளரை நோக்கி வரும் ஒளிக்கற்றையின் வேகம் ஒன்று , அதே சமயம் விலகி செல்லும் ஒளிமூலத்தில் இருந்து எதிர் திசையில் செல்லும் ஒளியின் வேகம் என்பது "ஒளியின் வேகம் + மூலத்தின் இடப்பெயர்ச்சி" எனத்தான் பார்வையாளரால் கணக்கிட இயலும்.

    மூலத்தின் வேகம் என்ன ,ஒளியின் வேகம் என்ன? பார்வையாளர் உணரும் வேகம் ஒளியுடையாதா இல்லை ஒளி மூலத்தின் நகர்வு வேகமா? அல்லது இரண்டும் சேர்ந்த வேகமா?

    எனவே தான் ஒவ்வொரு ரெபரென்ஸ் ஃபிரேமிலும் ஒளியின் வேகம் மாறுபடும் என விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

    எனவே ஐன்ஸ்டீனின் தியரி "பொதுவாக செல்லுபடியாகும்" தியரியே அல்ல. இதனால் பல விஞ்ஞானிகள் மறுப்பு தெரிவிச்சு இருக்காங்க.

    இப்பவும் நான் சொன்னது புரியலைனா , எனக்கு தெரியலைனே வச்சிக்கிடும் அவ்வ்!

    #// நீர் சொன்னதில் உண்மை இருந்தால் ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. //

    என்னப்பேசிட்டு இருக்காங்கனே புரியாத நீர் ஏற்றுக்கொண்டால் தான் கவலையேப்படணும் அவ்வ்!

    சந்திரசேகரின் ஆய்வுகள் பிரபஞ்சத்தினை ஆய்வு செய்யப்பயன்ப்படுகிறது என தெளிவாக சுட்டிக்கொடுத்தும் எங்கே சொல்லி இருக்குனு குருட்டுத்தனமாக கேட்டால் என்ன செய்ய முடியும்?

    ReplyDelete
  10. @ வவ்வால்

    எதையும் படிக்காமலே பின்னூட்டம் போடகிறேன்னு நீங்களா நினைசுகிட்டா அதுக்கு நான் பொறுப்பில்லை. அதில் ஆங்கிலத்தில் சொல்லியிருப்பதை நீர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.

    \\Type 1a supernovae are usually used as a cosmic ruler to measure distances to supernovae's host galaxies. "Cosmologists also use them to try to understand the way the universe expanded in the past and how it is likely to do so in the future", and to explore the nature of dark energy. \\

    இதில் சொல்ல வருவது என்ன? Type 1a வகை சூப்பர்நோவாக்கள் அவை இடம் பெற்றிருக்கும் விண்மீன் கூட்டத்தின் [Galaxy] தொலைவை அளக்க உதவும் ஒரு பிரபஞ்ச அளவு கோளாகப் பயன்படுகின்றன. மேலும் வானவியலார்கள் இவற்றைக் [அதாவது Type 1a வகை சூப்பர்நோவாக்கள்] கொண்டு கடந்த காலத்தில் பிரபஞ்சம் எவ்வாறு விரிவடைந்தது அது எதிர்காலத்தில் எவ்வாறு விரிவடையும் என்பதையும் புரிந்துகொள்ளப் பயன்படுத்துகின்றனர். கரும் ஆற்றல் குறித்து ஆராயவும் இவை உதவுகின்றன.

    ஆக சூப்பர்நோவா வைத்து சில தகவல்களை பெற முடியும், அதே சமயம் இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு evolve ஆகும் என்பதை இது எந்த வகையிலாவது கட்டுப் படுத்துமா என்றால் அதற்குப் பதில் "கட்டுப் படுத்தாது என்பதே.

    எனவே சந்திரசேகர் லிமிட் என்பது சூபர்நோவா வெடிக்க என்னென்ன கண்டிஷன்கள் என்பதைச் சொல்லும் அத்தோடு அது முடிந்தது. சூப்பர் நோவாவில் இருந்து வெளியாகும் ஒளியின் Luminosity -ஐ ஆராய்வதன் மூலம் அது இடம்பெற்றிருக்கும் Galaxy எவ்வளவு தூரத்தில் உள்ளது எவ்வாறு நம்மிடமிருந்து செல்கிறது போல சில தகல்வல்களைப் பெறலாம், மற்றபடி அந்த கேளக்ஷியின் இயக்கத்தையோ, பிரபஞ்சத்தின் இயக்கத்தையோ இது குறிப்பிடத் தக்க வகையில் எந்த மாற்றத்தையும் ஏற்ப்படுத்தாது.

    இது என்னுடைய புரிதல், தவறுகள் இருந்தால் திருத்தலாம்.

    ReplyDelete
  11. மாப்ளே தாசு,
    //வெற்றிடத்தில் அதன் வேகம் அதிக பட்சம், அது மாறிலி. அந்த வேகம் ஒளியின் மூலம், observer இவற்றுக்கிடையேயான இயக்கம் இவற்றையெல்லாம் பொறுத்து மாறாது. இது தான் சார்பியல் கொள்கை.//
    சார்பியல் கொள்கைக்கு ஒளியின் வேகம் மாறிலி என்பது எடுகோள் என்பது அறிந்த விடயம்.

    அதிக பட்சம் என்று சொன்னால் மாறிலி என்னும் விடயம் அடிபட்டுப் போகிறது.

    இப்படி வைப்போம்.

    அதாவது வெற்றிடத்தில் பயணிக்கும் ஒளி, வெவ்வேறு வேகங்களில் இயங்கும் தளங்களில் இருந்து அளவிட்டாலும் மாறாமல் இருக்கும்.

    இது பரிசோதிக்கப்பட்ட உண்மையா??? பரிசோதனைகள் பற்றி அறிந்த விடயம் பகிரும்.
    //அப்படியெல்லாம் பார்த்தால் நியூட்டனின் முதல் விதியைக் கூட நிரூபிக்க முடியாது. அது ஆரம்பிப்பதே, "புறவிசைகள் ஏதும் செயல்படாத நிலையில்........" என்று ஆரம்பிக்கிறது, இந்த பிரபஞ்சம் முழுவதும் தேடினாலும் புறவிசை செயல்படாத இடம் ஒன்றையாவது காட்ட முடியுமா?//

    அப்பாடா கொஞ்சம் சிந்திக்க( அதாவது மூக்கு சிந்த ஹி ஹி)ஆரம்பித்து விட்டீர்!!! அதனையே இப்படி சொல்கிறேன்.

    என்னைப் பொறுத்தவரை மாறிலி என்று எதுவுமே கிடையாது.
    http://en.wikipedia.org/wiki/Physical_constant


    வேண்டுமானால், நமக்கு தேவையான அளவில் சொல்லிக் கொள்ள முடியும்.மாதிரி பொருத்துதலில், சிலவற்றை மாறிலியாகவும், சில்வற்றை மாறிகளாகவும் வைத்தல்தான் நடக்கிறது. மாறிலிகளின் வரையறை பார்த்தால் சுற்றி வந்து மூக்கை தொடும் விதமாக இருக்கும்.அதாவது
    http://en.wikipedia.org/wiki/Speed_of_light
    The speed of light in vacuum, commonly denoted c, is a universal physical constant important in many areas of physics. Its value is exactly 299,792,458 metres per second, a figure that is exact because the length of the metre is defined from this constant and the international standard for time.

    நன்றி!!!


    ReplyDelete
  12. சார்வாகன்!
    உங்கள் பதிவை திறந்த போது...உங்கள் பதிவில் எதோ ஒரு வைரஸ் இருக்கு என்ற செய்தி வந்து -block செய்தது...அது உங்கள் இடுகையாகவும் அல்லது ஏதாவது ஒரு apps ஆகவும் இருக்கலாம். கவனிக்கவும்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பர் நம்பள்கி,
      எனக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை. இருப்பினும் கவனிக்கிறேன்.
      நன்றி!!!

      Delete
  13. இதென்ன பஞ்சாயத்து வைக்கிற திரியா? நம்ம சார்வாகன் மாப்பிள்ளதான் நடுநிலைவகிக்கும் நாட்டாமையாக்கும்.

    இப்போ என்ன ஒளியின் வேகம் வெற்றிடத்திலும் (அந்த வெற்றிடம் எங்கு இருக்கிறது என்பதைப் பொறுத்து) மாறும் என்பதுதான் தீர்ப்பா?

    அதை ஏன் இப்படிமென்று முழுங்குற மாப்பூ? :))

    ReplyDelete
    Replies
    1. வாங்க மச்சான்,

      அதாவது ஒளியின் வேகம் வெற்றிடத்தில் மாறிலி என்பது மட்டும் அல்ல, அதனை வேறு வேகத்தில் இயங்கும் மற்ற‌ தளங்களில் இருந்து அளந்தாலும் மாறிலியாக இருக்க வேண்டும் என்பதே விடயம். ஆனால் இதுவும் பரிசோதிக்கப் படாவ் விடயம். ஃபோட்டான்களை வைத்து ஆய்வு செய்து கொண்டு இருக்கிறார்கள். முடிவு தெரியும் வரை நம்க்கு நன்னா பொழுது போகும்!!

      Varying photon speed[edit]
      The photon, the particle of light which mediates the electromagnetic force is believed to be massless. The so-called Proca action describes a theory of a massive photon.[27] Classically, it is possible to have a photon which is extremely light but nonetheless has a tiny mass, like the neutrino. These photons would propagate at less than the speed of light defined by special relativity and have three directions of polarization. However, in quantum field theory, the photon mass is not consistent with gauge invariance or renormalizability and so is usually ignored. However, a quantum theory of the massive photon can be considered in the Wilsonian effective field theory approach to quantum field theory, where, depending on whether the photon mass is generated by a Higgs mechanism or is inserted in an ad hoc way in the Proca Lagrangian, the limits implied by various observations/experiments may be different. So therefore, the speed of light is not constant.[28]

      நன்றி!!!

      Delete
  14. my comment on
    http://viyaasan.blogspot.com/2014/04/blog-post_18.html
    சகோ வியாசன்,
    தந்தை பெரியார் கன்னடத்தை தாய்மொழியாக கொண்டவர் என்பதால், தமிழர் விரோத(??) திராவிட கொள்கையை முன்னெடுத்தார் என்னும் உங்கள் புரிதல் மிக மிக அருமை!!!
    காமெடி காஃபிர் அண்ணன் பி.ஜே பற்றி நம்ம கிட்டவே தகவலா!!! அவரை அப்புறம் பார்ப்போம்!!

    சரி அதை விடுங்க:. பதிவு காணொளியில் இருந்து நீங்கள் குறிப்பிடும் புலவர் கதிரை வேலனார் காலம்:பொ.ஆ 1874 முதல் 1907 வரை( lived only 33 years)

    பெரியார் காலம் பொ.ஆ. 1879 முதல் 1973 வரை
    http://en.wikipedia.org/wiki/Periyar_E._V._Ramasamy
    Periyar joined the Indian National Congress in 1919, but resigned in 1925 when he felt that the party was only serving the interests of the Brahmins.[11][12] In 1924, Periyar led a non-violent agitation (satyagraha) in Vaikom, Kerala. From 1929 to 1932 toured Malaysia, Europe, and Russia, which had an influence on him.[13] In 1939, Periyar became the head of the Justice Party,[14] and in 1944, he changed its name to Dravidar Kazhagam.


    தந்தை பெரியார் 1925ல்தான் காங்கிரசில் இருந்து வெளிவருகிறார், பிறகுதான்,நாத்திகம், திராவிடம் போன்ற கருத்துகளை பரப்புகிறார்.புலவன், தமிழ் காட்டுமிராண்டி மொழி போன்றவற்றை பெரியார் சொல்லி இருந்தால் இதன் பின்னர்தான்!!!

    இப்ப 1907ல் செத்துப் போன உங்க யாழ்ப்பாண தமிழன கதிர்வேலன் எப்போது அவரைப் பார்த்தார்? எப்போது வாந்தி எடுத்தார்?

    ஒன்று பெரியாரை சந்தித்து, பால் குடித்து வாந்தி எடுத்தது இந்த கதிர்வேலன் அல்ல!!

    அல்லது, இப்படி சம்பவம் நடந்தே இருக்காது.

    அல்லது வாந்தி எடுக்க ஒவ்வாமைக்(allergy) காரணமும் உண்டு!!

    காணொளியில் காட்டப்படும் புத்தகம் எது?

    தயை கூர்ந்து விளக்குங்கள் சகோ

    நன்றி!!!

    ReplyDelete
  15. மாமூல் மாமு,

    நீங்க ஏன் அரசியலுக்கு போகலை? போயிருந்தா, நீங்க பண்ணும் குள்ளநரி வேலைக்கு பெரிய ஆளா வந்திருப்பீங்க.

    ஒருபக்கம் இப்போது ஏற்றுக் கொள்ளப் பட்ட தியரிகளை சந்தேகக் கண்ணோடு பார்ப்பேன் என்கிறீர்கள், இன்னொரு பக்கம் வெறும் ஏட்டளவில் சொல்லப் பட்டுள்ள தியரிகளை பொறுக்கிக்கிட்டு வந்து சீரியஸா ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கீங்க. உங்களை மாதிரி கோமாளி வேலையை செய்யும் சீரியஸ் ஆசாமியை பார்ப்பது கஷ்டத்திலும் கஷ்டம்.

    வெற்றிடத்தில் ஒளியின் வேகம் மாறிலி என்று

    \\The speed of light in vacuum, commonly denoted c, is a universal physical constant important in many areas of physics.\\

    நீங்க குடுத்த சுட்டியிலேயே சொல்றான், அதையும் குடுத்துட்டு, ஒளியும் வெக்கம் மாறிலிதனான்னு தெரியலைன்னும் சொல்றீங்க. அதுசரி, இது மாறிகிட்டே இருக்கும்னு எங்கேயாச்சும் கண்டுபிடிச்சிருக்காங்களா?

    ReplyDelete
  16. பாகவதர் அய்யா,

    //பிரபஞ்சம் எவ்வாறு evolve ஆகும் என்பதை இது எந்த வகையிலாவது கட்டுப் படுத்துமா என்றால் அதற்குப் பதில் "கட்டுப் படுத்தாது என்பதே.//

    //மற்றபடி அந்த கேளக்ஷியின் இயக்கத்தையோ, பிரபஞ்சத்தின் இயக்கத்தையோ இது குறிப்பிடத் தக்க வகையில் எந்த மாற்றத்தையும் ஏற்ப்படுத்தாது.//

    உம்மோடு ஒரே நகைச்சுவையய்யா, நான் எங்கே கட்டுப்படுத்தும், பிரபஞ்ச இயக்கத்தில் மாற்றம் உண்டாக்கும் என சொன்னேன்?

    கணக்கிட உதவுகின்றது என சொன்னேன், வேண்டுமானால் மீண்டும் படித்துப்பார்க்கவும். நான் கொடுத்த ஆங்கில கட்டுரையிலும் அவ்வாறே சொல்லி இருக்கிறார்கள்.

    குறை சொல்ல ஆரம்பிச்சுட்டோம், நிறுத்தக்கூடாது என 'சொல்லாதவற்ரை எல்லாம் சொன்னதாக சொல்லி" தப்பாத்தானே சொன்னாய் எனும் அளவுக்கு "முத்திவிட்டது" உமது ஈகோ அவ்வ்!

    #//\\பிரபஞ்சம் முழுக்க வெற்றிடம் இல்லை என ஆய்வாளர்களே சொல்கிறார்கள்,\\

    பிரபஞ்சத்தில் வெற்றிடம் என்ற ஒன்று எங்கேயுமே கிடையாது. ஒருவேளை ரெண்டு கோள்களுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கலாம் என்று பலரும் எண்ணக் கூடும். அதுதான் இல்லை. //

    யேயப்பா நான் அதானே சொன்னேன் ,வெற்றிடம் இல்லைனு ,என்னமோ மாத்தி சொல்லுறாப்போல , மீண்டும் அதையே சொல்லிக்கிட்டு அவ்வ்.

    #//அப்படியெல்லாம் பார்த்தால் நியூட்டனின் முதல் விதியைக் கூட நிரூபிக்க முடியாது. அது ஆரம்பிப்பதே, "புறவிசைகள் ஏதும் செயல்படாத நிலையில்........" என்று ஆரம்பிக்கிறது, இந்த பிரபஞ்சம் முழுவதும் தேடினாலும் புறவிசை செயல்படாத இடம் ஒன்றையாவது காட்ட முடியுமா?//

    நீர் எந்த வகையில் புரிந்துக்கொள்ளும் ஆசாமினு நல்லா புரியுது அவ்வ்.

    புற விசை செயல்படாத இடம் இல்லை ,ஆனால் புற விசை செயல்ப்படும் இடம் இருக்கே!!!

    எனவே ஒரு செயல் தொடர்ந்து நடக்காமல் நின்று விடுவது ஏன் என்பதற்கான விளக்கம் கிடைக்கிறது, பெர்பெக்சுவல் மோஷன் சாத்தியமில்லாமல் போவது ஏன் என்பது விளக்கலாம்.

    ஒருப்பொருளை எரிந்தால் சற்று நேரத்தில் அது ஓய்வு நிலையை அடைந்து விடும், அது ஏன் எனக்கேட்டால் 'புற விசை" செயல்படும் சூழல், புவி ஈர்ப்பு விசை,உராய்வு ஆகியன இயக்கத்தினை தடை செய்கிறது என விளக்கம் அளிக்க முடிகிறதல்லவா ,அதான் நியூட்டனின் விதியின் பயன்!

    விஞ்ஞானிகள் விதிகளை வகுப்பதால் தான் அவை நடக்கிறது என நினைக்கிறீர் போல, அவர்கள் நடப்பவற்றுக்கு ஒரு விளக்கம் கொடுத்து , எப்படி மீண்டும் அதே போல திரும்ப நிகழ்த்த முடியும் என வழியைக்காட்டுகிறார்கள்.

    ஆப்பிள் நியூட்டன் காலத்துக்கு முன்னர் இருந்து காலங்காலமாக மரத்தில் இருந்து கீழ விழுந்துக்கொண்டு தான் இருந்தது ஆனால் கீழ விழக்காரணம் இன்னது என பெயரிட்டு அழைத்தது நியூட்டன்.

    நியூட்டனின் விதிகள் கூட அனைத்து சூழலிலும் செல்லுபடியாகாது ,போதுமான விளக்கம் அளிக்கவில்லை என சொல்லியாச்சு,ஆனால் அவற்றுக்கு நடைமுறையில் பயன்ப்பாடு இருக்கிறது, ராக்கெட் ஏவுவதெல்லாம் நியூட்டனின் மூன்றாம் விதியே. ஜெட் புரொபல்ஷன் எஞ்சினின் த்ரஸ்ட் எவ்வளவு இருக்கணும், அதன் பே லோட் முடிவு செய்ய அடிப்படையாக உதவுது. நியூட்டனின் விதி இல்லைனா எஸ்கேப் வெலாசிட்டி பற்றி ஒரு முடிவுக்கே வர முடிந்திருக்காது.

    நிலவில் இறங்கிட்டு மீண்டும் கிளம்ப என்ன திரஸ்ட் லெவல் ராக்கெட் எஞ்சினுக்கு தேவைனு "முதலிலேயே கணக்கிட" வேண்டும் அதனை செய்ய உதவியது "நியூட்டனின் விதியே'!

    #//வெற்றிடத்தில் அதன் வேகம் அதிக பட்சம், அது மாறிலி. அந்த வேகம் ஒளியின் மூலம், observer இவற்றுக்கிடையேயான இயக்கம் இவற்றையெல்லாம் பொறுத்து மாறாது. இது தான் சார்பியல் கொள்கை.//

    ஆனால் இதற்கான "நிபந்தனை" என்ன? ஒரே இனர்ஷியல் ஃபிரேமில் ஒளி மூலம் ,அப்சர்வர் எல்லாம் இருப்பதாக சொல்கிறார்.

    ஆனால் பிரபஞ்சம் விரிவடைந்துக்கொண்டே இருக்கிறது அதுவும் அனைத்து திசையிலும், மிகப்பெரிய பிரபஞ்சத்தின் ஒரு குறிப்பிட்ட ரெபரன்ஸ் ஃபிரேமில் 'நிலையாக" இருப்பதாக கொண்டால் தான் ரிலேட்டிவிட்டி தியரி செல்லுபடியாகிறது, எனவே தான் அவரது கருத்தினை பிழைக்கொண்டது என்கிறார்கள்.

    இதனை அவரது காலத்திலேயே ஒத்துக்கொண்டாச்சுனு சொன்னப்பிறகும் நீர் மல்லுக்கட்டிக்கிட்டு இருப்பது செம காமெடி அவ்வ்!

    ரிலேட்டிவிட்டி தடுமாறும் சில இடங்களை இக்கட்டுரையில் சுட்டியிருக்கிறார்கள்.

    http://aether.lbl.gov/www/classes/p139/speed/fgr.html

    ReplyDelete
  17. \\உம்மோடு ஒரே நகைச்சுவையய்யா, நான் எங்கே கட்டுப்படுத்தும், பிரபஞ்ச இயக்கத்தில் மாற்றம் உண்டாக்கும் என சொன்னேன்?\\

    உமது டவுசரை கிழிப்பதில் எனக்கு கொஞ்சமும் விருப்பமில்லை, இருந்தாலும் என் கையில் கத்திரிக்கோலை குடுத்து கட்டு பண்ணினாத்தான் விடுவேன்னு அடம் பிடிப்பது நியாயமா? இம்முறை உமது கேணத்தனத்தை சுட்டிக் காட்டுகிறேன் ஆனால் அடுத்தமுறை என்னை வற்ப்புருத்தக் கூடாது. சரியா?


    இதோ உமது வரிகள்:

    \\எவ்ளோ தூரம் பிரபஞ்சம் விரியும் என்பதனை "சந்திரா'ஸ் லிமிட்" என்கிறார்கள்.\\

    \\பிரபஞ்ச நிறையை வைத்து, மூன்று நிலைகள் பிரபஞ்சத்துக்கு ஏற்படலாம் என்கிறார்கள்,

    1)பிரபஞ்சத்தின் நிறையும் , ஈர்ப்பு விசையும் சம நிலை ஆனால் ,விரிவடைந்த பிரபஞ்சம் அப்படியே நின்றுவிடும்.

    2) நிறை ஈர்ப்பு விசையை விட அதிகம் ஆனால் ,தொடர்ந்து விரிவடையும்.

    3) நிறையை விட ஈர்ப்பு விசை அதிகம் ஆனால் சுருங்கி ,சிங்குலாரிட்டி ஏற்படும். அதன் பின் மீண்டும் பெரு வெடிப்பு.

    இதற்கு அடிப்படையாக இருப்பது சந்திராஸ் லிமிட் கண்டுப்பிடிப்பே.\\

    இதையெல்லாம் சார்வாகன் மாதிரி இருக்க ஆளுங்க எடுத்துச் சொல்லனும், ஆனால் அவரு கல்லூளிமங்கனா இருக்காரே என்ன செய்வது?

    வவ்ஸ், ஒரு வேலை பண்ணு, சமுத்ராகிட்ட காமி, அந்தாளாச்சும் உமக்கு உரைக்கிறா மாதிரி எடுத்துச் சொல்றாரான்னு பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. பாகவதரே,

      நீர் முதலில் அம்மணமாக நிக்குறீர் எனவே கோவணத்தினைக்கட்டிக்கொண்டு வந்து டவுசர் கிழிக்கலாம் அவ்வ்!

      # சந்திராஸ் லிமிட் அடிப்படையில் என்பதை , அப்படி சொல்லிவிட்டேன் என அந்தப்பதிவிலேயே சொன்னேன் , அப்பவும் ஒருப்பகுதியை மட்டும் வெட்டி ஒட்டி தப்பாச்சே என அடம்பிடிச்சால் அது உமது "ஈகோ" மட்டுமே.

      #//நான் எங்கே கட்டுப்படுத்தும், பிரபஞ்ச இயக்கத்தில் மாற்றம் உண்டாக்கும் என சொன்னேன்?//

      நான் கேட்டது என்ன நீர் எடுத்துக்காட்டியிருப்பது என்ன?

      கட்டுப்படுத்தும் ,மாற்றம் உண்டாக்கும் என்றா சொல்லி இருக்கிறேன்?

      இப்படியான நிலைகளுக்கான பாசிபிளிட்டிகளை தான் சொல்லி , அதற்கு ஒரு சுட்டியும் கொடுத்தேன் ,அதில் நான் சொல்லி இருப்பது போல் இருக்கா இல்லையா?

      உமக்கு தமிழும் புரியலை ஆங்கிலமும் புரியலை, சமஸ்கிருதத்தில் சொன்னால் தான் புரியுமோ?

      #//"பிரபஞ்சம் முழுக்க வெற்றிடம் இல்லை" -இதன் நேரடியான அர்த்தம் முழுசும் வெற்றிடம் இல்லை, வெற்றிடமும் இருக்கிறது, வெற்றிடம் அல்லாத இடமும் இருக்கிறது என்றே வருகிறது. //

      ஆம் அப்படித்தான் நானும் சொல்லி இருக்கிறேன் ,அப்படித்தான் விஞ்ஞானிகளும் சொல்கிறார்கள், 'space vaccum " முழுவதும் வெற்றிடம் இல்லை என எதிர்மறையில் தான் வரையறுக்கிறார்கள்,

      இதனைப்படிக்கவும்.

      "It is not completely empty, but consists of a hard vacuum containing a low density of particles: predominantly a plasma of hydrogen and helium, as well as electromagnetic radiation, magnetic fields, neutrinos, dust and cosmic rays.

      http://en.wikipedia.org/wiki/Outer_space

      எதையும் புரிஞ்சுக்காமலே மல்லுக்கட்ட உம்மை போல யாராலும் முடியாது அவ்வ்.

      ஐன்ஸ்டீன் முழு வெற்றிடம் என பிரபஞ்சத்தினை "வைத்துக்கொண்டு" தியரி சொல்லிட்டார் என விஞ்ஞானிகள் விவாதிக்கிறார்கள் என்பதாவது புரியுதா ,புரியுதா?

      #//புறவிசை செயல்படாத நிலையில்....... அப்படின்னு ஆரம்பிச்சா, அப்படி ஒரு நிலையை காட்டனும், இல்லாத ஒன்னுக்கு எதுக்கு விதி?//

      சரியான மங்குனியா இருக்கீரே, ஐடியல் ஸ்டேட் ஒன்றினை சொல்லி , வரையறுக்கிறார், ஆனால் அப்படியில்லாத நிலையினை அவ்விதி மூலம் நிறுவலாம்,உ.ம். கிராவிட்டி தடுப்பது,உராய்வு தடுப்பது ஆகியன.நியூட்டனின் அவ்விதியெல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று, நடைமுறைப்பயன்ப்பாட்டில் உள்ளது.

      #//நிலவுக்கு போனதா படம் பார்த்திருப்பீங்க போல!! அது சினிமாங்கோவ்!!//

      போகவில்லை என்பது சர்ச்சையானாலும் , அப்படி சொல்ல ஆதாரமில்லை. எனவே நியூட்டன் விதிப்படி கணக்கிட்டு தான் ஆக வேண்டும், நிலவுக்கே போகலை என்றாலும் செயற்கைக்கோள் ஆச்சும் ராக்கெட் மூலம் ஏவுகிறார்கள் தானே?

      நிலவில் விட்டு வந்த மூன் ரோவர் படத்தினை சேட்டிலைட் மூலம் படம் எடுத்து இப்போக்கூட காட்டுனாங்க,அதுலாம் எப்படி?

      நீல் ஆம்ஸ்ட்ராங்க் போனத மட்டும் நினைச்சுட்டு சொல்லுறீர் ,அதுக்கு அப்புறமும் அமெரிக்கா ஆளனுப்பி இருக்கு.

      http://www.space.com/12482-moon-car-lunar-rover-apollo-15-legacy.html

      சீனாவின் ரோவரைக்கூட படம் எடுத்திருக்காங்க,

      http://www.universetoday.com/110020/nasa-lunar-orbiter-snaps-spectacular-images-of-yutu-moon-rover-driving-around-change-3-lander/

      #//ஒளி மூலம் ,அப்சர்வர் இவர்களுக்கிடையே எப்படிப் பட்ட சிக்கலான இயக்கம் இருந்தாலும் ஒளியின் வேகம் மாறிலிதான்.//

      சரியான குருட்டு பூனையா இருக்கீரே,

      இதற்கு முந்தைய பின்னூட்டத்தில் பிரபஞ்சத்தில் வேறு திசைகளில் ஒளி மூலம்,அப்சர்வர் இருப்பதை சொல்லியுள்லேனே படிக்காமலே பினாத்தும்.

      ஒரே இனர்ஷியல் ஃபிரேமில் மட்டுமே செல்லுபடியாகும் என்பதை எத்தனை முறை சொல்ல , இதில் மாறிலி என திரும்ப திரும்ப உளறிக்கிட்டு.

      #//இவன் கிராவிட்டி பத்தி மட்டும்தான் சொல்லியிருக்கான், மத்ததெல்லாம் ஓகே அப்படீங்கிரானே?//

      ஆமாம், இன்னும் சில மைனர் டிபெக்ட் எல்லாம் இருக்காம், ஒளி மூலம் பரவுவது "ஸ்பெரிகல் வேவ் ஃப்ரன்ட்" ஆக ஆனால் ஐன்ஸ்டீன் ஒரே திசையில் பரவும் சிங்கில் பிளேன் (uni directional wave propagation like laser)ஆக எடுத்துக்கொள்கிறார் என கூட சொல்கிறார்கள்.

      ரிலேட்டிவிட்டி தியரி சுவாரசியமான 'ஐடியாலஜி" அது அறிவியல் அல்லனு கூட சொல்லுகிறார்கள், இதெல்லாம் படிக்காம மட்டையடியாக அடிக்கும் உம்மை எல்லாம் செவ்வாய் கிரகத்துகு தான் கடத்தணும் அவ்வ்.

      Delete
  18. \\யேயப்பா நான் அதானே சொன்னேன் ,வெற்றிடம் இல்லைனு ,என்னமோ மாத்தி சொல்லுறாப்போல , மீண்டும் அதையே சொல்லிக்கிட்டு அவ்வ்.\\

    வவ்வால் ஏதோ உமக்கு மட்டும்தான் தமிழ் எழுதப் படிக்கத் தெரியும், எமக்கு ஏதோ சுப்பிரமணியம் சுவாமி அளவுக்குத்தான் தமிழ் தெரியும் என்று நினைப்பீரு போல.

    வார்த்தைகளை எவ்வாறு கையாள்கிறீர்கள் என்பதும் மிகவும் முக்கியம். இஷ்டத்துக்கும் எதையாவது எழுதிட்டு நான் அதைத்தான் சொன்னேன் இதைத்தான் சொன்னேன் என்று பம்மாத்து பண்ணக் கூடாது.

    \\பிரபஞ்சம் முழுக்க வெற்றிடம் இல்லை என ஆய்வாளர்களே சொல்கிறார்கள்,\\

    இங்கே "பிரபஞ்சம் முழுக்க வெற்றிடம் இல்லை" என்றால் என்ன பொருள் தருகிறது என்பதை நீர் யோசிக்க வேண்டும். உதாரணத்துக்கு "எல்லோரும் பணக்காரர்கள் இல்லை" என்றால் ஏழைகளும் இருக்கிறார்கள் என்று தான் பொருள் படும். "பிரபஞ்சம் முழுக்க வெற்றிடம் இல்லை" -இதன் நேரடியான அர்த்தம் முழுசும் வெற்றிடம் இல்லை, வெற்றிடமும் இருக்கிறது, வெற்றிடம் அல்லாத இடமும் இருக்கிறது என்றே வருகிறது. நீர் அவ்வாறு எழுதவில்லை என்றால் விட்டுத் தள்ளும், ஆனால் அர்த்தம் இதுதான்.

    \\புற விசை செயல்படாத இடம் இல்லை ,ஆனால் புற விசை செயல்ப்படும் இடம் இருக்கே!!! \\ புறவிசை செயல்படாத நிலையில்....... அப்படின்னு ஆரம்பிச்சா, அப்படி ஒரு நிலையை காட்டனும், இல்லாத ஒன்னுக்கு எதுக்கு விதி?

    \\ஆப்பிள் நியூட்டன் காலத்துக்கு முன்னர் இருந்து காலங்காலமாக மரத்தில் இருந்து கீழ விழுந்துக்கொண்டு தான் இருந்தது ஆனால் கீழ விழக்காரணம் இன்னது என பெயரிட்டு அழைத்தது நியூட்டன்.\\ ஆப்பிள் கதையே கட்டுக்கதை. நியூட்டன் பார்த்தது நிலவை, அது பூமியை நோக்கி விழுவதைப் போல ஒவ்வொரு பொருளும் விழுகிறது என்றார். ஆப்பிள் மரத்துக்கடியில் படுத்துக் கொண்டு நிலவை அவர் பார்த்து சொன்னார். அதை இப்படி திரிச்சுட்டானுங்க.

    ReplyDelete
  19. \\நிலவில் இறங்கிட்டு மீண்டும் கிளம்ப என்ன திரஸ்ட் லெவல் ராக்கெட் எஞ்சினுக்கு தேவைனு "முதலிலேயே கணக்கிட" வேண்டும் அதனை செய்ய உதவியது "நியூட்டனின் விதியே'!\\ நிலவுக்கு போனதா படம் பார்த்திருப்பீங்க போல!! அது சினிமாங்கோவ்!!

    ReplyDelete
  20. \\ஆனால் இதற்கான "நிபந்தனை" என்ன? ஒரே இனர்ஷியல் ஃபிரேமில் ஒளி மூலம் ,அப்சர்வர் எல்லாம் இருப்பதாக சொல்கிறார். \\ ஒளி மூலம் ,அப்சர்வர் இவர்களுக்கிடையே எப்படிப் பட்ட சிக்கலான இயக்கம் இருந்தாலும் ஒளியின் வேகம் மாறிலிதான்.

    ReplyDelete
  21. \\ரிலேட்டிவிட்டி தடுமாறும் சில இடங்களை இக்கட்டுரையில் சுட்டியிருக்கிறார்கள்.

    http://aether.lbl.gov/www/classes/p139/speed/fgr.html \\ இவன் கிராவிட்டி பத்தி மட்டும்தான் சொல்லியிருக்கான், மத்ததெல்லாம் ஓகே அப்படீங்கிரானே?

    However, **although it has well passed all observational and experimental tests so far**, some theoretical arguments indicate that it will have to be replaced with a more consistent theory.

    ReplyDelete
  22. \\இப்படியான நிலைகளுக்கான பாசிபிளிட்டிகளை தான் சொல்லி , அதற்கு ஒரு சுட்டியும் கொடுத்தேன் ,அதில் நான் சொல்லி இருப்பது போல் இருக்கா இல்லையா?\\

    கீழே விழுந்தேன் மீசையில் மண் ஒட்டவில்லை........ உம்மைத் திருத்தவே முடியாது.............

    ReplyDelete
  23. \\not completely empty\\

    என்றால்

    "முழுவதும் வெற்றிடம் இல்ல"

    அதாவது

    completely -முழுவதும்
    empty-வெற்றிடம்
    not-இல்லை

    எல்லாமும் சேர்த்து "முழுவதும் வெற்றிடம் இல்லை"

    யோவ் ....... இது எப்படி இருக்குன்னா, misunderstanding என்பதை ஒரு பெண் கீழே நிற்கிறாள்- [miss-under-standing] ன்னு கவுண்டமணி ஒரு படத்துல மொழி சொல்லுவாரு, அதெல்லாம் சினிமா தமாசுன்னு நினைச்சேன், நீ அவரையே மிஞ்சிட்டேய்யா.

    ReplyDelete
    Replies
    1. பாகவதரே,

      //\\not completely empty\\

      என்றால்

      "முழுவதும் வெற்றிடம் இல்ல"

      அதாவது

      completely -முழுவதும்
      empty-வெற்றிடம்
      not-இல்லை

      எல்லாமும் சேர்த்து "முழுவதும் வெற்றிடம் இல்லை"
      //

      நான் உம்மை மாதிரி வெள்ளைக்கார தொரை பரம்பரையில்லை, எனவே அதனை நீர் எப்படி தமிழில் சொல்வீர்னு கொஞ்சம் சொல்றேளா?

      எல்லாம் இங்கீலீசு பேசியே வளந்த வம்சமாயிருக்கும் போல அவ்வ்!

      Delete
  24. \\சரியான மங்குனியா இருக்கீரே, ஐடியல் ஸ்டேட் ஒன்றினை சொல்லி , வரையறுக்கிறார், ஆனால் அப்படியில்லாத நிலையினை அவ்விதி மூலம் நிறுவலாம்,உ.ம். கிராவிட்டி தடுப்பது,உராய்வு தடுப்பது ஆகியன.நியூட்டனின் அவ்விதியெல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று, நடைமுறைப்பயன்ப்பாட்டில் உள்ளது.\\ மங்குனிக்கு உதாரணம்னா சார்வாகனைச் சொல்லலாம்யா. நீ பண்ணும் பம்மாத்து அத்தனையும் பாத்துகிட்டு நரி மாதிரி சைலண்டா இருக்காரு பார்............

    ReplyDelete
  25. \\
    போகவில்லை என்பது சர்ச்சையானாலும் , அப்படி சொல்ல ஆதாரமில்லை.\\

    உம்மைப்போல அண்டப் புளுகன் ஆகாசப் புளுகனை வச்சுகிட்டு எதை நிரூபிக்க முடியும்?

    ReplyDelete
  26. \\நிலவில் விட்டு வந்த மூன் ரோவர் படத்தினை சேட்டிலைட் மூலம் படம் எடுத்து இப்போக்கூட காட்டுனாங்க,அதுலாம் எப்படி?\\

    நிலவுக்கு போயிட்டு வந்த மாதிரியே படம் எடுத்து காமிச்சிட்டோம் இத பண்ண மாட்டோமா?

    \\நீல் ஆம்ஸ்ட்ராங்க் போனத மட்டும் நினைச்சுட்டு சொல்லுறீர் ,அதுக்கு அப்புறமும் அமெரிக்கா ஆளனுப்பி இருக்கு.\\

    பத்து வருஷத்துக்குள் கைபேசிகள் எங்கேயிருந்து எங்கே போயிடுச்சுன்னு உமக்கு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. 45 வருஷத்துக்கு முன்னாடியே நிலவில் கால் வைத்திருந்தது உண்மை என்றால் இன்றைக்கு அங்கே வீடு கட்டி குடியேறியிருக்க வேண்டும். போயிருந்தத்தானே??!!

    ReplyDelete
  27. \\ஒரே இனர்ஷியல் ஃபிரேமில் மட்டுமே செல்லுபடியாகும் என்பதை எத்தனை முறை சொல்ல , இதில் மாறிலி என திரும்ப திரும்ப உளறிக்கிட்டு.\\

    சார்கோல் மாமு என்ன சொல்ல வர்றாரு உங்க நண்பர்?????????

    ReplyDelete
  28. பாகவதர் அய்யா,

    நானாவது சுட்டிகள் எல்லாம் கொடுத்து விளக்கினேன்,நீர் வெறும் கையில் முழம் போட்டுக்கொண்டு அடுத்தவரை குறை சொல்லி பேர் வாங்க பார்க்கிறீர் :-))

    நான் என்ன சொந்தமாவா கதை தயாரிச்சேன் ,படிச்சதை சொன்னேன் ,எதில் படிச்சேன் என சுட்டியும் கொடுத்தாச்சு.

    நான் சொன்னது தோராயமாக என்றாலும் சரியானது என்பதால் தான் மேலும் விளக்கி இப்பதிவு இட்டார், கப்சா விட்டிருந்தால் அப்படி செய்வாரா என்ன?


    நான் எழுதியது பின்னூட்டம் ,பதிவல்ல, எனவே ரெஃபெர் செய்யாமல் சொன்னேன், எனவே கிட்டத்தட்ட சரியாக சொல்லி வச்சேன்,ஆனால் நீரோ பதிவையே "கப்சாவாக" எழுதுகிறீர்.

    திராணி இருந்தால் நான் எழுதும் பதிவில் வந்து "இப்படியான குறைகளை" சுட்டிக்காட்ட முயன்றுப்பாரும்.


    உமது குறிக்கோள் என்னை மடக்கி காட்டணும் என்பது ,பல முறை முயன்றும் உம்மால் முடியலை, அதற்கு எனது பதிவில் வந்து முயற்சிக்கவும்,ஆனால் உம்மால் முடியாது என்பதால் , போறப்போக்கில் என்னமோ சொல்லிக்கிட்டு அலையிறீர்.

    # பிரபஞ்சம் முழுக்க வெற்றிடம் மட்டும் இல்லைனு சொன்னதுக்கு கூட என்னமோ தப்பு போல பாய்ஞ்ச்சீர் ,ஆனால் அப்படித்தான் வரையறையே சொல்றாங்க என்பதும் உமக்கு தெரியலை ,அதைக்கூட நான் சுட்டிப்போட்டு விளக்க வேண்டி இருக்கு.

    விஷயமே தெரியாம எதை வேண்டுமானாலும் அது எப்படினு கேட்டுக்கிட்டே போகலாம் ,அந்த வேலையத்தான் நீர் செய்றீர் ,பதிலுக்கு நான் நாலு கேள்விக்கேட்டால் வாயே திரக்காமல் ஓடிருவீர் என்பதும் தெரியும் :-))

    ReplyDelete
  29. @ வவ்வால்

    அமுதவன் சார் பதிவில் அசத்தல் பின்னூட்டங்களுக்கு congradulations!! அவற்றில் லென்ஸ் வைத்துப் பார்த்தாலும் தவறுக்கோ, மாற்றுக் கருத்துக்களுக்கோ இடமேயில்லை.

    சரி மேட்டருக்கு வருவோம். ஒருத்தர் இயற்பியலில் எல்லாம் தெரிந்தவராக இருக்க வேண்டுமென்றோ, ஆங்கிலத்தில் பண்டிதனாக இருக்க வேண்டுமென்றோ எந்த கட்டாயமும் இல்லை. தெரிஞ்சதை வைத்து கற்றுக் கொள்ள முயற்சி செய்வதை பாராட்டத்தான் வேண்டுமேயொழிய ஏளனம் செய்யக் கூடாது. அதே சமயம் சொல்ல வந்த கருத்து உண்மைக்கு புறம்பாக இருந்து, அதைப் படிக்கும் அது தெரியும் பட்சத்தில் இயல்பில் அதை சுட்டிக் காட்டவே தோன்றும். உதாரணத்துக்கு பகலில் லைட்டை போட்டுக் கொண்டு ஒருத்தன் பைக்கை ஒட்டி வருகிறான் என்று வையும், எதிரே வருபவன், பைக் ஓட்டத் தெரியாவிட்டாலும், "லைட் எரியுதுங்க" என்று சுட்டிக் காட்டுவான், அது மனித இயல்பு. அதைத்தான் நானும் செய்ய வேண்டியிருந்தது. அதை நீர் சரியான ஸ்பிரிட்டில் எடுத்துக் கொண்டிருந்தால் வீண் விவாதங்களைத் தவிர்த்திருக்கலாம்.


    http://newswatch.nationalgeographic.com/2011/10/12/nobel-prize-in-physics-2011/

    ReplyDelete
  30. பிரபஞ்சத்தின் Fate -ஐ எது தீர்மானிக்கிறது?


    \\It all depends upon the mass of the entire universe. We know that if there were approximately five atoms of hydrogen per cubic meter of space, that would be just enough matter for gravitational attraction to bring the galaxies back together in a big crunch. That tipping point is called Omega; it's the ratio of the total amount of matter in the universe divided by the minimum amount of matter needed to cause the big crunch. If Omega is less than one, the galaxies will fly apart forever. If it's more than one, then sometime in the far-distant future the big crunch will happen. Our best estimate at the moment is that Omega lies somewhere between 0.98 and 1.1. So the fate of the universe is still unknown.\\

    ReplyDelete
  31. newswatch.nationalgeographic.com/2011/10/12/nobel-prize-in-physics-2011/

    ReplyDelete
  32. \\சரியான குருட்டு பூனையா இருக்கீரே,

    இதற்கு முந்தைய பின்னூட்டத்தில் பிரபஞ்சத்தில் வேறு திசைகளில் ஒளி மூலம்,அப்சர்வர் இருப்பதை சொல்லியுள்லேனே படிக்காமலே பினாத்தும்.

    ஒரே இனர்ஷியல் ஃபிரேமில் மட்டுமே செல்லுபடியாகும் என்பதை எத்தனை முறை சொல்ல , இதில் மாறிலி என திரும்ப திரும்ப உளறிக்கிட்டு.\\

    பிரபஞ்சம் விரிவடைவதால் மூலத்திற்கும் observer க்கும் உள்ள இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது, இதன் விளைவு வெளியிடப் பட்ட ஒளிக்கு ரெட் ஷிப்ட் மட்டுமே ஆகிறது, ஆனால் ஒளியின் திசைவேகம் மாறுவதில்லை.



    \\Bill Press came up with an algorithm to further improve these brightness estimates. If you measure the redshift of lines in the specturm of a supernova, you can find out how big the universe was (relative to today) when the supernova exploded (because wavelengths of light coming from the supernova stretch with space as the universe expands.) \\


    http://newswatch.nationalgeographic.com/2011/10/12/nobel-prize-in-physics-2011/

    ReplyDelete
  33. சூப்பர்நோவாக்கள் மூலம் பிரபஞ்ச விரிவாக்க வேகம் குறித்த விவரங்களைப் பெற முடியும். இதற்க்கு Ia type சூப்பர்நோவாக்களில் இருந்து வரும் ஒளி பயன்பட்டு வந்தது. காரணம் அவை அனைத்தும் ஒரே மாதிரி விதத்தில் உருவாகின்றன. அதாவது white dwarf தன்னுடைய நண்பனிடமிருந்து எடையை விழுங்கி சூரியனின் எடையைப் போல 1.44 மடங்குஅதிகரிக்கும் போது சூப்பர்நோவாவாக வெடிக்கிறது. எல்லாம் ஒரே மாதிரியாக இருக்க இது காரணம். இதனை Standard Candle ஆகப் பயன்படுத்தி வந்தனர்.

    உயரே தூக்கி போட்ட கல் முதலில் வேகமாக மேலே போகும், போகப் போக வேகம் குறையும் பின்னர் திரும்ப கீழே வரும். எனவே தற்போது நம்மை விட்டு விலகிச் செல்லும் கலக்ஷிகள் வேகம் போகப் போக குறையும் என்று எதிர்பார்த்தனர்.
    ஆனால் 1998 ஆம் ஆண்டு பிரபஞ்ச விரிவாக்க வேகம் அதிகரித்துக் கொண்டே போகிறதே தவிர குறைய வில்லை என்ற கண்டுபிடிப்பு வெளியிடப் பட்டது, இது 2011 ஆண்டின் நோபல் பரிசை தட்டிச் சென்றது.

    http://www.nobelprize.org/nobel_prizes/physics/laureates/2011/

    ReplyDelete
  34. Later Adam Riess used the Hubble Space Telescope to observe very distant supernovae and found that at earlier times the universe was decelerating just as expected. As the universe expands, dark energy stays at nearly constant energy density and, as the matter in the universe thins out, the dark energy begins to dominate. Once that occurs, the universe goes from an expansion that is slowing down to an expansion that is becoming faster and faster. In the future we expect the universe to begin to double in size approximately every 10 billion years. It will be an exponential expansion, just like we had in the early universe in inflation. The repulsive effects of dark energy seem to guarantee that the universe will continue to expand forever. No big crunch.

    http://newswatch.nationalgeographic.com/2011/10/12/nobel-prize-in-physics-2011/

    ReplyDelete
  35. “Super-Chandrasekhar limit”

    சந்திரசேகர் சொன்ன 1.44 மடங்கு சூரியனைப் போல நிறை கொண்ட வெள்ளைக் குள்ளன் நட்சத்திரங்கள் சூப்பர் நோவாக்களாக மாறும் என்ற விதி திருத்தி எழுதப் பட வேண்டும், ஏனெனில் பல சூப்பர்நோவாக்கள், type Ia ஐ விட பலமடங்கு பிரகாசமானவை என கண்டுபிடிக்கப் பட்டுள்ளன, அவற்றின் நிறை 2.58 X Solar Mass. எனவே, பிரபஞ்ச விரிவாக்கம் குறித்த நமது புரிதல் முற்றிலும் மாற்றியமைக்கப் படவேண்டும்.



    http://www.hindu.com/thehindu/thscrip/print.pl?file=20130322300510100.htm&date=fl3005/&prd=fline&

    ReplyDelete
  36. பாகவதரே,

    //அமுதவன் சார் பதிவில் அசத்தல் பின்னூட்டங்களுக்கு congradulations!! அவற்றில் லென்ஸ் வைத்துப் பார்த்தாலும் தவறுக்கோ, மாற்றுக் கருத்துக்களுக்கோ இடமேயில்லை.//

    உமக்கு ஏற்புடைய மாதிரி சொன்னால் பாராட்டு,இல்லைனா விரட்டு அவ்வ்!

    நன்றி!

    இப்போது சொல்லி இருப்பதில் பலவும் நான் முன்னரே சொன்னது தானே, என்ன வேறு வார்த்தைகளில் அதனை சொல்லி இருக்கீர்.

    அதுவும் பிரபஞ்சத்தின் நிலை என்னாகும் என்பது முன்னர் சொன்னதன் வேறு வடிவம் மட்டுமே, நான் கிரிகல் மாஸ் என சொன்னதை வைத்து சொன்னேன் ,நீர் அதன் ரேஷியோ ஒமேகா வைத்து சொல்லி இருக்கீர் அவ்வளவே.

    # //பிரபஞ்சம் விரிவடைவதால் மூலத்திற்கும் observer க்கும் உள்ள இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது, இதன் விளைவு வெளியிடப் பட்ட ஒளிக்கு ரெட் ஷிப்ட் மட்டுமே ஆகிறது, ஆனால் ஒளியின் திசைவேகம் மாறுவதில்லை.//

    ரெட் ஷிப்ட் என்றால் என்னனு விளங்கிக்காமல் சொல்லி இருக்கீர், இடைவெளி அதிகரித்தால் ஏன் ரெட் ஷிப்ட் ஏற்பட வேண்டும் , யெல்லோ ஷிப்ட் ஆகிட்டு போகிறது அவ்வ்.

    குறைவான அலை நீளத்தில் இருந்து அதிக அலை நீளம் நோக்கி நகர்வதே ரெட் ஷிப்ட்.

    நீல நிறம் ,அதிக அதிர்வெண் ,குறைவான அலைநீளம்.

    சிவப்பு- குறைவான அதிர்வெண் ,அதிக அலை நீளம்.

    ஒளி அல்லது ஒலி அல்லது ஏதேனும் அலை மூலம் அதிக தூரம் பயணிக்கும் போது ஆற்றல் இழப்பதால் அதிர்வெண் வீச்சு குறைந்து அலை நீளம் அதிகரிக்கும்.

    பிரபஞ்சத்தின் இடைவெளி ,விரிவால் அதிகரிப்பதால் முதலில் புறப்பட்ட ஒளி பார்வையாளரை வந்தடையும் போது ஆற்றல் குறைந்து ,அதிர்வெண் வீச்சு குறைந்து ,அலைநீளம் அதிகரிக்கிறது , அதாவது நிற மாலையில் நீல நிறத்தில் இருந்து சிவப்பு நிறம் நோக்கி அலைநீளம்,அதிர்வெண் ரீதியாக மாற்றம் அடைகிறது. இதான் ரெட் ஷிப்ட்.

    இதே போல புளுஷிப்ட் கூட நடக்கும், அதாவது புற ஆற்றலை கிரகித்து ஆக்சிலரேஷன் அடைவதால் அதிர்வெண் அதிகரிக்க செய்யலாம், இதற்கு டார்க் எனர்ஜி உதவும்.

    எனவே ரெட் ஷிப்ட் என்பது ஒளியின் திசை மாறிலி என சொல்ல அல்ல. , ரெட் ஷிப்ட் நடக்கும் போது ஒளியின் வேகம் குறையவும் வாய்ப்புள்ளது,எனவே ஒளியின் சராசரி வேகத்தினை தான் எப்பவும் எடுத்துக்கொள்வார்கள்.

    வெற்றிடத்தில் மாறிலி. ஆனால் பிரபஞ்சம் முழுக்க வெற்றிடம் இல்லை?!!

    நான் முன்னர் கொடுத்த ஒரு சுட்டியில் பிரபஞ்சம் தோன்றிய காலத்தில் ஒளியின் சராசரி வேகம் அதிகம் இருந்தது என கூறியிருப்பதை காணவில்லையா?

    ஒளியின் வேகம் நிலையானது என்பது நிபந்தனைகளுக்குட்பட்ட ஒன்றே.
    ----------------

    தொடரும்...

    ReplyDelete
  37. தொடர்ச்சி....

    1)// Our best estimate at the moment is that Omega lies somewhere between 0.98 and 1.1. So the fate of the universe is still unknown.\\//

    2) //The repulsive effects of dark energy seem to guarantee that the universe will continue to expand forever. No big crunch.//

    நீர் ரெண்டு தகவல் போட்டீர் அதில் ஒன்றில் பிரபஞ்சத்தின் கதி என்னாகும் என தெரியாது என இருக்கு,

    இன்னொன்றில் எப்பொழுதும் விரிவடையும், பிக் கிரண்ச்(சுருக்கம்) இல்லை என இருக்கு ,ஏன் இந்த முரண்பாடு.

    தற்போதைய நிலையில் "ஆக்சிலரேட்டிங் யுனிவர்ஸ்" என்பதற்கு தான் நோபல் பரிசு , பிக் கிரண்ச் இல்லை என்பது அசம்ப்ஷன்.

    #//சூப்பர்நோவாக்கள் மூலம் பிரபஞ்ச விரிவாக்க வேகம் குறித்த விவரங்களைப் பெற முடியும். இதற்க்கு Ia type சூப்பர்நோவாக்களில் இருந்து வரும் ஒளி பயன்பட்டு வந்தது. காரணம் அவை அனைத்தும் ஒரே மாதிரி விதத்தில் உருவாகின்றன. அதாவது white dwarf தன்னுடைய நண்பனிடமிருந்து எடையை விழுங்கி சூரியனின் எடையைப் போல 1.44 மடங்குஅதிகரிக்கும் போது சூப்பர்நோவாவாக வெடிக்கிறது. எல்லாம் ஒரே மாதிரியாக இருக்க இது காரணம். இதனை Standard Candle ஆகப் பயன்படுத்தி வந்தனர்.//

    இதைத்தானே நான் அப்போ இருந்து சொல்லிட்டு இருக்கேன் ,அவ்வ்!

    #//சந்திரசேகர் சொன்ன 1.44 மடங்கு சூரியனைப் போல நிறை கொண்ட வெள்ளைக் குள்ளன் நட்சத்திரங்கள் சூப்பர் நோவாக்களாக மாறும் என்ற விதி திருத்தி எழுதப் பட வேண்டும், ஏனெனில் பல சூப்பர்நோவாக்கள், type Ia ஐ விட பலமடங்கு பிரகாசமானவை என கண்டுபிடிக்கப் பட்டுள்ளன//

    இதையும் அப்பவே கிருஷ்ணாவின் பதிவில் சொல்லிட்டேன்,

    //A Type Ia supernova is called a "standard candle" இந்த சூப்பர் நோவா சந்திர சேகர் வரையறுத்த கிரிடிகல் மாஸ் உடையது.

    அதனை தாண்டிய சூப்பர் நோவாவினை சூப்பர் சூப்பர் நோவா என அழைக்கிறார்களாம்,அதுக்கு கூட சந்திரசேகர் சூப்பர் நோவா எனப்பெயரிடுகிறார்கள்!!!//

    # இனர்ஷியல் ஃப்ரேம்,ரெபரன்ஸ் ஃப்ரேம் என்பதனை புரிந்துக்கொள்ளவேயில்லை என நினைக்கிறேன், ரிலேட்டிவிட்டிக்கு அதுவும் ஒரு கண்டிஷன்.

    ஐன்ஸ்டீன் தியரியில் இதனால் தான் ஸ்பேஸ்-டைம் -ஒரே காரணி ஆகிவிடுகிறது, இது குவாண்டம் ஃபீல்ட் தியரியிலும், கலிலியன் ரில்டேட்டிவிட்டியிலும் இடிக்கிறது.

    //As Einstein expressed it, “the same laws of electrodynamics and optics will be valid for all frames of reference for which the equations of mechanics hold good.” (1905, p. 38.) But as Einstein also pointed out, the invariance of the velocity of light and the principle of relativity, at least in its Galilean form, are incompatible. It simply makes no sense, according to Galilean relativity, that any velocity should appear to be the same in inertial frames that are in relative motion.//

    http://plato.stanford.edu/entries/spacetime-iframes/#IneFra20tCenSpeGenRel

    ஒரே இனர்ஷியல் ரெஃபரென்ஸ் ஃபிரேம் ஆக இருந்தால் தான் ஆக்சிலரேஷன், மொமெண்டம் ஆகியவற்றின் விளைவுகள் இல்லை என எடுத்துக்கொள்ள முடியும், இரு வேறு இனர்ஷியம் ரெபரென்ஸ் ஃபிரேமில் இருக்குமானால் ஆக்சிலரேஷன் ,மொமெண்டத்தின் விளைவு ஒளியின் வேகத்தில் தாக்கம் உண்டாக்கும் என்கிறார்கள்!!!

    ஐன்ஸ்டீன் பொதுவாக ஆக்சிலரேஷன் & மொமென்டம் புறக்கணிச்சு எல்லாம் ஒரே இனர்ஷியல் ஃபிரேமில் உள்ளது என ஒளிவேகம் மாறாமை என்கிறார்.

    இதை முழுசா படிச்சா தலைக்கிர்ருனு சுத்தும் (எனக்கு தான்) , ஏதோ குத்து மதிப்பா சொல்லி வச்சிருக்கேன்,நீரும் படிச்சி பாரும் இனர்ஷியல் ரெபரென்ஸ் ஃப்ரேம், , ஒளி வேகம் மாறாமைனு என்பது கணக்காக எடுக்கப்பட்டது என்பதெல்லாம் புரிய வரும்.
    ---------------

    ReplyDelete
  38. \\
    நீர் ரெண்டு தகவல் போட்டீர் அதில் ஒன்றில் பிரபஞ்சத்தின் கதி என்னாகும் என தெரியாது என இருக்கு,

    இன்னொன்றில் எப்பொழுதும் விரிவடையும், பிக் கிரண்ச்(சுருக்கம்) இல்லை என இருக்கு ,ஏன் இந்த முரண்பாடு.

    தற்போதைய நிலையில் "ஆக்சிலரேட்டிங் யுனிவர்ஸ்" என்பதற்கு தான் நோபல் பரிசு , பிக் கிரண்ச் இல்லை என்பது அசம்ப்ஷன்.\\

    முதலில் சொன்னது 1998 -க்கு முந்தைய நிலை, அப்போது கலாக்ஷிகள் விலகியோடுவதை type Ia சூபர்நோவக்களை மட்டுமே நம்பியிருந்த நிலை. அப்போதும் கூட வெறும் சந்திரசேகர் லிமிட்டை வச்சு பிரபஞ்சத்தின் fate ஐத் தீர்மானித்திருக்க முடியாது என்பதற்கே இந்தச் சுட்டியை கொடுத்திருந்தேன்.

    ReplyDelete
  39. \\எனவே ரெட் ஷிப்ட் என்பது ஒளியின் திசை மாறிலி என சொல்ல அல்ல. , ரெட் ஷிப்ட் நடக்கும் போது ஒளியின் வேகம் குறையவும் வாய்ப்புள்ளது,எனவே ஒளியின் சராசரி வேகத்தினை தான் எப்பவும் எடுத்துக்கொள்வார்கள்.\\ please give reference for this.

    ReplyDelete
  40. \\ரெட் ஷிப்ட் என்றால் என்னனு விளங்கிக்காமல் சொல்லி இருக்கீர், இடைவெளி அதிகரித்தால் ஏன் ரெட் ஷிப்ட் ஏற்பட வேண்டும் , யெல்லோ ஷிப்ட் ஆகிட்டு போகிறது அவ்வ்.

    குறைவான அலை நீளத்தில் இருந்து அதிக அலை நீளம் நோக்கி நகர்வதே ரெட் ஷிப்ட்.

    நீல நிறம் ,அதிக அதிர்வெண் ,குறைவான அலைநீளம்.

    சிவப்பு- குறைவான அதிர்வெண் ,அதிக அலை நீளம்.

    ஒளி அல்லது ஒலி அல்லது ஏதேனும் அலை மூலம் அதிக தூரம் பயணிக்கும் போது ஆற்றல் இழப்பதால் அதிர்வெண் வீச்சு குறைந்து அலை நீளம் அதிகரிக்கும்.\\

    வவ்ஸ், எனக்கு இயற்பியல் அதிகம் தெரியாது என்பதென்னவோ உண்மைதான், அதற்காக ரெட் ஷிப்ட் என்றால் என்னனு டியூஷன் எடுக்கும் அளவுக்கு நாம் மோசமில்லை.

    நீர் கிட்ட அத்தனைக்கும் சென்னை தரமணியில் உள்ள MATSCIENCE Institute உள்ள பேராசிரியர் ஒருவரை தொடர்பு கொண்டோம்.

    இன்றைய தேதிக்கு ஒளியின் திசைவேகம் மாறும் என்பதற்கு எந்த சான்றுகளும் இல்லை. சொல்லப் போனால் காலத்தை அளக்கும் வினாடி, நீளத்தை அளக்கும் மீட்டர் இது இரண்டுமே ஒளியின் திசை வேகத்தை வைத்தே நிர்ணயம் [calibration] செய்யப் படுகிறது. எனவே C universal constant என்பதற்கு இன்றைய தேதியில் எந்த வித experimental support உடனான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

    மற்றபடி நீர் சொன்ன பிரபஞ்சம் விரிவடைதல், ஒழி நீண்ட தூரம் பயணம் செய்து களைப்படைதல், அல்லது ஈர்ப்புவிசையால் இழுக்கப் படுவதால் ஆற்றல் மட்டுப் படுத்தல் etc ., இவை எதனாலும் ஒளியின் வேகம் மட்டுப் படுவதில்லை. மாறாக அலைநீளம் மட்டுமே அதிகரிக்கிறது அது தான் நீர் விளக்கம் கொடுத்த ரெட் ஷிப்ட்.
    ஒளியின் வேகம் அது செல்லும் ஊடகத்தைப் பொறுத்து மாறுகிறது, தண்ணீர், glass போன்றவற்றில் செல்லும் பொது நிச்சயம் வேகம் குறைகிறது. ஆனால்
    அது அந்த ஊடகத்தின் பண்பால் வருவது. அதே சமயம் காற்றுக்கும் வெற்றிடத்துக்கும் வேகத்தில் சொல்லிக் கொள்ளும் வேறுபாடு இல்லை, Intergalactic space எடுத்துக் கொண்டால் கிட்டத் தட்ட [for all practical purposes] அது வெற்றிடமே.

    "மற்றபடி ஒளியின் வேகம் மாறுபடுவதாக தியரிகள் வருகிறதா?" என்று கேட்டதற்கு, "யோவ், தியரின்னு பார்த்தா எதைப் பத்தி வேண்டுமானாலும் வரலாம் எத்தனை வேண்டுமானாலும் வரலாம், அதுக்கெல்லாம் கணக்கேயில்லை" என்றார்.

    இதற்க்கான ஃபோன் செலவு ரூபாய் 25 உடனே மணியார்டர் செய்யவும்............

    ReplyDelete
  41. பாகவதரே,

    புராணப்பிரியரா இருந்தும்,அறிவியலுக்காக போன் போட்டு பேசும் அளவுக்கு ஆர்வம் காட்டுறீர் , பாராட்டுக்கள்!

    சந்திரசேகர் ஆய்வின் அடிப்படையில்னு தான் நான் சொல்லிக்கிட்டு இருக்கேன் ,அது மட்டுமே நிர்ணயிக்குதுனு சொல்லவில்லை, நாம் கொடுத்த சுட்டியிலும் அதான் சொல்லி இருந்தது ,அதைத்தான் நான் சொன்னேன்.

    # இப்போ ஒளியின் வேகத்தினை பார்ப்போம், ஒளி வேகம் பற்றி ஐன்ஸ்டீன் காலம் முன்னர் இருந்தே விவாதம் இருக்கு அதை தான் நான் சொல்லி இருக்கேன்.

    ஒளியின் அலைபரவல் முகம் ஸ்பெரிகல் ஃபேஸ் எனவே பல கட்டங்களிலும் பரவும் இதனால் மாறுப்பட்ட "phase velocity" இருக்கும் எல்லாத்தயும் ஒன்னா சேர்த்து group velocity ஆக கணக்கிட்டால் அதிக பட்ச வேகம் இருக்கும், அதுவே வெற்றிடத்தில் உச்சப்பட்ச வேகம் எனவே ஒளியின் குருப் வெலாசிட்டி தான் வெற்றிடத்தில் மாறிலி வேகம்!!!

    ஐன்ஸ்டீனே அதனால் தான் "வாக்குவம்' என்று வைத்து தான் ஒளியின் வேகம் மாறிலி , அதிக பட்ச வேகம் என்றெல்லாம் வரையறை செய்திருப்பார்.

    எனவே அந்த நிபந்தனை எல்லாம் பிரபஞ்சம் முழுக்க செல்லுமா என்பதில் ஒரு கேள்வி எழுவதை தவிர்க்கவே முடியாது.

    இந்த விக்கி கட்டுரைப்படிச்சாலே ஓரளவு ஒளியின் வேகத்தின் மீதான விவாதங்கள் புரியும்,

    http://en.wikipedia.org/wiki/Speed_of_light

    //The speed of light is the upper limit for the speeds of objects with positive rest mass. //

    ஒளியின் வேகம் "c' விட எந்த நிறைக்கொண்ட பொருளும் செல்ல முடியாது என ரிலேட்டிவிட்டி சொன்னாலும்,

    Faster than light(FTL) கூட செர்ன் ஆய்வகத்தில் போட்டான் ஆக்சிலரேஷன் மூலம் உறுதி செய்துள்ளார்கள். ஏன் எனில் போட்டான்கள் நிறையற்ற துகள் என எடுத்துக்கொள்ளப்படுகிறது. எனவே அறிவியலில் முன்னர் வரையறுத்தவைகள் எல்லாம் எக்காலத்திற்கும் அப்படியே இருக்கும் என சொல்லவியலாது.

    # ஐன்ஸ்டீன் கூட ஏற்றுக்கொண்டது அல்லது சொன்னது,

    "In non-inertial frames of reference (gravitationally curved space or accelerated reference frames), the local speed of light is constant and equal to c, but the speed of light along a trajectory of finite length can differ from c, depending on how distances and times are defined.[25]"

    # //எனவே C universal constant என்பதற்கு இன்றைய தேதியில் எந்த வித experimental support உடனான ஆதாரங்கள் எதுவும் இல்லை.//

    அவசரத்துல சேம் சைட் கோல் அடிச்சிட்டீரே அவ்வ்.

    # //அதே சமயம் காற்றுக்கும் வெற்றிடத்துக்கும் வேகத்தில் சொல்லிக் கொள்ளும் வேறுபாடு இல்லை//

    காற்றில் ஒளியின் வேகம் குறைவு,

    "the refractive index of air for visible light is 1.000293, so the speed of light in air is 299705 km/s or about 88 km/s slower than c."

    ஐன்ஸ்ட்டீன் கருந்துளை எல்லாம் சொல்லி இருக்கிறார், ஒரு கருந்துளையில் இருந்து ஒளிக்கூட தப்பிக்காது என்கிறார் அப்படி எனில் ஒளியின் வேகம் என்னாச்சு? ஒளி நின்று விடுமா, அப்பொழுது வேகம் பூஜ்ஜியமா?

    ஊடகம் ,ஈர்ப்பு ,முடுக்கம் பொறுத்தெல்லாம் ஒளியின் வேகம் மாறும் ,பிரபஞ்சத்தில் அவை எல்லாமே இருக்கு எனவே கணக்கிட,

    "'Intergalactic space எடுத்துக் கொண்டால் கிட்டத் தட்ட [for all practical purposes] அது வெற்றிடமே. ' "

    சொல்லிக்கொள்ள வேண்டும் :-))

    #அப்புறம் அடியேனுக்கு இயற்பியலில் நிபுணத்துவம் இல்லை ,எல்லாம் வாசிப்பின் பலனே!

    ReplyDelete
  42. Correction:

    "எனவே C universal constant" இதை challenge செய்வதற்கு இன்றைய தேதியில் எந்த வித experimental support உடனான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

    ReplyDelete

  43. \\ஊடகம் ,ஈர்ப்பு ,முடுக்கம் பொறுத்தெல்லாம் ஒளியின் வேகம் மாறும் ,பிரபஞ்சத்தில் அவை எல்லாமே இருக்கு.\\ ஊடத்தைப் பொறுத்து வேகம் மாறும் என்பதை விட குறையும், அதிகரிக்கும் ஆனால் எதுவும் வெற்றிடத்தில் ஒளியின் வேகத்தை மிஞ்சியதாக இருக்க முடியாது.

    ஈர்ப்பு ,முடுக்கம் இவற்றைப் பொத்து அலை நீளம் மாறும், வேகம் மாறாது.

    ReplyDelete
  44. Is the Speed of Light V
    ariable?
    For
    Skeptical Briefs
    15, No. 2, September 2004.
    Vic Stenger

    In his 1905 theory of special relativity, Einstein hypothesized that the speed of light
    in a vacuum, c is a universal constant that is independent of the motion of the source of
    light or observer. Since then, the predictions of the theory have stood up under the most
    stringent empirical tests. Indeed, modern physics rests on the solid foundation of
    relativity.
    Nevertheless, we occasionally read in the media claims that "Einstein was wrong"
    and that c is a variable. After all, this is science and isn't every statement provisional?
    Not in this case. By current international convention, C is a constant by definition.

    In physics, time and space are operationally defined and their deeper "meaning" left to
    philosophers and theologians. Time is what you measure on a clock. And, until recently,
    distance was what you measured with a meter stick.

    The second is now defined as the duration of 9,192,631,770 periods of the radiation
    corresponding to the transition between the two hyperfine energy levels of the ground
    state of the Ce133atom.

    Let me go back in history a bit and trace the development of the
    other basic unit, that of the meter as the unit of distance.
    In 1793, the meter was introduced as 1/10,000,000 of the distance from the pole to
    the equator. In 1889 the standard meter became the length of a certain platinum-iridium
    bar stored under carefully controlled conditions in Paris. In 1906, the meter was redefined
    as 1,000,000 / 0.643 846 96 wavelengths in air of the red line of the cadmium spectrum.
    In 1960 it became 1,650,763.73 wavelengths in a vacuum of the electromagnetic
    radiation that results from the transition between two specific energy levels (2p10 and
    5d5) of the krypton 86 atom. Finally, in 1983, the meter was defined to be the distance
    traveled by light in vacuum during 1/299,792,458 of a second.
    Check what this last definition implies. Distance is no longer what you measure on a
    meter stick. As with time, it is what you meas ure on a clock. And, the speed of light in a
    vacuum c = 299,792,458 meters per second, by definition.

    Einstein's hypothesis is now built into our very definitions of time and space.
    So, anyone claiming that C is not a constant is wrong. That's not opinion. That's
    inarguable fact.
    He might as well claim that a dollar is not a hundred cents. Now, perhaps
    someday it will turn out that defining distance this way was a bad move and some clock-
    independent operational definition of distance should be re-introduced. But, until then,
    without a redefinition of distance, any claim that c is variable is simply false.

    ReplyDelete
  45. This comment has been removed by the author.

    ReplyDelete
  46. I am not sure this "wikipedia geniuses" would be able understand what this guy lectures about Speed of light! Because they just have BIG MOUTH with a tiny little brain! lol

    ReplyDelete
  47. பாகவதரே,

    எல்லாம் மூளைப்பெருத்தவங்களா இருக்கீங்களே அவ்வ்!

    நான் என்ன சொல்றேன் நீங்க என்ன சொல்றிங்கனே புரியாம பேசிட்டு இருக்கிங்கப்பா ,

    பிரபஞ்சத்தில் முழுக்க வெற்றிடம் -வேக்குவம்(vacuum) இல்லை எனவே ஒளியின் வேகம் "மாறாத ஒன்றல்ல' என்கிறேன்.

    ஆனால் நீங்களாம் "வேக்குவத்தில்(vacuum,) ஒளியின் வேகம் மாறிலி" என சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்!

    எனவே ஒளியின் வேகம் நிலையானது என பிரபஞ்ச அளவீட்டுக்கு உண்மையாக பொறுந்தும் வகையில் ஆய்வு ரீதியாக நிறுபிக்கப்படவேயில்லை , இருந்தால் தரவுகள் கொடுக்கவும்.

    ReplyDelete
  48. வவ்ஸ்,

    ஒவ்வொரு ஊடகத்திலும் ஒளியின் வேகம் மாறும் அதையும் ரிலேட்டிவிட்டியையும் போட்டு குழப்பக் கூடாது.

    ஒளியின் திசைவேகம் C-ஆனது மேக்ஸ்வெல் சமன்பாட்டிலும், மேலும் பல தியரிகளிலும் கன்னாபின்னா வென்று பயன்படுத்தப் பட்டுள்ளது. ஊடங்கங்களின் Permitivity, Permiability இவற்றை வைத்தும் indirectly C ஐ கணக்கிட முடியும்.

    ReplyDelete
  49. \\பிரபஞ்சத்தில் முழுக்க வெற்றிடம் -வேக்குவம்(vacuum) இல்லை எனவே ஒளியின் வேகம் "மாறாத ஒன்றல்ல' என்கிறேன்.\\

    இதற்க்கு மேலும் absolute vacuum தான் வேணும்னு அதையே பிடிச்சு தொங்கிகிட்டு இருக்கப் படாது.

    உதாரணத்துக்குச் சொல்லப் போனால், Inertial Reference frame அப்படின்னு ஒன்னு நடைமுறையில் சாத்தியமே இல்லை, அப்புறம் special relativity என்ற ஒன்றுக்கு அர்த்தமேயில்லையே??!! பின்னர் நியூட்டன் விதிகளை எங்கே போய் அப்ளை செய்வது, ஐன்ஸ்டீன் ஒரு பெரிய தியரியே வச்சிருக்காரு அதெல்லாம் எதற்குத்தான் பொருந்தும்?

    \\ஆனால் நீங்களாம் "வேக்குவத்தில்(vacuum,) ஒளியின் வேகம் மாறிலி" என சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்!\\

    இவ்வளவு சொல்கிறீரே speed of light in Vacuum என்று ஊருபட்ட இடங்களில் சொல்லப் படுகிறதே அவனுங்க எல்லாம் இல்லாததை சொல்றானுங்களா?

    ReplyDelete
  50. http://www.meritnation.com/ask-answer/question/why-the-speed-of-light-in-vacuum-is-highest/ray-optics-and-optical-instruments/6944017?mncid=DynamicSA_AA&gclid=CMeUlvCD9r0CFQYRjgod600AsA

    ReplyDelete
  51. \\பிரபஞ்சத்தில் முழுக்க வெற்றிடம் -வேக்குவம்(vacuum) இல்லை எனவே ஒளியின் வேகம் "மாறாத ஒன்றல்ல' என்கிறேன்.

    ஆனால் நீங்களாம் "வேக்குவத்தில்(vacuum,) ஒளியின் வேகம் மாறிலி" என சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்!

    எனவே ஒளியின் வேகம் நிலையானது என பிரபஞ்ச அளவீட்டுக்கு உண்மையாக பொறுந்தும் வகையில் ஆய்வு ரீதியாக நிறுபிக்கப்படவேயில்லை , இருந்தால் தரவுகள் கொடுக்கவும்.\\


    when a photon enters a medium it hits atoms and the atoms absorb, then re-emit the photon (conserving momentum). The time it takes to re-emit the photon causes an apparent slow-down of the speed of light. However, between atoms the photons are traveling at the full speed in vacuum.

    One concept you might find helpful is the mean-free-path: http://en.wikipedia.org/wiki/Mean_free_p...

    In vacuum the mean-free-path of a photon is essentially infinite (it doesn't hit anything). But while traveling through a material the mean-free-path may become very small. This characterizes the amount of collisions the photon is likely to undergo while going through the material--the more collisions, the slower the effective speed.

    https://sg.answers.yahoo.com/question/index?qid=20140127003819AA3AgAN

    ReplyDelete
  52. வருண் கொடுத்திருக்கும் தொடுப்பு கட்டுரை எழுதிய அமெரிக்க பார்டிகிள் பிஸிஸ்ட் விக்டர் ஸ்டிங்கர், இங்கே பேசப்பட்ட சில விவரங்களுக்கு விடையளித்திருக்கிறார். அண்டத்தில் முழுமையான வெற்றிடம் இல்லாத காரணத்தால் எஃபக்டிவ் ஒளியின் வேகம் மாறும். ஆனால் அதை வைத்து ஒளியின் வேகம் மாறிலி என்பதோ அல்லது ஐன்ஸ்டீன் சொன்ன தியரி தவறு என்பதோ சரியல்ல என்கிறார். ஒளியின் வேகம் c வேகம் என்பதே c is technically not the speed of light at all but some limiting speed that an object initially traveling at less than c cannot be accelerated beyond என்கிறார்.

    அவரின் வார்த்தையில்
    Any one of these situations -(no perfect vacuum in the universe) - people are talking about when they say the "speed of light is not constant." None of them mean that the limiting speed c is variable, which, as we have, seen, it cannot be as long as we maintain our current operational definitions of time and space. And none of these cases imply that Einstein was wrong or that we have to rewrite over a century of established physics.

    http://www.colorado.edu/philosophy/vstenger/Briefs/c.pdf

    இதே கட்டுரை சகோ சார்வாகன் குறிப்பிட்டது போல ஒளியின் வேகம் ஏன் முடிவிலி அல்ல என்பதையும் விளக்குகிறது!

    -------------------------------
    மேலும் ஐன்டைனின் சார்பிலாத் தத்துவம் பல சோதனைகளை வென்று ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. அதை பொய் நீருபிப்பது இயலாத ஒன்று என்கிறார் நாத்திகரும் அறிவியல் பரப்புநருமான நீல் டைசன். சார்பிலாத் தத்துவத்தின் மீதே மேலும் தியரிகளை கட்டமைக்க முடியுமே ஒழிய அதை பொய்யாக்குவது கடினம் என்கிறார்

    http://www.youtube.com/watch?v=msZ790rgN7g

    ஐன்டைனின் சார்பிலாத் தத்துவம் டார்வின் பரிணாமத் தத்துவம் போலவே சோதனைகளுக்கு உட்படத்தப்பட்டு நிரூபிக்கப்பட்ட ஒன்று. நாளை கடவுள் தோன்றி நான்தான் உலகை படைத்தேன் என சொன்னால் ஒழிய அதை பரிணாமத்தை பொய்ப்பிக்க இயலாத மாதிரி சார்பிலாத் தத்துவமும் அதிசயம் நடந்தால் தவிர பொய்ப்பிக்க இயலாத ஒன்றே! இரண்டையும் எதிர்த்து கட்டுரைகள் மட்டும் வந்த மேனிக்கு இருக்கும். இரண்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்ட தியரி ஆன போதும் அதிசயமாக சில நாத்திகர்களுக்கு சார்பிலாத் தத்துவம் பிடிப்பதில்லை, பல ஆத்திகருக்கு பரிணாமம் பிடிப்பதில்லை.

    விக்கியில் சில விஞ்ஞானிகள் எதிர்க்கும் போதும் சார்பிலாத் தத்துவம் அதிலுள்ள ஒளியின் வேகம் குறித்த கோட்பாடு அறிவியலாளாரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது எனும் கட்டுரை
    http://en.wikipedia.org/wiki/Criticism_of_the_theory_of_relativity#Principle_of_the_constancy_of_the_speed_of_light

    ReplyDelete
  53. @ ஜெயதேவ்
    //எனவே C universal constant என்பதற்கு இன்றைய தேதியில் எந்த வித experimental support உடனான ஆதாரங்கள் எதுவும் இல்லை.//

    ஒளியின் வேகத்தை அளந்து c- யை நிர்ணயிக்க பல சோதனைகள் நிகழ்த்தப்பட்டனவே அதை ஏன் அந்த பேராசிரியர் கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை. இதை பள்ளிப் புத்தகத்திலேயே படித்த ஞாபகம்.

    http://math.ucr.edu/home/baez/physics/Relativity/SpeedOfLight/measure_c.html

    ReplyDelete
  54. //ஆனால் அதை வைத்து ஒளியின் வேகம் "மாறிலி" என்பதோ அல்லது ஐன்ஸ்டீன் சொன்ன தியரி தவறு என்பதோ சரியல்ல என்கிறார்.//

    "மாறிலி அல்ல" என்றிருக்க வேண்டும்.

    ReplyDelete
  55. @ நந்தவனத்தான்

    \\ "மாறிலி அல்ல" என்றிருக்க வேண்டும்.\\

    என்று நீங்கள் போட்ட மாதிரியே நானும், தவறாகப் போட்டுவிட்டேன்!!

    Correction:

    "எனவே C universal constant" இதை challenge செய்வதற்கு இன்றைய தேதியில் எந்த வித experimental support உடனான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

    [இதை முன்னரே திருத்தியும் உள்ளேன்.]

    ReplyDelete
  56. பாகவதரே,

    ஐன்ஸ்டீன் போன்றவர்கள் என்ன செய்தாலும் சரிக்கட்டி பேசவும் பல விஞ்ஞானிகள் உள்ளார்கள்,

    அவரது சிறப்பு சார்பியல் தத்துவத்தில் "காஸ்மாலஜிக்கல் கான்ஸ்டான்ட் லேம்டா" சேர்த்து , பிரபஞ்சம் ஸ்டேட்டிக்" என சொல்லிவிட்டார் , ஹபிள் எல்லாம்ம் பிரபஞ்சம் விரிவடைகிறது என நிறுவியதும், லேம்டா என சேர்த்ததை தவறு என ஒத்துக்கொண்டார், இப்போ எக்ஸ்பாண்டிங் யுனிவெர்ஸ் தியரி வந்ததும் , அது தொடர்ந்து விரிவடைய ஆற்றல் தேவை அது டார்க் எனர்ஜி என சொல்லி , அந்த டார்க் எனர்ஜி தான் காஸ்மாலஜிகல் கான்ஸ்டன்ட் என வைத்துக்கொள்வோம் என மீண்டும் "ஐன்ஸ்டீன் சொன்னதன் பொருள் மாறிவிட்டாலும், அது சரியாகிடுச்சே என சொல்லிக்கொள்ளவே விழைகிறார்கள்.

    மிக எளிதாக பிரபஞ்சம் விரிவடையவில்லை என "காஸ்மாலஜிகல் கான்ஸ்டன்ட்" சேர்த்ததை ஓரங்கட்டி விட்டு ,லேம்டாவுக்கு ஒரு ஜஸ்டிஃபிகேஷன் கொடுக்கவே பார்க்கிரார்கள் அவ்வ்.

    # ஒரு சயிண்டிஸ்ட் சொல்றார் , இப்பக்கூட டார்க் எனர்ஜி இல்லை , ஐன்ஸ்டீனின் கான்ஸ்டன்ட் வச்சிக்கலாம், ஆனால் பிரபஞ்சமும் விரியுது(ஐன்ஸ்டீன் விரியலைனு சொன்னதை ஒதுக்கிட்டு,அவருக்கு கொடிப்பிடிக்கார்)

    In effect, the dark energy theories have been playing on the wrong field," Thompson said. "The 2-inch square does contain the area that corresponds to no change in the fundamental constants, and that is exactly where Einstein stands."

    http://www.sciencedaily.com/releases/2013/01/130109162034.htm

    # இன்னொருத்தர் என்ன சொல்றார் பாருங்க,

    'Theory tested on a large scale
    "Now the general theory of relativity has been tested on a cosmological scale and this confirms that the general theory of relativity works and that means that there is a strong indication for the presence of dark energy," explains Radek Wojtak.
    The new gravitation results thus contribute a new piece of insight to the understanding of the hidden, dark universe and provide a greater understanding of the nature of the visible universe."

    என்னமோ ஐன்ஸ்டீன் சொன்ன காஸ்மாலஜிகல் கான்ஸ்டன்ட் தான் டார்க் எனர்ஜி என்பது போலவும், பிரபஞ்சம் விரியாது என சொன்னதை லேசா ஒரம் தள்ளிட்டு , பிரபஞ்சம் விரியுது ஆனால் சார்பியல் தத்துவமும் சரி ,லேம்டா தான் டார்க் எனர்ஜினு வச்சிக்கலாம் என்கிறார் அவ்வ்!

    http://www.sciencedaily.com/releases/2011/09/110928131758.htm

    # அப்புறம் இன்னொருத்தர் என்ன சொல்றார்னா,

    "Whatever is causing the universe’s acceleration has been named dark energy, but its origins remain mysterious. Back when Albert Einstein was formulating his general theory of relativity he added a repulsive force to his equations called the cosmological constant, which was meant, at the time, to cause the theory to predict a static universe. Without it, his calculations showed gravity would not result in a steady-state universe, but rather would have caused it to collapse upon itself. When it was later discovered that the universe isn’t static, but expanding, Einstein dropped the constant, reportedly calling it his “biggest blunder.” Decades later, however, when it was revealed that the universe was not merely expanding, but that its dilation was accelerating, scientists retrieved the discarded constant and added it back to the general relativity equations to predict a universe that’s flying apart at increasing speed. The cosmological constant is now the leading idea to account for dark energy, but it only works if what is known as the dark energy equation of state parameter (relating pressure and density), called w, equals –1."

    ஆக்சிலரேட்டிங் யுனிவர்சுக்கு டார்க் எனர்ஜி தான் காரணம் ,எனவே மீண்டும் காஸ்மாலஜிகல் கான்ஸ்டன்ட் வச்சிக்கலாம்னு சொல்லிட்டு,

    "Either way, more data from Pan-STARRS and other surveys are expected soon to either support or refute the latest value of w. “I expect in the next year or two this will probably either become definitive, or go away,” Riess says."

    http://www.scientificamerican.com/article/dark-energy-cosmological-constant/

    வருங்காலத்தில் முடிவு மாறலாம், வச்சிக்கலாம் இல்லைனா புறக்கணிக்கலாம் என முடிக்கிரார் அவ்வ்!

    இதை எல்லாம் படிக்கும் போது என்ன த்ஓன்றும் "அந்த தியரி" சரியா தப்பானு தோன்றாதா? அதை தான் நான் செய்தேன்!

    தொடரும்...

    ReplyDelete
  57. தொடர்ச்சி...

    # ஆனால் ஐன்ஸ்டீனே ஒத்துக்கொண்டது , காஸ்மாலஜிகல் கான்ஸ்டன்ட் சேர்த்தது தவறு என்பது தான்.

    In 1922 Einstein wrote Max Born:
    26

    "
    I too committed a monumental blunder some time ago (my experiment on the
    emission of light with positive rays), but one must not take it too seriously. Death
    alone can save one from making blunders".
    More than 40 years later in 1965, Max Born commented on this letter:27

    "Here Einstein admits that the considerations which led him to the positive-ray
    experiments were wrong: 'a monumental blunder' [a "capital blunder" in Born's
    German original comment]. I should add that now (1965), when I read through the old
    letters again, I could not understand Einstein's observation at all and found it
    untenable before I had finished reading

    http://arxiv.org/ftp/arxiv/papers/1310/1310.1033.pdf



    # //\\ஆனால் நீங்களாம் "வேக்குவத்தில்(vacuum,) ஒளியின் வேகம் மாறிலி" என சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்!\\

    இவ்வளவு சொல்கிறீரே speed of light in Vacuum என்று ஊருபட்ட இடங்களில் சொல்லப் படுகிறதே அவனுங்க எல்லாம் இல்லாததை சொல்றானுங்களா?//

    நாசமா போச்சு , நான் என்ன இல்லைனா சொன்னேன், நான் சொன்னது பிரபஞ்சம் ,நீங்க வேக்குவம் என மட்டுமே சொல்லிட்டு இருக்கிங்கனு சொல்லி இருக்கேன் அவ்வ்!

    ReplyDelete
  58. What a WASTE of TIME!!


    Einstein can be wrong!

    Feynman can be wrong!

    Darwin can be wrong!

    NOPE! They are all wrong one time or other. They DO ADMIT SHAMELESSLY that they had been wrong! They were all scientists!

    I am a Tamil blogger! I can tell you that I am never wrong! No matter with whom I argue with, I WILL BE THE WINNER! Because I will be the LAST ONE to finish a DEBATE saying what I said is not "incorrect"! My knowledge is only reading. Yeah, I am not a scientist or anything great. HOLD ON, I will be the WINNER always.

    You know why? Because I will say, "Anybody can be wrong"! So I will all the time!

    But the PITY is .. I forget,, THE ANYBODY include ME too!


    Tell me who is the WINNER here. I AM!

    Again...

    What a WASTE of TIME!!

    ReplyDelete
  59. This comment has been removed by the author.

    ReplyDelete
  60. ஆனானப் பட்ட வவ்ஸையே OFF பண்ணிவிடறதுக்கும் ஒரு ஆள் இருக்காருன்னு இப்பத்தாம்பா தெரியுது!!

    வவ்ஸ் உம் மீது வைக்கப் பட்டுள்ள விமர்சனங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டிய நிலையில் உள்ளீர், இந்த நேரத்தில் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு பம்முவது உசிதமாகாது.

    what I said is not "incorrect"!

    இதை ஏன்

    what I said is "correct"!

    அப்படின்னு போடலைன்னு நறுக்குன்னு நாலு கேள்வியாச்சும் கேளும்.

    எதற்கும் அஞ்சாத வவ்வால் ஊமைக் குத்தை வாங்கிக் கொண்டு சைலண்டாக எஸ்கேப் ஆக முயல்வதை என்னாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. பாகவதரே,

      என்னப்பார்த்தா அவ்ளோ மக்கு மாதிரியா தெரியுது அவ்வ்!

      அந்த "மோட்டார் மவுத்' யாருக்கு அந்த பின்னூட்டம் போட்டுச்சுனே தெரியலை, மொட்டக்கடுதாசி மாரிப்போட்டிருக்கவும், அது உமக்கோ இல்லை சார்வாகருக்கோனு நினைச்சேன், உமக்கு பழைய வரலாறுலாம் தெரியாது , இத போல மொட்டையா எதுனா எழுதி வச்சிடுவார் மாமா,நாம போய் இன்னாபா மேட்டர்னா , நான் பொதுவாத்தானே சொன்னேன் உன்னையா சொன்னேன் , உன் பேரையா போட்டிருக்குனு "மொட்டை மாடு கழட்டுறாப்போல" கழட்டிக்கிட்டு ஓடுவார் :-))

      மாமா ஒரு தண்ணிப்பாம்புய்யா , தரையில இருக்கச்சொல்லோ பாம்பு போல புஸ்ஸுனு சவுண்டு உடுவார் தண்ணியில இருக்கப்போ உஸ்ஸுனு சவுண்டு உடுவார் , சரி ரெண்டு போடு போடலாம்னா , பொந்துக்குள்ள ஓடிருவார் அவ்வ்!

      # ரெண்டு நாளுக்கு முன்ன தான் சும்மா சவுண்டு உட்டார்னு , எதாவது பஞ்சாயத்துனா சொல்லும் உம்ம பதிவுக்கே வாரேன் வச்சுப்போம்னு சொன்னேன் , அப்படியே ஓடிப்போனது தான் ,இங்கே வந்து மொட்டைக்கடுதாசி போட்டுட்டு இருக்கார், இப்போ நான் ஆரம்பிச்சா இங்கே இருந்தும் ஓடிருவார் :-))

      அவரு மத்தவங்க கூட லந்து பண்ணும் போது யாருனா வந்து "விலக்கி விட்டு' அவரக்காப்பாத்திவிட்ருவாங்க, ஆனால் நான் கையா வச்சா குறுக்க ஒருத்தரும் வர மாட்டாங்களா , அதனால தான் மொட்டையா என்னமோ சொல்லி வச்சிருக்கார் ,திருப்பதில போய் மொட்டை அடிச்சவன தேடுனு அடையாளம் சொன்னா எப்படி தேடுவாங்க :-))

      கிருஸ்ண பக்தர்னு சொல்லிக்கிட்டு நாரதர் வேலையா பார்க்குறீர் ,அதையாச்சும் ஒழுங்கா செய்யும், யாருக்கு அந்த பின்னூட்டம்னு விசாரிச்சு வையும் ,ராவோட ராவா வந்து "குனிய வச்சு குமுறிடுறேன் :-))

      Delete
  61. வவ்ஸ் நீர் சொன்ன பின்னூட்டங்களைப் பார்த்தேன், தொடர்பிருக்கிறது!!

    அங்கே:

    \\அவரு, ஆலபர்ட் ஐண்ஸ்டையின், இவரு ரிச்சேர்ட் ஃபெயின்மேன்! பதிவுலகில் ரெண்டு மேதைகளும் கிழி கிழினு ரெண்டு பேரும் கிழிக்கிறாங்க! :))) \\

    இங்கே:

    \\Einstein can be wrong!
    Feynman can be wrong!\\

    இன்னுமா புரியலை? உள்குத்து இல்ல ஓபன் குத்து தான், இது தெரியாமலேயே உட்கார்ந்திருக்கீரா? ஐயோ..........ஐயோ.........

    ReplyDelete
  62. பாகவதரே,

    //இன்னுமா புரியலை? உள்குத்து இல்ல ஓபன் குத்து தான், இது தெரியாமலேயே உட்கார்ந்திருக்கீரா? ஐயோ..........ஐயோ.........//

    அது சரி உமக்கு "சொல்ல எதுவும் இல்லை" என ஆனதும் பத்த வைக்க ஆரம்பிச்சுட்டீரா அவ்வ்!

    வழக்கமா பின்னூட்டமிட்டா யாருக்கு என "அட்ரஸ்' செய்யணும் , அப்படி செய்யவே பயப்படுற ஆசாமிக்கிட்டே என்னத்த போய் லந்து செய்ய?

    நம்மள பார்த்து உள்ளுக்குள்ள கலவரம் ஆகிட்டே "பயப்படாத கைப்புள்ள" போல மொட்டையா பொம்பளப்புள்ளைங்க போல சாடை பேசினா அதுக்குலாம் "நோ ரெஸ்பான்ஸ்" தான் நம்ம பாலிசி!

    ஹி...ஹி ஓசில விளம்பரம்னு எடுத்துக்கிட்டு லூசுல விட்ற வேண்டியது தான்!

    எனக்கான கடுதாசியா இருந்தாக்கூட "ஒர்த்' இருந்தா தான் எதிர் வினை செய்வேன் ,நம்ம பாணியே தனிமா, என் கேரக்டரையே புரிஞ்சுக்கலையே அவ்வ்!

    # அறிவியல் சமாச்சாரம் பேசும் போது அதுக்கு ஏத்தாப்போல "டீடெயில்ஸ்" உடன் பேசணும் ,அழுகுணித்தனமா நீ எப்படி சொல்லலாம்னு வறட்டுத்தனமாக பேசுவதுலாம் ஒரு பொழப்புனு திரியும் நபரை என்ன செய்ய?

    ஏற்கனவே அடிச்ச ஆப்புல டொனால்ட் டக் மாதிரி ஆகிடுச்சு, இன்னும் எத்தனை தடவை தான் ஆப்ப அடிப்பது?

    # இப்போ நீரே பலான லாட்ஜ் பதிவு போட்டீர் , அது உமது இயலாமையை காட்டுகிறது என்பதால் கண்டுக்காம லூசுல தானே விட்டேன் ,ஆனால் மாமா வழக்கம் போல உம்மை வறுத்தெடுத்தது நீரும் பொத்துனாப்போல போயிடலையா :-))

    I know ,when to retreat and when to rivet someone :-))

    ReplyDelete
  63. Trust me, I know everything. There are some "aliens" and some "nuts" and some anonymous guys and some "kuRumbans" are there to acknowledge the fact that I AM THE GREATEST in the Tamil blog world. No!!! Not just the blog world, in the whole universe!

    Guess who I am and what people call me?! ROTFL

    ReplyDelete