Monday, July 15, 2013

ஆன்மா என்றால் என்ன 1? பரிணாமப் பார்வை!



வணக்கம் நண்பர்களே,

அனைத்து மதங்களும் மனிதர்களால்,மனிதர்களுக்காக அரசியல் பொருளாதர ஆதாயங்களுக்காக தோற்றுவிக்கப்பட்டு,இன்றுவரை  மாறும் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப மாற்றப்பட்டு மக்கள் குழுக்களை கட்டுப் படுத்துவதில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை நாம் தொடர்ந்து பதிவுகளில் வலியுறுத்தி வருகிறோம்.

மதங்களில் பொதுவாக இரண்டு வகை முதல் வகை கடவுள் மத புத்தகம் என்னும் செய்தியை மட்டும் சில தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்கள் மூலம் வழங்கி விட்டு ஒதுங்கி விடுவார். அப்புத்தகத்தின் மேன்மையை நிரூபிக்க அடியார்கள் சாம,தான,பேத தண்ட வழிகளை கடைப்பிடித்து பதுகாப்பார் என்பதே மனித சமூகத்தின் 99% வரலாறு.

இரண்டாம் வகையில் மனிதன் ,இதர உயிரிகள் உள்ளிட்ட பிரபஞ்சமே கடவுள்,அப்படி மனிதன் தன்னை இயற்கையின் ஒரு துளி என உணர யோகம் போன்ற உடல்&மனப் பயிற்சிகளை செய்தால் இறைநிலை அடையலாம் என்பது இரண்டாம் வகை.

ஒவ்வொரு மதப் பிரிவிலும் இந்த இருவகைப் பிரிவுகள் உண்டு.இதில் ஆட்சி,அதிகாரம் கைப்பற்ற எதுவும் செய்யும் முதல் பிரிவினர் மிக மிக ஆபத்தானவர்கள் என்றால்,

இரண்டாம் பிரிவினர் தனிப்பட்ட மனிதர்களை சிலர் யோகம் கற்பிக்கிறேன், இறைநிலை அடைய கற்பிக்கிறேன் என்னும் போர்வையில் அவர்களின் வசப் படுத்தும் வாய்ப்பு அதிகம்.

இருவரும் பொய்கள் சொல்கிறார் என்றாலும் முதல் பிரிவினரின் புரட்டுகள் எளிதில் அம்பலமாகிவிடும். [சமீப காலங்களில் இரு கருத்தாக்கங்களையும் குழப்பி அடிப்பதையே மதவியாபாரிகள் செவ்வனே செய்து வருகிறார்கள்].

உலகின் வேதங்கள் என சொல்லப்படுபவை எல்லாமே கடந்த 7000 ஆண்டுகளில் மட்டுமே உருவானவை. மனிதன்[ ஹோமோ சேஃபியன்] 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பரிணமித்து ஆப்பிரிகாவில் பரிணமித்து சுமார் 70,000 வருடங்கள் முன்பு அங்கிருந்து உலகின் பல பகுதிகளுக்கும் பரவினான்.

முதலில் வேட்டையாடியும்,இயற்கையாக கிடைக்கும் காய்கனிகளை மட்டுமே உண்டு வாழ்ந்தவன் ஆற்றங்கரைகளில் ஒரே இடத்தில் 20,000 வருடங்கள் முன்பு வசிக்க முற்பட்டான் அப்போது தோன்றியவையே திருமணம்,அரசு,சொத்துரிமை போன்றவை ஆகும். இவை எல்லாம் பல்கலைக் கழக பாடங்களில் கற்பிக்கப்படும் சான்றுகளின் அடிப்படையிலான வரலாற்று விவரங்கள்.

இதில் ஆள்பவனின் உரிமையை  நிலை நிறுத்த எழுதப் பட்டவையே இந்த மதபுத்த்கங்கள். இதற்கு அரசனின் அல்லக்கைகளான மத குருக்கள் உதவினர். இதற்காக மதகுருக்களுக்கு அரசர்கள் பொருள் ,உதவிகள் வாரி வழங்கினர்.

அரசனின் எந்த ஒரு செயலுக்கும் கடவுள் அனுமதி கொடுப்பார் என்பதால் மத புத்த்கங்களில் இன்னொரு குழுவை அடிமைப் படுத்தல், அக்குழு பெண்களை சிறை எடுத்தல், கொள்ளை அடித்தல்,இன அழிப்பு,நில ஆக்கிரமிப்பு என் எதுவும் நியாயப் படுத்தபடும்.

கத்தோலிக்க்க மத தலைவர் போப் சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை விரல் அசைந்தால் சாம்ராஜ்யம் அழியும்& உருவாகும்..

அனைத்து மனிதர்களும் சமம்,உழைப்பவர்களின் உரிமைகள்,அடிமைமுறை ஒழிப்பு போன்றவை கடந்த 100 ஆண்டுகளில் தோன்றிய கருத்தாக்க்ங்களே. இவை இன்னும் ஏட்டளவில் மட்டுமே ஏற்கப்பட்டன முழுதும் அமலுக்கு வரவில்லை என்பதும் கசப்பான உண்மை ஆகும்.

மனிதன் என்பவன் பரிணாம வளர்ச்சி அடைந்த ஒருவகைக் ஆப்பிரிக்க குரங்கினம்[ape] என்பது அறிவியலில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து என்ற சூழலில், அறிவியல் என்பதே சான்றுகளின் அடிப்படையில் அளிக்கப்படும் பொருந்தும் விளக்கம் என்னும் போது மனிதனுக்கு வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் விடை தெரியா கேள்விகள் இருப்பது இயல்பே.

நேற்றைய கேள்விகளுக்கு இன்று விடை காண்பதும்,அந்த விடைகளில் இருந்து பல கேள்விகள் முகிழ்ப்பதும்,அதற்கு விடை தேடல் தொடர்வதும் மனித சமூக முன்னேற்றத்தின் வரலாறு.

இந்தக் கண்ணோட்டத்தில் மத பிரசாரகர்கள் எழுதும் பதிவுகளைப் படித்தால் மட்டுமே சரியாக அலச முடியும்.

சரி மத வியாபாரப் பதிவுகள் என்ன அதிக பட்சம் இப்போது சொல்ல முடியும்?

விடை தெரியா கேள்விகளுக்கு வித்த்கனே காரணம் . அந்த வித்தகன் பற்றி எதுவும் கேட்க கூடாது.ஏன் எனில் அறிந்து கொள்ள முடியாது ஹி ஹி!!

மனிதர் உணர  கடவுள் மனிதம் சார்ந்தல்ல,அதையும் தாண்டி குழப்பமானது குழப்பமானது!!![இதை குணா கமல் ஹாசன் போல் படிக்கோனும்] இதை மட்டும் சொன்னால் சரி போனால் போகிறது என விட்டு விடலாம்.ஆனாலும் இப்படி நான் உனக்காக சாமி கும்பிட்டால் நீ காப்பாற்றப் படுவாய் ,உன் வருமானத்தில் (பத்தில் ஒரு??) பங்கு எனக்கு கொடு,அது கடவுளுக்கு கொடுப்பது போல் என கல்லா கட்டி உழைக்கும் ஏழை மக்களை,நடுத்தர வர்க்கத்தை சுரண்டுவதுதான் நமக்கு பிரச்சினை.நீ காசு கொடு.நான் உனக்கு ஆன்மீகம் சொல்கிறேன் என் நெல்,உமிக் கதை சொல்வதை பாமர மக்கள் புரியாததினால் இவர்களின் வங்கியில் பணம் சேர்கிறது.
இப்போது இப்பதிவைப் படிக்க வேண்டுகிறேன்!!!


என்ன சகோ நன்றாகத்தானே எழுதி இருக்கிறார் என அப்பாவியாக நீங்கள் கேட்பதால் விள்க்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.

மத பிரச்சாரம் பலவகைப்படும். அதில் சகோ வழிப்போக்கன் ஒருவகை புதிய கிறித்துவ கோட்பாட்டை முன்வைத்து பரப்புரை செய்கிறார் என்பது அவரது பதிவுகளைத் தொடர்ந்து படிப்போருக்கு எளிதில் புரியும்.

அதாவது கிறித்துவம் என்பதே உண்மையான  சை,வைணவ சமயம் என்பதும்,அதுவே ஆதி தமிழர்களின் மதம் என்றும்,(வழக்கம் போல் திராவிட பிரச்சார பாணியில்) பார்ப்பனர்கள் சைவ,வைணவ மதத்தை திரித்து,தங்களின் வைதீக சனாதன தர்ம மதம் எனப்படும் இந்து மதத்தை தமிழர்களின் தலையில் கட்டிவிடார்கள் என்பதே சகோ .போக்கனின் பிரச்சாரம் ஆகும்.[சிவன்தான் கர்த்தர்(பிதா),முருகன்தான் இயேசு(குமாரன்) என புல்லரிக்கும் கதைகள் உண்டு]

அதுவும் இயேசுவின் சீடர் தோமா மூலம் இம்மதங்கள்[சை,வைணவ] தோன்றின என்பதை என்ன சொல்வது??? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.

இப்பதிவில் சகோ வழிப் போக்கன் எழுதுவது எல்லாம் திரு தெய்வநாயகம் என்வரின் கருத்துகளே!! .அவரின் வலைப்பதிவு!!! திருக்குறள் கிறித்தவ நுல் என்கிறார்!!!

இதற்கெல்லாம் ஆதாரம் உண்டா என்றால் ஹி ஹி அவரது பதிவுகளையே படித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.
 ***

சரி அவர் ஆன்மா பற்றி தொடர் பதிவு எழுது முயற்சிப்பதால்,நாமும் தொடர்ந்து மறுப்பு எழுத முடிவு செய்துவிட்டோம்.

ஆன்மீக வாதிகள் அறிவியல் என்பது இயற்கையின் நிகழ்வுகளை சான்றுகளுக்கு அதிகம்  பொருந்தும் இயற்கைக்கு உடபட்ட விளக்கம் மட்டுமே என்பதை உணரவோ,புரியவோ முயற்சிப்பது இல்லை.அறிவியல் என்றால் என்ன என்பதற்கு பதில் கொடுக்கவே மாட்டார்கள். திருவிளையாடல் தருமி பாணியில் அவர்களுக்கு கேட்க மட்டும்தான் தெரியும்!!! ஹி ஹி!! 

ஆகவே அளவிட முடியும் விடயங்களை வைத்து,பொருந்தும் விளக்கம் அளிப்பதும்,அது ஒரு கொள்கை ஆவதும் கொள்கையைப் பயன்படுத்தி அதன் மீது சில கணிப்புகள் செய்வதும், பிறகு கணிப்புகளும் அளவீடுகளால் நிரூபிக்கப் பட்டால் அக்கொள்கை ஏற்கப்படுவதும், அள்வீடுகள்,கணிப்பு வித்தியாசம் குறைவு எனில் கொள்கையில் மாறுதல் செய்யப்படுவதும்,வித்தியாசம் மிக அதிகம் எனில் மாற்றுக் கொள்கை ஏற்கபடுவதுமே அறிவியலின் வரலாறு.

மனிதனுக்கு தேடல் உள்ளவரை,இயற்கையின் மர்ம முடிச்சுகளை ஒவ்வொன்றாக அவிழ்க்க முனைகிறான். இதில் ஒரு போதும் முடிவு எட்டப்படும் என எந்த அறிவியலாளாரும் ஏற்பது இல்லை.

மனிதன் தன்,சுற்றுப் புறத்தை அதிகம் உணரும் ஒரு விலங்கு என்னும் வகையில்,அவனுடைய தேடல் தொடர்து கொண்டே இருக்கும் என்பதில் நமக்கு ஐயம் இல்லை.

இதுவே அறிவியலின் இயற்கை சார் நிலைப்பாடு ஆகும்!!

சகோ வழிப் போக்கனின் முதல் கேள்வி இதுதான்!!!
// உலகம் தோன்றியது எவ்வாறு? மனிதன் தோன்றியது எவ்வாறு? உயிர் என்றால் என்ன?

இக்கேள்விகளை ஒரு மனிதர் கேட்பாராயினில் அவருக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை அறிவியல் பேசுவோருக்கும் இருக்கின்றது...ஆன்மிகம் பேசுவோருக்கும் இருக்கின்றது. அக்கடமையை அவர்கள் தட்டிக் கழிக்க முடியாது. நிச்சயம் பதில் கூறியே ஆக வேண்டும்.

இந்நிலையில் அவர்கள் கூறும் விடையினைக் கண்டோம் என்றால் ஆன்மிகம் பேசுவோர் இறைவன் உலகைப் படைத்தான் என்றும் அறிவியல் பேசுவோர் இறைவன் படைக்கவில்லை மாறாக உலகம் 'பெரு வெடிப்பு' முதலிய சில காரணியால் இயல்பாகவே உருவாயிற்று என்றும் கருதுவது புலனாகின்றது. இக்கருத்துக்களிடையே மாபெரும் சண்டைகளும் நீண்டக் காலமாக முடியாது ஓடிக் கொண்டு தான் இருக்கின்றன.
//

அறிவியல் இயற்கையை அறிய முயல்கிறது,அதன் பரிணாம இயக்கத்தை அறிந்து அதன் மூலம் இயற்கையின் கடந்த காலத்தை சான்றுகள் மூலம் அளவிட முடிகிறது. அப்படிக் கிடைத்த ஒளிப்படிம சான்றுகள் மூலம் பிரப்ஞ்சம் விரிவடைகிறது, அதுவும் ஒரு புள்ளியில் இருந்து 1360 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தொடர்ந்து விரிவடைந்து கொண்டு இருக்கலாம் என்ற இப்போதைய பேரண்ட தோற்றக் கொள்கையான பெருவிரிவாக்க கொள்கை விளக்குகிறது.

அதாவது மாற்றுக் கொள்கைகளை விட பெருவிரிவாக்க கொள்கை மூலம் செய்யப்படும் கணிப்புகளுக்கு அளவீட்டு சான்றுகள் பொருந்துகின்றன.ஸ்ட்ரிங் தியரி மூலம் மாற்று விளக்கம் வரலாம் என எதிர் நோக்கப் படுகிறது.

அதே போல் பேரண்டத்தில் உள்ள பல பில்லியன் விண்மீன் திரட்சிகளில் ஒன்றால் நம்து விண்மீன் திரட்சி பால்வீதி மண்டலத்தில் உள்ள பல பில்லியன் விண்மீன்களீல் ஒன்றான நமது சூரியக் குடும்பத்தின் மூன்றாம் கோளான பூமியில் சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரு செல் உயிரி இருந்ததாக கண்டறியப்பட்டது. பிறகு 50 கோடி ஆண்டுகள் முன்பு நீர்வாழ் பல செல் உயிரிகள்[கேம்பிரியன்] கண்டறியப்பட்டன. அதன் பிற்கு கிடைத்த படிமங்களின் வரிசைப்படி பூமியில் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு உயிரிகள் வாழ்ந்த்மையும், ஒரு கால கட்ட உயிரிகளுக்கும்,அடுத்த காலகட்ட உயிரிகளுக்கும் அதிக ஒற்றுமை,குறைந்த உருமாற்றம் இருந்தமையும் சான்றுகளால் அறியப்பட்டது.

நிகழ்காலத்திலும் நுண்ணுயிரிகளில் ஏற்படும் பரிணாம மாற்றம் நன்கு ஆவணப் படுத்தப்பட்ட ஒன்று. மதவாதம் பேசும் நாடான சவுதி மெர்ஸ் வைரஸின் பரிணாம வள்ர்ச்சிக்கு அஞ்சுவது கண்கூடாகத் தெரியும் வேளையில்,மதவாதிகளின் கடவுளின் சக்திக்கு மீது இருக்கும் நம்பிக்கை என்பது என்ன எனப் புரியும்.

Hajj warnings amid Saudi MERS virus outbreak

ஆகவே பெருவிரிவாக்கம் என்பது பேரண்ட தோற்றம் என்பதும்,புதிய உயிரிகள் உருவாதல் பரிணாம வளர்ச்சியால் என்பன அறிவியலால் சான்றுகள் அடிப்படையில் ஏற்கப்பட்ட விடயங்கள்.

சரி பெருவிரிவாக்கம் முன்பு என்ன நடந்தது? பரிணாமத்தில் முதல் உயிர் எப்படி தோன்றியது என்பவை இதுவரை விடை தெரியா கேள்விகளே  ஏன் எனில் சான்றுகள் இல்லை.

ஒருவேளை சான்றுகள் கிடைத்தால் ,அவ்ற்றின் விளக்கமாக பதில் கிடைக்கும்.அறிவியல் என்பது கடவுள் என் மண்டைக்குள் செய்தியை எனக்கு மட்டுமே கேட்கும் படி அனுப்புகிறார்,அதைக் கேட்டு பயன் பெறுக என்பது போல் அல்ல.
"என் உச்சி மண்டையில் கிர்ருங்குதுஎன்ற பாடல் ஆன்மீகவாதிகளுக்கு மிகவும் பிடிக்கும் என நம்பலாம்.

ஆகவே அறிவியல் சான்றுகள் அடிப்படையில் மட்டுமே விளக்கம்,பதில் அளிக்கும் என்பதால் ,பெரு விரிவாக்கம் முன்பு,முதல் உயிரின் தோற்றம் எப்படி என்பதை இப்போதைய விடை தெரியா கேள்வி என்ற   உண்மையை ஒத்துக் கொள்வதில் தயக்கம் காட்டுவது இல்லை.

ஆனால் மதப் புத்தக்ம் மொழியியல்,வலாற்று சான்றுகள் அடிப்படையில் பொய்யாகி விடும் என்பது மதத்தை நிராகரிக்க போதுமானது.ஆனால் நான் அறிந்தவரை எந்த மதவாதியும் இது பற்றி விவாதிக்க விரும்புவது இல்லை.

பைபிளில் சொல்லப்படும்சாலமன் அரசனுக்கு முந்தைய [பைபிளின்] கதைகளுக்கு சமகால குறிப்பு ஆதாரம் இல்லை என்பதும்,இஸ்ரேல் ஒரு பேரரசாக இருந்தமைக்கும் ஆதாரம் இல்லை என்றே வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.அதுவும் இயேசு(ஈசா) என்பவருக்கும் வரலாற்றில் சான்றுகள் இல்லை.
சகோ வழிப் போக்கனின் இரண்டாம் கேள்வி இதுதான்!!!
/ ஆனால் மனிதனை ஆறாம் அறிவினை உடையவனாக கூறி இருக்கின்றனர். ஆனால் அந்த அறிவிற்கு உரிய உறுப்பு எது?//

இதற்கு பதில் என்னவென்றால் மனிதனின் மூளை.மனிதனின் மூளை வளர்ச்சி சார்ந்தே அவனின் அறிவு வளர்ச்சி ஏற்பட்டது.அதன் பிறகே,உலக முழுதும் பரவல் , விவசாயம்,நாகரிகம்,மதம் அனைத்தும் ஏற்பட்டது.

மூளை வளர்ச்சி குறைவான மனிதர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை அறிந்தால் புரிந்துவிடும்.

பிற உயிரிகளுக்கும் மூளை இருக்கிறதே அவை ஏன் அப்படி என்றால்  மூளை இருந்தால் மட்டும் போதுமா சிந்திக்க மூளை இணைப்புகள் வேண்டாமா, பாருங்கள் மூளையின் தானியியங்கியாக இயங்கும் நியுரான் எனப்படும் இணைப்புகள் மனிதனுக்கு 85 பில்லியன் ஆகும்.பிற விலங்குகளுக்கும் பாருங்கள்.

மூளையின் உள்ள நியுரான்கள் மட்டும் அல்ல ,வளரும் சூழல்,கற்கும் கல்வி என்பதும் ஒருவரின் அறிவுத்திறனை நிர்ணயிக்கும் காரணி ஆகும். பரிணாம அறிவியலைப் பொறுத்தவரை மனிதன் பிற விலங்குகளை விட உயர்ந்த்வன் அல்ல. அவனுக்கு இயற்கையை உணரும், மாற்றும்(அதாவது அழிக்கும்) திறன் இருப்பது அவனுக்கு கிடைத்த வரமா இல்லை,இயற்கை செய்த தவறா என்பது நல்ல விவாதம் செய்ய ஏற்ற ஒன்று.

கடந்த சில ஆயிரம் ஆண்டுகளில் பூமியை அழிவுப் பாதை நோக்கி செலுத்துவதில் மனிதனுக்கு இருக்கும் பங்கினை எவரேனும் மறுக்க முடியுமா?
அணுக் கழிவுகள் பல மில்லியன் ஆண்டுகள் தொடர்ந்து கதிர்வீச்சு தரும்,அதனை  பாது காத்தல் மிகவும் செலவு பிடிக்கும் விடயம் என்றால் காதில் வாங்காமல் இந்தியா வல்லரசு எனக் கூவும் மனிதர்கள் அறிவு மிக்கவர்களா???

கீழை நாடுகள் மேலை நாடுகளின் பரிசோதனைக் குப்பைக் களம் ஆகிறது என்றால் செவி கொடுக்காமல் இருக்கும் மனிதன் அறிவு மிக்கவனா!!!

மக்கள் தொகை அதிகரிப்பு பேரழிவைத் தரும் என்றாலும் காதில் வாங்காமல் கடமையே கண்ணாக இருக்கும் மனிதன் அறிவு மிக்கவனா???

இயற்கையை பிற உயிரிகள் பாழாக்காமல் மேம்படுத்தும் வகையில் வாழும் போது அறிவு மிகுந்ததாக கூறுபவன் அப்படி இல்லையே!!

எறும்புகள் ,தேனீக்க்ள் உழைத்து பகுத்துண்டு ,பகிர்ந்து வாழும் போது சுயநலம் பிடித்து தனக்கு தனக்கு என   ஆக்கிரமிக்கும் மனித்னா அறிவு மிக்கவன்??

இயற்கையும் படைக்கும்,காக்கும்,அழிக்கும் ஆனால் பாரபட்சம் அற்றது.
அப்படி இயற்கையின் சுய அழிவு வேலைகளுள் ஒன்றுதான் மனிதனின் பரிணமிப்பு!!!
மனிதன் உயர்ந்தவன் என்னும் மதவியாபாரிகளின் வியாக்கியான விளக்கங்களுக்கு தொடர்ந்து மறுப்பு தருவோம்.
நம் மறுப்புகள் சுருக்கமாக‌

1. மனிதன் பிற உயிரிகளை விட எந்த வகையிலும் சிறந்தவன் அல்ல.ஆன்மா என்பது கிடையாது.பிற உயிரிகளை விட‌ இயற்கையை அழிப்பதில் மனிதன் முக்கிய பங்கு வகிக்கிறான்.

2.மதபுத்தங்களுக்கு மொழியியல்,வரலாற்று சான்றுகள் கிடையாது.
இதைப் பற்றி விவாதிக்க ஆன்மீக வியாபாரிகளுக்கு தயக்கம் உண்டு.

3. அறிவியலில் சான்றுகள் இல்லா விடயங்களை விடை தெரியா கேள்விகள் என ஒத்துக் கொள்வதில் அறிவியலாளர்களுக்கு தயக்கம் இல்லை.

ஆகவே சான்றுகளே இல்லா,[அல்லது எதிரான சான்றுகள் உடைய] மத புத்தகங்களில், அறிவியலின் விடை தெரியா கேள்விகளை அதாவது சான்று தேடப்படும் விடயங்களைத் தேடுவது சரியா???

சிந்திக்க மாட்டீர்களா???

இப்பதிவில் குறிப்பிட்ட விளக்கம் மீதான விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன.



நன்றி!!!

47 comments:

  1. //அறிவியலில் சான்றுகள் இல்லா விடயங்களை விடை தெரியா கேள்விகள் என ஒத்துக் கொள்வதில் அறிவியலாளர்களுக்கு தயக்கம் இல்லை.//
    இந்த விடை தெரியாத கேள்விகளின் மீது தானே மதவாதிகள் குதிரை சவாரி செய்கிறார்கள். கல்வி எப்படி வியாபாரமாக உள்ளதோ, அதே போல் கடவுளும் ஒரு வியாபாரமே உங்கள் நம்பிக்கையின் மீது பணம் பறிக்க ஒரு கும்பல் காத்துக்கொண்டு இருக்கிறது என்பதை இங்கு யாரும் அறிவதில்லை. வியாபாரமாக ஆன பிறது இதனை உடைத்தெரிவது இயலாத காரியம். கற்பனையான கடவுள் இப்போது சிலரிடம் ஒரு வியாபார தளமாக உள்ளது.

    உங்கள் பதிவுகள் மிக அருமை

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ,
      அறிவியல் தெரிந்ததை கூறும்,எவரையும் பரிசோதித்து சரிபார்க்க சொல்லும்.சான்றில்லா விடயத்தை அறியவில்லை என சொல்லி விடும்.

      ஆனால் ஆன்மீக வாதிகள் மத புத்த்கம் மொழியியல்,வரலாற்று சான்றுகள் இல்லை என்றாலும் தூக்கி பிடித்து,தற்போதைய அறிவியல் விடை காணா விடயங்களை மத புத்த்கத்தில் தேடுவேன் என்பதை என்ன சொல்வது ????
      ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

      நன்றி!!!

      Delete
  2. நான் ஒரு ஆத்திகவாதியிடம், என் பையனுக்கு இருக்கிற ஆன்மா, என் விந்தணு மூலம் அவனுக்கு வந்ததா இல்லை என் மனைவியின் கருமுட்டையிலிருந்து வந்ததா என்று கேட்டேன்.

    Option-1:-

    என்னிடமிருந்து என் பையனுக்கு வந்திருந்தால், எனக்கு இரண்டு ஆன்மா இருந்திருக்க வேண்டும். என் அப்பாவுக்கு மூன்று, என் தாத்தாவுக்கு நான்கு,......and so on.

    Option-2:-

    என் மனைவியிடமிருந்து என் பையனுக்கு வந்திருந்தால் கூட, Option-1-இல் உள்ள அதே case தான்.

    Option-3:-

    இந்த இரண்டு option-னுமே இல்லை என்றால், என் பையனுக்கு ஆன்மா வேறு எங்கிருந்தாவது, நடுவில் புகுந்திருக்க வேண்டும். அது எந்த வயதில் புகுந்தது? அப்படி புகுருவதர்க்கு முன்பு, அவன் ஆன்மா இல்லாதவனாக இருந்தானா?.

    அதற்கு பதில் அவர் பதில் சொல்லவில்லை. ஆன்மாவைப் பற்றி நன்கு தெரிந்த நண்பர்கள் யாராவது இதற்கு பதில் கூறுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. சகோ ஏலியன்,

      உங்களின் கேள்விகள் அருமை !!!

      ஆன்மீகவாதிகளின் விளக்கப் படி ஆத்மா என்பது என்ன?

      இந்து,பவுத்தம் உள்ளிட்ட கீழை நாட்டு மதங்களின் படி உடல் அல்லாத மனிதனின் சுயம். ஒரு மனிதன் இறந்த பின் அவன் ஆத்மா இன்னொரு உடலை நாடுகிறது என்பதே இம்மதங்களின் அடிப்படை.

      இதனைப் ஏன் பரிசோதிக்க மறுக்கிறார்கள் என்பதே நம் கேள்வி!!!

      இதுவரை மறுபிறவி என சொன்ன கதைகள் அனைத்துமே ஏமாற்றுவேலை என்றாகி விட்டது .

      கர்ம பலன் என்னும் இப்பிறவியின் வினைகேற்ப அடுத்த பிறவி என்பதே சாதியை நியாயப் படுத்துகிறது என்பதால் இக்கோட்பாடு மிக ஆபத்தானது.
      **
      ஆபிரஹாமிய மதங்களில் ஆத்மா இன்னும் குழப்பம். நியாத் தீர்ப்பு நாளில் மனிதர்கள் தங்களின் உடலோடு மீண்டும் உயிராக்கப் படுகிறார்கள். அப்போது உடல் இல்லாமல் உயிர் இல்லை!!. அப்போது இறந்தவனின் உயிர் எங்கே???


      நன்றி!!!

      Delete
  3. சகோ சர்வாகன்,


    ஆன்மா இல்லை என்று அறிவியல் நிரூபித்து உள்ளதா? சித்தர்களின் பாடல்களில் சிசு எவ்வாறு உருவாகின்றது என்றும்,மூன்று மாதங்களின் பின்பு ஆன்மா வந்து சேர்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது!! தொழில் நுட்பம் இல்லாத காலத்தில் எவ்வாறு கணித்து இருப்பார்கள்? சித்தர்கள் கூறிய கரு உண்டாகும் படிமுறையை அறிவியல் ஏற்றுகொள்ளும்!
    கரு உண்டாவதை கணித்த சித்தர்கள் ஆன்மா வந்து சேர்க்கிறது என்று பொய் கூறுவார்களா?

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ கர்ம யோகி,
      தங்களின் கருத்துகளை நம் தளத்தில் இட்டமைக்கு நன்றி!!
      ஆயினும் உங்களின் கருத்துகளின் மீது என் மறுப்புகளை வைக்கிறேன்.

      1./ஆன்மா இல்லை என்று அறிவியல் நிரூபித்து உள்ளதா?/
      அறிவியல் ஆன்மா ஒன்று இருப்பதாகவே ஏற்பதில்லை.
      ஆத்மா என்பது மனிதனின் உடல் சாராத அழிவில்லாத பகுதி என்னும் கருத்தை அறிவியல் ஏற்பது இல்லை. உடல் இல்லாமல் உயிர் இல்லை!!!உடல் அழியும் போது நாம் இல்லாமல் போகிறோம்.நாம் என் உணர்வது மூளையின் செயல் மட்டுமே!!!

      பாருங்கள் ஆங்கிலத்தில் Soul எனவும் தமிழில் ஆன்மா எனவும் அழைக்கப்படும் விடயம் பற்றிய விக்கி அதில் ஆத்மா பற்றிய அறிவியலின் நிலைப் பாட்டை கூறி இருக்கிறார்கள்.அது இதோ!!!
      http://en.wikipedia.org/wiki/Soul

      Science and medicine seek naturalistic accounts of the observable natural world. This stance is known as methodological naturalism.[86]

      Much of the scientific study relating to the soul has involved investigating the soul as an object of human belief, or as a concept that shapes cognition and an understanding of the world, rather than as an entity in and of itself.

      When modern scientists speak of the soul outside of this cultural context, they generally treat soul as a poetic synonym for mind.

      Francis Crick's book, The Astonishing Hypothesis, for example, has the subtitle, "The scientific search for the soul". Crick held the position that one can learn everything knowable about the human soul by studying the workings of the human brain. Depending on one's belief regarding the relationship between the soul and the mind, then, the findings of neuroscience may be relevant to one's understanding of the soul. Skeptic Robert T. Carroll suggests that the concept of a non-substantial substance is an oxymoron, and that the scholarship done by philosophers based on the assumption of a non-physical entity has not furthered scientific understanding of the working of the mind.[87]
      Daniel Dennett has championed the idea that the human survival strategy depends heavily on adoption of the intentional stance, a behavioral strategy that predicts the actions of others based on the expectation that they have a mind like one's own (see theory of mind). Mirror neurons in brain regions such as Broca's area may facilitate this behavioral strategy.[88] The intentional stance, Dennett suggests, has proven so successful that people tend to apply it to all aspects of human experience, thus leading to animism and to other conceptualizations of soul.[89][non-primary source needed]
      Jeremy Griffith has defined soul as the human species' instinctive memory of a time when modern human ancestors lived in a cooperative, selfless state,[90] suggesting this occurred in pre-Homo (i.e. Australopithecus) hominins.

      Delete
    2. சகோ கர்ம யோகி
      2./சித்தர்களின் பாடல்களில் சிசு எவ்வாறு உருவாகின்றது என்றும்,மூன்று மாதங்களின் பின்பு ஆன்மா வந்து சேர்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது!! தொழில் நுட்பம் இல்லாத காலத்தில் எவ்வாறு கணித்து இருப்பார்கள்? சித்தர்கள் கூறிய கரு உண்டாகும் படிமுறையை அறிவியல் ஏற்றுகொள்ளும்!
      கரு உண்டாவதை கணித்த சித்தர்கள் ஆன்மா வந்து சேர்க்கிறது என்று பொய் கூறுவார்களா?/

      சித்தர் சொல்கிறார்,புத்தர் சொல்கிறார் என அறிவியல் ஏற்காது .பரிசோதிக்கும் தன்மை சார்ந்தே எந்த கொகையும்,விள்க்கமும் ஏற்கப் படும்.
      கரு உருவாதல் பற்றிய அறிவியலின் விளக்கம் இதோ முதல் நாளில் இருந்தே தொடர் செல் பிரிதல்,இணைதல் நடைபெறுகிறது.
      படியுங்கள்!!
      https://en.wikipedia.org/wiki/Human_embryogenesis
      !

      குழந்தை உருவாதல் பற்றி எந்த சித்தர் என்ன சொன்னார் என் அறியேன். நீங்கள் சொன்னால் நானும் அறிந்து கொள்வேன். அவர் சொன்னது பரிசோதிக்க முடியுமா என்பதையும் அலசுவோம் !!! நன்றி!!!

      Delete
    3. According to Science Mind is like a Computer... Which has a HARDDISK and a PROCESSOR(Brain) and a OPERATING SYSTEM(Information recorded and Logics learnt from learning from childhood to death)... In a computer if u FORMAT the harddisk then the computer is useless also if u break the harddisk and processor the information and Logic also is wasted... Religious people confuse HARDSISK with body and Information and logic stored in it with SOUL... But nothing like that exists.. Note : This is just an example for ease of understanding do not come up with illogical questions please...

      Delete
  4. Continution... But Logical questions are always welcome..

    ReplyDelete
    Replies
    1. சகோ ஜெனில்,
      / Science Mind is like a Computer... Which has a HARDDISK and a PROCESSOR(Brain) and a OPERATING SYSTEM(Information recorded and Logics learnt from learning from childhood to death)../
      அறிவியலின் படி மனிதன் உள்ளிட்ட உயிரிகள் ஹார்ட்வேர்+சுயநிர்ணய தானியங்கி சாஃப்ட்வேர்[Adaptive,automotive& self learning] கொண்ட இயந்திரம் எனலாம்.

      ஒருவேளை எதிர்காலத்தில் சிந்திக்கும் வகை ரோபோக்கள் தொழில் நுட்பம் வளரும் போதும் இன்னும் நிறைய அறிவோம் எனலாம்.

      உயிருக்கும்,ஆத்மா என்பதற்கும் என்ன தொடர்பு,வித்தியாசம் என்பதையும் ஆன்மீக பேரொளிகள் சொன்னால் நலமாக இருக்கும்!!!
      ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

      நன்றி!!!

      Delete
  5. அறிவுபூர்வமாக விவாதித்து உறுதிபடுத்த முடியாத விடயம் ஆன்மா. அதை உணர்வுபூர்வமாக மட்டுமே அறிந்துக்கொள்ள முடியும். ஆன்மாவைப் பற்றி விவாதிப்பதில் சிலருக்கு அலாதி ஆனந்தம். இல்லாத ஒன்றை இருப்பதுபோல் உணர்வது ஆன்மீகவாதிக்கு இன்பம். இருப்பதையே இல்லை என்று விவாதிப்பது அறிவாளிக்கு இன்பம். இரண்டையுமே நிரூபி என்று வாதாடுவது அறிவுஜீவிக்கு இன்பம். ஆக ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்றில் இன்பம்.

    ReplyDelete
    Replies
    1. சகோ ஜோசப்,

      /அறிவுபூர்வமாக விவாதித்து உறுதிபடுத்த முடியாத விடயம் ஆன்மா./

      இதைத்தான் நானும் சொல்கிறேன். அறிவியல் பரிசோதனை அடிப்படையில் மட்டுமே எதையும் ஏற்கும்.

      ஆன்மா என்பது என்ன என்பதில் ஆன்மீகவாதிகளுக்கும் கருத்து வேறுபாடு,குழப்பங்கள் உண்டு.

      ஆகவே அறிவியலையும்,ஆன்மீகத்தையும் குழப்பி பிரச்சாரம் செய்ய வேண்டாம் என்பதை மட்டுமே வலியுறுத்துகிறோம்.

      அறிவியலின் இன்றைய விடை தெரியாக் கேள்விகளுக்கு மத புத்தகம் விடை தரவே தராது!!!

      நன்றி!!!

      Delete
  6. சகோ சர்வாகன்,

    நான் உங்கள் ரசிகன் உங்களின் பல பதிவுகள் வாசித்து இருக்கிறேன் அருமை வாழ்த்துக்கள்!!


    அறிவியலின் படி ஆன்மா இல்லை என்றால் முற்பிறவி ஆராய்ச்சி பலபேரிடம் நடந்து உள்ளது,அதாவது இப்போது உயிருடன் இருக்கும் ஒருவர் முற்பிறப்பில் யாராக இருந்தேன் என்ன இடத்தில் இருந்தேன் அம்மா அப்பா பெயர் உட்பட பலதும் கூறுவார் அவர்கள் கூறும் இடத்திற்கு சென்று பார்த்தால் எல்லாம் சரியாக இருக்கும் இவ்வாறானவர்களை ஆராய்ந்து அவர்கள் பொய் கூறவில்லை என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது.அப்படியென்றால் ஆன்மா இல்லை என்று வாதிடும் அறிவியல் இந்த விடயங்களை எந்தக்கோணத்தில் பார்க்கிறது?

    ReplyDelete
    Replies
    1. சகோ கர்மயோகி,

      அறிவியலின் படி உயிர் என்பதும் உடலின் ஒரு பகுதியே.உயிர் நீங்கிய உடலை எப்படி மருத்துவர்கள் கண்டறிகிறார்கள் என அறிவோம் அல்லவா?

      உயிரும் ஆத்மாவும் ஒன்றா,அல்லது எது எதன் பகுதி?

      அதே போல் கோமாவில் இருக்கும் ஒருவரின் உயிர் அல்லது ஆத்மா பற்றி என்ன சொல்வோம்?

      அறிவியல் உடல் சார்ந்து, பரிசோதிக்க முடியும் விடயம் மட்டுமே கருத்து சொல்லும்.
      /அறிவியலின் படி ஆன்மா இல்லை என்றால் முற்பிறவி ஆராய்ச்சி பலபேரிடம் நடந்து உள்ளது,அதாவது இப்போது உயிருடன் இருக்கும் ஒருவர் முற்பிறப்பில் யாராக இருந்தேன் என்ன இடத்தில் இருந்தேன் அம்மா அப்பா பெயர் உட்பட பலதும் கூறுவார் அவர்கள் கூறும் இடத்திற்கு சென்று பார்த்தால் எல்லாம் சரியாக இருக்கும் இவ்வாறானவர்களை ஆராய்ந்து அவர்கள் பொய் கூறவில்லை என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது/


      இதுவரை மறுஜன்ம விடயங்கள் என் எதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டவை கிடையாது. சான்றுகள் இருப்பின் சொல்லுங்கள்.

      நன்றி!!

      Delete
  7. நல்ல பதிவு சகோ.

    உடம்பு, உயிர், ஆன்மா, வேறுபடுத்துங்கள் என்றால், உடம்பையும், உயிரையும் நிரூபித்துவிடலாம், ஆன்மாவை நிரூபிப்பது முடியாத காரியம். ஆன்மாவை ஒதுக்கிவிடலாம் என்றால், ஜென்மம் என்ற கொள்கைக்கு எதிராகவே போகும். அதனால் அது மதக்கோட்பாட்டிற்கு முக்கியமாக உள்ளது. மூளை வளர்ச்சியடைந்து விட்டது என்றால், அதற்கு சிந்திக்கும் திறம் வந்துவிடும். சிந்திக்கும் திறத்தில், உணர்வுபூர்வமாக அறிதல் வந்துவிடும். அந்த உணர்வுபூர்வமாக அறிதலை, ஆனமாவுடன் தொடர்புபடுத்த முயல்கிறார்கள். குழந்தைகளிடமும், மூளைவளர்ச்சி குன்றியவர்களிடமும் இந்த உணர்வுபூர்வமாக அறிதல் இருப்பதில்லை. சிலப்பேர், ஆன்மாவும் உயிரும் ஒன்றுதான் எனத்தப்பிக்க பார்க்கிறார்கள்.
    கடவுளும் அவர் உண்டாக்கிய உலகமும் வேறல்ல ஏனென்றால் கடவுள் இல்லாத ஒன்றை வைத்து உருவாக்கினால் கடவுளை விட அது மேலானது என்கிறார்கள். இந்த வகையில் பார்த்தால் ஆன்மாவிற்கு வாய்ப்பேயில்லை, அல்லது எல்லா உயிர்களுக்கும் ஆன்மாக்கள் உண்டு. கிருத்துவத்தில் எளிய வழியாக பரிசுத்த ஆவியை பிடித்துக்கொண்டார்கள். நம்ம மூமின்கள் எதை பிடித்துக்கொண்டார்கள் என தெரியவில்லை.

    ஆன்மா, கதாகாலட்சேபத்திற்குத்தான் உதவும்.

    தெய்வநாயகத்தின் திராவிட சமய்த்தை பற்றி, பார்ப்பன பாசிச இந்துத்துவ அடிவருடி
    ஜெயமோகன் என்னமா அவதூறு செய்கிறார் பாருங்கள் http://www.jeyamohan.in/?p=600
    சிறுபான்மை முற்போக்குவாதியான மதச்சார்ப்பற்ற தெய்வநாயகத்தை வசைப்பாடும் பிற்போக்கு மதவாதியான ஜெயமோகனை தமிழ்நாட்டை விட்டே விரட்ட வேண்டும்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சிவன்,பார்வதி,முருகன் என்பது பிதா,யேசு,பரிசுத்த ஆவியில் இருந்து வந்தவர் எனவெல்லாம் எழுதிய தெய்வநாயகம் மதசார்பற்றவரா?
      http://thamilarsamayam.wordpress.com/pdf-books/

      இந்த லிங்கில் உள்ள அவரது புத்தகங்களை படித்தால் வாயிலிருந்து மட்டும் சிரிப்பு வராது என்பது உண்மை. அவரது மகள் அவரது கண்டுபிடிப்பினை வைத்துஇந்தியா தோமாவழி திராவிடக் கிறித்தவ நாடே என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். தோமா இந்தியா வரவேயில்லை என்பது முதல்வருட வரலாறு மாணவரும் அறிந்த ஒன்றுதான். எவ்வாறு அவரை மதசார்பற்றவர் என்கிறீர்கள் விளக்கினால் தேவலை.

      தெய்வநாயகத்தை ஜெயமோகன் என்ன அவதூறு செய்துவிட்டார்? அவர் தெய்வநாயகம் பற்றி சொன்னது பொய்யா? மேலும் ஜெயமோகன் அப்படி பிற்போக்காக என்ன எழுதிவிட்டார்? சாதியை ஆதரித்தாரா? இல்லை பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவித்தார் என நீங்கள் தெரிவித்தால் தெரிந்து கொள்ளுவோம்! நன்றி சகோ.

      Delete
    2. சகோ நரேன்,
      உங்களின் ஜெயமோஹ நகைச்சுவை அருமை.

      திரு தெய்வநாயகத்தை யாரும் அவதூறு செய்யவே முடியாது!! ஏன் எனில் அவரின் மதம் சார் விளக்கங்களே அதை ஏற்கெனவே செய்து விட்டன.ம்ம்ம்ம்ம்ம்ம்.

      இயேசுவுக்கு வரலாற்று ஆதாரம் இல்லை எனில்,தோமாவுக்கும் இல்லை.அவ்வளவுதான்!!!

      ஏன் திரு ஜெயமோஹன் அறச்சீற்றம் கொள்கிறார்?


      திரு ஜெயமோஹனின் இந்து ஞான மரபில் திரு தெய்வநாயகம் கைவைக்கிறார் அல்லவா அதுதான். அது பங்காளி சண்டை சகோ!!

      தெய்வநயகத்தின் சிஷ்யப் பிள்ளை சகோ வழிப்போக்கன் ஆன்மா எனக் குழப்பி, குழம்பிய குட்டையில் தோமா வழி கிறித்தவம்தான் சைவம்,வைணவம் என மீன் பிடிக்க பார்க்கிறார்.

      இயேசுவின் சீடர்களில் பலர் மீன் பிடிப்பவர்கள்.என்னே ஒரு ஒற்றுமை!!!

      அல்லேலூயா அய்லஸா!!!


      நன்றி!!

      Delete
    3. சகோ நந்தவனம்,

      தெய்வநாயகத்தின் மத பிரச்சாரம் வரலாற்றுப் புரட்டு,பொய் என்பதை யாரும் எடுத்து சொல்லலாம். அதை ஜெயமோஹன் சொன்னாலும் சரி நரேந்திர மோடி சொன்னாலும் தவறில்லை.

      சகோ நரேன் சும்மா ஜோக் அடிக்கிறார் என்பது புரியவில்லையா?

      இந்து மதம் பரிணமித்த,பரிணமிக்கும் மதம்.

      இதன் பரிணாம வளர்சியில் மூன்று கால கட்டங்கள் குறிப்பிடத் தக்கவை.

      1. வேத கால மதம்

      2.உபநிஷத்துகள் காலம்

      3. சைவ,வைணவம் இணைந்து மேலோங்கிய இப்போதைய இந்து மதம்.

      இந்த மூன்றுக்கும் இடையில் ஒற்றுமை,வேற்றுமை உண்டு.

      எப்படி பரிணாம அறிவியலில்

      1.ஒரு செல் உயிரி 2.பல செல் உயிரி 3) கேம்பிரியன் என மாற்றங்களின் சான்றுகள் அரிதாக உள்ளது போல்.

      இடைவெளிகளுக்குள் படைப்புக் கொள்கை வர முயற்சிக்கும்.

      இந்து மத வரலாற்றிலும் அதன் மாற்றங்களின் சான்றுகள் அரிது.

      இந்த இடைவெளிகளில் ஆபிரஹாமிய கோத்திரத்தார் மூக்கை நுழைக்க பார்க்கிறார்.எந்த ஒரு [நல்ல]விடயமும் மேலை நாடுகளில் இருந்தே வந்தன என்னும் அதீத மேன்மைக் கோட்பாட்டின் வெளிப்பாடே இது.
      திருவள்ளுவரும் நபி

      தெய்வநாயகத்தின் இம்முயற்சி எடுபடவில்லை என்பதால் கைவிடப்படாமல்

      சகோ வழிப் போக்கன் மீண்டும் முயற்சி செய்கிறார்.

      நன்றி!!!
      நன்றி!!!

      Delete
    4. @ சார்வாகன் விளக்கத்துக்கு நன்றி சகோ. நான் கூட நண்பர் நரேன், உமாசங்கர் ஐஏஎஸ் மாதிரி ஆகி விட்டாரோ என குழம்பி போய்விட்டேன் :)

      @நரேன்
      ஸாரி ஃபார் த டிஸ்டபர்ன்ஸ்!

      Delete
  8. சகோ கர்மயோகி,
    //அறிவியலின் படி ஆன்மா இல்லை என்றால் முற்பிறவி ஆராய்ச்சி பலபேரிடம் நடந்து உள்ளது//
    இந்த முன் ஜென்மம் எல்லாம் சும்மா நண்பரே. இந்த முன் பிறவியின் தொடக்கத்தை சென்று பார்த்தால் அங்கு ஒரு அநீதியே மிஞ்சும். அதாவது, நான் ஒருவனை அடித்தால், அந்த அடிபட்டவன், போன ஜென்மத்தில் வேறொருவனை அடித்திருக்க வேண்டும். அதனால், இந்த ஜென்மத்தில் என்னிடம் அடி வாங்குகிறான். அந்த போன ஜென்மத்தில் அடிவாங்கினவன், அதற்க்கு முந்தின ஜென்மத்தில் இன்னொருவனை அடித்திருக்க வேண்டும். இப்படியே போய் போய் முதல் ஜென்மத்திற்கு போய்விட்டால், அங்கு அடிவாங்கிய ஒருவனும், அடித்த ஒருவனும் இருந்திருக்க வேண்டும். இங்கே தான் பிரச்சனை. இந்த முதன் ஜென்மத்தில் அடிவாங்கிய ஒருவனுக்கு, எந்த தப்பும் செய்யாமல் அடிக்கப்பட்டிருக்கிறான். ஏனென்றால், இவனுக்கு இதுதான் முதல் ஜென்மம். இது ஒரு அநீதி. ஒரு நேர்மையான கடவுள் இப்படி ஒருவனுக்கு அநீதி செய்ய முடியாது. எனவே முன் ஜென்மம் இங்கே பொய்யாகிறது.

    ReplyDelete
    Replies
    1. சகோ ஏலியன்,

      மிக்க நன்றி நண்பா!

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. மதம் எனும் பெயரில் கோவிலுக்கு போய் கும்பிடு போடுவதையும் ஆள் சேர்ப்பதையும் ஒதுக்கிவிட்டு, சற்றே மதங்களை தத்துவார்த்தமாக அணுகினால் ஆத்மாவை பற்றி இந்தியாவின் தத்துவ பள்ளிகளில் சற்றே மாறுபட்ட கருத்தினை முன்வைக்கிறார்கள். மேலும் மேற்கத்திய தத்துவ மேதைகளும் இது பற்றி சொல்லியிருக்கிறார்கள். உலகில் தோன்றிய மனிதரில் முதன்மையான அறிஞர் என கருதப்படும் அரிஸ்டாட்டில் இது பற்றி சொல்லுகிறார். ஆனால் மேற்கத்திய லௌகீதவாதமான அறிவியலும் பாண்டைய இந்தியவின் லௌகீகவாதமான சார்வாகமும் எப்போதும் ஆத்மாவை புறக்கணித்தே வந்துள்ளன.

    ஆனால் ஆத்மா-soul-consciousness இதெல்லாம் டுபாக்கூர் என அறிவியல் சொன்னது சில ஆண்டுகளுக்கு முன்பு வரைதான். இப்போது நரம்பியல் நிபுணர்களும், குவாண்டம் பிசிஸிட்டுகளும் ஆத்மா என்றார் என்ன? அது இருக்கிறதா? அதை அறிவியல் ரீதியாக புரிந்து கொள்ள முடியுமா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்க சீரியஸாகவே முயற்சி செய்கிறார்கள் தற்போது.

    ஆத்மா போன்ற விடயங்களை எல்லோரும் புரிய முடியாது, அதற்கு தக்க பயிற்சி வேண்டும் என இந்து மற்றும் புத்த குருமார்கள் சொன்ன போது பலர் சிரித்தார்கள். ஆனால் ஒரு இயற்பியல் சோதனை குறித்து ஒரு இயற்பியலாளர் சொன்னார்.... குவாண்டம் நிலையில் ஒரு பொருள் ஒன்றுக்கு மேற்பட்ட நிலையில் இருக்கும் (Schrödinger's cat!). முன்பு 1926-ல் மேக்ஸ் பார்ன் எனும் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி துகள்கள் ஒரு நிலையற்று‘waves of probability' ஆக இருக்கும் என்றார். 2011-ல் கலிபோர்னிய ஆராய்ச்சியாளர்கள் குவாண்டம் நிலையை தாண்டி மயிரிழை போன்ற இழையை அசையும் ஆனா அசையாது என நிலையில் இருந்ததை செய்து காட்டினார்கள் என்றார்.

    புரியலையே, அது எப்படி ஒரே நேரத்தில் அசையும், ஆனா அசையாது இருக்க முடியும் என்றேன். அவர் சொன்னார் இது முழுவதும் புரிய உங்க last name ஐன்ஸ்டைனாக இருக்க வேண்டும் என்றார் தமாஷாக! அதாவது அது அசைகின்றது அல்லது நிலையாக உள்ளது என்பது பார்வையாளரை பொறுத்தது. நமது consiousness ஆனது space மற்றும் நேரம் இவற்றின் பயன் கொண்டு விடயத்தை தெரிவிக்கிறது. ஆனால் இந்த ஆத்மா இவற்றினை தாண்டியும் இருக்கிறது. ஆக இவ்வகை பரிசோதனைகள் soul exists outside space and time என காட்டுவதாக சில விஞ்ஞானிகள் கருதுகிறார்களாம். ஆனால் அதை தாண்டி ஆத்மா என்பது உலகின் எல்லா பொருட்களோடையும் தொடர்பு கொண்டிருக்கிறது, அதிலிருந்து வருகிறது, அங்குதான் இருக்கிறது,அங்கேயே செல்கிறது, ஆவதோ அழிவதோ இல்லை. இதைத்தான் இந்திய தத்துவங்களும் விளக்க முற்பட்டன.

    ரொம்ப குழப்பமாயிருக்கு இல்லையா? எனக்கும்தான். இவர்கள் தொடர்ந்து ஆய்வு செய்தால் ஆத்மா என்று எதனை பாண்டைய தத்துவ அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள் என தெரிய வரலாம், தெரியாமையும் போகலாம்!

    இப்போதைக்கு இதை பாருங்கள், படியுங்கள் http://tinyurl.com/mzyh2aa
    மேலும் ஆர்வமிருப்போர்க்காக, நரம்பியல் நிபுணர் பார்வையில் ஆத்மா புத்தக இணைப்பு; http://tinyurl.com/d4gzv3e

    டிஸ்கி: ஆத்மா இருக்கிறது பார் என வாதிடுவதற்கல்ல இப்பின்னூட்டம். ஆத்மா குறித்தான ஆய்வுகளை பற்றி பகிர மட்டுமே.

    ReplyDelete
  11. சகோ நந்தவனம்,
    உங்களின் த்கவல் சுட்டிக்கு நன்றி.அதனை இதுவரை பரிசோதிக்காத கருதுகோள் என்றவகையில் ஏற்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. மூளையின் நியுரான்களில்(அல்லது அதனைவிட சிறிய சேமிப்பான்) நமது உணர்வு+சிந்தனை பொதிந்து இருக்கிறது.இறப்பின் பின்னும் இது தொடர்கிறது,ஒரு வேளை இது மீட்சி செய்யப்பட்டால்,நமது சுயம் உயிர்த்து எழும் என்பது தர்க்கரீதியாக நல்ல வாதம் மட்டுமே.இந்த அறிவு+உணர்வு சார் துகள்கள் பேரண்ட தோற்றத்தில் இருந்தே உள்ளது என்பதும் நல்ல ஒருவாதமே.

    அப்படி மூளையின் ஒரு துகள் அழிவில்லாமல்,தகவல்களை இறப்பின் பின்னும் தாங்கி நிற்கும் என்பது பரிசோதிக்கப் படும் என்றால்,அத்தகவல்கள் மீட்டு எடுக்கப்படும் என்றால் நிச்சயம் ஆத்மா என்பதை பரிசீலிப்போம்.

    எனினும் இது ஒருவகை உயிரியலின் ஸ்ட்ரிங் தியரி வெர்சன் ஆக நமக்கு தோன்றுகிறது!!.

    எனினும் இதுவும் பருப்பொருள் சார்ந்த விடயம்,ஆன்மீகவாதிகளின் ஆன்மா என்பது பருப்பொருள் சாரா விடயம் அல்லவா?

    உங்களின் சுட்டி தகவல் மொத்தத்தையும் வெட்டி விடுகிறேன்.
    http://www.huffingtonpost.com/2012/10/28/soul-after-death-hameroff-penrose_n_2034711.html
    மிக மிக ....
    நன்றிகள்!!!

    ReplyDelete
  12. http://www.huffingtonpost.com/2012/10/28/soul-after-death-hameroff-penrose_n_2034711.html

    Scientist Shows What Happens To 'Soul' After Death (VIDEO)
    The Huffington Post | By Jahnabi Barooah
    Posted: 10/28/2012 5:06 pm EDT Updated: 10/28/2012 11:37 pm EDT

    In a video that recently aired on “Through the Wormhole” narrated by Morgan Freeman on the TV channel Science, Dr. Hameroff claims, "I believe that consciousness, or its immediate precursor proto-consciousness, has been in the universe all along, perhaps from the Big Bang."

    Understanding where consciousness comes from could solve mysteries such as what happens to the "soul" during near-death experiences, or when a person dies.

    Dr. Hameroff goes on to share hypothetical scenarios derived from the Orch-OR (orchestrated objective reduction) theory of consciousness that he and Roger Penrose, mathematician and physicist, proposed in 1996. According to the theory, consciousness is derived from microtubules within brain cells (neurons) which are sites of quantum processing.

    But what exactly is consciousness, where does it come from and can it be scientifically proven? Dr. Stuart Hameroff, MD, is Professor Emeritus at the Departments of Anesthesiology and Psychology and the Director of the Center of Consciousness Studies at the University of Arizona and much of his research over the past few decades has been in the field of quantum mechanics, dedicated to studying consciousness.

    According to Dr. Hameroff, in a near-death experience, when the heart stops beating, the blood stops flowing, and the microtubules lose their quantum state, the quantum information in the microtubules isn't destroyed. It's distributed to the universe at large, and if the patient is revived, the quantum information can go back to the microtubules. In this event, the patient says they had something like a near-death experience, i.e. they saw white light or a tunnel or floated out of their body. In the event that the patient is not revived, "it's possible that the quantum information can can exist outside the body, perhaps indefinitely, as a soul," he said.

    The Orch-OR theory of consciousness remains controversial in the scientific community. Many scientists and physicists have challenged it, including MIT physicist Max Tegmark, who wrote a paper in 2000 that was widely cited.

    Still, Dr. Hameroff believes that "nobody has landed a serious blow to the theory. It's very viable."

    ReplyDelete
  13. ****What Happens to Consciousness When We Die

    The death of the brain means subjective experiences are neurochemistry***

    This is an article in scientific american!

    http://www.scientificamerican.com/article.cfm?id=what-happens-to-consciousness-when-we-die

    Now here are some responses for that article!

    ----------------------

    Lowndes responds!

    Some people still have compelling, eloquent dissertations on why the Earth is flat and the center of the universe. They may be real nice people that truly believe that stuff, and you may like them personally, and you may be holding on to beliefs that were taught to you as a child by well meaning adults that you care deeply about, and that means everything to some people, but these are not valid in the "scientific" analysis. And THIS is "Scientific American", so what is it doing here?? Has this turned into "Sensational American", or "Attention Seeking Headline American", or just "Journalism American"??

    ---------------

    @Lowndes - I agree. When a "science" magazine posts an article titled "What Happens to Consciousness When We Die", the expectation is that the article will use scientific means to present a conclusive answer. This article is short on science and never comes close to answering the titular question.

    --------------------

    ReplyDelete
    Replies
    1. வாங்க வருண் மச்சான்,
      உங்களின் தகவல் சுட்டி மிக அருமை. அதில் முக்கிய வரிகளை தமிழ் படுத்துகிறேன்.
      1./ The hypothesis that the brain creates consciousness, however, has vastly more evidence for it than the hypothesis that consciousness creates the brain. ./
      மூளைதான் உணர்வை உருவாக்குகிறது என்ற கருதுகோளிற்கான சான்றுகள், உணர்வுதான் மூளையை உருவாக்கிறது என்னும் கருதுகோளை விட அதிகம்.
      2./ Neuroscientists can predict human choices from brain-scanning activity before the subject is even consciously aware of the decisions made. Using brain scans alone, neuroscientists have even been able to reconstruct, on a computer screen, what someone is seeing./
      மூளையின் வெளியீடுகளை கருவிகள் மூலம் அளவிட்டு,அதனை விளக்க முடிகிறது. ஒருவரின் விருப்பு வெறுப்பு கூட முடிவு எடுக்கும் முன்னரே அறிய முடிகிறது. மூளையின் ஸ்கான் என்ப்படும் நுண்கூறு புகைப்படம் மூலம் ஒருவர் பார்க்கும் காட்சியைக் கூட வடிவமைக்க முடிகிறது.
      3./ Thousands of experiments confirm the hypothesis that neurochemical processes produce subjective experiences. /
      மூளையின் நரம்பியல் வேதி வினைகளே உள்ளுணர்வு சார் அனுபவங்களை உருவாக்குகிறன என்பதை ஆயிரக்கணக்கான பரிசோதனை சான்றுகள் மெய்ப்பிக்கின்றன.
      4./ How does consciousness cause matter to materialize? We are not told. Where (and how) did consciousness exist before there was matter? We are left wondering. As far as I can tell, all the evidence points in the direction of brains causing mind, but no evidence indicates reverse causality./
      எப்படி உள்ளுணர்வு, பருப்பொருள் உருவாக்க முடியும்? இதை யாரும் எவருக்கும் சொல்லவில்லை. பருப்பொருள் உருவாகும் முன்,உள்ளுணர்வு எங்கு,எப்படி இருந்தது? இக்கேள்விகளின் பதிலாக வியப்பு மட்டுமே மிஞ்சுகிறது.

      ஆகவே மூளையானது உள்ளுணர்வை உருவாக்குகிறது என்பதை சான்றுகள் சுட்டுகிறதே தவிர ,உள்ளுணர்வு பருப்பொருளை உருவாக்குகிறது என்பதை அல்ல!!!

      ***

      ஆத்திகம் ,நாத்திகம் விவாதம் என்பது ,பொருள் முதல்வாதம்,கருத்துமுதல்வாதம் ஆகவே பரிணமிக்கும் என்பதை அருமையாக விள்க்கிய சுட்டி!!!

      மிக்க நன்று,நன்றிகள் வருண் மச்சான்!!!

      Delete
  14. Let deivanagagam and Jeyamohan attack each other. BUT REMEMBER!

    Both of them are IDIOTS!

    If one supports JM over Deivanayagam, then we got a problem!

    Religious beleives are taught when these guys are very young. No matter how much scientific knowledge they gain later wont HELP MAKE their brain work better. It is spoiled at very young age and so they DEFEND until they die!

    ReplyDelete
    Replies
    1. வருண் மச்சான்,
      //Let deivanagagam and Jeyamohan attack each other. BUT REMEMBER!

      Both of them are IDIOTS!

      If one supports JM over Deivanayagam, then we got a problem!//

      எனக்கு பதிவு எழுதும் போது ஜெய மோஹனின் தெய்வநாயகம் பற்றிய விமர்சனம் தெரியாது. சகோ நரேனின் சுட்டியில் இருந்தே படித்து அறிந்தேன். அதில் தெய்வநாயகம் பற்றிய விமர்சனம் சரியாகவே தெரிந்தது.

      மத்வாதிகள் தங்களின் மதத்தின் கடந்த காலத்தை புனிதமாக காட்ட பொய் புரட்டு செய்தால் மட்டுமே சாத்தியம்.

      இதில் ஜெயமோஹனின் இந்து ஞானமரபும் அடங்கும். வேதங்களின் சாதி இல்லை, வெள்ளையர்,முஸ்லீம்கள் வரும் முன் இங்கே பாலும் ,தேனும் ஓடியது, அனைவரும் சகோதரர்களாக, இன்புற்று வாழ்ந்தார் என்னும் ஜெயமோஹனின் இந்துத்வ புரட்டு ஏமாற்று வேலையே!!!

      தெவநாயகம் கிறித்தவத்திற்காக செய்யும் புரட்டு வேலையை,வஹாபிகள் இஸ்லாமுக்காக செய்யும் புரட்டு வேலையை, ஜெயமோஹன் இந்துத்வக் கொள்கைக்காக செய்கிறார் என்பதே நம் நிலைப்பாடு!!!

      நன்றி!!!

      Delete
  15. என்னடா திடீர்னு வந்து ஜெயமோகன் ஒரு முட்டாள்னு சொல்றானேனு யோசிக்காதேள்!

    ****&அதர்வ வேதம் பற்றி ஜெயமோஹன்!***

    http://timeforsomelove.blogspot.com/2012/05/blog-post_23.html


    வரவர நான் ஜெயமோஹன் ரசிகராகிவிட்டேனானு எனக்கே சந்தேகம் வருது. அவர் தளத்தில் உள்ள ஒரு வேதம் சம்மந்தப்பட்ட பதிவை வாசிக்க நேர்ந்தது. இதுல என்ன சொல்ல வர்ரார்னா,

    வேதங்களின் முக்கியத்துவம் ஒரு பொதுப்பிரமையா?

    ***வேதம் பிற வர்ணத்தவருக்கு விலக்கப்பட்டது என்றெல்லாம் பொத்தாம்பொதுவாக ஐரோப்பியர் சொல்லி நாம் கற்றுக்கொண்ட விஷயங்களை விரிவாக ஆராய்ந்து மறுபரிசீலனை செய்யவேண்டிய காலம் இது.***

    அதாவது, வெள்ளைக்காரன் வந்துதான் எல்லா சாதி கலகத்தையும் நமக்குள்ள உண்டாக்கிவிட்டுட்டான். வேதங்கள் பிராமணர் மற்றும் உயர் சாதியினர் தவிர மற்றவர்களிடம் இருந்து விலக்கப்பட்டது என்பது பொய் என்கிறார். சரி, அப்படியே எடுத்துக்குவோம்..

    கீழே கொடுக்கப்பட்டுள்ளதை ஒரு நிகழ்வை (கதை?)வாசிங்க!!!


    இன்னொரு வேடிக்கை உண்டு அந்த அதர்வ வேதச் சடங்கை ஒரு பிராமணன் தவறிப்போய் கேட்டுவிட்டால் அவனுக்கு தீட்டும் விலக்கும் வந்துவிடும். கேரளத்தில் உள்ள வலியதளி என்ற கோயிலைப்பற்றிய கதை உதாரணம். அங்கே நதிக்கரையில் இருந்த இரு சூலாயுதங்களை இரு நம்பூதிரி சிறுவர்கள் பூசை செய்து வந்தார்கள். இளையவன் அப்பகுதியில் உள்ள ஆசாரிகள் செய்யும் ஒரு அதர்வவேதச் சடங்கை ஒருமுறை கவனித்து மந்திரத்தை மனனம் செய்துகொண்டான்

    ஒருநாள் பூசை செய்யும்போது ஒரு சூலம் பயங்கரமாக ஆடியது. எந்த மந்திரத்தாலும் ஆட்டத்தை நிறுத்தமுடியவில்லை. இளையவன் ஒரு தேங்காயை எடுத்து அதர்வ வேத மந்திரம் சொல்லி தாந்த்ரீக விதிப்படி அதை உயிர்ப்பலியாக உருவகித்து அந்த சூலத்தில் அடித்து பிளந்தான்.ஆட்டம் நின்றது

    -------------

    Only a brain-dead religious moron would say WHAT HE HAS SAID ABOVE!

    ReplyDelete
    Replies
    1. வருண் மச்சான்,
      நான்கு வேதங்களின் கிரிஃபித் மொழிபெயர்ப்பு படித்து பார்த்தேன். நாகரிகம் அற்ற ஆதி மனிதர்களின் பாடல்கள், வழிபாட்டு வழிமுறைகள் என்பதே நான் படித்து அறிந்த முடிவு.

      வேட்டைக்கு போறேன், விலங்கு கிடைக்கட்டும்,சோம பானம் குடித்து பாட்டுப் பாடுவோம்,இந்திரா விருத்திரன் உள்ளிட்ட அசுரர்களை அழித்து விடு என கூத்து தாங்க முடியவில்லை,ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
      http://www.san.beck.org/EC7-Vedas.html

      (Rig Veda I:31:6, 42) Indra helped win the Aryan victory:

      He, much invoked, hath slain Dasyus and Simyus,
      after his wont, and laid them low with arrows.
      The mighty thunderer with his fair-complexioned friends
      won the land, the sunlight, and the waters.

      he first indication of the caste system is outlined in the hymn to Purusha, the embodied human spirit, who is one-fourth creature and three-fourths eternal life in heaven.

      The Brahmin was his mouth,
      of both his arms was the Rajanya made.
      His thighs became the Vaisya,
      from his feet the Sudra was produced.


      அதர்வண வேத மந்திரம் சொல்லி ,பருப்பொருளை உருவாக்கி காட்டிவிட்டால். இந்து ஞான மரபை ஏற்பதில் எவருக்கும் த்யக்கம் இருக்காது அல்லவா!!!

      This is really funny!!!!!!!!!!!!!!!!!!

      Marriage ceremonies are included. Here is a brief example:

      I am he; you are she.
      I am song; you are verse.
      I am heaven; you are earth.
      Let us two dwell together here;
      """let us generate children"""".

      அதை விட்டு ஏன் ஜெயமோஹன் சும்மா எழுதி உதார் விட வேண்டும்?

      நன்றி!!!

      Delete
  16. சகோ.சார்வாகன்,

    ஆன்மா ,உயிர் இதெல்லாம் அறிவியலின் படி அழிவில்லாதாது அல்ல, ஆனால் மெட்டா பிசிக்ஸில் அப்படித்தான்னு சொல்வாங்க.

    rene descartes என்ற பிரெஞ்ச் பிலாசபர் சொன்ன " cogito ergo sum"="l think, therefore l am" வைத்துப்பார்த்தால் நாம் என நினைப்பதே நாம் ஆகும், அதாவது தான் என்ற தன்னுணர்வே,ஒருவரின் அடையாளம் அதுவே ஆன்மா.

    மன நிலைப்பிழன்றால் யார் என்பதை மறந்துவிடுகிறோம், அப்போ உடலில் உயிர் தான் இருக்கும் "நாம்/நான்" இருக்காது.

    என்னைப்பொருத்த வரையில் நம் உணர்வுகளே(எண்ணங்கள்,நினைவுகள்) ஆன்மா, இறந்தவுடன் உணர்வும் போய்விடுவதால் ஆன்மாவும் அழிந்துவிடுகிறது.

    இதனை ஜென் தத்துவ அடிப்படையில் ' நீ எதுவாக நினைக்கிறாயோ,அதுவாக ஆகிவிடுகிறாய்" என்கிறார்கள்.

    உயிர் உடல் சார்ந்தது, உடல் இல்லாமல் உயிர் இல்லை, திருமூலர் கூட "உடல் வளர்த்தேன்,உயிர் வளர்த்தேன் என சொல்கிறார், அதாவது உடல் இருக்கும் வரையில், உயிர் இருக்கும். அந்த உடலில் உயிர் எங்கே இருக்குனு திருமூலர் சொல்லி இருக்கிறார், விந்தணுவில் இருக்காம் உயிர்.

    நம் உடலில் உயிருள்ள செல் என்றால் விந்தணு தான்,ஹி..ஹி மனிதனும் அடிப்படையில் அமீபா போல ஒரு செல் உயிரினம் தான் :-))

    அது மட்டுமே தன்னிச்சையாக நகரும், எனவே விந்தணு உடலில் உற்பத்தி ஆகும் வரையில் உயிர் இருக்கும் என்கிறார் திருமூலர், திருமூலர் பாடலில் "ஈஸ்வர ஆண்டு பிறப்பதேன் உயிர் ஈசன் அடியை அடைவதேன்" எனப்பாடியுள்ளார், இதன் பொருள், என்னவெனில் தாது வருடம் முடிந்த பின் வருவது ஈஸ்வர ஆண்டு, அதாவது உடலில் தாது(விந்தணு) உற்பத்தி நின்றுவிட்டால் உயிர் போயிடும் என்கிறார்.

    சித்தர் வழியில் பார்த்தால் விந்தணுவுக்கு தன்னுணர்வு சிந்தனை இல்லை எனவே ஆன்மா இல்லை, எனவே உயிர் ஆன்மா அல்ல :-))

    எப்பூடி நம்ம கண்டுப்பிடிப்பு!

    ReplyDelete
    Replies
    1. சகோ வவ்வால் வாங்க,
      / அதாவது உடலில் தாது(விந்தணு) உற்பத்தி நின்றுவிட்டால் உயிர் போயிடும் என்கிறார்./
      இதைத்தானே பரிணாமம் என நாம் சொல்கிறோம்.நான் இறந்தாலும் என் குழந்தைகள் மூலம் வாழ்கிறேன் என்பது அறிந்த விடய்ம்தானே.

      குழந்தைகள் ,பெற்றோர்,சூழல் சார்ந்து உடல்,குண நலன் பெறுகிறார்கள்.

      /சித்தர் வழியில் பார்த்தால் விந்தணுவுக்கு தன்னுணர்வு சிந்தனை இல்லை எனவே ஆன்மா இல்லை, எனவே உயிர் ஆன்மா அல்ல :-))/

      ஆனால் ஆன்மீகவாதிகள் உடல் இல்லாத சுயம் ஆத்மா என்று எதை சொக்கிறார்கள்?

      ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

      கொஞ்சம் பொறுப்போம் சகோ வழிப்போக்கன் அடுத்த பதிவின் மீது இன்னும் தொடர்வோம். ஹி ஹி நம்க்கு வஹாபிகள் இல்லாத குறையை வ.போ தீர்க்கிறார்

      நன்றி!!!

      நன்றி!!!

      Delete
  17. என்னைப் பொறுத்தவரை....
    அவர் ஆத்மா சாந்தியடையட்டும் என்று மற்றவர் இறப்பில் கூட நான் சொல்வதைல்லை; நாம் நம்பாததை எப்படி ஒரு obituary -ல் சொல்வது?

    நான் எப்பொழுதும் சொல்வது for near and dears: Only time and time alone can and alleviate your sufferings and I trust you have the required mental strength to face this loss.

    இதுக்கு கூட ஆத்மா எனக்கு உபயோகப்படாது!~

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பர் நம்பள்கி,

      அறிவியலின் விடை தேடப்படும் உண்டு இடுக்குகளின் கடவுள்,ஆன்மாவைத் திணித்து குழப்பி மதவியாபாரம் செய்கிறார்கள் என அறிந்தும் அதில் போல் சிக்குபவர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாது.

      உலகில் உள்ள பெரும்பான்மை மனிதர்களுக்கு வாழும் போது நல்ல உணவு,உடை,உறைவிடம் என்பது கிடைப்பது அரிதாக இருக்கும் போது. ஆன்மா அழிவில்லாதது, இபிறவியின் துன்பத்திற்கு அடுத்த பிறவியில், மறுமையில் நியாயம்,பலன் கிட்டும் என்பது ஏமாற்று வேலையே.

      ஆன்மீகவாதிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்தாலே பாதி பொருளாதார பிரச்சினைகளை தீர்த்து விடலாம்.

      ஆன்மாவைப் பற்றி பேசினால் பணம்,சொத்து கிடைக்கும். ஆன்மா இல்லை என்றால் வசவு மட்டுமே கிடைக்கிறது.

      ஆன்மாவை நம்புபவருக்கு எதற்கு சொத்து சுகம்??

      நன்றி!!!!!

      Delete
  18. //திரு தெய்வநாயகத்தை யாரும் அவதூறு செய்யவே முடியாது!! ஏன் எனில் அவரின் மதம் சார் விளக்கங்களே அதை ஏற்கெனவே செய்து விட்டன.ம்ம்ம்ம்ம்ம்ம்.

    இயேசுவுக்கு வரலாற்று ஆதாரம் இல்லை எனில்,தோமாவுக்கும் இல்லை.அவ்வளவுதான்!!!//
    http://saintthomasfables.wordpress.com/2010/05/24/santhome-p-hd/

    உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்-”இந்துமத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்க “விவிலியம்-திருக்குறள்-சைவசித்தாந்தம் ஒப்பாய்வு” எனும் நூலின் சில பகுதிகள் இந்து சமயத்தினரின் மனம் புண்படும்படியாக அமைந்துள்ளது குறித்து வருந்துகிறோம்’. என்று உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது. மேலும் அது “ஆராய்ச்சி நூலல்ல” என்றும் ஒரு சுற்றரிக்கை மூலம் குறிப்பிட்டது.”
    இது தெய்வநாயகம் என்னும் ஒரு மனிதன் அல்ல, அனைத்து சர்ச்களின் மறைமுக முயற்சி. கால்ட்வெல், ஜி.யு.போப், வீரமாமுனிவர், பாவாணர் என ஒரு தொடர் முயற்சியின் இன்றைய முகமே தெய்வநாயகம், தேவகலா.

    சாந்தோம் சர்ச்சின் 100% பணத்தில் இயங்கும் கிறிச்துவத் தமிழ்துறையின் கீழ் பலப்பல பி.எச்.டி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ மரியாள்
      அடிக்கடி வாங்க‌
      நன்றி!!!

      Delete
  19. வஹாபி மற்றும் சவூதி அரேபியாவின் பெட்ரோல் வளம் பற்றி நீங்கள் அதிகமாக பேசுவதால் உங்களது ஆத்மா முன்பு அரபியாக இருந்திருக்கலாம் .

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      அரபியில் ஆன்மா என்பதை ரூஹ் என அல்லாஹ் குரானில் அழைக்கிறார்.இதனை உயிர் எனவும் பொருள் கொள்ளலாம்.
      ஆத்மா பற்றி முகமது(சல்) உள்ளிட்ட மூமின்களுக்கு அறிவு குறைவாக கொடுக்கப்பட்டதை குரானில் அழகிய முறையில் உரைக்கிறான்.

      "17:85. (நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக.'

      உங்களின் பதில் குரான் வசனத்தை மெய்ப்பிக்கிறது நன்றி!!!
      ***
      சகோ கோவியின் தள பின்னூட்டம்

      Mycomment on
      http://govikannan.blogspot.com/2013/07/blog-post_24.html
      வணக்கம் நண்பர் கோவி,
      //இஸ்லாமியர்களிடம் ஒருபக்கம் அல்லாவை 'அனைவருக்கும் ஒரே (ஏக) இறைவன்' என்கிற பிரச்சாரமும், மறுபக்கம் 'இஸ்லாமியர்களுக்கான தனிப்பட்ட இறைவன்' என்கிற பிரச்சாரமும் நடக்கின்றது, இதில் நம்ம சுவனப்பிரியர்கள் விட்டுக்கொடுக்காமல் இரண்டு பக்கமும் பேசுவாங்க. //

      உங்களுக்கும் இஸ்லாம் பற்றி சரியான புரிதல் இல்லையே என நினைக்கும் போது வருத்தமே ஏற்படுகிறது. முஸ்லீம்களின் நடவடிக்கைகளைப் புரிய அவர்கள் சிறுபான்மையா,பெரும்பான்மையா என்பதனை அறிந்தால் போதுமானது.

      மலேசியாவில் பெரும்பான்மை என்பதால் அப்பூடி, இந்தியாவில் சிறுபான்மை என்பதால் இப்பூடி!! ஆ உஸ் ,ஈ இஸ் அவ்வளவுதான்.

      இஸ்லாமியர் சிறுபான்மையாக இருக்கும் போது தமக்கு கோரும்,அனுபவிக்கும் உரிமைகளை பெரும்பான்மையாக இருக்கும் போது,பிற மதம்,[சில சமயம் பிற முஸ்லிம் பிரிவுகள்] சார்ந்தவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள் என்பதெ 1400 வருட வரலாறு.

      இது திரு முகமது மெக்காவில்(சிறுபான்மை) இருந்த போதும்,மெதினா சென்று
      அதிகாரம் பெற்று பெரும்பான்மை ஆன போதும் ,வெளிவந்த குரான் வசனங்களே சாட்சி!!
      மெக்காவில் சாந்த சொரூபம்

      மெதினாவில் ஹி ஹி

      ஆகவே இப்படி இரட்டை வேடம் போட அரபி ஏக இறைவன் அல்லாஹ் அனுமதி தருகிறார்.இதன் பெயர் தாக்கியா!!!


      இதில் வியப்படைய என்ன இருக்கிறது??.

      இஸ்லாமைப் புரிய,முஸ்லீம்களை அறிய காஃபிராக இருந்து குரான் படியுங்கள்.

      இந்தப் பதிவினைப் படித்தவுடன் நமக்குத் தோன்றியது.

      காஃபிர்கள் விடிய விடிய தமிழ்மண வஹாபி பிரச்சார பதிவுகளைப் படித்தாலும், ஜைனஃப் திரு முகமதுவுக்கு மருமகள் என்பார்கள்.

      [ஜைனஃப் முகமதுவின் வளர்ப்புமகன் ஜைதுவின் மனைவியாக இருந்து பிறகு முகமதுவின் மனைவி ஆனவர்.இதற்கும் குரானில் [33.37)அல்லாஹ் அனுமதி தருகிறார்]

      டிஸ்கி: விடிய விடிய இராமாயணம்,சீதைக்கு இராமன் சித்தப்பா என்பதை வித்தியாசமாக அரபி பாணியில் சொல்லும் முயற்சி ஹி ஹி

      நன்றி!!!

      Delete
  20. நண்பர் சார்வாகன்

    //ஆபிரஹாமிய மதங்களில் ஆத்மா இன்னும் குழப்பம். நியாத் தீர்ப்பு நாளில் மனிதர்கள் தங்களின் உடலோடு மீண்டும் உயிராக்கப் படுகிறார்கள். அப்போது உடல் இல்லாமல் உயிர் இல்லை!!. அப்போது இறந்தவனின் உயிர் எங்கே??//

    இதுக்கு எல்லாம் அவர்கள் அலட்டிக் கொள்ளவே மாட்டார்கள் சகோ. சுலபமான பதிலைச் சொல்லிவிடுவார்கள் "அவன் ஒருவனுக்கே அதன் ரகசியம் தெரியும்"

    ReplyDelete
    Replies
    1. சகோ இனியவன் ,
      இப்படி சொல்லி அண்ணன் பி.ஜேவின் பிழைப்பில் மண் அள்ளிப் போடலாமா?,
      அண்ணனுக்கும் தெரியும்.!!!!!!!!!!!!
      ....................
      படியுங்கள் ஆப்புலைன் பீ.சே!!!!!!!!!!!!!!

      குர்ஆனில் """அல்லாஹ்வுக்கு மட்டுமே பொருள் தெரிந்த, எந்த மனிதருக்கும் பொருள் தெரியாத வசனங்களும் உள்ளன""" என்ற வாதம் முற்றிலும் தவறாகும்.

      ஒரே ஒரு மனிதனுக்குக் கூட புரியாத, அல்லாஹ்வுக்கு மட்டுமே புரிந்த வசனங்களை அல்லாஹ் குர்ஆனில் ஏன் கூற வேண்டும்? அறவே பயனில்லாத வேண்டாத வேலையை இறைவன் செய்வானா? என்று சிந்தித்தால் இவ்வாறு கூற மாட்டார்கள். ஒரு மனிதருக்குக் கூடப் புரியாத வசனங்கள் குர்ஆனில் இருந்தால், மனிதர்களின் பார்வையில் அது உளறல் என்றே கருதப்படும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்து எதிரிகள், இது போன்ற வசனங்களைக் காட்டி "முஹம்மது உளறுகிறார்'' என்று நிலைநாட்டியிருப்பார்கள். அப்படி ஏதும் நடக்கவில்லை. எந்த மனிதராலும் விளங்க முடியாத வசனங்கள் உள்ளன என்று வாதிடுவோரிடம் அந்த வசனங்கள் யாவை? என்று பட்டியலைக் கேட்டால் அவர்களிடம் இதற்கு எந்தப் பதிலும் இல்லை. ஒருவருக்கும் விளங்காத ஐந்தாறு வசனங்களைக் கூட அவர்களால் எடுத்துக் காட்ட முடியாது. இதிலிருந்து அவர்கள் விதண்டாவாதம் செய்வது தெளிவாகும். ஏராளமான தமிழ் மற்றும் பிற மொழி பெயர்ப்புகள் வந்து விட்டன. அம்மொழி பெயர்ப்புகளில் எல்லா வசனங்களுக்கும் மொழி பெயர்ப்புச் செய்துள்ளனர். "இது எங்களுக்குப் புரியவில்லை. அல்லாஹ்வுக்கு மட்டும் தான் புரியும்'' எனக் கூறி ஒரே ஒரு வசனத்தைக் கூட அவர்கள் மொழி பெயர்ப்புச் செய்யாமல் விடவில்லை. இதிலிருந்து அவர்கள் தமக்குத் தாமே முரண்பட்டு இவ்வசனத்திற்கு பொருத்தமற்ற விளக்கம் கூறுகிறார்கள் என்பது உறுதியாகிறது. திருக்குர்ஆன் விளங்குவதற்கு எளிதானது எனவும், அனைவருக்கும் வழி காட்டக் கூடியது எனவும் திருக்குர்ஆன் தெளிவாகப் பல இடங்களில் அறிவிக்கிறது. அந்த வசனங்கள் வருமாறு: 2:99, 2:159, 2:185, 2:219, 2:221, 2:242, 2:266, 3:103, 3:118, 3:138, 4:26, 4:82, 4:174, 5:15, 5:89, 6:105, 7:52, 6:114, 10:15, 10:37, 11:1, 16:89, 17:41, 17:89, 18:54, 20:2, 22:16, 22:72, 24:1, 24:18, 24:34, 24:46, 24:58, 24:59, 26:2, 27:1, 28:2, 29:49, 39:27, 41:3, 46:7, 54:17, 54:22, 54:32, 54:40, 55:2, 58:5, 65:11 முதஷாபிஹாத் வசனங்கள் எவ்வாறு இரு பொருளைத் தருகின்றன என்பதையும், அதில் சரியான அர்த்தத்தையும், தவறான அர்த்தத்தையும் வேறுபடுத்திப் புரிந்து கொள்வது என்பதையும் அறிந்து கொள்ள, 193வது குறிப்பைக் காண்க.

      Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/vilakkangal/86-iru-porul-tharum-varthaikal/
      Copyright © www.onlinepj.com
      படியுங்கள்!!!

      Delete
  21. My comment on
    http://adarvanamblog.blogspot.com/2013/07/blog-post_26.html

    வணக்கம் நண்பர் நிரஞ்சன்,

    அருமையான பதிவு.

    மத நம்பிக்கையாளர்கள் கொடுப்பது மதபுத்த்கங்களின் கட்டாயத்தினால் மட்டுமே. . ஏன் எனில்கொடுக்கவில்லை என்றால் நரகம் என்று பயமுறுத்தும் மத புத்த்கமே காரணமே அன்றி அவர்களின் நல்ல எண்ணம் அல்ல.
    இதோ குரானில் இருந்து சான்றுகள்.
    ஜகாத்
    30:39. (மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.
    [ஆகவே முஸ்லிம்கள் கொடுக்கும் அறக்கொடை என்பது அல்லாவிடம் இடும் முதலீடு.அதற்கு இரட்டிப்பாக வட்டி கிடைக்கும்.]
    41:7. அவர்கள் தாம் ஜகாத்தைக் கொடுக்காதவர்கள்; மறுமையை நிராகரிப்பவர்களும் அவர்களே!.
    [ஜகாத் கொடுக்கவில்லை எனின் மறுமையில் சங்குதான் !!!!!!]
    98:5. “அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்; மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் “””கட்டளையிடப்படவில்லை”””. இதுதான் நேரான மார்க்கமாகும்.”
    ஆகவே ஆண்டவனின் மிரட்டல் கட்டளைக்கு அடிபணிதல் தவிர வேறு செய்யும் துணிவு மூமின்களுக்கு இல்லாததால் கொடுக்கிறார்கள்.
    ஆகவே ஜகாத் என்பது ஆண்டவன் கட்டளை,மனிதனின் விருப்பம் அல்ல!!!
    இஸ்லாம் என்பதன் உண்மையான பொருள் அடிபணிதல்[submission] ஆகும்.
    அதுவும் ஜகாத் என்பதை ஏக இறைவன் வழக்கம் போல் எப்போது,எவ்வளவு என சொல்ல மறந்து குழப்பியதால் ,மதப் பிரிவுகளுக்குள் நடக்கும் குடுமிப் பிடி சண்டை ஒரு நகைச்சுவை காவியம்.
    நாத்திகர்கள் அறக்கொடை அளிப்பது, அதிக பட்சம் தன்னை பிறர் மதிக்க வேண்டும்,புகழ வேண்டும் என்பதற்காக மட்டுமே இருக்க முடியும்.
    இலவச கல்வி,சுகாதாரம் சார்ந்த முன்னெடுப்புகளுக்கு அறக்கொடை தருதல் நல்ல விடயமே.
    மற்றபடி ஒருவனுக்கு மீனைக் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தலே உத்தமம்.
    ஆனாலும் வலது கரம் கொடுப்பதை இடது கரம் அறியாமல் கொடுப்பதே சிறப்பு.
    அப்படி செய்யும் நாத்திகனின் அறக்கொடை, ஆண்டவனின் மிரட்டலுக்காக கொடுக்கும் மதவாதிகளின் அதீத விளம்பரத்தை விட உயர்ந்தது.

    நன்றி!!!

    ReplyDelete
  22. நல்ல பதிவு சகோ, மனம் தான் ஆன்மா என்றால் சிலருக்கு மெமரி லாசில் சிலவற்றை நினைவில் கொண்டுவர முடியாது. அப்போ ஆன்மாவும் பாதிக்கப்பட்டு இருக்குமா? அப்பறம் ஏன் நீரில் அழியாது, நெருப்பினில் வேகாதுன்னெல்லாம் பருப்பு வேக வைக்கிறாங்களோ.

    :)

    ReplyDelete
  23. சகோ,
    உயிர் பற்றி அறிவியல் என்ன கூறுகிறது என்று விளக்க முடியமா..
    நன்றி

    ReplyDelete
  24. ஒவ்வொரு மதங்களிலும் ஒவ்வொரு மாதிரி சொல்லுவாங்க ஆனா இதில எல்லாம் நம்பிக்கையே இல்ல

    ReplyDelete
  25. சகோ,
    FYI
    உயிர் வேறு ஆன்மா வேறா?


    http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/2013/08/blog-post_4.html

    நன்றி

    ReplyDelete
  26. ஆன்மா தனியாக இருக்கும் போது அதற்கு கோபம் காமம் ஆசை ஆகியவை இருப்பதில்லை.

    ஆன்மா உடலை எடுத்த உடன் உடல் மனத்தை பெறுகிறது. இந்த மனமே காமம் கோபம் காமம் இவற்றின் இருப்பிடம்.

    மனத்தில் இருக்கும் காமம் ஆசை காமம் உடலை எடுத்து அங்கும் இங்கும் அலைக்கழிக்கிறது.

    உடலில் இருக்கின்ற ஆன்மா இவை அனைத்தையும் சாட்சி போல் பார்த்து கொண்டு இருக்கிறது.

    உடல் தான் காமத்தில் ஈடு படுகிறது.

    உடல் தான் ஆசை படுகிறது.

    உடல் தான் கோபத்தை அனுபவிக்கிறது.

    மனத்தில் இருக்கின்ற இவை மூன்றும் பாவ புண்ணியத்தை ஜீவனுக்கு தருகிறது.

    மனம் இருக்கும் வரை அதில் காமம் ஆசை கோபம் போன்றவை குடி இருக்கும்.

    மனம் என்ற ஒன்றை இல்லாமல் ஆக்க வேண்டும் என்றால் ,

    உடலின் இதயத்தில் இருக்கின்ற ஆன்மா வை உணர்ந்து அதில் நிலைபெற வேண்டும். அப்படி ஆத்மாவில் நிலை பெற்று விட்டால் மனமும் இருப்பது தெரியாது. உடல் இருப்பதும் தெரியாது.

    உலகம் அனைத்தும் ஒன்று என்ற எண்ணம் தோன்றும் .அதாவது பிரம்மம் என்று ஒன்று உள்ளது அதை உணரலாம் .

    பிரம்ம நிலையை அடைந்து விட்டால் இறைவனை உணரலாம்.

    பிரம்ம நிலை என்றால் என்ன ?

    ஒரு ஆண் உயிர் அணு பெண்ணின் கரு உடன் இணைந்து அது ஒரு உயிர் உள்ள கருவை உருவாக்குகிறது.

    அது பார்பதற்கு ஒரு சதை பிண்டம் போல் தான் இருக்கும். ஆனால் அந்த சதை பிண்டதிர்க்கு உயிர் இருக்கிறது.

    உயிரும் கொஞ்சம் சதையும் இருக்கிறது. அது என்ன நிலையில் இருக்கும். அந்த நிலை தான் பிரம்ம நிலை. அதாவது ஒரு துக்கமும் இல்லை சுகமும் இல்லை அது அமைதியாக பிரபஞ்சத்துடன் இணைந்து பிரபஞ்சமாக எந்த கவலையும் இல்லாமல் கருவில் இருக்கிறது. அது இந்த உலகத்தை கண்டதில்லை. அது காணும் உலகம் ஒன்றும் இல்லாத அமைதியான உலகம்.

    கருவில் இருக்கும் சிறு உயிர் பிண்டத்தின் நிலை பிரம்ம நிலைக்கு ஒப்பிடபடுகிறது.
    ஹரி ஓம் நமோ பகவத்தே வாசுதேவாய

    ReplyDelete