Friday, January 31, 2014

சாமியார் பாபா இராம்தேவின் உணவு பழக்க அறிவுரை சரியா?



வணக்கம் நண்பர்களே,

ஒரு உயிர்கள் அனைத்துக்கும் அடிப்படைத் தேவை உணவே  என்பதும். ஒருவரின் உணவுப் பழக்க வ்ழக்கம், உடல் உழைப்பு மற்றும் பயிற்சிகள் ஒருவரின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது அனைவரும் உணரும் விடயம்.

சாமியார்கள்,மதப் பிரசாரகர்கள் என்றாலே ஏதாவது சர்ச்சைக்குறிய முறையில் சொல்லி,செய்து பரபரப்பு கிளப்புவது வழக்கம் என்பதை நாம் அறிவோம்.உலகமயமாக்கலில் அவ்ர்களும் புதுமையாக இப்படி செய்தால் மட்டுமே கல்லா கட்ட முடியும் என்பதால் வேறு வழியில்லை.

நிர்முக்தா இணைய தளம் ஒரு அருமையான இறை மறுப்பு தளம். அதில் வரும் கட்டுரைகள் வாழ்வின் பல வித அம்சங்களையும் விவாதித்து விளக்கும் என்பதால் அதன் வாசகன் என்பதில் நம்க்கு மகிழ்ச்சியே. நம் நண்பர்கள் அனைவருக்கும் இத்தளத்தை  பரித்துரைக்கிறோம்

திரு பாபா இராம்தேவ் இந்தியா மற்றும்  இதர நாடுகளில் கோபால் பல்பொடிக்கு இணையாக புகழ் பெற்றவர். ஆகவே நாம் அறிமுக விளக்கம் சொல்லத் தேவையில்லை!!!.பாபா இராம்தேவ் இப்போது பாஜக பிரதமர் வேட்பாளர் திரு நரேந்திர மோடிக்கு ஆதரவு திரட்டி வருகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. 20 கோடி ஓட்டு பாஜகவுக்கு விழும் என ஆருடம் சொல்கிறார்.

அதில் பாபா இராம்தேவின் புத்தகத்தில் அவரின் கருத்தான‌  சரியான உணவுப் பழக்கம் எது என்பதை அத்தளத்தில் வந்த கட்டுரையின் தமிழாக்க சுருக்கமே இப்பதிவு!!. நிர்முக்தா தளத்திற்கு நம் நன்றிகள்!!!


இது அந்தப் புத்தகம்.
Front Cover
Yog Its Philosophy & Practice

1.# As per the philosophy of Jainism, Yoga is the emancipation of the soul. At the same time, mind, speech and all the physical faculties are also known as Karmayoga. (Page 1)

1.சமண மத தத்துவத்தின் படி யோகம் என்பது ஆத்மாவை விடுதலையாக்கும் உன்னத ஒழுங்கு ஆகும். இது மட்டும் அல்லாமல் மனம்,பேச்சு, மற்றும் உடலின் அனைத்து இயக்கங்களையும் மேம்படுத்துகிறது. இதுவே கர்மயோகம் எனப்படுகிறது. (பக்கம் 1).

[இது மட்டுமா இன்னும் சாமி சொல்வது எல்லாம் அக்கட்டுரையில் இருக்கிறது. மனிதன் பிறவி எடுத்ததே இறைவனை வணங்க,யோகத்தின் கடவுளைக் காணலாம்,காமத்தினை தவிர்க்காமல் யோகி ஆக முடியாது,பசு,பிராமணனை காப்பாற்ற மட்டுமே பொய் சொல்லலாம்,வழிபாட்டுத் த்லங்களில் உண்மை பேச வேண்டும்,ஆத்மாவை சுத்திகரிக்க ரிஷிகளின் வாழ்வை பின்பற்ற வேண்டும்,நம் தேவைகளுகு மேல் நம்க்கு இறைவன் தந்து இருக்கிறார்,.....

நம்புவோர் நம்பினால் நம்க்கு ஆட்சேபம் இல்லை!!!]


  2.# The ideal time for taking the morning food or breakfast is between 8 and 9 in the morning. It is better to take fruits and light drink. (Page 5)
2.உண்மையான  காலை உணவுக்கு சரியான நேரம்  காலை 8ல் இருந்து 9 மணி வரை ஆகும். அதுவும் பழங்கள் மட்டுமோ அல்லது மிதமான திரவ வகை உணவு எடுப்பதே நல்லது. (பக்கம் 5).

  3.# People above the age of 50 years should not eat anything in the morning.
3.)50 வயதுக்கு மேற்பட்டவர்கள் காலை உணவைத் தவிர்த்தல் நல்லது!!!.

[யாருக்கு நல்லது சாமி? தெளிவா சொல்லுங்க!!.இதனை  படிக்கும் மருமகள்கள் இத்திட்டத்தை ,மாமனார்,மாமியாருக்கு அமல் படுத்தினால் என்ன ஆகும்????]

  4.# The ideal time for taking the morning meal or lunch, is between 11am and 12 noon. One can extend the time up to 1pm. but beyond that is a strict NO.
4)காலை(அல்லது மதிய)  உணவு  உண்ண சரியான நேரம் 11.00 மணி முதல் 1.00 மணி வரை ஆகும்.அதன் பிறகு சாப்பிடக் கூடவே கூடாது.

[சாமி மாதிரி சும்மா இருந்தால் நாமும் இதை செய்யலாம் ஆனால்,
காலையில் 7 மணிக்கு வீட்டில் இருந்து பணிக்கு செல்ல வேண்டும்.மதியம் 2 மணி சுமாருக்கு 30 நிமிடம் உணவு இடைவேளை கிட்டலாம். இரவு வீடு வர 8_9 மணி ஆகும் என்னும் போது சாமி தீர்ப்பை மாத்தி சொல்லுங்க!!!]

5.      # Again the best time for dinner is 7pm to 8pm.or at the most to 9pm. No food is recommended after that.
 5)இரவு உணவுக்கு சரியான நேரம் மாலை 7 .00 மணி முதல் 8.00 மணி வரை, அதிக பட்சம் 9.00 மணி வரை மட்டுமே.அதற்கு பிறகு அவ்வளவுதான்.சத்தம் மூச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்!!!


 6.# While eating, one should maintain silence and keep praying to God while chewing the food carefully.(Page 22)
6) சாப்பிடும் போது பேசாமல் அமைதியாக ,இறைவனை வழிபட்டுக் கொண்டே,சாப்பிட வேண்டும்.( பக்கம்  22)  

 மிகவும் நல்ல விடயம் இத்னை வீட்டு அம்மா செய்தால் நிம்மதியாக சாப்பிடலாம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் . ச‌மையல் சரியில்லை என்றால் காப்பாற்ற கடவுளை ஆத்திகர்கள் வேண்டுவதில் தவறில்லை.]

7.# Before you start eating, pronounce ‘OM’ or utter the Gayatri Mantra and wash your hands three times. Why?
 7). உணவு உண்ணும் முன் ஓம் என்றோ அல்லது காயத்ரி மந்திரமோ சொல்லலாம். மூன்று முறை கை கழுவ வேண்டும்.

 [எதுக்கும் நம்ம காஃபிர் அண்ணனிடம் மார்க்கத்தின் படி என்ன செய்யலாம் என‌ஒரு கேள்வி கேட்டு விடுவோம்?]

8. # Non-vegetarian food destroys our subtle and soft feelings-like love, kindness etc.( Page- 5)

8) ஊன்(மாமிச) உணவு நமது நுட்பமான, மென்மையான் உணர்வுகளான இரக்கம் ,அன்பு போன்ற்வற்றை இழக்க வைத்து விடும்.[ ஹி ஹி சாமி மோடி ஆதரவாளர் !!!]

சாமி குஜராத் கோத்ரா கலவரத்தை பற்றி என்ன சொல்கிறார்?

அது தேர்தல் பிரச்சினை இல்லை என்கிறார். இபோதைய முக்கிய பிரச்சினை இல்லை என்கிறார்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அன்பும் இரக்கமும் வழிகிறது நமக்கு புரிகிறது!!!

Holding that 2002 Gujarat riots is no longer a poll issue, Yoga guru Baba Ramdev today said Rahul Gandhi had raised old matters which have no significance in the present and he needs to be more "mature" in his approach.






சரி நம் விவாதத்தை இங்கு தொடங்குவோம்.

காலை உணவைத் தவிர்த்தல் அல்லது மிக மிதமான உணவு என்னும் கருத்து சரியா?

மருத்துவரீதியாக காலை உணவு சுமார் 10 மணி நேரத்திற்கு பிறகு உண்பதால் மற்ற வேளைகளை விட அதுதான் நல்ல சத்துள்ளதாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.


இதைப் படிப்போம்

இந்தப் பெண் காலையில் காலை உணவு நன்றாக பன்றி மாமிசத்துடன் சாபிடுகிறார்.
Yesterday I had 3 slices of 50/50 bread, 2 sausages and 2 slices of bacon with a cup of cappuccino for breakfast. Total calorie count: 753.”

என்றெல்லாம் காலையில் நன்றாக சாப்பிட முடிகிறதோ அன்றெல்லாம் மிகவும் சுறுப்பாக இருந்தமையாக சொல்கிறார்.


நாம் தேடியவை காலை உணவு நன்றாகவே சாப்பிட சொல்கிறார்கள். மூன்று வேளைகளில் அதுவே அதிக கலோரி கொண்டதாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.

Researchers have found that eating a big breakfast of 700 calories promotes weight loss and reduces risks for diabetes, heart disease and high cholesterol.

காலை உணவு அரசன் போலவும், மதிய உணவு இளவரசன் போலவும், இரவு உணவு ஏழை போல் இருக்க வேண்டும் என்னும் பழமொழி கூட உண்டு!!!

Eat breakfast like a king, lunch like a prince and dinner like a pauper.”

இராம்தேவின் கருத்தான‌ காலை உணவு தவிர்த்தல் அல்லது மிக மிதமான உணவு சரியாக இருக்க முடியாது என்பது நம் கருத்து.

மூன்று நேரமுமே முக்கியம்தான். . இரவு மட்டும் அரிசி தவிர்க்கலாம் ,அதுவே மிதமாக இருக்க வேண்டும் என்பதே நம் நடைமுறை. காலை,மதியம் இரண்டு நேரமும் நன்றாக உண்டு விடுவோம். தண்ணீர் அதிகம்,அடிக்கடி குடிக்கலாம்.

நம்மைப் பொறுத்தவரை காலையில் சரவண பவனில் இட்லி,தோசை,பொங்கல் வடை ஒரு கட்டு கட்டலாம். மதியம் பாய் கடையில் பிரியாணி , இரவு சப்பாத்தி,தாவர உணவு என்பதுதான் நமக்கு பிடித்த உணவுப் பழக்கம். தினமும் பிரியாணி கிட்டாது என்பதால் சாப்பாடு, காய்கரிகள்தான் ஹி ஹி. வாரம் மூன்று முறையாவது மாமிசம் என்பது நம் வழக்கம் ஹி ஹி!!

உங்களின் கருத்துகளை சொல்லுங்கள்!!!
சாமியின் கலக்கல் யோகம்,நடனம் கண்டு களியுங்கள்!!!!


நன்றி!!!

Wednesday, January 29, 2014

டான் ப்ரௌனின் இன்ஃபெர்னோ(நரகம்) :புத்தக விமர்சனம்

Cover
வணக்கம் நண்பர்களே,

சில தின‌ங்களுக்கு முன் படித்த, நமக்கு பிடித்த எழுத்தாளர் திரு டான் ப்ரௌன் எழுதிய தி இன்ஃபெர்னோ(நரகம்) என்னும் கதைப் புத்தகம் பற்றிய விமர்சனமே இப்பதிவு.  டான் ப்ரௌன் டாவின்சி கோட் என்னும் புத்தகம் மூலம் உலகப் புகழ் பெற்றவர்.

அவருடைய அனைத்து புத்தகங்களையும் படித்து விடுவேன் என்றாலும்,2013ல் வெளிவந்த இப்புத்தகம் படிக்க இப்போதுதான் நேரம் கிட்டியது. இது அவரது தளம்.


அவருடைய புத்தகங்கள், அது தொடர்பான பல விடயங்களை இங்கு பகிர்கிறார். இவரின் கதைகளில், மதம்,அறிவியல் ,வரலாறு,குறியீடுகள்(symbols) சார்ந்த ஆய்வுகள் குறித்து அதிகம் எழுதுகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

இவரின் பெரும்பாலான கதைகளில் , ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும்  திரு இராபர்ட் லாங்டான் என்னும் வரலாற்று குறியீட்டுப் பேராசிரியர் நாயகனாக வந்து குறியீடுகளின் புதிர் மர்மங்களை விடுவிப்பது முக்கிய விடயம் ஆக இருக்கும்.சரி இந்த புத்த்கத்தின் கதைச் சுருக்கம் பார்த்து விடுவோம்.
**
கதைச் சுருக்கம்.

திரு இராபர்ட் லாங்டான்(Robert Longdon) இத்தாலியின் ஃப்ளோரன்ஸ் நகர மருத்துவமனையில் த்லையில் (சுடப்பட்ட) காயத்த்துடன் கண் விழிக்கிறார். அவருக்கு கடந்து இரு தினங்களில் நடந்த விடயங்கள் நினைவில்லை. அவரை இரு குழுக்கள் தேடுகின்றன.அவருக்கு நரகம் பற்றி பல கனவுகள் வருகின்றன.  மருத்துவமனையில் அவரைக் கொல்ல முயற்சி நடக்கிறது. அவரை ஒரு பெண் மருத்துவர் சியனா ப்ரூக்(sienna brook) காப்பாற்றி தனது பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்கிறார்.

அவரின் சட்டையில் உள்ள ஒரு சிறிய ப்ரஜெக்டரில்(தமிழில் என்ன?)நரகம் பற்றிய ஒரு படம்உள்ளது. அது 13 ஆம் நூற்றாண்டு எழுத்தாளர் டான்டே அலி-‍‍‍எர்ரி(1265-1321)  எழுதிய டிவைன் காமெடி(Divine comedy நரக நகைச்சுவை) என்னும் புத்தகத்தில் வரும் நரகத்தின் வர்ணனையின் அடிப்படையில் ஆன  படம்.
இத்தளத்தில் அந்த வர்ணனைகளின் அடிப்படையில் ( Botticelli's Map of Hell.) வரையப்பட்ட படங்கள் உள்ளன.


அந்த ப்ரஜெக்டரில் உள்ள‌ படத்தில்  சில எழுத்துக்கள்,குறியீடுகள் மறைத்து வைக்கப்பட்டு உள்ளன. அதன் அடிப்படையில் தனது தேடலை லாங்டான்+ப்ரூக்ஸ் தொடங்குகின்றனர். அவர்களை ஒரு பெண் கொலைகாரி, ஒரு இராணுவக் குழு துரத்துகின்றன.

அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள மெண்டாசியம் என்னும் கப்பலில் இருந்து இயங்கும் கன்சார்டியம்(கூட்டமைப்பு) என்னும் சட்டவிரோத செயல்களை செய்து தரும் நிறுவனம் அந்த பெண் கொலைகாரியை அனுப்பியது என்பதும் கதையில் சொல்லப்படுகிறது.

ஒரு வருடம் முன் அந்நிறுவன‌த்திற்கு ஒரு வாடிக்கையாளர் தனக்கு ஒரு மறைவிடம் வேண்டும் என நாட,அவர்கள் செய்து கொடுத‌தனர்.அவர் பெயர் திரு பெர்ட்னான்ட் ஜோப்ரிஸ்ட்(Bretand Zobrist) தலை சிறந்த மரபணு.  பொறியியல்(genetic engineering) வல்லுனர். அவர்  சில தினங்களுக்கு முன் வந்து குறிப்பிட்ட தேதியில் ஒரு காணொளியை உலகம் முழுதும்  வெளியிட வேண்டும் என்கிறார். இது நடந்து சில நாட்களில் ஜோப்ரிஸ்ட் ஒரு அடுக்கு மாடிக் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். 

அதனால் அக்கணொளியை பிறகு பார்க்கும் நிறுவன தலைவருக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. அதன் படி உலக மக்கள் தொகை என்பது மனித குலத்தை அழிக்கும் ஒரு விடயம் என்பதால் அதனைக் காப்பாற்ற ஏதோ செய்து இருப்பதாக அக்கணொளியில் ஜோப்ரிஸ்ட் கூறி இருப்பதால் அது என்ன என்பதை அறிய நிறுவன தலைவர் முயல்கிறார். அதற்காகவே லாங்டானை துரதுகிறார். லாங்டானிடம் உள்ள படத்தில் அந்த மர்மம் உள்ளது.

ஏற்கெனவே திரு ஜோப்ரிஸ்ட் உலக சுகாதார நிறுவன தலைவரான(world Health Organisation) எலிசபெத் சைன்ஸ்கி(Elizabeth Sinskey) உடன் மக்கள் தொகைக் குறைப்பிற்கான தனது கண்டுபிடிப்பை விளக்க அது இருவருக்கும் இடையே முரண்பாட்டை ஏற்படுத்துகிறது. அவரை உயிரியல் தீவிரவாதியாக(bio-terrorist) எலிசபெத் அறிவிக்கிறார்.

எலிசபெத் ,ஜோப்ரிஸ்டின் ஆய்வுகளை தடுக்க முயல்வதால்தான் அவர் ஒளிந்து வாழ்ந்தார் என்பதும் விளங்குகிறது. லாங்டானைத் துரத்தும் அந்த இராணுவக்குழு உலக் சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்தது.

ஆகவே லாங்டானிடம் உள்ள படத்தின் மூலம் அவர் ஜோப்ரிஸ்டின் இரகசிய ஆய்வின் மர்மத்தை கண்டுபிடிக்க முயல்கின்றார். அவரை கன்சார்டியம், உலக சுகாதார நிறுவனம் இரண்டுமே துரத்துகின்றன.

 மக்கள் தொகைக் குறைப்பிற்கான ஜோப்ரிஸ்ட் கண்டுபிடிப்பு என்ன?
லாங்டான் அதைக் கொண்டுபிடித்தாரா என்பதை மிகவும் சுவாரஸ்யமாக கதை சொல்கிறது.

கதையின் முடிவை வேண்டும் என்றே சொல்லவில்லை. கதை படிக்கும் விருப்பம் போய்விடும்.
**
இதில் டாண்டேயின் நரகம் என்பதில் பல படிகள் உண்டு.
1. நரகம்(inferno) 2) சுத்திகரிக்கும் இடம்(purgatory) 3)சொர்க்கம்(Heaven சுவனம்!!!)

நரகத்தைக் கடந்தே சொர்க்கம் செல்ல வேண்டும் என்றே டாண்டேயின் கருத்து ஆகும்.நம் அண்ணனின் மத புத்தக விளக்கம் கூட அதையே சொல்கிறது!!!!

68. உமது இறைவன் மீது சத்தியமாக!379 அவர்களையும், ஷைத்தான்களையும் ஒன்று திரட்டுவோம். பின்னர் அவர்களை நரகைச் சுற்றி மண்டியிட்டோராக நிறுத்துவோம். 

69. பின்னர் ஒவ்வொரு கூட்டத்திலும் அளவற்ற அருளாளனுக்கு மாறுசெய்வதில் மிகக் கடுமையாக இருந்தோரைத் தனியாகப் பிரிப்போம். 

70. அதில் கருகுவதற்குத் தகுதியுடையோர் யார் என்பதை நாம் நன்றாக அறிவோம்.

 71. உங்களில் எவரும் அதைக் கடக்காமல் இருக்க முடியாது. இது உமது இறைவனால் நிறைவேற்றப்படும் கடமை.280

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://onlinepj.com/Quran-pj-thamizakkam-thawheed/thamizakkam/maryam/
Copyright © www.onlinepj.com


Thanks to onlinepj.com
திரு டாண்டேவுக்கு ஒரு காதல் தோல்வி உண்டு. எனினும் சுவனத்தில் காதலியுடன் சேர்வது போல் கதையில் சொல்வதில் இருந்து அவரின் காதலின் ஆழம் புரிகிறது!!!


டாண்டேயின் புத்தகத்தில் இன்னொரு மத தலைவர் நரகத்தில் இருப்பதாக கூறி இருப்பது சமீப காலம் வரை சர்ச்சைக்கு உள்ளாகும் விடயம். அது குறித்து இங்கே படியுங்கள்!!! 


ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் நாத்திகர்கள் மட்டும் அல்ல, பிற மத ஆத்திகர்களையும் நரகவாசி என்று சொல்வதற்கு 12 ஆம் நூற்றாண்டு திரு டாண்டேயும் விதிவிலக்கு அல்ல என்றே நாம் கூறுகிறோம். இக்காலத்திலேயே அப்படிப்பட்டவர்கள் இருப்பதை நாம் அறிவோம் அல்லவா ஹி ஹி!!!

கதையின் முடிவில் ஜோப்ரிஸ்டின் மர்ம கண்டுபிடிப்பு துருக்கியின் இஸ்தான்புல்(isthanbul) நகரில் உள்ள ஹேகிய ஷோஃபியா (Hagia sohpiya)அருங்காட்சியகத்தில் இருப்பதாக கதை சொல்கிறது. அது பற்றி நாமும் ஒரு (நகைச்சுவை) பதிவு இட்டு இருப்பதும் ஞாபகம் வருகிறது.

அப்பாடா ஒரு வழியாக  இம்மாதத்தின் இரண்டாம்(??) பதிவையும் எழுதிவிட்டோம்.

எழுத வேண்டும் என்னும் உத்வேகம் குறைவது நன்கு புலப் படுகிறது.

(இயற்கை நாடினால்) தொடர்ந்து விடாமல் எழுதுவோம்!!!

நன்றி!!!