Saturday, May 5, 2012

மத அறிவியல் பிரச்சாரத்தை சரி பார்ப்பது எப்படி?செயல்முறை விளக்கம்&காணொளி





இது நாம் சில ஆண்டுகள்க்கு முன்பு எழுதிய பதிவு எனினும் இது இபோது மிக அவசியம் என்பதால் மீண்டும் பதிவிடுகிறோம்.மத அறிவியலை சரிபார்ப்பது எப்படி என்பதை ஒரு எடுட்த்துக் காட்டுடன் விளக்கி இருக்கிறோம்.இந்த எடுத்துக் காட்டின் முக்கியத்துவம் என்னவெனில் ஜாகிர் நாயக்கின் இந்த விள்க்கம் ஏமாற்றுவேலை என அனைத்து பிரச்சாரகர்களும் இபோது ஒத்துக் கொள்வதுதான்.

ஒரு பிரசாரப்பதிவில் ,இப்படி அறிவியல் (எப்படியாவது) காட்ட முடிவதுதான் இறைவேதத்தின் நிரூபணம் என்றவுடன் நமக்கு ஏற்பட்டது அதிர்ச்சி!.

மத அறிவியலின் தந்தை மௌரிஸ் புகைலின் புத்தக்ம் செய்த மாயம்தான் இது என நாம் அறிவோம்.1400 வருட வர்லாற்ரை விட மௌரிஸ்புகைலின் புத்தகம் தரும் நிரூபணத்தை நம்புபவர்களை அம்மதத்தவர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
http://en.wikipedia.org/wiki/Maurice_Bucaille

ஒரு பொது தளத்தில் பெருமிதமாக் மதட்தின் நிரூபணம்& சான்று  என சவால் விடுவது போல் பதிவிடும் போது அதனை சரிபார்ப்பதும்,எதிர்வினைகளும் தவிர்க்க இயலாது.

ஆகவே இஸ்லாமிய ஆன்மீக வாதிகள் நம் பதிவை படிக்க வேண்டாம்.

மத புத்தக்த்தில் அறிவியல் உள்ளது என நிரூபிப்பேன் என்னும் மத பிரசாரகர்களை விவாதத்திற்கு வரவேற்கிறோம்.பெரும்பாலான மத அறிவியல் விள்க்கங்களுக்கு காணொளிகளில் பதில் உண்டு.விவாதம் வந்தால் இன்னும் அழகாக விள்க்கம் அளிப்போம் என உறுதி கூறுகிறோம்.

இப்பதிவு படித்தபின் நீங்களும் எதிலும் எப்படியாவது கொண்டுவரலாம் மத அறிவியல் என்னும் அள்விற்கு வந்து விடுவீர்கள் என நம்புகிறேன்
&&&&&&&&&&



இப்போது இணையத்திலும்,தொலைக்காட்சியிலும் எங்கள் மத புத்தகத்தில் அறிவியல் கோட்பாடுகள் அன்றே கூறப்பட்டுள்ளது என்று கூறுவதை  அனைவ்ரும் அறிவோம்.இதில் ஆபிரஹாமிய மதங்களே இப்படிமத பரப்புரையில் ஈடுபடுகின்ற்ன. தமிழர்களில் கிறித்தவ,இஸ்லாமிய மதத்தவர் இக்கூற்றுகளை தமிழில் பரப்பி வருகின்றனர்..கிறித்தவர்களின் வேத தமிழ் மொழி பெயர்ப்பை படித்தாலே அவர்கள் கூற்று எந்த அளவிற்கு உண்மை என்பதை எளிதாக சரிபார்க்கலாம்.

குரான் அரபியில் இருப்பதாலும்,மொழி பெயர்ப்புகள் வித்தியாசமாகவும்  குழப்பமாகவும் இருப்பதாலும் குரானில் குறிப்பிடப்படும் பல விஷயங்கள் யார் எங்கே ,எப்போது என்று அறுதியிட்டு கூறவே முடியாது குரான்,இஸ்லாம் விமர்சிக்க படுவது அதுவே இறுதி உண்மையான நெறி(மத வாதிகளின் கூற்று) ,பிற மதத்தினரின் சதி என்பது தவறு.இஸ்லமை ஆன்மீக கொள்கையாக கொண்டு மர‌ணத்திற்கு பின் அழிவற்ற வாழ்க்கையும், எல்லையற்ற பேரின்பமும் அடைய விரும்பினால் யாருக்கும் ஆட்சேபனை இல்லை.

ஆனால் இஸ்லாமின் மத அடிப்படைவாத சட்டமான் ஷாரியா,இஸ்லாமிய நாடுகளில் வாழும் பிற மதத்தவர் நிலைமை, மற்றும் உலகம் முழுதும் இஸ்லாமிய அரசு அமைத்தல் என்ற விஷயங்க்ளே இஸ்லாமை,முஸ்லிம்களை பிற மதத்தவரின் விமர்சனத்திற்கு உள்ளாக்கியது.நமது சகோதர நாடான பாகிஸ்தான்,பங்களா தேஷ் ஆகியவ்ற்றில் நடைபெறும் நிலையற்ற ஆட்சி,மனித உரிமை மீறல்கள் அனைத்துமே மத ரீதியான ஆட்சியால் இந்த் கால கட்டத்திற்கு பொருந்தக்கூடிய ஆட்சிமுறையை வழங்க முடியாது என்பதையே காட்டுகிறது. 

மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் மக்கள் எழுச்சியும் கூட ஜனநாயகத்தை நோக்கிய ஒரு போராட்டமே.மத ரீதியான ஆட்சி நடத்துதுவதாக காட்டிக் கொள்ளும் அரசர்கள் ஏகாதிபத்தியங்களின் பிரதிநிதிகளாக நாட்டின் செல்வங்களை கொள்ளையடிக்க உதவுவதும்,இதனை மறைக்க மத பிரச்சாரங்களுக்கு பொருளுதவி செய்வதும்,உலகளாவிய மத தலைவராக முயல்வதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயங்களாகும்.

இந்த மத பரப்புரைகள் எந்த சூழ்நிலையில் வளரும் நாடுகளில் உள்ள மக்களை நோக்கி செய்யப்படுகின்றன என்பதை பார்த்தோம். மதம் ஆன்மீகமாக இல்லாமல் சர்வ ரோஹ நிவாரணி என்னும் மாயவலையில் ம்தத்திற்காக எதையும் செய்ய வேண்டுமென்ற மன்நிலைக்கு ஒரு சாதாரண மனிதனை ஆளாக்க கூடாது.இந்தியாவில்,பிற மத நாடுகளில் மட்டும் எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என்றால் பிற மத நாடுகளில் பேரளவிலாவது ஜனநாயகம் இருக்கிறது. ஜனநாயகம்,மதமற்ற அரசியல் போன்றவை இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளில் மிக அரிது.ஒன்ற்ரண்டு விதி விலக்குகள் இந்தோநேசியா,மலேசியா போன்ற நாடுகள் இருக்கலாம். அவையும் இந்த பரப்புரையில் விழுவதற்கான வாய்ப்பு மிக அதிகம். ஆட்சி மாற்ற‌த்திற்கு மனித உயிர்கள் பலையாவதும் மத்திய கிழக்கில் வழக்கமான் செயல் ஆகிவிட்டது.  மதத்தின் ஒரு குறிப்பிட்ட ரீதியான விளக்கம்,மதம் சார்ந்த்த அரசியல் என்பதே இப்பரப்புரைகளின் நோக்கமாகும் என்பதில் ஐயம் இருந்தால் இந்த பரப்புரையாளர்களிடம் ஷாரியா சட்டம் இல்லாமல் இஸ்லாம் இருக்க முடியுமா என்று கேளுங்கள்.ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

அப்படி அவர்கள் ஷாரியாவின் மீதான இஸ்லாமிய அரசு இப்போதைய சட்டங்களை விட எப்படி சிறந்தது என்று சொல்ல மாட்டார்கள்,அதை விவாதிக்க மாட்டார்கள். அதற்கு பதிலாக குரானில் அறிவியல் உள்ளது ஆகவே இது இறைவனின் வார்த்தை ,ஷாரியாவும்,இஸ்லாமிய அரசும் இறைவனின் கட்டளைகள் என்று மெதுவாக கருத்தாக்கம் செய்வார்கள். இஸ்லாமிய நாடுகளின் கல்லெறிந்து கொல்லுதல்,சவுக்கடி,கையை வெட்டுதல் என்பதெல்லாம் பிற நாடுகளில் மனித உரிமை மீறலாக கருதப்படுவதும் அறிந்ததே. இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் பிற மதத்தினர் மட்டுமல்ல,பிற் பிரிவு இஸ்லாமியர்,நடு நிலைமையான இஸ்லாமியர்கள் கூட பாதிக்கப்படுகின்றனர். மாற்றுக் கருத்தானது வன்முறை கொண்டே எதிர்க்கப்படுகின்றது.பதிவை படிக்கும் நண்பர்கள் இது மதத்தில் அறிவியல் என்ற கருத்தாக்கத்திற்கு எதிரானது மட்டுமே,தனிப்பட்ட தமிழ்(இந்திய) இஸ்லாமியர்களின் மதம்,ஆன்மீகத்தில் இருந்து தொடர்பு அற்றது என்பதை அறிந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன். 

இஸ்லாமிய மத பரப்புரைகளை எப்படி சரி பார்ப்பது,அவர்களின் கூற்றுகளை எப்படி மறுப்பது என்பதற்காக இந்த பதிவு.

குரானே தன்னிடத்தில் புரியாத வசனங்கள் உண்டு என்றே கூறுகிறது.

3:7. அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.

Yusuf Ali: He it is Who has sent down to thee the Book: In it are verses basic or fundamental (of established meaning); they are the foundation of the Book: others are allegorical. But those in whose hearts is perversity follow the part thereof that is allegorical, seeking discord, and searching for its hidden meanings, but no one knows its hidden meanings except Allah. And those who are firmly grounded in knowledge say: "We believe in the Book; the whole of it is from our Lord:" and none will grasp the Message except men of understanding.

_______________

இப்பதிவில் உலகம் உருண்டை என்று எங்கள் புத்தகத்தில் அன்றே கூறப்பட்டுள்ளது என்று கூறுவதை எடுத்துக் கொள்வோம்.







இந்த யு டியூபிலும் இந்த பரப்புரைகள் அதிகமாக கிடக்கின்றன.இந்த காணொளியில் குரான் 79.30 ல் பூமி நெருப்புக் கோழி முட்டை போல் உள்ளது என்று கூறுவதை கேளுங்கள்.

1.முதலில் யாரேனுமிந்த வசனத்தில் அறிவியல் இருக்கிறது என்று கூறினால் உடனே அவ்வசனத்தை குறித்து கொள்ளுங்கள்..

அவ்வசனத்தை தமிழிலும்,ஆங்கிலத்திலும்,வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பில் பார்த்தால் ஒரு அளவிற்கு அந்த வசனம் என்ன கூறுகிறது என்று புரியும். குரான் வசனம் சரிபார்க்க  இந்த தளத்தில் பார்க்கவும்.ஆங்கில மொழி பெயர்ப்பில் திரு பித்கல்,யூசுஃப் அலி(இவர் இந்திய போஹ்ரா பிரிவு இஸ்லாமியர்) எளிதாக இருக்கும்..ஆனால் யூசுஃப் அலி மொழி பெயர்ப்பில் எப்போதும் அறிவியலை ஒத்து வருமாறே மொழி பெயர்ப்பார் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.



79:30 இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.


Sahih International: And after that He spread the earth.


Pickthall: And after that He spread the earth,


Yusuf Ali: And the earth, moreover, hath He extended (to a wide expanse);


Shakir: And the earth, He expanded it after that.


Muhammad Sarwar: After this, He spread out the earth,


Mohsin Khan: And after that He spread the earth;


Arberry: and the earth-after that He spread it out,

Waalarda baAAda thalika dahaha


வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பு வேண்டுமெனில் இத்தளத்தில் கிடைக்கும்.
http://corpus.quran.com/


Waalarda -And the earth
baAAda -after
thalika -that
dahaha-He spread it.

இந்த வசனத்தை பார்த்தாலே நெருப்புக் கோழி முட்டை என்பது குறிப்பிடப்படவில்லை என்பது தெரியும்.இபோது இரண்டாவ்து கட்டத்திற்கு செல்வோம்.

2.குரான் என்பது 1400 வருடங்களுக்கு முந்தைய புத்தகம்.அது அப்போது எப்படி அர்த்தம் கொள்ளப்பட்டதோ, விளங்கப்பட்டதோ அப்படியே இப்போதும் சொல்லப்பட்டால் மட்டுமே அது உண்மையான விளக்கம். 


இதற்கு பல குரான் விளக்கங்கள்(தஃப்சீர்) உண்டு.இதில் இபின் அப்பாஸ்(முகமதுவின் உறவினர் 618_678),அல் சுயுட்டி போன்றவர்களின் விளக்கங்கள் ஒரு அளவிற்கு இந்த வசனங்கள் 6ஆல் நூற்றாண்டில் எப்படி பொருள் கொள்ளப்பட்டதோ அது போலவே இருக்கும். இந்த வசனத்தின் விளக்கத்தை பார்ப்போம்.

anwîr al-Miqbâs min Tafsîr Ibn ‘Abbâs 
{ وَٱلأَرْضَ بَعْدَ ذَلِكَ دَحَاهَا }

(And after that He spread the earth) even then He spread it on the water; it is also said: 2,000 years after that He spread it on the water,


* تفسير Tafsir al-Jalalayn 
{ وَٱلأَرْضَ بَعْدَ ذَلِكَ دَحَاهَا }

and after that He spread out the earth: He made it flat, for it had been created before the heaven, but without having been spread out;

படித்தால் பூமி தட்டை என்று சொல்வது போல் இருக்கிறதே என்றால் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.

3.மேற்கூறிய இரு செயல்களை கொண்டு இந்த பரப்புரைகளை எளிதில் மறுக்கலாம். விவாதிக்க அவசியம் இல்லையென்று நினைத்தாலும் சரி பார்த்தோம் என்ற ஒரு திருப்தி வரும். பல நண்பர்கள் யு டியூபிலும் இந்த பரப்புரைகளை மறுத்து காணொளிகளை வெளியிட்டு வருகிறார்கள்.இந்த காணொளியில் நாம் சொன்ன விஷயங்கள் அனைத்தும் செய்முறை விளக்கமாக காட்டப்பட்டுள்ளது. பாருங்கள். தெளிவு பெருங்கள்.








குரானின் பல வார்த்தைகளுக்கு பல பொருள் கூற முடியும்.அதில் ஏதாவது ஒன்றை அறிவியல் கொள்கைகளுக்கு ஏற்ற மாதிரி காட்ட முடியும்.இதில் என்ன ஏமாற்று வேலை என்றால் ஏற்கெனவே இல்லாத அர்த்தம் எல்லாம் புதிதாக க‌ண்டுபிடித்தல், அதாவது இந்த டஹாஹ[dahaha] என்ற வார்த்தைக்கு புதிதாக நெருப்புக் கோழி முட்டை என்று ஒரு அர்த்தம் புதிதாக கண்டு பிடித்து பாருங்கள் அறிவியலை என்று கூறுவதில் இருந்து படிக்கும் நண்பர்கள் இந்த மதத்தில் அறிவியல் என்ற கருத்தாக்கம் என்பது என்ன என்பதை புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.ஜாகிர் நாயக்கின் விளக்கத்தில் இருந்து அது நன்றாக விளங்கும்.


11 comments:

  1. மே தின வாழ்த்துகள்
    உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

    தமிழ்.DailyLib

    we can get more traffic, exposure and hits for you

    To link to Tamil DailyLib Logo and To get the Vote Button
    தமிழ் DailyLib Vote Button

    உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

    நன்றி
    தமிழ்.DailyLib

    ReplyDelete
  2. பதிவுக்கு தலை வணங்குகிறேன் சகோ.
    மனித உரிமைக்கும் இஸ்லாமுக்கும், அறிவியலுக்கும் இஸ்லாமுக்கும் எப்படி தொடர்பிருக்க முடியும்.
    மேசமான மனித உரிமை மீறல்களை மத சுதந்தித்தின் பேரால் ஒரு போதும் அனுமதிக்க முடியாது.இஸ்லாம் நாடுகளில் ஒரு சில நாடுகளை தவிர மற்றவற்றில் மத சுதந்திரம் என்று ஒன்று கிடையாது.
    //இது நாம் சில ஆண்டுகள்க்கு முன்பு எழுதிய பதிவு//
    அதை படிக்காதது எனது,பலரது தூரதிஷ்டம் படித்திருந்தால் பலருக்கு இமெயில் செய்திருப்பேன்.

    ReplyDelete
  3. வாங்க சகோ குயிக்ஃபாக்ஸ்

    மதம் என்பது என் நம்பிக்கை வாழ்வியல் நடைமுறை என்போரை தலை வணங்கி மதிக்கிறோம்.

    அதே சமயம் என்மதம் மட்டுமே சரி ,நிரூபணம் உண்டுஎன்பதும்,உலகாளாவிய ஆட்சி பிற மதங்களை இலாமல் போக செய்து அமைப்போம் என்பதை ஏற்க முடியாது. ஆகவே குரானில் அறிவியல் காட்டும் மத பிரச்சார மேதைகள் வந்து நம் செய்முறை விள்க்கப்படி விள்க்க வேண்டுகிறோம்.

    நாமும் விளக்குவோம்.அனைவருக்கும் நல்ல நகைச்சுவை விருந்து என உறுதியளிக்கிறோம்.

    மத் புத்த்கத்தில் அறிவியல் என்பது ஏமாற்ரு வேலை என்பதை நிரூபிக்கும் வழிமுறை கொடுத்து இருக்கிறோம்.அனைவரும் பயன்படுத்தி பயன்பெறுக!!!!!!
    இனி வரும் ஒவ்வொரு மத அறிவியல் பதிவுக்கும் இம்முறையில் ஆய்வு செய்து சரிபார்க்கும் பதிவுகள் வரும் என்பதையும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!



    நன்றி

    ReplyDelete
  4. அருமையான பதிவு நண்பரே,எழுத படிக்காத முகம்மதுக்கு அறிவியல் எப்படி 1400 ஆண்டுகளுக்கு முன்பு தெரிந்தது? என்ற வினாவைத்தான் இன்று கேட்டு வருகின்றனர். அதனாலேயே குரான் இறைவேதம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். ஒரு பக்கம் குரான் அறிவியல் புத்தகம் அல்ல என்கிறார்கள்,மறுபக்கம் அறிவியலை உண்மைப்படுத்துவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். என்ன ஒரு பிதற்றல்;;;

    ReplyDelete
  5. நல்ல பதிவு,

    ஏன் இஸ்லாமியர்கள் உள்ள நாடுகளில் பிரச்சனைகள் எல்லாம் சரியில்லை என்று கேட்டால்......
    அவர்கள் இஸ்லாமை முழுமையாக பின்பற்றவில்லை என்ற பதில் வருகிறது.
    இதிலிருந்து, இஸ்லாமை எல்லோரும் பின்பற்றினால் நன்மை( ஒரு வாதத்துக்கு) என்பது, அனைவரும் நல்லவராக மாறிவிட்டால் உலகம் முழுக்க சுபிட்சமே என்பதற்கு சமம்.
    அதனால் இஸ்லாம் ஆட்சிமுறைக்கு தனிப்பெருமை கிடையாது, மேலும் இதுவரை வெற்றி பெறாததலால் அதை அமைக்கவும் முடியாது.

    குரான் வசங்கள் அந்த காலத்திற்குரிய அர்த்தத்தில் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் சரியே. ஆனாலும் இதற்கும் ஒரு பதிலை வைத்துரிப்பார்கள்...

    குரான் வசனங்கள் எந்த காலத்திற்கும் பொருந்தும் நிரந்தரம், ஆனால் அந்த அந்த காலத்திற்கும் அர்த்தங்கள் மாறிகொண்டே உண்மைகளை சொல்லும் என்பார்கள்.

    குரானில் அறிவியல் என்று சொன்ன வெள்ளைகார காஃபிர்களில் ஒருவராவது இஸ்லாம்க்கு மாறியிருப்பார்களா? அவர்களை மேற்கோள் காட்டுவது தாழ்வுமனப்பான்மையின் வெளிப்பாடு மற்றும் அவர்களுக்கு அடிமையாயிருப்பதையும் காட்டுகிறது.

    இணையம் இருந்ததால் எல்லாவற்றையும் சரிப்பார்க்க முடிகிறது. அது இல்லை என்றால்....

    ReplyDelete
  6. வாங்க நண்பர் நரேன்,

    யாருமே விவாதத்திற்கு வராததல் நகைச்சுவை விருந்து அளிக்க முடியாமைக்கு வருந்துகிறேன்.

    இந்த குரானில் அறிவியல் என்பது ஒரு சமீப கால மத பிரச்சார உத்தி.இது மவுரிஸ் புகைலின் புத்தக்த்தில் இருந்தே தொடங்குகிற‌து.அந்த புத்தக்த்தில் உள்ள விடயங்கள்தான் பெரும்பாலான மத அறிவியல் விள்க்கங்கள்.

    மவுரிஸ்புகைல் நோவா காலத்து வெள்ளப் பெருக்கு ஒரு சிறு பகுதியில் மட்டும் நிகழ்ந்ததாகவும் கூறுகிறார். வெள்ளப் பெருக்கு உலக் முழுதும் அல்ல[in 1400 years of islam] என முதன் முதலில் விள்க்கம் கூறியவர் ஒரு காஃபிர் .

    இதில் என்ன உலக முழுதும் நடக்கவில்லையெனில் அனைவரையும் வேறு ஊருக்கு சென்று விட வைத்து இருக்கலாமே.வழக்கம் போல் இதை சரியாக விள்க்க குரான்& ஹதித்தில் வசனம் இல்லை.

    எவர் எப்படி வேன்டுமானாலும் மாற்றி திரித்து கூறுவது& பயனபடும் என்றால் எதனையும் ஏற்போம் என்பதுதான் மத்வாதிகளின் கொள்கை.
    .
    http://islaminitsownwords.blogspot.com/2009/04/long-list-of-crontradictions-and_15.html
    தெளிவாக இருக்கும் விவகாரமான வசனத்தையும் [எ.கா துல்கர்னை கட்டிய சுவர் அத்தாட்சி)மாற்றி பொருள் கொடுப்போம் என்பது ஏமாற்று வேலை மட்டுமே

    ஹா ஹா ஹா

    நன்றி

    ReplyDelete
  7. நல்ல பதிவு.
    பின்னால் வந்து நீண்ட ஒரு பதில் அளிக்கிறேன். வேலை அதிகம்.

    அதற்கு நடுவில் அவசரமாக ஒரு கவிதை கூட எழுதியிருக்கிறேன்.

    படியுங்கள். ஏன் காககககே கவிஞர்களை கொல்ல சொன்னார் என்று தெரியும்.

    நாமளும் எயுதும் கவுஜ

    ReplyDelete
  8. www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,நபிகள் நாயகம் அவர்களின் குணநலன் அறிய, நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 TO 15),இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி,ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.அந்த தளத்தில் இணையுங்கள்,வாருங்கள் உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள் ,

    ReplyDelete
  9. பிரான்ஸ்சில் வாழும் இஸ்லாமிய ஒரு பெண்ணை பற்றிய ஒரு கட்டுரை கண்டேன். தப்பினோம் பிழைத்தோம் என்று வெளிநாடு வந்து சுதந்திரமான நல்ல வாழ்கை வாழும் இஸ்லாமிய பெண்கள் மாதிரியில்லாம இவர் மதத்தின் பெயரால் தனது சிறகுகளை விரிக்க இயலாதுள்ளவர்(அது அவரது சொந்த தவறு) அவர் என்னா சொல்கிறாரென்றால் பிரான்ஸ் இஸ்லாமியருக்கு நல்ல நாடு இல்லை மோசம் பர்தாவோடு போனா கிட்டல் பண்ணுறார்கள் என்கிறார். அதனால அவர் அழகிய இஸ்லாமிய நாடுகளில் ஏதாவது ஒன்றுக்கு போக விரும்புகிறர் அல்லது பாலூறும் தேனாறும் ஓடும் ஸம்ஸம் கிணறு உள்ள சவூதி அரேபியாவுக்கு தான் போக விரும்புவாரென நினைத்தால் கிடையவே கிடையாது.அவர் போக விரும்புவது காபிர்களின் இங்கிலாந்துக்கு, காபிர்களின் ஹொலண்டுக்கு. பர்தாவை சுமந்து கொண்டு திரியும் அவரே இஸ்லாமிய நாட்டில் வாழ விரும்பல. இஸ்லாம் மதத்தால் இஸ்லாமிய நாடுகள் எப்படி மோசமான நிலையில் உள்ளனவென்று அவர் அறிந்தே வைத்திருக்கிறார். அந்நாடுகளில் ஏதாவது தப்பி தவறி நல்ல விடயங்கள் நடந்தால் அது மதம் சாராத நடவடிக்கைகளினாலேயே ஏற்பட்டுள்ளது.

    ReplyDelete
  10. அருமையான கட்டுரை.

    தந்தமைக்கு நன்றி. நடந்த வரலாற்றை- தவறாக உளறி உள்ளதை இன்று வரை சுபி இங்கே மறுக்க வில்லை.http://suvanappiriyan.blogspot.in/2012/02/blog-post_23.html

    இதை கிறிஸ்து யார்-http://devapriyaji.wordpress.com/2012/05/13/jesus-or-mohammad/

    நீங்கள் விமர்சிக்க வேண்டும்.

    ReplyDelete