Saturday, December 22, 2012

குஜராத் தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?




வணக்கம் நண்பர்களே,
கடந்த மாதம் முதல் நடைபெற்ற குஜராத்,ஹிமாச்சல்பிரதேஷ் சட்ட மன்றத்  தேர்தல் முடிவிகள் வெளிவந்துள்ளன. குஜராத்தில்  திரு நரேந்திர மோடி தலைமையில் பா.. வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்து உள்ளது. ஹிமாச்சல் பிரதேசில் பா.. வை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

இப்பதிவில் குஜராத் தேர்தல் முடிவுகளை அலசுவோம். குஜராத் என்றதுமே ப்போது முதலில் ஞாபகம் வருவது 2002 கோத்ரா மதக் கலவரமே. இந்தியாவில் சமீப காலங்களில் நடைபெற்ற மோசமான மதக் கலவரம் என்பதும், அதில் ஆளும் மோடி அரசு பாரபட்சமாக நடந்தது என்பதே குற்றச்சாட்டு. வழக்குகளில் சரியாக நீதி கிடைக்கவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

ஆயினும் 2002க்கு பிறகு மதம் சார் வன்முறைகள் நடக்கவில்லை என்பது ஆறுதலான விடயம். இந்தியா ஒரே நாடு என்றாலும் பிற மாநிலங்களில்நடக்கும் விடயங்கள் நமக்கு ஊடகம் மூலமாக மட்டுமே தெரிகிறது.ஊடகங்கள் பக்கச்சார்பு உடையவை என்னும் போது சரியாக நிலவரம் தெரியாது.மோடி ஊழல் கறை படியாதவர்,பாரபட்சமின்றி சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் என்பதன் நிரூபணமே இந்த வெற்றி என ஆதரவாளர்கள் கூறுகின்றார்.இல்லை சிறுபான்மையினர் அங்கே அஞ்சி வாழ்கிறார் என எதிர்குரலும் கேட்கிறது. இதனை நாம் சரி பார்க்க எப்படி முடியும்??? வரலாறு வெற்றி பெற்றவர்களால் எழுதப்படுகிறது.

சரி முதலில் முடிவுகளைப் பார்த்து விடுவோம்.


Seats 2012
Percentage 2012
Voters 2012
Seats 2007
Percentage 2007
BJP
115
47
26,009,988
117
49.12
Congress
61
39
21,278,648
59
38
GPP
2
4
956,053
-
-
Others
4
9
5,236,916
6
12.88
Total
182
100
54,000,000
182
100

காங்கிரஸ்,பாஜகவிற்கு சுமார் 5 மில்லியன் ஓட்டுகள் அல்லது 8% வித்தியாசம்  இருக்கிறது.இது சென்ற தேர்தல் முடிவில் இருந்து அதிக வித்தியாசம் இல்லை எனப்புரியும். கேசுபாய் படேல் 4% ஓட்டினைப் பிரித்தார் என்றாலும் அவர் பாஜக அல்லது காங்கிரசின் ஓட்டைப் பிரித்தாரா அல்லது அவரின் இனத்தவரை கட்சி வேறுபாடின்றி ஈர்த்தாரா எனக் கூற இயலாது.

எனினும் மோடியின்  மூன்றாம் முறை வெற்றி அவரை குஜராத் மக்கள் விரும்புவதையே காட்டுகிறது.

ஜனநாயகம் என்பது மற்ற அரசியல் அமைப்புகளை விட சிறந்த முறை என்றாலும், இதிலும் மக்கள் பொருளாதார ரீதியாக பிரிவதை விட இன மதரீதியாக பிரிவது தவிர்க்க முடிவது இல்லை.

பொருளாதாரரீதியாக மக்கள் பிரிவதை விட இனரீதியாக பிளவு படுத்தல் அரசியல்வாதிக்கு எளிதில் பலன் தருகிறது.





இந்த ஓட்டுக்கள் மத இனரீதியாக பிரிந்ததையும்  ஓட்டு சதவீதம் மாறாமை காட்டுகிறது. காங்கிரஸ் அதிகம் தலித்,ஆதிவாசி மற்றும் சிறுபானமையினர் ஓட்டுகளைப் பெற்றும் இருப்பதும் சொல்ல முடியும். குஜராத்தில் தலித் மக்கள் 35 இலட்சம்[7%],ஆதிவாசிகள் 74 இலட்சம்[14.7%] ,சிறுபான்மையினர் 46 இலட்சம் [9%] உள்ளனர்.

எனினும் அனைவரும் தங்களுக்கு வாக்களிப்பதாக பாஜக,காங்கிரஸ் கூறுகின்றனர்.பாஜக ஒரு படி மேல் சென்று குஜராத்தில் சிறுபான்மையினரின் கல்வி,வேலைவாய்ப்பு ,நாட்டின் சராசரியை விட அதிகம் எனக் கூறுகிறது.


- In terms of literacy level, Muslims in Gujarat stood at 73.5 percent as compared to the national average of 59.1. While the figure for the urban males was 76, it was 81 for those living in rural areas as compared to the national average of 70 and 62 respectively in similar category. [The Sachar Committee report : Appendix table 4.1, Page No. 287]

- Even Muslim women in the urban areas of Gujarat have average literacy rate 5 point higher than the national average whereas their counterparts in rural areas of Gujarat fare even better with a literacy rate of 57 percent as compared to the national average of 43 in similar category. [The Sachar Committee report : Appendix table 4.1 b, Page No. 289]
-Also in Gujarat, a greater percentage of Muslims have attained primary, secondary and higher secondary level education compared to the national average and compared to other states. Against the national average of 60.9% (and 42.2% in UP), Gujarat had 74.9% Muslims at the primary level while the percentage is 45.3 at Secondary level as compared to national average of 40.5% and 29.2% in UP. [The Sachar Committee report : Appendix table 4.6 & 4.7, Page No. 295-296-297-298]
-The average years of secondary schooling for Muslim children between age 7 and 16 years is higher in Gujarat at 4.29 years compare to the national average of 3.26 years. The figures in West Bengal, UP and Bihar are 2.84, 2.60 and 2.07 years respectively. The truth is that the Muslim children in Gujarat are benefiting from equal opportunities to access secondary schooling as other children. [The Sachar Committee report : Appendix table 4.2, Page No. 290-291]

The other aspect is the economic well being of Muslims in Gujarat. Here also, the Sachar Committeedispels the myth.
- In terms of per month per capita income, Muslims in the urban areas of Gujarat earn an average Rs 875 which is more than the national average of Rs 804. In contrast, it is Rs 662 in UP, Rs 748 in West Bengal, Rs 811 in Punjab, Rs 803 in Andhra Pradesh and Rs 837 in Karnataka. [The Sachar Committee report : Appendix table 8.2, Page No. 364]
- The story is similar in rural Gujarat where the per capita monthly income of the Muslims 20-25% more than the Muslims living in the rural areas of most other states. It is on an average Rs 668 as compared to the national average of Rs 553. [The Sachar Committee report : Appendix table 8.3, Page No. 365]
- In terms of people living below poverty line, Gujarat had 54% Muslims living below it in 1987-88 while the figure stood at 34% in 2004-2005 showing a healthy pace of improvement. [The Sachar Committee report : Appendix table 8.5, Page No. 367]
- Even in terms of share of Muslims in state employment, i.e, government jobs, it is 5.4% in Gujarat while it is 2.1% in West Bengal, 3.2% in Delhi and 4.4% in Maharashtra. [The Sachar Committee report : Appendix table 9.4, Page No. 370]



இப்படி எல்லாம் உண்மையாக இருந்தால் நன்மைதான். வெற்றி பெற்ற முதல்வர் மோடி தேசிய அரசியல் மீது கவனம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அரசியல் என்பது இன்னும் அதிக பன்முகத் தன்மை கொண்டது.கோத்ரா சம்பவம் குறித்து பாரபட்சம் அற்ற நீதியோ,மன்னிப்போ கேட்கும் எண்ணம் திரு மோடியிடம் இல்லை.அதனைக் கடந்து,மறக்க வேன்டும் எனவே கோருவது புரிகிறது.இந்திய பிரதமர் ஆகவேண்டும் எனில் இன்னும் பல இன,மொழி,மத மக்களின் அபிமானம் பெற்றால் மட்டுமே முடியும்.


Manmohansingh04052007.jpgLK Advani.jpgPrakashkarat.JPG
LeaderManmohan SinghLal Krishna AdvaniPrakash Karat
PartyCongressBJPCPI(M)
AllianceUPANDATF
Leader since22 May 20041 June 200411 April 2005
Leader's seatAssam
(Rajya Sabha)
GandhinagarNone
Last election218 seats, 35.4%181 seats, 33.3%59 seats, 7.7%
(w/ Left Front)
Seats won26215979
Seat changeIncrease80Decrease17Decrease30
Popular vote153,482,356102,689,31288,174,229
Percentage37.22%24.63%21.15%
SwingIncrease3.96%Decrease4.88%Decrease1.06%

பாராளுமன்ற தேர்தலில் உள்ள 543 இடங்களில் 272 இடங்கள் பெற்றால் வெற்றி என்னும் போது பாஜக மட்டும் தனியாக 200 இடங்கள் பெற்று கூட்டணி கட்சிகள் 70+ இடங்கள் பெற்றால் மட்டுமே சாத்தியம். கூட்டணி தேர்தலுக்கு பிறகு கிடைக்கும் வாய்ப்புள்ள கட்சிகள், வங்காள திர்ணாமுல் காங்கிரஸ்,பீஹார் ஜதா(நிதிஷ் குமார்),தமிழ்நாடு அதிமுக, ஒரிசா பட்நாயக்,உத்தர் பிரதேஷ் பகுஜன் சமாஜ் போன்றவை உள்ள.


எனினும் அரசியலில் எதுவும் நடக்கும். மோடியின் குஜராத் வெற்றி 2014 பாராளுமன்ற தேர்தலை ஒரு பரபரப்பு மிகுந்ததாக மாற்றியது மட்டும் உண்மை!!!

இன்னும் நிறைய விடயங்கள் சொல்ல நினைப்பது உண்டு.பின்னூட்டத்தில் தொடர்வோம்!!!.

நன்றி!!



132 comments:

  1. சகோ.சார்வாகன்,

    காங்கிரசின் பலவீனமே மோடியின் பலம்.

    கான்கிரசுக்கு என மக்கள் செல்வாக்குள்ள மாநில தலைவர்களே இல்லை, ஒரு மாநில தேர்தலில் எல்லாம்,சோனியா, ராகுல் பிம்பம் எடுபடாது என்பது உ/பி,பிகார் என பல தேர்தல் முடிவுகளும் காட்டுகின்றன, இப்போ குஜராத் தேர்தலும் அஃதே.

    ReplyDelete
  2. பல குஜராத்தி மக்களோடு கனடாவில் புழங்குவதால், ஓரளவு குஜராத்தைப் பற்றி கணிக்க முடிந்ததே. மோடி, கோத்ரா, மதவாதம் ஆகியவையே பாஜகவின் நெகடிவ் பாய்ண்ட்கள்.. ஆனால் மோடி ஏனைய இந்திய முதல்வர்களை விட திறம்பட தம் மாநிலத்தை நிர்வகித்து வருகின்றார்.. விவசாயம், அந்நிய முதலீடு, தொழிற் துறைகள், கல்வி, நிலத்தடி நீர் பெருக்கல், தடையற்ற மின்சாரம் ( ஏனைய மாநிலங்களை விடவும் ),
    போன்றவற்றில் நன்றாகவே செயல்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது .. மக்கள் இப்போது மதங்கள், சாதிகளை விட வசதி வாய்ப்புக்கள், வாழ்க்கைத் தரத்தையே பார்க்கின்றனர். ஒருவேளை மோடி மோசமான நிர்வாகியாக இருந்து, வெற்றிப் பெற்றிருப்பாரே ஆனால் நிச்சயம் மதவாதம் வென்றது எனக் கூறலாம் ..

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ இ.செ ,

      மோடியிடம் மதவாதம் தவிர[அதுவும் 2002 கோத்ரா கலவரம் மட்டுமே] வேறு குறைகள் இல்லை என்பது போல் அவரது எதிரிகளே சான்றிதழ் கொடுப்பது போலவே உள்ளது. இது நமக்கு மிகவும் வியப்பாகவே உள்ளது.

      மோடியை முழுமூச்சாய் எதிர்க்கும் ஒரு சிறுபானமைத் தலைமை கூட அங்கில்லை!!. நம் சகோக்கள் உதார் விடுவது எல்லாம் இங்கேதான்!!ம்ம்ம்ம்

      நன்றி

      Delete
    2. சகோ சார்வாகன் ,
      எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது , நீங்களா இப்படி பேசுவது ..!!!
      மதவாதம் வைரஸ் என்று ( http://www.kodangi.com/2012/12/is-religion-virus.html ) இப்பதிவில் படித்தேன் .
      அம்மதவாதத்திநூடக ஒரு இன அழிப்புக்கு காரணமாக இருந்த ஒரு ஒருவரை அவரே வியக்கும் அளவுக்கு இப்படி எழுதி இருக்கின்றீர்கள் .

      Delete
    3. நண்பர் செல்வா,


      சகோ அபுபக்கருக்கு இட்ட இறுதி பின்னூட்டம் படிக்கவும்.

      நன்றி!!

      Delete
  3. வாங்க சகோ வவ்வால்,
    சரியாக சொன்னீர்கள். காங்கிரசுக்கு சரியாக தலைவர்கள் இல்லை. மாதவ் சிங் சோலங்கியின் பின் யாரும் இல்லை. காங்கிரஸ் என்ன்வோ இனமத சார்பற்றது என் சொல்லிக் கொண்டாலும் அப்படிக் கிடையாது.சில சாதி,சிறுபான்மையை சேர்த்து ஓட்டு வாங்கியே பிழைத்தது. மோடி அத்னை மத ரீதியாக பிரிப்பதில் வெற்றி கண்டார்.
    http://en.wikipedia.org/wiki/Gujarat

    After gaining independence in 1947, the Indian National Congress party (INC) ruled the Bombay State (which included present-day Gujarat and Maharashtra). Congress continued to govern Gujarat after the state's creation in 1960. During and after India's State of Emergency of 1975–1977, public support for the Congress Party eroded, but it continued to hold government until 1995. In the 1995 Assembly elections, the Congress lost to the Bharatiya Janata Party and Keshubhai Patel came to power. His government lasted only two years. The fall of that government was provoked by a split in the BJP led by Shankersinh Vaghela, who has won most of the subsequent polls. In 2001, following the loss of two assembly seats in by-elections, Keshubhai Patel resigned and yielded power to Narendra Modi. Political instability followed the 2002 Gujarat riots in which rioters raided the homes of thousands of Muslims, killing over 1000 people.[23] The BJP retained a majority in the 2002 election, and Narendra Modi has since served as Chief Minister of the state.

    தன் பிம்ப்ம மாசற்றதாக இருக்கும் படி பார்த்துக் கொள்வதில் சம்ர்த்தர். பாருங்க அவர் மீது கோத்ரா என் மட்டும்தானே அனைவரும் குற்றம் சாட்ட முடிகிறது.

    ஒரு அரசியல் கட்சி நடத்துவது எனில் பொருளாதாரம் இன்றி முடியாது,ஊழல் என்பது இந்திய அரசியலில் தவிர்க்க முடியாதது, மோடியின் மீது ஏன் காங்கிரசால் எந்த குற்றசாட்டும் வைக்க முடியவில்லை என்பதே கேள்வி!!!

    இப்படி மோடிக்கு துணைப்பிடில் வாசிப்பதே குசராத் காங்கிரசு.


    நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. காங்கிரசுகாரங்களை விடுங்க சகோ.
      நீங்க என்ன சொல்றீங்க மோடி செய்தது சரியா தவறா ?!!!
      சான்றுகளின் அடிப்படையில் இதை நிரூபிக்க முடியுமா என்பீர்களா !!!

      Delete
    2. சகோ செல்வா,
      சரி தவறு என்பது யாருடைய பார்வையில் என்பதே என் பார்வையில் வைக்கிறேன்.

      மத்வாதத்தில் இந்து,இஸ்லாம்..எந்த மதவாதமும் தவறே!!

      1.2002ல் குஜராத்தில் பாஜக வகேலா பிரிவுக்கு பின் மோசமான சூழலில் கோத்ராவை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தார் மோடி.

      2. 2002 ல் இருந்து தன் நிலையை உறுதிப் படுத்திக் கொண்டார், காங்கிரசு அவரை சரியாக எதிர்க்கவில்லை.இது குறிப்பிட்ட சதவீத மக்களுக்கு நல்லாட்சியா, இல்லை மத ரீதியான பிளவை அப்படியே பார்த்துக் கொண்டதாலோ இருக்கலாம்.

      3.இது இந்தியா முழுதும் விரிவு படுத்தி தலைமையாக வரும் வாய்ப்பினை தடுக்க முடியுமா? என்பதையே கேட்கிறேன்.

      4. ஒருவேளை ஆட்சிக்கு வந்தால்
      அரசியல் அமைப்பு சட்டம் மாற்றம் காணும் அபாயம் உள்ளது.

      நன்றி!!

      Delete
  4. குஜராத்தில் உள்ள முசுலிம்கள் இன்னமும் கலவரத்தை நினைத்து கலங்காமல் மோடியின் ஆட்சியில் உள்ள நல்ல விடயங்களை பிடித்து முன்னேற முடிவு செய்துவிட்டது போல உள்ளது.மற்ற ஊர் முசல்மான்கள் காட்டும் அளவில் பாதி கூட குஜராத் முசல்மான்கள் காட்டுவதாக காணோம். முசுலிம்கள் முடிவை நிர்ணயிக்கும் 19 தொகுதிகளில் 12 தொகுதிகளை மோடி கைப்பற்றி உள்ளாராம்.

    முசுலிம்களும் வாய்ப்பின் பயன்படுத்தி வருகின்றனர். 9% முசுலிம்கள் கொண்ட குஜராத் போலிஸில் 10% மேற்பட்ட போலிஸ் முசுலிம்களாம். அதாவது முசுலிம் மக்கள் தொகை சதவீதத்தை விட போலிஸில் பணிபுரிவோர் சதவீதம் அதிகம் கொண்ட ஒரு சில மாநிலங்களில் ஒன்றாக உள்ளது குஜராத். 'முசுலிம்கள் மேம்பாட்டுக்காக தனிப்பட்ட முறையில் மோடி ஏதும் செய்வதில்லை. ஆனால் முசுலிம் முன்னேற்றத்தை தடுப்பதுமில்லை. ஆகவே அரசு திட்டங்களின் துணையோடு இசுலாமியர் பொருளாதார ரீதியில் நன்றாக வளர்ந்து வருவதாக JNU போராசியர் சொன்னார். இதுதானே உண்மை மதசார்பின்மை, இது மோடி ஆளும் மாநிலத்தில் கிடைப்பது ஒருவிதத்தில் நகைமுரண்தான்.

    ஆனால் இவ்வளவு இருந்தும் மீதி மாநில முசுலிம்கள் அவரை ஏற்றுக் கொள்ளுவது நடக்குமா என தெரியல.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ நந்தவனம்,
      நீங்கள் சொல்லும் த்கவல்களையே சச்சார் அமைப்பின் பரிந்துரைகள் கூறுகின்றன. நான் எதற்கும் ,எப்போதும், சொல்வது பரிசோதித்து பார்த்து ஏற்க வேண்டும்.

      இந்த மோடி ஒரு சிறந்த நிர்வாகி, முஸ்லிம்களும் அவரின் ஆட்சியில் முன்னேறுகிறார் என்பதை அவரின் எதிரிகள் கூட மறுத்ததாக தெரியவில்லை. புள்ளி விவரம் பெரும்பாலும் சரியாகவே இருக்கும்.

      **
      பிற மநில முஸ்லிம் த்லைவர்கள் கூட அங்கு சென்று இருப்பார்கள், எதுவும் பெரிதாக குற்றம் சொல்ல முடியவில்லை என்பதால் மட்டுமே மறுப்புக் கருத்துக்கள் இல்லை எனவே கருதலாம்.

      குசராத்து முஸ்லிம்களில் சாதிப் பெயர் இன்னும் ஒட்டிக் கொண்டு இருக்கிறது, அகம்து படேல் ஒரு எ.கா சொல்லலாம். பாருங்கள் சுட்டி

      The term Muslim Patel applies to Muslim converts from the Hindu Patidar caste[clarification needed] who are found mainly in the state of Gujarat in India. They are distinct from the Sunni Bohras, another Gujarati Muslim community that also uses the surname Patel. Common surnames include Gangat, Dalal, Desai and Munshi.[1]

      http://en.wikipedia.org/wiki/Gujarati_Muslim

      The term Gujarati Muslims is usually used to signify an Indian Muslim from the state of Gujarat in west India, who speaks the Gujarati Language as a mother-tongue ( first language ) and follows certain customs different from the rest of Indian Muslims. Gujarati Muslims are very prominent in Industry and medium-sized businesses, and there is a very large Gujarati Muslim community in Mumbai.[1] Many members of this community migrated to Pakistan in 1947 and have settled in Karachi and Sindh. There are also Gujarati Muslim communities settled in the United Kingdom, particularly in the towns of Leicester, Blackburn and Preston.[2] According to the 2001 Census of India, the Gujarati Muslim population was 4,592,854, which is 9.064% of the total population of the state. Most Gujarati Muslims have Gujarati as their mother tongue, but some communities such as the Ansari have Urdu as their mother tongue.[3] The Gujarati Muslims are further sub-divided into groups, such as the Chhipa and Memon, each with their own customs and traditions.[4] Famous Gujarati Muslims include Badruddin Tyabji, a Congress president and Mohammad Ali Jinnah, the founding father of Pakistan.

      சாதியில் பல கெடுதல்கள் இருப்பினும், இதில் ஒரு நன்மை மதப் பிளவைத் தவிர்க்கும். நம்ம பங்காளி பரம்பரை ஆளுப்பா, மூனு தலைமுறைக்கு முன் மதம் மாறினான், ஒத்துமையா இருப்போம் என்னும் எண்ணம் சகோதரத்துவம் வள்ர்க்கும்.

      இந்து ,கிறித்தவ ஒரே சாதியினரிடையே திருமணம் மிக இயல்பு. அப்படி ஒரெ சாதி ,வேவேறு மதம் குஜராத்திகளிடம் உண்டா எந்த் தெரியவில்லை!!

      சீக்கிரம் 2002 கலவரம் மறக்கப்பட்டு இணக்கம் வர இதுவும் ஒரு காரணம் என எண்ணுகிறேன்.பெரும்பான்மை குஜராத் முஸ்லிம்களின் தாய்மொழி குஜராத்தி, உருது அல்ல!!. இதுவும் ஒரு ஒற்றுமை ஏற்படும் காரணமே!!

      நமக்கு குஜராத்தி இனிப்பு வகைகள் பிடிக்கும்.ஹி ஹி


      எப்படியோ அனைவரும் நலமாக் இருந்தால் நன்மைதான்!!

      கோத்ரா சம்பவம் குஜராத்தி முஸ்லிம்கள் மறக்க விரும்பினால் நாம் சொல்வதற்கு எதுவும் இல்லை!!!

      நன்றி!!!

      Delete
  5. //இந்து ,கிறித்தவ ஒரே சாதியினரிடையே திருமணம் மிக இயல்பு. அப்படி ஒரெ சாதி ,வேவேறு மதம் குஜராத்திகளிடம் உண்டா எந்த் தெரியவில்லை!!//

    அப்படியான கலப்பு மணங்கள் குஜராத்திலும் உண்டு, என்னோடு பணி புரியும் ஒருவர் குஜராத்திய கிறித்தவர், ஆனால் அவரது தந்தை உட்பட பலர் இந்துக்கள் .. மதம் தாண்டிய கலப்பு மணம் இந்து - கிறித்தவர்களிடம் உண்டே.. இந்து - இஸ்லாமியரிடமும் உண்டு ஆனால் மிகவும் குறைவே .. !

    ReplyDelete
  6. ////முசுலிம்கள் முடிவை நிர்ணயிக்கும் 19 தொகுதிகளில் 12 தொகுதிகளை மோடி கைப்பற்றி உள்ளாராம்.////

    உள்ளாராம் .அதென்ன உள்ளாராம் .எந்த தொகுதிகள் சொல்லுங்கள்.
    // 9% முசுலிம்கள் கொண்ட குஜராத் போலிஸில் 10% மேற்பட்ட போலிஸ் முசுலிம்களாம்.// /

    களாம் .யார் சொன்னார்களாம் ?

    ///
    - In terms of literacy level, Muslims in Gujarat stood at 73.5 percent as compared to the national average of 59.1. While the figure for the urban males was 76, it was 81 for those living in rural areas as compared to the national average of 70 and 62 respectively in similar category. [The Sachar Committee report : Appendix table 4.1, Page No. 287]///
    படித்த குஜராத் முஸ்லிம்களை தேசிய சராசரியுடன் ஒப்பிடுவது சரியல்ல.குஜராத் சராசரியுடன் தான் ஒப்பிட வேண்டும் .அங்குள்ள மக்களுக்கு இணையாக வாய்ப்புகள் பெற்றுள்ளனார?என்பதை அறிய முடியும் .இங்கே மோடி பற்றி பேசுவதால் மோடியின் ஆட்சிக்கு முன்னர் முஸ்லிகள் நிலையுடன் இப்போதைய முஸ்லிம்கள் நிலையை ஒப்பிட வேண்டும் .அதுதான் சரியான் புள்ளிவிவரமாக இருக்கும் .

    குஜராத்தில் வாக்கு வங்கிகள் உருவாக்கப்பட்டுள்ளது 1997 இல் பிஜேபி 117 இடங்களும் 2002 இல் 124 இடங்களும் 2007 117 இடங்களும் இப்போது 115 இடங்களும் என்று குறிப்பிட்ட இடங்களை தொடர்ந்து கைப்பற்றி வருவதால் நிலையான் ஓட்டுக்களை மத சார்ந்த ஓட்டுக்களாக வைத்துள்ளது .
    குஜராத்தி முஸ்லிம்கள் கோத்ரா கலவரத்தை மறக்கவில்லை .மோடியின் ஆட்சியில் முன்னேற்றம் காணப்பட்டால் முன்பைவிட அதிகமான ஓட்டுக்களை பெற்றிருக்க வேண்டும் .ஆனால்,ஹிந்துக்கள் மோடிக்கு ஏற்படும் தோல்வி ஹிந்து மதத்திற்கு ஏற்படும் தோல்வியாக கருதுகின்றனர்.இதுதான் உண்மை

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      உங்கள் சில கேள்விகளுக்கு சகோ நந்தவனம் பதில் கொடுத்துவிட்டார்.
      ***
      ஆகவே நான் அடுத்த கேள்விகளுக்கு வருகிறேன்.
      1.//படித்த குஜராத் முஸ்லிம்களை தேசிய சராசரியுடன் ஒப்பிடுவது சரியல்ல.குஜராத் சராசரியுடன் தான் ஒப்பிட வேண்டும் .அங்குள்ள மக்களுக்கு இணையாக வாய்ப்புகள் பெற்றுள்ளனார?என்பதை அறிய முடியும் .இங்கே மோடி பற்றி பேசுவதால் மோடியின் ஆட்சிக்கு முன்னர் முஸ்லிகள் நிலையுடன் இப்போதைய முஸ்லிம்கள் நிலையை ஒப்பிட வேண்டும் .அதுதான் சரியான் புள்ளிவிவரமாக இருக்கும் //
      தேசிய சராசரி உடன் ஒப்பிடக்கூடாது என்றால் , அங்கே மூமின்களின் நிலை இந்திய சராசரி மூமினின் நிலையை விட நன்றாகவே இருக்கிறது என்பதை ஏற்கிறீர். மிக்க நன்றி!!
      **
      மோடிக்கு முந்தைய ஆட்சியில் மூமின்களில் நிலை தேசிய சராசரியை விட எப்படி இருந்தது என ஒப்பீடு செய்யும் தரவுகள் தாருங்கள்!!
      ***
      2.//குஜராத்தில் வாக்கு வங்கிகள் உருவாக்கப்பட்டுள்ளது 1997 இல் பிஜேபி 117 இடங்களும் 2002 இல் 124 இடங்களும் 2007 117 இடங்களும் இப்போது 115 இடங்களும் என்று குறிப்பிட்ட இடங்களை தொடர்ந்து கைப்பற்றி வருவதால் நிலையான் ஓட்டுக்களை மத சார்ந்த ஓட்டுக்களாக வைத்துள்ளது //

      இத்னை நானும் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறேன்.ஆனால் இது பெரும்பாலான மாநிலங்களின் நிலை இதுதான்!!.சில சாதிக,மத பிரிவுகள் குறிபிட்ட கட்சிகளுக்கு வாக்களித்தல் நடக்கும் நிகழ்வே!!. காங்கிரசு சாதிரீதியாக வைத்தத்தை மோடி மதரீதியாக மாற்றினார். ஆயினும் தலித்,ஆதிவாசிகளின் ஓட்டும் மோடிக்கு அதிக்ம கிடைக்காமல் இருக்கலாம் எனவே கருத்துகிறேன்.

      காங்கிரசு வெற்றி பெற்ற தொகுதிகளின் மேல ஓட்டு விவரங்களை அலசினால் புரியும்!!

      3,//குஜராத்தி முஸ்லிம்கள் கோத்ரா கலவரத்தை மறக்கவில்லை .மோடியின் ஆட்சியில் முன்னேற்றம் காணப்பட்டால் முன்பைவிட அதிகமான ஓட்டுக்களை பெற்றிருக்க வேண்டும் .ஆனால்,ஹிந்துக்கள் மோடிக்கு ஏற்படும் தோல்வி ஹிந்து மதத்திற்கு ஏற்படும் தோல்வியாக கருதுகின்றனர்.இதுதான் உண்மை.//

      முஸ்லிம்கள் முன்னேறுகின்றனரா என்பது வேறு. ஆதரிக்கின்றனரா என்பது வேறு.கோத்ரா என்பதற்கு நியாயம் சரியாக கிடைக்கவில்லை என்பதை ஏற்கிறேன். இனி அதற்கான வாய்ப்பும் குறைவு. இச்சூழலில் காங்கிரசை விட மோடி நம்பத் தகுந்த்வர் என எதிர்ப்பின் அள்வு குறைந்து விட்டதாகவே தோன்றுகிறது.

      மூமின்கள் மோடியை இப்போதும் எதிர்க்கிறார்கள் என்பதற்கு சான்றுகள் தரவும்.!!


      நன்றி!!!

      Delete
  7. சகோ இப்பூ,இதே பிடியும் சோர்ஸை

    [முசுலிம்கள் முடிவை நிர்ணயிக்கும் 19 தொகுதிகளில் 12 தொகுதிகளை மோடி கைப்பற்றி உள்ளாராம்.////

    உள்ளாராம் .அதென்ன உள்ளாராம் .எந்த தொகுதிகள் சொல்லுங்கள்.]

    http://indiatoday.intoday.in/story/narendra-modi-wins-over-muslim-electorate-in-gujarat/1/238743.html

    [// 9% முசுலிம்கள் கொண்ட குஜராத் போலிஸில் 10% மேற்பட்ட போலிஸ் முசுலிம்களாம்.// /

    களாம் .யார் சொன்னார்களாம் ?]

    http://articles.timesofindia.indiatimes.com/2012-11-12/india/35067790_1_muslim-cops-police-stations-sachar-committee

    படித்து விட்டு மோடி வாளுக என்பீரா?

    ReplyDelete
    Replies
    1. சகோ நந்தவனம்,
      அருமை. நாம் நம் சகோக்களின் மோடி குறித்த பார்வையை அறியவே,தவறான புரிதல்களை நீக்கவே முயல்கிறோம்.உங்களின் தரவுகளுக்கு நம்ம சகோ இப்பூ என்ன பதில் சொல்கிறார் என பார்ப்போம்!!

      நமக்கு வாய்த்த காஃபிர் சகோக்கள் மிகத் திறமையாகவர்கள். சான்று அளிப்பதில் காஃபிருக்கு மிகைத்தவன் யார்?
      நன்றி!!

      Delete
  8. சார்கோல் மாமு, எனக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் புரியல. ஒரு ஆட்சி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று தமிழ் நாட்டில் குந்திகிட்டு இருக்கிறவனுங்க நினைக்கிரானுங்கன்னு தெரியலை. 2002 ல் கலவரம் நடந்ததுக்கு பலியை மோடி மேல எல்லாருமே போடுறானுங்க. நம்ம மாநிலத்தில் என்ன யோக்யதையில் இருக்குது? சாராயத்தால் எத்தனை ஆயிரம் பேரு உசிரை விடுறான், அதெல்லாம் சாவு கணக்கிலேயே வராதா? அவன் குடும்பம் நடுத்தெருவில் நிற்காதா? இலங்கையில் மக்கள் கொள்ளப் பட்ட பொது தன்னுடைய பதவியை காப்பாற்றிக் கொள்ள வாயை பூட்டிக் கொண்டு இருந்தார்களே? அதை என்னவென்று சொல்வது? தடுக்க என்ன செய்தார்கள்? அதெல்லாம் கொலைக் கணக்கில் வராதா? அதையெல்லாம் ஒரு பொருட்டாவே யாரும் நினைக்கிறதா காணுமே. இதே இஸ்லாம் அன்பர்கள் இதையெல்லாம் செய்தவரை தலை மேல் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுகிறார்களே அது ஏன்? அந்த கொலை செய்தவனுக்கு இந்தியாவில் சிவப்புக் கம்பள வரவேற்ப்பு அளிக்கப் படுகிறதே, அதை என்னவென்று சொல்வீர்கள்? மோடிக்கு எதிர்க்கட்சியினரும் அந்த வகையில் கொலைகாரனுங்க தானே? இலங்கையில் ஒரு இனம் செத்தால் அது கொலை இல்லையா, தமிழகத்தில் சாராயத்தால் செத்தால் அது சாவே இல்லையா? நல்ல ஆட்சி செய்பவருக்கான அடையாளம் மக்களை ஒழுக்கமான வழியில் நடத்திச் செல்வது தான். சாராயம் இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி நடத்திக் காட்ட முடிந்ததா? இலவசம் காட்டி மக்களிடம் ஒட்டு வாங்க முடிந்ததா? போகும்போது ஒரு லட்சம் கோடி பற்றாக்குரையைத்தான் கான்பித்துவிட்டுச் சென்றார்கள், இவர்கள் தனிப்பட்ட முறையில் உலகின் முன்னணி பணக்காரனாகி விட்டார்கள் . இதெல்லாம் இஸ்லாம் நண்பர்கள் கண்களுக்கு தெரிவதே இல்லையே? அவர்கள் தளங்களில் இந்த மாதிரி மோசடிகளை கொண்டாடுவது ஏன்? சாராயக்கடைகளை ஒழித்து, இலவசத்தை காட்டி மக்களை மோசம் செய்யாமல், மாநில பட்ஜெட்டில் ஒன்றறை லட்சம் கோடி ரூபாய் மிச்சம் காண்பித்த முதல்வர், மஞ்சள் துண்டு போட்டு, சாராயத்தை மக்கள் வாயில் ஊற்றி, பல பெண்கள் தாலியை அறுத்து, இலங்கையில் கொத்து கொத்தாக ஆயிரக்கணக்கில் கொள்ளப் பட்டபோது வாயை மூடிக் கொண்டு இருந்து விட்டு, மாநிலத்தை ஒரு லட்சம் கோடி கடனில் விட்டு விட்டு தன நிதியை பெருக்கிய ஆளை விட ஆயிரம் மடங்கு மேலானவர். பாகிஸ்தான் தீவிரவாதிகளை உள்ளே விடாத படியால் மோடியை இங்கேயுள்ள இஸ்லாம் அன்பர்கள் மோசமாக விமர்சிப்பது மிகவும் வருத்தத்துக்குரியது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க தாசு மாப்ளே,
      என்னது நம்ம இருவரும் ஏறத்தாழ ஒரே பார்வை பார்க்கிறோம். ஒரே கருத்து!!

      திரு மோடி & கோத்ரா என்பது நீதிம்னற விடயம் அதைத் தவிர்த்து, 2002 க்கு பிறகு அவ்ருடைய ஆட்சி,சிறுபானமையினார் முன்னேற்றம், பிற மநிலங்களை விட நன்றாக இருப்பதாகவே பல்ரும் சொல்வது வியப்பாக உள்ளது.

      இது உண்மையாக இருக்கும் வாய்ப்பே அதிகம். எனினும் நம் சகோக்களின் புரிதல்களை அறிய முயற்சிக்கிறோம்.

      நாம் மாற்றுக் கருத்தாளர்களை அதிகம் விரும்புகிறோம்.

      உம்மை நம்க்குப் மிகவும் பிடிக்கும் இல்லையா!!!.

      கூலாக அறிந்த விடயங்களை கோபம் கொள்ளாமல் சொல்லுங்க மாப்ளே!!

      நம் சகோக்களை நான் நன்கு அறிவேன்!!

      ஆயினும் உம்ம கூட முதன் முதலில் ஒத்துப் போக ஒரு மாதிரியா இருக்குதுங்கோ!!

      நன்றி!!

      Delete
  9. மோடியின் ஹேட் டிரிக் எதிர்பார்த்த ஒன்றுதான் என்ற போதிலும் பிஜேபியில் பிரதமர் நாற்காலி கனவில் பலர் இருந்தாலும் கூட மோடி முன்னிலை வகிப்பதற்கு இப்போதைய வெற்றி வழி வகுத்திருக்கிறதெனலாம்.காங்கிரஸ் இப்பொழுது நொண்டி வாத்து மாதிரி 2014 வரை இழுத்துட்டுப் போனால் போதுமென்ற நிலையில்தான் இருக்கிற்து.வட மாநிலங்களின் தொடர் தேர்தல் தோல்விகள் ராகுல் வருங்கால பிரதமர் என்ற பிம்பத்தையும் பின் தள்ளியிருக்கிறது.

    கோத்ரா கலவரம் மோடியின் அரசியலில் கறுப்பு புள்ளியென்ற போதிலும் கடந்த கால தவறுகளை மன்னிக்க வேண்டுகோள் விடுப்பதும் கோத்ரா தவிர மோடியை குற்றம் சாட்டும் வேறு குற்ற்ங்களும் இல்லாமல் போவதால் கசப்புக்களை கடந்து செல்வதுதான் வருங்கால இந்தியாவிற்கு நலன் பயக்கும்.

    ReplyDelete
  10. முக்கியமான ஒன்றை குறிப்பிட மறந்து விட்டேன்.குஜராத்தி இனிப்புக்களை விட குஜ்ஜு பெண்களின் நடனம் ரொம்பவே இனிப்பு:)

    ReplyDelete
    Replies
    1. சகோ இராசநட,
      நீங்கள் சொல்வதுதான் நம் கருத்தும். என்றாலும் மாற்றுக் கருத்துக்களையும் பதிவு செய்ய விரும்புகிறோம்.

      கோத்ரா நீங்கலாக மோடி மீதான விமர்சனங்கள்[ஊழல்,பாரபட்சம்] கடந்த 10 வருடங்களில் ஏன் எதுவும் இல்லை என்பதே நம் கேள்வி!!!


      நன்றி!!!

      Delete
  11. இனி ராஜபக்சேவையும் மன்னித்துவிடலாமா....

    ReplyDelete
    Replies
    1. சகோ அபுபக்கர் வாங்க,
      திரு இராஜபக்சேவின் ஆட்சியில் ஈழம் பகுதி தமிழர்கள் நன்றாக இருந்து அவர்கள் மன்னித்தால், அதனை மறுக்க நாம் யார்?

      ஒரு மாநில அரசு, சிங்களருக்கு நிகரான உரிமைகள் கொடுத்தால் நிச்சயம் அனைத்தும் மறக்கப்பட்டு விடும்.செய்தால் நன்மையே!!

      காலம் அனைத்தும் மறக்க வைக்கும்!!

      நன்றி!!

      Delete
    2. ஓட்டுக்கள் மன்னிப்பின் அடையாளமா?

      Delete
    3. சகோ அபுபக்கர்,
      பெரும்பான்மை முஸ்லிம்கள் மோடிக்கு ஓட்டு அளித்து இருக்கும் வாய்ப்பு குறைவே. ஒருவேளை அளித்து இருந்தால் அதுவும் மன்னிப்பு அல்ல மறந்து கடந்து செல்லுதலைக் குறிக்கும்!!!

      நாம் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு, ஒரு பிரதமர் வேட்பாளர் ஆகும் வாய்ப்புள்ள ஒரு அரசியல் தலைவரை விமர்சிக்கிறோம். குஜராத் முஸ்லிம்கள் மோடி மீது கொண்ட கருத்துகள் என்ன என்பதை சரியாக‌ வெளிக்கொண்டு வருவது யாருடைய பொறுப்பு?

      இதுகுறித்து சிறுபான்மை அரசியல் தலைகள் முயற்சி எடுக்க்லாம்.
      நான் என்ன்வோ மோடிக்கு பிரச்சாரம் செய்ய இப்பதிவினை எழுத வில்லை. இது குறித்த உங்களின் விம‌ர்சனங்களை பதிவு செய்வதே நம் நோக்கம். மோடி குஜராத்தில் வெற்றி பெற்றதன் காரணம் , போட்டித் தலைவன் இல்லை. தெசிய அள்விலும் அதே சூழல் நிலவுகிறது.

      ஆகவே மோடி நல்லாட்சி தருவார் என்னும் கருத்து நிச்சயம் எடுபடும்!!

      ஆகவே விமர்சன‌ங்களை நல்லாட்சி, பாரபட்சமின்மை என்பதன் மேல் ஆக்கபூர்வமாக காட்டுங்கள்!!


      நன்றி!!

      Delete
  12. //கோத்ரா சம்பவம் குஜராத்தி முஸ்லிம்கள் மறக்க விரும்பினால் நாம் சொல்வதற்கு எதுவும் இல்லை//

    அப்போ டெல்லி மாணவியை கற்பளிதவர்களை அந்த மாணவி மன்னித்து விட்டால் நாம் எழுதிய பதிவுகளை அழித்து விட்டு 'இதுல நான் எதுவும் சொல்லுவதற்கில்லை' என்று சொல்லிடலாமா?

    ReplyDelete
    Replies
    1. சகோ ரகுமான்,
      கோத்ரா நடந்த பொது இருந்த சூழலும், இப்போதைய பேருந்து நிகழ்வையும் ஒப்பிடலாம். சரியான ஒப்பீடுதான். நம் நாட்டு சட்டங்கள் பாரபட்சம் காட்டுபவை என்பதால் பல சீர்த்திருத்தம் தேவை.

      கோத்ரா சம்பவத்தில் மோடி குற்ற‌வாளி என தீர்ப்பு வந்தால் ஏற்போம்.ஆனால் அதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு.கோத்ராவிற்கு பிற மத பாரபட்சம் இருக்கிறதா எனவே அறிய விரும்புகிறேன்.

      பேருந்து விவகாரம் போல் இன்னும் சில நிகழ்ந்தும் அது பலருக்கு தெரியாமலேயே போய்விட்டன. இன்னும் நடக்கிறது,நடக்கும்.ஆகவே டில்லி விடயத்தில் ஒரு தீர்வு வந்து கடந்த கால குற்ரங்களையும் தவிர்க்காதா என்பதுதான்.

      பலரும் பேருந்து குற்றவாளிகளுக்கு மரணம், காயடிப்பு.. என எது எதுவோ கூறுகிறோம் ஆனால் எல்லாமல் சட்டம் அனுமதிக்கும் வகையில் மட்டுமே சகோ!!

      நன்றி!!

      Delete
  13. குஜராத்தில் பாரபட்சமான வளர்ச்சியை காண விரும்பினால் நீங்கள் கோத்ராவிற்கு செல்லலாம்.

    ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் உயிரை பலிவாங்கிய ஹிந்துத்துவா பயங்கரவாதம் நிகழ்த்திக்காட்டிய இந்திய வரலாறு காணாத இனப்படுகொலைக்கு துவக்கம் குறித்த மண்ணில் வளர்ச்சியில் கூட பாரபட்சம் காட்டப்படுகிறது.

    சாலைகள் உடைந்து, கழிவு நீர் நிரம்பி, குடிநீர் கூட இல்லாத பகுதியாக இருந்தால் நீங்கள் உறுதியாக நம்பலாம்-அது முஸ்லிம்கள் வசிக்கும் பகுதி என்று.

    கோத்ரா ரெயில் தீ விபத்து சம்பவத்திற்கு பிறகு வளர்ச்சி என்பதே முஸ்லிம்கள் வாழும் பகுதிக்கு எட்டவேயில்லை. மின்சாரம் மட்டுமே இங்குள்ள ஒரே ஆடம்பரம்.

    தெருவிளக்கு, கழிப்பறை, மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. முஸ்லிம்கள் வாழும் பகுதியில் உள்ள சாலைகள் உடைந்து சிதறிப்போய் கிடக்கின்றன. மழைக்காலங்களில் போக்குவரத்து முடங்கும். மாற்று சாலைக்கான கோரிக்கையும் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.


    ஆனால், ஹிந்துக்கள் வாழும் பகுதிகளில் நிலைமையே வேறு. நல்ல சாலை, குடிநீர், பள்ளிக்கூடம், அரசு திட்டங்கள் ஆகியவை அனைத்தும் ஹிந்துக்கள் வாழும் பகுதிகளுக்கு மட்டுமே. 2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த முஸ்லிம் இனப்படுகொலைக்கு பிறகு இங்கு முஸ்லிம்களும், ஹிந்துக்களும் தனித்தனியாக வாழ்கின்றார்கள். இந்தியாவுக்கும்-பாகிஸ்தானுக்கும் இடையேயான எல்லையான வாகா பார்டர் போல மூன்று பிரதேசங்கள் கோத்ரா நகரில் உள்ளன. முஸ்லிம் பகுதிக்கு அருகில் உள்ள ஹிந்து காலனியின் கேட் காலை ஆறரை மணிக்கு திறக்கும். இரவு எட்டரை மணிக்கு மூடப்படும். எல்லைகளில் இப்பொழுதும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    கோத்ரா ரெயில்வே நிலையத்திற்கு அருகே வாகனங்களை கூட முஸ்லிம்களும், ஹிந்துக்களும் தனித் தனியே 2 இடங்களில் பார்க் செய்கின்றனர்.

    முஸ்லிம்கள் வாழும் போலன் பஜார், ஓல்ட் வெஜல்பூர் ரோடு, ஓஹ்வாட், கோண்டா, குயா ஆகியன ஹிந்துக்கள் வாழும் பகுதிகளை விட வளர்ச்சியில் மிகவும் பின் தங்கியுள்ளன. ஹிந்துக்கள் வாழும் பகுதிகளான கோத்ரா கிராமீயபகுதி, லுனாவாலா சாலை, தாஹோத் சாலை, பரோலி சாலை ஆகிய இடங்களில் பயணிக்கும் பொழுது மாற்றத்தை நேரடியாக காண முடியும். தார் போடப்பட்டு சீராக்கப்பட்ட சாலைகளும், அடிப்படை வசதிகளும் இப்பகுதிகளில் ஏராளம். அரசு திட்டங்களுடன், பா.ஜ.க எம்.பியின் வளர்ச்சி நிதியும் இப்பகுதிகளுக்கு மட்டுமே செலவிடப்படுகின்றன.

    முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் புதிய வீடுகளை கட்டவோ, கட்டிடங்களை கட்டவோ நகராட்சி அனுமதி வழங்குவதில்லை. அனுமதி கிடைக்க வேண்டுமென்றால் பல்வேறு அரசு அலுவலகங்களின் படிகளில் ஏறி இறங்க வேண்டும். ஆனால்,ஹிந்துக்கள் பகுதிகளில் கட்டிடங்களை கட்ட எவ்வித தடைகளும் இல்லை. விண்ணப்பித்தால் உடனே அனுமதி கிடைத்துவிடும். இனப்படுகொலையால் வாழ்விழந்த மக்களுக்கு வளர்ச்சியை கூட கண்ணில் காண்பிக்காமல் துரோகமிழைத்து வருகிறது மோடி அரசு.

    source:thoothuonline.

    ReplyDelete
    Replies
    1. சகோ உதயம்,
      நீங்கள் சொல்லும் தகவல்கள் எந்த முக்கிய ஊடகங்களிலும் வரவில்லை. சுட்டிகள் தாருங்கள்!!
      ***
      வேலைவாய்ப்பு,கல்வியில் முஸ்லிம்களின் நிலை தேசிய சராசரியை விட அதிக்மாக இருப்பது குறித்தும் கருத்து சொல்லுங்கள் சகோ!!

      நன்றி!!

      Delete
    2. சார்வாகன் அவசரத்தில் உடனே லிங்க்கை தேட முடியவில்லை. அதனால் செய்தியை மட்டும் வெட்டி ஒட்டினேன். இப்போது உங்களுக்காக தேடி கொடுத்திருக்கிறேன். வாசித்துக்கொள்ளவும்.

      http://www.thoothuonline.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/

      http://www.hindustantimes.com/Specials/Coverage/Gujarat-Assembly-Elections-2012/Chunk-HT-UI-GujaratAssemblyElections2012-BlogPostsRaheelDhattiwala/Hindus-Muslims-divided-citizens-in-Vibrant-Gujarat/SP-Article10-949761.aspx

      http://www.himalmag.com/component/content/article/1566-.html

      Delete
    3. கோத்ராவை எளிதில் கடந்து விட சொல்வது இந்திய மதசார்பின்மைக்கு செய்யும் துரோகம். குஜராத் என்பது இந்துத்துவாவின் சோதனை கூடம். இந்துத்துவம் என்ற இந்திய சூழ்நிலைக்கு ஒவ்வாத ஒரு சிந்தனைவாதம் அதை பரிட்சீத்துப் பார்த்த இடம் தான் குஜராத். வெற்றி இந்துத்துவாவினருக்கு;தோல்வி இந்திய மதசார்பின்மைக்கு.

      Delete
    4. இந்த லிங்க் கையும் வாசிக்கவும்.

      http://news.bbc.co.uk/2/hi/south_asia/1977246.stm

      Delete
    5. இந்த லிங்க் கையும் வாசிக்கவும்.

      http://twocircles.net/2012dec08/muslims_are_most_deprived_social_group_gujarat_study.html

      http://infochangeindia.org/human-rights/features/no-peace-without-justice.html

      Delete
  14. புரிந்ததா பகுத்தறிவுவாதிகளே! சகோ.கள் 6ம் நூற்றாண்டை ஆதரிக்கும் மர்மம். நிகழ்காலத்திலேயே தெரிந்த ஒன்றை சந்தேகக் குறிகளினால் அலட்சியப்படுத்தும் போது.......... பகுத்தறிவிற்கும் 6ன் மூடநம்பிக்கைக்கும் ஆன இடைவெளி சிறு நூலிழைதான்.

    ReplyDelete
    Replies
    1. சகோ அபுபக்கர்,
      கோத்ரா போன்ற ஒரு நிகழ்வு எதிர்காலத்தில் நிகழவே கூடாது. ஆயினும் எதார்த்த சூழல் கண்டு, அனைவரும் சிறப்பாக வாழ முயல்வதே சிறப்பு.

      கோத்ரா என்பது நீதிமன்ற விடயம்.அதன் தீர்ப்பை ஏற்பதே முறை. கோத்ரா தவிர்த்து மோடி மீது என்ன ஆட்சி சார்ந்து விமர்சனம் என்ன என்பதையே அறிய விரும்புகிறோம்.

      இக்கேள்வி மிக முக்கியம் வாய்ந்தது.

      நன்றி!!

      Delete
    2. //காலம் அனைத்தும் மறக்க வைக்கும்!!//

      மறக்கலாம். ஆனால் RSSன் கையில் இருக்கும் பட்டியல் மிகக் கொடூரமானதே.

      Delete
    3. சகோ அபுபக்கர்,
      நீங்கள் சொல்வது உண்மை என வைத்துக் கொள்வோம். அச்சதியை முறியடிக்க என்ன செய்ய வேண்டும்?.ஊழலற்ற, ஜனநாயக்,மதசார்பற்ற த்லைவர்களை ஆதரிக்க வேண்டும்!!

      ஏன் குஜராத்தில் ஒருவர் கூட மோடிக்கு மாற்று இல்லையா? தேசிய அளவில் மோடிக்கு மாற்று யார்?

      மாற்று அரசியல் வைக்காமல் மோடியைத் தடுக்க முடியாது!!.

      இந்த திசையில் யோசியுங்கள்.

      மோடி நல்லாட்சி ஆனால் 2002 கோத்ரா வன்முறை மட்டுமே

      மாற்று ஆட்கள் ஊழல்,மோசமான ஆட்சி எனில் பெரும்பானமை மக்கள் யாரை விரும்புவர்?

      எதார்த்த சூழலை புரியுங்கள், ஆக்கபூர்வ சிறுபான்மை அரசியலை, ஜனநாயக,மத சார்பற்ற,ஊழல் அற்ற த்லைவர்களை ஆதரியுங்கள்!!

      நன்றி!!

      Delete
    4. ஜெயாவிற்கு மாற்று கருணா விற்கு மாற்று ஜெயா விற்கு மாற்று இப்படித்தான் சில காலங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன என்பதற்காக இருவருமே நல்ல ஆட்சியாளர்கள் ஆகிவிடுவார்களா?

      பகுத்தறிவு பேசும் நாமே இப்படி சிந்தனை செய்கிறோம் என்றால் மூடநம்பிக்கையில் இருக்கும் நம் மக்கள் வேறு எப்படித்தான் யோசிப்பார்கள்?

      Delete
    5. சகோ அபுபக்கர்,
      மிக்க நன்றி நான் சொல்ல் வந்ததைப் புரிந்து கொண்டீர்கள். கோத்ரா சம்பவம் மட்டுமே மோடியை விமர்சிக்க போதுமானது அல்ல.

      மோடி ஒரு நல்ல ஆட்சியாளர் என்ற பிரச்சாரம் அவருக்கு இணையான மாற்றுத் தலைவன் இல்லை என்னும் சூழல் வந்தால் அவருக்கு இந்திய ஆட்சி கிட்டும் என்பதை உணருங்கள்!!

      இதுதான் எதார்த்த சூழல்.

      நன்றி!!

      Delete
    6. பிரச்சாரத்தில் நீங்களும் இணைந்து கொண்டீர்களோ :))

      Delete
    7. சகோ அபுபக்கர் மோடியின் குஜராத் வெற்றி ஏன் என்பதை பாரபட்சம் இன்றி அலச வேன்டுமா ? இல்லையா?

      மோடி ஒரு மதவாதி,குஜராத்திகள் அனைவரும் முஸ்லிம் எதிர்ப்பாளர்கள் என்னும் பார்வை ஏதேனும் தீர்வு தருமா?

      1.கோத்ரா நீங்கலாக நல்ல்வர் ஒரு பார்வை

      2.மோடி ஒரு ஏமாற்றுப் பேர்வழி,நல்லாட்சி இல்லை என தரவுகளின் மூலம் நிரூபிப்போம் இன்னொரு பார்வை

      அதுவும் மோடி என்பவர் பிரதம வேட்பாளர் என்னும் போது,அதற்கான வாய்ப்பு இருப்பதை மறுப்பது தீக்கோழி பயந்து மண்ணுக்குள் தலையை விடுவது போன்றது.

      நம் ஊரில் தேர்தலில் அம்மா இல்லை அய்யா, எனினும், தேர்தலுக்கு பிறகு ஆதரவு மாறலாம் என்பதே வரலாறு!!!

      ஆகவே வழக்கமான கேள்வி!!

      சிந்திக்க மாட்டீர்களா!!

      நன்றி!!

      Delete
  15. http://www.vinavu.com/2012/10/31/gujarat-2002-modi-misdeeds/

    படித்துப் பாருங்களேன்

    ReplyDelete
    Replies
    1. சகோ அபுப்க்கர் நம்க்கு பொது உடமைத் தத்துவம் பிடிக்கும் என்றாலும், அது நடைமுறைவாழ்வுக்கு எவ்வள்வு தூரம் ஒத்துவரும் என்பதில் ஐயம் ஏற்பட்டு விட்டது.
      வினவில் சில கருத்துகளில் உடன்பாடு உண்டு என்றாலும்,

      ஆகவே வினவின் ஜனநாயக்ம் மீதான பார்வை, புரட்சி ,தேர்தல் புறக்கணிப்பு என்பதில் நம்பிக்கை இல்லை!!!.

      எனினும் அவர்களின் பார்வையை பெரும்பானமை மக்கள் ஏற்பாரா என்பதே கேள்வி

      ஆகவே வினவின் கருத்துக்களை பலரை ஏற்கவைக்க முடியும் என நம்புகிறீர்களா??
      இந்திய வரலாற்றில் 2014 தேர்தல் மிக முக்கியம்!!

      நன்றி!!!

      Delete
    2. அவசரம் வேண்டாம். அந்த கட்டுரை வினவு எழுதியதல்ல சார்வாகன். எழுதியவர் பெயரும் அதை வெளியிட்ட பத்திரிகை பெயரும் கட்டுரைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

      Delete
  16. \\www.vinavu.com\\ இன்னுமாடா இந்த ஊரு நம்மள நம்புது..........!!

    ReplyDelete
  17. //மாற்று அரசியல் வைக்காமல் மோடியைத் தடுக்க முடியாது!!.//


    ஹா!ஹா! முகங்கள்தான் மாற்று அரசியலா!

    ReplyDelete
  18. ஜெயதேவ்,

    இன்னமும் நாம் கடவுளை நம்பும்போது...........

    ReplyDelete
  19. ஆத்தா நான் பிரபல் பதிவர்[பாஸ்] ஆயிட்டேன்!!
    சகோ அதிரை இக்பாலின் விமர்சனங்களை த்லை வணங்கி ஏற்கிறேன். மாற்றுக் கருத்துக்களை நமது தளத்தில் வெளியிடுவோம். என்பட்தல் சகோ அதிரை இக்பாலின் கருத்தினை அப்படியே வெட்டி ஒட்டுகிறேன்.
    நன்றி சகோ அதிரை இக்பால்!!

    http://samuthayaarangam.blogspot.com/2012/12/blog-post_21.html

    பிரபல(?!) பதிவர் தனது கட்டுரையில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார் :

    குஜராத்தில் முஸ்லிம்கள் முன்னேறுகிறார்கள் என்பதை அவரது எதிரிகள் கூட மறுத்ததில்லை .

    இதுதான் பாசிசத்தின் அடிநாதம் இல்லாத ஒன்றை இப்படித்தான் இருப்பதுபோல உறுதியாக கூறுவார்கள். ஆனால் நடந்ததை ...

    அவ்வாறு கலவரம் நடந்தது உண்மைதான் . ஆனால் மோடிக்கு இதில் பங்குண்டு என சொல்லப்படுகிறது . இங்கே வார்த்தையை கவனியுங்கள் சொல்லப்படுகிறதாம் !.



    அதாவது அவருக்கு உள்ளுக்குள் முஸ்லிம்களும் தலித் மக்களும் கொல்லப்படுவதும், மோடி வெற்றி பெற்றது அவருக்கு அளவுக்கு அதிகமான மகிழ்ச்சியை ஏற்படுத்துயிருக்கிறது. அது இயல்பாகவே வெளிப்பட்டிருக்கிறது.

    இதற்கு ஜால்ரா தட்டும் இன்னொரு போலி நாத்திக முக்காடு இப்படி சொல்கிறது...

    அவர் இந்த வெற்றியை பெற்றிருப்பதால் இது மதவாதத்தினால் இல்லையாம்.

    இந்த ஜால்ரா தனது இன்னொரு கட்டுரையில் சொல்கிறான் ஹமாசைப்பற்றி ...

    இவர்கள் மக்களால் தேர்ந்தேடுக்க்பட்டிருந்தாலும் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிடவேண்டுமாம் .

    அதாவது மோடி வெற்றிபெற்றதால் அவர் மதவாதி இல்லை . ஹமாஸ் வெற்றிப்பெற்றாலும் அவர்கள் மதவாதிகளே எவ்வளவு பெரிய கண்டுப்பிடிப்பு.

    நாம் உட்பட பலர் அந்த மருத்துவ மாணவி கற்பழிப்பு பற்றி எழுதும்போது சில கேள்விகளை எழுப்பினோம்.

    அது

    குஜராத்தில் முஸ்லிம் பெண்களும் தலித் பெண்களும் கற்பழிகப்ப்படும்போது இவர்களெல்லாம் எங்கு போயிருந்தார்கள் என்றும்

    கடந்த மாதங்களில் தலித் பெண்கள் தொடர்ந்து கூட்டாக கற்பழிக்கப்ப்படும்போது என்ன செய்துகொண்டிருந்தார்கள் எனவும் கேள்விகளை எழுப்பினோம் .

    அதற்கு அந்த பிரபல பதிவர் (?!) இப்படி கூறுகிறார்.

    அப்படியெல்லாம் கற்பழிப்புகளை பிரிகப்படாதாம் . அப்படி கேள்வி எழுப்பினால் அவன் மதவாதியாம் .

    ஆனால் சுவனப்பிரியன் அவர்கள் தனது தளத்தில் அந்த கற்பழிப்புகளை கண்டித்து எழுதும்போது இந்த பிரபல(?!) பதிவர்ர்ர்ர்ர்ர் அதை கிண்டல் செய்தான்.

    ReplyDelete
  20. மாற்றுக் கருத்துக்களை அடிப்படை மரியாதை கூட இல்லாமல் முன்வைத்து அவன் இவன் என ஏக வசனம் பேசும் கம்மூனாட்டி பையனுக்கு இவ்வளவு மரியாதை தேவையா சகோ?

    ReplyDelete
    Replies
    1. சகோ நந்தவனம்,
      அவர்களுக்கு இதுபற்றி பேசியே ஆகவேண்டும் என்பது புரியவில்லை. நம்மை குறை சொல்வதால் ஒன்றும் குறைந்து போக மாட்டோம்.

      அனைவருக்கும் ஒரு பிரச்சினை குறித்த பார்வைகளை பதிவு செய்கிறோம். காலக் கடிகாரத்தில் நாம் ஒரு கருவி.

      இன்னொரு மதம் சார் பிரச்சினை வரக்கூடாது என்பதே நம் ஆசை. இது சும்மா வராது. பரஸ்பர விட்டுக் கொடுத்தல்,மன்னித்தல்,மறத்தல் அவசியம் என்பது புரிய வேண்டும்.

      நன்றி!!

      Delete
  21. சகோ அதிரை இக்பால்,
    உங்களின் பதிவுக்கு வரிக்கு வரி பதில் கூறுகிறேன். நம்க்கு ஆகபூர்வமான விவாதம் பிடிக்கும். உணர்ச்சி வசப்படுவதை தவிர்த்தால் மட்டுமெ எஅதார்த்த சூழல் பிடிபடும்.

    என்ன சூழல்?
    இந்தியா 120 கோடி பல் இன,மத,மொழி மக்கள் வாழும் ஜனநாயக,மதச் சார்பற்ற நாடு.இந்த நாட்டில் அரசியல் அமைப்பு சட்டம் அனைவருக்கும் சம உரிமை தருகிறது. எனினும் சட்டங்களை பாரப்ட்சமின்றி அமல்படுத்த எபோதும் முடிவது இல்லை. இதற்கு மக்களின் அப்ங்களிப்பும் வேண்டும். சில சிக்கல்களைத் தீர்க்க சட்ட தீர்த்திருத்தமும் தேவை.

    நமது கண்ணோட்டங்களில் பிரச்சினைகளுக்கு நாட்டின் அரசியல் அமைப்பு சட்டமே தீர்வு என்ற அடிப்படையில் மட்டுமே அணுகுகிறோம்.
    எந்த ஒரு பிரச்சினைக்கும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உடபட்டே தீர்வு காண்போம் என்பதே ஒரு சராசரிக் குடிமகனின் கருத்தாக இருக்க வேண்டும்.

    ***
    1./குஜராத்தில் முஸ்லிம்கள் முன்னேறுகிறார்கள் என்பதை அவரது எதிரிகள் கூட மறுத்ததில்லை .

    இதுதான் பாசிசத்தின் அடிநாதம் இல்லாத ஒன்றை இப்படித்தான் இருப்பதுபோல உறுதியாக கூறுவார்கள். ஆனால் நடந்ததை ..//
    அப்படி தேசிய சராசரியைவிட நிலை மோசமாக இருக்கிறது என்பதை எடுத்து சான்றுகளுடன் சொல்லுங்கள்!!. மோடியின் எதிரிகள் எனில் காங்கிரசு கட்சியை மட்டுமே தேர்தல் பிரச்சாரம் சார்ந்து குறிப்பிட்டேன்!!
    **
    2//அவ்வாறு கலவரம் நடந்தது உண்மைதான் . ஆனால் மோடிக்கு இதில் பங்குண்டு என சொல்லப்படுகிறது . இங்கே வார்த்தையை கவனியுங்கள் சொல்லப்படுகிறதாம் !.//
    இது நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆனது!! என் கருத்து அல்ல
    http://www.thehindu.com/news/national/sit-finds-no-proof-against-modi-says-court/article3300175.ece
    he Ahmedabad Metropolitan Magistrate on Tuesday declared that the Supreme Court-appointed Special Investigation Team had not found any evidence for prosecuting Gujarat Chief Minister Narendra Modi and top bureaucrats and police officers and recommended that the investigation in the 2002 Gulberg Society massacre case be closed.
    3. //அதாவது அவருக்கு உள்ளுக்குள் முஸ்லிம்களும் தலித் மக்களும் கொல்லப்படுவதும், மோடி வெற்றி பெற்றது அவருக்கு அளவுக்கு அதிகமான மகிழ்ச்சியை ஏற்படுத்துயிருக்கிறது. அது இயல்பாகவே வெளிப்பட்டிருக்கிறது.//
    அப்படி யாருமே நான் உட்ப்ட நினைக மாட்டார்கள். மனித உயிர் மதிப்பற்றது.

    அக்கலவரத்தில் இறந்த தலித்களையும் கொன்றவர்கள் இந்துமதவாதிகள் என்னும் உங்கள் கருத்து ஆதாரம் அற்றது. கலவரத்தில் இருபுறமும் ஆட்கள் இறந்தனர்.
    http://en.wikipedia.org/wiki/2002_Gujarat_violence
    Hindu pilgrims, including 25 women and 15 children, returning from Ayodhya, were killed in the attack. This in turn prompted retaliatory attacks against Muslims and general communal riots on a large scale across the state, in which 790 Muslims and 254 Hindus were ultimately killed and 223 more people were reported missing.[1][5] 523 places of worship were damaged: 298 dargahs, 205 mosques, 17 temples, and 3 churches. Muslim-owned businesses suffered the bulk of the damage. 61,000 Muslims and 10,000 Hindus fled their homes. Preventive arrests of 17,947 Hindus and 3,616 Muslims were made. In total 27,901 Hindus and 7,651 Muslims were arrested.[6][7][8]
    (contd)

    ReplyDelete
    Replies
    1. 3.//இதற்கு ஜால்ரா தட்டும் இன்னொரு போலி நாத்திக முக்காடு இப்படி சொல்கிறது...

      அவர் இந்த வெற்றியை பெற்றிருப்பதால் இது மதவாதத்தினால் இல்லையாம்.//

      மதவாதம் 2002ன் பிறகு என்ன? என்பதே நம் கேள்வி.

      மத்வாதம் மட்டுமே வெற்றி தராது!!. நல்ல ஆட்சி என்பதை தரவுகள் மூலம் மறுக்கவே வேண்டுகிறேன். அப்படி செய்தால் ஆக்கபூர்வமான எதிர்ப்பு என ஏற்பேன்.

      செய்யுங்கள் சகோ!!
      **
      //இந்த ஜால்ரா தனது இன்னொரு கட்டுரையில் சொல்கிறான் ஹமாசைப்பற்றி ...

      இவர்கள் மக்களால் தேர்ந்தேடுக்க்பட்டிருந்தாலும் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிடவேண்டுமாம் .

      அதாவது மோடி வெற்றிபெற்றதால் அவர் மதவாதி இல்லை . ஹமாஸ் வெற்றிப்பெற்றாலும் அவர்கள் மதவாதிகளே எவ்வளவு பெரிய கண்டுப்பிடிப்பு.//

      சகோ நீங்க ஹ(த)மாஸ் ஆத்ரவாளர் என அறிவேன். ஹமாஸ் இஸ்ரேல் மீது ராக்கெட் விடாமல் இருந்தால் பிரசினை இல்லை. அதே போல் திரு மோடி நம் நாட்டு சட்டங்களுக்கு உடபட்டு , உள் நாட்டில் மட்டும் செயல் ஆற்றும் வரை பிரச்சினை வராது!!
      **
      //நாம் உட்பட பலர் அந்த மருத்துவ மாணவி கற்பழிப்பு பற்றி எழுதும்போது சில கேள்விகளை எழுப்பினோம்.

      அது

      குஜராத்தில் முஸ்லிம் பெண்களும் தலித் பெண்களும் கற்பழிகப்ப்படும்போது இவர்களெல்லாம் எங்கு போயிருந்தார்கள் என்றும்

      கடந்த மாதங்களில் தலித் பெண்கள் தொடர்ந்து கூட்டாக கற்பழிக்கப்ப்படும்போது என்ன செய்துகொண்டிருந்தார்கள் எனவும் கேள்விகளை எழுப்பினோம் .

      அதற்கு அந்த பிரபல பதிவர் (?!) இப்படி கூறுகிறார்.

      அப்படியெல்லாம் கற்பழிப்புகளை பிரிகப்படாதாம் . அப்படி கேள்வி எழுப்பினால் அவன் மதவாதியாம் . //

      பெண்களின் மீதான குற்றங்களுக்கு விரைவில் தண்டனை பாரபட்சமின்றி அளிக்கப் படவேண்டும்.
      தேவையான சட்ட சீர்த்திருத்தமும் வேண்டும் என்பதே நம் நிலைப்பாடு. எனினும் நீதிம்னற தீர்ப்பே இறுதியானது!!

      ***
      //ஆனால் சுவனப்பிரியன் அவர்கள் தனது தளத்தில் அந்த கற்பழிப்புகளை கண்டித்து எழுதும்போது இந்த பிரபல(?!) பதிவர்ர்ர்ர்ர்ர் அதை கிண்டல் செய்தான்.//
      அண்ணன் சுவனன் அதனை எப்படி மதப்பிரச்சாரம் செய்ய பய‌ன்படுத்தினார் என்பதை அறிவேன். கிண்டல் செய்தது போல் எதுவும் கருத்து இடவில்லை. எனினும் அப்படி தோன்றினால் வருந்துகிறேன்.


      நன்றி

      Delete
  22. கோத்ராவில் நடந்த தவறு என்ன?

    சில அன்னிய சக்திகள் இந்தியர்கள் வந்த ரயிலில் தீ வைத்து பலரைக் கொன்றார்கள்.
    குஜராத் மக்கள் ஆவேசம் கொண்டு அந்த அன்னிய சக்திகளை அடித்துத் துரத்தினார்கள். இதில் என்ன தவறு கண்டீர்? இதில் மோடி என்ன குற்றம் செய்தார்?

    இனி எந்த அன்னிய சக்தியும் குண்டுவைக்கும் எண்ணத்துடன் அங்கே செல்லுமா? அப்படிச் சென்றால் குஜராத் மக்கள் அடித்துத் துவைத்து காயப்போட்டுவிடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. சகோ இராவணன்,
      இப்போது கோத்ரா விடயம் நீதி மன்றத்தில் உள்ளது.ஆகவே அதை தவிர்ப்போம். அது தவிர்த்து மோடி மீது வைக்கும் வாதங்களையே கவனிப்போம்.

      நன்றி!!!

      Delete
  23. //அபுபக்கர்December 22, 2012 8:53 PM
    vinavu.com/
    படித்துப் பாருங்களேன்
    அவசரம் வேண்டாம். அந்த கட்டுரை வினவு எழுதியதல்ல சார்வாகன். எழுதியவர் பெயரும் அதை வெளியிட்ட பத்திரிகை பெயரும் கட்டுரைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.//

    வினவுவின் கட்டுரைகளை படிக்க கொடுக்கும் அளவிற்க்கு இஸ்லாமிய தமிழ்நாட்டு மதவாதிங்க பழைகால நடைமுறைக்குதவாத முகமதுவின் போதனைகளை கைவிட்டு கார்ல்மார்க்ஸ்சை ஏற்று கொள்ள போகிறார்களா?
    வினவு ஒரு சந்தர்பவாதி
    கார்ல்மார்க்ஸ் முகமதுவைவிட எவ்வளவோ மேலானவர்.

    ReplyDelete
    Replies
    1. சகோ நரி,
      முக்மது(சல்) அவர்களை மோடி பற்றிய விவாதத்தில் தவிர்ப்போம். மோடி மீது சான்றுகள் அடிப்படையில் கோத்ரா நீங்கலாக அங்கே வாழும் முஸ்லிம்களின் நிலை சார்ந்து ஆக்கபூர்வமாக விமர்சனம் வைக்க முடியுமா என நம் சகோக்களை கேட்கிறோம்.

      நன்றி!!

      Delete
  24. http://samuthayaarangam.blogspot.com/2012/12/blog-post_22.html
    சகோ அதிரை இக்பால்,

    இத்னை ஒரு விவாதமாக முன்னெடுப்பதை பாராட்டுகிறென்.
    எனினும் சான்றுகள் அடிப்படையில் மட்டுமே கருத்திடுவது நல்லது.

    1.//அதன்படி யாருடைய சொத்தை யாருக்கு விற்க வேண்டும் என்பதை அரசுதான் முடிவு செய்யும் . இதன் மூலம் ஒரு முஸ்லிம் அவருடைய நிலத்தை முஸ்லிம்களுக்கே விற்க வேண்டும் ஒரு தலித் அவருடைய சொத்தை ஒரு தலித்திற்கே விற்கவேண்டும் என்பதாகும் //

    எந்த சட்டம் ,எப்போது அமலுக்கு வந்தது? இதனை சட்டரீதியாக எதிர்க்க முடியுமே!! யாரேனும் வழக்கு தொடர்ந்தார்களா???.தரவுகள் தரவும்.

    **
    //மறுபுறம் பழமையான எந்த ஒரு வசதியிலாமல் கிடக்கிறது அங்குதான் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் . அதுமட்டுமல்ல நகரத்தின் குப்பைகளெல்லாம் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில்தான் கொட்டப்படுகின்றன. இதுதான் முஸ்லிம்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளதன் அடையாளாமா. மேலும் இருக்கிறது //
    ஏழைகள் எல்லா இன,மத‌த்திலும் இருப்பார்கள். முஸ்லிம்கள் மட்டுமே இப்படி இருக்கிறார்களா?? தரவுகள் கொடுக்கவும்!!

    நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. //
      புரட்சித் தமிழன் said...@http://samuthayaarangam.blogspot.in/2012/12/blog-post_22.html

      //குறிப்பிட்ட சொத்தை குறிப்பிட்ட பிரிவினருக்கே விற்க முடியும் என்ற சட்டம் சாத்தியமா? அப்படி மாநில அரசுகள் உத்தரவிட்டால் அவற்றை முறியடிக்க முடியும் உச்ச நிதி மன்றத்தில். அடுத்து அகமதாபாத்தில் முஸ்லிம்கள் இல்லை என்பது உண்மையல்ல, அதே போல சந்தகோடாவில் வசிப்பவர்கள் முஸ்லிம்கள் மட்டும் என்பதும் உண்மையல்ல, சரியான ஆதாரங்களை யாம் எதிர்ப்பார்க்கின்றோம்.// தமிழ் நாட்டிலேயே ஆதி திராவிடர் மற்றும் பஞ்சமி நிலங்களை வேறு எந்த சாதிக்காரன் பணம் கொடுத்து வாங்கினாலும் அது செல்லாது.இது நில அபகரிப்பில் இருந்து பாதுகாப்பதற்கான சட்டம். குஜராத்தில் உள்ள 70 சதவீதம் மக்கள் மாமிசம் உண்ணாதவர்கள் மாமிசம் உண்பவர்கள் அங்கு தணியாகத்தான் வசிக்கவேண்டும் இதில் அங்கு முஸ்லீம் இந்து என்ற பாடுபாடெல்லாம் இல்லை . நான் கடந்த ஒரு வருடமாக குஜராத்தில் தான் வசித்து வருகிறேன் இது வரை இறைச்சிக்கடைகளை வெளிப்படையாக எங்கும் கண்டதில்லை.என்னுடைய நிருவனம் ஒரு முஸ்லிமிணுடையதே இதில் பனிபுரிவோர் 40 சதம் முஸ்லிம்கள் அனைவரும் பா ஜா க விற்குதான் வாக்களித்துள்ளார்கள்.முஸ்லிம்களுக்கென தனியாக பாலாறும் தேனாறும் ஓடாது ஓடுகிற ஆற்றைத்தான் அனைவரும் பயன்படுத்தவேண்டும்.செளராஷ்டராவில் உள்ள முஸ்லிம் பெண்கள் யாரும் பர்தா அனிவதில்லை இங்குள்ள முஸ்லிம்கள் முற்ப்போக்கானவர்கள் அவர்கள் சொல்லட்டும் குஜராத்தில் நரேந்திர மோடி ஆட்சி எப்படி என்று தமிழகத்தில் அமர்ந்து கற்ப்பனையில் பேசாதீர்கள்.
      //

      Delete
  25. சகோ சார்வாகன்
    நான் தங்களை அவன் இவன் என்று எழுதியதற்காக வருந்துகிறேன் .

    ReplyDelete
    Replies
    1. சகோ அதிரை இக்பால் வாங்க‌,
      நாம் பன்முக கருத்துகளையும் பதிவு செய்கிறோம் . ஆகவே நீங்கள் என்னை அழைத்தத்தில் வருத்தம் இல்லை. எதார்த்த சூழலில் என்ன செய்ய இயலுமோ அதை செய்வோம் என்றே சொல்கிறேன்.

      நன்றி!!

      Delete
    2. சகோ அதிரையார்,

      நீங்க இம்புட்டு நல்லவர் என தெரியால் போய்விட்டது.உம்மை கம்முனாட்டி என எழுதியதற்காக நானும் வருந்துகிறேன்.

      Delete
  26. My comment on
    http://arulgreen.blogspot.com/2012/12/mu.kalanchiyam.filmdirector.html

    நண்பர் அருள்,
    அன்புமணி வன்னியப் பெண்ணைத் திருமணம் செய்தார் என ஆணித்தரமாக விளக்க முயற்சிப்பது ஏன்? அது சரி எடுப்போம். இது முக்கிய விடயம் அல்ல.
    நம் பதிவில் அன்புமணியின் மனைவி தெலுங்கு பேசும் வன்னியர் உட்பிரிவு என்க் குறிப்பிட்டு இருக்கிறீர்கள்.
    http://aatralarasau.blogspot.com/2012/04/blog-post_15.html

    //மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் "கவுண்டர்" பிரிவை சேர்ந்தவர். அவரது துணைவியார் "ரெட்டியார்" உட்பிரிவை சேர்ந்தவர். //

    எப்படி ஒரு சாதியில் உட்பிரிவுகள் வெவ்வேறு மொழி பேச முடியும்? இந்த மொழி வித்தியாசம் காரணம் குறித்த வரலாற்று சான்று தர முடியுமா?

    ஒரு பேச்சுக்கு அன்புமணி வேறு சாதிப் பெண்ணை மணம் முடித்து இருந்தால் பாமக தலைவர் ஆகி இருக்க தகுதி இல்லை என்பதை உறுதி ஆக்குகிறீர்கள்.

    பா.ம.க என்பது அரசியலில் இருந்து ஒதுக்கப்படவேண்டிய கட்சி என்பதை உங்களின் எழுத்துகள் கூறுகின்றன.
    நன்றி!!

    ReplyDelete
  27. முந்தைய பின்னூட்டமிட்ட பின் ராஜபக்சேவுக்கும் இது பொருந்துமா என்ற கேள்வி மனதில் எழுந்தது.பின்னூட்டத்தில் இது பற்றிய கேள்விக்கு சகோ.சார்வாகனின் பதில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது.ராஜபக்சேவிடமுள்ள பிரச்சினையே மோடி போல் இறங்கி வராமல் தான் என்ற அகங்காரமும்,மக்களை பிரித்தாளும் தன்மையும்,நீதிதுறையில் கூட குழப்பங்கள் ஏற்படுத்தி வருவது போன்ற கசப்பு உணர்வுகளே வெளிப்படுகின்றன.

    முதலாவதாக குஜராத் மக்கள் பயத்திலோ அல்லது பழையவைகளை பின் தள்ளி மோடியை அங்கீகரித்தோ அல்லது மோடியின் அரசியல் சூதாட்டத்தில் வெற்றி பெற்றோ மோடியின் பதவிக்கால நீட்டிப்பு குஜராத் மக்களின் அங்கீகாரமாக கொள்ளவேண்டும்.இல்ல இது அழுகுணி ஆட்டம் என்ற கூச்சல்கள் குஜராத் ஜனநாயகத்துக்கு சரிப்பட்டு வராது.

    குஜராத் இஸ்லாமியர்கள் முன் இரண்டு வழிகள் இருந்தன.ஒன்று மோடியை அரசியல் களத்திலிருந்து தேர்தலில் தோற்கடிப்பது அல்லது மோடியோடு இணைந்து செல்வது.குஜராத் இரண்டாவதை தேர்ந்தெடுத்திருக்கிறது.இஸ்லாமியர்களுக்கு இன்னுமொரு வாய்ப்பு உள்ளது.காங்கிரசுடன் சேர்ந்து இணைந்து பணியாற்றி மோடியை மத்திய அரசில் பிரதமராக நுழைய விடாமல் தடுப்பது.காங்கிரஸ் என்ற நொண்டி வாத்தில் பந்தயம் கட்டி வெற்றி பெற முடியுமா என்பது கேள்விக்குறியே.

    ReplyDelete
    Replies
    1. சகோ இராசநட,
      எப்புடீ என் மனதைப் பிரதிபலிக்கிறீர்? பலமுறை இதனை வவ்வால்,இக்பால்,நந்தவனத்தானிடம் கண்டு வியப்பு அடைவேன்.
      நாம் சொல்ல நினைப்பதை எல்லாம் எப்படி இன்னொருவர் சொல்ல முடிகிறது என்பதுதான் பதிவுலகில் வியப்பு.

      சரி கொஞ்சம் கூலா பேசுவோம்

      " நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
      நாளோடும் பொழுதோடும் பதிவு போட வேண்டும்
      ம்ம்ம்ம்ம்ம்
      ஹி ஹி

      நன்றி!!

      Delete
    2. //ராஜ நடராஜன்
      குஜராத் இஸ்லாமியர்கள் முன் இரண்டு வழிகள் இருந்தன.ஒன்று மோடியை அரசியல் களத்திலிருந்து தேர்தலில் தோற்கடிப்பது அல்லது மோடியோடு இணைந்து செல்வது
      சார்வாகன் சகோ இராசநட
      எப்புடீ என் மனதைப் பிரதிபலிக்கிறீர்? பலமுறை இதனை வவ்வால் இக்பால் நந்தவனத்தானிடம் கண்டு வியப்பு அடைவேன்//
      கொடுமை.
      இந்தியாவில் காபிர்கள் மதவாத அடிப்படையில் வாக்களிப்பதில்லை. இஸ்லாமியர்கள் மட்டுமே மதவெறிபிடித்து மதவாத அடிப்படையயில் வாக்களிப்பவர்கள். ஜனநாயகரீதியாக செயல்படும் நரேந்திர மோடியை எதிர்க்கும் இஸ்லாமியர்கள் யார்? வெடிகுண்டுடன் கொலைவெறிபிடித்தலையும் ஹமாஸ் பயங்கரவாதிகளை ஆதரிப்போரே.வவ்வாலே இக்பாலோ நந்தவனத்தானோ இஸ்லாமிய மதவெறியர்களுக்கு இஸ்லாமிய மதவாத அடிப்படையில் எப்படி செயல்படுவது என்று பாடம் சொல்லி கொடுத்து நான் கண்டதில்லை.

      Delete
    3. சகோ நரி,
      //இஸ்லாமியர்கள் மட்டுமே மதவெறிபிடித்து மதவாத அடிப்படையயில் வாக்களிப்பவர்கள்.//
      இந்தியாவில் எப்படியோ, இதுவரை தமிழ்நாட்டில் அப்படி இல்லை. அண்ணன் அதிமுக,தம்பி திமுக இருக்கும் முஸ்லிம் குடும்பங்கள் உண்டு. இந்த சவுதி புகழ் வகாபிகள் கொஞ்சப் பேர் கூச்சல் போட்டு தமிழ்நாட்டை மாற்றப் பார்க்கிறார்களே என்பதே நம் கவலை.

      ஒரு முஸ்லிம் நரேந்திர மோடி பிரதமர் ஆகக் கூடாது என நினைக்க,எதிர்த்து பிரச்சாரம் செய்ய , வாக்களிக்க உள்ள‌ உரிமையை ஆதரிக்கிறோம். ஆனால் சரியான சான்றுகள் அடிப்படையில் விமர்சிக்கவே கோருகிறோம்.அது அவர்களின் நம்பகத் த்னமையை விளக்கும்.

      இருக்கின்ற வாய்ப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதே ஜனநாயகம். 100% அப்பழுக்கன்ற மகான்கள் யாரும் கிடையாது.

      நம் சகோ இராசநட சொன்னது போல் மோடியுடன் ஒத்துப் போகலாம்,அல்லது ஜன்நாயகரீதியாக ,மத சார்பற்ற காஃபிர்களுடன் சேர்ந்து மோடியை எதிர்க்கலாம்.

      ஆகவே நாம் மோடி என்பவர் பிரதமர் ஆகும் வாய்ப்பினை நடுநிலையுடன் அலசவே விரும்புகிறோம்.

      அவர் கோத்ராவை கடந்து நல்லாட்சி தருவேன் என்பதை மக்கள் ஏற்கிறார்களா என்பது 2014தேர்தல் முடிவு வரை ஒரு முடிவு தெரியா மர்மக் கதையே!!

      எனக்கு இப்பதிவு எழுதியவுடன்,நான் நடுநிலையாக எழுதினோனோ என்ற சந்தேகம் இருந்தது. உங்கள் பின்னூட்டம் தீர்த்து விட்டது. மிக்க நன்றி சகோ!!

      Delete
  28. ////வேலைவாய்ப்பு,கல்வியில் முஸ்லிம்களின் நிலை தேசிய சராசரியை விட அதிக்மாக இருப்பது குறித்தும் கருத்து சொல்லுங்கள் சகோ!!///
    மோடியின் ஆட்சிகுமுன்பே அங்கு முஸ்லிம்களின் கல்வி ஹிந்துக்களை விட அதிகமாகவே இருந்திருக்கிறது .இதை நீங்கள் குறிப்பிட்டு காட்ட வேண்டிய அவசியமில்லை .

    குஜராத்தில் இயல்பாகவே முஸ்லிம்கள் மீது கடும் வெறுப்பு இருந்தே வந்ததிருக்கிறது.2001 இல் அஹ்மதாபாத் அருகே உள்ள கலோல் என்ற இடத்தில் வியாபாரம் செய்து வந்த எங்கள் ஊரை சேர்ந்த நண்பரை பார்க்க சென்ற பொழுது நண்பர் வெளியே சென்று இருந்ததால் வீடு பூட்டியிருந்தது .எதிர்வீட்டில் விசாரித்தால் தங்களுக்கு தெரியாது என்று சொல்லிவிட்டார்.அதிக நேரம் காத்திருந்ததால் அந்த வீட்டு பெண்ணிடம் குடிக்க தண்ணீர் கேட்டோம் .பதிலே சொல்லாமல் கதவை சாத்திவிட்டார்.பிறகு நண்பர் வந்த பிறகு விசாரித்தும் முஸ்லிம்கள் என்றாலே பெரும்பாலும் இப்படி வெறுப்பு காட்டுபவர்களாகவே உள்ளனர் என்று கூறினார்.மேலும் அன்று இரவு வீட்டில் சாப்பிட்டோம் சாப்பிட்ட பிறகு இறைச்சியின் எலும்புகளை எடுத்து தனியாக தாளில் காட்டி வைத்தார் .இதை காலையில் வெளியே கிளம்பும் பொழுது அவுட்டரில் போட வேண்டும் இல்லையெனில் வீட்டு உரிமையாளரிடம் சொல்லி கொடுத்து காலி பண்ணிவிடுவார்கள் இந்த ஏரியாவில் எங்கேயுமே நான் வெஜி சாப்பிடமுடியாது என்றார்.

    ///கோத்ரா சம்பவத்தில் மோடி குற்ற‌வாளி என தீர்ப்பு வந்தால் ஏற்போம்.ஆனால் அதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு.////
    எதனால் வாய்ப்பு மிக மிக குறைவு ,நீதிபதிகளிடம் நீதி கிடைக்காது என்று கருதுகிறீர்களா?.அப்படியே சொன்னாலும் கர்கரே கதிதான் ஏற்படும் என்று கருதுகிறீர்களா?

    ////ஏன் குஜராத்தில் ஒருவர் கூட மோடிக்கு மாற்று இல்லையா? தேசிய அளவில் மோடிக்கு மாற்று யார்?////
    ////மோடி ஒரு நல்ல ஆட்சியாளர் என்ற பிரச்சாரம் அவருக்கு இணையான மாற்றுத் தலைவன் இல்லை என்னும் சூழல் வந்தால் அவருக்கு இந்திய ஆட்சி கிட்டும் என்பதை உணருங்கள்!!////

    பாரதிய ஜனதாக்கார்களில் ஒரு சிலர் மட்டுமே அவரை பிரதம வேட்பாளர் என்று கூறியுள்ளனர் .காசு வாங்கிய ஊடகங்களும் பிரதம வேட்பாளர் என்றே சங்கை உரக்க ஊதுகின்றன .ஆனனல் நீவிரோ அதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று மோடி பிரதமராகி பல ஆண்டுகள் ஆனது போலவும் அவருடைய ஆட்சியில் குறைகள் காணப்பட்டாலும் தேசிய அளவில் அவருக்கு மாற்று யார் ?என்று கேட்டுள்ளீர்கள் .உங்கள் உள்ளத்தில் மோடி இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார என்றால் உங்களை அறியாமலே உங்களை அடையாளம் காட்டுகிறீர்கள் .
    எம்ஜியார் மூன்று முறை வெற்றிபெரவில்லையா?ஜோதிபாசு நான்கு வெற்றிபெரவில்லையா?அப்போதெல்லாம் எழுப்பப் படாத பிரதமர் கோசம் இப்போது பிரமாதப் படுத்துவது எதனால்?.
    http://ibnlive.in.com/features/rday/stateofthenation/graph2.php

    இத இணைப்பில் பாருங்கள் சிறந்த ஆறு முதல்வர்களில் நிதிஸ 76 சதம் ஒட்டு பெற்று முதலிடத்தில் உள்ளார் .உங்களது மோடி ஆறாவது இடத்திலே உள்ளார்.
    பிரதமந்திரி க்கு அதிக ஆதரவு தேசிய அளவில் சோனியா காந்தியைத்தான் அதிகமானோர் ஆதரிக்கிறார்கள்
    மோடி ஆட்சியில் இருக்கும் வரை அவரைப் பற்றி ஊழல் புகார் சொன்னால் அவரது முன்னாள் சக மந்திரியான ஹரே பாண்ட்யா கதிதான் சுட்டுத்தள்ளிவிட்டு கைவசம் உள்ளகுற்றச்சாட்டான முஸ்லிம தீவிரவாதிகள் என்னும் இந்திய முஜாஹிதீன் கொன்றுவிட்டார்கள் என்று கதையை முடித்துவிடுவார். பாவம் அவரது தந்தை கடந்த தேர்தலில் மோடியை எதிர்த்து போட்டியிட்டார்.இந்த தேர்தலில்பாண்ட்யாவின் மனைவி போட்டியிட்டார் .
    ஊழல் குற்றச்சாட்டு மோடி தோல்வியை தழுவிய பிறகே

    ReplyDelete
  29. சகோ இப்பூ,

    //மோடியின் ஆட்சிகுமுன்பே அங்கு முஸ்லிம்களின் கல்வி ஹிந்துக்களை விட அதிகமாகவே இருந்திருக்கிறது .இதை நீங்கள் குறிப்பிட்டு காட்ட வேண்டிய அவசியமில்லை .//

    சரி அதிகம் ஆக இருந்து ,மோடி ஆட்சியில் குறைந்து இருந்தால் மட்டுமே சிக்கல்.அது குறித்து ஏதேனும் சொல்ல இயலுமா??
    **
    //எதனால் வாய்ப்பு மிக மிக குறைவு ,நீதிபதிகளிடம் நீதி கிடைக்காது என்று கருதுகிறீர்களா?.அப்படியே சொன்னாலும் கர்கரே கதிதான் ஏற்படும் என்று கருதுகிறீர்களா?//

    இந்தியாவில் ஆளும் கட்சியினரின் மீதான வழக்குகளின் நிலை என்ன ? என்பதை அறிந்ததுதானே!!.கர்கரே விடயம் குறித்த சதிக் கோட்பாட்டிற்கு ஆதாரம் இல்லை!!
    **
    ///.உங்கள் உள்ளத்தில் மோடி இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார என்றால் உங்களை அறியாமலே உங்களை அடையாளம் காட்டுகிறீர்கள் .//

    மோடி ஒரு பிரதம வேட்பாளர் ஆகும் வாய்ப்பு உள்ள‌தால் மட்டுமே விவாதிக்கிறோம். பா.ஜ.க.வில் மோடி மட்டுமே மதவாதி போல் காட்டுவது வியப்பு அளிக்கிறது. மோடி இல்லை எனில் அத்வானி ,வேறு யார்?

    மூமின் பதிவர்கள் யாரும் மோடி வெற்றி பற்றி கருத்து தெரிவிக்கவில்லை. நாம் பதிவு எழுதிய பிறகே சகோ அதிரையார் பதிவு இட்டார். நமக்கு தேவை பன்முக கருத்துகள். அதில் சரியானதை மக்கள் தேர்ந்து எடுக்கட்டும்.

    நீங்கள் கொடுத்த சுட்டி மோடி வெற்றிக்கு பிந்திய நிலவரம் அல்ல!.
    **
    //ஊழல் குற்றச்சாட்டு மோடி தோல்வியை தழுவிய பிறகே//

    தோல்விக்கு பின் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் வாய்ப்பு என்றாலும். இப்போது ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லை என்பதே என் கேள்வி.

    நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,

      //குஜராத்தில் இயல்பாகவே முஸ்லிம்கள் மீது கடும் வெறுப்பு இருந்தே வந்ததிருக்கிறது.//

      எப்போதுமா? அல்லது இப்போது மட்டுமா???

      இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வித அரசியல்.தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்பினைப் போல் ,வட இந்தியாவில் முஸ்லிம் எதிர்ப்பு.
      வட இந்தியாவில் அதிகம் முஸ்லிம்களால் ஆளப் பட்டது காரணம் ஆக இருக்க்லாம்.

      கஜினி முகமதால் 17 முறை கொள்ளையடிக்கப்பட்ட சோமநாத் கோயில் குஜராத்தில் உள்ளது.

      //இந்த ஏரியாவில் எங்கேயுமே நான் வெஜி சாப்பிடமுடியாது என்றார்.//

      வட இந்தியாவில் மாட்டுக் கரி சாப்பிடுவேன் எனக் கூட சொல்ல முடியாது.நானும் இதை அறிவேன்.

      நன்றி!!

      Delete
  30. குஜராத்தில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றாக்குறை 48%. இது மிகவும் ஏழ்மையான சோமாலியா நாட்டை விட அதிகம். சோமாலியாவில் வெறும் 33% மட்டுமே. இது குறித்து மோடி கருத்து தெரிவிக்கையில், குஜராத்தில் உள்ள பெண்கள் அனைவரும் உடல் குண்டாகி விடும் என்ற அச்சத்தில் பால் சாப்பிடுவதில்லை . எனவே தான் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைவாக உள்ளது என கூறுகிறார். இவையனைத்தும் முட்டாள்தனமான வாதமாகும். குஜராத் குழந்தைகள் தொழிற்சாலைகள், சாலைகள் மின்சாரத்தையா உண்ண முடியும்?

    குஜராத்தில் குழந்தை இறப்பு விகிதம் 1000க்கு 48 ஆக உள்ளது. இந்த மோசமான பட்டியலில் குஜராத் இந்திய அளவில் 10ஆவது இடத்தில் உள்ளது.

    குஜராத்தில் வயது வந்த ஆண்களில் மூன்றில் ஒரு பகுதியினரின் உடல் நிறை குறியீட்டு எண்(BMI) 18.5 க்கு கீழே உள்ளனர். இதில் குஜராத் இந்திய அளவில் 7வது இடம் பெற்றுள்ளது.

    பேறுகால இறப்பு விகிதம் மற்ற மாநிலங்களை குஜராத்தில் தான் அதிகமாக உள்ளது.

    குஜராத்தின் கல்வி, பொது சுகாதாரம், வருவாய் இந்தியாவின் மற்ற 8 மாநிலங்களை விட பின் தங்கி உள்ளது. அதாவது குஜராத் 9ஆவது இடத்தில உள்ளது.

    குஜராத்தின் கிராமப்புறத்தில் 51% மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இதில் 57% எஸ்.சி, 49% எஸ்.டி , மற்றும் 42% பொதுப்பிரிவினர் உள்ளனர்.

    மோடி குஜராத்தில், பெரும் தொழிற்சாலைகளுக்கு மலிவான மின்சாரம் மற்றும் நிலங்களை தந்ததில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. குஜராத்தில் அதிகமான வறுமை, மிகவும் குறைந்த அளவு மனித மேம்பாடு இவையே மிகைத்து நிற்கின்றன. அரசுக்கு நேரடி வருமானம் பெறுவது குறித்த நடவடிக்கைகளில் குஜராத் அரசு அதிகமான கவனம் செலுத்துகின்றது. ஆனால் அதையெல்லாம் தூக்கி சாப்பிடுகின்ற அளவில் குஜராத்தில் வறுமை தாண்டவமாடுகின்றது. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.

    இந்த உண்மையை கண்டிப்பாக ஒருநாள் குஜராத் மக்கள் உணர்வார்கள்,

    என தனது கட்டுரையிலே மார்கண்டேய கட்ஜு குறிப்பிட்டு உள்ளார்.

    ReplyDelete
  31. சாறு////ஆகவே நாம் மோடி என்பவர் பிரதமர் ஆகும் வாய்ப்பினை நடுநிலையுடன் அலசவே விரும்புகிறோம்.////
    மோடியை பாரதிய ஜனதா முன்னணி தலைவர்களே இதுவரை அவரை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளவில்லை .நீங்களாகவே ஏன் துடிக்க வேண்டும்?
    மோடி முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசினாலோ முஸ்லிம்களுக்கு சலுகைகள் அறிவித்தாலோ அவரது செல்வாக்கு க்ளோஸ். முஸ்லிமக்ளுக்கு எதிராக சோமநாத் கோயில் பற்றியும் பாக்கிஸ்தான் பற்றியும் மேலும் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதை சொல்லித்தான் அவரால் அரசியலில் நிற்க முடியும் .இந்தியா முழுவதும் இது போன்ற நிலை இல்லை .குஜராத்துக்கு வெளியே மோடி என்றால் மக்களின் வோட்டுக்கள் கிடைக்க வாய்ப்பில்லை .பிரதமருக்கு தகுதியானவர் யார் என்பதில் வாஜ்பாய் சோனியாவுக்கு அடுத்து வருகிறார் .23 சதவீத ஓட்டுக்களை பெருகிற்ற என்றால் அத்வானி 2 சதவீதத்துக்கும் கீழே உள்ளார் .அத்வானி வாஜ்பாயை ஒப்பிடுகையில் வாஜ்பாய் மிதமானவர் என்பதால் பாரதிய ஜனதாவைத்தாண்டி அவரை ஆதரிப்போர் உள்ளனர் .அத்வாநியைவிட தீவிரவாதியான மோடியை குஜராத்துக்கு வெளியே செல்லாக் காசு என்பது பிஜேபிக்கு தெரியும் .அவர் முதல்வராக தொடர்ந்து நீடிக்க என்ன விலை கொடுத்துள்ளனர் என்பது அவர்களுக்கு தெரியும் மேம்போக்காக மேயும் உமக்கு தெரிய வாய்ப்பில்லை .ஒருவேளை இவர் பிஜேபியால் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் ,அத்வானியை கொன்று விட்டு முஸ்லிம் தீவிரவாதிகள் மீது பலியை போடவும் தயங்கமாட்டார் என்பதும் அவர்களுக்கு தெரியும் .தன்னை எதிர்த்த காரணத்தால் சக அமைச்சரை கொன்றுவிட்டு முஸ்லிம் தீவிரவாதிகள் என்று பலி போட்டவர்மோடி .அமெரிக்கா விசா மறுத்தவுடன் தனது செல்வாக்கை நிலை நாட்ட இசாந்த் மற்றும் மூன்று மாணவர்களை என்கவுண்டரில் போட்டு தள்ளிவிட்டு தன்னை கொல்ல முயற்சி செய்ய திட்டமிட்டு வந்ததாக விளம்பரம் செய்து கொண்டார் .2001 இல் இடைதேர்தலில் தோல்வியுற்றபிஜேபியை இவர் ரயில் எரிப்பு நடத்தி கலவரத்தை உருவாக்கி ஹிந்துக்கள் ஓட்டை மதவாத அடிப்படையில் தக்க வைத்துக் கொண்டார் .தனது சொந்த செல்வாக்கில் பிகாரில் ஆட்சி புரியும் நிதிஸ் குமார் இவரை பிரதமவேட்பாளராக அறிவித்தால் கூட்டணியைவிட்டு வெளியேறுவார்.தேர்தலுக்கு பிறகே ஜெயலலிதா ஆதரிப்பார்.ஒரிசாவின் ஜே.பி பட்நாயக் ஆதரிக்க மாட்டார் கடந்த தேர்தலில் 96 சீட்களை மட்டுமே பெற்ற பிஜேபி அதைவிட குறைவாக

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      //மோடியை பாரதிய ஜனதா முன்னணி தலைவர்களே இதுவரை அவரை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளவில்லை .நீங்களாகவே ஏன் துடிக்க வேண்டும்?//

      நல்ல நகைச்சுவை. மோடிக்கு எதிரான பாஜக தலைவர்களுக்கு முஸ்லிம்கள் ஆதரவா? மோடி,அத்வானி,சுஷ்மா இவர்களில் ஒருவருக்குதானே வாய்ப்பு!!.அத்வானி வயதானவர். சுஷ்மாவை விட மோடிக்கே அதிகம் வாய்ப்பு!!

      பாஜக 200 இடங்களில் வென்றால் அப்படித்தானே!!. என்ன்மோ வாய்ப்பே இல்லாத விடயம் போல் பேசுகிறீர்கள்.பல தொலைக்காட்சிகளில் அலசிய விடயத்தைதானே பதிவில் சொன்னேன். மோடி என்றால் அவ்வளவு பயமா??
      ஹா ஹா ஹா!!

      // .அத்வானி வாஜ்பாயை ஒப்பிடுகையில் வாஜ்பாய் மிதமானவர் என்பதால் பாரதிய ஜனதாவைத்தாண்டி அவரை ஆதரிப்போர் உள்ளனர் .அத்வாநியைவிட தீவிரவாதியான மோடியை குஜராத்துக்கு வெளியே செல்லாக் காசு என்பது பிஜேபிக்கு தெரியும் //

      அப்போ அடுத்த ஆட்சி பாஜக என முடிவே செய்து விட்டீர்களா!!

      இந்த மிதம், கடினம், மதவாதி,மத சார்பற்ற‌வன் எல்லாம் வேடம்!!.
      மிதம், என்பதை வரையறுங்கள் பார்ப்போம்!!
      //தனது சொந்த செல்வாக்கில் பிகாரில் ஆட்சி புரியும் நிதிஸ் குமார் இவரை பிரதமவேட்பாளராக அறிவித்தால் கூட்டணியைவிட்டு வெளியேறுவார்.தேர்தலுக்கு பிறகே ஜெயலலிதா ஆதரிப்பார்.ஒரிசாவின் ஜே.பி பட்நாயக் ஆதரிக்க மாட்டார் கடந்த தேர்தலில் 96 சீட்களை மட்டுமே பெற்ற பிஜேபி அதைவிட குறைவாக//

      நல்லா கதை சொல்ரீங்க இப்பூ ,

      ஆட்சி அதிகாரம் ஜெயிக்க எதுவேண்டுமானாலும் சொல்வார் ,செய்வார் அரசியல்வாதிகள்!!

      மோடி பிடிகாத நிதிஷ் குமாருக்கு பாஜக பிடிக்குமாம்!!

      பாஜக நல்ல கட்சி, மோடி மட்டுமே மோசம் ஹி ஹி

      உங்ளுக்கு நல்ல மூளை!!

      சிந்திக்க மாட்டீர்களா!!
      ***

      இன்னும் இரு வருடம் இருக்கிறது பார்க்கத்தானே போகிறோம்!!!

      பொறுமை கடலினும் பெரிது. பதிவில் இருக்கும் வாய்ப்புகளை மட்டுமே கூறி இருக்கிறேன்!!

      நீங்கள் காட்டிய கருத்துக் கணிப்பு பழையது இன்னும் இரு வருடத்தில் என்ன சூழல் வரும்!! பார்ப்போம்!!


      நன்றி!!

      Delete
  32. சகோ இப்பூ,
    நாம் எப்போதும் ஒருவர் சொன்னவுடன், அது சரியா எனப் பரிசோதித்து பார்ப்போம்.ஆம் மார்க்கண்டேயெ கட்ஜூ இப்படிக் கூறி இருக்கிறார். சுட்டி அளிக்கிறேன். அவர் கூறியது சரியா எனவும் பார்க்க வேண்டும்.

    http://justicekatju.blogspot.com/2012/12/on-gujarat-development.html

    Apart from what was done to Muslims in 2002, let us consider a few facts.

    (1) Child malnutrition at 48 % in Gujarat is higher than the national average, far higher than the poorest African sub Saharan countries of Somalia and Ethiopia where the rate is about 33%. When Modi was confronted with this he said that girls in Gujarat do not eat or drink milk for fear of becoming fat, the people are vegetarians, etc which is all nonsense. Should the Gujarati children eat the factories, roads and electricity Modi has created ?

    (2) The infant mortality rate in Gujarat is 48 per thousand, which is the 10th worst in India.

    (3) More than a third of Gujarat's adult men have a body mass index of less than 18.5, the 7th worst in India.

    (4) Gujarat has a high maternal mortality rate.

    (5) Education, health and income levels in Gujarat place it after 8 other Indian states.

    (6) rural poverty is 51% in Gujarat, 57% among STs, 49% among STs, and 42% among OBCs.

    No doubt Modi has given huge concessions to big industrial houses, giving them cheap electricity, land, etc and has built roads, etc. But what about the standard of living of the masses ? The figures given above paint a totally different picture.

    I am sure the people of Gujarat will one day learn the truth

    நன்றி!!!

    ReplyDelete
  33. எதனையும் சரிபார்த்தல் நலம். இந்தியாவின் பிற மாநிலங்கள்,குஜராத் அதிக வித்தியாசம் இல்லை!!



    http://www.ifpri.org/sites/default/files/publications/ishi08.pdf

    Family
    Welfare Statistics in India”.

    http://mohfw.nic.in/WriteReadData/l892s/972971120FW%20Statistics%202011%20Revised%2031%2010%2011.pdf


    http://www.pratirodh.com/pdf/human_development_report2011.pdf

    ReplyDelete
  34. Gujarat: Significant decline in rural poverty

    http://blogs.economictimes.indiatimes.com/policypuzzles/entry/the-gujarat-poverty-numbers

    ReplyDelete
  35. சகோ சார்வாகனார்

    //கஜினி முகமதால் 17 முறை கொள்ளையடிக்கப்பட்ட சோமநாத் கோயில் குஜராத்தில் உள்ளது.//
    இச்செய்தியை இங்கு குறிப்பிடுவதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் !
    இந்த வெறுப்பை இந்த நூற்றாண்டு வரை கொண்டு வந்தது யார் !

    ஏன் கொண்டு வந்தார்கள் ?அதில் இந்த்துத்துவாவினரின் ஆதாயங்கள் என்ன? . சற்று சிந்தியுங்கள் அதற்கும் தற்போது அவர்களின் ஆட்சி நீடிப்பதற்கும் உள்ள தொடர்பை ஒத்துக்கொள்கிறீர்களா

    தமிழ் நாட்டின் பிராமண எதிர்ப்பு இதிலிருந்து முற்றிலும் வேறுப்பட்டது
    எதை எதோடு இணைக்கிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. சகோ அதிரையாரே,

      பாருங்க இப்ப குஜராத்தில் மோடி வெற்றிக்கு என்ன காரணம் நீங்க சொல்வீர்கள்?

      மக்கள் மத ரீதியாக பிளவு பட்டனர் சரியா?. அதாவது இந்துத்வ கொள்கையை விரும்பும் மக்கள் மோடிக்கும்,விரும்பாதோர் காங்கிரசுக்கும் வாக்களித்த‌னர்.

      ஏன் இந்துத்வ கொள்கை வட மாநிலங்களில் ஏற்கப்படுவது போல் தமிழ்நாட்டில் இல்லை?

      தமிழகம் முஸ்லிம்களின் கீழ் அதிக நாள் இருந்தது இல்லை. ஆனால் வட மாநிலங்கள் அதிகம் முஸ்லிம் ஆட்சியாளர்களின் கீழே இருந்தது. இன்னும் சோம்நாத் என்பது குஜராத மக்களிடையே பரப்பரைக் கதைகளாக தொடர்கிறது.எத்த‌னை தடவை தாக்கப்ப்ட்டுள்ளது வரலாற்றில் பாருங்கள்??

      http://en.wikipedia.org/wiki/Somnath

      In 725 CE Junayad, the Arab governor of Sind, sent his armies to destroy the second temple.[12] The Gurjara Pratihara king Nagabhata II constructed the third temple in 815, a large structure of red sandstone.


      Somnath temple, 1869
      In 1024 CE, the temple was once visited by Mahmud of Ghazni[13][14] who raided the temple from across the Thar Desert. The temple was rebuilt by the Gujjar Paramara King Bhoj of Malwa and the Solanki king Bhimadev I of Anhilwara, Gujrat (present day Patan) between 1026 and 1042. The wooden structure was replaced by Kumarpal (r.1143-72), who built the temple of stone.[15][16]
      In 1296 CE, the temple was once again destroyed by Sultan Allauddin Khilji's army.[12][13][16] According to Taj-ul-Ma'sir of Hasan Nizami, Raja Karan of Gujarat was defeated and forced to flee, "fifty thousand infidels were dispatched to hell by the sword" and "more than twenty thousand slaves, and cattle beyond all calculation fell into the hands of the victors".[12] The temple was rebuilt by Mahipala Deva, the Chudasama king of Saurashtra in 1308 AD and the Linga was installed by his son Khengar sometime between 1326 and 1351 AD.[16]
      In 1375 CE, the temple was once again destroyed by Muzaffar Shah I, the Sultan of Gujarat.[12][16]
      In 1451 CE, the temple was once again destroyed by Mahmud Begda, the Sultan of Gujarat.[12][13][16]
      In 1701 CE, the temple was once again destroyed by Mughal Emperor Aurangzeb.[12] Aurangzeb built a mosque on the site of the Somnath temple, using some columns from the temple, whose Hindu sculptural motifs remained visible.[17]
      Later on a joint effort of Peshwa of Pune, Raja Bhonsle of Nagpur, Chhatrapati Bhonsle of Kolhapur, Queen Ahilyabai Holkar of Indore & Shrimant Patilbuwa Shinde of Gwalior rebuilt the temple in 1783 AD at a site adjacent to the ruined temple which was already converted to a mosque
      ..
      Before independence, Prabhas Pattan was part of the princely state of Junagadh. After integration of Jungadh in to Union of India, the Deputy Prime Minister of India, Sardar Vallabhbhai Patel came to Junagadh on November 12, 1947 to direct the stabilization of the state by the Indian Army and at the same time ordered the reconstruction of the Somanath temple.[19]
      When Sardar Patel, K. M. Munshi and other leaders of the Congress went to Gandhi with the proposal of reconstructing the Somnath temple, Gandhi blessed the move,but suggested that the funds for the construction should be collected from the public and the temple should not be funded by the state. He expressed that he was proud to associate himself to the project of renovation of the temple[20] But soon both Gandhi and Sardar Patel died and the task of reconstruction of the temple continued under K. M. Munshi, who was the Minister for Food and Civil Supplies in the Nehru Government.[20]

      ஆகவே வட இந்தியாவில் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் எடுபடுகிறது.

      ஆனால் தமிழ்நாட்டில் உயர்சாதி எதிர்ப்பு மதம் சாராமல் நிகழ்ந்தது.உயர்சாதி என்பது பார்ப்பனர்களை மட்டும் சுட்டிய இதர ஆதிக்க சாதி இயக்கமாக பரிணமித்தது.

      நன்றி!!

      Delete
  36. //மோடி ஒரு பிரதம வேட்பாளர் ஆகும் வாய்ப்பு உள்ள‌தால் மட்டுமே விவாதிக்கிறோம். பா.ஜ.க.வில் மோடி மட்டுமே மதவாதி போல் காட்டுவது வியப்பு அளிக்கிறது. மோடி இல்லை எனில் அத்வானி ,வேறு யார்?//
    நன்றி இதுவரையிலும் ஒரு தவறான தளத்தில் (பாதையில்) விவாதித்துக்கொண்டிருக்கிறேன் என்பது புரிகிறது . நாங்கள் மோடியை மட்டுமல்ல ஒட்டுமொத்த முதலாளித்துவ இந்துத்துவத்திற்கு எதிராகத்தான் விவாதம் கொண்டு செல்லப்பட வேண்டும் என விரும்புகிறோம் . இந்துத்துவம் இல்லையென்றால் மோடி இல்லை . முஸ்லிம் எதிர்ப்பும் மனு தர்மமும்தான் இந்துத்துவத்தின் உயிர்நாடி , அந்த புள்ளியிலிருந்து நீங்கள் மோடியை நோக்குங்கள் மோடி எவ்வளவு அபாயகரமானவர் என்பது புரியும் . இவ்வாறு பார்த்தால் நீங்கள் வாஜ்பாய் , அத்வானி சுஷ்மா , மோடி இவர்களுக்கு மத்தியில் எந்த ஒரு வேறுப்பாட்டையும் காணமாட்டீர்கள் .

    ReplyDelete
    Replies
    1. ஏங்க நானா சொல்றேன் நம்ம் சகோ இப்பூ தானே மோடியைத் தவிர அனைவருக்கும் வாய்ப்பு என்கிறார்.

      பல தொலைக்காட்சியிலும் சொன்னதை வாய்ப்பு என்ற அளவில் எழுதினேன். இன்னும் இருவருடம் இருக்கிறது. எதுவும் நடக்கும்!!!.

      என்ன மோடியினால் அரசியல் பரப்ரப்பு அடைந்து இருக்கிறது.இந்தப் பதிவும் சூடான இடுகையில் வந்து பரபரப்பு ஆனது கூட நிரூபணம்!!

      நாம் செய்வது அனைத்தும் கணிப்பே!! நடப்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்!!

      நன்றி!!

      Delete
  37. //ஆகவே வட இந்தியாவில் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் எடுபடுகிறது.//

    வாருங்கள் சார்வாகனாரே ! . இதைத்தானே விவாதம் முழுக்க நாங்கள் சொல்லி வருகிறோம் . மோடியின் வெற்றி என்பது (மொத்தத்தில் பி.ஜே.பி)முஸ்லிம் எதிர்ப்பினால் மட்டும்தான் சாத்தியமாகிறது .அவருடைய நல்லாட்சியால அல்ல . மேலும் காங்கிரஸ் . பி ஜே.பி . இரு கட்சிகளுமே முதலாளித்துவ கட்சிகள்தான் . நீங்கள் சொல்லும் முனேற்றம் என்பது கார்பரேட் கம்பெனிகளின் முன்னேற்றத்தை பற்றியே . அதாவது விரலின் வீக்கத்தை வளர்ச்சி என்று நியாப்படுத்த பார்கிறீர்கள் .

    மேலும் முஹம்மதின் படையெடுப்பு இந்து எதிர்ப்பால் அல்ல . அது அந்த காலங்களில் நிகழ்ந்த இரு அரசுக்கெதிரான போராட்டமாகவே பார்க்கப்பட வேண்டும். ஆனால் கோத்ரா கலவரம் அது போன்ற ஒன்று அல்ல

    குஜராத்தின் முன்னேற்றங்களை நீங்கள் தரவுகளின் அடிப்படையில் விளக்கவும்

    ReplyDelete
  38. முஹம்மதின் படையெடுப்பு என்பதை கஜினி முஹம்மதின் படை எடுப்பு என்று படிக்கவும்

    ReplyDelete
  39. //எதனையும் சரிபார்த்தல் நலம். இந்தியாவின் பிற மாநிலங்கள்,குஜராத் அதிக வித்தியாசம் இல்லை!!

    சுட்டி பகிர்ந்தமைக்கு நன்றி. எதை வைத்து அதிக வித்தியாசம் இல்லை என்று சொல்கிறீர்கள்? India State Hunger
    Index rank இல் 17 மாநிலங்களில் 13 தாக வந்திருகிறது குஜராத் . மிகவும் மோசமாக ஆலபடுவதாக சொல்லப்பட்ட 'மாயாவதியின் உ பீ குட குஜராத்தை விட
    மேல் தான் இருக்கிறது. நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்.

    இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் போலே குஜராத் இருகிறேந்தேன்றால் பிறகு எதற்கு அதை முன்னணி மாநிலம் என்று சொல்கீறேர்கள்? ஆனால் உண்மை அதுவல்ல. குஜராத்தை விட 'பின் தங்கிய' மாநிலங்கள் நிலைமையை விட malnutrition குஜராத்தில் உள்ளது.

    இது மாதிரி எந்த வாதம் எடுத்து வைத்தாலும் சப்பை கட்டு கட்டி விட்டால் எதற்கு கோத்ராவை விட்டு விட்டு மற்றதை பேசுவோம் என்கேரீர்கள்.

    குஜராத் இப்போது என்று இல்லை. மோதி வரும் முன்பே தொழில் துறையிலும், entrepreneurs உருவாக்குவதிலும் முன்னோடி தான். மற்ற மாநிலங்கள் போதுமான நிதி மற்றும் திறமையான தொழில் அதிபர்கள் இருந்தும் குட ஒரு பெரிய நிறுவனம் அமைப்பதற்கு என்ன பாடு படுகிறது என்று பார்க்கிறோம். இதில் ஒரு சாதாரண பால் கூட்டுறவு ஏற்படுத்தி மிக பெரிய வெற்றி கண்டு உலகளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது குஜராத். இதெலாம் நடந்தது மோதி வரும் முன்பே.

    //ஆகவே வட இந்தியாவில் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் எடுபடுகிறது//

    ஒரு வழியாக ஒத்து கொண்டீர்கள்.


    ReplyDelete
    Replies
    1. சகோ ரகுமான்,
      ஒரு மாநிலத்தின் முன்னேற்றம் குறித்து அறிய சில புள்ளி விவரங்கள் எடுக்கப்படுவது உண்மைதான்,இந்தியாவில் பணக்காரர்( உயர் மத்தியத்ர வர்க்கம் வரை) ஒரு விதமும்,மத்திய தர வர்க்கம் ஒருவிதமும்,இதர மக்கள் ஒருவிதமும் வாழ்வின் தரத்தில் வாழ்வர்.

      தொழில் சார் மேட்டுக் குடி மக்களின் வாழ்வு மூன்னேற்றம் இருப்பதால் அதனை யாரும் விவாதிப்பது இல்லை.

      இந்த எளிய மக்களின் சுகாதாரம் சார் புள்ளி விவரங்களில் குஜராத் பின் தங்கி இருக்க்லாம்.

      குஜராத்தில் ஆதிவாசிகளின் மக்கள் தொகை சுமார் 15%. இந்த சுகாதாரம் சார் விடயங்களில் இவர்களில் பெரும்பான்மையோர் இருக்க்லாம்.

      எனினும் காலரீதியாக கடந்த 20+ வருடங்கள் மாற்ற‌ங்கள் கணித்தே முன்னேற்றமா இல்லையா எனப் பார்ப்பதே சரி அதற்கு ஒரு பதிவிடுவேன்.

      ஏன் மோடி விடயத்தில் அனைத்தும் 100% சரியாக இருக வேண்டும் என எதிர்பார்க்கிறோம்?

      ஏன் இதே அளவு புள்ளி விவர விவாதங்கள் பிறர் மீது வைப்பது இல்லை?

      குஜராத் புள்ளி விவர பதிவு விரைவில் எதிர்பாருங்கள்!!



      நன்றி!!!

      Delete
    2. //ஏன் இதே அளவு புள்ளி விவர விவாதங்கள் பிறர் மீது வைப்பது இல்லை?//

      மற்ற முதல்வர்கள் எல்லாம் திருடர்கள் (கருணாநிதி) மற்றும் நிர்வாக திறமை இல்லாத சோம்பேறிகள் (ஜெயலலிதா) தானே. மோதி மட்டும் தானே தவ புதல்வர் போல மீடியா உருவக படுத்தி இருக்கிறது. அதனால் தான்.

      //எனினும் காலரீதியாக கடந்த 20+ வருடங்கள் மாற்ற‌ங்கள் கணித்தே முன்னேற்றமா இல்லையா எனப் பார்ப்பதே சரி அதற்கு ஒரு பதிவிடுவேன்.//

      நானும் தெரிந்து கொள்ள விரும்பிகிறேன். பதிவிடுங்கள். பார்போம்.

      Delete
  40. nuTRITIon InDex 1994 To The InDIa sTaTe hunGeR InDex 2008

    Gujarat was 10th in the index ranking in 1994 and it dropped down to 13 in 2008. it implies that gujarat has not performed as much as other states in improving nutrition for its people between 1994 and 2008 (the period almost matches with modi's rule)

    எதனையும் சரிபார்த்தல் நலம்.

    ReplyDelete
  41. சார்வாகன் சொன்னது…

    // //எப்படி ஒரு சாதியில் உட்பிரிவுகள் வெவ்வேறு மொழி பேச முடியும்? இந்த மொழி வித்தியாசம் காரணம் குறித்த வரலாற்று சான்று தர முடியுமா?// //

    நீங்கள் குறிப்பிடுவது போன்று கவுண்டர், ரெட்டியார், படையாட்சி, நாயக்கர் என்பதெல்லாம் வன்னியர் சமூகத்தின் உட்பிரிவுகள் அல்ல. வெவ்வேறு பகுதிகளில் வழங்கப்படும் பட்டப்பெயர்கள். 1970களிலேயே சட்டநாதன் குழு அறிக்கை 'தமிழ்நாட்டில் உட்பிரிவுகள் ஏதுமற்ற ஒரே சமூகம் வன்னியர்கள் மட்டும்தான்' என்று குறிப்பிட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு வன்னியரும் தமிழைத் தவிர வேறு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கவில்லை. ஆந்திர எல்லையில் வாழ்வோரும், ஆந்திராவின் சித்தூர், குப்பம் பகுதிகளில் மிகப்பெரிய சமூகமாக உள்ள வன்னியர்களும் தெலுங்கை அறிந்துள்ளனர். அவ்வளவுதான்.

    ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் வாழும் அக்னிகுல சத்திரியர்கள், பெங்களூரின் மிகப்பெரிய சமூகமாக உள்ள திகலர்கள் - ஆகிய வன்னியர்கள் தமிழை மறந்துவிட்டனர். இது காலப்போக்கில் நிகழ்ந்த மாற்றம். தென் ஆப்பிரிக்க தமிழர்களில் பெருமளவினராக உள்ள வன்னியர்களும் தமிழை மறந்துவிட்டனர்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஆனந்த்,

      /அது உங்களை போன்ற சிலர் விருப்பமாக இருக்கலாம், வன்னியர்கள் என்றும் பா.ம.க வை ஆதரிப்பார்கள்./

      இந்த வாக்கியம் இப்படி சொல்லுங்கள்

      "எங்களை போன்ற சில வன்னியர்கள் மட்டும் என்றும் பா.ம.க வை ஆதரிப்பார்கள்."

      சாதியை மட்டும் வைத்து ஒரு கட்சியை எந்த அளவு வளர்ப்பீர்கள் என வரலாறு பதில் சொல்லும்.
      **
      நண்பர் அருள்,

      இரண்டாம் மனைவி என சொல்வது அவதூறு&தவறு. ஆனால் வன்னியர் அல்ல என்பது தவறான தகவல் அவ்வளவுதான்!!!

      சட்டநாதன் அறிக்கை பற்றி விரும்பினால் ஒரு பதிவு எழுதுங்களே

      நன்றி!!

      Delete
  42. //கஜினி முகமதால் 17 முறை கொள்ளையடிக்கப்பட்ட சோமநாத் கோயில் குஜராத்தில்
    உள்ளது.//
    17 முறை படையெடுத்து கோயிலை கொள்ளை யடித்தார்என்று கூறி வருகிராகளே .17 முறைகள் வந்து கொள்ளையடிக்கும் அளவில் அந்த கோயிலில் என்னதான் இருந்தது.ஒரு படையுடன் வருபவர்க்கு ஒருமுறை கொள்ளையடிக்கவே கோயில் காணாதே ..ஒருவேளை கோயிலையே கொள்ளையடித்து பகுதி பகுதியாக தூக்கி சென்றார்களா?
    ஒரு முறை இரண்டு முறைகள் கொள்ளையடித்து போனபிறகாவது கோயில் நிர்வாகிகள் உசாராகி அந்த கோயிலுள்ள விலை மதிப்புள்ள பொருட்களை வேறு எங்காவது கொண்டு பதுக்கி வைத்திருப்பார்களே ,அதை கூட செய்யாமல் 17 முறைகள் வரும்வரை ஏன் இருந்தார்கள்? யார் பதில் சொல்லுவார்?

    எந்த ஒரு நாட்டின் மீது போர் தொடுத்தாலும் அந்த நாட்டின் கனிமங்களை கைப்பற்றுவது அந்தக் கால மரபுதான் .ஆனால் ஐநா மூலம் போர் வரம்பு இயற்றிய பின்பும் சட்டங்கள இராக்கை கைப்பற்றி,லிபியாவை கைப்பற்றி எண்ணெய் விலையை நிர்ணயிக்கும் ஒபெக்கை ஒழித்து கட்டி அமெரிக்க அடிக்கும் கொள்ளையை யாராவது கொள்ளையடிப்பதாக கூறுகிறார்களா?இராக்கில் குர்துகளை தூண்டிவிட்டு போராடவைத்து பின்னர் குர்துகளை
    காப்பற்றவருவது போலவும் லிபியாவில் ஜனநாயகத்தை காப்பாற்றுவது போலவும் வேடமிட்டு அடிக்கும் கொள்ளையை கொள்ளையென்று சொல்வாரில்லை .ஆனால் சோமநாதரை வழிபட சென்ற கஜினியை கொள்ளியடித்ததாக் சொல்லுகிரறாக்கள் .17 முறைகள் ஒருவர் கொள்ளையடிக்க செல்லமாட்டார் .திருசெந்தூர் கோயிலில் வைரவேலை பக்தகோடிகள் கொள்ளையடித்தார்கள் .அதைப்போலவே கஜினியும் அடிக்கடி சோமநாதரை வழிபட சென்று இருப்பார் ஒருமுறை கொள்ளையடித்திருப்பார்.மற்ற 16 முறைகள் வழிபடவே சென்று இருக்க வேண்டும் .

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      //அதைப்போலவே கஜினியும் அடிக்கடி சோமநாதரை வழிபட சென்று இருப்பார்//

      எப்புடீ இப்படீ

      வாழ்த்துக்கள்!!

      நன்றி!!

      Delete
  43. சாறு////பாஜக 200 இடங்களில் வென்றால் அப்படித்தானே!!. என்ன்மோ வாய்ப்பே இல்லாத விடயம் போல் பேசுகிறீர்கள்.///

    பாஜக அமைச்சர்களில் 7 பேர் தோற்றுள்ளார்கள் .ஆனால் கோத்ரா வுக்கு பின்னர் நடந்த கலவர வழக்கில் தண்டிக்கப்பட்ட தால் ராஜினாம செய்த அம்ரித்சா வெற்றிபெற்றுள்ளார்.புரிகிறதா?மதவாதம் தான் வெற்றி பெற்றுள்ளது .இந்த மதவாதம் குஜராத்தை தாண்ட வாய்ப்பில்லை .அதனால் 200 இடங்கள் எல்லாம் பகல் கனவு .முதலில் பிஜேபி 100 இடங்களை ஜெயிக்கட்டும்.100 க்கு மேல் ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பில்லை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் .குஜராத்தில் 2009இல் கிடைத்த 15 இடங்கள் கூட கிடைக்க வாய்ப்பில்லை .உபியில் இழப்பு ,மத்திய பிரதேசத்தில் இழப்பு காத்திருக்கிறது

    ///மோடி பிடிகாத நிதிஷ் குமாருக்கு பாஜக பிடிக்குமாம்!!///
    பிகார் சட்டசபை தேர்தலில் பிஜேபியுடன் கூட்டணி வைத்திருந்த நிதிஷ்குமார் மோடி பிகாருக்குள் பிரச்சாரம் பண்ண வரக் கூடாது என்று தடுத்த கதை தெரியாதா?

    ////பாஜக நல்ல கட்சி, மோடி மட்டுமே மோசம் ஹி ஹி

    உங்ளுக்கு நல்ல மூளை!!////
    நான் அப்படி சொல்லவில்லை .மற்றவர்கள் மூடி வைத்திருந்ததை மோடி திறந்து விட்டார் அவ்வளவே .
    ///இன்னும் இரு வருடம் இருக்கிறது பார்க்கத்தானே போகிறோம்!!!////
    அப்படியா பயமாக இருக்கிறது .மோடி யின் அமைப்பான இந்தியா முஜாஹிதீன் எங்காவது குண்டு வைத்து விடக் கூடாது
    ////ஏங்க நானா சொல்றேன் நம்ம் சகோ இப்பூ தானே மோடியைத் தவிர அனைவருக்கும் வாய்ப்பு என்கிறார்.////

    மோடியின் வெற்றியை வைத்து ஆட்டம் போடாதீர்கள். அதற்கு என்ன விலைகொடுத்து இருக்கிறார்கள் என்பது பிஜெபிக்காரகளுக்கே தெரியும் .பிஜேபி முன்னணியினர் அப்படி ஒரு வாதத்தை இன்னும் ஏற்கவே இல்லை நீவிர் ஏன் துள்ளி குதிக்கிறீர் என்றுதான் கேட்டுள்ளேன்.
    ////பல தொலைக்காட்சியிலும் சொன்னதை வாய்ப்பு என்ற அளவில் எழுதினேன். இன்னும் இருவருடம் இருக்கிறது. எதுவும் நடக்கும்!!!.////
    எந்த தொலைகாட்சியில் என்ன வாய்ப்பை சொன்னார்கள்?

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,

      ஆமாம் ஒரு வாய்ப்பு எனக் குறிப்பிட்டதற்கே இப்படி அஞ்சுகிறீர்களே, மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது.ஜெயித்தால் என்ன ஆகும்??
      எப்படியும் 2014 தேர்தல் நடக்கும் அல்லவா???

      நன்றி!!

      Delete
  44. //மேலும் அன்று இரவு வீட்டில் சாப்பிட்டோம் சாப்பிட்ட பிறகு இறைச்சியின் எலும்புகளை எடுத்து தனியாக தாளில் காட்டி வைத்தார் .இதை காலையில் வெளியே கிளம்பும் பொழுது அவுட்டரில் போட வேண்டும் இல்லையெனில் வீட்டு உரிமையாளரிடம் சொல்லி கொடுத்து காலி பண்ணிவிடுவார்கள் இந்த ஏரியாவில் எங்கேயுமே நான் வெஜி சாப்பிடமுடியாது என்றார்.//
    ஊரோடு ஒட்ட ஒழுகுதல் என்பதை அவர் மதிக்கிறார் இதில் என்ன குறை கண்டீர்கள்.
    முதலில் வீடு தருவதில்லை என குறை கூற வேண்டியது. கிடைத்தபின் அடுத்த பிரச்சினை தொடங்குவது என்று இருந்தால் யார் தாங்குவார்?

    //மேலும் முஹம்மதின் படையெடுப்பு இந்து எதிர்ப்பால் அல்ல . அது அந்த காலங்களில் நிகழ்ந்த இரு அரசுக்கெதிரான போராட்டமாகவே பார்க்கப்பட வேண்டும்//
    மேற்கண்டது எதன் படி? ஷரியாவின் படியா? அல்லது IPC படியா?
    சரி, 1947 ன் ரத்தக் களரியினை எப்படி பார்க்க வேண்டும்.
    காஷ்மீர பண்டிட்களின் துரத்தலை எப்படி பார்க்க வேண்டும்?
    திரு. A. R. அந்துலே (அப்துல் ரஹ்மான் அந்துலே) அவர்கள் மகாராஷ்டிர முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எப்படி பார்க்க வேண்டும்.?
    திரு. Y. சாமுவேல் ராஜசேகர ரெட்டி அவர்கள் ஆந்திர முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எப்படி பார்க்க வேண்டும்.?

    //இந்துத்துவம் இல்லையென்றால் மோடி இல்லை . முஸ்லிம் எதிர்ப்பும் மனு தர்மமும்தான் இந்துத்துவத்தின் உயிர்நாடி , அந்த புள்ளியிலிருந்து நீங்கள் மோடியை நோக்குங்கள் மோடி எவ்வளவு அபாயகரமானவர் என்பது புரியும் .//
    தங்களின் கூற்று சரி என கொண்டால், இது ஏன் செல்லுபடி ஆகிறது என்று சற்று யோசித்து சொல்லுங்களேன்.

    உலகளாவிய கலீஃபா வும், காஃபிர் தூற்றல்களும், மத மாற்றல்களும், அதன் மூலமான ஆட்சியதிகார இச்சைகளும் இல்லையென்றால் _________ன் உயிர்நாடியே இல்லை. அந்த புள்ளியிலிருந்து நோக்குங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சகோ இட்டியம்,
      மூமின் என்றால் அப்படித்தான். பாருங்க எல்லாக் குண்டுவெடிப்பையும் இந்துத்வ அமைப்புகள் மேல் சுமத்துகின்றார். திருப்பி நாம் சொன்னாலோ,படத்தில் ஏதேனும் நடந்த விடயம் காட்டினாலோ பொங்கி விடுவார்கள்.

      பொறுப்போம்,ம்ம்ம்ம்

      வாய்மையே வெல்லும்!!
      நன்றி!!

      Delete
  45. சாறு //ஆகவே வட இந்தியாவில் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல் எடுபடுகிறது//

    குஜராத்தில் மட்டும் .1998 உடன் சரி.இப்போது குஜராத் தவிர மற்ற மாநிலங்கள் ஒருகாலத்திலும் எடுபடாது .குஜராத் மாநில முஸ்லிம்கள் ,தமிழக முஸ்லிம்களைப் போல அன்று .

    ReplyDelete
  46. iTTiAM///ஊரோடு ஒட்ட ஒழுகுதல் என்பதை அவர் மதிக்கிறார் இதில் என்ன குறை கண்டீர்கள்.
    முதலில் வீடு தருவதில்லை என குறை கூற வேண்டியது. கிடைத்தபின் அடுத்த பிரச்சினை தொடங்குவது என்று இருந்தால் யார் தாங்குவார்?////
    முஸ்லிம் ஏரியாக்களில் உள்ளவீடுகளை வாடகைக்கு கொடுத்தால் நீங்கள் நான்வெஜி சாப்பிட வேண்டும் என்றோ பூஜைகள் பண்ணக் கூடாது என்றோ கூற முடியுமா? ஊரோடு ஒட்ட ஒழுகுவார்களா?
    /மேலும் முஹம்மதின் படையெடுப்பு இந்து எதிர்ப்பால் அல்ல . அது அந்த காலங்களில் நிகழ்ந்த இரு அரசுக்கெதிரான போராட்டமாகவே பார்க்கப்பட வேண்டும்//
    மேற்கண்டது எதன் படி? ஷரியாவின் படியா? அல்லது IPC படியா?

    அசோகர் போரிட்டாரே அதன்படி

    ///சரி, 1947 ன் ரத்தக் களரியினை எப்படி பார்க்க வேண்டும்///.
    இந்து முஸ்லிம்களின் வெறியாட்டமாக பார்க்க வேண்டும்

    ///காஷ்மீர பண்டிட்களின் துரத்தலை எப்படி பார்க்க வேண்டும்?///
    காஷ்மீரிகளிடம்தான் கேட்க வேண்டும்.மேலும் இது பற்றி முன்னாள் நீதிபதி தார்குண்டே துக்ளக்கில் முன்பு ஒரு கட்டுரை எழுதியிருந்தார் .அதையும் நீங்கள் படிக்கக் வேண்டும் .

    ////திரு. A. R. அந்துலே (அப்துல் ரஹ்மான் அந்துலே) அவர்கள் மகாராஷ்டிர முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எப்படி பார்க்க வேண்டும்.?///
    காங்கிரஸ் வெற்றி பெற்றால் ,இந்திராகாந்தி அதன் தலைவாராக இருந்தால் யாரை வேண்டுமானாலும் முதல்வாராக நியமிக்கமுடியும் என்ற கோணத்தில் பார்க்க வேண்டும்.
    மேலும் அவர் முஸ்லிமாக் இருப்பதால் ஊழல்குற்றசாட்டுகள் நிருபிக்கபப்ட்டு 7ஆண்டுகள் தணடனைகள் பெற்றதையும் நமது முதல்வர் ஜெயலலிதாவை அவர்களை உச்ச்நீதிமன்றம் மன்னித்து விடுவதையும் எப்படிவேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளுங்கள்
    ////திரு. Y. சாமுவேல் ராஜசேகர ரெட்டி அவர்கள் ஆந்திர முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எப்படி பார்க்க வேண்டும்.?///
    ரெட்டி சமூகமாக பார்க்க வேண்டும் .
    ///தங்களின் கூற்று சரி என கொண்டால், இது ஏன் செல்லுபடி ஆகிறது என்று சற்று யோசித்து சொல்லுங்களேன்.////
    குஜராத்தில் மட்டுமே செல்லுபடியாகிறது .அவ்வாறெனில் குஜராத் முஸ்லிம்கள் மற்ற மாநில முஸ்லிம்கள் போலில்லை

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      கலக்குறீங்க!!. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

      1. முஸ்லிம்கள் செய்தது,செய்வது,செய்யப் போவது அனைத்துமே உலகில் எபோதும் சரியே!!

      2. காஃபிர்கள் சும்மா இருக்க வேண்டும்.

      ஹி ஹி இது தெரியாமல் நாங்கள் உளறுகிறோம் சரியா??

      நன்றி!!

      Delete
    2. ////காஷ்மீர பண்டிட்களின் துரத்தலை எப்படி பார்க்க வேண்டும்?///
      காஷ்மீரிகளிடம்தான் கேட்க வேண்டும்.////
      சரி,

      ////மேலும் முஹம்மதின் படையெடுப்பு இந்து எதிர்ப்பால் அல்ல//
      சரி, - ஷா இன் ஷா திரு. முஹம்மது கஜினி அவர்கள் வந்து சொல்லும் போது கேட்க வேண்டாமா?

      //அசோகர் போரிட்டாரே அதன்படி //
      சரி, அசோகர் எதன் படி போரிட்டார்? அல்லது இதையும் பேரரசர் திரு. அசோகர் அவர்கள் வந்து சொல்லும் போது கேட்டுக்கொள்ளலாமா?

      //இந்தியாவில் 800 ஆண்டுகள் முஸ்லிம்கள் ஆட்சி செய்தார்கள் என்பார்கள் .அது பொய் .//
      சரி,
      //நேருஜி அவர்கள் பாரசீகர் மற்றும் மலாய்களின் கலப்பு இனமான அவர்கள் அரை முஸ்லிம்கள் என்றே தனது நூலில் குறிப்பிடுகிறார்//
      சரி, (may be 800*1/2 = 400) இது சரியா வருமா?

      //குஜராத் மாநில முஸ்லிம்கள் ,தமிழக முஸ்லிம்களைப் போல அன்று//
      சரி.

      //அவர்கள் ஆட்சிய்க்கு வந்த நபி[ஸல்] அவர்களின் மகள் பாத்திமா வறுமையில் வாடிய சமயத்தில்//
      ஏன்?

      //இஸ்லாமின் உயிர்நாடி இங்குதான் இருக்கிறது ,இந்த புள்ளியிலிருந்து நோக்கலாம் //
      சரி.

      //முஸ்லிம் ஏரியாக்களில் உள்ளவீடுகளை வாடகைக்கு கொடுத்தால் நீங்கள் நான்வெஜி சாப்பிட வேண்டும் என்றோ பூஜைகள் பண்ணக் கூடாது என்றோ கூற முடியுமா? ஊரோடு ஒட்ட ஒழுகுவார்களா?//
      மேற்கண்டது எதன் படி? ஷரியாவின் படியா?

      //மேலும் அவர் முஸ்லிமாக் இருப்பதால் ஊழல்குற்றசாட்டுகள் நிருபிக்கபப்ட்டு 7ஆண்டுகள் தணடனைகள் பெற்றதையும் நமது முதல்வர் ஜெயலலிதாவை அவர்களை உச்ச்நீதிமன்றம் மன்னித்து விடுவதையும் எப்படிவேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளுங்கள் //
      சரி.

      //காங்கிரஸ் வெற்றி பெற்றால் ,இந்திராகாந்தி அதன் தலைவாராக இருந்தால் யாரை வேண்டுமானாலும் முதல்வாராக நியமிக்கமுடியும் என்ற கோணத்தில் பார்க்க வேண்டும்.//
      திருமதி. இந்திரா அவர்கள் யார்?? காங்கிரஸ் தலைவராக யாரால் தேர்ந்தெடுக்கப்பட்டார்?

      //////திரு. Y. சாமுவேல் ராஜசேகர ரெட்டி அவர்கள் ஆந்திர முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எப்படி பார்க்க வேண்டும்.?///
      ரெட்டி சமூகமாக பார்க்க வேண்டும் .////

      சரி, இப்போது திரு. நரேந்திர பாய் மோதி அவர்கள் குஜராத் முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எப்படி பார்க்க வேண்டும்.?

      Delete
    3. இட்டியம் ///சரி, இப்போது திரு. நரேந்திர பாய் மோதி அவர்கள் குஜராத் முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எப்படி பார்க்க வேண்டும்.?///
      அடடா ,என்ன மோசம் பண்ணிவிட்டோம் ,விவாதமே மோடிக்கு விழுந்த ஓட்டுக்கள் மதவாதா ஓட்டுக்கள் என்பதுதானே ,அப்படியே பார்க்கவேண்டும் .வேறு எப்படி பாத்து கொண்டு இருக்கிறீர்கள்?

      Delete
  47. ittiam///உலகளாவிய கலீஃபா வும், காஃபிர் தூற்றல்களும், மத மாற்றல்களும், அதன் மூலமான ஆட்சியதிகார இச்சைகளும் இல்லையென்றால் _________ன் உயிர்நாடியே இல்லை. அந்த புள்ளியிலிருந்து நோக்குங்கள்.///

    இந்தியாவில் 800 ஆண்டுகள் முஸ்லிம்கள் ஆட்சி செய்தார்கள் என்பார்கள் .அது பொய் .
    நேருஜி அவர்கள் பாரசீகர் மற்றும் மலாய்களின் கலப்பு இனமான அவர்கள் அரை முஸ்லிம்கள் என்றே தனது நூலில் குறிப்பிடுகிறார் .ஜாதி ,இன அடிப்படையில் வராத ஜோதிபாசுவின் 5 ஆண்டுகால ஆட்சி 25 ஆண்டுகளாக மக்களை ஈர்த்துள்ளது .நிதிஸ் 5 ஆண்டுகால ஆட்சி மூளும் 5ஆண்டுகள் நீடிக்கக் வைத்துள்ளது 800 ஆண்டுகாலம் ஆட்சி செய்தும் இவர்களால் மக்களை ஈர்க்க முடியவில்லை .
    தனக்கு போரில் கிடைத்த பங்குகள் அனைத்தும் அரசுவுக்கே சொந்தம்.தனது வாரிசுகளுக்கு அதில் உரிமைகள் இல்லை என்று அறிவித்தார்கல்முகமம்து நபி[ஸல்] அவர்கள் .அதைப்போல முகமமது நபி[ஸல்] அவர்கள் இரண்ர்ஹா பின்னர் அபுபக்கர் [ரலி] அவர்கள் ஆட்சிய்க்கு வந்த நபி[ஸல்] அவர்களின் மகள் பாத்திமா வறுமையில் வாடிய சமயத்தில் தனது தகப்பனாரின் சொத்தில் தனக்கு குறிப்பிட்ட நிலங்களை தருமாறு வேண்டிய சமயத்தில் ,அபுபக்கர் அதை மறுக்கிறார்.தன்னால் நீதி தவறமுடியாது என்று கூருகிறார்
    உமர்[ரலி ] அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நீண்ட அங்கி அணிந்த சமயத்தில் ஒரு பிரஜை கேட்கிறார் ,ஜனாதிபதி அவர்களே ,எங்களுக்கு போரில் கிடைத்த பங்கில் இடுப்பு அளவுதான் சட்டை தைக்க முடிந்தது .ஆனால் உங்களுக்கு கால் வரை அங்கி எங்ஙனம் கிடைத்தது நீங்கள் அதிக பங்கு எடுத்துக் கொண்டீர்களா? என்று கேட்கிறார.இல்லை எனது மகன் பங்கும் சேர்த்துத்தான் .அவரது பங்கை என்னிடம் கொடுத்துவிட்டார் என்று கூறுகிறார்
    இஸ்லாமின் உயிர்நாடி இங்குதான் இருக்கிறது ,இந்த புள்ளியிலிருந்து நோக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. இப்பூ,

      வரலாறும் தெரியலை,அரசியலும் தெரியலை வாய் மட்டும் வங்காளவிரிகுடா போல :-))

      கஜினி 17 முறை இந்தியாவின் பலப்பகுதிகளுக்கே படை எடுத்தார், சோம்நாத் மீது 2 முறை என நினைக்கிறேன்.

      மேலும்,மதுரா,கன்னோஜ்,தானேஷ்வர் எனப்பல கோயில்நகரங்களை சூறையாடியுள்ளார்,

      http://www.winentrance.com/General_Knowledge/History/Mahumud-Ghazni.html

      தமிழில் நான் எழுதியப்பதிவு,முழுதாக முடிக்கவில்லை இன்னும் வரும்.

      http://vovalpaarvai.blogspot.in/2012/09/1_27.html


      கஜினி மட்டும் அல்லாது, பிற்கால டெல்லி சுல்தான்கள், அவுரங்கசீப் என மற்றவர்களும் சோம்நாத் மீது படை எடுத்துள்ளனர், எனவே இஸ்லாமிய படை எடுப்பு ,குஜராத்தில் ஒரு வடுவாக இருக்கலாம்.

      அசோகர் போரிட்டதுடன் எல்லாம் கஜினியை ஒப்பிட எப்படி மனம் வருகிறதோ?

      அசோகர் போர்க்களத்தில் இருந்தவர்களுடன் மட்டுமே போரிட்டார், ஆனால் அக்கால இஸ்லாமிய படை எடுப்பிலோ சராசரி மக்கள், சரணடைந்தவர்கள் என அனைவரையும் கொன்றது.

      பெண்கள் அடிமைகளாக கைப்பற்றப்பட்டனர்.

      இதெல்லாம் அசோகர் எக்காலத்திலும் செய்யவில்லை.

      மேலும் இந்திய மன்னர்களுக்கு என ஒரு போர்மரபுண்டு,இரவில் சண்டையிட மாட்டார்கள், ஆனால் கஜினி இரவில் தான் தாக்குவார், விடிவதற்குள் ,நகரில் உள்ளவர்களை கொன்றுகுவித்துவிட்டு அகப்பட்டதை சுருட்டிக்கொண்டு ஓடுவதே தொழில். 3 நாட்களுக்கு மேல் இந்திய மண்ணில் அவர் நின்று போரிட்டதே இல்லை,காரணம் மற்ற மன்னர்கள் உதவிக்கு வரும் முன் இடத்தை காலி செய்யும் தந்திரம் அவ்வளவே.

      இன்னும் பல விவரங்கள் வரலாற்று ஆசிரியர்களால் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவை எல்லாம் படித்தால் கஜினி சண்டையிட்டது போரே அல்ல என எளிதாக புரியும்.

      ----------

      மோடி செல்வாக்கு குஜராத்தில் ஒன்றல்ல ,மூன்று முறை நிறுபிக்கப்பட்டுள்ளது என்றால் என்ன காரணம் அவருக்கு மாற்றாக காங்கிரசால் செயல்பட முடியாது என மக்கள் நினைப்பதே. ஆனால் உங்களைப்போன்றவர்கள் காங்கிரஸ் நடுநிலைமை என நினைத்துக்கொண்டு மதம் அடிப்படையில் ஊழல் கட்சியினை ஆதரிக்கிறீர்கள்.

      குஜராத் மக்கள் மதத்தினை விட ஊழல் தீங்கு என நினைக்கிறார்கள் எனலாம்.

      மோடி பெரும் நிறுவனங்களுக்கு ஆதரவானர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை,ஆனால் அதே நிலையில் மற்ற உட்கட்டமைப்புகளும் முன்னேறுவதால் மக்கள் காங்கிரசுடன் ஒப்பிட்டு நன்றாக இருப்பதாக நினைப்பதே மோடியின் வெற்றிக்கு காரணம்.

      மதவாதம் மட்டுமே எனில் ஒரு ஆட்சிகாலத்துக்கு பின் மாற்றி இருப்பார்கள்.

      இப்போது கர்நாடகாவிலும் தான் பிஜேபி ஆளுகிறது, அப்படியெனில் அங்கு எந்த இந்து-இஸ்லாமிய பிரிவினையை தூண்டி வந்தார்கள்,முந்தைய காங்கிரஸ் ஆட்சியை பார்த்து வெறுத்து பிஜேபியை கொண்டு வந்தார்கள், இப்போ பிஜேபியை பார்த்து வெறுத்துவிட்டார்கள் எனலாம், அடுத்த முறை காங்கிரசுக்கு தானே பழம் விழும்.

      இந்த நிலை குஜராத்தில் இல்லை, ஏன் எனில் மோடி இதற்கு முன்னால் வந்தவர்களை காட்டிலும் ஒப்பீட்டளவில் சிறப்பாக ஆள்கிறார் என்று "குஜராத் மக்கள்" நினைக்கிறார்கள்(நானில்லை).

      எல்லாமே ஒப்பீடு தான் , எரியிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி ,அவ்வளவு தான்.இது தான் ஜனநாயகத்தின் தேர்வு முறையாக காலம் காலமாக உள்ளது.
      ----------------

      ஹேமந்த் கர்கரே என உதாரணம் காட்டிக்கிட்டு இருக்கீங்களே, அவர் மகாராஷ்ட்ரா காவல் துறை ,மும்பையில் நடந்த தாக்குதலின் போது கொல்லப்பட்டார், குஜராத்தில் அல்ல ,சதியில் கொன்றார்கள் என்றால் மகாராஷ்டிரா அரசியல்வாதிகள் தானே செய்து இருக்கவேண்டும், அங்கு அப்போது ஆண்டது காங்கிரஸ் கூட்டணி ஆச்சே?

      அப்போ காங்கிரஸ் அரசியல்வாதிகள் இந்துத்துவாக்கு ஆதரவாக்க செயல்பட்டார்கள் என சொல்கிறீர்களா?

      அப்புறம் எப்படி காங்கிரசு நல்லவங்கன்னு சப்பைக்கட்டு கட்டிக்கிட்டு வரீங்க :-))

      Delete
  48. //அப்புறம் எப்படி காங்கிரசு நல்லவங்கன்னு ...... வரீங்க :-))//

    திரு. வவ்வால் அவர்களே,

    அவர் எங்கு அவ்வாறு சொன்னார். அவர்கள்தான் //தனக்கு போரில் கிடைத்த பங்குகள் அனைத்தும் ............இங்குதான் இருக்கிறது ,இந்த புள்ளியிலிருந்து நோக்கலாம்// என்கிறாரே. அதாவது நேரடியாக கலீஃபா தான்.

    ReplyDelete
  49. வைவாள் ////கஜினி 17 முறை இந்தியாவின் பலப்பகுதிகளுக்கே படை எடுத்தார், சோம்நாத் மீது 2 முறை என நினைக்கிறேன்.////

    கஜினி முகமதால் 17 முறை கொள்ளையடிக்கப்பட்ட சோமநாத் கோயில் குஜராத்தில் உள்ளது.
    இப்படி கூறியவர் உங்கள் அண்ணன் சார்வாகன் தான் .2 முறைதான் நொனைக்கிரென் என்று வரலாறு எழுதும் அற்புத பேரா,,,,,,,,,,,,,,,,,,,,,,,,சிறியர் வவ் ,,,வாலிடம் ஆலோசனை கேட்காமல் சார்வாகன் எழுதியதை நம்பி ஏமாந்துவிட்டேன்..ஒரு விசப்பாம்பு போல விசத்தை கக்கும் நீங்கள் எல்லாம் வரலாறு எழுதினால் நாடு உருப்படுமா?
    ///1001 இல் ஜெயபாலன் மீது படை எடுத்து பெஷாவருக்கு சென்றார், கடுமையாக நடைப்பெற்றப்போரில் 15,000 வீரர்களை கொன்று ஜயபாலனையும்,அரச குடும்பத்தினர் 15 பேரையும் கைது செய்து கூடவே 5,00,000 பெஷாவர் மக்களையும் அடிமைகளாக பிடித்துக்கொண்டு கஜினிக்கு சென்றார்.////
    வரலாற்று பேரா,,,,,,,சிறியர் எழுதுகிறார் .இதெல்லாம் மூன்று நாட்களில் நடந்ததாம் .கேட்டுக் கொள்ளுங்கள்
    1940இல் இந்தியாவின் மக்கள் தொகை 30 கோடி .
    ஆனால் பெஷாவர் என்ற குருநிலத்தின் மனனன் ஜெயபாலன் வசம் 15000 வீரர்கள் ,அந்த நாட்டில் மட்டும் மக்கள் 5 லட்சம் .இதில் ஜெயபாலின் உறவினர்கள் அடங்கமாட்டார்கள் .இவர்களை அடிமைகளாக பிடித்துக் கொண்டு யார் சோறு போடமுடியும்?

    பின்னர் மன்னர் ஜயபாலனின் உறவினர்கள் பேச்சு வார்த்தை நடத்தி 2,50,000 தினார்கள் மீட்பு தொகையாக கொடுத்து மன்னரை மீட்டு சென்றார்கள்.
    250000 தினார்களை 3 நாட்களில் ICICI வங்கியில் கொடுத்து மணி எக்சேஞ் பண்ணி கொடுத்து இருப்பார்கள் என்று நானும் நொனைக்கிரென்
    சாறு நீங்க என்ன நோனைக்கிறீங்க

    ReplyDelete
  50. சகோ வவ்வால் மிக்க நன்றி!!
    நாம் இப்பதிவில் சொல்லவந்தது இதுதான்.

    மோடி தொடர்ந்து மூன்றுமுறை வெற்றி பெற்றது எதைக் காட்டுகிறது??

    1. மோடி காங்கிரசு த்லைகளை விட சிறந்தவர் என குஜராத மக்கள் நினைத்து இருக்க்லாம்.

    2. மோடிதான் முஸ்லிம்களை நன்கு ஒடுக்குவார் என குஜராத் மக்கள் நினைத்து இருக்க்லாம்.

    நான் முதல் கருத்து உண்மையாக் இருந்தால் நல்லது, கடந்தகால தவறுகளை மறந்து அனைவரும் முன்னேறினால் நல்லது என்கிறோம்.


    ஆனால் நம் சகோக்கள் குஜராத் மக்கள் மோடியைக் கொண்டுவந்தது ஹி ஹி அதுக்குத்தான் என்கிறார்கள்.

    **8

    சரி அவர் பிரதமர் வேட்பாளர் ஆகும் வாய்ப்பு உள்ளதால் , என்ன செய்வோம் என மாற்றுக் கருத்துக்களையும் வைத்து இருக்கிறோம்.

    1. மோடியை ஏற்கலாம் 2.மாற்று தலைமை ஆதரிக்கலாம்.

    இதனை புரியாமல் மோடி நல்லாட்சி இல்லை முஸ்லிம்களை ஒழிக்கவே குஜராத்திகள் தேர்ந்தெடுத்து இந்தியா முழுதும் அதனை விரிவு படுத்த முடிவு செய்ததாகவும் ,அதற்கு நாம் பிரச்சாரம் செய்வது போல் விவாதம் செய்கிறார்களே!!

    நன்றாக விளக்கினீர் சகோ வவ்வால்!!மிக்க நன்றி!!

    நம்ம சகோக்களின் விவாதங்களை அனைத்து இந்திய மொழியாக்கம் செய்து வெளியிட்டால் மோடி 300 சீட்டு தனித்தே ஜெயிப்பார்!!!

    ஒருவரை எப்படி எதிர்க்க வேண்டும் என்பது கூட தெரியாத அப்பாவிகள்!!


    சிந்திக்க மாட்டீர்களா!!!!!

    நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. சாறு ///ஒருவரை எப்படி எதிர்க்க வேண்டும் என்பது கூட தெரியாத அப்பாவிகள்!!///
      காங்கிரஸ்காரர்களுக்கு அது தெரியாமல்தான் தோற்றுக் கொண்டு இருக்கிறார்கள் ,அவர்களுக்கு நீங்கள் பாடம் எடுத்தால் புண்ணியம் கோடி

      Delete
    2. சகோ இப்பூ,
      நாம் தயார். காங்கிரசு கேட்காது. உட்கட்சி ஜன்நாயகம்,ஒரு தலைவன் ஒரு மாநிலத்துக்கு என்பதே காங்கிரசில் கிடையாது. ஒரு த்லைவன், ஒரு வெளிப்ப்டையான செயல் திட்டம், இருந்தால் எக்கட்சியும் மக்களின் அபிமானம் பெறும்.

      ஆனால் ஏதேனும் சாதிகள்+ சிறுபான்மையினரை ஓட்டு வங்கி ஆக்கியே வெற்றி பெற்று வந்தது.

      மோடி அதனை கொஞ்சம் மாத்தி யோசித்தார்,காங்கிரசு கந்தல் ஆனது!!

      நன்றி!!!

      Delete
  51. அசோகர் போரிட்டதுடன் எல்லாம் கஜினியை ஒப்பிட எப்படி மனம் வருகிறதோ?
    அசோகரும் 15 பொண்டாட்டி கட்டினவர்தான் .அவரது மூத்த மனைவி மகன் குகன் மீது கடைசியாக கட்டிய இளம் மனைவிக்கு காதலாம் .மனைவியே 15 என்றால் அந்தப்புர நாயகி எத்தனை பேர்களோ .அசோகர் சரியாக 10 amமுதல் 5 pm வரை போரிட்டார் என்று வரலாற்று நூல்கள் தெளிவாக் அறிவிக்க்ன்றன

    கஜினி முகம்மது எப்படி போரிட்டார் எப்படி கொள்ளையடித்தார் என்பதெல்லாம் எனக்கு தேவை இல்லை .அவர்கள் முஸ்லிம்களும் இல்லை .அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் முஸ்லிம்களாக நடக்கவும் இல்லை ஆதலால அது பற்றி பேசவும் நான் தயாராக் இல்லை .ஏன் செத்துப்போன வரலாற்றை தூக்கி கொண்டு வந்து மக்களிடம் வெறுப்பை வளர்த்து ஒட்டு வாங்கும் வேலையை கைவிட்டுவிட்டு மோடியின் சாதனைகளுக்கு தரவு காட்டுங்கள் .மோடி ஒரு இனவெறி ஒட்டு வாங்கும் வெறியர் என்பதுதான் உண்மை .அவர் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசினால் அவரது ஆட்டம் குளோஸ் .நீங்கள் அவர் சாதனைகளை வைத்து ஓட்டு வாங்கியது உண்மை என்றால் முஸ்லிம்களுக்கு சாதகமாக் பேசினாலும் அந்த ஓட்டு களும் கிடைக்கும் முஸ்லிம்கள் ஓட்டுகளும் கிடைக்கும் .எங்கே மோடியை பேச சொல்லுங்கள் பார்ப்போம் அத்வானி சாகிப் அமைச்சராக சென்று பாகிஸ்தானிக்கு ஆதரவாக் கருத்து தெரிவித்து மாடிக் கொண்டது தெரியுமா?

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      பதிவுக்கு தொடர்பாக கருத்து சொல்லுங்கள்.நான் ஏன் மதம் சாராமல் விவாதம் மோடி வெற்றி பெற்றது எப்படி? அது இந்தியா முழுதும் செல்லுபடி ஆகுமா? என்பதையே விவாதிக்க விரும்புகிறேன்.

      குஜராத் வெற்றிக்கு இருவாய்ப்புகள் மட்டுமே

      1. மோடி காங்கிரசை விட சிறந்த்வர் என மக்களால் ஏற்கப் படுகிறார்.

      2. குஜராத் மக்களில் பெரும்பானம்யினருக்கு முஸ்லிம்களைப் பிடிக்காது .


      முதல் கருத்துக்கு சில புள்ளி விவரம் உதவும் என்றாலும், அது குஜராத மக்களின் மன்நிலையை பிரதிபலிக்காது!!.
      மக்கள் புள்ளி விவரம் பார்த்து ஓட்டு அளிப்பது இல்லை.

      இரண்டாம் கருத்துக்கு வட இந்தியாவில் முஸ்லிம் எதிப்பு மனநிலை உண்டு எனில் அதன் காரணம் படை எடுப்பும்,கொள்ளை அடித்த‌லும் என திரும்பியது.
      கஜினி முக்மது 17 முறை படை எடுத்தது கொள்ளை அடிக்கவே, வவ்வால் சொன்னது சரியே சோம்நாத் மீது இருமுறைதான்.

      சோம்நாத் மீது பல முஸ்லிம் அரசர்கள் படை எடுத்து இருப்பதையும் குறிப்பிட்டு இருக்கிறேன்.அது மக்களின் மனநிலையில் காலம் காலமாக இருக்கும். இந்திய பாகிஸ்தான் பிரிவினை வன்முறை தமிழகத்தில் இருப்போருக்கு தெரியாது!! ஆனால் வட இந்தியர்களுக்கு தெரியும்!!

      குஜராத் மக்களின் மனநிலை அறியவே இந்த விவாதம்.

      உங்களின் நிலைப்பாட்டை சொல்லி விடுங்களேன்.

      குஜராத் மக்கள் ஏன் மோடியைத் மூன்றாம் முறையாக தேர்ந்து எடுத்தார்கள்??

      கொள்ளையன் கஜினி முக்மதுக்கும் ஆதரவு தெர்வித்து மோடியை பிரத்மர் ஆக்காதீர்கள்.

      கஜினி முகமது என்ற கொள்ளையனின் ஆத்ரவாளர்களிடம் இருந்து தப்ப ஒரே வழி திரு மோடி என்றால் நன்றாக எடுபடும்!! ஹி ஹி

      நன்றி!!

      Delete
  52. வௌவால் ///ஹேமந்த் கர்கரே என உதாரணம் காட்டிக்கிட்டு இருக்கீங்களே, அவர் மகாராஷ்ட்ரா காவல் துறை ,மும்பையில் நடந்த தாக்குதலின் போது கொல்லப்பட்டார், குஜராத்தில் அல்ல ,சதியில் கொன்றார்கள் என்றால் மகாராஷ்டிரா அரசியல்வாதிகள் தானே செய்து இருக்கவேண்டும், அங்கு அப்போது ஆண்டது காங்கிரஸ் கூட்டணி ஆச்சே?///
    ஆமாம் ,ஆனால் மகாராஷ்டிர முதல்வர் கர்கறேயின் மனைவியை சந்திக்கும் முன்பே மோடி ஓடி வந்து அவரது மனைவிக்கு ஒரு கோடி கொடுக்க முன் வந்த பொழுது விரட்டியகதை அறியமாட்டீரா?
    மகராஷ்டிர அரசுதானே அவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும்?இவருக்கு இங்கே எனின் வேலை .அந்த அம்மா மோடியிடம் கோடி என்றதும் வான்கிவிட்டரா? கர்கறேவுக்கு ஹிந்துத்துக்களிடமிருந்து கொலை மிரட்டல்கள் வந்தது திருமதி கவிதாவுக்கு தெரியாத என்ன ?
    தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தகவல் பெற்று பலகேள்விகளை வைத்தாரே அதற்கு இதுவரை இந்த அரசுகள் பதில் சொல்லி உள்ளனவா?

    ReplyDelete
    Replies
    1. http://www.indianexpress.com/news/-modi-offered-moral-support-and-left-/392407/0

      The CM had dropped in on his own at the late ATS chief’s home, after the officer’s kin had thrice told his officials they did not wish to meet anyone

      Chief Minister Narendra Modi had made no offer of any compensation when he called on the family of slain Mumbai Anti-Terror Squad (ATS) chief Hemant Karkare on Friday, his widow Kavita Karkare told Newsline on Saturday.

      Karkare’s family sources said Modi had dropped in on his own at the grieving family’s home, after the officer's kin had thrice told his officials that they had no wish to meet anyone.

      Karkare’s widow and relatives were speaking to this paper while Modi is courting a controversy over reports that Kavita Karkare had declined to accept any part of the Rs 1-crore Sanman Raashi he had offered to the kin of the 14 policemen killed in the firefight with terrorists in Mumbai.

      Modi’s visit to the bereaved family has larger implications. After the Mumbai ATS claimed to have uncovered a full-fledged Hindu terror network behind the Malegaon bomb blast — and arrested a Lieutenant Colonel and a Sadhvi linked to the saffron brigade, among others — Modi has been repeatedly accusing it of bias and worse.

      Modi had even alleged that the army officer’s arrest by the ATS amounted to trying to demoralise the Indian Army at the cost of national interest : “Jo kaam Pakistan bees saal tak nahi kar paya, Hindustan ne bees din me kiya,” Modi, the BJP’s star campaigner, had said in Assembly election meetings at Madhya Pradesh and Chhattisgarh recently. He had also gone on to claim that the arrests made by the Mumbai ATS were politically motivated, at the behest of the Congress.

      A close family source at Karkare’s home disclosed that Modi had gone there on his own, even after family members thrice declined requests that he be facilitated to meet and offer condolences. “The state protocol officer called up first and we informed him that we did not wish to meet anyone. Two more calls from Modi’s office followed and we responded the same way. Modi then came in on his own, unannounced,” the source said.

      Kavita said she wanted no controversy.

      “It is part of our culture to be hospitable to visitors, and Modi is an elderly person. He came home, sat on a chair in the living room for a while and then told my son Akash : Aap ko koyi madad chahiye to bataiyega. He offered moral support and then left. At no point did he mention anything about any monetary support, at least not to me,” Kavita told Newsline.

      An official attached to Modi’s office said the chief minister could not personally meet the widow of the Maharashtra ATS chief, as she was in an inner room of the house.

      “So the CM garlanded Karkare's photo kept in the room and came out,” he said.

      The official added: “ The CM announced Rs 1 crore as a Sanmaan Rashi in honour of all the 14 Maharashtra police personnel who laid down their lives, and not for just one individual.”

      He added: “The money will be handed over to the Mahrashtra government, and it is up to them to decide how to distribute it.”

      Delete
    2. http://www.indianexpress.com/news/new-wikileak-us-felt-cong-backed--conspiracy-theory-to-please-muslims/723492/0
      கர்கரே விடயம் ஒரு சதிக் கோட்பாடே விக்கிலீக்ஸ்

      The United States believed that the Congress party backed the “outlandish” conspiracy theories over the death of Maharashtra ATS chief Hemant Karkare in the 26/11 attack for “crass” political gains.

      A diplomatic cable that is part of the latest disclosures by WikiLeaks, reveals that the then US Ambassador to India, David Mulford, wrote to Washington that the Congress, despite having done well in the recent state elections, made a “cynical political calculation” to boost the conspiracy theory.

      The secret cable — sent a month after the Mumbai terrorist attack and revealed, extraordinarily, the day after senior Congress leader Digvijay Singh told The Indian Express that his first “shocked and demoralised” reaction on hearing of Karkare’s death had been ‘Oh my God, they (rightwing Hindu groups opposed to his probe into the Malegaon bombing) have killed him’ — shows that the US thought that the Congress went on to “implicitly endorse the conspiracy” after initially distancing itself from the then minority affairs minister AR Antulay’s “completely unsubstantiated claims”.

      Days after Karkare’s assassination, Antulay had said the chief of the Maharashtra ATS could have been a victim of “terrorism or terrorism plus something”.

      “Antulay’s completely unsubstantiated claims gained support in the conspiracy-minded Indian-Muslim community. Hoping to foster that support for upcoming national elections, the Congress Party cynically pulled back from its original dismissal and lent credence to the conspiracy,” Mulford wrote.

      However, regardless of later dismissals of Antulay’s claim by the Congress, the “Indian Muslim community will continue to believe they are unfairly targeted by law enforcement and that those who investigate the truth are silenced”, the Ambassador added.

      According to Mulford, the Congress’s about-turn from initially dismissing Antulay’s statement was based on narrow identity politics.

      “As support seemed to swell among Muslims for Antulay’s unsubstantiated claims, crass political opportunism swayed the thinking of some Congress Party leaders. What’s more, the party made the cynical political calculation to lend credence to the conspiracy even after its recent emboldening state elections victories,” reads the envoy’s cable.

      The Congress, Mulford wrote, “will readily stoop to the old caste/religious-based politics if it feels it is in its interest... While cooler heads eventually prevailed within the Congress leadership, the idea that the party would entertain such outlandish claims proved once again that many party leaders are still wedded to the old identity politics”.

      Antulay, the cable reads, was “probably bewildered to find that his remarks, similar in vein to what he would have routinely made in the past to attack the BJP, created such a furor this time”.

      On Saturday, the Congress said that the purported contents of the leaked cable were communication between a US Ambassador and his government, to which it could not react.

      “All Ambassadors and High Commissioners keep on giving reports to their respective governments. This is between the two of them (Mulford and the US government). Any responsible party cannot react to claims made by anybody, which are not authenticated,” Congress media department chairman Janardan Dwivedi said.

      Delete
  53. வாவ் ///மதவாதம் மட்டுமே எனில் ஒரு ஆட்சிகாலத்துக்கு பின் மாற்றி இருப்பார்கள்.////
    மோடி முஸ்லிம்களுக்கு சாதமாக நடந்தால் மோடியை மாற்றிவிடுவார்கள்


    ///இப்போது கர்நாடகாவிலும் தான் பிஜேபி ஆளுகிறது, அப்படியெனில் அங்கு எந்த இந்து-இஸ்லாமிய பிரிவினையை தூண்டி வந்தார்கள்,முந்தைய காங்கிரஸ் ஆட்சியை பார்த்து வெறுத்து பிஜேபியை கொண்டு வந்தார்கள், இப்போ பிஜேபியை பார்த்து வெறுத்துவிட்டார்கள் எனலாம், அடுத்த முறை காங்கிரசுக்கு தானே பழம் விழும்.///
    இது கர்நாடகம் மட்டும் அல்ல குஜராத் தவிர ராஜஸ்தான் ம.பி சட்டீஸ்கர் ஏன் இப்போது ஹிமாச்சல் என்று எள்;ல மாநிலங்களிலும் நடக்கக் கூடியதே .

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,

      ஏன் குஜராத் மட்டும் விதிவிலக்கு??, ஓ தேர்தல் முடிந்து விட்டதா!!!.
      அரசியலில் எதுவும் நடக்கும், ஆகவே பொறுத்து இருந்து பார்ப்போம்!!.

      குஜராத் 26 எம்.பி தொகுதிகளில் பாஜக எத்த‌னை ஜெயிக்கும் வாய்ப்புய் ? நான் குறைந்தது 16 என்கிறேன். நீங்க ஒரு எண் சொல்லுங்க?

      தமிழ்நாட்டில் எது ஜெயிக்கும்? பாஜகவுக்கு தேர்தலுக்கு பிறகு ஆதரவு அளிக்கும் கட்சிக்கு வாக்களிக்க கூடாது என அண்ணன் ஒரு போராட்டம் நடத்துவாரா?? அப்படி அளித்தால் என்ன ஆகும்?

      ஏன் அண்ணன் குஜராத் போய் மோடிக்கு எதிராக பிரசாரம் செய்யவில்லை?

      செய்து இருந்தால் இன்னும் ஓட்டு அதிகரிக்குமா?

      மோடியினால் உங்களுக்கு தூக்கம் போச்சு போல தெரியுதே!!

      நன்றி!!

      Delete
  54. சாறு ///நம்ம சகோக்களின் விவாதங்களை அனைத்து இந்திய மொழியாக்கம் செய்து வெளியிட்டால் மோடி 300 சீட்டு தனித்தே ஜெயிப்பார்!!!///
    சே கணித்துவிட்டார் அறிவுஜீவி .
    ஓஹோ இதற்காகத்தான் இந்த விவாதமா?மோடியை பற்றி நீங்களோ நானோ சொல்லிதேரிய வேண்டிய அவசியமில்லை..திருமதி கவிதா ஹரே பாண்ட்யாவின் மனைவி சாக்சேனா மனைவி முதல் இந்தியர்கள் பெரும்பாலோர் அறிவார்கள் ..ஆதலால் நீங்கள் மொழியாக்கம் செய்யவேண்டிய அவசியம் இருக்காது
    சாறு உங்களது வரலாற்று பேரா,,,,,,,சிறியர் இடம் கஜினி 500000 லட்சம் பேர்களை கைது செய்து எங்கு கொண்டு 10 தினாருக்கு வித்தார் .அதுவரை அவர்களுக்கு சாப்பாட்டு எல்லாம் எப்படி போட்டார்கள் என்று கேட்டு சொல்லுங்கள்

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      மோடியை எதிர்க்க ஏன் காஃபிர் பெண்களின் பின்னால் ஒளிய வேண்டும்??. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

      திருமதி பாண்ட்யாவின் வாதம் குஜராத மக்களிடம் எடுபடவில்லையே!!


      ஆகவே மோடி பிரதமர் ஆகாமல் தடுக்க அண்ணணின் அதிரடி செயல் திட்டம் என்ன ??

      சீக்கிரம் சொல்லுங்கள்!! மிக்க ஆவலாக இருக்கிறது!!

      நன்றி!!

      Delete
  55. http://www.infinityfoundation.com/ECITTarikhYaminiframeset.htm

    Tarikh Yamini, or Kitabu-l Yamini of Abu Nasr Muhammad ibn Muhammad al Jabbaru-l 'Utbi.
    In The History of India as Told by its own Historians. The Posthumous Papers of the Late Sir H. M. Elliot. John Dowson, ed. 1st ed. 1867. 2nd ed., Calcutta: Susil Gupta, 1956, vol. 1, pp. 12-47.

    The Tarikh Yamini, also known as the Kitabu-l Yamini, is an important early history of Muslim rule in India; it is a celebrated work and an major sources for later authors who wrote on the Ghaznivite period. Its author, Al-'Utbi, lived during the late tenth and early eleventh centuries. He was a member of the aristocratic 'Utba clan, members of which held important offices under the Samanis. He himself was Secretary to the Sultan Mahmud. He thus played an important role in the government at Ghazni, and no doubt had first hand knowledge of many of the events he described, at least those that took place in the capital. His work covers the entire reign of the first sultan of Ghazni Nasiru-d din Subuktigin, and of his son Mahmud up to the year 410 H. (1020 CE).
    **
    The lengthy excerpts included here deal with the numerous raids of Amir Subuktigin of Ghazni (in modern Afghanistan) and his son and successor, Sultan Mahmud. Amir Subuktigin made his first of many raids into India in 376 H. (986-87 CE), and was assisted by his son Mahmud in many of them. Mahmud, after succeeding his father to throne of Ghaznî, in 997 CE, continued his father's policy and conducted many more raids until his death in 1030 CE. His numerous incursions into India were largely raids designed to capture spoil in material wealth, slaves and livestock. He is portrayed as a zealous Muslim eager to destroy "idol temples", but this was probably justification for pillage, since these activities contravened the earlier Arab policy of granting Hindus and Buddhists protected dhimmi status. These raids generally were not conquests resulting in annexation of territory, with the exception of the Punjab,
    ...
    The enemy of God, Jaipal, and his children and grandchildren, and nephews, and the chief men of his tribe, and his relatives, were taken prisoners, and being strongly bound with ropes, were carried before the Sultan, like as evildoers, on whose faces the fumes of infidelity are evident, who are covered with the vapours of misfortune, will be bound and carried to Hell. Some had their arms forcibly tied behind their backs, some were seized by the cheek, some were driven by blows on the neck. The necklace was taken off the neck of Jaipal, composed of large pearls and shining gems and rubies set in gold, of which the value was two hundred thousand dinars; and twice that value was obtained from the necks of those of his relatives who were taken prisoners, or slain, and had become the food of the mouths of hyenas and vultures. God also bestowed upon his friends such an amount of booty as was beyond all bounds and all calculation, including five hundred thousand slaves, beautiful men and women. The Sultan returned with his followers to his camp, having plundered immensely, by God's aid, having obtained the victory, and thankful to God, the lord of the universe. For the Almighty had given them victory over a province of the country of Rind, broader and longer and more fertile than Khurasan. This splendid [p. 23] and celebrated action took place 'on Thursday, the 8th of Muharram, 392 H. (27th November, A.D. 1001).

    After the victory, the Sultan directed that the polluted infidel, Jaipal, should be paraded about, so that his sons and chieftains might see him in that condition of shame, bonds, and disgrace; and that the fear of Islam might fly abroad through the country of the infidels. He then entered into conditions of peace with him, after demanding fifty elephants, and took from him as hostages his son and grandson, till he should fulfill the conditions imposed upon him.
    **
    பாருங்க இப்பூ இதை எல்லாம் வட இந்தியர்கள் இன்னும் நினைவு கூறுகின்றார்.

    நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. அடிமை விடயம் மட்டும் மேலே சொன்ன விடயத்தில் இருந்து வெட்டி ஒட்டுகிறேன்

      God also bestowed upon his friends such an amount of booty as was beyond all bounds and all calculation, including five hundred thousand slaves, beautiful men and women.

      ஏக இறைவன் கணக்கிற்கு அடங்காத கொள்ளைப்பொருளையும் ,500,000 [5 இலட்சம்]அழகிய ஆண் ,பெண் அடிமைகளையும் அடியார்களுக்கு அளித்தான்.
      mmmmmmmmmmm

      Delete

      Delete
    2. சாறு
      ///ஏக இறைவன் கணக்கிற்கு அடங்காத கொள்ளைப்பொருளையும் ,500,000 [5 இலட்சம்]அழகிய ஆண் ,பெண் அடிமைகளையும் அடியார்களுக்கு அளித்தான்.////
      வரலாறு என்ற பெயரில் எழுதிவைத்த எல்லாம் வரலாறு தானா?அதுவும் எலியாட் போன்ற ஆங்கிலேயர்கள் இஸ்லாத்தைப் பற்றி எழுதுவது என்றால் அல்வா சாப்பிடுற மாதிரி.
      அதற்கு இந்திய முஜாஹிதீன் போல ஒரு உத்பியை கையில் வைத்திருப்பார்கள்.இராக் எண்ணெய் கொள்ளையும் வரலாற்றில் என்ன எழுதுவார்கள்? பேரழிவு ஆயுதங்கள் வைத்து உலகை அழிக்க நினைத்த சதாமை ஒழிக்க அமெரிக்க பல வீரர்களை இழந்தது உலகை காப்பாற்றியது என்றுதான் எழுதுவார்கள் நம்ம பாத்திட்டு இருக்கிற இன்றைய செய்தி நாளைய வரலாறு வின் லட்சணம் இப்படி.500000 கைதிகளை பிடித்து செல்ல கஜினி 10 லட்ச வீரர்களுடன் வந்திருக்க வேண்டும் .இந்த 5 லட்சம் அழகிய ஆண்பெண் அடிமைகளையும் 3 நாட்களில் இந்திய எல்லையை தாண்ட வேண்டும் .கொள்ளைஅடித்த பொருட்கள் வேறு உள்ளது பல அந்த 5 லட்ச கைதிகளும் ஒரே இடத்தில் இருந்தால்தான் ஒரே நாளில் கைது செய்திருக்க முடியும் .11 ஆம் நூற்றாண்டில் ஒரே நகரத்தில் 5லட்ச மக்கள் வாழ வாய்ப்புகள் இருந்ததா? 5 லட்ச கைதிகளையும் நடை பயனமாக மூன்று நாட்களில் குறைந்த பட்ச 500 கிலோமீட்டர தூரம் ஓட்டி செல்லமுடியுமா? கேழ்வரகில் நெய்வடிகிறது என்றால் கேட்பார்க்கு மதி எங்கே போயிற்று ?அதுவும் அறிவை சீவிசீவி ஆய்வு செய்யும் பரிணாம பண்டாரங்களுக்கு எங்கு போயிற்று?

      Delete
  56. இப்பூ,

    பேசுறது எல்லாம் தப்பு!

    கஜினியின் வரலாற்றை நான் உருவாக்கவில்லை இருப்பதை எடுத்து எழுதினேன், அவர் வரலாறு இம்புட்டு மோசமாக இருந்தால் நானா பொறுப்பூ?

    //1940இல் இந்தியாவின் மக்கள் தொகை 30 கோடி .//

    கஜினி 11 ஆம் ந்நூற்றாண்டு நீர் என்னாத்துக்கு 1940 இல் 30 கோடினு இழுவையை போடுறீர்?

    #//அசோகரும் 15 பொண்டாட்டி கட்டினவர்தான் .அவரது மூத்த மனைவி மகன் குகன் மீது கடைசியாக கட்டிய இளம் மனைவிக்கு காதலாம் .மனைவியே 15 என்றால் அந்தப்புர நாயகி எத்தனை பேர்களோ//

    ஓய் கண்ணாடி ஊட்டுல இருந்துகின்னு கல்லெறியலாமா?

    இறைத்தூதர்னு சொல்லிக்கிட்டவருக்கு 24 பொண்டாட்டி ,அதில் 6 வயசு பொண்ணும் உண்டு,வளர்ப்பு மகனின் முன்னால் மனைவியும் உண்டு :-))

    அசோகர் என்ன இறைத்தூதர்னு சொல்லிக்கிட்டாரா? அவர் ஒரு மன்னர் ,ஆயிரம் பொண்டாட்டி கூட வச்சிருக்கலாம், அது எதுக்கு இப்போ?

    கஜினி முகமது ஏகப்பட்ட அடிமை பெண்களை வச்சிக்கிட்டார் அதை கூட நான் சொல்லவில்லை ,சொல்ல வைக்கிறீர் :-))

    #மோடி எப்படி பேசனும்னு நீரோ,நானோ எப்படி சொல்ல, அவருக்கு எவ்ளோ ஓட்டு வாங்கினா போதுமோ அதுக்கு ஏத்தாப்போல பேசுறார்.பெரும்பான்மைக்கு ஏத்தாபோல தான் எந்த அரசியல்வாதியும் பேசுவான், அதைப்புரிஞ்சுக்கனும்.

    குஜராத்தில் மோடி மட்டும் மதவாதியில்லை ,அம்மாநில மக்கள் எல்லாமே மதவாதிகள்னு நீர் சொல்லுகிறீரா?

    வெறும் மதவாதத்தினை வைத்து மட்டும் 3 முறை ஆட்சிக்கு வர முடியாது.அதே சமயம் அவருக்கு மாற்று ஆக வேறு தலைவர்கள் உருவாகவே இல்லை,காங்கிரசால் ஏன் முடியாமல் போச்சு?

    # நீர் தான் மோடியால் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டார் போல பேசினீர், காங்கிரஸ் ஆட்சி நடைப்பெற்ற மாநிலத்தில் எப்படி சாத்தியம், அப்படி நடந்திருந்தால் இதான் சாக்குன்னு காங்கிரஸ் துப்பறிஞ்சு மோடியை உள்ளப்போட்டிருக்காது?

    அப்போ காங்கிரசும் கூட்டா?

    பணம் கொடுக்க முன் வந்தது அரசியல் ஸ்டண்ட் ,அதை வேண்டாம்னு சொன்னால் அவர்கள் விருப்பம்.

    //தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தகவல் பெற்று பலகேள்விகளை வைத்தாரே அதற்கு இதுவரை இந்த அரசுகள் பதில் சொல்லி உள்ளனவா?//

    மும்பையில் ஊடுருவி தாக்குதல் நடக்கவே இல்லை எல்லாம் கதைனு சொல்லுகிறீர்களா? அப்படினா மத்தியில், மகாராஷ்டிரா மாநிலத்தில் என இரண்டு இடத்திலும் காங்கிரஸ் தானே இருக்கு :-))

    நீர் தானே காங்கிரஸ் ஆதாரவாளர் ,அவர்களையே என்னப்பதில்னு கேளும் :-))

    #//இது கர்நாடகம் மட்டும் அல்ல குஜராத் தவிர ராஜஸ்தான் ம.பி சட்டீஸ்கர் ஏன் இப்போது ஹிமாச்சல் என்று எள்;ல மாநிலங்களிலும் நடக்கக் கூடியதே .//

    அப்போ ஏன் குஜராத்தில் முடியாது, அதற்கு காரணம் மக்களா இல்லை மோடியா?

    பெரும்பான்மை மக்களின் தேர்வாக ஒருவர் இருந்தால் யார் என்ன செய்ய முடியும்?

    # அடிமைகளை கொண்டு போகும் போது உணவு, தண்ணீர் இல்லாமல் செத்தால் தூக்கி போட்டுவிட்டு போயிடுவார்கள், கடைசியா ஊர் போய் சேர்ந்த எண்ணிக்கை அது.

    உமக்கு எலிமெண்டரி ஸ்கூல் லெவலில் வரலாற்று பாடம் எடுக்கனும் போல இருக்கே :-))
    --------------

    சார்வாகன்,

    //1. மோடி காங்கிரசை விட சிறந்த்வர் என மக்களால் ஏற்கப் படுகிறார்.//

    இதான் முக்கியமான காரணம், எனது முதல் பின்னூட்டத்திலும் இதான் சொல்லியிருப்பேன். மக்களுக்கு காங்கிரசை விட மோடி நல்ல தேர்வாக்க தெரிகிறார்ர்.

    ஆங்கில தரவுகளை போட்டு இப்புக்கு ஆப்பு வைத்ததற்கு நன்றி!

    நான் பல ஆங்கில மூலங்களை ஒப்பீட்டே பதிவு எழுதியுள்ளேன், மூலங்களையும் குறிப்பிட்டே இருப்பேன்,எதுவும் எனது சொந்த சரக்கல்ல.
    --------------
    இட்டியம்,

    காலீபா ஆட்சிக்கு சவுதியே இப்போ ஒத்துக்காது ,இந்தியாவில் வேண்டுமாம், நல்ல காமெடி!

    ReplyDelete
  57. வாவ் ///கஜினி 11 ஆம் ந்நூற்றாண்டு நீர் என்னாத்துக்கு 1940 இல் 30 கோடினு இழுவையை போடுறீர்?//

    1940 இலே 30 கோடி என்றால் 1000 ஆம் ஆண்டில் பெசாவரில் மட்டும் 500000 லட்ச மக்களும் 15000 வீரர்களும் 15 ராஜ குடுமபத்தினரும் அதுபோக அவர்களை மீட்க உறவினர்களும் வாழ்ந்திருக்க சாத்தியமா?

    ///அவர் ஒரு மன்னர் ,ஆயிரம் பொண்டாட்டி கூட வச்சிருக்கலாம், அது எதுக்கு இப்போ?///
    இதைத்தான் கேட்டேன் .என்னவோ அவர் எந்த பெண்களையும் தொடமாட்டார் என்று சொன்னது போல காதில் விழுந்தது

    ////குஜராத்தில் மோடி மட்டும் மதவாதியில்லை ,அம்மாநில மக்கள் எல்லாமே மதவாதிகள்னு நீர் சொல்லுகிறீரா?///
    அந்த மாநிலத்தில் 30 முதல் 40 சதவீத மக்கள் மதவாதிகள் .ஓட்டுக்கள் நிலையானது அதாவது மதவாத வாக்கு வங்கியில் இருப்பாக வைக்கப்பட்டுள்ளது

    ReplyDelete
  58. //மும்பையில் ஊடுருவி தாக்குதல் நடக்கவே இல்லை எல்லாம் கதைனு சொல்லுகிறீர்களா? அப்படினா மத்தியில், மகாராஷ்டிரா மாநிலத்தில் என இரண்டு இடத்திலும் காங்கிரஸ் தானே இருக்கு :-))///
    இதுதான் பிஜேபி யின் அரசியல் உத்தி.குண்டுகள் வைத்து கலவரங்களை உருவாக்க வேண்டும் .உடனே நாங்கள்தான் குண்டு வைத்தோம் என்று ஈமெயில் இந்தியமுஜாகிதின் பெயரில் அனுப்பவேண்டும் .குண்டு வெடித்த இடத்தில் முஸ்லிமகள் வெளியிட்டதுபோல துண்டு பிரசுரங்கள் ஓன்று இரண்டு போட்டு செல்ல வேண்டும் .ஓடும்பொழுது தொப்பி தப்பி விழுந்ததுபோல தொப்பி கிடக்கக் வேண்டும் ..அரசு முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்கக் வேண்டும் .முஸ்லிம்கள் காங்கிரசை ஓரம் கட வேண்டும் /ஒருவேளை குண்டுவைத்த சங்க பரிவார் மீது நடவடிக்கை எடுத்தால் ஹிந்துக்களை அணி திரட்டவேண்டும் .

    இந்த பிஜேபியின் நடவடிக்கைகளுக்கு ஆப்பு வைத்தவர்தான் திரு.கர்கரே

    ReplyDelete
  59. இப்பூ,

    மக்கிப்போன மார்க்கப்பந்துவாவே இருக்கீரே,

    பெஷாவர் என்பது கஜினிக்கு பக்கத்து நாடு,எல்லைப்புறத்தில் இருப்பது,உடனே போயிடலாம்.

    5 லட்சம் என்பது பொதுமக்கள் என்பதால் குறைவான ராணுவம் ஆயுதம் காட்டி அடக்க முடியும்.ஏன் 5 லட்சம் வாழ்ந்திருக்க முடியாது? அப்போதெல்லாம் ஒரு நாடு என்பது தலைநகரை மையமாக கொண்டே எனவே மக்கள் தலை நகரத்தை சுற்றியே வாழ்வார்கள்.

    Tarikh-i-Sultan Mahmud-i-Ghaznavi, or, The history of Sultan Mahmud of Ghazn மூல ஆசிரியர்
    "Muḥammad Qāsim Hindū Shāh Astarābādī Firishtah' அவர் எழுதியதை தான் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து எழுதி இருக்கிறார்கள்.இன்டெர்நெட் ஃப்ரீ ஆர்க்கைவ்சில் இருக்கு முடிஞ்சா தேடி படியும், சும்மா புலம்ப வேண்டாம்.

    #அசோகர் 15 திருமணம் தான் செய்துள்ளார் போரில் பெண்களை அடிமையாக கைப்பற்றவில்லை என்ற அடிப்படை கூட புரியலையே.கஜினி செய்தது போரில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை. நான் கேட்ட இறைத்தூதரின் பலதார மணம் என்னாச்சு.

    அப்போ இறைத்தூதரும் அசோகரும் ஒன்று என நீர் சொல்வதாக எடுத்துக்கொள்ளலாமா?

    #இந்த்துத்வா சதி செய்கிறது எனில், அப்போ ஹேமந்த்கர்கரே காங்கிரஸ்\ஆட்சியின் போது கொல்லப்பட்டதை காங்கிரஸ் சும்மா விடுமா விசாரித்து உண்மை சொல்ல வேண்டியது தானே. அப்போ அவர்களும் மோடிக்கு கூட்டா எனக்கேட்டேன் பதிலே காணோம்.

    நீர் இதில் மோடியை இழுக்கும் அளவுக்கு கான்கிரஸ் பற்றி ஒன்றும் சொல்லக்காணோம் ,ஆனால் காங்கிரசுக்கு நிறைய பங்கு இருக்கவே வாய்ப்புள்ளதே :-))

    #//அந்த மாநிலத்தில் 30 முதல் 40 சதவீத மக்கள் மதவாதிகள் .ஓட்டுக்கள் நிலையானது அதாவது மதவாத வாக்கு வங்கியில் இருப்பாக வைக்கப்பட்டுள்ளது//

    அப்போ மீதி 60 சதவீத மக்கள்? அவர்கள் காங்கிரஸுக்கு ஓட்டுப்போட்டிருந்தால் போதுமே வெற்றிப்பெற்றிருக்க மாட்டார்களா?

    அவர்களும் புறக்கணிக்கிறார்கள் என்றால் கோளாறு காங்கிரசிடம் தானே இருக்கனும்.

    ஒருவனை கெட்டவன் என சொன்னால் மட்டும் போதாது இன்னொரு நல்லவனை காட்டனும் , ரெண்டு பேருமே அயோக்கியர்கள் என்றால் அதில் கொஞ்சம் நல்லவன் யார்னு தான் மக்கள் பார்ப்பார்கள்.

    ReplyDelete
  60. //பெஷாவர் என்பது கஜினிக்கு பக்கத்து நாடு,எல்லைப்புறத்தில் இருப்பது,உடனே போயிடலாம்.

    5 லட்சம் என்பது பொதுமக்கள் என்பதால் குறைவான ராணுவம் ஆயுதம் காட்டி அடக்க முடியும்.ஏன் 5 லட்சம் வாழ்ந்திருக்க முடியாது? அப்போதெல்லாம் ஒரு நாடு என்பது தலைநகரை மையமாக கொண்டே எனவே மக்கள் தலை நகரத்தை சுற்றியே வாழ்வார்கள்.///
    5 லட்சம் பேர்களை திரட்டி கொண்டு உடனே போயிடலாம் .5 லட்சம் பேர்களை கைது செய்ய 50000 போர்வீரர்கலாவது வேண்டும் .ஆப்கானில் 1600 இல் ஜனத்தொகை 40 லட்சம் .இப்போது 4 கோடி .1000 இல் ஒரு லட்சம் மக்கள் என்றாலே அதிகம் ..ஆக மோடிக்காக கணக்கு எப்படியெல்லாமோ போகுது.
    சோமநாத் கோயில் அதுவும் மூன்று நாள் தூரம் தானா?

    ///அசோகர் 15 திருமணம் தான் செய்துள்ளார் போரில் பெண்களை அடிமையாக கைப்பற்றவில்லை என்ற அடிப்படை கூட புரியலையே.கஜினி செய்தது போரில் பெண்கள் மீதான பாலியல் வன்முறை. நான் கேட்ட இறைத்தூதரின் பலதார மணம் என்னாச்சு.///
    போர்ல பிடிச்சாரா ?போகிற வழியில பிடிச்சார என்பதெல்லாம் ரொம்ப தெளிவாக எல்லோர் வரலாறும் எழுதப்படவில்லை

    ReplyDelete
    Replies
    1. இப்பூ,

      உம்மோடு ஒரே நகைச்சுவையய்யா :-))

      அசோகர் பற்றி வரலாற்றில் குறிப்பிடப்படாதவற்றை சொல்லிக்கொண்டு சரியாக எழுதி இருக்க மாட்டார்கள் என்கிறீர்கள், ஆனால் வரலாற்றில் குறிப்பிடப்பட்டதையோ இல்லை என சாதிக்கிறீர்கள், வரலாற்றில் குறிப்பிடப்பட்டதே இத்தனை என்றால் குறிப்பிடாமல் எத்தனையோ என்று தான் பொதுவாக கேள்வி வரும்.

      அப்படியே கஜினியின் 17 தாக்குதலுக்கும் நாள் கணக்கு கேட்பீர்கள் போல :-))

      3 நாட்கள் மட்டுமே தாக்குதலில் ஈடுபடுவார்கள் என சொல்லி இருக்கிறேன், பயண நாட்களை அல்ல.

      சோம்நாத்திலும் மூன்று நாட்களில் சூறையாடிவிட்டு திரும்பினார்கள், தாக்குதலிலேயே மிக நீண்ட தொலைவு சோம்நாத் தாக்குதல் மட்டுமே, அதுவும் இரவில் கோயிலில் விழா நடந்துக்கொண்டிருக்கும் போது தாகினார்கள்.

      நான் ஒரு நூல் பெயரினை போட்டேன் அல்லவா அதில் படியுங்கள், சும்மா ஒன்று மாற்றி ஒன்று என சின்னப்புள்ளத்தனமாக கேட்டு நேரம் விரயம் ஆக்க வேண்டாம்.

      நீங்கள் எல்லாவற்ரையும் மேம்ப்போக்காக புரிந்துகொள்பவர் என்பது ஹேமந்த் கர்கரே கொலை செய்யப்பட்ட சம்பவத்தினை புரிந்துக்கொண்ட விதத்திலேயே தெரிகிறது.

      மதச்சார்புள்ள அரசியல்வாதிகளின் செயலைக்கூட புரிந்துக்கொள்ள முடியும், மதச்சார்பற்றவர்கள் என சொல்லிக்கொண்டு அரசியல் செய்பவர்கள் அடிக்கும் கூத்தினை லேசில் புரிந்துக்கொள்ள முடியாது, சந்தர்ப்பத்திக்கு தக்க நிலை எடுப்பார்கள்.

      தமிழகத்தில் தி.மு.க வரும் நாடாளுமன்ற தேர்தலின் போதோ அல்லது அதன் பின்னரோ அடிக்கப்போகும் பல்டியைப்பார்த்து புரிந்துக்கொள்ளுங்கள் :-))

      Delete
    2. ///நான் ஒரு நூல் பெயரினை போட்டேன் அல்லவா அதில் படியுங்கள், சும்மா ஒன்று மாற்றி ஒன்று என சின்னப்புள்ளத்தனமாக கேட்டு நேரம் விரயம் ஆக்க வேண்டாம்.///
      அந்த நூலில் எழுதிவிட்டால் அதெல்லாம் உண்மை என்று நம்பிவிட வேண்டுமா? லெனின் ,மார்க்ஸ் ,போன்றவர்கள் பற்றி எழுதப்பட்ட வரலாறுகள் அத்தனையும் உண்மைகளா?
      ஆரியர்கள் பற்றி திராவிடர்களும் ,திராவிடர்கள் பற்றி ஆரியர்களும்எழுதியவைகள் அனைத்தும் உண்மைகளா?

      Delete
  61. நிறைவாக
    பரிணாமத்தின் வேரினைத் தேடி ஆய்வு கட்டுரைகள் வெளியிடும் ஒரு பண்பட்ட பகுத்தறிவாளருக்கு நரேந்திர மோடியின் கொள்கை வேரின் இடம் தெரியாமல் போனதன் வியப்புதான் நான் இங்கு பின்னூட்டமிட்டதன் காரணம். மோடியின் வெற்றி பற்றி ஒரு RSS ஆதரவாளர் அல்லது தவ்ஹீத் ஆதரவாளர் ஆகியோரின் பதிவாக இருந்தால் அது உதாசினப்படுத்துதலுக்குரியது. ஆனால் நண்பர் சார்வாகன் ………………………………
    சார்வாகன்,
    மறக்கலாம், மறப்போம், மறந்துவிடுங்கள் என்பனவெல்லாம் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும்தானா? அல்லது அனைவருக்குமா? என்பதையும் விளக்கி விடுங்களேன்.

    இந்தப் பதிவு அறிவுஜீவிகளும், செயல்படாத இடதுசாரிகளும்தான் பாசிசம் அரியனை ஏற காரணமானவர்கள் என சொன்ன டிமிட்ரோவின் சொற்களை நினைவுபடுத்துகிறது.

    ReplyDelete
  62. சகோ அபுபக்கர்,
    என் பதிவினை படியுங்கள். நடுநிலையாகத்தான் எழுதி இருக்கிறேன். அதுவும் போடி பிரதமர் ஆகும்/ ஆகமுடியாத வாய்ப்பு இரண்டையும் சொல்லி இருக்கிறேன்.


    ஆட்சியாளர்களினால் 10 வருடத்தில் ஏதேனும் முதலீடு சார் நடவடிக்கை மட்டுமெ எடுக்க முடியும். அதனை மோடி செய்து இருக்கிறார். சில புள்ளி விவரங்கள் அவருக்கு ஆதரவாகவும்,சில எதிராகவும் இருப்பதையும் பின்னூட்டங்களில் பதிவு செய்து இருக்கிறேன்.

    ஒரு நடக்கும் வாய்ப்பு உள்ள விடயத்தை மறுப்பது சரியா? அது நடவாமல் இருக்க மாற்றுத் த்லைமை வேண்டும், மத சார்பற்ற சக்திகள் ஒன்று சேர வேண்டும் என்வும் கூறி இருக்கிறேன்.இரண்டு வருடம் விரைவில் ஓடி விடும். காங்கிரசு எப்போதும் ஒரு பிரச்சினையை நேரடியாக அணுகாது.
    பாருங்கள் டில்லி பேருந்து விடய மக்கள் போராட்டத்தை ஆக்கபூர்வமாக , பேச்சு வார்த்தை, சட்ட திருத்த முனைணைவுகள் என சரியாக முன் எடுக்கவில்லை. இவர்கள் மோடியை சரியாக எதிர்க்க முடியுமா?

    நம்ம சகோஇப்பூவின் வாதங்களினால் விவாதம் கொஞ்சம் திசை திரும்பி இருக்கிறது என உங்களின் கருத்து உணர்த்துகிறது. வருந்துகிறேன்.இனிமேல் தவிர்க்கிறேன்.

    அறிவுறுத்தலுக்கு நன்றி!!!

    குஜராத் காங்கிரசை விட மோடி பரவாயில்லை என்பதால் மட்டுமே மோடி வெற்றி என்வே நான் ஏற்கிறேன்.அது நாடு முழுதும் வரும் வாய்ய்பை எப்படி தவிர்ப்பது என்வே வினவுகிறேன்.

    ஆகவே மாற்றுத் தலைமைதான் தீர்வு!!

    அதை விட்டு, எதையாவது பேசுவது மோடிக்கே உதவும்!!

    மிக்க நன்றி சகோ!!

    ReplyDelete
  63. வாவ் எழுதப்பட்ட வரலாறுகள் அனைத்தும் உண்மைகள் அல்ல,மீடியாக்கள் தரும் செய்திகள் அனைத்தும் உண்மைகளா?
    ///அப்போ மீதி 60 சதவீத மக்கள்? அவர்கள் காங்கிரஸுக்கு ஓட்டுப்போட்டிருந்தால் போதுமே வெற்றிப்பெற்றிருக்க மாட்டார்களா?////
    உமக்கு அரசியாலும் தெரியாது ,கத்தரிக்காவும் தெரியாது.40 சதவீத ஓட்டுக்கள் மதவாதா ஓட்டுக்களாக ரிசர்வில் உள்ளது அது போக காங்கிரஸ் எத்ரிப்பு ஓட்டுக்கள் .முதல்வரின் திறமைக்காக ,குறிப்பிட்ட சலுகைகளுக்காக கிடைக்கும் ஓட்டுக்கள் ,வேட்பாளரின் சாதி ஓட்டுக்கள் அலல்து சொந்த செல்வாக்கினால் கிடைக்கும் ஓட்டுக்கள் இவைகள் எல்லாம் 50 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும் .அபடிஎனில் மீதி 50 சதவீத ஓட்டுக்கள் காங்கிரஸ்க்கு கிடைக்கும் என்றும் பொருள் அல்ல..காங்கிரசுக்கு 40 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும் ,மற்ற கட்சிகள் 2 தொகுதியில் 2 வது,3வது பெரும்பான்மை சாதியை சேர்ந்தவரை நிறுத்தியிருப்பார்கள் .அதனால் குறிப்பிட்ட சாதி ஓட்டுக்கள் ,சுயேச்சை ஓட்டுக்கள் செல்லாத ஓட்டுக்கள் என்று 10 சதா ஓட்டுக்கள் பிரியும் .பிஜேபி 50% காங்கிரஸ் 40% இதர கட்சிகள் சுயேட்சைகள் ,செல்லாதாஹ் ஓட்டுக்கள் 10%.தொகுதியை பொருத்து கூடுதல் குறைவுகள் இருக்கும் ,குஜராத்தில் ,இந்த தேர்தலில் பிஜேபிக்கு கிடைத்த ஓட்டுக்கள் 47%.அப்படிஎன்றால் மீதி ஓட்டுக்கள் 53%காங்கிரசுக்க என்ற சார்வாகனிடம் கேட்கவில்லையே

    ///ஒருவனை கெட்டவன் என சொன்னால் மட்டும் போதாது இன்னொரு நல்லவனை காட்டனும் , ரெண்டு பேருமே அயோக்கியர்கள் என்றால் அதில் கொஞ்சம் நல்லவன் யார்னு தான் மக்கள் பார்ப்பார்கள்./////
    அந்த கொஞ்சம் நல்லவன் அந்த மக்களுக்கு நன்மை செய்ததால்அல்ல .அடுத்த வீட்டுக்காரனை அடுப்பில் போட்டு கொளுத்தியதால்

    ReplyDelete
    Replies
    1. இப்பூ,

      //உமக்கு அரசியாலும் தெரியாது ,கத்தரிக்காவும் தெரியாது.//

      எனக்கு அரசியலோ,கத்திரிக்காயோ தெரியலை என்றாலும் ஒன்னும் மோசமில்லை, ஆனால் உம்மை போன்ற மழுங்கின போன மார்க்கப்பந்துக்களை எப்படி கையாளவேண்டும் என கொஞ்சம் தெரியும் ,இப்போ பாருங்க ஓய் ,இம்புட்டு நேரமும் மதவாதம் தான் மோடி வெற்றிப்பெறக்காரணம்னு சொன்ன வாயால் எத்தனைக்காரணத்தினை வர வைத்தேன் என :-))

      //40 சதவீத ஓட்டுக்கள் மதவாதா ஓட்டுக்களாக ரிசர்வில் உள்ளது அது போக காங்கிரஸ் எத்ரிப்பு ஓட்டுக்கள் .முதல்வரின் திறமைக்காக ,குறிப்பிட்ட சலுகைகளுக்காக கிடைக்கும் ஓட்டுக்கள் ,வேட்பாளரின் சாதி ஓட்டுக்கள் அல்லது சொந்த செல்வாக்கினால் கிடைக்கும் ஓட்டுக்கள் இவைகள் எல்லாம் 50 சதவீத ஓட்டுக்கள் கிடைக்கும் .//

      ஹி...ஹி உம்ம ஒப்புதல் வாக்குமூலத்திற்கு நன்றி!

      நான் ஆரம்பத்தில் என்ன சொல்லி இருந்தேன் எனப்பார்க்கவும்(சார்வாகனும் அதே போல தான் சொல்லியிருப்பார்) மோடி வெற்றிப்பெற மதவாதம் மற்றும் காரணம் அல்ல அவரின் ஆட்சி காங்கிரசுடன் ஒப்பிட சிறப்பாக இருக்கவே தான் மூன்றாவாது முறையாக ஆட்சிக்கு வர முடிந்தது என சொல்லி இருப்பேன்.

      இப்போ மதவாதம் மட்டுமல்லாமல் இன்னும் கூடுதல் காரணங்கள் இருப்பதையும், அவை அளிக்கும் ஓட்டுக்களே வின்னிங் மார்ஜினை தீர்மானிக்கின்றன என்பதையும் தெளிவாக உங்கள் வாயாலே சொல்லியாச்சு, எனவே இனியும் மதவாதம் மட்டுமே மோடியின் வெற்றிக்கு காரணம் என சொல்லிக்கொண்டிராமல் ...யதார்த்தம் என்ன என புரிந்துக்கொள்ளுங்கள்.

      மோடிக்கு எதிராக ,அவரை விட சிறப்பான தலைவர் என மக்கள் நம்பும் படியாக ஒருவரை முன்னிறுத்தாத வரையில் குஜராத்தில் மோடியினை அசைக்க முடியாது, அதே போல வெறும் மதவாதம் மட்டுமே போதும் என பிஜேபி நினைத்தால் மத்தியில் ஆட்சிக்கு வர முடியாது. தேசிய அளவில் மோடியினை முன்னிறுத்தி ,ஒரு சமரசமான அரசியல் கொள்கையை பிஜேபி முன் வைக்குமானால் பிரகாசமான வாய்ப்பு உள்ளதை யாரும் மறுக்க முடியாது.

      கருவான வாய்ப்பினை உருவாக்கும் பொறுப்பு பிஜேபியிடம் உள்ளது.

      சரிந்து போன அரசியல் பிம்பத்தினை மீண்டும் கட்டமைக்க வேண்டிய மாபெரும் சுமை காங்கிரசுக்கு உள்ளது...

      நாடளுமன்ற தேர்தல் ரேசில் யார் முன்னதாக தயாராகிறார்களோ அவர்களுக்கே வெற்றிக்கோப்பை, ஆனால் ரேசில் சில பல சாதகங்களுடன் பிஜேபீ முன்னால் நிற்கிறது, அதனை பயன்ப்படுத்திக்கொள்வதை காலம் தான் தீர்மானிக்கும்!

      எனவே ஒரு பேலன்ஸ்டு ஃபார்முலாவை நாடாளுமன்ற தேர்தலுக்குள் பிஜேபி கண்டுப்பிக்க வேண்டும், அதே சமயம் இரு முறை தொடர் மத்தியில் ஆட்சி கொடுக்கப்பட்டும் பெரிதாக எதுவும் சாதிக்காத காங்கிரஸுக்கு எம கண்டம்தேன். ஏதேனும் அதிசயம் நிகழவேண்டும் அல்லது உணர்வை தூண்டும்"ஒரு டிராமா" அரங்கேற்றப்பட வேண்டும்.

      Delete
  64. வாவ் ,இந்தியா பாக்கிஸ்தான் போரில் 1971 இல் பங்களாதேசில் கைதான 90000 பாக்கிஸ்தான் கைதிகளையும் சிறையில் இந்தியாவில் அடைத்தார்கள் .நெல்லை பாளையங்கோட்டை சிறை வரை அவர்கள் வைக்கப்பட்டு சிறைகள் நிரம்பிவிட்டன ஆனால் அந்த வரலாறு எழுதிய கோமாளி சொல்லை கேட்டு 500000 கைதிகள் கைது செய்து சென்றாகள் என்று எழுதினால் ஜனதொகைதான் என்ன? பெசாவர் நாட்டிலும் நாணயத்தின் பெயர் தினார்களா? அல்லது 250000 தினார்களை எப்படி உடனடியாக திரட்டினார்கள்?
    1கிலோ தங்கத்தின் 100 தினார்கள் கூட இருக்க முடியாத காலத்தில் 250000 தினார்கள் புலங்கப்பட்டது ஆச்சரியமாக உள்ளது .5 லட்சம் பேர்களை கைது செய்த பிறகு பெசாவரில் மீதி எத்தனை லட்சம் மக்கள் வாழ்ந்தார்கள் ?
    பெசாவார் அத்தனை பெரிய நகரமாக வேறு ஏதாவது வரலாற்று சான்றுகள் இல்லாமல் இருக்காதே .கடவுளை மட்டும் எப்படி வேணும்னாலும் கேட்கும் உங்களிடம் வரலாறு பற்றி கேட்க கூடாதா?

    //அப்போதெல்லாம் ஒரு நாடு என்பது தலைநகரை மையமாக கொண்டே எனவே மக்கள் தலை நகரத்தை சுற்றியே வாழ்வார்கள்.//
    பாண்டிய நாட்டின் தலைநகர் மதுரை என்றால் மக்கள் எல்லாம் மதுரையை சுற்றித்தான் வாழ்ந்தார்கள் .அவ்வாறெனின் பாண்டிய மன்னான நின்றசீர் நெடுமாறன் திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயிலை மதுரை மீனாட்சி கோயிலைவிட பெரிதாக கட்டினானே ,அப்படிஎன்றால் இதெல்லாம் விதி விலக்கா ? மக்கள் எல்லாம் மதுரையை சுத்தி வாழுகையில் நெல்லையில் வந்து பெரிய கோயிலை கட்டியது ஏனோ?

    ReplyDelete
    Replies
    1. இப்பூ,

      இதை எல்லாம் வேற யாராவது எழுதி இருந்தா பரவாயில்லை, கஜினியின் அவையின் இருந்தவர் பரிஷ்டா அவரே எழுதியுள்ளார்(இது கொஞ்சம்ம் சரிப்பார்க்கனும்) ஆனால் அக்காலத்திய இஸ்லாமிய வரலாற்று பதிவாளர் அவர், மேலும் பலரின் குறிப்புகள் இவ்வாறே உள்ளன.

      அக்கால இந்திய மன்னர்கள் மிகுந்த செல்வ செழிப்புடன் இருந்தார்கள், 2000 ஆண்டுக்கு முன்னரே அலெக்ஸாண்டர் படை எடுக்க காரணமும் இது தான்.

      19050 களில் உலகின் மிகப்பெரும் பணக்காரர் என ஃபோர்ப்ஸ் பட்டியலில் முதல் இடம் வந்ததும் ஹைதராபாத் நிஜாம் தான். ஏன் எனில் விவசாயம் சார்ந்து பொருளாதாரம் எனும் நிலையில் அதிக நிலங்களுக்கு வரி வசூலிக்கும் உரிமை வைத்திருந்த ஹைதராபாத் நிஜாமே உலகின் பெரும் பணக்காரர் ஆனார்(வெள்ளைக்காரனுக்கு லீசுக்கு விட்டது தனிக்கதை)

      இந்தியாவின் செல்வ வளத்துக்கு அப்போது எல்லாம் குறையே இல்லை ,என்ன எல்லாம் ஆள்வோருக்கு மட்டுமே :-((

      #ஏன் நெல்லையில் பாண்டிய மன்னன் கட்டினான் என்பதற்கெல்லாம் பல காரணங்கள் உள்ளன, கடவுள் கனவில் வந்து இங்கே கட்டு என சொன்னார் என்றெல்லாம் கதைகள் உண்டு, எனவே கோயில் கட்டியதற்கு எல்லாம் வரலாற்று தர்க்கம் தேட வேண்டாம்.

      மேலும் யாராவது சாமியார் சொன்னாலும் கோயில் கட்டுவாங்க :-))

      சிதம்பரம் எப்போ அரசரின் தலைநகராக இருந்தது ,அம்மாம் பெரிய கோயிலை கட்டினாங்க, எல்லாம் அரசர்களின் இறைபக்தியை அக்கால சாமியார்கள் பயன்ப்படுத்திக்கொண்டது தான்.

      Delete
  65. வாவ் ///நீங்கள் எல்லாவற்ரையும் மேம்ப்போக்காக புரிந்துகொள்பவர் என்பது ஹேமந்த் கர்கரே கொலை செய்யப்பட்ட சம்பவத்தினை புரிந்துக்கொண்ட விதத்திலேயே தெரிகிறது.////

    ATS தலைவரான கர்கரே தாஜ் ஹோட்டலுக்கு அனுப்பபடாமல் ரெயிவே ஸ்டேசனுக்கு அனுப்பப் பட்டது ஏன் என்றும் ?கண்ட்ரோல் ரூமில் இருக்கக் கூடிய கமிசனர் தாஜ் ஓட்டலுக்கும் ரயிவே ஸ்டேசனுக்கு அனுப்பப்பட்ட வேண்டிய L&0சீப் கண்ட்ரோலில் இருந்ததற்கும் உயிரிழந்த அதிகாரியான அசோகன் அவர்களின் மனைவி ,தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல்களை வைத்துக் கொண்டு இந்த கேள்விகளை கேட்டார்

    ReplyDelete
    Replies
    1. இப்பூ,

      நீர் எம்மாம் பெரிய குழல் விளக்குன்னு இப்போவாது புரியுதா:-))

      காங்கிரஸ் ஆண்ட மகாரஷ்ட்ராவில் தான் இத்தனை சந்தேகத்துக்கிடமான செயல்களும் நடந்துள்ளன, ஆனால் அவர்களோ மேற்கொண்டு விசாரிக்காமல் மூடி மறைத்துவிட்டார்கள், மும்பை தாக்குதலை விசாரித்து நீதிபதி எழுப்பிய பல கேள்விகளுக்கும் ,மகாரஷ்ட்ர கவால்ல் துறையோ, மத்திய புலனாய்வோ பதிலே அளிக்கவில்லை ஏன்?

      இதனை எல்லாம் முழுக்க நான் ஏற்கனவே படித்தாகிவிட்டது , ஆனால் நீர் எல்லாத்துக்கும் மோடியை இழுத்துக்கொண்டு நிற்பது ஏன்? சந்தேகத்துக்கிடமாக செயல்ப்பட்ட காங்கிரச் ஆட்சியாளர்களை பற்றி ஏன் வாயே திறக்காமல் இப்போ கூட எதோ இதெல்லாம் குஜராத்தில் நடந்தாற்போல கேள்வி கேட்டுக்கிட்டு:-))

      எனவே எல்லா அரசியல்வாதிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என புரிந்துக்கொள்ளும்.

      நடு நிலையோடு அரசியல் நிலவரத்தினை ஒரு பார்வையாளனாக அலச கற்றுக்கொள்ளும்.

      இங்கு நானோ, சார்வாகனோ அதான் செய்கிறோம்.

      Delete