Tuesday, March 5, 2013

பரிணாமம் எளிய விளக்கங்கள் .Part 1

வணக்கம் நண்பர்களே,

கடந்த சில நாட்களாக நாம்& சில நண்பர்கள் நடத்திய பரிணாமத்தின் ஏற்புத் தன்மை சார் விவாதம் பலரின் கவனத்தை ஈர்த்து இருக்க்லாம்.பரிணாமம் எதிர்க்கும் குழுவின் கட்டுரைகளுக்கு பல மறுப்புகள் எழுதி இருந்தாலும் பரிணாமம் குறித்தே ஒரு தொடர் எழுத வேண்டும்  என ஆசை உண்டு.

பரிணாமம் என்பது பல துறைகள் சார்ந்த அறிவியல் என்பதால், கணிதம் சார்ந்து எழுத முற்பட்டாலும், அதற்கு அடிப்படைக் கணிதம் விள்க்கவே நேரம் செல்லும் எனத் தோன்றியதால் குழு கணித அடிப்படை முயற்சியை பிறகு முயற்சிப்போம் என முடிவு செய்தேன்.

சரி இப்பதிவில்‍ இருந்து ஒரு தொடர் முயற்சிக்கலாம் என தோன்றுகிறது. பதிவுகள் விவாதிக்கப்பட வேண்டும், பல சார்புக் கருத்துக்களும் ஆவணப் படுத்தப்பட வேண்டும் என்பது நம் விருப்பம் என்றாலும், விவாதங்கள் ஒரு குறிப்பிட்ட புள்ளி சார்ந்தே இருப்பதும் அவசியம். அப்படி இல்லாவிட்டால் குழப்பமே மிஞ்சும்.

இப்பதிவில் பரிணாமம் என்பது என்ன என்பதை மட்டுமே விளக்க,விவாதிக்க‌ போகிறோம்.

அறிவியல் கற்கும் ஆர்வம் உள்ள, உண்மை தேடும் மக்களுக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டிய கடமை உள்ளதாக நினைப்பதால் மட்டுமே பரிணாமம் குறித்த நமது கற்றலை தமிழ் பதிவுலகில் பகிர்கிறோம். சரி இப்பதிவில் அறிவியல் மட்டுமே சார்ந்து பரிணாமம் என்றால் என்ன? என விளக்(ங்)குவோம்.
  
ஒரு சின்ன எ.கா எடுத்துக் கொள்வோம்.

காவல்துறை ஒருவரை குற்றம் சாட்டி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்கிறது. நீதிமன்றத்திடம் ஒப்படைக்கிறது.கைது செய்யப் பட்டவர்களில் சான்று இல்லாதவரை நீதிமன்றம் விடுதலை செய்கிறது.

காவல்துறை சமர்ப்பிக்கும் ஆதாரங்களை நீதிமன்றம் ஏற்கிறதா என்பதே பிரச்சினை. குற்றவாளியும் தன் தரப்பு வாதங்களை ,ஆதாரங்களை சமர்பிக்கலாம், அதுவும் நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது.

இங்கு நீதிமன்றம் அறிவியல் உலகம். காவல் துறை, குற்ற‌வாளி பரிணாம ஏற்பு, எதிர்ப்பு குழு என எடுபோம். ஹிஹி யார் காவல்,யார் குற்றவாளி என அவரவர் விருப்பம் போல் எடுக்கவும். ஒருவர் குற்றவாளி என்பதற்கோ,குற்ற‌வாளி இல்லை என்பதற்கும் சரியான சான்று எப்படி இருக்க வேண்டும் என நீதிமன்றத்துக்கு சீர் தூக்கி பார்க்க‌ தெரிந்தால் மட்டுமே இந்த முறை சரியாக பலன் அளிக்கும்.

அறிவியல் உலகத்தில் பரிணாமம் என்பது இப்போதைய உயிரின தோற்ற விளக்க கொள்கையாக ஏற்கப்பட்டு, பெரும்பான்மை பல்கலைக் கழகங்கள்,பள்ளிகளின் போதிக்கப்படுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

அறிவியல் உலகத்தால் ஒருமித்து ஏற்கப்பட்ட ஒரு கொள்கையையின் மீது கற்றல்,ஆய்வு மூலம் சாதிக்கும் விருப்பினை தமிழ் உலகம் இழந்து விடக்கூடாது என்னும் நோக்கிலேயே எழுதுகிறோம்.

வைரஸ்களின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப மருந்துகளின் தன்மை மாறுகிறது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து இருக்கிறோம்,சில வருடங்களுக்கு முன் பலன் அளித்த பென்சிலின் இப்போது பலன் அற்று போனது. கொசு விரட்டி மீதே உடகாரும் வல்லமை கொண்ட கொசு என பல பரிணாம செயல்களை,அன்றாட வாழ்வில் பார்த்தாலும் நாம் அதனை உணர்வது இல்லை. ஆகவே பரிணாமம் என்பது 100% சரியாக ஆய்வுரீதியாக சரி பார்க்கப் பட்டு ஏற்கப்பட்ட கொள்கை.

சோவியத் யூனியனின் போலி அறிவியலாளன் லைசெங்கோவின் தவறான பரிணாமம்,மரபியல் சார் கருத்துகள், செயல் படுத்தியமையால் அங்கு உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்தியது என்பது வரலாறு!!!.அது உலகின் வரலாற்றை மாற்றியது!!!. அது என்ன என்பதைப் பிறகு பார்ப்போம்!!


ஆகவே தொடர்ந்து கிடைக்கும் சான்றுகளை மெய்ப்பிக்க முடியா அறிவியல் கொள்கை கைவிடப் படும். மாற்றுக் கொள்கை அதன் இடத்தை பிடிக்கும். சர் ஐசக் நியுட்டன் எந்த [ஈர்ப்பு] விசை ஆப்பிள் மரத்தில் இருந்து ஆப்பிளை விழச் செய்கிறதோ, அதே விசைதான் கோள்கள்,நட்சத்திர இயக்கங்களுக்கு காரணம் என முதலில் விளக்கினார்.

சில சோதனைகள் மூலம் ஈர்ப்பு விசைக்கு சூத்திரம் கண்டறிந்தார். அந்த விதியின் மூலம் பூமிக்குள் செய்த ஆய்வுக் கணிப்புகள் சரியாக இருந்ததால் ,யாரும் நியுட்டனின் ஈர்ப்பு விதியை மறுகவில்லை.அறிவியலில் சரியாக என்றால் ,கணிப்பு,பரிசோதனையின் அளவீட்டு வித்தியாசம் குறைவாக இருப்பது என்பதைப் புரிய வேண்டும்.

ஆனால் அறிவியல் முன்னேற்றத்தில் தொலைநோக்கி உதவியால் சிவப்பு விலக்கம்[Red Shift] கொண்டு சூரியக் குடுமப்த்தின் இதர கோள்களின் இயக்கங்களை கணக்கிட்டால் தவறு வருகிறது. ஆகவே சான்றுகளின் அடிப்படையில் நியுட்டனின் விதி கைவிடப்பட்டு,ஐன்ஸ்டினின் ஈர்ப்பு விதிக் கொள்கை ஏற்கப்பட்டது. இதுவும் நம் பால்வீதி மண்டலம் தாண்டி கணக்கீட்டில் பிழை கொடுப்பதால், கருப்பு பொருள் என்னும் கருதுகோள் கொண்டு பிழையை சரி செய்ய முயற்சி நடக்கிறது. ஒருவேளை கருப்பு பொருள் என்பது இல்லை எனில் ஐன்ஸ்டினின் விதிக்கும் மாற்று கொள்கை காணப்பட வேண்டும்.மாறியது ஈர்ப்பு விசை அல்ல, ஈர்ப்பு விசையின் செயல்பாட்டு விளக்கம் மட்டுமே மாறுகிறது.

ஆகவே அறிவியல் சான்றுகள் அடிப்படையில் தன்னை சரிபார்க்கும் தொடர் இயக்கம் கொண்டது என்பதை விளக்கவே இதனைக் கூறினோம். ஆகவே பரிணாமம் என்பது இன்று வரை கடந்த ,நிகழ்கால சான்றுகளை சரியாக பிழையின்றி விளக்குகிறது.நூற்றுக் கணக்கில் ஆய்வு சஞ்சிகைகளும்[Journals],ஆயிரக் கணக்கில் கட்டுரைகளும் வருடத்திற்கு பல புத்தகங்களும் வெளிவருகின்றன. பரிணாமம் முறைப்படி கற்க வேண்டும் எனில் கணிணியில் இணைய இணைப்பு இருந்தால் மட்டும் போதும் என்னும் கால கட்டத்தில் வாழ்கிறோம் என்னும் அரிய வாய்ப்பினை கொண்டவர்கள் நாம்.

பரிணாமக் கொள்கை டார்வினுக்கும் முந்தியது.பரிணாம கொள்கையும் பல மாறுதல்களை சந்தித்து உள்ளது.

லாமார்க்கீயம், இயற்கைத் தேர்வு,நியோ டார்வினியம்,நிறுத்திய நிலைத்தன்மை,.. மூலக்கூறு பரிணாமவியல் என பலவகையான மாறுதலான விளக்கங்களைக் கண்டது.

http://en.wikipedia.org/wiki/History_of_evolutionary_thought

இவை அனைத்தையும் அடுத்த பதிவில் அதிகம் விவாதிப்போம். இங்கும் பரிணாமம் மாறவில்லை பரிணாமக் கொள்கையின் விளக்கங்கள் மட்டுமே சான்றின் அடிபடையில் மாறுகின்றன.அறிவியல் என்பது இயற்கை விதிகளுக்கு உட்பட்ட விளக்கங்களை மட்டுமே ஏற்கும் என்பதால், பரிணாம கொள்கைக்கு மாற்றம் வரும் வாய்ப்பு மிக மிக....குறைவு.

பாமர மக்களாகிய நாம் எப்படி அறிவியல் உலகம் பரிணாமத்தை ஏற்கிறது என்பதையே அறிய முயல்வோம்.பரிணாமம் குறித்த தவறான புரிதல்களையும் தவிர்த்தல் நலம்.

***
பரிணாமம் என்பது என்ன?

விக்கிபிடியாவில் இருந்து


1.Evolution is the change in the inherited characteristics of biological populations over successive generations.

2.Evolutionary processes give rise to diversity at every level of biological organisation, including species, individual organisms and molecules such as DNA and proteins.[1]

3.Life on Earth evolved from a universal common ancestor approximately 3.8 billion years ago. Repeated speciation and the divergence of life can be inferred from shared sets of biochemical and morphological traits, or by shared DNA sequences.[2]

4.These homologous traits and sequences are more similar among species that share a more recent common ancestor, and can be used to reconstruct evolutionary histories, using both existing species and the fossil record. Existing patterns of biodiversity have been shaped both by speciation and by extinction.[3]

1.பரிணாமம் என்பது உயிரினக் குழுக்களில் தலைமுறைரீதியாக ஏற்படும் மாற்றங்கள் ஆகும்.

2.பரிணாம நிகழ்வினால் உயிர் அமைப்புக்களின் ஒவ்வொரு நிலையிலும்[உயிரின குழுக்கள்,தனிப்பட்ட உயிரிகள்,மூலக்கூறுகள், ஜீனோம்,... மற்றும் ப்ரோட்டீன்] பல்வேறு வகைகள் உருவாகி தொடர்ந்து மாற்றம் அடைகிறது. 

3.பூமியில் 380 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பொது நுண் உயிர் முன்னோரில் இருந்தே அனைத்து உயிரி,தாவர வகைகளும் கிளைத்து தழைத்தன.பலமுறை நிகழ்ந்த சிற்றினமாதல்[Speciation: ஒரு உயிரி பல உயிரிகளாக பிரிதல்],உயிரிகளில் ஏற்படும் வித்தியாச விலகல்[divergence of life] இதனை தோற்றுவித்தது என்பதை உயிர் வேதியியல், உரு அமைப்பு ஒப்பீடு மற்றும் ஜீனோம் ஒப்பீடுகளில் இருந்து உறுதி செய்கிறோம்.

4. ஒரு சமீப கால பொது முன்னோரில் இருந்து தோன்றிய உயிரிகளின் உரு அமைப்பு, ஜீனோம் அமைப்பு அதிகம் நெருங்கியதாக இருக்கும்.இந்த ஒப்பீடுகள்,ஆய்வுகள் மூலம், பரிணாம வரலாறு, வாழும் உயிரிகள், மறைந்த உயிரிகளின் படிம வரலாறு மூலம் கட்டமைக்கப் படுகிறது.இப்போது காணப்படும் உயிரிகளின் வகைப்படுத்தல் ஒழுங்குகள், சிற்றினமாதல், உயிரின மறைவு[Extintion] ஆகியவற்றால் ஏற்பட்டது.

பரிணாமம் என்பது என்ன என்பதன் விக்கிபிடியா விளக்க மொழியாக்கம்,ஆங்கில மூலம் கொடுத்து இருக்கிறேன். மொழியாக்க மேம்பாடு,புதிய தமிழ் சொற்கள் நண்பர்கள் கொடுக்கலாம்.

**
இந்த 4 விடயங்களையும் சரியாக விளங்குவோம். 

நாம் நமது சுற்றுப்புறத்தை அறிய முயல்கிறோம், கடந்த&நிகழ் கால நிகழ்வுகளை சான்றுகள் கொண்டு  பொருந்தும் விளக்கம் ஏற்கிறோம்.அதனைக் கொண்டு எதிர்கால நிகழ்வுகளைக் கணிக்கிறோம்.சான்றுகளுக்கு ஏற்ப விளக்கங்களை மாற்றுகிறோம். இது வரலாறு,அறிவியல் ஆகிய இரண்டுக்குமே சரியான உண்மை.

1.பரிணாமம் என்பது உயிரின குழுக்களில் ஏற்படும் தலைமுறைரீதியான மாற்றம்.

பெற்றோர்,குழந்தை இருவரிடையே பல ஒற்றுமை இருந்தாலும், சிறிது வேற்றுமை உண்டு. ஜீனோம் ஒப்பீட்டில் ஒருவரின் தந்தையை அறிய முடியும் என்பது பல வழக்குகளில் முடிவு காண உதவி இருக்கிறது.

பெற்றோர் ஜீனோம், குழந்தை ஜீனோம் இவற்றை ஒப்பிடும் போது சில மாற்றங்கள் இருக்கும் இதனை ம்யுட்டேஷன்[mutations] என அழைக்கிறோம். இந்த தொடர்ந்த ஜீனோம் மாற்றம் ,உரு அமைப்பு மாற்றம், ஒரு உயிரியை சில உயிரிகளாக நீண்ட கால அளவில் பிரிக்கிறது என்பதே பரிணாமம்.

பரிணாமம் என்பது இருவிதங்களில் உணரப் படுகிறது.

a). உரு அமைப்பு மாற்றம்[Morphologcal change]:சிறுபரிணாமம் 

b). சிற்றினமாதல்[Speciation]:ஒரு உயிரி சில உயிரிகளாக பிரிதல்

பெரும் பரிணாமம்=1+2

Macro evolution=Morphologcal change+Speciation


சராசரியாக சிற்றினமாதல்[speciation] நிகழும் கால அளவு சுமார் 30இலட்சம் ஆண்டுகள். ஆகவே நம் வாழ்வில் நேரடியாக இதனை பரிசோதித்து பார்த்தல் என்பது இயலா காரியம்.



Current estimates from the fossil record and measured mutational rates place the time required for full reproductive isolation in the wild at ~3 million years on average (Futuyma 1998, p. 510). Consequently, observation of speciation in nature should be a possible but rare phenomenon. However, evolutionary rates in laboratory organisms can be much more rapid than rates inferred from the fossil record, so it is still possible that speciation may be observed in common lab organisms (Gingerich 1983).

இப்போதைய கணக்கீடுகளின் படி சிறுமாற்ற வீதம் ஆனது,இயற்கையில் முழு இனவிருத்தி விலக்கம்[reproduction isolation] ஏற்பட சராசரியாக 30 இலட்சம் ஆண்டுகள் தேவைப்படுகிறது[ஃபட்டைமா 1998 ,பக்கம் 510].இருந்தாலும் இயற்கையில் சிற்றினமாதல் என்னும் நிகழ்வு சாத்தியம் என்றாலும் அபூர்வமே.ஆய்வ‌கங்களில் இனவிருத்தி வீதம் படிம வரலாற்று ,சிற்றினமாதல் வீதத்தை விட‌,அதிகரிக்க்க வழிவகை செய்ய இயலும் என்பதால்  இதனை ஆய்வகங்களில் உறுதிப் படுத்த இயலும் (Gingerich 1983).


**
2.பரிணாம நிகழ்வினால் உயிர் அமைப்புக்களின் ஒவ்வொரு நிலையிலும்[உயிரின குழுக்கள்,தனிப்பட்ட உயிரிகள்,மூலக்கூறுகள், ஜீனோம்,... மற்றும் ப்ரோட்டீன்] பல்வேறு வகைகள் உருவாகி தொடர்ந்து மாற்றம் அடைகிறது. 

பரிணாமம் என்பது ஒரு மூல உயிரியில் இருந்து கொஞ்சம் வித்தியாசமான பலவகை உயிரிகள் தோன்றும் என்பதனை நடைமுறைவாழ்வில் உணர முடியும்.

ஓநாய், நரி, நாய் ஆகியவை ஒரே மூல உயிரிகளில் இருந்து தோன்றியவை. நாயும் ஒருவகை ஓநாய்தான்,ஆனால் எத்த‌னை வகையான நாய்கள்,ஓநாய்கள்,நரிகள் இருக்கின்றன??இப்படிப் பல வகைகள் இருப்பதை நாம் உணர்ந்தாலும் இவை அனைத்தும் ஒரே மூல உயிரியில் இருந்து தோன்றியது என்பதை உருஅமைப்பு ஒப்பீடு, ஜீனோம் ஒப்பீட்டில் நெருங்கி இருப்பதை வைத்து உறுதி செய்கிறார்கள்.

சிறுத்தை, புலி,சிங்கம்,பூனை,காட்டுப் பூனை சொல்லலாம்.

குதிரை,கழுதை,கோவேறு கழுதை, வரிக்குதிரை,..இன்னொரு எ.கா.

விலங்கினங்களின் வரிசைப்படுத்தல் என்பதே ஒருவகை பரிணாம நிரூபணமே. உரு அமைப்பில் ஒத்த இனங்களின் ஜீனோம் நெருங்கிய தொடர்பில் இருக்கும் என்ற கணிப்பு மிக சரியாக பொருந்துகிறது.ஒரு மூலத்தில் இருந்து கிளைத்து தழைப்பது நன்கு உணர முடியும்.பெரும்பாலும் மூல உயிரியின் படிமம் இந்த உயிரிகளின் உருஅமைப்புக்கு ஒத்து இருக்கும்.

இவை உயிரிக்கும் மட்டும் அல்ல,உயிர்க் குழு உள்ளேயும் பல வகைகள்,மூலக்கூறுகள்,ஜீனோம் என ஒவ்வொன்றிலும் இருப்பதும் பரிணாம நிரூபணமே.

பல விடயங்களில் ஒத்து ,சில விடயங்களில் மாற்றங்கள் கொண்ட பலவகை உயிரிகள்,மூலக்கூறுகள்,ஜீனோம் இருப்பதால் இவற்றுக்கு ஒரே மூலம் என எப்படி சொல்ல முடியும்? என்பது விதண்டாவாதமே!!!

ஏன் எனில் இதற்கு மாற்றாக இயற்கைக்கு உட்பட்ட எந்தக் கொள்கையும் இதனை விள்க்க இயலாது.வேறு வாய்ப்பு இல்லை.
**
3.பூமியில் 380 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய பொது நுண் உயிர் முன்னோரில் இருந்தே அனைத்து உயிரி,தாவர வகைகளும் கிளைத்து தழைத்தன.பலமுறை நிகழ்ந்த சிற்றினமாதல்[Speciation: ஒரு உயிரி பல உயிரிகளாக பிரிதல்],உயிரிகளில் ஏற்படும் வித்தியாச விலகல்[divergence of life] இதனை தோற்றுவித்தது என்பதை உயிர் வேதியியல், உரு அமைப்பு ஒப்பீடு மற்றும் ஜீனோம் ஒப்பீடுகளில் இருந்து உறுதி செய்கிறோம்.

 இப்படி பல்வேறு வகை உயிரிகளின் பொது முன்னார் ஒரு உயிரி என்னும் கருத்தை விரிவுபடுத்தி, அனைத்து உயிரிகளும் 380 கோடி வருட முந்தைய நுண்ணுயிர்' ல் இருந்தே கிளைத்து தழைத்தன என்பதே பரிணாமத்தின் முக்கிய கோட்பாடு ஆகும்[Common ancestry]. அனைத்து உயிர்களின் ஜீனோமும் ஒரே மாதிரியான வேதிப் பொருள்களை கொண்டு இருப்பது இதனை உறுதிப் படுத்துகிறது.வாழும் உயிரிகளின் ஜீனோம் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்பதாலும் ,மறைந்த உயிரிகளின் ஜீனோம் நம்மிடம் இல்லை என்பதாலும் மட்டுமே பல் புதிர்களை அவிழ்க்க சிரமாக இருக்கிறது. இதுவரை பூமியில் தோன்றிய அனைத்து உயிரிகளின் ஜீனோம் மட்டும் இருப்பின் பரிணாம தொடர்புகளை மிக நுட்பமாக விளக்கி இருக்க முடியும்.

சரி முதல் நுண் உயிரி எப்படி இருந்தது, எப்படி வந்தது என்பது சிக்கலான  தீர்க்கப்படாத விடயமே. இதற்கு பல கருதுகோள்கள் உண்டு என்றாலும், தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகின்றன. ஒரு நுண்ணுயிரி செல்லில், இயற்கை ஜீனோமுக்கு பதில், செயற்கை ஜீனோமை வைத்து ,புதிய நுண்ணுயிர் உருவாக்கும் அளவிற்கு முன்னேறி இருப்பதால், இன்னும் சாதனை தொடரும் என்வே எதிர் நோக்கலாம்.

Synthetic Genome+Natural Cell=New Life?

Craig Venter has taken yet another step towards his goal of creating synthetic life forms. He’s synthesized the genome of a microbe and then implanted that piece of DNA into a DNA-free cell of another species. And that…that thing…can grow and divide. It’s hard to say whether this is “life from scratch,” because the boundary between such a thing and ordinary life (and non-life) is actually blurry. For example, you could say that this is still a nature hybrid, because its DNA is based on the sequence of an existing species of bacteria. If Venter made up a sequence from scratch, maybe we’d have crossed to a new terrain.

**
4. ஒரு சமீப கால பொது முன்னோரில் இருந்து தோன்றிய உயிரிகளின் உரு அமைப்பு, ஜீனோம் அமைப்பு அதிகம் நெருங்கியதாக இருக்கும்.இந்த ஒப்பீடுகள்,ஆய்வுகள் மூலம், பரிணாம வரலாறு, வாழும் உயிரிகள், மறைந்த உயிரிகளின் படிம வரலாறு மூலம் கட்டமைக்கப் படுகிறது.இப்போது காணப்படும் உயிரிகளின் வகைப்படுத்தல் ஒழுங்குகள், சிற்றினமாதல், உயிரின மறைவு[Extintion] ஆகியவற்றால் ஏற்பட்டது.

இரு ஒத்த உரு அமைப்பு கொண்ட வாழும் உயிரிகளின் ஜீனோம் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் அவை பொது முன்னோரில் இருந்து எப்போது பிரிந்த்ன என்பதையும் கண்க்கிட முடியும். இது ஜீனோம் கடிகாரம் எனப்படுகிறது. இந்த கண்கீட்டு காலம் அருகில் இவற்றின் பொது மூல முன்னோரின் படிமம் இருக்கும்.கால‌ வித்தியாசம் வந்தால் ஜீனோம் கணக்கீட்டை விட படிம காலமே ஆதாரப் பூர்வமாக எடுக்கப்படுகிறது.

இந்த கணக்கீடுகள் கொண்டு பரிணாம மரம் கட்டமைக்கப் பட்டது. ஒவ்வொரு வாழும் உயிரியின் வரலாற்றை, முதல் நுண்ணுயிரி வரை அறிய முடியும்.

பரிணாமம் என்பது உயிரின 380 கோடி வருட வரலாறு. இதற்கு பல சான்றுகள் உண்டு.ஆய்வ‌கங்களில் பரிணாம பரிசோதனைகளில் ஜீனொம் மாற்றம் உரு அமைப்பில் மாற்றம் ஏற்படுத்துவது நன்கு ஆவணப் படுத்தப் பட்டு உள்ளது.

http://genome.cshlp.org/content/17/6/682.full
Figure 1.

பெரும்பரிணாமம் என்ப்படும் ஒரு உயிரி சில உயிரிகளாக பிரிவது மட்டும் அதிக காலம் எடுக்கும் செயல் என்பதால்  நுண்ணுயுரி,பழ ஈக்களில் நடைபெறுகிறது. பல சான்றுகள் இதனை மெய்ப்பிக்கும் விதமாகவே உள்ளன. பெரும்பரிணாம பரிசோதனை சான்றுகள் பற்றியே மீண்டும் இத்தொடரில் எழுதுவோம்.

இப்பதிவில் இதோடு நிறுத்துவோம். பரிணாமம் பற்றிய எளிய விளக்கம், ஆதரவு சான்றுகள் பற்றி மட்டுமே பார்த்து இருக்கிறோம். எதிரான வாதங்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

நண்பர்கள் இந்த பதிவு தொடர்பாக மட்டுமே கேள்வி கேட்க வேண்டுகிறோம்.
பரிணாமத்தின் எதிரான ஆதாரமாக வைக்கப் படும் விடயங்கள் மேல் அடுத்த பதிவில் விவாதிப்போம்.





நன்றி!!!

74 comments:

  1. மிக நல்ல பதிவு! வாழ்த்துக்கள்.
    இதில் உங்கள் உழைப்பு மிக அதிகம். பலரும் பலனடைய படிக்கவேண்டும் இதை திறந்த மனதுடன்.

    கடவுள் நம்பிக்கை இருக்கோ இல்லையோ ஒரு ஆராச்சியின் முடிவுகளை ஒட்டி எழுதும் கட்டுரைகளை அவசியம் படிக்கவேண்டும்.

    சந்தேகம் இருந்தால் திறந்த மனதுடன் கேள்வி கேளுங்கள்! விஞ்ஞானிகள் ஆராய்ச்சியாளர்கள் தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று ஒத்துக் கொள்வார்கள்; அந்த நாணயம் இங்கு இவர்களிடம் மட்டும் தான் உண்டு...

    சுருங்க சொன்னா தான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்று என்றும் வாதாடமாட்டார்கள்!

    Happy reading..!

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பர் நம்பள்கி,

      உண்மையிலேயே எளிய விளக்கம்,யாருக்கும் புரியும் வகையில் எழுத ஒரு முயற்சி.இன்னும் நிறைய இருக்கிறது பார்ப்போம்.
      பரிணாம கொள்கை எதிர்ப்பாளர்களை விட்டுவிடுவோம். எப்படி அறிவியல் உலகம் இதனை ஏற்கிறது என்பதை பலரும் உணர வேண்டும். இக்கொள்கை என்பதே மதம் அழிக்க வந்த ஒரு சதிக் கோட்பாடு என்பவர்களிடம் விவாதித்து பயன் இல்லை என்றாலும்,உண்மை தேடும் நடுநிலை மக்களுக்கு இவ்விளக்கம் பயன்படும்.

      நன்றி!!!

      Delete
  2. // இப்படி பல்வேறு வகை உயிரிகளின் பொது முன்னார் ஒரு உயிரி என்னும் கருத்தை விரிவுபடுத்தி, அனைத்து உயிரிகளும் 380 கோடி வருட முந்தைய நுண்ணுயிர்' ல் இருந்தே கிளைத்து தழைத்தன என்பதே பரிணாமத்தின் முக்கிய கோட்பாடு ஆகும்[Common ancestry].// நம்பிக்கை ஆகும்!

    பரிணமமும் ஒரு புராணக்கதை போலவே இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. What about Noah's Ark , Creating living organisms from MUD don't they resemble புராணக்கதை ?????

      Delete
    2. வாங்க சகோ இராபின்,
      புராண= பழைய, வரலாறு என்பதே பொருள்.

      பரிணாமம் புராணக் கதைதான். ஆனால் சான்றுகள் உள்ள புராணக் கதை. உயிரின தோற்ற வளர்ச்சி புராண கதை.

      ரோமன் கத்தோலிக்க திருச்சபை வழிநடத்தப் பட்ட பரிணாமம் என்ற கொள்கையை ஏற்று வெகு நாள் ஆகிறது.விக்கி சுட்டி பாருங்கள்.
      http://en.wikipedia.org/wiki/Catholic_Church_and_evolution

      In the 1950 encyclical Humani generis, Pope Pius XII confirmed that there is no intrinsic conflict between Christianity and the theory of evolution, provided that Christians believe that the individual soul is a direct creation by God and not the product of purely material forces.[1] Today, the Church's unofficial position is an example of theistic evolution, also known as evolutionary creation,[2] stating that faith and scientific findings regarding human evolution are not in conflict, though humans are regarded as a special creation, and that the existence of God is required to explain both monogenism and the spiritual component of human origins. Moreover, the Church teaches that the process of evolution is a planned and purpose-driven natural process, guided by God.[3][4][5]

      உயிரிகளில் தலைமுறைரீதியாக தகவல் எப்படி கடத்தப்படுகிறது என்பதைக் கண்டறிந்த மரபியலின் த்ந்தை மெண்டல் ஒரு கத்தோலிக்க துறவி. டார்வினுக்கு நிகரான இடம் பரிணாமத்தில் மெண்டலுக்கும் உண்டு!!!.

      நியோ டார்வினியம்= டார்வினியம்+மெண்டலியம்
      http://en.wikipedia.org/wiki/Neo-Darwinism
      Neo-Darwinism is the 'modern synthesis' of Darwinian evolution through natural selection with Mendelian genetics, the latter being a set of primary tenets specifying that evolution involves the transmission of characteristics from parent to child through the mechanism of genetic transfer, rather than the 'blending process' of pre-Mendelian evolutionary science.

      ஆகவே பரிணாமம் என்பது மதத்திற்கு எதிரான கொள்கை என் மட்டும் மறுக்காதீர்கள். இதன் சான்றுகள் அடிப்படையில் மாற்றுக் கருத்து கொள்வது உங்கள் உரிமை.


      நன்றி!!

      Delete
    3. சகோ ஜெனில் வாங்க,

      அறிவியலை அதன் சான்றுகள் அடிப்படையில் மட்டுமே விள்க்க முடியும். மதம்,பரிணாமம் முரண் அல்ல என்பதையும் விளக்க முற்படுவோமே!!.
      பரிணாமத்தின் மாற்றாக மதம் சார் படைப்புக் கொள்கை முன் வைத்தால் மட்டும் அதற்கு அறிவியல் ஆதாரம் சரிபார்ப்போம்.

      நன்றி!!!

      Delete
    4. சகோ சார்வாகன்,
      சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்...

      ஆத்திகமா நாத்திகமா என்பது என் நோக்கமல்ல.. அதனை உங்களிடம் சாதித்து எனக்கு ஒன்றும் வரப்போவதில்லை. பரிணாமம் அறிவியல் உண்மையல்ல என்பதே நான் கூற வருவது. படைப்பு கொள்கைகளே போலவே பரிணாம கொள்கைகளும். எது உண்மை என்று நிச்சயித்து கூற முடியாத நிலையில் தான் உண்மையில் நாம் உள்ளோம்.

      விஞ்ஞான வட்டாரத்திற்குள்ளாகவே பரிணாம கொள்கைகள் குறித்து ஏளனங்கள் பேசபடுகின்றன.

      விஞ்ஞானிகள் தீப்பிழம்பாக விளங்கிய திடப்பொருள்கள் விரிவடைய தொடங்கி அண்டம் தோன்றி இருக்கலாம் என்கின்றனர். தீப்பிழம்பாக விளங்கிய போது பல மில்லியன் டிகிரி செல்சியஸ் அளவு வரை வெப்பம் உள்ளது. இந்த வெப்ப நிலையில், எந்த நுண்ணுயிரியும், வைரஸும், அமினோ அமிலங்களும், புரதங்களும், நுக்ளிக் ஆசிட்களும் நிலைத்து நிற்க முடியாது. பூமியாக பிரிந்து வந்து வெப்பம் தணியும் வரை அதில் எந்த வித நுண்ணுயிரிகளும் இருக்க முடியாது. எனவே, மண்ணில் உள்ள கனிமங்களில் நிகழ்ந்த வேதி வினையால் நுண்ணுயிரி தோன்றி இருக்க வேண்டும் என்கிறது பரிணாமம். இதற்கு பெயர் அறிவியலா?

      உண்மை அறிவியல் உயிரற்ற அசேதன பொருட்களில் (INORGANIC MATTER) இருந்து உயிர்கள் தோன்ற வாய்ப்பே இல்லை என்கிறது - ABIOGENESIS (MICROBIOLOGY BY PRESCOTT காணவும்)

      முதல் கருத்திலேயே முரண்பாடுகளை பரிணாமம் கொண்டுள்ளது.

      இரண்டாவதாக, 4 பில்லியன் ஆண்டுகள் இருந்து 530 மில்லியன் ஆண்டுகள் வரை தேறிய உயிரினங்களுக்கான எந்த படிமங்களும் கிடைக்கவில்லை. 530 மில்லியன் ஆண்டுகள் வரை நமக்கு கிடைத்த தடயங்கள் எல்லாம் நுண்ணுயிரிகள் மட்டுமே (சைனோ பாக்ட்டீரியாக்கள்). 530 மில்லியன் ஆண்டுகளுக்கு பின்பு, நத்தை, புழு, பூச்சி, அட்டை, தேள், மீன் போன்ற தேறிய உயிரினங்களின் படிமங்கள் அதிரடியாக தோன்றுகின்றன. நுண்ணுயிரிகளில் இருந்து இந்தளவு தேறிய உயிரினங்கள் எப்படி அதிரடியாக தோன்றின?

      Mutation-கள் பரிணாம வளர்ச்சிக்காக மட்டும் மரபணுக்களில் ஏற்படும் விளைவுகள் அல்ல. Mutation-களில் பல வகை உண்டு. ஒரு உயிரினத்தை அழிக்கும் வல்லமை கூட mutation-னிற்கு உண்டு (lethal mutation). கொசுக்கள் இன்றைய கொசு மருந்துகளை தாக்கு பிடிப்பது mutation-னின் விளைவு தான். அதன் காரணமாக பரிணாமம் ஏற்படுகிறது என்பது சரியல்ல. ஒரு மனிதன் அம்மை நோய் கண்டால் அவனிற்கு அடுத்த முறை அம்மை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிடும். அது போல தான் கொசுக்களும். கொசு காக்கையாக மாறுவதற்கு mutation-களை காரணம் காட்டாதீர்.

      பரிணாமம் வெப்ப இயக்கவியலின் இரண்டாம் விதிக்கு நேர் எதிரானது. எந்த வினையும் அழிவை நோக்கியே செல்லும் என்பது அறிவியல் கண்ட உண்மை. பரிணாமம் மண்ணில் இருந்து நுண்ணுயிரி தோன்றி நுண்ணுயிரியில் இருந்து புழு தோன்றி புழுவில் இருந்து பூச்சி தோன்றி பூச்சி பறவை ஆகி என்று வளர்ச்சியை மட்டும் கூறி கொண்டே போகிறது. இது அறிவியல் படி சாத்தியமல்ல. ஒரு மின்சாதன தொழிற்சாலை விபத்து ஏற்பட்டு வெடித்து சிதறிய போது தூக்கி வீசப்பட்ட மின்சாதன உறுப்புகள் தற்செயலாக இணைந்து கணினி உருவானது என்றால் நம்ப முடியுமா? நம் கண் 7 மில்லியன் வண்ணங்களை தரம் பிரிக்கிறது. இது மண்ணில் இருந்து தற்செயலாக காலப்போக்கில் உருவானதா?

      மனிதனிற்கு மட்டும் பிரத்யேகமாக காணப்படும் மைடோகாண்டிரியல் டி.என்.எ எந்த குரங்குகளுடனும் ஒத்து போவதில்லை. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எந்த எலும்பு படிமங்களுடனும் ஒத்து போவதில்லை. PILTDOWN MAN, NEBRASKA MAN, RAMAPITHECUS MAN, OTA BENGA என்று எத்தனை பரிணாம சோதனைகள் தோல்வியடைந்தன, மோசடி என கண்டுபிடிக்கபட்டன என்பதை கூகிளிட்டு அறிந்து கொள்ளுங்கள்.

      முடிந்த வரை இயற்கைக்கு மேற்ப்பட்ட ஆற்றலின் துணையின்றி அறிவியல் உலக தோற்றத்திற்கான விடையை சொல்ல வேண்டும். குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். எனவே பரிணாம கொள்கைகள் உறுதி செய்யபடாவிடினும் அறிவியல் புத்தகங்களில் போதிக்கபடுகின்றன.

      படைப்பு கொள்கைகளும் இதே நிலையில் தான் உள்ளன. இதன் காரணமாக, படைப்பு கொள்கைகளை ஏற்று கொள்ளுங்கள் என்று கூறவில்லை. அது உங்கள் விருப்பம். அறிவியல் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வரை சற்று காத்திருப்போம். எந்த மதங்களும் தீமையை போதிப்பதில்லை. மக்களை நல்வழி படுத்தத்தான் செய்கின்றன. வாழும் போது அவைகளின் துணை கொண்டு ஒருவன் ஒழுக்கத்துடன், மன நிறைவுடன் வாழ்ந்து மடிகிறான். நம்பிக்கை என்ற பெயரில் நிலவி வரும் அக்கிரமங்களை தட்டி கேக்கலாம், அறிவீன செயல்களை தட்டி கேக்கலாம். ஒட்டு மொத்தமாக பிறர் நம்பிக்கைகளை புண்படுத்தாதீர்.

      Delete
    5. அழகாய் சொல்லியிருக்கீங்க, எதையும் மறுப்பதற்கில்லை ஆனா தப்பான இடத்துல வந்து சொல்லியிருக்கீங்க. எங்க மாமு இதுக்கெல்லாம் அசருகிறவர் இல்லை, இப்போ வந்து அடிச்சு நொறுக்குவார் பாருங்க...........

      Delete
  3. நன்கு புரியும்படி எழுதியுள்ளீர்கள்.

    நம்பள்கி கூறியதுபோல உங்கள் கடின உழைப்பு தெரிகிறது. பாராட்டுகள் சார்வாகன்.

    சந்தேகங்கள் அடுத்த பின்னூட்டத்தில்....

    ReplyDelete
    Replies
    1. சகோ ஏலியன்,

      நிறைய கேள்வி பதிவு தொடர்பாக கேட்கப் பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.மாற்றுக் கருத்துகளையும், தடையின்றி வெளியிடுவோம்.

      நன்றி!!

      Delete
  4. மாமு, இதே மாதிரி எழுதுங்க.

    ஆ............ அவசரப் படாதீங்க. இதெல்லாம் சரி என்று நான் சொல்லவில்லை. இப்போதைக்கு புரிகிறது!! கொஞ்சம் இருங்க வரேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாப்ளே தாசு,

      வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி.[ பிரம்மம் உமக்கு பிடிக்காதே!!] வாழ்த்துக்கு நன்றி!!.

      நான் சொன்னாலும் சரி,யார் சொன்னாலும் சரி சான்றுகள் அடிப்படையில் சீர்தூக்கி பார்த்து ஏற்க/மறுக்க ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.

      கலக்குங்கள்.ஸ்டார்ட் மியுஜிக்!!!தாரை தப்பட்டைகள் அடிக்கும் அடியில் கிழிந்து தொங்க வேண்டும்.

      நன்றி!!!

      Delete
  5. வணக்கம் சகோ.
    அருமையான பதிவு உங்களின் கடின உழைப்பிற்கு பாராட்டுக்கள். இதைப் புரிந்து கொள்ள கடவுளுக்காக (சொர்க்கம் கிடைக்காது) என்பதற்காக மறுக்கும் உள்ளம் படைத்தோர் முயற்சி செய்து படித்துப்பார்த்தால் நலம்.

    ReplyDelete
    Replies
    1. சகோ இனியவன் வாங்க,

      இத் தொடர் பதிவில் கூடுமான வரை "படைப்புக் கொள்கையை[கடவுளை] மற பரிணாமத்தை[மனிதனை] நினை" என்னும் தந்தை பெரியார் பாணியில் மட்டுமே கொண்டு செல்வோமே!!.

      பரிணாம கொள்கை எப்படி அறிவியல் உலகில் ஏற்கப்படுகிறது?
      இதற்கு எளிய விளக்கம் அளிக்கிறோம் அவ்வளவுதான்.

      நன்றி!!!

      Delete
  6. நீங்க போட்டிருக்கீங்க பார்த்தீங்களா படம், அதில கிளைகள் எல்லாம் பிரியும் புள்ளிகள் [நீங்க தான் பெரிய புள்ளி ராஜாவாச்சே!!] இருக்கின்றன அல்லவா, அந்த சேரும் இடத்துக்கு இதுவரைக்கும் எந்த ஆதாரமும் இல்லை. இதை நீங்க பதிவில் ஒரு இடத்திலாவது சொன்னீங்களா? பொய்யை விதைக்கலாமா?

    ReplyDelete
    Replies
    1. மாப்ளே தாசு,
      பரிணாம மரத்தின் கிளை சந்திப்பு புள்ளிகள் இடைப்பட்ட உயிரினங்கள். இதன் படிமங்கள் மட்டும் உண்டு.

      இந்த விக்கி சுட்டியில் பலவற்றை வகைப்படுத்துகிறார்.

      http://en.wikipedia.org/wiki/List_of_transitional_fossils

      This is a tentative list of transitional fossils (fossil remains of a creature that exhibits primitive traits in comparison with more derived organisms to which it is related). The fossils are listed in series, showing the transition from one group to another, representing significant steps in the evolution of major features in various lines. These changes often represent major changes in anatomy, related to mode of life, like the acquisition of feathered wings for an aerial lifestyle in birds, or legs in the fish/tetrapod transition. As noted already by Darwin, the fossil record is incomplete.

      இவற்றை உருவ ஒப்பீடு, காலக் கணக்கீட்டு அளவில் வரிசைப் படுத்தினார்கள்.

      நன்றி!!!

      Delete
    2. மாமு எதற்க்கெடுத்தாலும் ஆய்வுக் கட்டுரைகள், பாய்வுக் கட்டுரைகள் என்று சொல்லும் நீங்க இதுக்கு மட்டும் விகீபீடியாவில் போய் பம்முவது ஏனோ? எதாச்சும் பேப்பர் நேச்சர் இதழில் பப்ளிஷ் ஆயிருந்தா குடுங்களேன்?

      Delete
    3. \\This is an incomplete list, which may never be able to satisfy particular standards for completeness. You can help by expanding it with reliably sourced entries.\\ Aha...... what a wonderful way of starting an article!!

      Delete
  7. \\அறிவியல் உலகத்தில் பரிணாமம் என்பது இப்போதைய உயிரின தோற்ற விளக்க கொள்கையாக ஏற்கப்பட்டு, பெரும்பான்மை பல்கலைக் கழகங்கள்,பள்ளிகளின் போதிக்கப்படுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.\\

    இதில்,

    1] அறிவியல் உலகத்தில் பரிணாமம் என்பது இப்போதைய உயிரின தோற்ற விளக்க கொள்கையாக ஏற்கப்பட்டு

    2] பெரும்பான்மை பல்கலைக் கழகங்கள்,பள்ளிகளின் போதிக்கப்படுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.

    1] அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு., 2] சத்தியமா உண்மைதான்

    ReplyDelete
    Replies
    1. மாப்ளே தாசு,

      பரிணாமக் கொள்கை சரி என அறிவியல் உலகில் ஏற்கப் படாமலேயே உலகின் பெரும்பானமை பல்கலைக் கழகங்களில்,பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது என சொல்ல முடியுமா??

      நன்றி!!!

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. \\அறிவியல் உலகத்தால் ஒருமித்து ஏற்கப்பட்ட ஒரு கொள்கையையின் \\ இது நடக்கவேயில்லை

    \\மீது கற்றல்,ஆய்வு மூலம் சாதிக்கும் விருப்பினை தமிழ் உலகம் இழந்து விடக்கூடாது என்னும் நோக்கிலேயே எழுதுகிறோம்.\\ யாரும் இந்த பரிணாமத்தை படிச்சு ஏமாராதீங்கோவ்.
    \\வைரஸ்களின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப மருந்துகளின் தன்மை மாறுகிறது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து இருக்கிறோம்,சில வருடங்களுக்கு முன் பலன் அளித்த பென்சிலின் இப்போது பலன் அற்று போனது. கொசு விரட்டி மீதே உடகாரும் வல்லமை கொண்ட கொசு என பல பரிணாம செயல்களை,அன்றாட வாழ்வில் பார்த்தாலும் நாம் அதனை உணர்வது இல்லை. ஆகவே பரிணாமம் என்பது 100% சரியாக ஆய்வுரீதியாக சரி பார்க்கப் பட்டு ஏற்கப்பட்ட கொள்கை.\\ மாமு, இது பித்தலாட்டத்தின் உச்சகட்டம் கொசுக்கள், மருந்துகளின் வீரியத்தை எதிர்கொள்ளும் சக்தியைத்தான் பெற்றுவிட்டன, ஆனால் அது ஒரு காக்கையாக மாறவில்லை. பரிணாமம் அது பருந்தாக மாறிவிட்டது என்கிறது. கொசு கொசுவாத்தான் இருக்கு. அது இன்னொன்றாக மாறினால் மட்டுமே அது பரிணாமம். நீங்க கூட ஜிம்முக்கு போயி பாடி பில்டிங் செய்யலாம், அப்பவும் நோய் எதிர்ப்பு ஷக்தி வரும், அதுக்காக நீங்க மனித இனமல்லாத வேற ஒண்ணா ஆயிட்டீங்க என்று அர்த்தமல்ல .

    ReplyDelete
    Replies
    1. Mr. Dass , The Mosquito getting resistence against mosquito reppellent has not happened in days it took years for this change to happen... Even now if we check the reppellent with mosquitoes breed in thick forest they may not be resistant because their ancestors have not been exposed to repellants this proves that the newly got resistance is carried on to the newer generatons also... As u said the mosquito to change to a bird it will take millions of years of evolution which cannot be recorded second by second by human scientists... What u are asking is similar to "U say finger prints are unique have u compared every one on the planet with the others" .. The above said is practically not possible but we have scientific reason that y it won't happen andits been tested for millions of times and it never failed... Please understand SCIENCE is based on FACTS.. Until Facts say something is true and there are no facts to say otherwise the concept will be TRUE accoring to science... Incase of evolution not even a single experiment done in this way has not failed still now.

      Delete
    2. \\ Incase of evolution not even a single experiment done in this way has not failed still now.\\ Hai Jenil, knowingly or unknowingly you have made a fantastic true statement. Read again what you said!! It means, there was no experiment that NOT failed--------means every experiment has failed, haa.........haa.........haa.........

      Delete
    3. Ok let me rewrite my last sentence, Every experiment done to support evolution has passed.

      Delete
    4. மாப்ளே தாசு,

      பரிணாமத்தின் பல் படிநிலைகளுள் ஒன்று சூழலுக்கு ஏற்ப மாற்றம் .இத்னை நம் நடைமுறை வாழ்வில் உண்ர முடியும். கொசுவில் வித்தியாசமான் பல உயிரின‌ங்கள் உண்டு.

      உரு அமைப்பில் ஒன்று போல் இருந்தாலும், இணைந்து இன விருத்தி செய்ய இயலாதவை.

      http://en.wikipedia.org/wiki/London_Underground_mosquito

      The evidence for this mosquito being a different species from C. pipiens comes from research by Kate Byrne and Richard Nichols. The species have very different behaviours,[1] are extremely difficult to mate,[2] and with different allele frequencies consistent with genetic drift during a founder event.[4] More specifically, this mosquito, C. p. f. molestus, breeds all-year round, is cold intolerant, and bites rats, mice, and humans, in contrast to the above-ground species, which is cold tolerant, hibernates in the winter, and bites only birds. When the two varieties were cross-bred, the eggs were infertile, suggesting reproductive isolation.[1][2]

      நன்றி!!!

      Delete
    5. பாகவதரே,

      உமக்கு ஆங்கில வகுப்பும் நான் தான் எடுக்கணும் போல இருக்கே அவ்வ்வ் :-)

      //Incase of evolution not even a single experiment done in this way has not failed still now.
      //

      double negativie in the same sentence cancel each other so that it'll convey a positive statment .

      இப்படி எழுதுவது ஆங்கில இலக்கணத்திற்கு முரண் ,ஆனால் இலக்கிய பயன்ப்பாட்டில் உள்ளது.

      he dont read well but never failed in exams= he always passed in exams ,படிக்கலை ஆனால் ஃபெயிலும் ஆகலை= எப்பவுமே பாசாகிடுவான் :-))

      no injury ,no hurt= im fine =நல்லா தான் இருக்கேன் சொல்வது.

      no money never paid as bribe= my hands are clean ,லஞ்சமே வாங்கலைனு சொல்வது



      இப்போ ஜெனில் சொன்னதின் பொருள் எந்த சோதனையும் தோல்வியடையவில்லை= எல்லாமே வெற்றி எனப்பொருள்.

      பகவத் கீதையை படிக்கிறேன்னு சொல்லிட்டு ஸ்கோலில் படிச்சத கூட மறந்துப்புட்டீரே :-))

      முதியோர் கல்வியில் சேர்ந்து மீண்டும் படிச்சா தான் உருப்படுவீர் :-))

      Delete
    6. வவ்வால்,

      //In case of evolution not even a single experiment done in this way has not failed till now.
      //

      இந்த வாக்கியத்துக்கு அர்த்தம் செய்த பரிசோதனைகள் அனைத்தும் வெற்றியடைந்தன என்றால்,


      //In case of evolution not even a single experiment done in this way has failed till now.// என்பதன் அர்த்தம் அனைத்து பரிசோதனைகளும் தோல்வியடைந்தன என்பதா? என்ன பிக்காலித் தனம் இது வவ்வால்........??!!

      \\he dont read well but never failed in exams\\ இந்த வாக்கியமும் மேலே சொன்னதும் ஒன்றல்ல, மேலே சொன்னது பெருக்கல் அதாவது -ve X -ve = +ve, ஆனால் இந்த வாக்கியத்தில் வரும் but பெருக்குவதை தடுக்கிறது. எனவே ஒரு மைனசுக்கும் இன்னொரு மைனசுக்கும் தொடர்பு வராது, கேன்சல் ஆகாது.

      \\ no injury ,no hurt= im fine =நல்லா தான் இருக்கேன் சொல்வது.\\ மேலே சொன்ன அதே காரணம் தான், இரண்டும் தனித் தனி ராஜ்ஜியம் நடத்தும் வாக்கியங்கள், ஒன்றை ஒன்று பாதிக்காதது எனவே ஒரு no வும், இன்னொரு no வும் ஒன்றை ஒன்று கேன்சல் செய்யாது.


      \\no money never paid as bribe= my hands are clean\\ இந்த மாதிரி எங்க எழுதறாங்களோ தெரியலை.

      தமிழ் வாத்தி, என்னைக்கும் ஒரு வாத்தியை மாங்கா என்று சொல்லக் கூடாது, ஆகையால் உம்மோட ஆங்கிலப் புலமையை நான் கேள்வி குறியாக்க விரும்பவில்லை. எனினும், எனக்கு ஆங்கிலம் அனுபவ ரீதியாக மட்டுமே தெரியும். நிறைய பேரு ஆங்கில இலக்கணம் கத்துக்க ஆவலா இருக்காங்க, வேண்டுமானால் அசின் படத்தை தேடும் நேரத்தில் ஆங்கிலப் பதிவுகளைப் போடும், ஊருக்காவது நல்லது நடக்கும்.

      Delete
    7. பாகவதரே,

      உமக்கு பாடப்புத்தக ஆங்கிலம் மட்டுமே தெரியுமெனில் நான் என்ன செய்வேன், கொஞ்சம் ஆங்கில நாவல்,பத்திரிக்கைகள் எல்லாம் படியும்,அவற்றின் மொழி வடிவமே வேறு,அதில் போய் ஆங்கில இலக்கண கட்டமைப்பை தேடாதீர் :-))

      ஜெனில் சொன்னது சரியான பிரயோகமே.

      நீர் உடனே ஒரு எதிர்மறையை அதே வாக்கியத்தில் கட் செய்துவிட்டு நேர்மறையானு கூமுட்டை தனமாக கேட்டால் என்ன செய்வேன் :-))


      very common = its not unusual என எழுதுவோரும் உண்டு.

      ஒரு எதிர்மறை சொல்லை,மீண்டும் ஒரு எதிர்மறை சேர்த்து நேர்மறையாக்கியாச்சு.

      தமிழிலும் ,வழக்கமானது என சொல்வதை வழக்கத்திற்குமாறானது அல்ல என எழுதுவோரும் உண்டு.

      இதெல்லாம் இலக்கிய சுதந்திரமய்யா ,கொஞ்சம் பகவத் கீதையை மூட்டைக்கட்டிட்டு பொதுவானவையும் வாசியும்,இல்லைனா மூளை அழுகி நாறிடும் :-))

      எங்கே எழுதுறாங்கன்னு எல்லாம் மண்டை உடைச்சுக்க வேண்டாம்,நான் சொன்ன சொற்களை அப்படியே கூகிள் செர்ச்சில் போட்டாலே ,அச்சொற்கள் பயன்ப்படுத்தப்பட்ட கட்டுரைகளை காட்டிவிடும்.


      Delete
    8. @ வவ்வால்

      ஒரு முட்டாள் வாயைத் திறக்காத வரை அவனுக்கு நல்லது என்ற சொல்லாடலுக்கு நல்ல எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறீர். நீர் வாயைத் திறக்கத் திறக்க உமது அறியாமை மேலும் மேலும் வெளிப்படுகிறது. ஜெனிலை ஆங்கில இலக்கணத்தை வைத்து பிடிக்க வேண்டுமானால் பல விதத்தில் நான் கேள்வி எழுப்பியிருக்கலாம். உதாரணத்துக்கு அவர் still now என்று போட்டிருக்கிறார் அங்கே till now என்று தான் வந்திருக்க வேண்டும் ஆனாலும் அவர் எதை மனதில் வைத்து போட்டுள்ளார் என்பதை ஊகித்து அதை நான் பெரிது படுத்தவில்லை.[ஆங்கில மேதையான உமது குருட்டு கண்களுக்கு அது தெரியவே இல்லை என்பது வேறு விஷயம்]. பரிணாமத்தைப் பற்றிய பதிவில் நீர் தேவையே இல்லாமல் ஆங்கிலப் பாடமெல்லாம் என்னை எடுக்க வைத்து விட்டீர் . மாரீசன் என்ற மாய மான் இராமனை வேறெங்கோ இழுத்துச் சென்றது மாதிரி பதிவின் தலைப்புக்கு சம்பந்தமேயில்லாமல் வேறெங்கோ இழுத்துச் செல்வதையே ஒரு பிழைப்பாக நீர் வைத்துள்ளீர்.

      நான் ஆங்கிலத்தில் பெரிய புலமை பெற்றவன் இல்லை என்பதை முன்னரே கூறிவிட்டேன் ஆனாலும் மற்றவர்களிடம் குறை காணும் அளவுக்கு நீர் தகுதியானவரா என்று சற்றும் சிந்தித்துப் பார்க்காமல் குரங்கு ஆப்பை பிடுங்கிய வேலையைச் செய்து கொண்டிருக்கிறீர்.

      \\very common = its not unusual என எழுதுவோரும் உண்டு.\\ இது உமக்கு ஆங்கிலம் பற்றி அனுபவ ரீதியாகக் கூட ஒன்றும் தெரியாது என்பதை தெள்ளத் தெளிவாக பறைசாற்றுகிறது. நீர் முட்டாள்தனமாக் நினைப்பது போல இவை இரண்டும் ஒப்பான சொற்றொடர்கள் இல்லை. very common என்றால் நிறைய பார்க்க முடியும் என்று பொருள், its not unusual என்றால் இல்லவே இல்லை என்று சொல்ல முடியாது, அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும், அதாவது rare என்ற பொருள் தரும்.

      எது எப்படியாயினும் ஜெனிலின் ஆங்கில பிரயோகத்தைப் பற்றி நான் இங்கு பெரிது படுத்த வில்லை, ஏன்னா இங்க யாரும் ஆங்கில மேதைகள் இல்லை.

      இந்த கிரிமினல் லாயர்கள் வாதம் எப்படி இருக்குமென்றால் கொலை செய்தவனே நாம்தான் செய்தோமா என்றே அவனுக்கே சந்தேகம் வருமளவுக்கு இருக்கும். நீரும் அது போல உமது திறமையன [உண்மையில் மொக்கையான] வாதங்களை எடுத்து வைத்து ஜெனிலை காப்பாற்றிவிட்டீர். அவரும் தான் எழுதியது சரிதான் போல என்னும் நிலைக்கு வந்துவிட்டார்!! அதனால் தான்,

      \\@voval Thank u :)\\ என்று உவகை போங்க சொல்லியிருக்கிறார் !! வாழ்க உமது தொண்டு!!

      Delete
    9. ஜெனில்,

      நன்றி!

      ஏதோ நம்மால் ஆன உபகாரம்,அவ்வளவே!

      ==========

      பாகவதரே,

      ஜெனில் என்ன சொன்னாங்கன்னு எனக்கு புரிஞ்சது ஏன் உமக்கு புரியலை, நீர் தான் ஆங்கில வாத்தியார் போல ஆரம்பிச்சீர் :-))

      நீர் முரட்டு வாதம் செய்யும் ஒரு டேஷ் என்பதால் தான் அவங்க உடனே மாற்றி சொல்லி புரிய வச்சிட்டு ,ஒதுங்கிட்டாங்க.

      // ஆனாலும் மற்றவர்களிடம் குறை காணும் அளவுக்கு நீர் தகுதியானவரா என்று சற்றும் சிந்தித்துப் பார்க்காமல் குரங்கு ஆப்பை பிடுங்கிய வேலையைச் செய்து கொண்டிருக்கிறீர்.
      //

      என்னது நான் சொல்ல வேண்டிய டயாலக்க எல்லாம் நீர் சொல்லிட்டு :-))

      // இல்லை. very common என்றால் நிறைய பார்க்க முடியும் என்று பொருள், its not unusual என்றால் இல்லவே இல்லை என்று சொல்ல முடியாது, அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும், அதாவது rare என்ற பொருள் தரும். //

      நிறைய பார்க்க முடியும் என்பது வெரி காமன் என்றால் ,எல்லாமே அப்படித்தான்னு பொருள் இல்லை, அதாவது கொஞ்சம் மாறு பட்டதும் இருக்கும்னு அர்த்தம் அதாவது ரேர், எனவே நான் சொன்னது அந்த ரேர் தான் என நீரே சொல்லியாச்சு, எனவே வெரி காமன் என்பதை நான் சொன்னாப்போல நாட் அன்யூசுவல் என்றும் சொல்ல முடியும் :-))

      உமக்கு புரியனும் என்றும் தான்"வழக்கத்திற்கு மாறானது அல்ல" என்றும் சொல்லி இருப்பேன் அதன் பொருள் வழக்கமானது தான்.

      ஒன்றை நேர் மறையாக சொல்வதை கொஞ்சம் மாற்றி எதிர் மறையாக டபுள் நெகட்டிவில் சொல்வது எழுத்தில் உள்ளது. நீர் முதலில் டபுள் நெகட்டிவ் என கூகிள் செர்ச் செய்து பார்த்துவிட்டு பேசவும்.சும்மா வறட்டு தவக்களை போல கொர் ..கொர்னு சவுண்டு வேண்டாம் :-))

      # நானாக டிராக் மாறவில்லை ,நீர் மாற்றினேர் அதில் நான் ரயிலை விட்டிருக்கிறேன்,எனவே இனியாவது பதிவுக்கு சம்பந்தமேயில்லாமல் எதையாவது பேசி மாட்டிக்காதீர் :-))

      Delete
    10. @ வவ்வால்

      வாத்தி, என்னதான் நீர் என்னுடைய ஜன்ம வைரி என்றாலும் உம்மிடமுள்ள நிறைகளை நான் மறுக்கக் கூடாது. அவற்றில் ஒன்று தான் சொல்லவருவதை குழப்பமில்லாமல் தெளிவாகச் சொல்லும் திறமை. அது சரியா தவறா என்பது வேறு விஷயம். இப்படிப்பட்ட நினைப்பிலும் நீர் இப்போது மண்ணை வாரிப் போட்டுவிட்டீர். வழக்கமாக மாமூல் மாமுதான் குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கப் பார்ப்பார். ஏனெனில் அவர் புளுகுவதையும் பொய்யை விற்பதையும் பரம்பரைத் தொழிலாகச் செய்து வருபவர். தற்போது நீரும் அதே மாதிரி குழப்ப ஆரம்பித்து விட்டீர். காரணம் இங்கே நீர் ஒரு பொய்யை மெய்யாக்கி விற்கப் போனது தான்.

      இங்கே உமக்கு மீண்டும் நான் பதில் சொல்ல வேண்டாம் என்றே நினைத்திருந்தேன் ஆனாலும் பதில் சொல்லாமல் விட்டால் நீர் சொன்ன புளுகை உண்மை என நான் ஏற்றுக் கொண்டதாகிவிடும். ஆகையால் ஒரு சிறு விளக்கத்தை மட்டும் என் தரப்பில் இருந்து கொடுக்கலாம் என நினைக்கிறேன் .

      ஜெனில் எழுதிய சர்ச்சைக்குரிய வாக்கியத்தில் இரண்டாவதாக வரும் NOT-ஐ எடுத்துவிட்டால் வரும் வாக்கியத்துக்கும் ஒரிஜினல் வாக்கியத்துக்கும் என்ன வேறுபாடு? இதை நீர் ரூம் போட்டு யோசியும்.

      அடுத்து, very common ---------> its not unusual இவை இரண்டும் ஒப்பானவையா?


      எக்கச் சக்கம், ஒன்றுமேயில்லை என இரண்டு EXTREME நிலைகளில் its not unusual என்பது ஒன்றுமேயில்லை என்பதற்கு அருகிலும் very common என்பது எக்கச் சக்கம் என்பதற்கு அருகிலும் வரும். இந்த இரண்டு பயன்பாடுகளுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு இருக்கிறது. இதைப் போலவே நிறைய உதாரங்களைச் சொல்ல முடியும்.

      possible, not impossible இவை இரண்டும் ஒன்றுதானா? கிடையவே கிடையாது!! Example: தமிழகத்தில் இருப்பவர்கள் சென்னைக்குப் போவது possible ஆனால் விண்வெளிக்குச் செல்வது not impossible.

      வவ்வால் ஒருத்தரை விவாதத்தில் தோற்கடிப்பது ஒருத்தன் ஈகோவை திருப்தி படுத்தலாம் ஆனால் அதற்காக பொய்யை, பித்தலாட்டத்தை உண்மை என்று கூறி விதைக்கக் கூடாது. மனசாட்சிக்கு விரோதமான விஷயங்களைச் செய்யக் கூடாது. வேண்டுமானால் சொல்லும், நீர் ஆங்கில மேதைதான் என்று நானே ஒரு பதிவு போட்டு ஒப்புக் கொள்கிறேன், அதற்காக இந்த மாதிரி கீழ்த்தரமான வேலைகளில் இறங்க வேண்டாம். மனிதனுக்குத்தேவையான குறைந்த பட்ச நேர்மையாவது வளர்த்துக் கொள்ளும். நீர் இனிமேல் என்னதான் குரைத்தாலும் மேற்கண்ட இரண்டு விஷயங்களில் என்னுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை.

      Delete
    11. பாகவதரே,

      உமது ஈகோ உம்மை ரொம்ப பாடாய்ப்படுத்துகிறது என்பது மட்டும் தெளிவாகிறது.

      உமக்கு பிடிக்கவில்லை எனில் சரியான கருத்தாக இருந்தாலும் மட்டமாக பேசுவது வழக்கமான ஒன்றாய் கொண்டிருக்கிறீர்.

      இலக்கணத்திற்கும் பேச்சு மொழிக்கும் உமக்கு வித்தியாசம் புரியவில்லை எனில் என்ன செய்வது.

      நல்ல புரிய வேண்டும் என்று தான் தமிழில் வழக்கமானது என்பதை வழக்கத்திற்கு மாறானது அல்ல என சொல்வதும் உண்டுனு உதாரணம் காட்டினேன் இனி என்ன செய்ய?

      சரி ஓய் நீரே ஆங்கிலப்புலவர் ,டபுள் நெகட்டிவில் எழுதிய ஜீயோப்ரி சாசர், சேக்ஸ்பியர் எல்லாம் கூமுட்டைகள் ;-))

      Delete
  10. \\சர் ஐசக் நியுட்டன் எந்த [ஈர்ப்பு] விசை:\\ ஜீசஸ் கூட இரண்டு அயோக்கியர்களையும் சிலுவையில் ஏற்றினார்களாம், அதனால் அவர்களும் ஜீசசுக்கு ஒப்பானவர்களாக முடியுமா? பரிணாமத்தை இப்படி ஒப்பிடுவது அப்படித்தான் இருக்கு. நியூட்டனின் விதிகளை மட்டுமே வைத்து இன்றைக்கும் ஸ்பேஸ் ஷட்டிலை ஏவ முடியும். மேலும் பல்வேறு அன்றாட அறிவியல் தேவைகளுக்கு நியூட்டன் விதிகளே போதும். அனால் பரிணாமம் அப்படியா? அவிழ்த்து விட்ட புருடா, ஆதாரங்கள் மூலம் கப்சா என்று ஆனதுக்கப்புறம் இன்னொரு கப்சாவை விடுவது, இது தான் அறிவியலா...??

    ReplyDelete
    Replies
    1. மாப்ளே தாசு,

      ஈர்ப்பு விசை உண்மை. அதன் செயமுறை விளக்கம் கலிலியோ,நியுட்டன், ஐன்ஸ்டின் என் மாற்றம் அடைந்த‌து.

      எல்லைகளை பொறுத்து சான்றுகளில் அடிப்படையில் ஒரு விதி மாறுவது சரிதானே. இதையும் பரிணாம வளர்சி என்போம்.

      இதே போல்

      பரிணாமம் என்பது உண்மை இதன் செயல்முறை விளக்கம் லாமார்க்,டார்வின், கோல்ட்,ஃபிஷர்.. என முழுமை விள்க்கம் நோக்கி நகர்கிறோம்.

      நன்றி!!!

      Delete
  11. \\இதுவும் நம் பால்வீதி மண்டலம் தாண்டி கணக்கீட்டில் பிழை கொடுப்பதால், கருப்பு பொருள் என்னும் கருதுகோள் கொண்டு பிழையை சரி செய்ய முயற்சி நடக்கிறது. ஒருவேளை கருப்பு பொருள் என்பது இல்லை எனில் ஐன்ஸ்டினின் விதிக்கும் மாற்று கொள்கை காணப்பட வேண்டும்.\\ உங்கள் விளக்கம் சரியா என்று தெரியவில்லை. விண்மீன்களின் வேகம் கேளஷிகளின் மையத்தில் இருந்து விலகும்போதும் குறைய வேண்டும், குறையவில்லை. ஆகையால் கண்ணுக்குத் தெரியாத நிறை இருப்பதாக கருதப் படுகிறது, அதுவே கரும் பொருள். இதில் அறிவியல் விதிகள் பொய்யாவதர்க்கு எங்கே இடமென்று சொல்கிறீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. மாப்ளே தாசு,

      அறிவியலில் சரி தவறு என்பதை விட அதிக பொருந்தும் விளக்கம்,கணிப்பு என்பதே சரி.

      பரிசோதனைக்கும் கணிப்புக்கும் உள்ள வித்தியாசமே ஒரு விளக்கத்தின் ஏற்புத் தன்மையை நிர்ண்யம் செய்கிறது.

      ஒளி என்பது அலையா, துகளா என்றால் இரண்டும் பொருந்துகிறது.

      http://en.wikipedia.org/wiki/Wave%E2%80%93particle_duality

      Wave–particle duality postulates that all particles exhibit both wave and particle properties. A central concept of quantum mechanics, this duality addresses the inability of classical concepts like "particle" and "wave" to fully describe the behavior of quantum-scale objects.

      நன்றி!!!

      Delete
  12. \\.நூற்றுக் கணக்கில் ஆய்வு சஞ்சிகைகளும்[Journals],ஆயிரக் கணக்கில் கட்டுரைகளும் வருடத்திற்கு பல புத்தகங்களும் வெளிவருகின்றன. \\ Piltdown Man பற்றியும் 500 PhD ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப் பட்டன, அதன் பின்னர் அது புருடா என்று தெரிய வந்தது என்பதையும் நினைவில் கொள்ளவும்.

    ReplyDelete
    Replies
    1. மாப்ளே தாசு,

      சரி பில்ட் டௌன் மேன் போல் இருக்கும் பல இலட்சக் கண்க்கான் படிமங்களையும் த்வறு என் ஏன் நிரூபிக்க முடியவில்லை?

      பில்ட் டௌன் மேன் மனித படிம‌ வரலாற்றில் கிடைத்த முதல் படிமம் 1912 C.E.அதன் பிறகு கிடைத்த அதை விடப் பழமையான படிமங்களுடன் வித்தியாசமாக இருந்தது. ஆகவேதான் மீண்டும் ஆய்வுகள் நடந்து மோசடி கண்டுபிடிக்கப் பட்டது.

      At a meeting of the Geological Society of London on 18 December 1912, Charles Dawson claimed that a workman at the Piltdown gravel pit had given him a fragment of the skull four years earlier. According to Dawson, workmen at the site discovered the skull shortly before his visit and broke it up in the belief that it was a fossilised coconut.
      ...
      n 1915, Dawson claimed to have found three fragments of a second skull (Piltdown II) at a new site about two miles away from the original finds.[1] Woodward attempted several times to elicit the location from Dawson but was unsuccessful.
      ....
      n 1912, the majority of the scientific community believed the Piltdown man was the “missing link” between apes and humans. However, over time the Piltdown man lost its validity, as other discoveries such as Taung Child and Peking Man were found. R. W. Ehrich and G. M. Henderson note, “To those who are not completely disillusioned by the work of their predecessors, the disqualification of the Piltdown skull changes little in the broad evolutionary pattern. The validity of the specimen has always been questioned.”[20] Eventually, during the 1940s and 1950s, more advanced dating technologies, such as the fluorine absorption test, proved scientifically that this skull was actually a fraud.

      ஒரு சான்று உண்மையாக அது பல இடங்களில், பலரால் பரிசோதிக்கப் பட்டால் மட்டுமே சரி!!

      நன்றி!!

      Delete
  13. \\பரிணாமம் என்பது என்ன?
    விக்கிபிடியாவில் இருந்து
    http://en.wikipedia.org/wiki/Evolution\\ இந்த விக்கிபிடியா ஆதாரங்கள் பல நம்பத் தகுத்தவையாக இல்லை.

    ReplyDelete
  14. \\2.பரிணாம நிகழ்வினால் உயிர் அமைப்புக்களின் ஒவ்வொரு நிலையிலும்[உயிரின குழுக்கள்,தனிப்பட்ட உயிரிகள்,மூலக்கூறுகள், ஜீனோம்,... மற்றும் ப்ரோட்டீன்] பல்வேறு வகைகள் உருவாகி தொடர்ந்து மாற்றம் அடைகிறது. \\ மாற்றம் ஒன்றே மாறாதது என்றால், மில்லியன் கணக்கான வருடங்களாக மாற்றம் இல்லாமல் உயிர்கள் உள்ளது எப்படி?

    ReplyDelete
    Replies
    1. மாப்ளே தாசு,
      உரு அமைப்பு மாற்றம் பல் மிலியன் ஆண்டுகளாக படிம வரலாற்றில் மாறாமல் இருக்கும் நிகழ்வினை நிறுத்திய நிலைத் தன்மை என்கிறோம். இது பற்றியும் நாம் எழுதி இருக்கிறோம்.

      http://aatralarasau.blogspot.com/2012/07/2puncutated-equilibrium.html
      டார்வினின் வாரிசு ஸ்டீஃபன் ஜே கோல்ட் பகுதி 2: Punctuated Equilibrium

      விக்கி பாரும்.
      http://en.wikipedia.org/wiki/Punctuated_equilibrium

      நன்றி

      Delete
  15. சகோ.சார்வாகன்.

    நல்லதொரு தொடக்கம்,இன்னும் உள்ளப்போங்க,நானும் வந்து குதிக்கிறேன்,பாகவதர் கேட்கும் குழந்தை தனமான கேள்விகளைக்கண்டுக்கொள்ள வேண்டாம், அதெல்லாம் வடிவேல் காமெடி :-))
    -------------

    பாகவதரே,

    // மில்லியன் கணக்கான வருடங்களாக மாற்றம் இல்லாமல் உயிர்கள் உள்ளது எப்படி?//

    இதற்கு என்ன ஆதாரம் உள்ளது?

    உமக்கெல்லாம் பதில் சொன்னால் புரியாது,நீர் உளறுவதை வைத்து கேள்விக்கேட்டால் தான் அடங்குவீர் :-))

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ வவ்வால்,
      நம்ம மாப்ளே தாசின் கேள்வியில் குறைந்த பட்சம் நேர்மை இருக்கிறது.

      உயிர்த்தெழுந்த இயேசுவைப் பார்க்காமல், காயத்தை தொட்டுப் பார்க்காமல் ஏற்க மாட்டேன் என்ற தாமஸ் போல் செயல் படுகிறார்.

      அவருக்கு விளக்கும் சாக்கில் அனைவருக்கும் விளக்க ஒரு வாய்ப்பு கொடுத்தமைக்கு தாசைப் பாராட்டுவோம்.

      ஒரு நீண்ட கால தொடர் நிகழ்வுக்கு என்ன சான்றுகள் இருக்க முடியுமோ அது பரிணாமத்திற்கு இருக்கிறது. அவ்வள்வுதான்!!

      நீங்களும் ஒரு பேரலல் ட்ராக் ஓட்டுங்க!! ஹி ஹி

      நன்றி!!

      Delete
  16. பாகவதரே,

    //. நியூட்டனின் விதிகளை மட்டுமே வைத்து இன்றைக்கும் ஸ்பேஸ் ஷட்டிலை ஏவ முடியும். மேலும் பல்வேறு அன்றாட அறிவியல் தேவைகளுக்கு நியூட்டன் விதிகளே போதும்.//

    நீர் டப்பா அடிச்சு பாஸ் செய்த கேசுனு தெரியுது.

    நியுட்டனின் விதிகள் ஈர்ப்பு விசையின் காரணத்தை விளக்கவில்லை, ஈர்ப்பு விசையினை மட்டுமே காட்து,அதுவும் கண்டிஷன்ஸ் அப்ளை என்பதாக.

    சார்வாகன் கருப்பு பொருள்னு சொல்லி இருக்கார், அது கறும்துளை, கறும் புழு ;-))

    ஏதோ ஒரு கண்ணுக்கு தெரியா ஈர்ப்பு சக்தி மையம் பிரபஞ்சத்தில் உள்ளது.

    அதனை அறிவியல் பூர்வமாக இன்னும் நிறுவவில்லை,இங்கே இந்த இடத்தில் ஒரு நட்சத்திர திரள்,கோளம் உள்ளது என குறிப்பிட வானியல் வல்லுனர்களால் முடிகிறது,அது நிறுவப்பட்ட ஒன்று,ஆனால் ஒரு கறுந்துளை/புழு இங்கே உள்ளது என சொல்ல முடியவில்லை,எனவே ஹைப்போதீசிஸ்(எடுகோள்/கருது கோள்) புரியுதா?

    ReplyDelete
    Replies
    1. வௌவால்,

      என்னை திட்டனும்னா தனியா வச்சுக்கலாம், அதுக்காக இயற்பியலை நீர் இப்படி துகில் உரிவதை என்னால் சகிக்க முடியவில்லை.

      Delete
    2. பாகவதரே,

      கிருஸ்ண பக்தரல்லவா அதான் எப்பவும் துகில் உரிவது,உள்பாவாடை திருடுவது என்றே பேசுறீர் :-))

      இயற்பியலில் கேள்விக்கேட்டே உம்மை காலி பண்ணலாம் போல இருக்கே :-))

      நியுட்டனின் விதிகள் முழுமையாக ஈர்ப்பு விசையை விளக்கப்போதுமானதா? அதை முதலில் சொல்லும் . விளக்கமாக சொன்னால் இங்கே இடம் போதாது என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்ல வேண்டாம், ஆம்/இல்லை என சொன்னாலே போதும்.
      --------------

      சகோ.சார்வாகன்,

      நாமும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது டிராக் ஒட்டுக்கிறேன்,ஆனால் விளங்காத பாகவதருக்கு விளக்குகிறேன் என ரொம்ப எனர்ஜி வேஸ்ட் செய்யத்தேவையில்லை, பொதுவான வாசகர்களுக்கு எளிதில் புரிய வைத்தால் போதுமானது.அப்பொழுது தான் ஒரு சீரான முறையில் பரிணாம விளக்கம் அமையும்.

      Delete
  17. முமின்கள் ஓய்ந்துவிட்ட பிறகும் விடாது கருப்பு என்று தொடரும் தாஸினால் ஒரு நன்மை பல விளக்கங்கள் வெளியே வருவதுதான்.

    நம்பிக்கை எவ்வாறு மனிதரின் கண்ணை மறைக்கும் என்பதற்கு தாஸே ஒரு சாட்சி. அவரது இயற்பியல் அறிவிலிருந்து அவர் சத்தியமாக முட்டாள் அல்ல என்பது தெளிவு. ஆனால் பரிணாமம் என்று வந்துவிட்டால், இஸ்கானால் மறைப்படும் அவரது அறிவு எதிர்திசையை நோக்கி ஓடி பரிணாமத்திற்கு எதிரான கருத்துக்களையே தேடுகிறது.

    விஷ்ணுவின் 10 அவதாராங்கள் பரிணாமத்தையே குறிப்பதாக பல இந்து அறிஞர்கள் நிறுவ முயற்சித்துள்ளார்கள். ஆனால் இஸ்கான் ஏன் எதிர்க்கின்றது? இதற்கு ஒரே காரணம் பரிணாமத்தை எதிர்த்தே வளர்ந்திருக்கும் மதவாத கிறுத்தவரிடையே இஸ்கானை விற்பனை செய்வதாகத்தான் இருக்க முடியும். இவர்களின் ஒரிறை கொள்கை இதை மேலும் உறுதிபடுத்துகின்றது.

    மேலும் மேற்கண்டவாறு மதத்தையும் அறிவியலையும் false logic மூலம் இணைப்பது அறிவியலை முற்றிலும் புறக்கணித்து ஒரு கற்பனாவாத உலகில் வாழ்வதைவிட சிறந்தது.

    ReplyDelete
    Replies
    1. சகோ நந்தவனம்,

      விட்டுவிடு கருப்பா என்னும் நாவல், விடாது கருப்பு என் ஆனபோதே அதிக புகழ் அடைந்தது.

      நமக்கு மிகவும் பிடித்த தொடர்.அவதார புருடன் என்றாலும் த்வறு செய்வான், அழிந்து போவான் என்பது இந்து புராணம் சொல்லும் விடயம் என்றாலும், விடாது கருப்பு அருமையாக விள்க்கியது.

      நரசிம்மம் சரபேஸ்வரரால் ஒடுக்கப்பட்டது,இராமன் சரயு நதியில் மூழ்கி இறந்தான்,கிருஷ்னர் காலில் அம்பு பாய்ந்து இறந்தார் என்பதை மதவாதிகள் சொல்வது இல்லை.

      அந்த வகையில் இந்த பரிணாம எதிர்ப்பு அவதாரம் எப்படி அழியும் என்பதை நாம் விரைவில் பார்ப்போம்.

      பரிணாமத்தை இந்துக்களில் பெரும்பானமையோர், கிறித்த கத்தோலிக்க ஆங்கிலிக்கன் சர்ச் உள்ளிட்ட பெரும்பானமை, இஸ்லாமிய அகமதியா,குரான் மட்டும் பிரிவினர் ஆகியோர் ஏற்கிறார்.

      இஸ்கான்,வஹாபிகள், பெந்தேகோஸ்தே குழுவினர் மட்டும் எதிர்க்கிறார் பரிணாமத்தை,இவர்களின் தவறான புரிதல்களை, விதண்டாவாதத்தை அம்பலப் படுத்துவோம்.

      நன்றி!!

      Delete
  18. //பரிணாமத்தை இந்துக்களில் பெரும்பானமையோர், கிறித்த கத்தோலிக்க ஆங்கிலிக்கன் சர்ச் உள்ளிட்ட பெரும்பானமை, இஸ்லாமிய அகமதியா,குரான் மட்டும் பிரிவினர் ஆகியோர் ஏற்கிறார்.// ஆமாம். வேகமாக வளர்ந்து வரும் மதம் நாத்திகமே. நாத்திக மதத்தின் வேதமான பரிணாம புராணத்தை அனைவரும் ஏற்றுக்கொள்ளுங்கள். இந்த வேதம் டார்வின் உட்பட பல நாத்திக (இறை) தூதர்களால் வழங்கப்பட்டது. இந்த வேதம் இப்படித்தான் ஆரம்பிக்கும் 380 கோடி வருடங்களுக்கு முன்பு ஒரு செல் இருந்தது....

    //இஸ்கான்,வஹாபிகள், பெந்தேகோஸ்தே குழுவினர் மட்டும் எதிர்க்கிறார் பரிணாமத்தை,இவர்களின் தவறான புரிதல்களை, விதண்டாவாதத்தை அம்பலப் படுத்துவோம்// இப்படி எங்கள் புராணத்தை ஏற்றுக் கொள்ளாத மடையர்களை ஒரு வழியாக்காமல் விடமாட்டோம்.

    ReplyDelete
    Replies
    1. கலக்கிட்டீங்க ராபின் !!

      \\இந்த வேதம் டார்வின் உட்பட பல நாத்திக (இறை) தூதர்களால் வழங்கப்பட்டது.\\ இதை "மறைகழண்ட தூதர்களால் வழங்கப்பட்டது" அப்படின்னு மாத்திக்கலாம். ஹா.... ஹா.... ஹா....

      Delete
    2. சகோ இராபின் வணக்கம்,
      வாங்க,
      பரிணாமம் ஒரு இறைமறுப்புக் கொள்கை அல்ல!! இப்போதைய உயிரின தோற்ற ,பரவல் அறிவியல் கொள்கை.

      பரிணாமத்தையும், இறை மறுப்பையும் குழப்புவது தேவையற்றது.
      பரிணாமத்தை விமர்சிக்க அறிவியல் வைக்கும் சான்றுகளான‌
      1. படிமங்கள், பரிணாம மரம்
      2. ஜீனோம் ஆய்வுகள்

      இவற்றின் மீதான ஆய்வுக் கட்டுரைகள் மட்டும் சார்ந்து விமர்சிப்பது மட்டுமே ப்யன் உள்ள விடயம். இப்படி செய்ய முயற்சித்தால் பரிணாமம் என்பதன் ஏற்புத் த்னமை உங்களுக்கும் பிடிபடும்.

      நாங்கள் பைபிளுக்கு பதில் ஆர்ஜின் ஆஃப் ஸ்ஃபீசிஸ், இயேசுவுக்கு பதில் டார்வின் என் வலியுறுத்துவது போல் கதை விடுவது புரட்டு!!

      உங்களின் மதம் விமர்சனம் செய்ய வேண்டும் எனில் அதற்கும் அகழ்வாய்வு,மொழியியல் சான்றுகளின் மீதே விமர்சிப்போம்.அதற்கு பரிணாமம் தேவை இல்லை.உங்களின் மத புத்தக படைப்புக் கொள்கைக்கு பரிணாமம் முரண் என்னும் தவறான புரிதலால் நீங்கள்தான் பரிணாமத்தை எதிர்க்கிறீர்கள்.

      தமிழ்பதிவுலகில் வஹாபிகள் பரிணாம நிருபணத்தின் சிக்கல்களை தங்கள் மதம் பரப்பும் தந்திரமாக செயல்படுத்தியபோதே பரிணாம விளக்கம் எழுத இறை மறுப்பாளர்களாகிய நாம் நிர்பந்திக்கப்பட்டோம் என்பதே வரலாறு!!!

      இரு உயிரிகள் ஒரே உயிரினக் குழு அல்லது வெவ்வேறு உயிரினக் குழு என் எப்படி வகைப்படுத்தப் பட முடியும்? இந்தக் கேள்வியின் பதில் பரிணாமத்தின் புரிதல்

      இதன் பதிலை சிந்திக்க மாட்டீர்களா!!!

      நன்றி!!!

      Delete
    3. \\பரிணாமத்தை விமர்சிக்க அறிவியல் வைக்கும் சான்றுகளான‌
      1. படிமங்கள், பரிணாம மரம்\\

      மாமு, மரம் மட்டை அப்படிங்கீறீங்க ஒ.கே . நீங்க போட்டிருக்கீங்களே மரம் அதில் கிளைகளில் உயிரினத்தின் படத்திப் போட்டுள்ளீர்களே, பொதுவான முன்னோர்கள் இருப்பது உண்மையானால் கிளைகள் இணையும் இடத்திலும் அந்த பொது முன்நூர்களின் படத்தைப் போட்டிருக்கலாமே? எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...... நம் நாட்டிலே........ சொந்த நாட்டிலே............

      சிந்திக்க மாட்டீர்களா!!!\\ பார்க்கப் போனா நீங்க சிந்திக்கிறதை நிறுத்தி முன்னூறு வருஷம் ஆனது போல உள்ளது.............

      Delete
    4. மாப்ளே தாசு,
      மறந்த உயிரின முன்னோர்களுக்கு படிமம் மட்டுமே உண்டு என்பதால் ,பல் உயிரிகளுக்கு சதை தோல் போர்த்தி படம் உண்டு என்றாலும், அதை வைத்து என்ன செய்வது?
      கொஞ்சம் தெளிவாக காலக் கணக்கீட்டுடன் கூட பரிணாம மரம்.
      http://www.tellapallet.com/tree_of_life.htm
      Thank you!!!

      Delete
  19. அருமையான தொடர் முயற்சி, எளிமையாகத் தொடங்கியுள்ளீர்கள். ஆனால் குறுகிய வட்டத்தில் மண்ணுக்குள் தலையை புதைத்து உலகம் இருள் என்னும் தீக்கோழிப் போன்றோருக்கு உரைக்காது, சாமான்யர்களை குறி வைத்து பதிவு செல்லட்டும், உயிரியல் எத்தகைய அற்புதமானது என்பதை உணரட்டும். தொடருங்கள் தோழரே.

    ReplyDelete
    Replies
    1. சகோ இக்பால் வாங்க,
      நாம் பரிணாமம் என்பது சான்றுகள் உள்ள இபோதைய உயிரின தோற்ற,பரவல் அறிவியல் கொள்கை என்பதை பாமர எதார்த்த மக்களுக்கு புரிய வைக்க முயல்கிறோம்.
      மதவாதிகளின் விமர்சனம் நம்மை ஊக்குவிக்கும் மாமருந்தாகவே கருதுகிறோம்.

      நன்றி!!

      Delete
  20. aashiq ahamedYesterday 8:41 AM - Public
    இஸ்லாமா? நாத்திகமா? - துவா ப்ளீஸ்

    சமீபத்திய ஆய்வு முடிவுகளின்படி, மேற்கத்திய உலகில் இரண்டு கொள்கைகள் அதிகளவிலான வளர்ச்சியை கண்டு வருகின்றன. ஒன்று இஸ்லாம், மற்றொன்று நாத்திகம். ஆனால் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்டவை. இந்த இரண்டு கொள்கைகளில் எது அறிவுக்கு ஒத்துவருகின்றது?. இந்த கேள்விகளுக்கான பதிலை மக்கள் அறிந்துக்கொள்ளும் விதமாக "இஸ்லாமா? நாத்திகமா? - எது அறிவுக்கு ஒத்துவருகின்றது?" என்ற தலைப்பில் வரும் 9-ஆம் தேதி லண்டனில் விவாதம் நடக்கிவிருக்கின்றது.

    நன்கறியப்பட்ட பரிணாமவாதியும் ஆய்வாளருமாகிய லாரன்ஸ் க்ராஸ்சும், இஸ்லாமிய கல்வி மற்றும் ஆய்வு கழகத்தின் உறுப்பினரான ஹம்ஸா ஆண்ட்ரியஸ்சும் விவாதிக்க இருக்கின்றனர். அறிவிக்கப்பட்ட சில தினங்களிலேயே விவாதத்திற்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டன என்பதில் இருந்து மக்களிடையே இந்த விவாதத்திற்கு இருக்கும் ஆர்வத்தை அறிந்துக்கொள்ளலாம்.

    இந்த விவாதத்தில், தான் கலந்துக்கொண்ட முந்தைய விவாதங்களை போலவே ஹம்ஸா சிறப்பாக செயல்பட பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

    விவாதம் தொடர்பான மேலதிக விபரங்களுக்கு: http://www.thebigdebates.com/

    விவாதம் தொடர்பான அப்டேட்களுக்கு: https://www.facebook.com/TheBigDebates

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ அஸ்ஸலாமு அலைக்கும்,
      நலமா? .த்கவல் சொல்லும் முன் தயவு செய்து சரி பார்த்து சொல்லவும்.
      //நன்கறியப்பட்ட பரிணாமவாதியும் ஆய்வாளருமாகிய லாரன்ஸ் க்ராஸ்சும், //
      பாருங்கள் லாரன்ஸ் க்ராஸ் ஒரு இயற்பியல் வல்லுனர்,உயிரியல் வல்லுனர் அல்ல. அவர் ஒரு புகழ் பெற்ற இறைமறுப்பாளர், பரிணாம கொள்கை ஆதரவாளர் என்பதும் உண்மையே!!
      http://en.wikipedia.org/wiki/Lawrence_M._Krauss
      Lawrence Maxwell Krauss (born May 27, 1954) is a Canadian-American theoretical physicist and cosmologist who is a professor of physics, Foundation Professor of the School of Earth and Space Exploration, and director of the Origins Project at Arizona State University.

      ஹம்சா ஆண்ட்ரியஸ் எபோதும் விவாதத்தில் சொதப்புவார் என் அறிந்த விடயம்தானே.

      பாருங்கள் இன்னொசென்ஸ் ஆஃப் முஸ்லிம் திரைப்படத்திற்கு மறுப்பு என உளர அதை நம்ம சான் குரூப்பு கிண்டல் அடித்து ஒரு காணொளி போட்டு இருக்காக!! சிறந்த நகைச்சுவை கண்டு மகிழ்க!!
      http://www.youtube.com/watch?v=bjlFHxLcbuQ

      சான் குரூப்பு என்றால் அண்ணன் பீ.சே பைபிளில் உள்ள‌ கிளுகிளு கதைகளை ஆபாச சைகையோடு விவாதம் செய்தார் அல்லவா அந்த குரூப்பு!!

      சரி இந்த விவாதத்தில் பரிணாமம் எங்கு வந்தது?. இஸ்லாம் சரியில்லை என்பதற்கு நடைமுறை ஷரியா, ஹதித் அடிப்படை முகமது(சல்) வாழ்க்கை, அகழ்வாய்வு,மொழியியல் சான்று இல்லாமை போதுமே!!

      கட்டாயம் காணொளி பார்க்கிறேன் . விட்டுவிடு கருப்பா!!

      நன்றி!!
      நன்றி!!

      Delete
  21. சார்வாகன் ///இங்கு நீதிமன்றம் அறிவியல் உலகம். காவல் துறை, குற்ற‌வாளி பரிணாம ஏற்பு, எதிர்ப்பு குழு என எடுபோம். ////
    அப்படியெனில் ,பரிணாமம் அறிவியல் கிடையாதா?

    சிறுத்தை, புலி,சிங்கம்,பூனை,காட்டுப் பூனை சொல்லலாம்.

    குதிரை,கழுதை,கோவேறு கழுதை, வரிக்குதிரை,..இன்னொரு எ.கா.

    விலங்கினங்களின் வரிசைப்படுத்தல் என்பதே ஒருவகை பரிணாம நிரூபணமே.////

    அப்படிஎன்றால் யானையை எந்த விலங்கினங்களுடன் வரிசைப்படுத்துவீர்கள் ?

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      /அப்படிஎன்றால் யானையை எந்த விலங்கினங்களுடன் வரிசைப்படுத்துவீர்கள் ?/
      நல்ல கேள்வி. இபோது வாழும் யானைகளில் இருவகை ஆசிய,ஆப்பிரிக்க யானை, மாமூத் என்ப்படும் மாமதயானை சில் ஆயிரம் ஆண்டுகள் முன் மறைந்தது, இவை அனைத்துக்கும் ஒரே முன்னோர் என்பதை மறுக்க மாட்டேன் என நினைக்கிறேன்.
      யானைகளின் பேரினத்திற்கு நெருங்கிய வாழும் இனமாக கடல் பசு(sea cow 18 ஆம் நுற்றாண்டில் மறைந்த விலங்கு), ஹைராக்ஸ்[Rock hyrox] என்ப்படும் மூஞ்சூறு போன்ற பாலூட்டி வகைகளை ஜீனோம் ஒப்பீட்டின் மூலம் அறிவியலாளர்கள் விள்க்குகிறார்.
      http://en.wikipedia.org/wiki/Elephantidae
      Elephantidae are classified informally as the elephant family, or in a paleobiological context as elephants and mammoths. The common name elephant primarily refers to the living taxa, the modern elephants, but may also refer to a variety of extinct species,
      ...
      Although the fossil evidence is uncertain, by comparing genes, scientists discovered evidence that Elephantidae and other proboscideans share a distant ancestry with Sirenia (sea cows) and Hyracoidea (hyraxes).[3]

      ஹைராக்ஸ்[Rock hyrox]
      http://en.wikipedia.org/wiki/Hyrax

      கடல் பசு(sea cow)
      http://en.wikipedia.org/wiki/Sirenian

      Thank you!!

      Delete
  22. மனிதனுடன் வரிசைப்படுத்த நினைக்கும் ஜிம்பசி மனிதனைப் போல அறிவாற்றல் இல்லையே .பரிணாமத்தில் வேறு எந்த விலங்கினங்களுக்கும் இல்லாத சிறப்புகள் மனிதனுக்கு மட்டும் அமைந்தது எங்ஙனம்.? மனிதனை போல அவைகள் நாகரிகத்தில் முன்னேற்றம் ஏதாதவது ஒரு விலங்கினம் கூட அடையவில்லையே

    ReplyDelete
    Replies
    1. சகோ இப்பூ,
      பரிணாமம் எப்படி நடந்தது என் சான்றுகள் அடிப்படையில் கணிக்கிறோம். ஏன் இப்படி நடக்கவில்லை என் சொல்ல முடிந்தாலும் அது பொருந்தும் விள்க்கம் மட்டுமே.

      பாருங்கள் மனிதன் அறிவு பெற்றமைக்கு காரணம் அவன் பேச்சுத் திறன் பெற்றதுதான். மனிதனுக்கும் சிம்பன்சிக்கும் 1.5% ஜீனோம் வித்தியாசம் உண்டு. இதில் சில ஜீன்கள் நமக்கு சில சிறப்பு அறிவினை கொடுத்து இருக்கிறது என்லாம்.பெரியமூளை கூட ஒரு சிறப்புதான்.

      பாருங்கள் பேச்சுத் திறனுக்கு அதிகம் பயன்படும் ஜீன் ஃபாக்ஸ்பி2 இதன் ஒரு சிறப்பு வகை மனிதனுக்கு மட்டுமே உண்டு. இந்த ஜீன் குறைபாடு உள்ள குழந்தைகள் ஊமையாகும் வாய்ப்பு அதிகம்!!

      http://en.wikipedia.org/wiki/FOXP2
      In humans, mutations of FOXP2 cause a severe speech and language disorder.
      ...
      One particular target that is directly downregulated by FOXP2 in human neurons is the CNTNAP2 gene, a member of the neurexin family; variants in this target gene have been associated with common forms of language impairment.[12] Two amino-acid substitutions distinguish the human FOXP2 protein from that found in chimpanzees,[13] but only one of these two changes is unique to humans.[14]

      Thank you!!

      Delete
  23. @ Ibrahim Sheikmohamed

    உங்ககிட்ட இருந்து நிறைய நான் கற்றுக் கொள்கிறேன் நீங்க கேட்கும் கேள்விகளுக்கு கேமராவில் மாட்டிய சாமியார் அது நானே இல்லை என சாதிப்பது மாதிரி எங்க மாமூல் மாமுவும் அசராம பதில் சொல்லியே சாதிப்பார், ஆனாலும் உங்க கேள்வியில் உள்ள நியாயம் இறை நம்பிக்கையாலர்களுக்கு சிந்தனையைத் தூண்டும்படி இருக்கும், தொடருங்கள்!!

    ReplyDelete
    Replies
    1. மாப்ளே தாசு,

      காஃபிராகிய நீர் மூமின்களை உற்சாகப் படுத்தினாலும் அதற்குறிய பலன் உமக்கு கிட்டாது. நீர் இணை வைக்கும் காஃபிர்தான்.

      ஆனால் நான் லா இலாஹ் = கடவுள் இல்லை என்பதை ஏற்கிறேன்
      இல் அல்லாஹ்= அல்லாவைத் தவிர என்பதை ஏற்பது இல்லை.

      ஆகவே உம்மை விட எனக்கே பலன்[ஹூரி] கிடைக்கும் வாய்ப்பு அதிகம்!

      ஹூரிக்கு சான்று வெறியோடு தேடிக் கொண்டு இருக்கிறேன், அது மட்டும் கிடைத்தால் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!!!!!!!

      ஆகவே ஏக இறைவனின் உத்தம மார்க்கதில் சேரும் இல்லையேல்,நாத்திகன் ஆகும் அதை விட்டு இசுக்கான், டுசுக்கான் என கதை விட்டு.............

      நன்றி!!

      Delete
    2. பாகவதரே,

      //நியாயம் இறை நம்பிக்கையாலர்களுக்கு சிந்தனையைத் தூண்டும்படி இருக்கும், தொடருங்கள்!!//

      நல்லா சொன்னீர் ,அப்படியே இறை நம்பிக்கையாளர்கள் எல்லாம் பீப் பிரியாணி சாப்பிட்டுக்கொண்டே கூடி பேசினால் ,பரிணாமவாதிகளை ஓட ஓட விரட்டலாம் :-))

      சுடலை மாடனுக்கு கெட வெட்டி பொங்கல் வைத்து வேண்டிக்கொண்டு சாராயம் குடித்தபடியே பேச வந்தீரானால் ,நானும் ,சார்வாகனும் கூட கலந்துக்கொள்வோம் :-))

      ஏக இறைவன் சுடலை மாடனின் ஒரே மற்றும் இறுதி இறைத்தூதர் அடியேன் மட்டுமே :-))

      இந்த யுகத்துக்கு அப்புறம் நானும் ஏக இறைவனாக பிரமோஷன் ஆகிடுவேன் :-))

      Delete
    3. ஆத்திக கொள்கை சகோதரர் தாசு ,பதில் சொல்லியே சாதிப்பார், ///இல்லைஎன்றால் ஹிஹி என்பார்.

      Delete
  24. சகோ சார்வாகன் (சைக்கோ ஆக்காமல் இருந்தால் சரி)

    நல்ல தொடக்கம், எளிமையான விளக்கங்கள். மேற்கோள் காட்டி சரிப்பார்க்க உதவும்.
    மனித இனத்திற்கு மட்டுமா சிறப்பு, மற்ற இனங்களுக்கு அதற்குண்டான சிற்ப்புகள் இருக்கின்றன.

    நன்றி தொடருங்கள். என்னால் முடிந்ததையும் இடையில் எடுத்து விடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ நரேன்,
      அடிக்கடி வாங்க!!
      நன்றி!!

      Delete
  25. சார்வாகன்////மனிதனுக்கும் சிம்பன்சிக்கும் 1.5% ஜீனோம் வித்தியாசம் உண்டு.
    ///இதைப்போன்று நீங்கள் வரிசைப்படுத்திய விலங்கினங்களுக்குள் உள்ள ஜினோம் வித்தியாசம் எவ்வளவு எனபதை சொல்லமுடியுமா?

    ReplyDelete
    Replies
    1. இப்பூ,

      கேள்வி மட்டும் தான் கேட்கத்தெரியுமா?

      அதுக்கு பதில் சொன்னா புரியுமா?

      எனவே புரியாத நிலையில் உமக்கு சொன்னால் பலனில்லையே :-))

      குரான் ஏன் அரபியில் மட்டுமே இறக்கப்பட்டது, அப்போவே தமிழிலும் இறக்கி இருக்கலாமே,ஏக இறைவனுக்கு முடியாத காரியமா அது :-))

      Delete
    2. வவ்வால் பதில் சொல்ல முடியவில்லை என்பதை மறைக்காதீர்கள்.வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பகுதிகளுக்கு வெவ்வேறு மொழிகளில் இறைதூதர்கள் அனுப்பபட்டார்கள் .இறுதியாக அரபு மொழியில் அனுப்பபட்டுள்ளது .அரபு மொழி சிறந்ததுமல்ல .தமிழிலும் இறைவனிடம் பிரார்த்தனை பண்ணிக் கொள்ளவே செய்கிறார்கள்
      ,

      Delete
    3. இப்பூ,

      பதில் சொல்ல முடியும்,ஆனால் வெட்டியாக கேள்வியை மட்டும் மாற்றி மாற்றிக்கேட்பவர்களுக்கு எல்லாம் சொல்லிக்கொண்டிருக்க முடியுமா?

      எவ்வளவு விளக்கமாக பதில் சொன்னாலும் அதை எல்லாம் படிக்காமல், அடுத்து ஒரு கேள்வியை மட்டுமே நீர் கேட்பீர் :-))

      // என்பதை மறைக்காதீர்கள்.வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பகுதிகளுக்கு வெவ்வேறு மொழிகளில் இறைதூதர்கள் அனுப்பபட்டார்கள்//

      வெவ்வேறு மொழிகளுக்கு அனுப்பிய தேவதூதர்கள் பெயர் என்ன?, அவர்கள் உருவாக்கிய குரான் எல்லாம் இருக்கா?

      தமிழுக்கு அனுப்பிய தேவ தூதர் யார்? அவரும் குரான் உருவாக்கினாரா? அது இருக்கா?

      Delete
  26. நல்ல முயற்சி சார்வாகன்,
    உங்களது எழுத்துக்கள் விரைவில் பாடத்திட்டத்தில் சேர வாழ்த்துக்கள்...........

    ReplyDelete