Tuesday, July 9, 2013

நண்பர் அருளின் கேள்விக்கு பதில்!!!




வணக்கம் நண்பர்களே,

தமிழகத்தில்(இந்தியாவில்) சாதீய,மதவாதம் தலைதூக்கும் காலகட்டத்தில் வாழ்கிறோம் என்பது கசப்பான உண்மை.சாதீயத்தின் கோரப் பசிக்கு பலியான  சகோதரர் இளவரசனுக்கு அஞ்சலி செலுத்தி பதிவினைத் தொடங்குகிறோம்.

காதல் என்பது சாதி,மதம்,இனம்,பணம் பார்த்து வராது.காதல் புனிதம் என்பது தவறான கற்பிதம். வயது வந்த ஆண்,பெண் ஈர்ப்பு கொள்லுதல் இயல்பு. இதற்கு விதிவிலக்கு மிகக் குறைவே. இதில் சூழல் சார்ந்து சில ஈர்ப்புகள் காதலாக பரிணமிக்கிறது.

ஆண் பெண் நட்பு,ஈர்ப்பு,பாலியல் குறித்த விழிப்புணர்வு போன்றவை  இளைய தலைமுறைக்கு நல்ல முறையில் விளக்கி சொல்ல முந்தைய தலைமுறைக்கு கடமை இருக்கிறது.

காதல் உள்ளிட்ட‌ எந்த பிரச்சினைக்கும் வன்முறை தீர்வு ஆகாது. தற்கொலை என்பதும் ஒருவகை வன்முறைதான். சகோதரன் இளவரசன் மரணம் தற்கொலையாக இருக்கும் வாய்ப்பு குறைவு என்பதே நம் எண்ணம்.

நாடகக் காதல்,பெற்றோர் ஆதரவுடன் காதல் என்பதை நீட்டி முழக்கும் சாதீயவாதிகள் முடிந்தால் காதல் எப்படி சொந்த சாதியில் மட்டும்,பொருளாதாரம் பார்த்து  செய்ய வேண்டும் என்பதை விளக்கி வகுப்பு எடுக்க வேண்டுகிறோம்.

சொந்த சாதியினர் செய்யும் அயோக்கியத் தனங்களை கண்டிக்காத எவருக்கும் சாதி மறுப்புத் திருமணங்களை கண்டிக்க உரிமை இல்லை.

கந்து வட்டி,ரியல் எஸ்டேல் மோசடி,ஈமு கோழி மோசடி,கட்டை பஞ்சாயத்து,ஊழல் என சகலவித மோசடிகளிலும் கொடிகட்டி பறக்கும் சொந்த சாதியினர் பற்றி எந்த சாதி ஆதரவாளரும் பேசுவது இல்லை. இந்த அயோக்கியத்தனங்களை பெற்றோர் சொல்லி செய்கிறார்களா என்பதும் சிந்தனைக்கு உரியது.

நாம் சொல்லுகிறோம் சாதீ,மத ஆதரவாளர்களின் விளம்பர பிரச்சாரங்கள் ஒரே மாதிரித்தான் இருக்கும்.அவர்களின் பிரச்சாரங்களை கீழ்க்கண்ட இரு விடயங்களில் அடக்கி விடலாம்.

1.அவனை நிறுத்த சொல் நான் நிறுத்துகிறேன்!!!

2.நீ யோக்கியமா???????

ஒரு குறிப்பிட்ட மதம்,சாதீ ஆகியவற்றுக்கு பல கட்சிகள்,இயக்கங்கள் இருக்கும். ஓவ்வொருவரும் கட்சிக்கு பிரச்சினை வரும் போது தங்கள் இனம்,மதம் மொத்தத்திற்கும் பிரச்சினையாக காட்டுவதும்.இனத்தை சேர்ந்த ஒருவர் பிரச்சினையில் சிக்கினால் ,தங்கள் கட்சி ஆள் அல்ல என குட்டிக் கரணம் அடிப்பார்.

எ.கா

வன்னியர்களுக்காக பல கட்சிகள் தமிழக அரசியல் வரலாற்றில் இருந்திருக்கின்றன. இப்போதும் சில கட்சிகள்,இயக்கங்கள் இருந்து வருகின்றன.இது போல் பிற மத,சாதிகளுக்கும் பொருந்தும்.

அரசியல் அனாதை ஆன பா.ம.க சாதி மறுப்புத் திருமணம் என்பதை அரசியல் ஆயுதம் ஆக எடுத்து  இழந்த சாதீ ஆதரவை மீட்க முயற்சித்தது.அப்போது பிரச்சாரம் செய்த  அருளின் பதிவுகள் வன்னியர்கள் என்று பொதுப்படையாக பதிவு இட்டார்.

ஒரு ஆட் கடத்தல் சம்பவ குற்றவாளிகள் பிரச்சினையில் அவர்கள் எங்கள் கட்சி ஆட்கள் அல்ல மாற்று வன்னிய சாதிக் கட்சி என கைகழுவுகிறார். பாமக்வுக்குள் பிரச்சினை வந்தால் திரு இராமதாசு அய்யா குடும்பத்தினருக்கு எதிரானோர் கட்சியில் இருந்து நீக்கப் படுவார்.

இதுவே சாதிக்கட்சிக்குள் இருக்கும் வர்ணாசிரம தர்மம் ஆகும்.ஆகவே எப்போது மதம்,இனத்தை முன்னிலைப் படுத்துகிறார்கள்.எப்ப்போது கட்சியை, தலைவர் குடும்பத்தினை முன்னிலைப் படுத்துகிறார்கள் என்பதை அறிந்தாலே இவர்களின் பிழைப்புவாதம் புரிந்துவிடும்.


என்ன கேட்கிறார்?
'மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டி' என நடக்கும் தமிழ்நாட்டில் வன்னியர்கள் இனி இரண்டாம்தர குடிமக்களாகத்தான் வாழ வேண்டுமா?



வன்னியர்களுக்கு மட்டும் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுவது ஏன்? அவர்கள் வன்னியர்களாக பிறந்தது குற்றமாபெரும்பாலானவர்கள் இந்துக்களாக இருப்பது குற்றமா? வன்னியர்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறாதது குற்றமா?

இக்கேள்விக்கு ஏற்கெனவே பதிவில் பதில் பார்த்து விட்டோம்.

பிரமிட் போன்ற சாதி கட்டுமான அமைப்பில் ஒவ்வொரு சாதி ஆதரவாளனும் ,மேலான சாதியாக கருதுபவனிடம் பணிவு காடுதலும்,கீழாக கருதுபவனை ஒடுக்குதலுமே அந்த அமைப்பினை  கட்டிக் காத்து வருகிறது. தலித் சாதிகளிடமும் இந்த பழக்கம் உண்டு.

சென்ற வருடம் திரு ஜான் பாண்டியன் தலைமையில் இயங்கும் ஒரு சாதிக் கட்சி நடத்திய போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கி சூடு  நடந்து 10 பேருக்கும் மேல் பலி ஆனார்கள்.


இதற்கு முன்னும் இப்படி  சம்பவங்கள் நடந்தது உண்டு. ஏன் அவர்கள் போராட்டத்தினை சுட்டார்கள், ஆதிக்க சாதி போராட்டங்களை சிறையில் மட்டும் அடைக்கிறார் என அருள்  கேட்க‌  மாட்டார்.

அவரைப் பொறுத்த வரை,தனக்கு கீழாக கருதும் சாதியினர் எப்படி ஒடுக்கப் பட்டாலும் கவலை இல்லை.ஆனால் அரசு முஸ்லிம்களை மட்டும்கைது செய்து உடனே விட்டது ஏன் என்கிறார்.அதாவது தங்கள் கட்சினரின் மீது வழக்கு,சிறை ஏன் என்கிறார்.

.மு.மு. கட்சி மூன்று அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி போரட்டம் நடத்தியது அது என்ன?

1. திருமண  பதிவு விலக்கு

2.சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல்  உள்ள முஸ்லிம் கைதிகளின் விடுதலை.

3. முஸ்லிம்களுக்கு 7.5% தனித்துவ இட ஒதுக்கீடு.

முஸ்லிம்கள் தாங்கள் பிறருக்கு வழங்க மறுக்கும் உரிமைகள் தங்களுக்கு மறுக்கப்பட்டால் கூக்குரல் இடுவார்கள் என்பது 1400 ஆண்டு வரலாறு!!!.

நமக்கு மூன்று கோரிக்கைகளுமே சரியானவை ஆக தோன்றவில்லை என்றாலும் இவை தவறான முன் உதாரணம் ஆகிவிடும் என்பதில் ஐயம் இல்லை.

இந்தக் கோரிக்கைகள் அரசிடம் கேட்கிறார்களே தவிர ,யாருக்கும் எதிரானது அல்ல. இந்துக்களுக்கு எதிரானது என் இந்துத்வ சகோக்கள் சொல்வார்கள் என்பதனை நாம் அறிவோம்.

சரி ஆதிக்க சாதிக் கட்சி ஏன் போராட்டம் நடத்துகிறது.

1. சாதி மறுப்பு திருமணம் குறிபாக தலித்+ஆதிக்க சாதி திருமண எதிர்ப்பு.

2.வன்கொடுமை சட்ட எதிர்ப்பு.

இவை இரண்டும் நமது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமானவை.

அரசு ஆதிக்க சாதியினர் மீது பொதுச் சொத்தினை நாசம் செய்த வழக்கு மட்டுமே போட்டு உள்ளது என்பதை ஞாபகப் படுத்த வேண்டும்.

போராட்டம் செய்ய .மு.மு. ஆளும் அரசின் கூட்டணி கட்சி என்பதாலும், முஸ்லிம்களை,கூட்டணியில் இல்லா பாமக ஆதரவாளர்களை விட இந்த அரசு கொஞ்சம் சுமுகமாக நடத்த விரும்புவதாலும், கைது செய்து விட்டு விட்டது.

இப்போது .மு.மு. கூட்டணியில் இருந்து வெளிப்படையாக விலகினால் நடவடிக்கை தீவிரம் ஆகும்.

பாமக ஆளும் கட்சியுடன் தேர்தல் கூட்டணி அமைத்தால்[எதுவும் நடக்கும்] இந்த வழக்குகளும் இல்லாமல் போகும்.

எப்போது கூட்டணி அமைப்பார்கள்?.

சாதிக் கட்சி தலைவரின் குடும்பத்தினருக்கு தேர்தலில் வாய்ப்பும்,தேவையான இடங்களூம் கிடைத்தால் கூட்டணி அமைப்பார்கள்.

இதுவே சாதிக் கட்சியினரின் பிழைப்புவாதம் ஆகும்.

மதம் மாறாதது வன்னியர்களின் குற்றமா?
நாம் எப்போதும் சொல்வது சாதிக் கொடுமைகளுக்கு அஞ்சி மதம் மாறுதல் தேவையற்றது.இறை நம்பிக்கை உடையோர் தங்களூக்கு பாதிப்பு வராத வகையில்[சாமியார் ஜாக்கிரதை!!!],மதத்தில் தேவையான சீர்த்திருத்த்திற்கு [அனைத்து சாதியினரும் அர்ச்சகர்]குரல் கொடுத்து  ,இயற்கைக்கு மேம்பட்ட விடயங்களை மந்திரம் போட்டு சாதிக்க முடியாது என உணர்ந்து பின்பற்ற வேண்டுகிறோம்.

நண்பர் அருள்,இஸ்லாமுக்கு மத மாறலாமா எனக் கேட்டது நமக்கு வியப்பு அளிக்கவில்லை.சாதிப் பிரியர்கள் ஆதாயம் என்றால்,சமயம் வந்தால் சாதியையும் கழட்டி விடுவார்கள் என்பது நிரூபணம் ஆகிவிட்டது அல்லவா!!! 

ஆதிக்க சாதியினர் வேறு மதங்களுக்கு மாறுவது மிக நல்லது.இது இந்து மத சீர்த்திருத்தங்களை துரிதப் படுத்தும்.ஆகவே சாதிப் பிரியர்கள் வேறு மதங்களுக்கு ,குறிப்பாக வெவ்வேறு மதப் பிரிவுகளுக்கு மாறி விடுங்கள்!!!!


அப்புறம் எந்தப் பிரிவின் மதபுத்தக விளக்கம் சரியானது என குழம்பி வெளிநாடுகளில் இருந்து ஆயுதம் வாங்கி  மதப் பிரிவுகளுக்குள் அடித்துக் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்.

.கா பாகிஸ்தான்,எகிப்து,சிரியா,ஆப்கானிஸ்தான்,நைஜீரியா,இராக்.....

ஏதோ இந்துமதத்தின் ஆயிரம் சிக்கல்,ஒடுக்குதல் இருந்தாலும் ,காலத்திற்கு ஏற்ப மாறுவதும்,இந்த அளவுக்கு அடித்துக் கொள்ளாமல் இருக்கிறோம் என்பது பெருமையான விடயம்தான்.ஆகவே சிக்கல்,ஒடுக்குதல் செய்யும் ஆதிக்க சாதிப் பிரியர்கள் மதத்தை விட்டு வெளியேறுவது நன்மையே.

சாதி மறுப்பாளர்கள் நிமதியாக இருப்போம்!!!!

ஆயிரம் வருட முஸ்லிம்கள் ஆட்சி,200 வருட கிறித்தவ ஐரோப்பியர்கள் ஆட்சியிலும் மதம் மாறாத பெரும்பான்மை தலித் மக்கஉள்ளிட்ட பெரும்பான்மையால் மட்டுமே இந்தியா மாற்றுமத நாடு ஆகவில்லை என்பதை அனைவரும் நினைவில் இருத்த வேண்டும இந்து மதத்தை விமர்சித்தாலும், அண்ணல் அம்பேத்கர் இந்திய  பவுத்த மததிற்குத்தான் மாறினார். ஆனால் ஆதிக்க சாதியினர் என்ன் சொல்கிறார்?? சிந்திக்க மாட்டீர்களா.............

ஆகவே சாதிப் பிரியர்களை  சீக்கிரம் வேற்று நாட்டு,மத ஏக இறைவன்(கள்) நாடினால் நல்லது!!!
அவர்களுக்கு அமைதி உண்டாகட்டும்!!!!!!!!!!!!!!

நன்றி!!!

25 comments:

  1. // ஒரு குறிப்பிட்ட மதம்,சாதீ ஆகியவற்றுக்கு பல கட்சிகள்,இயக்கங்கள் இருக்கும். ஓவ்வொருவரும் கட்சிக்கு பிரச்சினை வரும் போது தங்கள் இனம்,மதம் மொத்தத்திற்கும் பிரச்சினையாக காட்டுவதும்.இனத்தை சேர்ந்த ஒருவர் பிரச்சினையில் சிக்கினால் ,தங்கள் கட்சி ஆள் அல்ல என குட்டிக் கரணம் அடிப்பார்.//

    தற்போது, பாஜக ராகவ்ஜி மாதிரி ஒரு பெரும்[கரும்] புள்ளி மாட்டிகொண்டால்..அதற்க்கும் ஒரு வெண்டைக்காய் விளக்கம்...ஏதோ ஒருத்தர் (கவனியுங்க மரியாதையை; இதோ குப்பனோ சுப்பனாவ்வாக் இருந்தால் 'ன்' தான்) செய்தால் கட்சியே அப்படியா? இவனுங்களுக்கு பல்டி அடிக்க சொல்லியா தரவேண்டும்?

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பர் நம்பள்கி,

      சாதிப் பிரியர்களின் பிழைப்புவாதத்தினை நம்பும் அப்பாவிகள் இருக்கும் வரை சாதி அரசியலவாதிகளுக்கு கொண்டாட்டம்தான்.
      தன் குடும்பத்தை தவிர மற்றவர்களை கட்சியில் கட்டம் காட்டுவதைப் பார்த்தும்,நம்புபவர்களை என்ன சொல்வது?
      ****
      /தற்போது, பாஜக ராகவ்ஜி மாதிரி ஒரு பெரும்[கரும்] புள்ளி மாட்டிகொண்டால்..அதற்க்கும் ஒரு வெண்டைக்காய் விளக்கம்...ஏதோ ஒருத்தர் (கவனியுங்க மரியாதையை; இதோ குப்பனோ சுப்பனாவ்வாக் இருந்தால் 'ன்' தான்) செய்தால் கட்சியே அப்படியா? இவனுங்களுக்கு பல்டி அடிக்க சொல்லியா தரவேண்டும்?/

      அந்த பா.ஜ.க அமைச்சர் ஓரின சேர்க்கையிலும் சாதி மறுப்பு செய்து இருப்பார் என நினைக்கிறேன். ஹி ஹி.

      ஆண் பெண் திருமண்த்தில் சாதி உண்டு என்றால் ஓரின புணர்ச்சியிலும் இருக்க வேண்டும் அல்லவா????

      ஆகவே சாதிப் பிரியர்கள் ஓரின புணர்ச்சியிலும் ஒரே சாதி வேண்டும் என போராட வேண்டும்!!

      ஹி ஹி

      நன்றி!!!

      Delete
  2. அருள் அவர்களின் தளத்தில் பதிந்தது. பொருத்தமாக இருப்பதால் இங்கும் பதிகிறேன்

    __________________________________________________________________

    அருள் அவர்களே !

    தங்கள் கட்சியின் தரம் தாழ்ந்த செயல்களுக்கு ஏன் இஸ்லாமியர்களையோ , இஸ்லாமிய அமைப்புகளையோ ஒப்பிடுகிறீர்கள்.பா.ம.க தலைமையின் பேச்சின் தரமும் இஸ்லாமிய அமைப்புகளின் தலைமையின் பேச்சும் ஒன்றா ? போராட்டம் ஒன்று நடத்தினால் கூட்டத்தில் சில அறிவிலிகள் சில செயல்களில் ஈடுபடக்கூடும் எனவே அதன் தலைமை அவைகளை சீர்படுத்தி போராட்டத்தின் நோக்கத்தை முன்னோக்கி எடுத்து செல்லவேண்டும்..இதை இங்குள்ள இஸ்லாமிய தலைமைகள் செய்வார்கள்.ஆனால் பா.ம.க தலைமையே வன்முறையை தூண்டிவிடும் வகையில் தானே பேசி திரிகிறார்கள். சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தி அங்கு உங்களின் ராமதாசும் காடுவேட்டியும் பேசியது என்ன ? என்பதை நீங்கள் மறந்து விட்டீர்களோ ? ஒரு கூட்டம் போட்டு ஒருவர் மைக் பிடித்து வெறி பிடித்து பேசினால் என்ன நடக்கும் என்பதற்கு மரக்காணம் ஒன்றே போதும் இங்கு சொல்வதற்கு....

    * இஸ்லாமியர்களை மாலையில் விட்டார்கள் ஆனால் எங்கள் மீது வழக்கு போடுகிறார்கள் என்கிறீர்களே மற்றொரு மரக்காணம் ஒன்றை செய்து காட்ட ஆவல் கொள்கிறீர்களோ ?

    * இஸ்லாமியர்கள் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றவே போராட்டம் செய்தனர்..நீங்கள் பிற மக்களின் மீது வன்மத்தை விதைக்க வல்லவா போராட்டம் செய்கிறீர்கள் !

    * அனுமதி கொடுத்த சித்திரை முழு நிலவு மாநாட்டின் விளைவே படு பயங்கரமாக இருந்தது ...அனுமதி மறுக்கப்பட்ட போராட்டம் எவ்வளவு கொடூரமாக இருந்திருக்க முடியும் ?

    * தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற செய்வது போராட்டம் ....ஆனால் மற்றவர்களின் மீது வன்மத்தை விதைக்க செய்வது அத்வானி செய்த ரத யாத்திரை போன்றது அதன் விளைவை உலகம் ஏற்கனவே அறிந்து தான் வைத்துள்ளது - இதில் நீங்கள் எந்த ரகம் என்று சீர்தூக்கி பாருங்கள் !

    வீணாக இஸ்லாமியர்களின் தேவைக்கான போராட்டத்தை இந்த இடத்தில பாமகவுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள் 1

    நன்றி !!

    ReplyDelete
    Replies
    1. ஸலாம் சகோ மீரான்,
      வாங்க நலமா?
      நல்ல பின்னூட்டம்,இதையே நானும் பதிவில் கூறி இருக்கிறேன் பாருங்கள்.
      /இந்தக் கோரிக்கைகள் அரசிடம் கேட்கிறார்களே தவிர ,யாருக்கும் எதிரானது அல்ல. இந்துக்களுக்கு எதிரானது என் இந்துத்வ சகோக்கள் சொல்வார்கள் என்பதனை நாம் அறிவோம்.//
      ***
      அருள் இப்படி முஸ்லிம்களை தேவை இல்லாமல் இழுத்து பதிவிடுவது முதல் முறை அல்ல!!!.

      நீங்கள் அறிய வேண்டியது.

      ஒவ்வொரு சாதிப் பிரியனும் விரும்பி அணிவது ஆர்.எஸ்.எஸ் அரை ட்ரவுசரே.

      சாதி இருக்கனும்,ஆனால் உயர்வு தாழ்வு கூடாது என்பதுதானே இந்துத்வ வாதம்.அதாகப் பட்டது அவரவர் இடத்தில் அவரவர் இருக்கணும்!!!

      இருந்தாலும் அருளை சீக்கிரம் ஏக இறைவன் நாட துவா செய்யுங்கள்


      ஏக இறைவன் மிக மிக...... பெரியவன்!!!

      நன்றி!!!

      Delete
  3. வன்னியர்களின் ஒவ்வொரு செயலையும் (நல்லதோ கெட்டதோ) சரியானது என்றும், பா ம க வின் அரசியல்வாதிகளின் கருத்தை தன் கருத்தாக தெரிவித்துக்கொண்டு, தன் தளத்தை ஒரு கட்சித் தளமாக, சாதித் தளமாக நடத்திக்கொண்டு, தன் தரத்தையும், வன்னியர்கள் தரத்தையும் கீழிறக்கி புதைகுழியில் விழுகிறார், அருள்!

    இவரைப் போல் அறிவீணர்களை கண்டிக்க வேண்டியது அவர் சாதியைச் சேர்ந்த நல்ல மனிதர்கள், நற்பண்பாளர்கள்!

    அவர்கள் எல்லாம் இவரை விட்டு வேடிக்கை பார்ப்பதுதான் வேடிக்கையான விசயம்!

    அருள், வன்னியர்களின் தரத்தை குறைக்கிறாரேயொழிய ஒருபோதும் உயர்த்தவில்லை!

    நல்ல வன்னியர்கள் யாராவது இவரைப் பிடிச்சுப் போயி கட்டிப்போடுங்கப்பா! இவர் ஒளறல் நின்னா எல்லாமே சரியாகிவிடும்! கிறுக்குப் பிடிச்சிருச்சு இந்தாளுக்கு!

    ReplyDelete
    Replies
    1. மச்சான் வருண் வாங்க,

      பா.ம.க[எந்த சாதிக் கட்சியும்] கூட்டணி இல்லாமல் இரண்டு தேர்தல் போட்டி இட்டால்,கட்சி காணாமல் போகும்.சாதி கட்சி நடத்துபவர்கள் பிழைப்புக்கு என்ன செய்வார்?.

      ஆகவே பிழைப்பிற்காக எதையாவது தின்றால் (சாதி) பித்தம் தெளியும் எனப் பார்க்கிறார்.

      அவரை அனுதாபத்தோடு பாருங்கள்.

      வரும் தேர்தலில் சாதிக் கட்சிகளை புறக்கணிப்போம் என ஒவ்வொருவரும் முடிவெடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்!!!

      நன்றி!!!

      Delete
  4. ஏனய்யா சாதிமறுப்பாளர்களே, அருள் ஏன் இப்படி கீ போர்டில் இருக்கும் எல்லா எழுத்தும் தேயும் வண்ணம் பதிவு பதிவாக போய் எழுதுறார்? உங்களை மாதிரி நேரத்தை வீணடிக்கவா? இல்லை அய்யா இல்லை. இணையத்தில் பாமக கொபசே நான்தான் என்று பெரிய மருத்துவரிடமும், குட்டி மருத்துவரிடமும் நிரூபித்து வரும் தேர்தலில் சீட்டு வாங்கி செட்டிலாகிவிடுவார். ஆனா நீங்க... சிந்திக்க மாட்டீர்களா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ நந்தவனம்,

      நண்பர் அருள் உழைப்பிற்கு பலன் கிடைக்குமா என்பதற்கு காலம் பதில் சொல்லும்.
      மாதம் ஒரு புதிய கீ போர்ட் வாங்குகிறாராம் ஹி ஹி!!!

      நாம் சொல்வது ஒருவேளை அதிமுக,திமுக கூட்டணி கிடைக்காமல் பாமக தனித்து போட்டியிட்டால் ,இவர் போன்றவர்களே பலிகடாவாக நிறுத்தப் படுவர்.நிச்சயம் சின்ன அய்யா போட்டி இடமாட்டார்[எந்த காலத்தில் போட்டி இட்டார் இராஜ்யசபா உறுபினர்தானே ஆனார்].

      கூட்டணி அமைந்தால் வெற்றி வாய்ப்பு உள்ள இடங்கள் கிடைப்பது அரிது!!!

      1988ல் எம்.பி.சி 20% ஒதுக்கிட்டிற்கான போராட்டத்தில் போலிஸ் துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரின் குடும்பத்தில் எத்த‌னை பேருக்கு பாமகவில் பதவி கிடைத்து உள்ளது? அதன் பிறகே பா.ம.கவிற்கு அரசியலில் ஏறுமுகம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

      நன்றி!!!

      Delete
  5. அவர்கள் காதலித்தமை சரியா தவறா என்பதல்ல சிக்கல், அது தனி நபர் விருப்பம். பெற்றோரை எதிர்த்து மணப்பதா வேண்டாமா என்பதல்ல விவாதம், அது அவர் குடும்ப விவகாரங்கள். இங்கு தேவை சட்டத்தினை சமூகங்கள் மதிக்கின்றனவா இல்லையா என்பதே? சட்டப்படி வயது வந்த இருவர் பெற்றோர் சம்மதம் இன்றி, சாதி, மதம் கடந்து மணந்து வாழ நம் சட்டம் வழிக் கோலியுள்ளது. இச் சட்டத்தை பெற்றோர், ஊரார், சாதிக் கட்சிகள், சமூக விரோதிகள் மீறியுள்ளனர். அவ் விருவரும் பாதுகாப்பாய் வாழ வழி செய்து சட்டத்தை நிலை நாட்ட வேண்டிய நாமும், நம் அரசும், சமூக சான்றோர்களும் தவறியதன் மூலம் தோற்றுள்ளோம். இதனால் உயிர், உடமை, உளவில் நிலைத்தன்மைகள் இழக்கப்பட்டுள்ளன. புத்திசாலிகள் புரிந்து கொள்வீராக !

    ReplyDelete
  6. அவர்கள் காதலித்தமை சரியா தவறா என்பதல்ல சிக்கல், அது தனி நபர் விருப்பம். பெற்றோரை எதிர்த்து மணப்பதா வேண்டாமா என்பதல்ல விவாதம், அது அவர் குடும்ப விவகாரங்கள். இங்கு தேவை சட்டத்தினை சமூகங்கள் மதிக்கின்றனவா இல்லையா என்பதே? சட்டப்படி வயது வந்த இருவர் பெற்றோர் சம்மதம் இன்றி, சாதி, மதம் கடந்து மணந்து வாழ நம் சட்டம் வழிக் கோலியுள்ளது. இச் சட்டத்தை பெற்றோர், ஊரார், சாதிக் கட்சிகள், சமூக விரோதிகள் மீறியுள்ளனர். அவ் விருவரும் பாதுகாப்பாய் வாழ வழி செய்து சட்டத்தை நிலை நாட்ட வேண்டிய நாமும், நம் அரசும், சமூக சான்றோர்களும் தவறியதன் மூலம் தோற்றுள்ளோம். இதனால் உயிர், உடமை, உளவில் நிலைத்தன்மைகள் இழக்கப்பட்டுள்ளன. புத்திசாலிகள் புரிந்து கொள்வீராக !

    ReplyDelete
  7. நல்ல பதிவு நண்பர் சார்வாகனுக்கு பாராட்டுக்கள்.

    //paகாலத்திற்கு ஏற்ப மாறுவதும்,இந்த அளவுக்கு அடித்துக் கொள்ளாமல் இருக்கிறோம் என்பது பெருமையான விடயம்தான்.// இப்ப அடிச்சிக்காமயா இருக்கம் ?

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ தமிழானவன்,
      இஅன் முறுகல்கள்,வன்முறைகள் உலக முழுதும் பொதுவான விடயம்.மிக குறைவான மக்கள் உள்ள நாடுகளில் நடப்பதை விட இந்தியாவில்(தமிழ்நாட்டில்) மிக குறைவுதான்.

      எ.கா செர்பியா‍_போஸ்னியா,சிரியா,இராக்
      இது ஏன் எனில் வெளி நாட்டினரின் தலையீடு இல்லை.

      இந்தியாவில் சில வருடங்களில் நடந்த வன்முறைகள் பற்றிய சுட்டி

      http://www.prsindia.org/administrator/uploads/general/1308201190_Vital%20Stats%20-%20Communal%20Violence%20in%20India%2014Jun11%20v2.pdf
      The National Advisory Council recently released a draft ‘Prevention of Communal and Targeted
      Violence (Access to Justice and Reparations) Bill, 2011’. The Bill intends to create a framework for
      prevention and control of communal and sectarian violence. It also aims to provide relief to victims
      of such violence.
      In this context, we present some statistics on the incidence of communal violence in India.
      During 2005-09, 648 people were killed and 11,278 injured in 4,030 incidents of communal
      violence

      நன்றி!!!

      Delete
  8. அருமையான பதிவு..

    இவர்கள் எது செய்தாலும் சரி, ஆனால் அதையே மற்றவர்கள் செய்வது தவறு..
    அருள் தனது தளத்தில் "ஒரு ஒப்பீட்டுக்காக மட்டுமே முஸ்லிம்களின் போராட்டம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இக்கட்டுரை அவர்களுக்கு எதிரானதோ, விமர்சிப்பதோ அல்ல." என குறிப்பிட்டுள்ளார். முழுதாக நனைந்த பின் எதற்கு முக்காடு.

    Stop Discriminating now என ஒரு படம் வேறு. அவரின் சொல்லும் செயலும் அப்படியே மருத்துவர் போலவே உள்ளது...

    @நந்தவனத்தான் சீட்டு கன்பார்ம்டு!! :-)

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ கிருஷ்னா,

      சீட்டு கிடைத்தாலும்[conditions apply!!!] ஓட்டு கிடைக்குமா?

      நன்றி!!!

      Delete
  9. // இல்லை அய்யா இல்லை. இணையத்தில் பாமக கொபசே நான்தான் என்று பெரிய மருத்துவரிடமும், குட்டி மருத்துவரிடமும் நிரூபித்து வரும் தேர்தலில் சீட்டு வாங்கி செட்டிலாகிவிடுவார். ஆனா நீங்க... சிந்திக்க மாட்டீர்களா?

    //
    அப்படியே சீட்டு வாங்கிட்டாலும் , சனங்க ஓட்டுப் போட்டு செயிக்க வைக்கணுமே ..அப்புறம் தானே நீங்க சொன்ன மாதிரி செட்டிலு கிட்டலு எல்லாம் .... சிந்திசீங்களா?

    ReplyDelete
  10. சகோ.சார்வாகன்,

    //இந்தக் கோரிக்கைகள் அரசிடம் கேட்கிறார்களே தவிர ,யாருக்கும் எதிரானது அல்ல. இந்துக்களுக்கு எதிரானது என் இந்துத்வ சகோக்கள் சொல்வார்கள் என்பதனை நாம் அறிவோம்.

    சரி ஆதிக்க சாதிக் கட்சி ஏன் போராட்டம் நடத்துகிறது.

    1. சாதி மறுப்பு திருமணம் குறிபாக தலித்+ஆதிக்க சாதி திருமண எதிர்ப்பு.

    2.வன்கொடுமை சட்ட எதிர்ப்பு.

    இவை இரண்டும் நமது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமானவை.//

    சரியான பாயிண்டை சொல்லி இருக்கீங்க, இவர்கள் போராட்டம் நடத்த எடுத்திருப்பது "ஜனநாயக நாட்டில் மக்கள் விரோத செயல்" எனவே எப்படி அனுமதி கொடுப்பார்கள்?

    இப்போ மேலை நாட்டில் "இன்னாரை திருமணம் செய்ய தடை விதிக்க சட்டம் வேண்டும், "Aboriginal peoples " உள்ள பாதுகாப்பு சட்டங்களை நீக்க வேண்டும் என வெள்ளையர் ஆதிக்க வெறியர்கள் போராட்டம் நடத்த முடியுமா? நடத்த அனுமதி கிடைக்குமா?

    இதே ஜாதி வெறியர்கள் வெளிநாட்டில் வசிக்கும் போது , நிறத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டால் அப்போது மட்டும் 'குடியுரிமை இருக்கும் போது அனைவரும் சமம் தானே ஏன் இந்தியன் என்பதால் பாகுபாடு என சமஉரிமைக்கேட்பது ஏன்?

    வெள்ளையா இருக்கவன் நம்ம விட உசந்தவன்னு அடங்கி போவானுங்களா?

    இந்த உருளு வெளிநாட்டுக்குலாம் போயி வந்த ஆளு ,அங்கே இவருக்கு பாகுபாடு காட்டினால் அட நாம தான் வெள்ளையா இல்லையே அப்படித்தான் நடத்துவான்னு சும்மா இருந்திருப்பாரா? அப்போ மட்டும் "மனித உரிமை"னு பேசுவாரு :-))

    # இந்த மரம்வெட்டி தலைவரு "ஈழத்தமிழர்களுக்காக போராடுவதாக அப்போ அப்போ "சீன்" போடுறார், அப்போ மட்டும் "தமிழன்" என எப்படி பார்க்கிறார்? இப்போ தமிழ்நாட்டில் இருக்கவங்களை ஏன் தமிழன்னு பார்க்காம ஜாதிய வச்சு பிரிச்சு அரசியல்ல் செய்கிறார்? முதலில் தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழர்களை தமிழர்களாக மட்டும் பார்க்க கத்துக்கிட்டு அப்புறமா ஈழத்தமிழர் என்றெல்லாம் பேசட்டுமே :-))

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ வவ்வால்,
      /வெள்ளையா இருக்கவன் நம்ம விட உசந்தவன்னு அடங்கி போவானுங்களா? /

      வெள்ளையன்தான் உலக முழுதும் ஆண்டான்.ஆகவே அவனே உயர் சாதி என்பதை அனைவரும் ஏற்பார்.

      சின்ன அய்யா ஒபாமாவுக்கு ஃபோன் செய்து பேசுவதை பெருமையாக சொல்வதால் கருப்பு+வெள்ளை கலப்பினத்த்வரையும் உயர்சாதியாக ஒத்துக் கொள்கிறார்.

      ஆகவே வெளிநாடுகளில் பாரபட்சம் காட்டப் பட்டால்,குடியுரிமைக்காக திருமணம் உள்ளிட்ட சகலவித தகிடுதத்தங்களும் செய்யும் போதும் சாதி பெருமை ஒளிந்து கொள்ளும் .
      http://ca.news.yahoo.com/blogs/canada-politics/rcmp-uncover-massive-marriage-fraud-scheme-montreal-214330214.html

      /"The [Jason] Kenney administration, in an effort to crack down on marriage fraud cases has proposed some restrictions..to prevent marriage of convenience cases. There are certain countries where marriage fraud cases seem to be more prevalent such as in India, China and Pakistan. But it I can't stress enough that most of these cases are for real."/

      பாமக கூட்டணி இல்லமல் போட்டி இட்டால் மொத்தம் 10 இலட்சம் மட்டுமே ஓட்டு வாங்கும் என்பது இந்த விக்கி பார்த்தாலே புரிகிறது.இந்த கைப்புள்ளை கட்சியை ஏன் தேவை இல்லாமல் வளர்த்து விட்டார்கள் எனப் புரியவில்லை.

      http://en.wikipedia.org/wiki/Pattali_Makkal_Katchi

      Year General Election Votes Polled Seats Contested Allied With
      1989 9th Lok Sabha 1,536,350- 10 --
      1991 10th Assembly 1,452,982- 21 --
      1991 10th Lok Sabha 1,269,690- 16 --
      1996 11th Assembly 1,042,333- 33 --
      1996 11th Lok Sabha 552,118 23- --
      1998 12th Lok Sabha 1,548,976- 4 AIADMK
      1999 13th Lok Sabha 2,236,821- 5 DMK
      2001 12th Assembly 1,557,500- 34 AIADMK
      2004 14th Lok Sabha 1,927,367- 6 DMK
      2006 13th Assembly 1,863,749- 38 DMK
      2009 15th Lok Sabha 1,785,442- 7 AIADMK
      2011 14th Assembly 1,927,783- 29 DMK

      Delete
  11. சகோ. சார்வாகன்,

    சரியான பதில்தான் அளித்துள்ளீர்கள். அருளின் சமீபத்திய பதிவுகள், பா.ம.க.வின் அறிவு ஜீவிகளின்??? சமீபத்திய எழுத்துக்கள், ஒரு sinister design நோக்கியே செல்கின்றன். பா.ம.க. வை வன்னிய மக்களுக்கும், வன்னிய மக்களை பா.ம.க. விற்கும் ஒன்றுபடுத்தல் தான். ஏதோ தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் வன்னியர்களுக்கு எதிராக இருக்கின்றார்கள் என்று மாயத்தை உருவாக்கி, பயத்தை ஏற்படுத்தி, சரிந்து போன அவர்களின் செல்வாக்கை நிலைநாட்ட முயலும் ஒரு கெட்ட திட்டத்தை நிறைவேற்ற முயல்கிறார்கள். அதனால் பா.ம.க.வின் பாதிப்புக்களை வன்னியர்களின் பாதிப்புகளாக மாற்ற முயல்கிறார்கள்.

    பா.ம.க வும் விடுதலை சிறுத்தைகளும், அரசியல் ரீதியாக முன்னேறியது, இரத்த சரித்திரத்தினால்தான். அதில் அவதிக்குள்ளானவர்கள் சில நபர்கள்தான் கட்சி பதவியை பிடித்து ஏதோ வெளிவந்துவிட்டார்கள். மற்றவர்கள் இன்னும் சட்டம் மற்றும் இதர சிக்கள்களால் பாதிப்புக்குள்ளாகி அவர்களும் அவர்களின் குடும்பத்தாரும் வெளியே வர முடியாமல் இன்னுமும் திண்டாடிகொண்டிருக்கிறார்கள். திருமாவளவன் இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு ஒரு முதிர்ந்த சனநாயகவாதியாகிவிட்டார். அதனால்தான் ராமதாஸ், இரத்த போட்டிக்கு எவ்வளவு கூப்பிட்டு இழுத்தும், சாமர்த்தியமாக தவிர்க்கிறார்.

    வன்னியர்களே, ராமதாஸை ஒதுக்கி வைத்துவிட்டனர். பையனை, மத்திய சுகாரத்துறை அமைச்சராக்கி, வ்ன்னிய மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. குறைந்த பட்சம் “குரோசின்” விலையையாவது குறைத்தாரா அதுவும் இல்லை. நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டப்பட்ட ஒரு குற்றவாளி அன்புமணி இராமதாஸ். அரசியல் அதிகாரம் பெற்று தனது குடும்பத்தை ஊழலால் மேம்படுத்த நினைக்கும் ஒரு குடும்பம் தான் ராம்தாஸ் குடும்பம்.

    அந்த அரசியல் அதிகார போதை ஆட்டத்தின் மற்றொரு பலி கொலைதான் இளவரசன் மரணம்.

    இணையத்திற்கு நீண்ட நாள் விடுப்பு என்பதால் மற்ற பதிவுகளை படித்துக்கொண்டிருக்கிறேன்.

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. சகோ நரேன் வாங்க,
      நமக்கும் அதே சிக்கல்தான். கொஞ்ச நாளைக்கு பதிவுலகம் விட்டு ஓய்வு எடுக்கலாமா என்று கூட சிந்த்னை உண்டு. ஆனால் சாதி,மதப் பிரியர்களை அறிவுச்சான்றுகள் சார்ந்து சுளுக்கெடுப்பதையும், அறிவியலை எளிய தமிழில் சொல்வதையும் கடமையாக எண்ணுவதால் விட முடியவில்லை.

      வாரம் ஒன்று அல்லது மாதத்திற்கு சில பதிவு என முயற்சிப்போம்.
      **
      தமிழகத்தை ஆண்டவர்களில் தமிழைத் தாய்மொழியாக உடையவர்கள் குறைவு என்பது எனக்கும் உள்ள வருத்தம்தான். ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநில பெரும்பான்மை சாதி ஆட்கள் முதல்வர் ஆகிறார்.
      எ.கா
      ஆந்திராவில் காங்கிரஸ் என்றால் ரெட்டி சமூகத்தவரும், தெலுகுதேசம் என்றால் கம்மா நாயுடுவும்[ என்.டி.ஆர்] ஆட்சிக்கு வருவர் .
      ஆனால் ஆளும் கட்சிகள் சாதிக் கட்சிகள் அல்ல.
      தமிழகம் மட்டும் விதிவிலக்கு!!

      ஏன் எனில் பெரும்பான்மை சாதிகளில் இருந்து பிற சாதிகளால் ஏற்கப்படும்
      தலைவர்கள் உருவாகவில்லை. இரு திராவிட கட்சிகளுக்கு மாற்று அவசிய சூழலில்,திராவிடத்திற்கு மாற்றாம் தமிழ் தேசியம் என்பது பெரும்பான்மை தமிழர்களால் ஏற்கப்படும் வேளையில் ஏன் பெரும்பான்மை ஆதிக்க சாதி தலைவர்கள் இப்படி தங்களுக்கு தாங்களே குழி தோண்ட வேண்டும்?.
      ***

      சாதிக் கட்சிகளின் அரசியலில் வெற்றி அடைந்தது பாமக மட்டும்தான்.அதற்கு காரணம் தலித்,சிறுபான்மை மக்களை அரவனைத்து சென்றதுதான்.கூட்டணி மாறியது,மகனை முன் நிறுத்தியது கூட அரசியலில் சகஜமே.

      மருத்துவர் அய்யாவுக்கு புரியாமல் போன விடயம், தலித்+சிறுபான்மையினர் அவ்ரைத் தமிழ் குடிதாங்கியாக ஏற்றது போல் பிற ஆதிக்க சாதி மக்கள் அவரை ஏற்க மட்டார்கள் என்பதுதான்.

      ஆனால் என்ன மாயமோ இபோதைய பாமகவின் தலித் விரோதக் கொள்கை,அருளின் முஸ்லிம் விமர்சன பதிவுகள் கட்சிக்கு நிச்சயம் பலன் தராது.பாமக இப்போது தனித்து நின்றால் பல இடங்களீல் டெபாசிட்டே போய்விடும்.

      சாதி மறுப்புத் திருமணம் நடப்பது அபூர்வ நிகழ்வு இதனைக் பெருந்தன்மையாக கண்டு கொள்ளாமல் செய்வதே த்லைவனுக்கு அழகு.அநியாயமாக ஒரு காதல் பிரிந்து,ஒரு இளைஞனின் உயிரும் பலி ஆனது.

      இதில் விதைத்த வினையை வரும் தேர்தலில் அறுவடை செய்வார்கள்!!!

      நமக்கு உள்ளுண‌ர்வில் வரும் வரும் பாடல்

      ராகம்(நந்தவனத்தில் ஓர் ஆண்டி)

      பாமக என்றொரு கட்சி
      அவன் ஒவ்வொரு தேர்தலில் கூட்டணி மாற்றி
      ஆக்கினான் மகனை மந்திரியாக அதனை
      சாதீ சாதீ என போட்டுடைத்தாண்டி

      தித்தோம் தகதிமித்தோம்!!!


      நன்றி!!!

      Delete
  12. //ஆகவே சாதிப் பிரியர்களை சீக்கிரம் வேற்று நாட்டு,மத ஏக இறைவன்(கள்) நாடினால் நல்லது!!!
    அவர்களுக்கு அமைதி உண்டாகட்டும்!!!!!!!!!!!!!!//

    :)))

    ReplyDelete
  13. வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை என்று அரசியலை ஆரம்பித்தார்கள் .கட்சியாக நடந்த இரு தேர்தல்களிலும் அன்னியர் ஓட்டு வன்னியருக்கு இல்லை என்று அன்னியர்கள் முடிவு எடுத்ததால் கூட்டணி வைத்தும் வற்றி பெற முடியவில்லை .
    ///முஸ்லிம்கள் தாங்கள் பிறருக்கு வழங்க மறுக்கும் உரிமைகள் தங்களுக்கு மறுக்கப்பட்டால் கூக்குரல் இடுவார்கள் என்பது 1400 ஆண்டு வரலாறு!!!.////
    நாம் இந்தியாவில் நடபப்தை பற்றியே இங்கே எழுதி வருகிறோம் .முஸ்லிம்கள் உரிமைகள் வழங்கும் இடத்தில் இல்லை .போராடி பெறும் இடத்திலே உள்ளனர் .
    அருள்தான் அவசியம் இல்லாமல் முஸ்லிம்களை சாடுகிறார் என்றால் ,அதை கண்டிப்பது போல அதைவிட ஒரு படி மேலே சென்று முஸ்லிம்களை சாடியுள்ளீர்கள்.சார்வாகன் அருளை கண்டித்து எழுதுவது போல் நடித்து முஸ்லிம்களை சாடுவதில் ஹிந்த்துவாவை விஞ்சி உள்ளார். ஹிந்த்த்துவாவினர் அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம்களை வசை பாடுவார்கள் .ஆனால் சாருவாகனுக்கு என்ன ஆதாயமோ தெரியவில்லை.
    வன்னியர்கள் பழைய போராட்டத்தால் கருணாநிதி MBC க்கு என்று தனி ஒதுக்கீடு கொணர்ந்து அதனால் கல்வியில் பின்தங்கியிருந்த முஸ்லிம்கள் பாதிக்கபப்டனர்.1991 தேர்தலில் முஸ்லிம்களின் ஓட்டுக்கள் மட்டும் கிடைக்கவில்லை எனில் உதய சூரியன் கேள்விக்குரியதாக இருக்கும் .
    விடுதலை
    ///2.சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள முஸ்லிம் கைதிகளின் விடுதலை.////
    ஒவ்வொரு கலவரத்திலும் அதிகமாக பாதிக்கபபட்டவர்கள் முஸ்லிம்கள் .கயாவில் குண்டு வெடித்த உடன் முஸ்லிம் தீவிரவாதிகள் என வலு கட்டயமாக செய்தி பரப்பின சில ஊடகங்கள் .ஆனால் மாட்டியது வினோத் .
    கோவை கலவரத்தில் முஸ்லிம்கள் மட்டுமே இன்னும் உள்ளனர் .ஏன் ஹிந்து தீவிரவாதிகள விடுதலை செய்யப்பட்டார்கள்?

    ///அப்புறம் எந்தப் பிரிவின் மதபுத்தக விளக்கம் சரியானது என குழம்பி வெளிநாடுகளில் இருந்து ஆயுதம் வாங்கி மதப் பிரிவுகளுக்குள் அடித்துக் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்.

    எ.கா பாகிஸ்தான்,எகிப்து,சிரியா,ஆப்கானிஸ்தான்,நைஜீரியா,இராக்.....///

    உங்களது வக்கிர நெஞ்சம் எல்லை தாண்டி போகிறது .இராக் ,லிபியா ,சிரியா ஆப்கானிஸ்தான் கலவரம் வேறு .பாகிஸ்தான் நைஜீரியா கலவரம் சரியான தலைமை இல்லாமையே காரணம் இதில் மதபிரிவுகளை காட்டி உலகை ஏமாற்றுவது கொலை வெறியன் அமேரிக்கா
    இந்தியாவில் இதற்கு முன் மதம் மாறிய மக்களை சொல்லாமல் நைஜீரியாவுக்கு பறந்தது ஏனோ?

    ///இது இந்து மத சீர்த்திருத்தங்களை துரிதப் படுத்தும்.///
    இப்போது அதை தடுத்துக் கொண்டிருப்பவர்கள் வன்னியர்களா ?
    வன்னியர் தவிர்த்து ஆதிக்க சாதியினர் பிராமணர் உட்பட அனைவரும் ,பள்ளர் ,பறையர் ,சக்கிலியர் சாதியினருடன் திருமண உறவுகளை வைத்துக் கொள்ளவேண்டியதுதானே ,இந்து மத சீர்திருத்தம் மிக துரிதத்தில் ஏற்பட்டுவிடுமே .
    நமது முதல்வர் ,மின்சாரம் பற்றாக்குறை ஏன் ? கருணாநிதி .
    தெருவில் குப்பை குவிந்துள்ளதே ஏன் ? கருணாநிதி .
    அதைப்போல சாருவாகனுக்கு முஸ்லிமகளை சீண்டாமல் எழுத வராது



































    ReplyDelete
    Replies
    1. வாங்க ச்கோ இப்பூ,
      அஸ்ஸலாமு அலைக்கும்!!
      1./நாம் இந்தியாவில் நடபப்தை பற்றியே இங்கே எழுதி வருகிறோம் .முஸ்லிம்கள் உரிமைகள் வழங்கும் இடத்தில் இல்லை .போராடி பெறும் இடத்திலே உள்ளனர் ./
      அதாவது மூமின்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் பிறருக்கு உரிமை வழங்குவது பற்றி கண்டு கொள்ள மாட்டீர்கள். அப்படி இருந்தால்தானே மூமின்

      வடிவேலு பாணியில் சொன்னால் அது அப்போ,இது இப்போ ஹி ஹி

      இந்தியாவில் முஸ்லிம்கள் பிறரை விட எந்த விதத்திலும் குறைவாக நடத்தப் படக் கூடாது என்பதே நம் விருப்பமும்!!
      ***
      2./ஹிந்த்த்துவாவினர் அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம்களை வசை பாடுவார்கள் .ஆனால் சாருவாகனுக்கு என்ன ஆதாயமோ தெரியவில்லை./

      நாம் வரலாறை அப்படியே சொல்கிறோம். முகலாய அரசர்கள்,கஜினி முகமது போன்றோரின் செயல்களுக்கோ, சவுதி ,உள்ளிட்ட இதர நாடுகளின் செயலுக்கோ இங்குள்ள முஸ்லிம்கள் பொறுப்பு இல்லை.ஆனாலும் உண்மையை சொல்வது கடமை.

      கிலாஃபா,ஷரியா பற்றி சில மூமின்கள் புல்லரித்து எழுதும் பதிவுகளுக்கு மறுப்பு சொல்கிறோம்.

      நான் எந்த மத,இன வாதக் கட்சியையும் ஆதரிப்பவன் அல்ல. நம்புவது உங்கள் விருப்பம்.
      **
      3.திருமண பதிவு சட்டத்தை நமது அன்புக்கும் ,மரியாதைக்கும் உரிய அண்ணன் ஜனாப் பி.ஜே அவர்களே ஆதரித்த பிறகு அதனை எதிர்க்க த.மு.மு.க விற்கு என்ன துணிச்சல் சகோ இப்பூ?

      இது மட்டும் மூமின் பெரும்பான்மை நாடாக இருந்து இருந்தால் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

      Delete
    2. சகோ இப்பூ,
      1./கோவை கலவரத்தில் முஸ்லிம்கள் மட்டுமே இன்னும் உள்ளனர் .ஏன் ஹிந்து தீவிரவாதிகள விடுதலை செய்யப்பட்டார்கள்?//

      நல்ல கேள்வி.இப்படி பாரபட்சம் தவறு.இது சட்ட பூர்வமாக அணுக வேண்டிய பிரச்சினை.
      **
      2./உங்களது வக்கிர நெஞ்சம் எல்லை தாண்டி போகிறது .இராக் ,லிபியா ,சிரியா ஆப்கானிஸ்தான் கலவரம் வேறு .பாகிஸ்தான் நைஜீரியா கலவரம் சரியான தலைமை இல்லாமையே காரணம் இதில் மதபிரிவுகளை காட்டி உலகை ஏமாற்றுவது கொலை வெறியன் அமேரிக்கா
      இந்தியாவில் இதற்கு முன் மதம் மாறிய மக்களை சொல்லாமல் நைஜீரியாவுக்கு பறந்தது ஏனோ//

      மூமின்கள் சிறுபான்மையாக இருந்தால் நல்லவர்களே,

      பெரும்பான்மை ஆகும் போது மக்களை கட்டுப் பாட்டில் வைக்க முயலும் மதவாதிகளின் குழப்பங்களை வெளீநாடுகள் பயன்படுதுகின்றன.நம்மிடம் ஒழுங்காக இருந்து பிறகு பிரிந்து போன பாகிஸ்தான் ஏன் அப்படி ஆனது.எல்லாவற்றுக்கும் அமெரிக்கா மீது பலி போடுவது நியாயமா??.

      சரி அமெரிக்கா தூண்டி விட்டால் அடித்து கொண்டு சாவார்களா இது அதை விட மோசம்!!

      சிரியாவில் இரமதானுக்கு கூட போர் நிறுத்தம் இல்லை!!
      http://www.latimes.com/news/world/worldnow/la-fg-wn-syria-ramadan-20130710,0,6666369.story
      In Syria, no letup in fighting as Ramadan begins

      அருள் உள்ளிட்ட பாமக வினரை ஏக இறைவன் நாடுகிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடையுங்கள்.துவா செய்யுங்கள்

      பாமக வஹாபி பிரிவுக்கும், பிறர் ஷியா பிரிவுக்கும் மாற பரிந்துரை செய்கிறேன்.

      ஏக இறைவன் மிக மிக பெரியவன்.

      நன்றி

      Delete