Saturday, September 8, 2012

சவுதியில் இன்னும் 18 ஆண்டுகளில் எண்ணெய் தீர்ந்துவிடுமா?



வணக்கம் நண்பர்களே,

எண்ணெய் என்பது இப்போதைய  பொருளாதர‌த்தின் ஆணிவேர் என்றே சொல்லலாம். உலகின் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் சவுதி அரேபியாவே முண்ணனி வகிக்கிறது.

நேற்று அல்ஜசீரா செய்தியில் சவுதியில் பொ.ஆ 2030 க்கு பிறகு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் அளவு இருக்காது என படித்ததும் , இது நடக்கும் என்பது எதிர்பார்த்தது என்றாலும் இவ்வளவு சீக்கிரம் நடப்பது வியப்புக்கு உரியது.  


சவுதி இப்போது ஒருநாளைக்கு 11.1 மில்லியன் பேரல் எண்ணெய் உறப்த்தி செய்து அதில் 7.7 மில்லியன் பேரல் ஏற்றுமதி செய்கிறது.மீதம் உள்ள‌ 3.4 மில்லியன் பேரலை[25%??] சவுதியே ப‌யன் படுத்துகிறது.

இது சிட்டி கார்ப் என்ப்படும் ஆய்வு நிறுவனத்தை சேர்ந்த ஹெய்டி ரஹ்மான் கூறிய கருத்து ஆகும்.அவரின் கருத்தை சார்ந்து டெய்லி டெலிகிராஃபில் வெளியான கட்டுரையின்  தமிழாக்கத்தை அளிக்கிறேன். 


 சிட்டி கார்ப் நிறுவனத்தின் கணிப்பு சரியாக இருந்தால் சவுதி பொ.ஆ 2030ல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாகி விடும்!!.

அந்நிறுவனத்தின் ஹெய்தி ரஹ்மானின் 150 பக்க சவுதி எண்ணெய் பொருளாதாரம் சார்  தகவல் அறிக்கை இத்னை கூறுகிறது. இது பலருக்கு எப்படி இவ்வளவு சீக்கிரம் நிகழப்போகிறது என வியப்பும்,அதிர்ச்சியும் ஏற்படுத்தலாம்.

இதன் முக்கிய காரணி என்னவெனில் சவுதியின் தனிப்பட்ட‌ எண்ணெய் நுகர்வு அதிகரித்தலே!!. சவுதி தனிப்பட்ட எண்ணெய் 50%[1.5 million barrels]  பொது மக்களால் பயன்படுத்தப் படுகிறது.இதில் மூன்றில் இரு பங்கு குளிர்சாதனப் பெட்டிகள் பயன்பாடு!!. 

ஒரு சவுதி அரேபியர் ஒரு நாளுக்கு சுமார் 250 லிட்டர் தண்ணீர் பயன்படுத்துவதும்,இது உலக சராசரியை விட 91% அதிகம் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இங்கு கடல் நீரை சுத்திகரிப்பு செய்து தண்ணீர் பெறப்படுவதும்,உலகின் 17%  கடல் நீர் சுத்திகரிப்பு நீர் இங்கு உற்பத்தி செய்து பயன்படுத்துகிறார்கள். இதற்கும்  அதிக பொருள் செல்வு, எரிபொருள் தேவை உண்டு.தண்ணீரின் தேவை வருடம் 9% அதிகரிக்கிறது. மின்சாரத்தின் தேவை ஆண்டுக்கு 8% அதிகரிக்கிறது.


மேலும் சவுதியில் எண்ணெய் சந்தை விலையை விட மிக குறைந்த விலையில் வழங்கப்படுவதும் சிக்கலை அதிகப்படுத்துகிறது. 



சவுதியில் கிடைக்கும் இயற்கை எரிவாயு மொத்தமும் பயன்படுத்தப் படுகிறது. குவைத் இரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்வதும் குறிப்பிடலாம்.









ஹெய்தி ரஹ்மான் கூறுகிறார்.

• Saudi Arabia Could be an Oil Importer by ~2030 — Saudi Arabia is the world’s largest oil producer (11.1mbpd) & exporter (7.7mbpd). It also consumes 25% of its production. Energy consumption per capita exceeds that of most industrial nations. Oil & its derivatives account for ~50% of Saudi’s electricity production, used mostly (>50%) for residential use. Peak power demand is growing by ~8%/yr. Our analysis shows that if nothing changes Saudi may have no available oil for export by 2030.
• It Already Consumes All Its Gas Production — Saudi Arabia produces 9.6bn ft3/day of natural gas. This is entirely consumed domestically. It is looking to raise gas production to 15.5bn ft3/day by 2015E, implying a 2011-15E CAGR of 12.7%. However, peak power demand is growing at almost 8% pa. We believe Saudi Arabia will need to find new sources to meet residential & industrial demand.

ரஹ்மானின் கருத்துகளை ஏற்கெனெவே மேலே சொல்லி விட்ட படியால் மொழி பெயர்க்கவில்லை.
ஒரு வேளை இந்த கணிப்பு தவறாக இருக்கலாம் ,இது போன்ற பிற ஆய்வுகளில் மட்டுமே உறுதி செய்யப்படும். சவுதி எண்ணெய் நிறுவனங்கள் நிச்சயம் தங்களின் உண்மை எண்ணெய் இருப்பை வெளியே சொல்ல மாட்டார்கள். எனினும் உச்ச எண்ணெய் [Peak Oil] என்ற அளவை நெருங்கி விட்டோம் என்பதன் அறிகுறியாக எடுக்க வேண்டியதுதான்.!!! 
இப்பதிவில் சவுதியின் அதீத நுகர்வையே விமர்சிக்கிறோம். "குந்தித் தின்றால் குன்றும் மாளும்" என்று சொல்ல எவரும் இல்லை அங்கே!!!. 
அதீத நுகர்வு ஆபத்தானது  என்றெ நாம் பதிவுகளில் வலியுறுத்தி வருகிறோம். மல்ர்களிடம் இருந்து  தேனீ தேன் எடுப்பது போல் ஒரு அரசன் மக்களிடம் வரி வசூலிக்க வேண்டும் என ஒரு சங்கப்(???) பாடல் கூறுவதாக படித்தது உண்டு.
அதுபோல் மனிதர்களின் தேவைகள் இயற்கையை பாழ் படுத்தாமல் பயன்படுத்த வேண்டும்.இன்னும் பல்லாயிரம் தலைமுறை அனைத்து உயிரின‌ங்களும் பிரச்சினையின்றி வாழ வழி தேட வேண்டும். .
எப்படி என்றால் குறைந்த பட்சம் உணவு,உடை,ஆற்றல்,எரிபொருள்  நுகர்வு தேவைகளை முடிந்த வரை  குறைக்கலாம்.சிறிய அள்வில் வீட்டில் ஒரு செடியாவது வளர்க்கலாம்.ஏதோ ஒருவகையில் ஒவ்வொருவரும் ஏதேனும் இயற்கை சார்ந்து  உற்பத்தி செய்தல் பாரிய நல்விளைவுகளை ஏற்படுத்தும்!!!
இதுதான் நல்ல தீர்வு!!!

Thursday, September 6, 2012

நான் ஏன் படைப்புவாதி அல்ல!!!:காணொளி




வணக்கம் நண்பர்களே, 

படைப்புக் கொள்கை[creationism] என்பது இயற்கைக்கு மேம்பட்ட உணர்வுள்ள‌, மிக்க அறிவு கொண்ட சக்தியால் பேரண்டம்[universe] அதில் உள்ள அனைத்து உயிருள்ள ,உயிரற்ற விடயங்களும் உருவாக்கப்பட்டன என்பதே. 



ஆனால் இப்போதைய அறிவியலின் கணிப்பின் படி பேரண்டம் சுமார் 1370 கோடி ஆண்டுகளுக்கு முன் சிறுபுள்ளியில் இருந்து விரிவடைந்து பல கோடி விண்மீன் திரட்சிகள்[Galaxies] தோன்றின.அதில் ஒன்று நமது பால்வீதி மண்டலம் 1320 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.அதில் உள்ள கோடிக்கணக்கான் விண்மீன்களில்[stars] ஒன்றான கதிரவன் சுமார் 457 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. அத்னை சுற்றி வரும் மூன்றாவது கோள் ஆகிய நமது பூமி சுமார் 454 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. 

பூமியில் முதல் ஒரு செல் உயிர் சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. அதில் இருந்து கிளைத்து தழைத்தே மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் பரிணாம வளர்ச்சி அடைந்தன. 


உயிரினங்களில் மனிதன் மட்டுமே மதம் சார் நம்பிக்கைகள் கொள்வதும், இயற்கைக்கு மேம்பட்ட சக்தி அனைத்தையும் படைத்து,காத்து வழிநடத்தி வருகிறது என்ற நம்பிக்கையே மதத்தின் ஆணி வேர் ஆகும். 

உயிரற்ற பொருள்களான விண்மீன் திரட்சிகள், விண்மீன்கள்,கோள்கள்,துணக்கோள்களின் கால ரீதியான மாற்றங்களின் அடிப்படையிலான தோற்ற விளக்கத்தை இப்போது பெரும்பானமையான மதவாதிகள் ஏற்கின்றனர். அவர்களை அதிகம் உறுத்துவது மனிதன் என்பவனும் பிற விலங்குகள் போலவே தோன்றினான் என்பதுதான். மனிதனுக்காகவே அனைத்தும் படைக்கப்பட்டது என்பதும் ,அப்படிப் படைத்த சக்தியை வழிபடாமல் போவது தவறு என்பதே மதவாதிகளின் வாதம்.பரிணாம கொள்கை பெரும்பானமையான மதவாதிகளால் எதிர்க்கப்படுவதும் இதர பேரண்ட தோற்றம் உள்ளிட்ட உயிரற்ற பொருள்கள் மீதான அறிவியல் விளக்கத்தை மதப் புத்தகத்தில் இருப்பதாக ஏதோ ஒருவகையில் விளக்கம் அளிப்பதும் நாம் அறிந்த விடயமே!!! 

இக்காணொளி படைப்புக் கொள்கை மதப் பிரச்சாரகர்களின் தந்திரங்களை அலசுகிறது.இப்போதைய‌ மனித இனம்[நாம்!!! நாம்!! நாம்!!!] அறிவியலில் ஹோமோ சேஃபியன் என அழைக்கப்படுகிறது.இபோதைய ஹோமோ சேஃபியன் மனிதனின் தோற்றம் சுமார் 2.5 இலட்சம் ஆண்டுகள் முன்பு. 

முதல் பகுதி மனிதனின் படிம வரலாறு, நியாண்டர்தால்,ஹோமோ எரக்டஸ் போன்ற இதர மனித உயிரின‌ங்கள் ஒப்பீடு பற்றி விளக்குகிறது. 

http://www.talkorigins.org/faqs/homs/species.html 

இரண்டாம் பகுதி ஆபிரஹாமிய மதங்களின் நோவா(நூஹ்) கப்பல் கதையைச் சாத்தியமற்றது எனக் காட்டுகிறது. இப்போது பல மதவாதிகள் நோவாவின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு உலக அள்வில் அல்ல ,அப்பகுத்யில் மட்டும் ஏற்பட்டது என்று{ அறிவியலில் ஆதாரம் இன்மையால்]வழக்கம் போல் மாற்று விளக்கம் அளிக்கின்றனர். 

இரண்டாம் பகுதி முடிவில் யானைகளின் பரிணாம வளர்ச்சியையும் படிமங்களின் ஊடாக விளக்குகிறது. 

மூன்றாம் பகுதியில் படைப்பு கொள்கையாளர்களின் சில நகைச்சுவை விளக்கங்களையும் ஆவணப்படுத்துகிறது. 

இறுதி பகுதி பெரு விரிவாக்கம், அதன் ஆதாரமான சிவப்பு விலக்கம் போன்றவற்றையும் விவாதிக்கிறது. 

காணொளி கண்டு மகிழ்க!!!! 

நன்றி!!!!!!!!!!!!!!!!!!!!!