Monday, August 22, 2011

உலகில் எவ்வளவு மனிதர்கள் வாழ முடியும்?

மக்கள் தோகை கணக்கீடு என்பது ஒவொரு நாட்டிலும் சில ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப் படுகின்ற‌து.ஒவொரு திட்டமிடலுக்கும் இக்கணக்கீடு மிக அவசியமானது.1950ல் 250 கோடியாக இருந்த மக்கள் தொகை இப்போது 750 கோடி ஆகிவிட்டது.மக்கள் தொகை அதிகரிக்கும் வாய்ப்பே உள்ளதால் இயற்கை வளங்கள் பயன் பாடும் ஒரு அளவிற்கு மேல் செய்ய முடியாது.

              மால்தூஸியன் கொள்கை எனப்படும் மக்கள் தொகை அதிக விகிதத்தில் அதிகரிக்கிறது அதற்கு ஏற்றபடி உணவு,நீர் போன்ற அத்தியாவசிய தேவைகளை அதிகரிபது கடினம் என்று கூறுகிறது.இத்னை ஏற்றுக் கொள்ளாமல் விமர்சிப்பவர்கள் பலர்.

இயற்கையில் நிகழ்வில் எதற்கும் ஒரு எல்லை உண்டு.எவ்வளவு மனிதர்கள் அதிகபட்சம் வாழ முடியும் என்பதை இந்த ஆவணப் படம் அலசுகிறது.கண்டுகளியுங்கள். 



5 comments:

  1. நல்ல பதிவு...பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. நல்ல தகவல்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. வாங்க சகோ சதீஷ்குமார்,இளஞ்செழியன்
    இக்காணொளியில் அதிகபட்சம் இயற்கை வளங்களை 1000 கோடி மக்கள் மட்டுமே பயன்படுத்தி வாழ முடியும் என்பதை கேட்கும் போது மக்கள் தொகை என்பது மிகப் பெரும் பிரச்சினையாக் மாற்விவிடலாம்.ஒவொருவரும் அதிக பட்சம் இரு குழந்தைகள் மட்டும் பெற்றால் மட்டுமே ஒரு அளவிற்கு கட்டுக்குள் கொண்டு வர‌ முடியும்.இத்னை அரசின் சட்டத்தால் சாதிக்க முடியாது.மக்கள் தங்கள் சுய கட்டுப்பாட்டில் செய்தால் நல்லது. விளை நிலங்கள் விலையாகாமல் பார்க்க வேண்டும்.விவசாயம் அதிக முக்கியத்துவம் அளிக்கப் படவேண்டும். அனைவருக்கும் உணவும் குடிநீர் அளிப்பதே பிரச்சினை ஆகாமல் பார்த்துக் கோலவ்து நம் கடமை.
    வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி

    ReplyDelete
  4. "dooms day scenario" வாக இருந்தாலும், மக்கள் தொகை உயர உயர, வாழ்வாதாரங்களில் ஏற்படும் பாதிப்பினால், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். பாதிப்பு ஏற்படாத பட்சத்தில் மக்களின் தொகை “breaking point” வரை உயர்ந்து கொண்டே தான் இருக்கும்.

    ஆனால் பாதிப்பு வந்தே தீரும். அதற்கு காணொளியில் சொன்ன படிப்பறிவினால் வரும் பகுத்தறிவு மற்றும் பொறுப்பு தான் தீர்வு. மனித முன்னேற்றம் malthusian scenario வை தள்ளி கொண்டே செல்லலாம், ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு.

    ஆனால் உங்கள் தளத்தில் உள்ள எண்கள் உயர் உயர மணம் பக் பக் என்கிறது.

    ReplyDelete
  5. வாங்க நரேன்,
    மனித இனம் பலுகி பெருகுவதற்கு தொழில் நுட்ப,மருத்துவ அறிவியலின் வளர்ச்சியே காரனம்.சரியான மக்கள் தொகை என்பதை துல்லியமாக் கணக்கிட முடியவில்லை. ஒருவேளை மக்கள் தொகை அதிகரிக்கும் போது அதற்கேற்ப வாழ்வு முறையை அனைவரும் மாற்றினால் மட்டுமே கொஞ்சம் பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.

    மத்வாதிகள் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு தடையாக் இருப்பது பாரிய சிக்கல்களை ஏற்படுத்துகிறது.இன்னும் 100 வருடத்தில் எரிபொருள் தட்டுப்பாடு வரலாம்.அப்படி வரும் பட்சத்தில் உணவு உற்பத்தி செய்ய முடிந்தாலும் வினியோகம் தடை படும்.சீனா ப்ரவாயில்லை கட்டுபடுத்தி விட்டது.முதல் த்லைமுறையில் பல சிக்கல்களைசீனா இத்னால் எதிர் கொள்ளும் என்றாலும் தொலை நோக்கில் மீண்டு விடும்.நாம் மக்கள் தொகையை இதே அளவில் வைப்பதே கஷ்டம் என எண்ணுகிறேன். ஆனால் எதிர்கால அரசுகள் இவ்விஷயத்தில் கட்டுபாடு விதிக்கும்.இது பற்றி இன்னும் சில பதிவுகள் எழுத ஆசை பார்க்கலாம்.
    நன்றி

    ReplyDelete