Friday, March 8, 2013

ஐ.க்யு தேர்வு,ஐன்ஸ்டின், விளம்பர கோமாளிகள்.




வணக்கம் நண்பர்களே,

இன்றைய உலகில் போட்டி என்பது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. குறைந்த வாய்ப்புகள், அனைவருக்கும் தேவைகள் என்னும் போது ,போட்டி போடுவது விரும்பாவிட்டாலும் ஒவ்வொருவர் மீதும் திணிக்கப்படுகிறது.

கல்விதான் போட்டிகளில் முதல் இடம் பிடிக்கும், பெரும்பானமையோரை ஈடுபடுத்தும் விடயமாக இருக்கிறது. மதிப்பெண் சார்ந்த தரப்படுத்தும் முறை உண்மையான கற்றலை விட தேர்வில் மதிப்பெண் பெற மனனம் செய்யும் முறையை மட்டுமே ஊக்குவிக்கிறது.  

இங்கு கற்றல் என்றால் ஒரு விடயத்தை பன்முகப் பார்வையில் அலசி,பரிசோதித்து சரிபார்த்து,விமர்சித்து ஏற்கும் தன்மையை குறிப்பிடுகிறோம்.எந்த ஒரு அறிவியல் விதியும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது.அறிவியல் என்பது இயற்கை நிகழ்வுகளின் மிதான சான்றுகளின் விளக்கம்,ஆகவே சான்றுகளைப் பொறுத்து விதிகளும் மாறும் என்ற புரிதல் இல்லா அறிவியல் கல்வி வீண். [ ஹி ஹி இப்படி பார்த்தால் பாடத் திட்டம் முடிக்கவோ,எதுவும் செய்யவோ முடியாதே என்னும் குரல் கேட்கிறது. குறைந்து கற்றாலும் ஆழமான புரிதல் ஏற்படுத்தா கல்வி தேவையில்லை]

ஒரு மத்தியதர குடும்பத்தில் இருந்து பெரும் பணக்காரர் வரை தங்கள் குழந்தைகளை மிக புகழ்பெற்ற கல்வி நிலையங்களில் சேர்த்து ,பலதரப்பட்ட பயிற்சிகள் பெற்று, உலகின் முதன்மைத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்,தரம் பெற விரும்புகிறார்.சமச்சீர் கல்வி அனைவருக்கும் என்றால் பல மத்திய வர்க்க பெற்றோருக்கு கூடப் பிடிப்பது இல்லை.என் குழந்தைக்கும், ஏழைக் குழந்தைக்கும் ஒரே கல்வியா என்னும் மேன்மை பாராட்டல் இங்கு இயல்பான விடயம் ஆகும். 

மேலை நாடுகள், இந்தியாவில் சில பள்ளி கல்லூரிகளில் உள்ள ஒரு தேர்வு முறைதான் அறிவிற்கு மதிப்பெண் கண்டுபிடிக்கும் ஐ.க்யூ என்ப்படும் அறிவு(?)திறன் சார் தேர்வுகளும் ஒன்று. அறிவு என்பதை எப்படி நாம் பார்க்கிறோம் என்றால் வாழும் சூழலுக்கு தகுந்த படி  வாழ்வதுதான்.

ஆனால் இந்த ஐ.க்யு என்ப்படும் பரிசோத்னைகள் குறிப்பிட்ட காலத்துக்குள் சில கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியுமா என்பதையே ஊக்குவிப்பதால் அறிவுக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றே நாம் சொல்கிறோம்.

சரி இப்பதிவின் நோக்கம் நேற்று செய்தியில் படித்த ஒரு விடயமே காரணம். இங்கிலாந்தில் வாழும் இந்திய வம்சாவழி பெண் ஒருவர் மென்சா என்ப்படும் நிறுவனம் நடத்தும் ஐ.க்யு தேர்வில் 162 மதிப்பெண் பெற்றார் என செய்தி வந்தது. சரி இதோடு விட்டார்களா! ஐன்ஸ்டினை விட அதிக அறிவு(ஐ.க்யு??) என செய்தி வெளியிட்டதும் சரி இதுபற்றி ஒரு பதிவு இட்டே ஆக வேண்டும் என முடிவு செய்தேன்.


12-Year-Old Indian Girl Neha Ramu Has Higher IQ Than Einstein, Hawking


ஐன்ஸ்டின் 160 மதிப்பெண் என்றதும் ,அவருமா இந்த தேர்வு எழுதினார் என்றால் இல்லையாம், அவருக்கும், ஸ்டீஃபன் ஹாக்கிங்,பில் கேட்ஸ் ஆகியோருக்கு 160 என் மென்சா குழுவினரே முடிவு செய்தனராம். சிரிக்காதீர்கள். இப்படித்தான் செய்தி.

முதலில் இந்த மென்சா நிறுவனம் பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வோம்.


From wikipidia

Mensa is the largest and oldest high IQ society in the world.[2][3][4] It is a non-profit organization open to people who score at the 98th percentile or higher on a standardized, supervised IQ or other approved intelligence test.

மென்சா என்பது உலகின் பழமையான,சிறந்த, பெரிய அறிவு மதிப்பெண்[I.Q] சான்று அளிக்கும் நிறுவனம் ஆகும்.இதில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அறிவு ம‌திப்பெண் தேர்வில் 98% மேல் பெறுவோர் மட்டும் உறுப்பினர் ஆகலாம்.


சரி எந்த மாதிரி தேர்வு வைக்கிறார்கள்,எப்படி மதிபெண் கண்க்கிடுகிறார்கள் என இச்சுட்டியில் இருந்து அறிகிறோம்.


ஒரு முதலாளி சொல்வதை கேள்வி கேட்காமல் செய்யத் தேவைப்படும் திறமைகள்தான் இவை என புரிய முடியும். இவையும் ஒரு அளவுக்கு பயன் உள்ள செயல்கள் என் விட்டுவிடுவோம்.

இந்த  மதிப்பெண் வழங்கும் விதத்தில்தான் நாம் விமர்சனம் வைக்கிறோம்.ஒரு தேர்வில் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே ஆசிரியர் கற்பிக்கிறார். அவர் கற்பித்த விடயங்களை கொஞ்சம் மாறுதலுடன் வகுப்பில் உள்ள அனைவருக்கும் தேர்வு வைக்கிறார்.

அதில் கற்றவற்றை தேர்வில் எழுதும் மாணவர்கள் சிறந்த மதிப்பெண் பெறுகிறார்.இந்த முறையிலும் சில சிக்கல்கள் உண்டு என்றாலும் ஆசிரியர் நன்கு கற்பிப்பவராக இருந்து தேர்வு வினாக்களும் சரியாக விளங்கும் வண்ணம் இருப்பின், அறிந்தவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவது எளிது.

ஆனால் பெரும்பாலும் பல ஆசிரியர்கள் தேர்வுக்காக குழப்பும் வகையில் கேள்விகள் வைத்து இருப்பார்.அதற்கும் சில புத்தகங்கள் கிடைக்கிறது. கேள்வி என்ன சொல்கிறது என்பது அதிக நேரம் எடுக்கும். இப்படிக் கேள்விகள் ஒரு 10% அதிக பட்சம் இருக்கலாம் என்பதே நம் கருத்து. மாணவனின் ,கற்றலை அளவிட முயற்சிப்பதை விட அவனின் கேள்வியைப் புரிதல் தன்மையை பிரச்சினை ஆக்குவது தெளிவான சிந்தனையை வளர்க்காது.கற்றலின் மீது வெறுப்பை ஏற்படுத்தும்.

ஒரு தேர்வு நாடு,மாநில அளவில் பல இலட்சம் பேர் எழுதும் போது, எழுதும் அனைவரும் சம அளவில் கற்பிக்கபட்டு இருப்பார்கள் என்பதோ, வினாதாளின் மாதிரிகள் போல் பயிற்சி எடுத்து இருப்பார்கள் என்பதோ நடக்காத விடயம்.

இந்த மென்சா போன்ற அறிவுத் திறன் அளவிடல், போன்ற பயிற்சிகள் எடுக்காத  மாணவர்களால் வெற்றி பெற முடியாது. இந்த மாதிரி அதிக செலவு எடுக்கும் பயிற்சிகளை விளம்பரப் படுத்தவே இப்படி தேர்வுகள் முன்னிலைப் படுத்தப்படுகின்றன்.

இந்த சராசரி விலக்கல் மதிப்பெண்முறை என்பது, சராசரி ம‌திப்பெண்ணில் இருந்து எவ்வளவு அதிகமாக மதிப்பெண் எடுக்கிறீர்கள் என கணக்கிடுவது ஆகும்.இது துறை சார் அறிவினை நோக்கி கொண்டு செல்லும் என ஏற்க முடியாது.

ஒரு துறை சார்ந்த அறிவு பெற ஈடுபாடு,முறையான தொடர் கற்றல்,பகிர்தல்,விவாதித்தல், என பன்முகம் சார்ந்தது. ஒரு துறையில் வல்லுனராய் இருப்பவர், பிற துறைகளில் வல்லுனராய் இருப்பது இல்லை. 

இந்த சூழலில் ஏதோ ஒரு நிறுவனம் நடத்தும் ,ஏதோ ஒரு பயிற்சிமுறை சார்ந்த தேர்வின் மதிப்பெண் மூலம் ஐன்ஸ்டினை விட சிறந்தவர் என விளமபரம் செய்வது கண்டிக்கத் தக்க விடயம்.

சில மாதங்களுக்கு முன் இதே போல் நியுட்டனை மிஞ்சிய இந்திய மாணவர் என செய்தி வந்தது. அது என்ன்வென்று பார்த்தால் ஒரு இயக்கவியல் புதிருக்கு நியுட்டன் தீர்வாக வகைக்கெழு சமன்பாடு கண்டார். அதனை எண்ணியல் முறைப்படி தீர்வு கண்டு வந்தனர். அம்மாணவர் சூத்திரம் தீர்வு கண்டார் என விவரம் தெரிந்தது.

நாமும் ஒரு பதிவு இட்டோம்.



சர் ஐசக் நியூட்டனின் 350 வருட புதிர் தீர்க்கப்பட்டதா?

சரி இது ஒரு பாராட்டத் தக்க செயல் , அந்த சூத்திரம் அறியவும் ஆவல் கொண்டோம். ஆனால் அதன் பிறகு அத்னை ஆய்வு சஞ்சிகையில் இடுவதால் இப்போது விவரம் கிடைக்காது என்றார்கள்.அதன் பிறகு நான் அறிந்த
உண்மையான் செய்தியில் மாணவரின் செயல் சாதனை அல்ல‌. வேண்டும் என்றே தமிழாக்கம் செய்யவில்லை.

http://www.huffingtonpost.com/2012/06/21/16-year-old-genius-shoury_n_1616085.html



 Voigt and his colleague at TU Dresden, Professor Ralph Chill, published a four-page report June 4 in which they attempted to contextualize Ray’s work and compare it with results presented in preexisting literature.

Voigt emphasized to HuffPost that Ray was deserving of the research award he received, and that the student's work should be appreciated from the perspective that he is a 16-year-old high school student using a kind of mathematics far beyond high-school level.


That said, Ray’s alleged solutions were “not endorsed by experts in the field who should have been involved in the evaluation of the work,” Voigt and Chill wrote in their published comments on the young man’s work. Furthermore, his steps were largely already known to experts.

Voigt said he did not know how the public was made to believe that a long-standing problem had been solved.

“The point is not that something is missing in Ray’s analysis, but rather that there was no ‘problem posed by Newton,’ and that the methods used by Ray are exceptional and remarkable for a high-school student, but standard for professional mathematicians,” Voigt said.


செயலை விட அதன் பலனுக்கே அனைவரும் ஆசைப் படுகிறார்கள். 

கணிதமேதை இரமானுஜம் பள்ளித் தேர்வில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறவில்லை. ஐன்ஸ்டினுக்கு குவாண்டம் இயக்கவியல் வினோதமாக தெரிந்தது.
http://en.wikipedia.org/wiki/Bohr%E2%80%93Einstein_debates


The shocks for Einstein began in 1925 when Werner Heisenberg introduced matrix equations that removed the Newtonian elements of space and time from any underlying reality. The next shock came in 1926 when Max Bornproposed that the mechanics was to be understood as a probability without any causal explanation.
Einstein rejected this interpretation. In a 1926 letter to Max Born, Einstein wrote: "I, at any rate, am convinced that He [God] does not throw dice."[5]


ஐசக் நியுட்டன் இரசவாதம்[alchemy] செய்ய முடியும் என முயன்றார்.

ஒவ்வொருவருக்கும் சில விடயங்களில் ஆழ்ந்த புலமை இருக்கலாம், அதை ஏற்படுத்துவதே கல்வி. நம் கற்றல் புரிதலின் எல்லைகளை உணர்வதுமே கல்வி.

அதை விட்டு 30 நாட்களில் அறிவாளி, விஞ்ஞானி என பிராய்லர் கோழி மாணவர்களை உருவாக்கும் கல்வி பயன் தராது.அதிலும் எதற்கும் விளம்பரம் செய்தும் விஞ்ஞானி உருவாக்க முடியாது. 

ஐன்ஸ்டின்,நியுட்டன் போல் துறை சார்ந்து எவர் சாதித்தாலும் நிச்சயம் சீர் தூக்கி பார்த்து  பாராட்டுவோம்,ஆனால் கண்ட தேர்வின் முடிவையும் வைத்து விளமபரம் தேடுவதை கண்டனம் செய்கிறோம்.

உண்மையான சமச்சீர் கல்வி அனைவருக்கும் கிடைக்கும் நாளே உண்மையில் சுதந்திரம் கிடைப்பது எனலாம்.

துறை சார்ந்த புலமை பெறுதல் நலம்.ஆனால் சகலகலா வல்லவ அறிவுத் திறன் என்பது மோசடியே!!!

http://www.lfpress.com/2012/12/19/iq-tests-too-incomplete-to-measure-intelligence-western-researchers-find

நன்றி!!

20 comments:

  1. சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்.தேர்வில் பெரும் மதிப்பெண்ணை வைத்து ஒருவருடைய நுண்ணறிவை கணிப்பது துல்லியமானதல்ல.அரசு பள்ளிகளில் செயல்வழிக் கல்வி,படைப்பாற்றல் கல்வி போன்றவை பின்பற்றப் படுகின்றன். பல்வேறு கற்பிக்கும் உத்திகளும், தொடர் மற்றும் முழுமை (Continuous and Comprehensive Evaluation) மதிப்பீட்டு முறை பின்பற்றப் படுகின்றன. ஆனால் ஆங்கிலப் பள்ளிகளிலோ திரும்பத்திரும்ப மனப்பாடம் செய்து கணிதத்திலும் 100 சத மதிப்பெண்கள் பெற வைத்து விடுகிறார்கள்.இவர்களில் உண்மையான நுண்ணறிவு அதிகம் உடையவர்கள் மிகக் குறைவே!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ முரளி,

      ஒரு நாட்டின் கல்விமுறை நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை என் நம்புகிறேன். எதையும் சீர்தூக்கி,பரிசோதித்து ஏற்க வேண்டும்,எதன் மீதும் தொடர் கற்றல் செய்ய வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படுத்தா கல்விமுறை வீண். ஒரு கல்வி கற்ற்வன் சுய தொழில் செய்து இன்னும் சிலருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க இயலாமல்,வேலை தேடுவதை கல்வி முறையின் தோல்வி எனவே கூறலாம்.

      இதில் இப்படி கல்வி கொடுக்கும் நிறுவனங்கள் செய்யும் விளம்பரம் சகிகவில்லை!!

      நன்றி!!

      Delete
  2. எனக்கும் ரொம்ப காலமாவே இதுல எல்லாம் சந்தேகம் இருந்துச்சு. இந்த மாதிரி ஐன்ஸ்டீன விட பெரிய ஆளுன்னு நான் பேப்பர் படிக்கத் தொடங்கின காலத்துல இருந்தே பாத்துகிட்டு இருக்கேன். ஐன்ஸ்டீன்ங்க்ற பேரு இன்னைக்கும் நெனவிருக்கு. ஆனா அவர விட பெரிய ஆளுகன்னு பேப்பர்ல போட்ருந்த யாரும் நெனவுக்கு வாறதில்லை. அவங்க எல்லாம் அதுக்கப்புறம் என்ன ஆனாங்க?

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ ஷைன்,
      நல்லா சொன்னீங்க,எல்லாமே ஒரு விளம்பரம்தான். 1950களுக்கு பிறகு பெரிய கண்டுபிடிப்புகள் நிகழவில்லை என்பது ஏன்? எல்லாருக்கும் எளிதில் எதுவும் கிடைக்க வேண்டும் என்ற மனப்பானமை வந்து விட்டது. பெரும்பாலும் இப்படிப்பட்ட மேதைகள் கடந்து சில நூற்றாண்டுகளில் பல வருடம் உழைப்பில் கண்டறிந்த உண்மைகள்தான் இன்றைய அறிவியல். அவர்கள் தங்கள் ஆய்வினை எதையும் சாராமல் மேற்கொள்ளும் சூழல் அப்போது இருந்தது, இப்போது முனைவர் பட்டம் ஒருவர் பெறுவது கூட ஏதோ வேலை/சம்பள உயர்வுக்காக மட்டுமே. "மூன்றே வருடத்தில் முனைவர் பட்டம்" என பெயரில் சில எழுத்து சேரும்.

      இவ்வளவு முனைவர் பட்டம்,கணிணி,ஈனைய வசதிகள் இருந்தும் ஆய்வுகளில் முன்னேற்றம் இல்லை!!!.ஏன்???

      நன்றி!!

      Delete
  3. //அதை விட்டு 30 நாட்களில் அறிவாளி, விஞ்ஞானி என பிராய்லர் கோழி மாணவர்களை உருவாக்கும் கல்வி பயன் தராது.அதிலும் எதற்கும் விளம்பரம் செய்தும் விஞ்ஞானி உருவாக்க முடியாது.

    இதை சொன்னா நம்மல வேற மாதிரி பாக்குதுங்க சிலதுங்க...

    நல்ல தகவலுடன் கூறியுள்ளீர்கள், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ ஜீவா,

      இபோதய் மதிப்பெண் நோக்கிய கற்பிப்பு/கற்றல் முறை சரியில்லை.இதை சொல்ல நாம் தயங்க கூடாது.

      ஈடுபாடுள்ள விடயத்தை கற்பதைவிட ,இதைப் படித்தால் வெளிநாட்டில் சென்று வாழலாம் என்பதே நோக்கம் என்னும் போது எபடி பலன் தரும்?.


      நன்றி!!

      Delete
  4. Replies
    1. வாங்க சகோ ஜஃப்னா

      நன்றி!!

      Delete
  5. //அதை விட்டு 30 நாட்களில் அறிவாளி, விஞ்ஞானி என பிராய்லர் கோழி மாணவர்களை உருவாக்கும் கல்வி பயன் தராது.அதிலும் எதற்கும் விளம்பரம் செய்தும் விஞ்ஞானி உருவாக்க முடியாது.
    //

    This is wat happens today in TamilNadu.. Everyone becomes an engineer in our distric(KanyaKumari)... And even i heard from engineering students that they are given NOTES in engineering..As u said PRODUCED ENGINEERS.. i have practically seen people in the companies i worked for who are not at all fit for the job but having 90% in engineering... This is Y we are struggling to get even one Nobel Prize in science after Independence :(

    ReplyDelete
    Replies
    1. சகோ ஜெனில்,

      உலகின் பொருளாதார சிக்கல்களுக்கு காரணம், இந்த மையப்படுத்தப் பட்ட உற்பத்தி,விநியோக முறைதான். இதில் பொருளின் விலையை விட, அதனை வினியோகிக்க கொண்டு செல்லும் செலவு, எண்ணெய் என பல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

      ஒவ்வொரு இடத்திலும் கிடைக்கும் பொருள்களை வைத்து சுயதேவைகளை சந்திக்கும் வேலை வாய்ப்பை கொடுக்க இயலா கலிவி பொறியியல் கல்வி அல்ல.

      கடைசி ஆண்டில் ,ஒரு ஊரின் ஒரு பிரச்சினைக்கு சில மாணவர்கள் தீர்வு கண்டு அதனையே வேலை வாய்ப்பாக மாற்ற முயற்சி செய்து ,அரசும் உதவினால், வேலை வாய்ப்பும் பெருகும், பொருளாதாரமும் வளரும்.

      கல்விகற்பது சமூகத்திற்கு பணி ஆற்ற என்பதை அனைவரும் மறந்து விட்டார்.

      கல்வியை விலைபொருள் ஆக்கி விட்டதால், போட்ட முதலை எடுக்கும் வழி தேடும் பெற்றொர்.

      எப்படியாவது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் என்னவென்றே தெரியாத ஒரு வேலையை அடிமை போல் செய்வதே வாழ்வின் நோக்கமாக கொண்ட மாணவர்களை தயாரிக்கும் கல்வி நிறுவனக்கள் வேறு என்ன செய்ய முடியும்?

      நன்றி!!!!

      Delete
  6. பொய் பொய் மற்றும் பொய்யினானாலேயே கட்டமைக்கப் பட்ட ஒரு சமூக அமைப்பு. அரசாங்கமும் பொய் சொல்ல ஆரம்பித்து விட்டது. எதையும் உழைப்பினாலும் முயற்சியினாலும் அடைவதை விட குறுக்கு வழியிலும் அதிகார பலத்தை உபயோகித்தும் அடையும் வழிகளை மட்டுமே கடை பிடிக்கும் ஒரு சமூகம் ந்ம்முடையது. எந்தக் கேனத்தனத்தைச் செய்தாலும் அதற்கு அங்கீகாரமும் அரசு வேலையும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

    ஐந்து பைசா உழைப்புக்கு 10000 ரூபாய் பலனை எதிர் பார்க்கிறார்கள். பழைய காலிப் பெருங்காய டப்பா காலாவதியாகிப் போன தத்துவங்களை உளறிக் கொண்டு வாழ்க்கையில் பெரும் மாபெரும் அயோக்கியத்தங்களைச் செய்கிறார்கள். இவர்களைத் தான் பாரதி "சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி" என்று பாடி வைத்தான்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ அமரபாரதி,

      முதல் கோணல் முற்றும் கோணல் என்னும் விதத்தில், கல்வியில் ஏற்படும் கற்றலின் உத்வேக குறைபாடு,சமூக குறைபாடுகளாகவே பரிணமிக்கும்.

      ஏன் கல்வி ? என்றால் எளிதில் பணம் தேட என்பவன் சமூக சிந்தனை கொள்வது சாத்தியமே இல்லை!!

      கல்விக் கூடங்களில் கூட சாதி வெறி வெளிப்படுகிறது,வளர்க்கப் படுகிறது. எ

      நன்றி!!!

      Delete
  7. எதற்கெடுத்தாலும் இரண்டு பக்க நியாயத்தையும் பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு பிரச்சினைகளை நீர்த்துப் போகச் செய்வதில் நமக்கு நிகர் நாமே. இதிலும் அந்த மாணவனின் பக்கத்தையும் பார்க்க வேண்டும் என்று சொம்பத் தூக்கிக் கொண்டு வரும் கூட்டமும் இருக்கும்.

    பல வகைகளில் இந்த மனப்பான்மை வெளிப் படுகிறது. இரண்டு வரிகள் கிறுக்கி விட்டு கவிதை என்று பயர் வைத்து கவிஞன் என்ற அங்கீகாரத்தை எதிர் பார்க்கும் அளவிலிருந்து இது ஆரம்பிக்கிறது. சினிமாவில் புது இயக்குனர்கள் ஒரு படத்துக்கு மேல் சோபிக்க முடியாமல் போகும் காரணமும் இதுதான். தேவையான உழைப்பக் கொடுக்காமல் பலனை மட்டும் பெரிய அளவில் அறுவடை செய்ய நினைக்கும் அனைவரும் இப்படித்தான் இருப்பார்கள். துரதிருஷ்ட வசமாக பெரும்பாலானவர்கள் இப்படித்தான் இருக்கிறர்கள். திறமை கிடையாது, திறமையை வளார்த்துக் கொள்ளும் உழைப்பு கிடையாது, திறம்மையுள்ளவன் முன்னேறினால் பொறாமைப் படுவதும் புறம் பேசுவதும் மட்டுமே நடக்கிறது.

    ReplyDelete
  8. நான் +2 தேர்வில் கணிதத்தில் 7/200 மதிப்பெண் பெற்றேன் அடுத்த ஆண்டு டிப்ளமாவில் கணிதம் 1ல் 86/100ம் கணிதம் 2 ல் 90/100 ம் எடுத்தேன் இதற்கு என்ன காரணம்? நான் +2 படிக்கும்போது அது எதுக்கு பயன்படுதுனு தெறியவில்லை ஆனால் டிப்ளமா படிக்கும்போது எதற்கு எங்கு பயன்படுகிறது என்று ஓரளவுக்கு தெறிந்து இருந்ததே காரணம்.
    +2 படிக்கும்போது சலிப்பு ஏற்பட்டுவிடுகிறது ( ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல்) என்று அனைத்து பாடங்களுக்கும் தனித்தனி ஆசிரியர்களிடம் தனி வகுப்பு செல்லவேண்டும். காலை 4 மனிக்கு எழுந்து 5 -7 ஒரு டியூசன் 7-9 ஒரு டியூசன் மாலை 6 -8 ஒரு டியுசன் என்று செல்லவேண்டும் அப்போது படிக்கிறோமா இல்லை எண்ணெய் சட்டியில் வறுக்கப்படுகிறோமா என்று சலிப்பு ஏற்பட்டுவிடுகிறது.

    ReplyDelete
  9. அண்ணன் சர்வாகன்
    வாழ்த்துக்கள்! அருமையான தகவல்களை உங்கள் தளத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது.

    ReplyDelete
  10. சகோ.சார்வாகன்.

    இது அவ்வப்பொழுது நடக்கும் காமெடித்தான்.இதை எல்லாம் எதாவது சொன்னா அடுத்தவங்க சாதனை செய்தா உங்களுக்குலாம் புடிக்காது பொறாமைனு சொல்லுவாங்க.

    எல்லாம் விளம்பர மாயை. ஏதேனும் ஒரு மால்டட் பானம் குடிச்சா அறிவாளியாகிடுவாங்கன்னு மக்கள் இன்றும் நம்புறாங்க, எல்லாம் விளம்பரம் படுத்தும் பாடு :-))

    சமீபத்தில் ஒரு தொ.கா விளம்பரம் பார்த்தேன் , அதில் 5 ஆம் வகுப்பு போல ஒரு வகுப்பு மாணவன் ஆசிரியர் கேட்கும் கேள்விக்குலாம் "டான் ,டான்"னு பதில் சொல்வான் ,அப்புறம் அவன் ஒரு மால்டட் பானம் குடிக்கிறது தான் அறிவுக்கு காரணம்னு காட்டுவாங்க, ஆனால் அந்த பையன் சோடப்புட்டி கண்ணாடி போட்டிருப்பான் :-))

    அதாவது அறிவாளியான பையன் என்றால் கண்ணாடிப்போட்டிருக்கனுமா என்ன?

    சரி ஆரோக்கிய பானம் ஏகப்பட்ட விட்டமின்ஸ்,மினரல் இருக்குனு பட்டியல் போடுறாங்க அப்போ கண்பார்வைக்கு தேவையான வைட்டமின் கொடுக்காத பானமா அது?

    பத்து வயசு பையன் வழக்கமான சாப்படு சாப்பிட்டாலே கண்ணு முதல் எல்லாம் நல்லா இருக்கணும், இந்த பையனோ விசேஷமான ஆரோக்கியபானம் குடிச்சும் ஏன் கண்னாடிப்போட்டிருக்கணும், அப்போ கண்ணுக்கு தேவையான ஊட்டச்சத்தையே கொடுக்காத பானம் குடிச்சால் எப்படி அறிவு மட்டும் வளருமாம் :-))

    இப்படிப்பட்ட கேனத்தனமான விளம்பரங்களை நம்பி நம்ம மக்களும் அந்த கருமம் புடிச்ச பானத்தை வாங்கி பசங்களுக்கு கொடுக்கத்தான் போறாங்க :-))

    ஹார்லிக்ஸ் என்ற ஆரோக்கிய பானம் தயாரிக்கப்பட்ட காலத்தில் ,இரவு குடிச்சிட்டு படுத்தா நல்லா தூக்கம் வரும் எனவே நல்ல தூக்கம் வர குடியிங்கள் ஹார்லிக்ஸ்னு தான் விளம்பரப்படுத்தினாங்க, இன்னிக்கு அதே ஹார்லிக்ஸை குடிச்சா பசங்க சுறுசுறுப்பா படிப்பாங்கனு சொல்லுறாங்க , இடைப்பட்ட காலத்தில தயாரிப்பு ஃபார்முலாவை மாத்திட்டாங்களா :-))

    ஹார்லிக்ஸ் குடிச்சா குழந்தைகள் உயரமா வளர்வாங்கனு செய்த விளம்பரத்தினை யுனைட்டம் கிங்டமில் பொய்யான வாக்குறுதி தரும் விளம்பரம்னு சொல்லி தடை செய்துட்டாங்க :-))

    நம்ம ஊரில தான் சாணிக்கு சூப்பர் பவர் இருக்குனு கூட விளம்பரம் செய்யலாம் :-))

    ReplyDelete
  11. //அதை விட்டு 30 நாட்களில் அறிவாளி, விஞ்ஞானி என பிராய்லர் கோழி மாணவர்களை உருவாக்கும் கல்வி பயன் தராது.////
    பிராய்லர் கோழிகள் பயன் தருகின்றன .பிராஇலர் கோழிகள் இல்லை என்றால் இறைச்சியின் விலையை கனவு லிஸ்ட்டில்தான் பார்க்கக் முடியும் ப்ராயிளர் கோழிகளால் இன்று தெருவெல்லாம் தமிழ் மணக்கிறதோ ,இல்லையோ சிக்கன் 65மணக்கிறது .பலருக்கு வேலைகளும் எளிய மக்களுக்கு சைனிஸ் உணவுகளும் கிடைக்கிறது .அது போலவே பிராயிளர் எஞ்சினியர்களாலும் ஒவ்வொரு குடும்பமும் செழித்து வருகிறது .வளருகிறது ,அதனால் இந்தியாவும் ஒளிர்விடுகிறது .
    கரு போட்டாலும் உரு போட்டாலும் ஐன்ஸ்டீனை உருவாக்க முடியாது.உருவாகுவார்கள் .இளவயதில் IQ வாக இருந்தவர்கள் பலர் பின்னர் பிரகாசித்ததாக தெரியவில்லை ஸ்டேட் பர்ஸ்ட் மாணவர்கள் அதற்கு பின்னர் ஜொலிப்பதை காணமுடியவில்லை .சில பள்ளிகளின் நரி தந்திரங்களும் அடியில் நடக்கும் வேலைகளும் ஸ்டேட் பர்ஸ்ட் ஆக மாறுவதுண்டு .
    சமசீர் கல்வி வெற்றிதராது .முன்பு ஸ்டேட் டாப் 10 இல் மெற்றிக் தனி ,ஸ்டேட் போர்டு தனியாக இருந்த வேளையில் ,ஏழை,மற்றும் கிராம மாணவர்கள் வந்தனர். இப்போது பிளஸ் டூ போல 10வது வகுப்பிலும் மெற்றிக் பள்ளி மாணவர்களே முதல் 10 இடங்களை பிடிக்கிறார்கள் .
    சிலபஸ் மட்டுமே சமசீர் .கற்பித்தல் சமச்சீர் அல்ல என்பதை பலர் உணரவில்லை .மேலும் மெற்றிக் பள்ளிகளில் கல்வி ,வருமான ஆர்வலர்கள் குழந்தைகள் படிக்கின்றன. அரசு பள்ளிகளில் படித்தால் போதும் என்ற நிலைமை .சமச்சீர் என்றால் அத்தனையும் அரசு பள்ளிகளாக .அலல்து அரசு உதவி பள்ளிகளாக மாற்றப்பட வேண்டும்

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. மாமு,

    நல்ல பதிவு. இது எப்படி இருக்குன்னா, T 20 கிரிக்கெட் மேட்சில் இந்தியா ஜெயித்த பின்னர் [அதுவும் பாகிஸ்தான் வீரரின் தவறால்!!] "India is on Top of the World" என்று இந்திய ஆங்கிலப் பத்திரிகைளில் கொட்டை எழுத்துகளில் போட்டானுங்களே அதே கதை தான். பந்தை கட்டையால் பதினோரு பேர் அடிக்கத் தெரிந்த கொண்டதால் நாம் எவ்விதத்தில் ஜப்பானையும், அமரிக்காவையும் சீனாவையும் விஞ்சியதாக ஆகும்?!! காமடியல்லவா? இந்த பொண்ணு ஐன்ஸ்டீன் மாதிரியோ ஸ்டீபன் ஹாகின்ஸ் மாதிரியோ ஒரு தியரியை உருவாக்கிடுவாளா? காமடியின் உச்சகட்டம் இது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாப்ளே தாசு,

      சரியா சொன்னீங்க!!

      ஒரு துறை சார் கண்டுபிடிப்பு ஒருவர் செய்தால் பாராட்டலாம்.எதையோ வைத்து பெரிய ஆள் என விளம்பரம் தேடல் அயோக்கியத் தனம்.

      நன்றி!!!

      Delete